• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் சிரிப்பின் முகவரியே..5

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
75
89
18
Madurai
தன் முன் குத்திட்டு நின்ற பொத்தலை எரிச்சல் பொங்க பார்த்தவனின் விழி எதிர்பாத்தது வேறாக பொத்தலின் மேல் கவனம் பதியாமல் சிவந்து போனது.. மனம் கேட்கும் விஷயத்தை கொடுக்க துளியும் விரும்பாதவனாய் கழுத்து நிரம்புகள் புடைக்க பற்களை கடித்து வேண்டாம் என முறுக்கி நின்றவனுக்கு உண்மையில் எது வேண்டும் என தெரியாத போதும் திட்டவட்டமாக தன் மனம் எதற்கோ பயந்து பதுங்கி கொள்ள கேட்ட விஷயத்தை கொடுக்க கூடாது என முடிவு எடுத்தவனுக்கு அதை செயல் படுத்தும் வழி தான் தெரியவில்லை...


முன் இருந்த பொத்தலில் நிறம்பி இருந்த மதுவை தன் வாயில் சரித்து மனதை திசை திருப்ப நினைத்தவனின் எண்ணம் தவிடுபுடுயாகியதாய் ஏனோ மதுவின் சுவை பிடிக்கவில்லை முறிக்கி நின்ற உடலுக்கு என் தேவை தான் முதன்மை பிரதானம் என்ற பட்சத்தில் மூளையிடும் கட்டளை எல்லாம் அதன் முன் பழிக்காது இன்னும் இன்னும் அவனை சூடேற்றி இது ஒன்றே வழி என அவன் முன் நிறுத்திய ஆப்ஷனை ஏற்க்க முடியாதவனாய் நின்றவனுக்கு மது பழக்கம் ஒன்று இல்லாம் இல்லையே மூக்கு முட்ட குடித்து கவுந்து கிடக்கும் அளவிற்கு அதன் மேல் மெளிதாக இலையோடும் பித்து இருந்தாளும் இப்போது உடல் கேட்கும் விஷயத்திற்கு முன்பு இது அமிந்து போனதாய் மது இனித்திருக்கவில்லை அவனுக்கு...

ஒரு கட்டத்தில் பொறுமையை மொத்தமும் துறந்தவனாய் ஆஆ என தொண்டயில் இனைந்து வரும் நரம்புகள் தெறிக்க கத்தியவன் பொத்தலையும் தூக்கி சுவற்றில் அடித்து உடைத்து விட்டு வந்தர்களுக்கு பீர் வழங்கி உபசரித்து கொண்டிருந்தவனிடம் தன் கார்டை கொடுத்து உடைத்ததற்கும் சேர்த்தே பீல்லை செழுத்தி முடித்து விறுவிறுவென வெளியேறி இருந்தான்...


அதற்கு மேல் அங்கு நிலைக்கொள்ள முடியாது வெளியேறி வந்தவனின் கவனத்தை ஈர்த்து சில நிமிடங்கள் தன் பக்கமே நிலை நிருத்தி கொள்ளதாய் அமைந்தது அவளின் கதறல் சத்தம்...

கேட்ட பரிச்சயமான குரலில் திரும்பி பார்த்தவனின் கண்களில் சிக்கியது அந்த காட்ச்சி...

முழு போதையில் தள்ளாடி நின்ற இதழியாழை சுற்றி வட்டம் போட்டிருந்த ஆடவர்கள் அவளின் மேல் வக்கிரமாக பார்வையை பதித்தபடி அவள் மேல் அங்கும் இங்கும் கை வைத்து கதறவிட்ட சத்ததிலேயே திரும்பி இருந்த தூரியனுக்கு அவன் பிரச்சனையே கழுத்தை நெறிப்பதாய் இருந்தாளும் ஏனோ அவளை பார்த்துவிட்டபின் அப்படியே செல்ல துணியாது அவளை நெருங்கி வந்தவனுக்கு தடையாய் அவளை சுற்றி இருந்த எருமை மாடுகளை பார்த்து ரொம்பவே சலித்தவன்...

லீவ் ஹர் என அவர்ளிடம் உறுமி நின்றவனை பார்த்து கேலிப்புன்னகையை உதிர்த்தவர்கள் அனைவரும் தங்களுக்குள் தங்கள் மொழியில் கேலி செய்ததை தெளிவாகவே உணர்ந்திருந்தவனுக்கு ஏற்கனவே வேறு மாதிரியாக முறுக்கி இருந்த உடலுக்கு அவர்களை பந்தாடி கொஞ்சமே அதற்கு நொறுக்கு தீனியாக தீனி போட தொடங்கியிருந்தான்...

ஐ செட் லீவ் ஹர் என்றபடி உறுமி அவர்களை நெருங்கி இருந்தவன் அதற்கு மேல் அவர்களிடம் பேச்சை வளர்க்காது சண்டையில் இறங்கி துவைத்து போட தொடங்கியிருந்தான்...

அவளை வட்டமிட்டிருந்த அந்த நால்வரையும் கண்மண் தெரியாத உக்கிரத்தோடு பந்தாடி முடித்தவன் பக்கத்தில் தள்ளாடி நின்றவளின் இடையில் கைவிட்டு தனக்கு பக்கவாட்டாக தூக்கி தன் இடுப்பில் வைத்து கொள்ளாத குறையாக அள்ளி சென்று தன் காரில் அமர்த்தி தன் வீட்டிற்கு பறந்திருந்தான்...

வீட்டிற்கு வந்தவன் அரை மயக்கத்தில் தன் கரங்களில் தவழ்ந்து கிடந்தவளையே உற்று பார்த்து கொண்டை தன் அறையை அடைந்து தனக்கான மெத்தையில் அவளை கடத்தி விட்டு கொஞ்சம் தள்ளி நின்றவனுக்கு இப்போது உடம்பில் பேயாட்டம் போட்ட காம உணர்வு சற்று மட்டுப்பட்டு அவன் கரங்களினுள் குவிந்து அடங்கியதாய் உணர்ந்தவனுக்கு மனதோடு சிறு ஆச்சிரயம் தோன்றி மறைந்தது...

மெதுவாக ஏதேதோ உளறியபடி கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தில் ஆழ தொடங்கியவளை தன் பிராவுன் விழிகளால் ஆழ துலைத்தவனுக்கு அன்று அவள் இதழியாழ் என தன் பெயரை உச்சரிக்கையில் சுழிந்த அவளின் இதழை தன் இதழினுள் பொதிந்து கொள்ளும் ஆசை ஏற்பட்டாலும் காமத்தை கட்டியாழ தெரியாது திணறுபவனுக்கு இந்த உணர்வு செல்ல குறுகுறுப்போடு உள்ளேயே அமிழ்ந்து போனதில் இது காமம் இல்லை என தெளிவாகவே உணர்ந்திருந்தான் அவன்...

அன்று குட்டி உருவமாக தன் முன் அமர்ந்து கொண்டு ஆயிரம் பாவம் காட்டி தன் முகத்திலேயே அவன் விழியை நிலைப்படுத்தி வைத்து கொண்டவளை பார்த்தவனுக்கு பெண்ணின் உடல் கூறுகலை எல்லாம் வர்ணிக்க தெரியாத போதும் கண்கள் சிவப்பேற மோகம் கொண்டு தானே வழக்கம் இது என்ன புதிதாக கண்கள் சிவப்பேற ரசனை என குழப்பி போனான்...

ஸ்டாபெரி பழத்தை பார்த்து பார்த்து இதழ் வடிவத்தில் செதுக்கியதாக குட்டி செப்பு இதழை பார்த்தும் போதை ஏறியது தான் ஆனால் எல்லை மீறி பேயாட்டம் போட்ட தன்னுள் முகிழ்ந்தெழுந்த உணர்வை கட்டி ஆழ்வதாய் அந்த இதழை பார்த்தவனுக்கு அந்த குட்டி இதழ் அவன் நெற்றியோடு ஒட்டி கொண்டு தாயன்பை வழங்கியதாய் ஓர் பிரம்மை...

என்ன முரனான எண்ணமிது ஒரு குட்டி பெண்ணால் தன்னுள் துடித்தெழும் உணர்ச்சிகள் பொங்கி வரும் பாலில் தண்ணீரை தெளித்ததாய் அடங்கி போகுமா என்ன அப்படி என்ன இவளிடம் மட்டும் புது உணர்வு ஒரு வேலை தன் மாதுவின் வயது கட்டத்திற்குள் அடங்கி போவதால் இப்படியோ என நினைத்தவனை மண்டையில் தட்டும் விதமாய்..

அப்போ போன வாரம் உன்னை தேடி வந்த உன்னிடம் சல்லாபத்தில் இடுப்பட்ட பெண்ணும் இவள் வயதை ஒற்றி தானே வருவாள் அப்போது அவளாள் கட்டியாழ முடியாத உன் உணர்ச்சிகளை இவளால் மட்டும் எப்படி சாத்தியப்பட்டது என மனம் இடித்துரைத்ததில் இன்னுமே குழம்பி போனவனுக்கு அவள் மட்டும் என்ன தேவ மங்கையா என்ன அவளும் சாதரன பெண்களின் உடல் கூறுகலை கொண்ட பெண்ணுடல் தானே என்றவன் ஏதிர்பாத்த கேள்வி கிடைக்காத போதும் நிம்மதியாக உணர்ந்தான்...

மெல்ல அவளை நெருங்கி அவள் பக்கத்தில் படுத்து கொண்டவனுக்கு அவனின் கட்டுக்குள் இருந்து மீறாது அவன் ஆனையிட்ட இடத்தில் நிலைக்கொண்டதாய் அவன் கரத்தை அவள் மேல் போட்டு கொண்டவனுக்கு நெடிய நாட்கள் கழித்து கிடைத்ததாய் அப்படி ஓர் நிம்மதியான உறக்கம்...

உறங்கும் முன் இவளை விட்டு விடவே கூடாது என முடிவேடுத்தவனாய் பல திட்டங்களை வகுத்து கொண்ட பின்பே நிம்மதியான நித்திரையில் ஆழ தொடங்கியிருந்தான் தீலிப் தூரியன்...

தொடரும்...
 
Last edited: