• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளம் 7

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
15
14
3
Coimbatore
அத்தியாயம் 7.,


டிராஃபிக் அதிகமாக இருக்கவும், ஹார்ன் அடித்தே ஓய்ந்து போனான். "ச்சே... அதிசயமா வெளில போலாம்னு வந்தா? இந்த ட்ராஃபிக் பண்ற டென்ஷன் இருக்கே" என இருக்கையில் தலையை மோதிக் கொண்டான் ஆதவன்.

"ஏன் டா இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற. எதாவது எமர்ஜென்ஸி இருக்கலாம், நம்மளை போலவே எல்லாரும் ஊர் சுத்த போறவங்க கிடையாதில்ல" என்ற அண்ணனை திடுக்கிட்டுப் பார்த்தான் தம்பியானவன்.


அவனது மனத்திரையில், "யூ இடியட் இப்படி இடைஞ்சல் பண்ணி வைச்சிருக்க, வண்டியை எடு மேன்" என ருத்ரன் கத்த,


"சும்மா கத்தாதீங்க, ஓவர் ஸ்பீட் ல வந்து எனக்கு அடி பட வச்சதும் இல்லாம என்னை திட்டிட்டு இருக்கீங்க. பொறுமையா தான் பைக்கை நகர்த்த முடியும்" என கீழே விழுந்து அடி பட்டவன், பைக்கை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட,


எரிச்சலுடன் காருக்குள் வந்து அமர்ந்த ருத்ரனைப் பார்த்து, "எதுக்கு இவ்வளவு கோவம் அண்ணா.. நல்ல வேளை அவனுக்கு ஒன்னும் ஆகல" என பெருமூச்சு விட்ட ஆதவனை முறைத்த ருத்ரன், "நீ இடியட் தான் ஆது. நம்ம போறது பைபாஸ், அதுல அவன் இடைல சந்தில பொந்துல இருந்து வர வழில வந்து காருக்கு முன்னாடி விழுந்துட்டான். அதுக்கு நம்ம எப்படி பொறுப்பாக முடியும்"


"எப்டி இருந்தாலும் அவனுக்கு எதும் ஆகி இருந்தா" என ஆது இழுக்க,

"டேய் நானே கோவா போற ஃப்ளைட்ட மிஸ் பண்டுவேன்னோண்ணு பிரஸர்ல இருக்கேன்" என்றவனைப் பார்த்து ஆவேன திறந்த வாயை தன் கையால் பொற்றிக் கொண்டு அதிர்ச்சி விலகாமல் பார்த்த நொடி கண்முன் வந்து போனது.


"நீயா மச்சா இது" என்பது போல ரியாக்ஷன்.

"ஆதூ...." என்ற ருத்ரன் குரலில் நிஜத்தை அடைந்தவன் திருதிருவென விழிக்க,

"ட்ராஃபிக் க்ளியர் ஆகிடுச்சு காரை எடு" என்ற பின் தான் அவன் அதிர்ச்சி குறைந்தது.


பின் காரைக் கிளப்பிக் கொண்டு அருகில் இருக்கும் மாலிற்குள் சென்றனர். அவன் பிரபல இயக்குனர் என்பதால் முகத்தில் மாஸ்க் அணிந்து உள்ளே நுழைந்தான்.


"அண்ணா மூவி போலாமா?" என்ற தம்பியின் கேள்விக்கு கவியின் முகம் பார்த்தான் ருத்ரன்.

அவளும் சரி என்று எந்த சைகையில் சொன்னாளோ? "போலாம்" என்றான் ருத்ரன் அவளைப் பார்த்தபடி.


அருகில் இருந்த ஆது தான், அண்ணனின் மொழியும் புரியாமல் அண்ணியாக வரப்போறவளின் மொழியும் புரியாமல் குழம்பியபடியே, டிக்கெட் வாங்க சென்றான்.

அந்த மாலில் ஒரே நேரத்தில் மூன்று படங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. ஹாலிவுட் படம் ஒன்றும், கோலிவுட் படம் இரண்டும். அதிக கூட்டம் ஹாலிவுட் வரிசை தான். எதோ பேய் படமாம்.

ஹாலிவுட்டில் பேய் என்றாலே த்ரில் தானே. அவனும் அந்த படத்திற்கே மூன்று டிக்கெட் வாங்கி வந்தான்.


"என்னடா காமெடி மூவிக்கு வாங்கிட்டு வருவேன்னு பார்த்தா, பேய் படம் பாக்க திட்டம் போட்ருக்க" என கவி திட்டவும்.

"நல்லாருக்கும் போல, வா போய் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுவோம்" என ஆதவன் அழைக்க, பீதியாகவே அவன் இழுப்பிற்கு சென்றாள் கவி. அவள் பின்னாடி சிரிப்பை மாஸ்க்கில் ஒளித்துக் கொண்டு நடந்தான் ருத்ரன்.


அவர்கள் உள்ளே செல்லும் நேரம் சரியாக படத்தின் பெயர் கர்ண கொடூரமாக திரையில் வந்தது. "தி நைட் பேலஸ்" என்ற டைட்டிலில் பயந்தே போனாள் கவி.

"எரும மாடு... உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை அடிக்கணும்" என பயத்துடனே அவள் அமர, இடது புறம் ஆதவனும், வலது புறம் ருத்ரனும் அமர்ந்தனர்.

அவள் ஆதவனை திட்டிக் கொண்டு சீட்டு வரிசையில் செல்ல முதலில் ஆதவன், கவி என சென்றதில் ருத்ரன் அவளுக்கு வலது புறம் அமர வேண்டியதாயிற்று.

எடுத்த உடனேயே மையிருட்டு பகுதி காட்டப்பட அனைவரும், ' என்ன ஒன்னையுமே காணோம் ' என ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்க, திரையில் திடீரென சதையில்லா வெள்ளை உருவம் ஒன்று சலீரென தோன்றி, வெல்கம் டூ தி நைட் பேலஸ்" என வரவேற்க.

அதன் அறிமுகத்திலேயே தூக்கி வாரிப் போட்டது கவிக்கு. பயந்து போனவள் வலது புறம் ருத்ரன், இடது புறம் ஆது என இருவரின் கையையும் பற்றிக் கொள்ள,

ருத்ரன் தான் அவளின் செயலில் செயலிழந்து போனான். அவளின் பயந்த முகமும், பயமாக இருந்தாலும் அந்த படத்தைப் பார்க்கும் தீவிரமும் குழந்தையாக தோன்றியது அவனுக்கு.

சிறிது நேரத்தில் என்ன நினைத்தாளோ சட்டென திரும்பி ருத்ரனைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். அவனின் மொத்த பார்வையும் மையலாக அவள் மீது தான் நிலைத்து இருந்தது.

அந்த பார்வையில் இருந்து வெளி வந்தவள், தன் கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டு, "ஸாரி" என்க,

"பிடிச்சுக்கோ" என தன் உள்ளங்கைப் பக்கம் காட்ட, "பயம் அதான்" என்றவள் அவனின் கையில் தன் உள்ளங்கையை பொறுத்த அவனின் ஐந்து விரல்களும் அவளின் விரல்களை தன்னுள் கட்டிக் கொண்டது.

அவனின் விரல் இறுக்கம் அவளுள் இதயம் அதிரச் செய்தது.

இவர்கள் இப்படி இருக்க, ஆதவனோ தன் இரண்டு கைகளையும் இறுக கட்டிக் கொண்டு படத்தில் லயித்து இருந்தான்.

கவியின் மனம் சும்மாவே அழகனை சுற்றி சுற்றி வரும். இந்த அழகில் அவனோடு இணைந்த தன் கையில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி இருந்தவளுக்கு அவனின் மணிக்கட்டில் இயங்கும் நாடித் துடிப்பு தன் நாடியின் வழியே உணர சிலிர்த்து அடங்கினாள் கவி.


"கவி" என ருத்ரன் அழைக்க,

"ஹான்" என திருதிருக்க, அவளை சிரிப்புடன் பார்த்தவன்,

" ஆர் யூ கம்ஃபோர்ட்டபில்" என கேட்க.

"ம்ம்" என்ற படி தலை திருப்பிக் கொண்டாள் அவள்.


அவனும் அவளின் அவஸ்தையை எண்ணி இன்பமாய் சிரித்துக் கொண்டான். அவளிடம் தோன்றும் இந்த உணர்வு இனிமையாக இருந்தாலும், தன் வயதெனும் ராட்சசன் நினைவில் வர, அவளின் கையில் இருந்து தன் கையைப் பட்டுப் போல மென்மையாக விலக்கிக் கொண்டான்.

அவனின் விலகளில் கவியின் மனம் பதற, விலகிய கையை மீண்டும் இழுத்துப் பிடித்து இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள். இப்போது அவளின் விரல்கள் நடுவில் அவன் விரல் அடைப்பட்டது.


"கவி பிளீஸ்" என அவன் அவளைப் பார்த்து கண்களால் இறைஞ்ச, அவன் எதை நினைக்கிறான் என புரியாமல் போனாலும் அவனின் கண்கள் காட்டும் எதோ ஒன்று அவளுக்கும் வலியைக் கொடுக்க, வேண்டாம் என்பது போல தலை அசைத்து அவனின் கையில் அழுத்தம் கொடுத்து இறுக்கிக் கொண்டாள்.

அவனுள்ளம் தான் தவியாய் தவித்தது. அவளை விட்டு விலகி இருக்க நினைக்கிறான். அதே நேரம் அவன் மனமோ அவளை விலகவே கூடாது என பதறுகிறது.


ஆதவன் இருவரின் பேசா மொழியை உணர்ந்தாலும் திரும்பியும் பார்க்காமல் படம் பார்ப்பது போலயே இருந்தான். கவியின் ருத்ரன் மீதான காதல் தெரிந்த ஒருவன் ஆதவன் மட்டுமே.


ருத்ரன் யாரோ போல கவியை எண்ணினாலும் அத்தை மகள் என்ற குறுகுறுப்பு அந்த வயதிலும் அவனுக்கு தோன்றாமல் இல்லை. எந்த வயதாகினும் மாமன் மகன் அத்தை மகளாகட்டும், அத்தை மகன் மாமன் மகளாகட்டும் எப்போதும் அவர்களின் பார்வையில் ஒருவர் மீதான மற்றொருவர் பார்வை என்றும் ரசனை தழுவியே இருக்கும் என்பது நிதர்சனம்.
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,745
606
113
45
Ariyalur
😄😄😄😄😄😄ஆதவன் பேய் படத்துக்கு வேண்டுனே டிக்கெட் எடுத்தானோ 🤔🤔🤔🤔🤔🤔ருத்ரகவியா இணைறதுக்கு