• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனக்கென பிறந்தவளே - 03

Hem chandra

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 17, 2023
6
1
3
Pune
வாசு காலேஜ்க்கு கிளம்ப அவனது லல்லிமா அவனுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்தார். வாசுவின் போன் இசைத்தது . மச்சான் என்னடா பண்ணுற கிளம்பிடைய இல்லையா டா.எவ்வளவு நேரம் டா வெயிட் பண்றது என்று கத்திக்கொண்டு இருந்தான் வாசுவின் உயிர் தோழன் சிவா.
கிளம்பிட்டேன் சிவா இன்னும் அஞ்சு நிமிஷத்தில அங்க இருப்பேன்டா. வாசு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லடா. நீ லேட்டா வந்த உன் ஆளு கிளாஸ்க்கு போயிருவ அப்பறம் உன்னால பாக்க முடியாம போயிரும்.

அப்பறம் நீதான் நாள் புள்ள புலம்பிட்டே இருப்படா என்னால உன் புலம்பலாம் கேக்க முடியாது அதுனால வேகமா வா டா. உன் ஆளு என்ற வார்த்தையை கேட்டதும் வாசுவின் முகம் வெக்கத்தில் சிவந்து போனது.


வாசு தான் காதலியை பற்றி எண்ணிக் கொண்டே பைக்கில் தான் கல்லூரி வாயிலை அடைந்தான். அங்கு சிவா காத்திருந்தான் வாசுக்காக. மச்சான் போய்ட்டாளாடா, இல்ல வாசு இன்னும் போகல அப்போ சரி சரி. அப்பொழுது வாசுவின் காதலி வந்து கொண்டிருந்தால் அவள் தோழி வேணுகா ஸ்ரீ உடன். (ஆமாம் வாசுவின் காதலி நம்ம ரேணுகா தேவி தான் ஆனால் பாவம் இப்படி ஒருவன் தன்னை பார்ப்பது கூட தெரியாது ரேணுகாவிற்கு இது விதியின் விளையாட்டோ...... )


இன்னும் எவளோ நாள்டா பாத்துட்டே இருக்க போற போடா போய் பேசு அவ பேரு என்னனு கேளுடா. சிவா எனக்கு பயமா இருக்குடா அவள தூரத்துல இருந்து பாக்குறது ஓகே டா. அவகிட்ட போய் பேசுறதுனா மட்டும் உடம்புலம் நடுங்குதுடா.

நீயாடா வாசு பயப்புடுற சண்டைனு வந்தா யாரு என்னனு பக்கமா அடி வெளுத்து விட்டுருவ. வீட்டுக்கு தெரியாம ஜல்லிக்கட்டு கலாம் போய் கலந்துப்பா, அப்படி பட்ட நீயாடா இப்படி பயந்து நடுங்குற என்று கூறி சிரித்தான்.

ஓவரா பல்ல காட்டாதடா. நீயும் யாரையாது லவ்வு பண்ணுறேன்னு சொல்லிடு வருவல அப்போ பாத்துக்குறேண்டா உன்னைய பாக்கலாம் பாக்கலாம்.

டெய்லி உங்கிட்ட வந்து எத்தனை பொண்ணு பேசுறாங்க. எவளோ பேரு லவ் பண்ணுறத சொல்லிருக்காங்க. நீ தான் அவங்க யாரையும் பிடிக்கலனு சொல்லிட, சரி உனக்கு பிடிச்ச பொண்ணு கிட்டயாது போய் பேசுனா பேச மாட்டேங்கிற அவ பேரு தெரியாது. வீடு, தெரு ஏன் அவ இந்த ஊரானு கூட தெரியாது.ஆனா ஆறு மாசமா அவ பின்னாடி சுத்த மட்டும் தெரியும்.

இனிமேல் உன்ன நம்பி வேலைக்கு ஆகாது வாசு.ஒரு விசயம் மட்டும் சொல்லு நீ நிஜமாவே அந்த பொண்ண லவ் பண்ணுரைய வாசு.(வாசு கண்கள் சிறிது கலங்கி விட்டது ). சிவா இனிமேல் இப்படி கேக்காதே மச்சான் ரொம்ப கஷ்டமா இருக்குடா அவ இல்லாம என்னால வாழ முடியாதுடா.

ஒரு நாள் அவளை பாக்கலான பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும்டா. எனக்கு அவ பேரு ஊரு ஏதும் தெரியதுடா அவகிட்ட பேச என் லவ்வ சொல்ல பயமா இருக்குடா. நான் போய் பேசி அவ பேசாம போய்ட்டாலோ இல்ல நான் என்னோட லவ்வ சொல்லி அத ஏத்துக்கமா போய்ட்டாலோ என்னால தாங்க முடியாது மச்சான்.

வாசு கஷ்டப்படுவதை சிவா வாள் பார்த்து க்கொண்டு இருக்க முடியவில்லை. ஒகே விடு வாசு கவலைப்படாத நான் அந்த பொண்ண பத்தி டீடெயில்ஸ் யாருகிடையாது கேட்டு சொல்லுறேன் மச்சான்.

சிவா மட்டும் வாசுவிற்கு ரேணுகாவின் வகுப்பு மட்டுமே தெரியும் ரேணுகாவின் பெயர் கூட தெரியாது. சிவா ரேணுவின் கிளாஸ்மேட் ஒருவனிடம் ரேணுவை காட்டி அந்த பொண்ணு பேரு என்ன என்று கேட்டான். அந்த பையன் திரும்பி பார்க்கும் போது சிவா கட்டிய திசையில் இருந்தது வேணுகா ஸ்ரீ.

சிவா ரேணுகாவை கைகட்ட அந்த பையன் பார்க்கும் போது ரேணுகா விற்கு பதில் அந்த இடத்தில் வேணுகா இருந்தால். சிவா விடம் அந்த பையன் சொன்ன பெயர் வேணுகா. (இந்த ஒரு எழுத்து ரே வே மாறியதால் பலரின் வாழ்க்கை கேள்வி குறியானது ).