• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல், பாகம் -10

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம்-10

வீட்டிற்கு சென்றதும் வேலையாட்கள் வனஜாவின் அறைக்கு அனுமதித்தனர். உள்ளே சென்ற லீலா.... அவளுடைய கப்போர்டுகளில் தேடினாள். அப்போது டைரிகள் சில கிடைத்தது. அதை பிரித்துப் பார்த்தாள். இந்த வருடத்தினுடையது.... அதில் அவளுடைய தினசரி வேலைகளையும் ரோஹனை அவள் எந்த அளவிற்கு விரும்புகிறாள் என்று எழுதியிருந்தாள்.‌ மேலும் எத்தனை முறை அவர்கள் இருவரும் இணைந்து இருந்தார்கள் என்று எழுதியிருந்தாள்.... கோடு வோர்டு போல எக்ஸ்.... என்று எழுதி இருந்தாள்.... இரண்டு எக்ஸ்.... மூன்று எக்ஸ்.... ஒரு நாள் ஐந்து எக்ஸ்.... என்று எழுதியிருந்தாள்.... தன்னை விட பதினேழு வருடங்கள் பெரியவர்.... ஆயினும் அவர் என் மேல் கொண்டது காதலா மோகமா என்று தெரியவில்லை.... இருப்பினும் அவரை என் மனம் விரும்புகிறது.... அவரை நான் மனமார காதலிக்கிறேன்.... எப்போதும் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிராத்தித்ததாக எழுதியிருந்தாள். மற்றபடி அவள் அந்த டைரியில் அவள் எடுத்து கொண்ட அல்லது எடுத்து கொண்டு இருக்கும் மாத்திரைகள் பற்றி எழுதவில்லை. அதற்கு முன் வருடம் இருந்த டைரியில்.... மாத்திரை போட்டுக்கிட்டேன்.... என்று தான் எழுதியிருந்தாலே தவிர என்ன பெயர் என்று எழுதவில்லை..... அவள் அவளுடைய முன்னால் கணவனால் பட்ட துன்பங்களை எழுதியிருந்தாள்.... பின்னர் அரைமணி நேர தேடலுக்கு பிறகு ஒரு ஃபைல் கிடைத்தது. அதில் சில மருந்து சீட்டுகள் இருந்தது.... ராஜூ.... நீ ஆஃபீஸூக்கு போய் வண்டியை விட்டு விட்டு ஹாஸ்பிடலுக்கு வா.... நான் ஆட்டோவில் போய் இதை கொடுத்திட்டு வரேன்.... என்று சொல்லி விட்டு அந்த மெடிக்கல் ஃபைலையும் அந்த இரண்டு டைரிகளையும் எடுத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்று டாக்டரிடம் கொடுத்தாள் லீலா.

அவள் உள்ளே சென்று ஃபைலை கொடுக்கும் போது டாக்டரிடம் ரோஹன் பேசிய வார்த்தைகள் சில அவளுக்கு கேட்டது.... அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.

அந்த ஃபைலை வாங்கிய டாக்டர்.... ஓகே.... நான் இந்த மாத்திரை காம்பினேஷன் பார்த்திட்டு அவங்களுக்கு டிரீட்மெண்ட் கொடுத்துக்கிறேன்.... என்று சொல்லி உள்ளே சென்றார்.

வெளியே வந்து சேரில் அமர்ந்தாள் லீலா.... இரண்டு சேர்கள் தள்ளி அமர்ந்தான் ரோஹன்....

தேங்க்ஸ் லீலா.... என்றான் ரோஹன்.

அவ என்னோட ஃபிரெண்டு.... நீங்க தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு நான் அவளை பொறுத்தவரைக்கும் யாரோ இல்ல.... என்றாள்.

அவனிடம் வனஜாவின் டைரிகளை கொடுத்து.... இதை படிச்சுப் பாருங்க.... அவ உங்க மேல எவ்வளவு உயிரா இருக்கா ன்னு.... தயவு செஞ்சு அவளுக்கு ஆசை காட்டி மோசம் செஞ்சிடாதீங்க.... என்றாள்.

என்ன சொல்றீங்க லீலா....

ஆமாம்.... அவ உங்க ஒயிஃப் மாதிரி இருக்கிறதால அவ மேல உங்களுக்கு ஈர்ப்பு ன்னு எனக்கு தெரியும்.... அவ உங்களை பத்தி சொன்னதும்.... எனக்கே உங்க மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டுச்சு.... ஏன் அவ கூட சேர்ந்து உங்களை பங்கு போட்டுக்கொள்ள கூட நெனச்சேன்.... ஆனா அவ டைரியை படிச்சதும்.... அவ அவளோட முன்னாள் கணவனோடு அனுபவித்த கஷ்டத்தையும்.... அவ உங்க மேல எவ்வளவு உயிரா இருக்கான்னு.... அவ எழுதியிருக்கிறதை பார்த்ததும்.... அவளுக்கு இப்போ இந்த ஃபிட்ஸ் வந்ததால.... எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு........அதுவும் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் வேற ஆசை வார்த்தை காட்டி இருக்கீங்க....நீங்க உண்மையிலேயே அவளை லவ் பண்ணல.... அவளோட உடம்பைத் தான் லவ் பண்றீங்க ன்னு தெரிஞ்சா....அவ நொடிஞ்சு போயிடுவா

ஷட்டப்.... யூ.....இடிய.... என்று திட்ட வந்தவன்.... வார்த்தையை அடக்கிக் கொண்டான்.
எதை வச்சு.... நான் அவளை லவ் பண்ணல.... அவ.... உடம்பு மேல தான் ஆசைப் படறேன்னு சொல்ற....

பச்சையாகவே சொல்லவா.....
உங்களுக்கு.... தினம் தினம் குறைந்தது இரண்டு முறை அதிகப்பட்சமாக நான்கு அல்லது ஐந்து முறை உடலுறவு வச்சிக்கனும்.... அதுக்கு ஒரு பிராஸ்டிட்டியூட் மாதிரி ஒரு பொண்ணு தான் ஒத்துக்குவா.... அதனால அவ மேல லவ் இருக்குற மாதிரி நடிக்கிறீங்க.... போதாததுக்கு.... ஓடி போன உங்க பொண்டாட்டி மாதிரி வேற இருக்கா வனஜா.... இதுக்காக தான் அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்க நினைக்கறீங்க....

போதும்.... ஸ்டாப் இட் லீலா.... இன்னொரு வார்த்தை பேசின.... அவ்வளவு தான்.... என்னை என்ன உமனைஸர் ன்னு நினைச்சியா?

இல்ல.... உமனைஸர் ன்னா எல்லா பொண்ணுங்க கிட்டேயும் போறவன்.... ஆனா நீங்க.... ஒரே பொண்ணு கிட்ட தான் போவீங்க.... அவளை ஸெக்ஸ் டார்ச்சர் பண்ணுவீங்க.....

உன் பிரெண்ட் எப்பவாவது.... உன் கிட்ட வந்து நான் ஸெக்ஸ் டார்ச்சர் பண்றேன்னு சொன்னாளா?.....

இல்ல.....

அப்புறம்.... எதை வச்சு நீ அப்படி சொல்ற....

நான் ஃபைல் கொண்டு வரும் போது டாக்டரிடம் நீங்க பேசியதை நான் கேட்டேன்....

என்ன கேட்ட....

வனஜாவோட வயித்துல வளரும் கருவை அழிக்க சொன்னீயே..... எதுக்கு அப்படி சொன்ன.... உன்னோட செக்ஸ் லைஃபுக்கு அந்த குழந்தை இடைஞ்சலா இருக்கும்னு தானே.... அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போற இல்ல.... அப்புறம் அந்த குழந்தையை பெத்துக்கிட்டா என்ன?.... உன் மேல போய் ஆசைப் பட்டேனே ன்னு நினைச்சா.... எனக்கே என் மேல அருவருப்பா இருக்கு.... நான் ஊர்ல இருக்கும் போது ஒருத்தன் இருந்தான் லோகேஷ் ன்னு.... அவனால நிறையவே நான் கஷ்டப்பட்டுட்டேன்.... இரண்டு முறை அபார்ஷன் பண்ணிருக்கேன்.... ஆனா அவனை விட கேவலமானவனா நீ இருக்க.... உன் கிட்ட இருந்து என்னோட வனஜா பிரிச்சு.... உன்னோட உண்மையான சுயரூபத்தை அவளுக்கு காண்பித்து.... அவ வாயாலையே உன்னை காரி துப்ப வைத்து.... என்னோட அவளை கூட்டிக்கிட்டு போறேன்.... இது என் ஃபிரெண்ட் வனஜா மேல சத்தியம்.

ஏய்.... லூசு மாதிரி பேசாதே.... உண்மையிலேயே என்ன நடந்துச்சு ன்னு தெரியுமா....

எனக்கு எதையும் கேட்க வேண்டாம்..... நீயும் வேண்டாம்.... உன் வேலையும் வேண்டாம்.... குட் பை.... வனஜா உடம்பு சரியானதும் நான் வந்து உண்மையை புரிய வைத்து அவளை கூட்டிகிட்டு போறேன்..... இப்பவே உண்மையை சொல்லி அவளுக்கு கஷ்டத்தை கொடுக்க நான் விரும்பல.... நானே நடுரோட்டில இருக்கும் போது.... அவளையும் கூட்டிக்கிட்டு போக முடியாது..... டாக்டர் ஒன் வீக் கழிச்சு தான் அபார்ஷன் பண்ண முடியும் ன்னு சொன்னது எனக்கு கேட்டுச்சு.... அதுக்குள்ள அவளை நான் கூட்டிக்கிட்டு போயிடுவேன்.... அவளையும் அவ வயித்துல வளரும் குழந்தையையும் நான் காப்பாத்துவேன்....என்று சொல்லி விட்டு உள்ளே சென்று மயக்கத்தில் இருந்த வனஜாவை பார்த்து அவள் தலையை கோதி விட்டு.... சீக்கிரமா வந்து இந்த சிறையிலிருந்து உன்னை விடுதலை செய்யறேன் டி..... இது சிறை ன்னு தெரியாமலேயே நீ அடைப்பட்டு இருக்க... நான் வர வரைக்கும் நீதான் உன்னோட வயித்துல வளரும் குழந்தையை பார்த்துக்கணும்.... என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள்.

இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ரோஹன்..... லீலாவின் கையை பிடித்து தடுத்தான்.

இங்க பாருங்க லீலா.... நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க.... என் கூட டாக்டர் ரூமிற்கு வாங்க.... அவங்க கிட்ட நான் ஏன் அப்படி சொன்னேன்னு கேளுங்க....

இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டு.... பிளீஸ்.... என்றாள்.

அதற்கு மேல் அவளிடம் சொல்லி பயனில்லை என்று விட்டுவிட்டான் ரோஹன்.

வெளியே ராஜூ காத்திருந்தான்.... அவனுடன் ஆட்டோவில் ஏறி சென்றாள் லீலா.

என்னாச்சு அக்கா.... வனஜா அக்கா எப்படி இருக்காங்க.....

நல்லா இருக்கா.... நம்ம வேற வேலை தேடிக்கலாம்.... அது கிடைக்கலை ன்னா.... மறுபடியும்.... என்று சொல்லும் போதே அவளுக்கு அழுகை வந்தது.

ஏன் அக்கா.... மறுபடியும் அந்த தொழிலா....

நம்ம வனஜா அவளுக்கே தெரியாம ஒரு பெரிய ஆபத்தில இருக்கா.... அவளை காப்பாற்ற.... எனக்கு வேற வழி தெரியலை டா....

என்ன அக்கா சொல்றீங்க.... ஆபத்தா.... ரோஹன் சார் கிட்ட சொல்லாமே....

ஆபத்தே அவனால தான் டா....

என்ன அக்கா சொல்றீங்க.... என்று அதிர்ச்சி அடைந்தான் ராஜூ.

தொடரும்.....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari