• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் சிரிப்பின் முகவரியே..6

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
75
89
18
Madurai
கேலி கூத்தில் லயித்து இருந்ததில் மூளைக்குள் ஹிட் அடித்த டொப்மைன் மற்ற எதையும் உணரவிடாது செய்ததில் அதுவே ஒரு கட்டத்தில் அழுத்து அமிழ்ந்த பிறகு தான் சுற்றமும் கூடவே ரொம்ப நேரத்திற்கு முன் சென்ற தோழி இன்னும் கூட திரும்பி வந்திருக்கவில்லை என்று உணர்ந்தனர் இதழியாழின் நன்பன் நன்பிகள்...

மெதுவாக ஆட்டம் பாட்டம் நிகழும் இடத்தில் இருந்து விலகிய சிந்தியா கூடவே கௌதம் மற்றும் தனுஜாவையும் இழுத்து வந்து நிறுத்தி சற்று பதற்றம் வழிந்தோடும் குரலில் இதழ் எங்க என கேட்க அவர்களோ மலங்க மலங்க விழித்தனர்...

என்ன ரெண்டு பெயரும் முழிக்கிறிங்க இதழ் எங்க என கேட்க...

உன் கூடவே தான டி வந்தா இருந்தா இப்போ எங்களை இன்டிரோகேட் பண்ணுற என பதறத்தில் குற்றம் என்னும் விசை பலகை பாரபட்டச்சம் இன்றி தன் பக்கமும் முள்ளை நகர்த்தி காட்டியதில் ஏற்று கொள்ள முடியாது சிந்தியாவின் மீதே மொத்த பழியையும் கிடத்தினாள்...

தனு பொறுப்பு இல்லாம பேசாத என் கூடவே வந்தா இருந்தா சரி தான் ஆனா அப்படியே என் கூடவே மட்டும் தான் நிற்கனும்னு நிபந்தனை இல்லையே...

அவ என்ன குழந்தையா தவழ்ந்து அங்க இங்க போயிருப்பானு சொல்லுறதுக்கு முதல்ல நீ பொறுப்பு இல்லாம பேசாத சிந்து என்றவளுக்கும் இதழை கணாவில்லை என்ற பதற்றம் நெஞ்சோடு தழும்பினாளும் அவள் தொலைந்து போன பட்சத்தில் அதற்கு பொறுப்பேற்று கொள்ளும் அளவிற்கு விரிந்த மனம் இல்லாதவள் இப்படி ஒரு நிலையில் சிந்தியாவிடம் தர்க்கத்தில் இடுப்பட்டிருந்தாள்...

இரண்டும் நீ தான் தொலைத்தாய் என சண்டையிட்டு கொண்டதை அலுப்பாக பார்த்து வைத்த கௌதம் ஒரு கட்டத்தில் வெடித்து கிளம்பி முதல்லை ரெண்டு பெயரும் கொஞ்சம் வாயை மூடுறிங்களா யாழி இங்க தான் இருப்பா நல்லா எல்லா பக்கமும் தேடி பார்ப்போ அப்படி அவ நிஜமாவே தொலைந்து இருந்தாள் அதுக்கு நாம முனுபெயரும் தான் பொறுப்பு ஏன்னா வரமாட்டேன்னு சொன்னவளை நாம தான் கூப்பிடோம் அதுனால முதல்லை உங்களுக்குள் சண்ட போட்டுக்காம எல்லா இடத்துலையும் தேடி பாருங்க என அவர்கள் இருவரையும் ஒவ்வொரு திசை பக்கம் அனுப்பி வைத்து விட்டு தானும் ஒரு பக்கம் தேடினான்..


மணி பதினொன்றை தொட்டு சற்று கடந்திருந்த நிலையில் பப் முழுக்கவும் தேடி இதழ் யார் கண்களிலும் அகப்படாது ஆள் போனதில் இன்னும் இன்னும் பதற்றம் உச்சத்தை தொட கொஞ்சம் அவளை கவனமாக பாதுகாத்து இருக்கலாமோ என காலம் கடந்து யோசித்தனர்...

மூவரும் ஒரே இடத்தில் வந்து நின்ற பின் நா எல்லா இடத்துலையும் பாத்துட்டேன் அவ எங்கையும் இல்லை என்ற பதிலையே மூவரும் ஒருவர் ஒருவரிடம் பகிர்ந்ததில் மூவருக்கும் முகம் விழுந்து போனது...

கொஞ்சம் தைரியமான பெண்ணாய் இருந்தாள் கூட எப்படியும் வந்து விடுவாள் என நம்பி இருக்கலாம் ஆனால் தொட்டதற்கு எல்லாம் அஞ்சும் பெண் என்பதே அவர்களுள் பதறத்தை தொற்றுவிக்க போதுமானதாய் இருந்தது..

நேரம் கடந்து கொண்டே இருந்ததில் சிந்தியா மற்றும் தனுவை நிமிர்ந்து பார்த்தவன் இதற்கு மேல் இவர்கள் இங்கு நிற்பது சரிப்படாது என எண்ணி நீங்க ரெண்டு பெயரும் கிளம்புங்க இது வரைக்கும் நீங்க இங்க நின்றதை தப்பு இதுக்கு மேல நின்றால் தேவை இல்லாத பிரச்சனை கிளம்புங்க என்ற உடன் இடைவெட்டி மறுத்தலிக்க முயன்ற சிந்தியாவை தடுத்து...

சொன்னா கேளு தியா காலை நமக்கு கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நா யாழியோட வந்துருவேன் அவளுக்கு பெருசா சென்னைலை எந்த இடமும் தெரியாது அதுனால இங்க தான் எங்காவது இருப்பா நா பாத்துக்குறேன் கிளம்புங்க என துரிதப்படுத்து அவர்களை அனுப்பி வைத்தவன் அந்த பப்பை சற்றி ஐந்து கிலோமீட்டர் வரை தேடி பார்த்தும் கிடைக்காது போனவளை நினைத்து மனம் வருந்தி அடுத்து என்ன செய்ய என தெரியாமல் முகம் சுணங்க ரொட்டில் அமர்ந்து விட்டான்...

இவனின் அலைப்புறுதலுக்கு காரனமானவளோ தூரியனின் அனைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் கட்டுண்டு கிடந்தாள் பாவையவள்...

அழுப்பின்றி தினம் காணும் அதை முகமானலும் இன்றும் கூட அதே போல் காதலில் துளிர்த்த ஏக்கத்தோடு பூவி கதிரவனுக்காக காத்திருக்க அவனும் தேயாத அதை மலர்ச்சியோடு உதித்து பூவியை கூச செய்யவும் மறக்காது பூவியை ஒளியால் சிலிர்க்க வைத்து அன்டத்தை வெளிச்சமாக்கியிருந்தான்...

தன் அறையில் அனுமதியின்று சிறு துவாரத்தின் வழியை கூட விடாது திருட்டு தனமாக உட்புகுந்த கதிரவனின் வெளிச்ச கதிர்கள் தன் முகத்தை கூசியதில் புறங்கையால் முகத்தை மறைத்தபடி எழுந்து அமர்ந்தான்...

சில கனங்களில் கண்கள் வெளிச்சத்தை பழகி கொண்டதை அடுத்து கண்களில் கூச்சம் இன்றி தெளிவான பார்வையுடன் தன் பக்கவாட்டு பக்கம் திருப்பியவனின் முகம் அதே போல் பாரபட்ச்சம் இன்றி இறுகியே இருந்த போதும் இறுக்கத்தில் இடையே நூலிலை இளக்கமாக சிறு தளர்வும் தென்பட்டது...

மெல்ல தன் பக்கம் படுத்திருந்தவளின் முகத்திற்கு மிக நெருக்கமாக குனிந்த கொண்டு நேற்றியில் புரண்ட கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டவன் ஐம் கம்மிங் பார் யூ பேபி என தனக்குள் ஓதி கொண்டவன் தன் இதழை நகர்த்தி நெற்றியில் ஒட்ட வைக்க நினைத்து பின் செய்யாது மீட்டு கொண்டவன் அவள் தலையை கொஞ்சம் அழுத்தமாகவே வருடி விட்டு தன் பணிகளை கவனிக்க கிளம்பலானான்...

குளித்து முடித்து இடுப்பில் டவளோடு கண்ணாடி பக்கம் போய் நிற்காது அவள் அருகில் வந்தவன் அவள் இன்னும் கூட தூங்கி கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு பின் சட்டை அனியும் போது ஒரு வாட்டியாக பேன்ட் அனியும் போது ஒரு வாட்டியாக அடுத்து அடுத்து எல்லாவற்றையும் அனிந்து முடித்து கிளம்பும் வரை அவள் அருகில் வந்து ஒவ்வொரு தடவையும் அவள் தூக்கத்தை உறுதி படுத்தி கொண்டவன் கடைசியாக அறையை விட்டு கிளம்பு போது பார்த்து விட்டு வழக்கம் போல் கிளம்பி இருந்தான் தீலிப் தூரியன்...

படிகளில் பட்பட்டென சத்தம் எழுப்ப பூமி தாய் கதி கலங்கி போகும் அளவிற்கு காலடியை அழுத்தமா படிகளில் பதித்து வந்தவனின் காலடி சத்ததில் கீழ் தளத்திலேயே கொஞ்சம் ஓரமாக அமைந்திருந்த ஓர் அறை திறக்கப்பட்டது...

படியில் இருந்து நிதானமாக இறங்கி வந்தவனை அந்த திறந்து கொண்ட அறையில் இருந்த வந்த ஒரு நடுத்தற வயதுடைய பெண்மனி ஒருவள் அவனையே வெறித்து பார்த்தார்...

தான் வரும் அரவம் கேட்டு அந்த அறை திறக்கப்பட்டதை கவனித்தவனும் பெரிதாக எந்த பாவனைகளையும் முகத்தில் காட்டாது எப்போது இருக்கும் அதை முக இறுக்கதோடு இறங்கி வந்தான்...

அந்த பெண்மனி மெல்ல அவனை நெருங்க முயன்று நிலைப்படியில் இருந்து தாண்டி வரும் முன் அவளை ஓர விழியால் பார்த்து கொண்டே சபரி என அழுத்தமாக அந்த விட்டின் பணி ஆளை அழைத்து நின்றவனின் குறலுக்கு அவன் வந்தானோ இல்லையோ இங்கே நெருங்கி வர பார்த்தவளின் கால்கள் அப்படி வேர்விட்டு நிலைகக்கொண்டதாய் அப்படியே நின்று விட்டது...

அவன் கத்திய குரலுக்கு வந்து நின்ற சமரி என்பவனிடம் மேலே ஏதோ கை காட்டி கூறி விட்டதோடு கதவின் பக்கம் நின்றவளையும் ஒரு முறை ஆழ உள் வாங்கி கொண்டு நகர்ந்திருந்தான் தூரியன்....

அவன் சென்ற பின் இதற்கு மேல் அங்கு வேலை இல்லை என்பதாய் அந்த அறையும் பூட்டி கொண்டது...

அவன் சென்ற பின் கொஞ்சம் நேரம் செல்லவே எழுந்து அமர்ந்த இதழியாழுக்கு தலை பயங்கரமாக வலித்ததோடு புதியதாக ஒரு இடத்தில் இன்று விடியலை சந்தித்ததில் பயந்தும் போனவள் இது என்ன இடம் யாரு வீடு என்ற யோசனையோடு சுற்றி முற்றி பார்த்து கொண்டிருக்கும் போதே அவளை மேலும் நடுங்க செய்வதாய் அறையை படாரென திறந்து உள் நூழைந்திருந்தான் சபரி...

எழுந்துடிங்கலா இந்தாங்க எங்க சார் கொடுக்க சொன்னாரு என கூறி பைன்ஆப்பிள் ஜூஸை அவளிடம் கொடுத்து முடித்து நகர இருந்தவனை ஒரு நிமிஷம் என கூறி தடுத்து நிறுத்தியவளின் அழைப்புக்கு மறுக்காது நின்று திரும்பி அவளை பார்த்தவன் சொல்லுங்க என்பதாய் பார்வையால் கேட்டு நின்றான்...

இங்க நா எப்படி வந்தேன் இது யாரு வீடு என மலங்க மலங்க விழித்து கேட்டவளை பார்த்து ஆது முதல் அந்தம் வரை அனைத்தையும் கூறாமல் சுருக்கமாக நேற்று நீங்க போதைல இருந்த அப்போ உங்க கிட்ட ஒரு கூட்டம் மிஸ் பிகேவ் பண்ண பார்த்தாங்க அப்போ எங்க சார் தான் உங்களை காப்பாத்தி கூட்டிட்டு வந்தாங்க என்பதோடு முடித்து கொண்டு நகர இருந்தவனை மீண்டு தடுத்து...

நா ஹாஸ்டலுக்கு போகனும் என கூறியவளை பார்த்து தலை அசைத்தவன் பிரஷ் அப்பாகிட்டு வாங்க என கூறி விட்டு சென்று விட்டதை அடுத்து அவன் கொடுத்த ஜூஸை அப்படியே ஓரமாக வைத்து விட்டு எழுந்து தன் டிரெஸ்ஸை சரி செய்து கொண்டு அவசரம் அவசரமாக ஷாலால் முகத்தை துடைத்து அவனுக்கு பின்னோடே வந்து நின்றவளை பார்த்து வெளி அழைத்து சென்றவன்...

சந்திரமூர்த்தி இவுங்களை கொண்டு போய் அவுங்க சொல்லுற இடத்துல விட்டுட்டு வாங்க என கூறியதை அடுத்து அந்த சந்திரமூர்த்தி என்பவனும் மறுக்காது வாங்க என அவளை அழைத்து கொண்டு அவள் கூறிய இடத்தில் இறக்கி விட்ட மறு நொடி எந்த வித பேச்சும் இன்றி வந்த பாதையிலேயே திரும்பியிருந்தான்...

ஏதோ மேஜிக் வர்டில் சில மணி தூளிகள் வாழ்ந்து விட்டு பின் நிஜ உலகிற்கு வந்தவள் போல் ஏதுவும் புரியாது விழித்தவளுக்கு நேற்று இரவு ஜூஸ் குடித்த வரை உள்ள நியாபகங்கள் மட்டும் நினைவடுக்குகளில் சேமித்ததாய் அது வயை மட்டுமே நியாபகமாய் அதற்கு மேல் ஏதுவும் நியாபகம் இல்லாது போனது அவளுக்கு...

மண்டையை குடையும் யோசனையோடு அப்படியே நின்றவள் எல்லொரும் கேப்பஸ்னுள் நுழைவதை பார்த்து நேரம் ஆச்சு என சில நேரங்களுக்கு யோசனையை ஓதுக்கியவளாய் கூட்டத்தோடு கூட்டமாக டே ஸ்காலர்போல் யாரிடமும் அடப்படாமல் உள் நுழைந்து கொண்டு தன் அறைக்கு வந்தவள் ஹப்பாடா தப்பிச்சோம் நல்ல வேலை மாட்டலை என்ற எண்ணத்தோடு
வேகவேகமாக குளித்து காலெஜ் செல்ல துவங்கினாள் இதழியாழ்...

குளிக்கும் போதும் உடைகளை களைய விளைந்தவளின் முகம் தன் தோள்பட்டையோரம் திருப்பியதில் அனுமதி இன்றி நாசியில் ஏறிய ஏதோ ஓர் வித வினோத மனம் அவளை சில நேரங்களுக்கு மாயக்கட்டிற்குள் ஆழ்த்தியது...

மெல்ல தன் தோளை ஆழ்ந்த மூச்சோடு முகர்ந்தவளுக்க மாயக்கட்டிற்குள் இருந்து விடுப்பட்டு நிதர்சனத்தை உணரவே சில கணங்கள் பிடித்தது...

மெல்ல மாயத்திரை விலக்கப்பட்டதில் தன் தலையில் தானே தட்டி கொண்டு என்ன பண்ணுற இதழ் டைம் ஆச்சு நா என்னடானா லூசு மாதிரி நிக்கிறேன் என்று எண்ணியபடி வேகவேகமாக குளித்து முடித்து காலேஜ் பிளாகிற்கு அவள் செல்லவும் முதல் பிரியட் தொடங்கியதற்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது...

வேகவேகமாக ஒடி தன் கிளாசை அடைந்து மே ஐ கம் இன் மேம் என அனுமதி கேட்டவளின் குரலை வைத்து யார் என அவள் நன்பிகளும் நன்பர்களும் கண்டு கொண்டதாக தலை தொங்க அமர்ந்திருந்தவர்கள் விருட்டென நிமிர்ந்து அவளை முழுதாக கண்டு கொண்ட பின்னே மூவரின் முகமும் பிரகாசித்தது...

நேற்று இரவு இதழை தேடி கொண்டு அழைந்த கௌதம் விடிந்த பின்பு தான் வீட்டிற்கே திரும்பி இருந்தான் அவன்...

எங்க போயிருப்பா என்ற யோசனையோடு இன்னும் நெஞ்சை விட்டு விலகாத பதற்றத்தோடும் ஒருவேலை நேற்று இரவு பப்பின் சூழல் பிடிக்காமல் மீண்டும் ஹாஸ்டலுக்கே சென்று இருப்பாளோ என எண்ணிவன் அப்படியாக தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வந்து பீளிஸ் கடவுளே இதழ் காலேஜ்ல தான் இருக்கனும் என மானசீகமாக கடவுளை வேண்டியபடி வந்து காலேஜில் நின்றவனுக்கு பெருத்த ஏமாற்றமாக இதழ் கிளாஸின் இருந்திருக்கவில்லை...

அவனை தொடர்ந்து வந்த சிந்தியாவும் தனுவும் வந்ததும் கௌதமிடம் இதழ் எங்க கௌதம் நீ மட்டும் இருக்க என்று கேட்கவும் இன்னும் வரை தன்னாள் இதழை கண்டு பிடிக்கமுடியவில்லை என்றதும் யார் யாரை நொந்து கொள்வது என தெரியாமல் மூவரும் தலையை தொங்க போட்ட நேரம் அவர்களின் பதற்றமும் கவலையும் அவசியம் அற்றதாய் வந்து நின்றால் இதழியாழ்...

தொடரும்....
 
Last edited: