• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல், பாகம் -13

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -13
அடுத்த பக்கத்தில் வனஜா எழுதியிருந்ததை படித்து கொண்டிருந்தான் ரோஹன்.

இன்று கவலையாக இருந்தார் ரோஹன் சார்.... அவரிடம் என்னவென்று கேட்க சங்கடமாக இருந்தது.... இன்று இரவும் ஒரு எக்ஸ்.... ஆனால் அவர் சந்தோஷமாக இல்லாதது போல தோன்றியது எனக்கு. ஒருவேளை அந்த ரமேஷ் எதாவது சொன்னானா.... என்று நினைத்து கொண்டேன்.

தேதி மற்றும் கிழமையை பார்த்தான் ரோஹன்.

ஆம்.... அவள் நினைத்தது சரிதான். அன்று ரமேஷை பார்க்க அந்த மாலுக்கு சென்றான் ரோஹன்.

வாங்க சார்.... வனஜா எங்கே?.... கார்லையே இருக்காளா?.... என்று காரை பார்த்தான்.

இல்ல.... அவங்க வரல....

ஏன்.... அதான் ஒரு வாரம் முடிஞ்சிடிச்சே....

இந்தா.... இன்னொரு வாரம் வேணும்....என்று ரூபாய் நோட்டு கட்டை அவன் கையில் வைத்தான்.

இல்ல சார்.... இது சரிபட்டு வராது.... இந்தாங்க புடிங்க.... அவளை அனுப்புங்க....

இன்னொரு கட்டை கொடுத்தான் ரோஹன்....

இல்ல சார்.... நீங்க எவ்வளவு கொடுத்தாலும் ஒத்து வராது....

சரி.... எவ்வளவு கொடுத்தா.... நீ அவங்களுக்கு டைவர்ஸ் தருவ....

என்னது டைவர்ஸ்ஸா..... அதெல்லாம் முடியாது.... பொன் முட்டையிடும் வாத்தை வயித்தை கிழிக்க சொல்றீயா....

எவ்வளவு வேணும் ன்னு சொல்லு....

எவ்வளவு கொடுத்தாலும் என் வனஜா மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் கிடைக்காது.... நீயே அனுப்பறீயா.... இல்ல போலீஸ்ல கம்ப்லெயிண்ட் கொடுக்கவா.... என் பொண்டாட்டியை கடத்தி வச்சிருக்கன்னு.... என்றான் ரமேஷ்.

ஏய்.... ஓவரா பேசாத.... போலீஸ் கமிஷனர் வரை எனக்கு தெரியும்.... நான் நினைச்சேன் ன்னா உன்னை வெளியவே வரமுடியாத படி உள்ள வைக்க முடியும்.... பண்ணவா.... பார்க்கறீயா....

அய்யோ சார்.... வேண்டாம் வேண்டாம்.... அப்படின்னு சொல்லுவேன்னு நினைச்சியா.... நானே பெரிய ரவுடி தான்.... எனக்கு ஜெயில் ஒண்ணும் புதிசில்லை..... உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ.... நாளைக்கு இந்த நேரத்தில அவளை கூட்டிட்டு வந்து இங்கே விட்டிடு.... இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.... என்று சொல்லி விட்டு சென்றான் ரமேஷ்.

அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் ரோஹன்.

அப்போது மெல்ல கண்களை திறந்தாள் வனஜா.

டைரியை மூடி தன் பையில் வைத்து கொண்டு வேகமாக அவளருகில் சென்று அமர்ந்து அவள் கையை பிடித்து....

ஸ்வீட்டி.... இப்போ எப்படி இருக்க?

நல்லா இருக்கேன் டார்லிங்....

அவள் கைகளுக்கு முத்தமிட்டான் ரோஹன்.

டார்லிங்.... நம்ம பேபி நல்லா இருக்கா?.... என்றாள் வனஜா.

ஹாங்....

எனக்கு எதுவானாலும் பரவாயில்லை.... நம்ம குழந்தை நல்லா இருக்கனும்.... என்றாள் வனஜா.

கண்கள் கலங்க அவள் தலையை கோதி விட்டான் ரோஹன்.

டாக்டர் ரோஹனிடம் சொன்னதை நினைத்து பார்த்து கொண்டான் ரோஹன்.

மிஸ்டர் ரோஹன்.... உங்க ஒயிஃப்க்கு ஃபிட்ஸ் ரொம்பவே சிவியரா இருக்கு.... அவங்க நர்வ்ஸ் எல்லாம் ரொம்ப வீக்கா இருக்கு.... இப்போ அவங்க பிரெக்னென்டா வேற இருக்காங்க.... ஸோ....இதே மாதிரி அவங்களுக்கு இன்னொரு முறை ஃபிட்ஸ் வந்தா அவங்க வயித்துல வளரும் பேபிக்கு நல்லது இல்ல.... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்திச்சுன்னா.... ஐ மீன் பேபி நல்லா கிரோத் ஆன பிறகு அவங்களுக்கு ஃபிட்ஸ் வந்திச்சுன்னா.... அவங்களோட உயிருக்கும் ஆபத்து.... என்றார் டாக்டர்.

என்ன சொல்றீங்க டாக்டர்....

ஆமாம் மிஸ்டர் ரோஹன்.... இட் ஈஸ் பெட்டர் டு அபார்ட்....

இல்ல.... முடியாது.... வேண்டாம்....

சார்.... ஒரு டாக்டரான நானே உங்க குழந்தையை அபார்ட் பண்ண சொல்றேன்னா.... அந்த பேபிக்கு நல்லது இல்ல ன்னு தான அர்த்தம்.... நீங்க ரிஸ்க் எடுக்க நினைச்சீங்கன்னா.... அது உங்க ஒயிஃபோட உயிருக்கும் ஆபத்து.... பிளீஸ் புரிஞ்சிக்கோங்க....

ஓகே டாக்டர்.... என் ஒயிஃப் தான் எனக்கு முக்கியம்....

அவங்க வயித்துல இருக்குற குழந்தையை அபார்ட் பண்ணிடுங்க.... என்றான் ரோஹன். அப்போது தான் லீலா ஃபைலை கொடுக்க உள்ளே வந்தாள். ஆகையால் ரோஹனை தவறாக நினைத்து கொண்டாள்.

டார்லிங்.... டார்லிங்.... என்றாள் வனஜா.

ஹாங்.... சொல்லு ஸ்வீட்டி....

என்னாச்சு.... எதோ யோசனையில இருக்கீங்க....

அதெல்லாம் ஒண்ணும் இல்லை.....

லீலா எங்கே....

அவங்க ஆஃபீஸூக்கு போயிட்டாங்க....

என்ன.... எதாவது முக்கியமான வேலையா....

ஆமாம்....

சரிங்க.... நான் ஃபோன்ல பேசிக்கிறேன்....

இன்னைக்கு வேண்டாம் மா.... நாளைக்கு பேசிக்கோ.... உன்னை மொபைல் ஃபோன் யூஸ் பண்றதை அவாய்டு பண்ண சொன்னார் டாக்டர்.....என்று பொய் சொன்னான்.

அப்படியா.... சரிங்க.... நீங்க மட்டும் என் கூடவே இருங்க..... என்று அவனுடைய கையை எடுத்து தன் மார்போடு வைத்துக் கொண்டாள் வனஜா.

உன்னை விட்டு நான் எங்கே போவேன் ஸ்வீட்டி..... என்று சொல்லி விட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான் ரோஹன்.

*************

லீலா ஏற்கனவே ரோஹன் சொன்ன வீட்டிற்கு சென்று சார்....

அந்த அட்வான்ஸ் காசை அவர் கிட்டேயே கொடுத்திடுங்க.... எங்களுக்கு இந்த ஏரியாவில வீடு வேண்டாம்.... என்றாள் லீலா.

என்னம்மா.... இப்போ வந்து இப்படி சொல்ற.... உன்னால.... காலைல வந்த ரெண்டு பேரையும் அனுப்பிட்டேன்..... என்றார் அந்த ஹவுஸ் ஓனர்.

சாரி சார்.... என்று சொல்லி விட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல்
வா ராஜூ.... என்று சொல்லி அவனை கூட்டிக்கொண்டு நடந்து சென்றாள் லீலா.

அக்கா.... இப்போ நம்ம எங்க போறது....

தெரியல டா.... வா.... என்றாள் லீலா. மனதிற்குள் எப்படி வனஜாவை அந்த காமூகனிடம் இருந்து காப்பாற்றுவது.... என்று யோசித்து கொண்டே நடந்தாள்.

அக்கா.... அக்கா.... என்றான் ராஜூ.

ஹாங்.... சொல்லுடா....

அக்கா.... ரொம்ப பசிக்குது அக்கா..... என்றான் ராஜூ.

சரி வா.... ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம்....என்று சொல்லி விட்டு எங்கே ஹோட்டல் இருக்கிறது என்று பார்த்து கொண்டே நடந்தனர்.

அக்கா காசு வச்சிருக்கியா?.... என்றான் ராஜூ.

முன்னூறு ரூபாய் இருக்கு டா....

என் கிட்ட ஒரு இருநூறு ரூபாய் இருக்கு அக்கா....

சரி டா .... என்றாள்.

பிரபலமான அந்த பிரியாணி கடையை பார்த்ததும்....

அக்கா.... அங்க போலாமா?.... என்றான் ராஜூ.

சரி.... வா.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று இரண்டு நாட்களுக்கு பிறகு நன்றாக சாப்பிட்டனர்.

நானூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் பில் எடுத்து வந்து கொடுத்தான் சர்வர்.

ராஜூ அவனிடம் இருந்த இருநூறு ரூபாய் நோட்டை லீலாவிடம் கொடுத்தான். அதை வாங்கி கொண்டு தன் பர்ஸை திறந்தவளுக்கு அதிர்ச்சியானாள். ஆம் ஆட்டோவிற்கு காசு கொடுத்ததை மறந்துவிட்டாள். காலை பர்ஸில் பார்த்த முன்னூறு ரூபாயை நியாபகம் வைத்திருந்தாள். நூறு ரூபாய் மட்டுமே இருந்தது.

அச்சச்சோ.... என்றாள் லீலா.

என்னாச்சு அக்கா....

ஏய்.... என்கிட்ட நூறு ரூபாய் தான் டா இருக்கு.....



தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari