• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல், பாகம் -17

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -17

இவன் ஏன் லவ் பண்றேன்னு சொன்னான்.

ஒருவேளை இப்போ தான் தைரியம் வந்திருக்கோ.... அன்னைக்கு முடியாததை இப்போ பண்ண நினைக்கிறானோ.... நம்ம அந்த தொழிலை விட்டிடலாம்னு நினைச்சாலும் முடியாது போல.... காலை சுத்தின பாம்பு மாதிரி நம்மல அந்த தொழில் விடாதோ.... என்று என்னவெல்லாமோ யோசித்து கொண்டு பின்பு தூங்கி விட்டாள்.

ராஜூ காலையில் எழுந்து அவனிடம் இருந்த இருநூறு ரூபாய் நோட்டை எடுத்து கொண்டு டீ மற்றும் டிபன் வாங்கி வர மாடியிலிருந்து கீழே இறங்கி சென்றான்.( அன்று வெள்ளி மோதிரத்தை வைத்து தான் காசு கொடுத்தாள் ராஜூ விடம் வாங்கிய காசை திரும்பவும் அவனிடமே கொடுத்து விட்டாள்)

அர்ச்சனா யூனிஃபார்மில் வாசலில் நின்று யாருடனோ பேசிக் கொண்டு இருந்தாள்.

அப்போது மாடியில் இருந்து கடைக்கு செல்ல கீழே இறங்கி வந்த ராஜூ அர்ச்சனாவை பார்த்ததும் மறுபடியும் மேலே ஏற திரும்பினான்.

டேய்.... இங்க வாடா.... என்றாள் அர்ச்சனா.

மெதுவாக கீழே இறங்கி வந்தான்.

ஏன்டா.... என்ன பார்த்து பயந்து போற....

இல்ல மேடம்.... அப்படி எல்லாம் இல்லை.... பயப்படல.... என்றான் ராஜூ மெதுவாக.

இங்க பாரு.... நான் உங்க அக்காவை விட ஒரு மூணு இல்ல நாலு வருஷம் தான் பெரியவளா இருப்பேன்.... என்னையும் அக்கான்னே கூப்பிடு.... பயப்படாதே.... சரியா.... என்று அவன் தோளை தட்டி சொன்னாள் அர்ச்சனா.

சரிங்க அக்கா....

பரவாயில்லையே.... உடனே தைரியமா நல்லா பேசுற.... மேடம் ன்னு சொல்லும் போது இருந்த நடுக்கம் பயம் எல்லாம் அக்கான்னு சொல்லும் போது போயிடிச்சு.... என்றாள் அர்ச்சனா.

அக்கா ன்னு கூப்பிட சொன்னீங்க இல்ல.... அதான் தைரியம் வந்திடிச்சு.... என்றான் சிரித்துக் கொண்டே.

சரி சரி எங்க போற....

கடைக்கு போறேன் அக்கா.... டிபன் அப்புறம் ஃபிளாஸ்கில் டீ வாங்கி கொண்டு வர.... என்றான்.

அப்படியா.... கொஞ்சம் வெயிட் பண்ணு....என்னை பிக்கப் பண்ண இப்போ ஜீப் வரும் ..... அதுல உன்னை மெயின் ரோடுல விட்டிடறேன்.... இது ரெஸிடென்ஷியல் ஏரியா.... இங்க பக்கத்தில எதுவும் ஹோட்டலோ டீக்கடையோ இல்லை....அரைகிலோ மீட்டர் தள்ளி தான் ஹோட்டல் இருக்கு .... என்றாள் அர்ச்சனா.

ஓகே அக்கா.... தேங்க்ஸ்.... என்றான் ராஜூ.

உங்க அக்கா என்ன பண்றாங்க....

தூங்கிக் கிட்டு தான் இருக்கா....

என்ன இன்னும் எழுந்திருக்கலீயா?

இல்ல.... அக்கா பாண்டிச்சேரியில் இருக்கும் போது நைட்டு எல்லாம் கண் முழிச்சிக்கிட்டு இருக்கும் இல்ல.... அதான் காலைல லேட்டா தான் எழுந்திருக்கும்.... எப்பவுமே நான் டிபன் வாங்கிட்டு வந்து ஹாட் பாக்ஸ்ஸில வெச்சிடுவேன்.
பத்து இல்ல பதினோரு மணிக்கு தான் அக்கா வழக்கமா எழுந்திருக்கும்.... அப்புறம் நான் வாங்கி வச்ச டிபனை சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு சமைக்கும்.... அதே பழக்கத்தில இன்னும் எழுந்தரிக்கல....

ஏன் பாண்டிச்சேரில நைட்டு ஷிஃப்ட் வேலை பண்ணிக்கிட்டு இருந்தாளா உங்க அக்கா?

அது வந்து.... ஆமாம்.... என்று மறுபடியும் திக்கி திணறி சொன்னான் ராஜூ.

என்னடா மறுபடியும் திக்க ஆரம்பிச்சிட்டியா?.... சரி சரி விடு.... என்று சொல்லி முடிப்பதற்குள் ஜுப் வந்தது.

குட் மார்னிங் மேடம்.... என்றான் டிரைவர்.

குட் மார்னிங் சுந்தரம்.... வாடா ராஜூ.... பின்னாடி ஏறிக்கோ.... என்றாள் அர்ச்சனா.

ஓகே அக்கா.... என்று சொல்லி ஏறி அமர்ந்தான் ராஜூ.

சுந்தரம்.... மெயின் ரோடுல பாலாஜி ஓட்டல்ல இறக்கிவிட்டிடுங்க.... என்றாள் அர்ச்சனா.

ஓகே மேடம்..... என்றார் டிரைவர்.

வீட்டில் லீலா தூங்கிக் கொண்டிருந்தாள்.

அர்ச்சனா கிளம்பியதும் தினேஷ் மாடிக்கு ஏறிச் சென்றான்.

ஹலோ.... என்று சொல்லி கதவை தட்டினான் தினேஷ்.

மேடம்....

லீலா.... என்று சொல்லி கதவை தட்டினான்.

தூக்கத்தில் இருந்த லீலா....

ஏய் ராஜூ.... யாருன்னு பாருடா.... என்றாள் தூக்கக்கலக்கத்திலே....

மறுபடியும் கதவு தட்டும் சப்தம் கேட்டது.

ஏய்.... யாருடா அது.... என்னை நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா.... என்று கத்திக்கொண்டே எழுந்தவள் நாம் சென்னையில் இருக்கிறோம்.... அதுவும் முன்னாள் இரவு ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டில் தங்கி இருக்கிறோம்.... மேலும் ஒருவன் முன் தினம் தன்னை லவ் யூ.... என்று சொன்னது எல்லாம் நினைவுக்கு வர... சே.... என்று நினைத்து கொண்டே வெளியே வந்தாள்.

அப்போது கதவருகே தினேஷ் நின்றுக் கொண்டு இருந்தான்.
தன் கூந்தலை சரி செய்து கொண்டைப் போட்டு கொண்டே.... வாங்க... உட்காருங்க.... என்றாள்.

அக்கா இருக்கவே நேத்து என்னால ஃபிரீயா பேச முடியல.... என்று ஆரம்பித்தவனிடம்....

ஒரு நிமிஷம்... நான் பிரஷ் பண்ணிட்டு ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்திடறேன்.... என்றாள் லீலா.

ஓகே.... என்று அங்கிருந்த சேரில் அமர்ந்தான் தினேஷ்.

பல்லை தேய்த்து கொண்டே.... அவன் இப்படி சொன்னால் நாம் இப்படி சொல்லலாம்.... அப்படி சொன்னால் அப்படி கேட்கலாம் என்று நினைத்து கொண்டே மெதுவாக பல் தேய்த்து விட்டு‌... பிறகு வந்து அவன் முன்னே அமர்ந்தாள்.

சொல்லுங்க....உங்க பேரு என்ன?

தினேஷ்....

சொல்லுங்க மிஸ்டர் தினேஷ்....

ஐ லவ் யூ....

பிளீஸ்.... என்னை வெறுப்பேத்தாதீங்க.... என்றாள்.

இல்ல லீலா.... நான் சீரியசா தான் சொல்றேன்.

நான் ஒரு பராஸ்டிட்டியூட்....

தெரியும்.... அது அப்போ.... இப்போ இல்லன்னு கூடத் தெரியும்.

என்ன?.... என்னை ஃபாலோ பண்றீங்களா?

அசடு வழிய.... ஆமாம் .... என்றான்.

இதோ பாருங்க மிஸ்டர் தினேஷ்.... இதெல்லாம் பண்ணா உங்களுக்கு பேரு புகழ் கிடைக்கும் ன்னு நினைச்சு பண்றீங்களா.... விபச்சாரிக்கு வாழ்வு கொடுத்த வள்ளல் ன்னு பேப்பர்ல பேரு வரணுமா உங்களுக்கு?....

இல்ல சத்தியமா இல்லை....

நான் விருப்பப்பட்டு அந்த தொழிலுக்கு வரலை.... ஆனா அதுக்கு அப்புறம் வேற வழி இல்லாம அந்த தொழிலை செய்ய ஆரம்பித்தேன்.... எனக்கு உடம்பு சரியில்லை.... அதனால அந்த தொழிலை விட்டுவிட்டு வேறு வேலை தேடி புழைச்சிக்க நினைக்கிறேன். தயவு செஞ்சு என்னை விட்டிடுங்க....

எனக்கு எல்லாமே தெரியும் லீலா.... உங்களுக்கு அபார்ஷன் பண்ணது கூடத் தெரியும்.

நீங்க என்ன லூசா.... ஏன் வேற யாரும் உங்களுக்கு கிடைக்கலீயா?.... இந்த உலகத்தில உங்களுக்கு வேற ஒரு பொண்ணே கிடைக்கலீயா?

நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்....

எப்போதிலிருந்து?.... என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும். ஐ மீன்.... என்னை ஃபாலோ பண்ணி தெரிஞ்சிக்கிட்ட விஷயங்கள் இல்ல.... பர்சனலா எது எனக்கு பிடிக்கும் பிடிக்காது ன்னு தெரியுமா?

என்னை நீங்களும் லவ் பண்ணீங்கன்னா தெரிஞ்சிக்குவேன்.

தயவு செஞ்சு போயிடுங்க பிளீஸ்.... என்றாள் லீலா கைக்கூப்பி கெஞ்சலாக....

ஐ லவ் யூ லீலா.... என்றான் மறுபடியும்.

சரி.... எதனால உங்களுக்கு என் மேல லவ் வந்துச்சு... அதை சொல்லுங்க முதல்ல... நான் கிஸ் பண்ணினதாலயா?..... அன்னைக்கு நீங்க வேற ரூமுக்கு போயிருந்தாலும் அங்க இருக்கும் பொண்ணுங்களும் அப்படி தான் கிஸ் பண்ணி இருப்பாங்க..... என்றாள்.

இல்ல லீலா.... அதனால இல்லை....

மிஸ்டர் தினேஷ்.... உங்களுக்கே தெரியும் நான் இப்போது அந்த தொழிலை பண்றது இல்லைன்னு.... ஃபிரேங்காவே கேட்கிறேன்.... உங்களுக்கு என் கூட படுக்கும் ன்னா அதை சொல்லிடுங்க.... உங்களோட படுத்து கடைசியா முடிச்சிக்கிறேன்.... தயவு செஞ்சு இந்த மாதிரி லவ் பண்றேன்னு சொல்லி வீணா மனசை கலைக்காதீங்க..... என்றாள் லீலா லேசாக கண்கள் கலங்க...

சேரில் இருந்து எழுந்த தினேஷ்....

நான் உன்னை உண்மையாக லவ் பண்றேன்.... இது சத்தியம்.... நீ நம்பினா நம்பு.... நம்பாட்டி போ.... நீயே புரிஞ்சிக்குவ....

அமைதியாக இருந்தாள் லீலா....

அவன் கீழே இறங்கி சென்று விட்டான்.....


தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari