• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம் 12

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -12
டாக்டர் கூப்பிடுகிறார் என்று நர்ஸ் வந்து சொன்னவுடன் டைரியை தன்னுடைய பேகில் வைத்து கொண்டு உள்ளே சென்றான் ரோஹன்.
ஹலோ டாக்டர்....... எப்படி இருக்காங்க என் ஒயிஃப்.... என்றான் ரோஹன்.
கவலைப்படத் தேவையில்லை மிஸ்டர் ரோஹன்.... ஷீ ஈஸ் ஆல்ரைட் நௌ..... நெக்ஸ்ட் வீக்ல ஒரு நாள் அபார்ஷன் பண்ணிடலாம் என்று டாக்டர் சொன்னவுடன்....
கண்டிப்பா அபார்ஷன் பண்ணி தான் ஆகணுமா டாக்டர்....
என்ன மிஸ்டர் ரோஹன்.... நான் தான் அவ்வளவு நேரமா உங்களுக்கு எக்ஸ்பிலெயின் பண்ணேனே.... இப்போ மறுபடியும் இப்படி சொன்னா எப்படி?
சாரி டாக்டர்....
புரியுது ரோஹன்.... யாருக்கா இருந்தாலும் கஷ்டமா தான் இருக்கும்.... ஆனா வேற வழி இல்லையே....
ஓகே டாக்டர்.... நான் போய் என்னோட ஒயிஃபை பார்க்கலாமா?
ஹாங்.... கண்டிப்பா.... இன்னைக்கு ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிட சொல்லியிருக்கேன்.... நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க.... அபார்ஷன் பண்றதுக்கு ஒரு நாள் முன்னாடி வந்து அட்மிட் பண்ணினா போதும்.
ஓகே டாக்டர்.... ஒன் ஸ்மால் ரெக்குவஸ்ட்....
சொல்லுங்க மிஸ்டர் ரோஹன்....
என் ஒயிஃப் கிட்ட இந்த அபார்ஷன் பத்தி சொல்ல வேண்டாம்.... அப்புறம் அவ கண்டிப்பா அபார்ஷனுக்கு சம்மதிக்க மாட்டா....
அவங்களுக்கு தெரியாம பண்றது சட்டப்படி குற்றம் மிஸ்டர் ரோஹன்.... நீங்க தான் அவங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கனும்....
ஓகே டாக்டர்.... நான் அவங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன்.... ஆனா இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.....
ஹூம்.... ஓகே.... என்றார் டாக்டர்.
வனஜாவை பார்க்க சென்றான். அவள் மயக்கத்தில் இருந்தாள். அவளருகில் அமர்ந்து அவளுடைய தலையை கோதி விட்டான்.
ஸ்வீட்டி.... நீ தான் டி என்னோட உயிர்.... நான் உன்னை அவ்வளவு லவ் பண்றேன்..... உன் ஃபிரெண்டு என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கா.... அவ எதாவது சொல்லி உன்னை குழப்பி விட்டுட போறா.... அவ பேச்சை கேட்டுக்கிட்டு என்னை விட்டுட்டு போயிட மாட்ட இல்ல?.... நீ இல்லன்னா நான் செத்திடுவேன் ஸ்வீட்டி.... அவ என்னை என்ன சொன்னான்னு தெரியுமா.... உனக்கு நான் ஸெக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறேன்னு சொல்றா?.... அவளுக்கு என்ன தெரியும்.... நம்மளோட அன்னியோன்யத்தை பற்றி.... அவ சொன்ன பிறகு.... நீ கூட எப்பவாவது என்னை அப்படி நெனச்சிருப்பியோ ன்னு பயந்திட்டேன்.... உன் பர்மிஷன் இல்லாமல் உன்னோட டைரியை படிச்சேன்.... சாரி ஸ்வீட்டி.... உண்மையை சொல்ல வா.... ஷெரின் இருந்தா இல்ல.... அவளோட நான் நிறைய டைம் ஸ்பென்டு பண்ணது இல்ல.... கல்யாணம் ஆன ஒரு வருஷத்துல அவ கூட ஒண்ணா இருந்தது மொத்தமே நாலு இல்லை ஐஞ்சு முறை தான் இருக்கும்.... அவளுக்கு என்ன விருப்பம் ன்னு தெரியாமலையே இருந்திட்டேன்.... பிஸ்னஸ்ல நம்பர் ஒன் ஆகனும் நினைச்சேனே தவிர அவளுக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கனும் ன்னு நினைக்கல.... அவளுக்கு ஸெக்ஷூவல் லைஃப் ரொம்ப பிடிச்சிருக்கு.... அதை அவளுக்கு நான் கொடுக்கல.... அதனால அவ வேற ஒருத்தனிடம் போயிட்டா.... இப்போ கூட நான் அவளை தப்பா நினைக்கலை.... அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அவ தேடிக் கொண்டு போயிட்டா.... உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு என் கிட்ட நீ ஒரு முறை கூட சொன்னதில்லை.... நானா கேட்டாலும் சொல்ல மாட்ட.... நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது உன்னோட முகத்தில இருக்கிற சந்தோஷத்தை பார்த்திருக்கேன்.... அந்த சந்தோஷம் உன் முகத்தில் எப்பவுமே இருக்கனும்னு தான் நான் உன்னிடம் தினமும் பல முறை உன்னுடன் உறவு வச்சிக்கிறேன்.... இரண்டு காரணங்கள்.... எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை..... எனக்கு உன்னை விட வயசு ரொம்ப அதிகம்.... என்னால ஒண்ணும் பண்ண முடியல ன்னு என்னை விட்டு விட்டு போயிடுவியோன்னு ஒரு பயம்..... அது கூட போயிடிச்சு எப்போ நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதும்.... என்னை நீ உன்னோட புருஷனாகவே நினைச்சுக்கிட்டு இருக்கிறதை பார்த்ததிலிருந்து.... இன்னொன்று நீ எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்.... என்று பேசி முடித்தான்.
பாவம் அவள் மருந்தின் மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்ததால் எதுவும் அவள் செவிகளுக்கோ மூளைக்கோ எட்டவில்லை.
பக்கத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்தான் ரோஹன். மறுபடியும் வனஜாவின் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
லீலா கூறியது போல....
இன்று மூன்று எக்ஸ்.... இன்று ஒன்று தான்....‌‌‌இன்று ஐந்து முறை.... என்று எழுதி இருந்தாள். ஏய் ஏன்டி ஸ்வீட்டி இதெல்லாம் எழுதி வச்சிருக்க.... பாரு அவ இதை பார்த்து விட்டு தப்பா நினைச்சிக்கிட்டா..... என்று சொன்னான் ரோஹன்.
சார்.... அவங்களை ரெஸ்ட் எடுங்க விடுங்க.... நீங்க பேசிக்கிட்டே இருக்கீங்க.... என்றாள் நர்ஸ்....
அவ மயக்கத்தில் தான் இருக்கா சிஸ்டர்.... நான் பேசறது அவளை டிஸ்டர்ப் பண்ணாது.... என்றான் ரோஹன்.
சிரித்துக் கொண்டே... சரி சரி.... என்னவோ பண்ணுங்க.... என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் நர்ஸ்.
இன்று பிரசாத் சார் வீட்டிற்கு வந்தார்.
அவர் என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
சார்.... இவங்க.... ஷெரின் மேடம் மாதிரியே இருக்காங்க ன்னு சொன்னாரு.... அப்போது தான் எனக்கு புரிந்தது.... ரோஹன் சாரின் மனைவி என்னை போலவே இருந்தார் போல.... அதான் என்னிடம் இவ்வளவு அன்பாகவும் பாசமாகவும் பழகுகிறார் என்று.
பிரசாத் சாரிடம் ஏதோ பிஸினஸ் விஷயம் பேசிக்கொண்டு இருந்தார் ரோஹன்.
காஃபி போட்டு கொண்டு போய் கொடுத்தேன்.... இருவரும் குடித்து விட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரசாத் சார் சென்ற பிறகு.... ரூமிற்கு வந்து என்னை கட்டிப் பிடித்து கொண்டார்.... அந்த எதிர்பாராத பிடிப்பை கண்கள் மூடினால் இன்றும் உணர முடிகிறது....
ஸ்வீட்டி....
ஸ்வீட்டியா?.... யாரு சார்....
இல்ல சார் இல்ல.... டார்லிங் ன்னு கூப்பிடு....
உரிமையோடு ரோஹன் சார் என்னை கூப்பிடு என்றது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது....
ஓகே சார்.... இல்ல ஓகே டார்லிங்....
சிரித்துக் கொண்டே என் இதழில் அவருடைய இதழை பதித்தார்....
சார்.... இல்ல.... டார்லிங்....
ம்.... சொல்லு ஸ்வீட்டி.... என்று என்னை கட்டி அணைத்து கொண்டே கேட்டார்.... நாளைக்கு ஒன் வீக் முடிஞ்சிடும்.
உடனே சட்டென்று விலகி நின்றார். நான் பயந்திட்டேன்.... என்னாச்சு.... என்றேன்.
உனக்கு அவன் கிட்ட போகனுமா?
இல்ல.... வேண்டாம் பிளீஸ்... என்னை அவன் கிட்ட அனுப்பிடாதீங்க.... உங்களை கெஞ்சி கேட்கிறேன்.... என்றேன்.
மறுபடியும் என்னை கட்டி அணைத்து கொண்டார்.... நீ பிரசாத் சாருக்கு காஃபி கொடுக்க வந்திட்டு போகும் போது மூன்று முறை என்னை பார்த்து கொண்டு போனீயே அப்பவே உன்னோட கண்ணுல என் மேல காதல் இருக்கிறதை உணர்ந்தேன்.... என்று அவர் சொன்னதும் கண்கள் கலங்கியது எனக்கு.
என் கூடவே இருப்பீயா....என்று அவர் சொன்னதும்... என் உயிர் உள்ள வரை.... என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.... வார்த்தை வரவில்லை.... அவரை முதல் முறையாக நான் கட்டி அணைத்து கொண்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.... ஒரு நாள் ரமேஷூடன் டைவர்ஸ் பண்ண பேப்பர்கள் கொண்டு வந்து கொடுத்தார்.... நான் கையெழுத்து போட்டேன்..... பிறகு தான் தெரிந்தது.... அந்த ரமேஷ் ரோஹன் சாரிடம் பத்து லட்சம் ரூபாய் காசு வாங்கிக் கொண்டு தான் என்னுடன் டைவர்ஸ் பண்ண ஒத்துக் கொண்டு இருக்கிறான் என்று.... நான் ரோஹன் சாரை என் கடவுளாகவே நினைக்கிறேன். அந்த ஷெரினுக்கு எப்படி தான் மனசு வந்தது இப்படி ஒரு நல்ல மனிதனை விட்டு செல்ல.... ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லது தான்.... இல்லையென்றால் இந்த நல்ல மனிதன் எனக்கு கிடைத்திருக்க மாட்டாரே.... என்று எழுதி இருந்தாள்.
இந்த லீலா.... டைரியை ஒழுங்கா படிக்கலியா.... நிறைய நாட்களில் என்னை புகழ்ந்து.... பெருமையா தான் எழுதியிருக்கா என் ஸ்வீட்டி.... அது தெரியாம என்னை அப்படி திட்டிட்டு போயிருக்காளே.... என்று நினைத்து கொண்டான் ரோஹன்.
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.