• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி உன்னுள் நானடி, பாகம் 22

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் -43

வாசுதேவன் அப்படி சொன்னதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆதித்யாவுக்கு.

ஆனா அப்பா, இங்கே எனக்கு ஒர்க் இருக்கே.

ஒன் வீக் தானே அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

இல்லப்பா உங்களால அதை தனியா பண்ண முடியாது.

என்ன, என்னால முடியாதா. நீ என்ன பிறந்ததில் இருந்தே வா கம்பனிக்கு வந்திக்கிட்டு இருக்க.

அது இல்லப்பா, கஷ்டமாக இருக்கும் தனியா பண்றதுக்கு.

அதான் அர்ஜுன் இருக்கான் இல்ல.

அப்பா, அவனுக்கு என்னப்பா தெரியும்.

நீயும் முதல்ல கம்பெனிக்கு வரும்போது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் வந்தியா.

அது இல்லப்பா.

அர்ஜுன் இன்டர்ன்ஷிப் நம்ம கம்பெனியிலேயே தான் பண்றான். அதனால ஓரளவுக்கு அவனுக்கு தெரியும். ஒன் வீக் மேனேஜ் பண்ணிப்பான்.
நீ கவலைப்படாம போயிட்டு வா.

சரிப்பா நான் போயிட்டு வரேன், ஆனா ஒன் வீக் வேண்டாம் ஃபோர் டேஸ் போதும்.

போகிறேன் என்று சொன்னானே அதுவே போதும் என்ற நினைத்த வாசுதேவன். சரிப்பா போயிட்டு வா. நீ போயிட்டு வந்ததும் சிஇஓ பதவியை உனக்கு கொடுத்திடறேன்.

ஓகே அப்பா தேங்க்யூ.

என்னைக்கு டிக்கெட் போட்டு இருக்கீங்க என்றார் மகேஸ்வரி தன் கணவன் வாசுதேவனிடம்.

நாளைக்கு நைட்.

எந்த பிளேஸ்.

அந்தமான்.

சூப்பர் பிளேஸ். வசுந்தரா நீ இப்பவே போய் டிரஸ் எல்லாம் எடுத்து வைத்திருமா.

ஒன்னும் அவசரமில்லை. நாளைக்கு நைட்டு தான் ஃபிளைட். நீ பொறுமையா நாலு காலைல எடுத்து வச்சுக்கோ மா என்றார் வாசுதேவன்.

ஆதித்யா மாடி ஏறிச் சென்றான்.

ஓகே அத்தை ஓகே மாமா என்று சொல்லிவிட்டு அவன் பின்னால் சென்றாள் வசுந்தரா.

ரூமிற்கு சென்ற கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு,

சாரி வசு,

எதுக்காக சொல்றீங்க ஆதி.

இல்ல உனக்கு இதெல்லாம் விருப்பம் இருக்குமான்னு தெரியல, அப்பா ஏதோ ஆர்வக்கோளாறு டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டாரு.

ஒன்னு சொல்லவா ஆதி.

எனக்கு ஊர் சுத்துறது ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த கூட ஊர் சுத்த போறான்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப ஹாப்பி தான்.

அப்படியா.

ஆமாம், உண்மையா தான் சொல்றேன்.

ஓகே இந்த ஃபோர் டேஸ் உனக்காக நான் ஸ்பெண்டு பண்றேன். நீ என்ன கேட்டாலும் அத வாங்கி தரேன், இந்த நாலு நாள் உன்னுடைய நாட்கள். நீ என்ன பண்ணனும் நினைக்கிறியோ பண்ணலாம். நான் எதுக்கும் நோ சொல்ல மாட்டேன்.

அப்படியா சத்தியமா.

எஸ், ஐ ப்ராமிஸ்,

தேங்க்யூ சோ மச் ஆதி. வித் யுவர் பர்மிஷன்,
உங்களை ஒரே ஒரு முறை ஹக் பண்ணிக்கவா.

ஸ்மைல் செய்து கொண்டே தன் இரு கைகளையும் நீட்டினான்.

வசுந்தரா அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்.

மந்திராவை பற்றி ஹனிமூன் சென்று வந்த பிறகு சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளுக்கு தெரியாது, ஏற்கனவே அர்ஜுனிடம் ஆதித்யா இதைப் பற்றி பேசினான் என்று.

முந்தைய நாள், ஆஃபீஸில் இருந்து வரும்போது,
தன் தம்பியுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

அர்ஜுன்.

சொல்லுங்க அண்ணா.

ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும்.

கேளுங்க அண்ணா.

நீ யாரையாவது லவ் பண்றியா.

ஏன் இப்படி கேக்குறீங்க.

சொல்லேண்டா.

இல்லனா.

ஷியூர்.

ஆமாம் அண்ணா,என்ன ஆச்சு எதுக்கு கேக்குறீங்க.

வசுந்தராவோட தங்கச்சி பத்தி நீ என்ன நினைக்கிற.

உங்க மேரேஜ் ல பார்த்தேன். ஹாய்னு மட்டும் பேசி இருக்கேன் அவ்ளோதான்.

வசுந்தராவுக்கு அவ தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஆசை.

ஆனா அண்ணா,

எதுவா இருந்தாலும் ஃபிரான்கா சொல்லிடு டா.

எனக்கு அந்த மாதிரி ஐடியா எல்லாம் இல்ல.

உனக்கு அந்த பொண்ணு புடிச்சிருக்கா இல்லையா.

நல்லா இருக்காங்க. ஆனா அவங்க எப்படி நான் எப்படி செட்டாகுமா அதெல்லாம் ஒன்னும் தெரியலையே.

நான் அவ கிட்ட இருந்து நம்பர் வாங்கி தரேன் நீ பேசி பாரு.

சரி அண்ணா.

அகெயின் சொல்றேன் உனக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தா மட்டும் ப்ரோசீட் பண்ணலாம். இத பத்தி பெரியவங்க கிட்ட பேசலாம். இல்ல இதோட ஃபுல் ஸ்டாப் வைத்துவிடலாம்.

இல்ல நான் பேசி பார்க்கிறேன். அதுவே இல்லாம அவங்களோட இன்ட்ரெஸ்ட்ன்னும் ஒன்னு இருக்கும் இல்ல.

கரெக்ட். அவங்களுக்கும் பிடிக்கணும் உனக்கும் பிடிக்கனும்.

சரி அண்ணா.

இதைப் பேசியது பற்றி வசுந்தராவிடம் அவன் சொல்லவில்லை.

மேலும் ஹனிமூன் சென்று வருவதற்குள் அவர்களுக்கு செட்டாகி விட்டால் அது வசுந்தராவுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்று நினைத்து வசுந்தராவிடம் கேட்காமல், அஸ்வினி மூலியமாக வசுந்தராவின் அம்மா தனலட்சுமி இடம் இருந்து காலேஜ் ப்ராஜெக்ட் விஷயமாக அவளிடம் பேசப் போவதாக நம்பர் கேட்டு வாங்கி கொடுத்தாள் அஸ்வினி.

மறுநாள் அனைத்து டிரஸ்களையும் பேக் செய்து எடுத்துக் கொண்டு சென்றனர்.

தனலட்சுமி, தன் மகளான வசுந்தராவுக்கு வீடியோ கால் செய்து வாழ்த்துக்கள் கூறி, ஐந்தாயிரம் அவளுடைய அக்கவுண்டிற்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

அம்மா எதுக்குமா காசு எல்லாம் அனுப்பினீங்க என்கிட்ட இருக்கு அம்மா.

பரவால்லம்மா, அவருக்கு ஏதாவது நீ வாங்கி கொடுக்கணும்னு அவர்கிட்டயே காசு வாங்கி கொடுக்காமல் உன்னோட காசிலிருந்து செய்யலாம் இல்ல.

அது என்னவோ கரெக்டு தான் மா. கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணி இருந்த வேலையே மறுபடியும் கண்டினியூ பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு எல்லாரும் ஒத்துப்பாங்களான்னு தெரியல. வீட்டிலேயே இருந்து எனக்கும் போர் அடிக்குது. அதுவும் இல்லாம என்னோட செலரின்னு ஒன்னு இருந்தா எனக்கு கொஞ்சம் நல்லா இருக்குன்னு தோணிச்சு. நீங்க சொல்ற மாதிரி அவருக்கு ஏதாவது கிஃப்ட் வாங்குவதற்கு அதை யூஸ் பண்ணிப்பேன்.

நீ அக்கவுண்ட்ல வச்சிருந்தது எல்லாமே காலியா மா.

இருக்கும்மா ஒரு 3000 இருக்கும்னு நினைக்கிறேன்.

இன்னொரு அஞ்சாயிரம் ரூபாய் சேர்த்து போட வா மா.

இல்லம்மா வேண்டாம் இதுவே போதும் இதுவே அதிகம். உங்களுக்கே நிறைய மெடிக்கல் எஸ்பென்சஸ் இருக்கு.

ஆப்ரேஷனுக்கு தேவையான போன் பணத்தையும் கொடுத்துட்டாங்களே மா. அது போதாதா.

அம்மா அதுக்கப்புறம் மாசம் மெடிக்கல் எக்ஸ்பென்சஸ் ஒன்னு இருக்குல்ல. அதுக்கு எவ்வளவு ஆகும்னு எனக்கு தெரியும். அதனால நான் திருப்பி அனுப்புறேன் நீங்க வச்சுக்கோங்க.

வசு, அதெல்லாம் சரிமா, இப்போதைக்கு நான் கொடுத்தத வச்சுக்கோ.

அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் சரிமா என்றாள் வசுந்தரா.

பாகம் 44

தன் அம்மா ஃபோன் பேசி வைத்த பிறகு, காரில் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு சென்றனர். டிரைவர் வீட்டுக்கு சென்று விட்டதால் அர்ஜுனே அவர்கள் இருவரையும் ஏர்போர்ட்டில் ட்ராப் செய்தான்.

இருவருக்கும் ஹாப்பி ஜர்னி என்று சொன்னான் அர்ஜுன்.

செக்கின் லைனில் வசுந்தராவை நிற்க வைத்து விட்டு.

அர்ஜுனிடம் வந்து,

நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல. இந்த நாலு நாள்ல மந்திரா கிட்ட பேசி பாரு. உனக்கும் அவங்களுக்கும் பிடிச்சிருந்தா ப்ரொசிட் பண்ணலாம்.

ஓகே அண்ணா பை, என்ஜாய்.

கம்பெனியும் பார்த்துக்கோ, அப்பா அம்மா அஸ்வினியையும் பாத்துக்கோ, என்று சொல்லி அவனை கட்டிப்பிடித்து பை அர்ஜூன் என்று சொல்லிவிட்டு அவனும் வந்து லைனில் நின்றான்.

முதல்முறையாக ஃபிளைட்டில் காலடி எடுத்து வைத்தாள் வசுந்தரா.

கொஞ்சம் நடுக்கமாகவும் அதே நேரத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.

ஜன்னலோர சீட்டில் அமர்ந்தாள். செல்ஃபி ஒன்றை எடுத்தாள். அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் ஆதித்யா.

ஆதி, ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா.

ஓகே, என்று சொல்லிவிட்டு ஒரு செல்ஃபியை எடுத்தான்.

என்ன உன் ஃபோன்ல கிளாரிட்டியே இல்ல.

ஏன் நல்லா தான் இருக்கு. த்ரீ மன்த்ஸ் முன்னாடி தான் வாங்கினேன். 15000 தெரியுமா.

ஸ்மைல் செய்தான் ஆதித்யா.

எதுக்கு சிரிக்கிறீங்க.

இல்ல நல்லா தான் இருக்கு உன் ஃபோன்.

சரி உங்க ஃபோன குடுங்க அதுல ஒரு செல்ஃபி எடுத்து பார்க்கலாம் இதை விட எவ்ளோ சூப்பரா தெரியுதுன்னு பார்க்கலாம் என்றாள் வசுந்தரா.

இல்ல இல்ல வேண்டாம் பரவாயில்ல அதுவே நல்லா தான் இருக்கு நீ அதையே எனக்கு சென்ட் பண்ணு.

இட்ஸ் ஓகே கொடுங்க நான் எடுக்கிறேன் உங்க ஃபோன்ல.

ஓகே, என்று சொல்லி தன் ஃபோனை எடுத்து பாஸ்வேர்ட் அன்லாக் செய்து அவளிடம் கொடுத்தான்.

செல்ஃபி கேமராவை ஆன் செய்தவள் ஒரு நிமிடம் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டாள். செல்ஃபி கேமராவிலேயே அதை பார்த்து ஸ்மைல் செய்தான் ஆதித்யா.

ஆதி, சூப்பரா இருக்கு உங்க ஃபோன். எப்ப வாங்கினீங்க.

லாஸ்ட் இயர்.

ஆப்பிள் ஃபோனா என்று சொல்லி பின்பக்கமாக இருந்த ஆப்பிள் சிம்பளை பார்த்தாள்.

ஆமாம்.

எவ்வளவு இது.

உன்னோட ஃபோன் காஸ்ட்ல ஒரு ஜீரோ ஆட் பண்ணிக்கோ.

1,50,000 ஆ.

ஆமாம்.

சூப்பர்.

ஆனா அன்னைக்கு இந்த ஃபோன் வச்சிருக்கலீயே நீங்க.

என்னைக்கு.

அன்னைக்கு உங்க ஃபோன் கூட நான் எடுத்து என்னோட முதுகு பின்னாடி வச்சுக்கிட்டேன் வைப்ரேஷன் மோட்ல கால் வந்துச்சு, அப்புறம் என்று சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்தி விட்டாள்.

அது பர்சனல் ஃபோன்.

அப்போ இது எங்க வச்சிருந்தீங்க.

இது எப்பவுமே என்னோட ஆபீஸ் ரூம்ல தான் இருக்கும். இப்ப வெளியே போகவே இதை எடுத்துட்டு வந்தேன்.

அந்த ஃபோன் எடுத்துட்டு வரலையா.

அதுவும் தான் இருக்கு, எதுக்கு நீ இவ்ளோ கேள்வி கேட்டுட்டு இருக்க.

இல்ல இதைவிட அதை நல்லா இருக்கணும்னா அதுல ஃபோட்டோ எடுத்துக்கலாமே என்றதுக்காக தான் கேட்டேன்.

அதிலும் நல்லா தான் இருக்கும் நீ இதிலேயே எடு.

ஓகே என்று சொல்லிவிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்து விட்டு அதைத்தான் நம்பருக்கு அனுப்ப சொல்லிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சீட் பெல்ட் இன்ஸ்ட்ரக்ஷன் சொன்னாள் ஒரு ஏர் ஹோஸ்டஸ்.

சீட் பெல்ட் போட்டுக்கொள்ள வசுந்தராவுக்கு ஆதித்யா ஹெல்ப் செய்தான்.

அவளுக்கு அது பிடித்திருந்தது. போட்டு விடும்போது அவளுடைய இடுப்பில் அவன் விரல் பட்டது அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது.

டேக் ஆஃப் ஆகும்போது, ஆதி கொஞ்சம் நர்வசா இருக்கு உங்க கையை பிடிச்சுக்கலாமா.

ஆதி,தன்னுடைய வலது கையை நீட்ட வசுந்தரா தன் இடது கையை அவன் கை விரல்களுக்கு நடுவே கோர்த்துக்கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். லேசாக மயக்கம் வருவது போல இருந்தது. காது வலிப்பது போல இருந்தது.

ஆதித்யா ஸ்மைல் செய்து கொண்டே, தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சீயுங் கம்மை அவளிடம் நீட்டினான்.

இத வாயில போட்டு சீயூ பண்ணு, இயர் பெயின் இருக்காது.

ஓகே என்று சொல்லி அதை வாயில் போட்டு மென்று கொண்டு இருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு சரியானது. இரவு நேரம் என்பதால் கீழே இருந்த வீடு ஹோட்டல் ரெஸ்டாரன்ட் ஸ்ட்ரீட் லைட் இன்று அனைத்து லைட்டுகளும் அழகாய் தெரிந்தது.

வாவ், அது இங்க பாருங்களேன் எவ்வளவு சூப்பரா இருக்கு. ஓ சாரி சாரி நீங்க எல்லாம் எத்தனைமுறை ஃபிளைட்ல போயிருப்பிங்க. உங்களுக்கு இதெல்லாம் புதுசு இல்ல அப்படித்தானே.

நான் நிறைய முறை பார்த்திருக்கிறது என்னமோ உண்மைதான், ஆனா இன்னைக்கு எனக்கு வித்தியாசமா இருக்கு.

என்ன.

உன்ன பார்த்துகிட்டு இருக்கேன்.

ஆதி கிண்டல் பண்ணாதீங்க.

ட்ரிங்க்ஸ் வேணுமா சார் என்று ஏர் ஹோஸ்டஸ் கேட்க.

நோ தேங்க்ஸ் என்றான்.

உங்களுக்கு மேடம்.

இல்ல இல்ல நான் குடிக்க மாட்டேன் எனக்கு வேண்டாம்.

ஓகே மேடம் என்று சொல்லி அவர்கள் சென்றதும்.

ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற. எனக்கு வேண்டாம் அப்படின்னு மட்டும் சொல்லலாம் இல்ல.

இல்ல நானும் குடிப்பேன்னு நினைச்சு தான் அவங்க கேக்கறாங்க.

அவங்க என்ன வேணும்னாலும் நினைக்கட்டும்,

அச்சச்சோ மத்தவங்க என்ன பத்தி தப்பா நினைக்க நான் விடமாட்டேன்.

நீ இதுக்கு அப்புறம் அவங்களை பார்ப்பியோ பார்க்க மாட்டியோ, அதனால உனக்கு என்ன அவங்க எப்படியாவது நெனச்சுக்கிட்டு போகட்டும்.

இல்ல ஆதி, நான் எதை வேணும்னாலும் தாங்கிக் கொள்வேன். ஆனா என்ன தப்பா நினைச்சுட்டா அது யாரா இருந்தாலும் என்னால தாங்கிக்க முடியாது.

ஓகே ஓகே கூல் டவுன் என்று சொல்லிவிட்டு அவளுக்கு காஃபி மற்றும் சாண்ட்விச் வாங்கி கொடுத்தான்.

ஃபிளைட்டிலிருந்து இறங்கும்போதும் அவளுக்கு அப்படியேதான் இருந்தது. இம்முறை மூன்று பபில் கம்மை போட்டுக் கொண்டு வேகமாக மென்றாள் வசுந்தரா.

இறங்கி ஹோட்டல் ரூமை ரீச் ஆனதும்.

உள்ளே சென்றனர்.

ஹோட்டல் ரூம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆதி இவ்வளவு சூப்பரா பெட்டு டெக்கரேட் பண்ணி இருக்காங்க. இது மேல படுத்து கலைக்கவே மனசு வரல. ஒரு ஃபோட்டோ எடுத்துக்கவா.

நான்தான் உனக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போதே சொல்லிட்டேன் இல்ல இந்த நாலு நாளும் உன்னோட விருப்பம் நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்றான் ஆதித்யா.