• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -20

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -20

லீலா.... ஆட்டோவில் இருந்து குதிக்க நினைத்தாள். அவளை தடுத்து அவளுடைய முகத்திலேயே ஒரு குத்து விட்டான் அந்த ஆட்டோ டிரைவர்....

அவள் மயங்கி சீட்டிலேயே சரிந்தாள்.

பின்னர் வேகமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றான்.

அங்கே சேகரும் ரமேஷூம் காத்துக் கொண்டு இருந்தனர்.

வாடா மாப்ள.... என்றான் சேகர் அந்த ஆட்டோ டிரைவரை பார்த்து....

ஆட்டோவில் லீலாவை பார்த்ததும்....

ஏய்.... உனக்கு எங்கன்னா அறிவிருக்கா.... வனஜாவை தூக்கியாற சொன்னா.... நீ இவளை தூக்கியாந்திருக்க....

ஏய் ‌... கம்முன்னு கிட.... நான் சொல்றதை முழுசா கேளு.... சும்மா கூவினே கிடக்காத.... என்றான் ஆட்டோ டிரைவர் முத்து.

என்னடா....

நீ சொன்ன மாதிரி தான் உன் பொஞ்சாதி வனஜாவை கூட்டிக்கினு வந்தேன்.... ஒரு சிக்னல்ல இது ஏறிச்சு.... சரி நமக்கு டபுள் லாபம்ன்னு நினைச்சிக்கிட்டு வந்தேன்.... அப்புறம் கொஞ்ச நேரத்தில ரெண்டும் பேசிக்கிச்சிங்கோ.... உன் பொண்டாட்டி கர்ப்பமா இருக்காலாம்.... அதனால இது அவளை இறக்கி விட்டிடுச்சு.... அது சிக்னல் ஆள் நடமாட்டம் வேற அதிகம். அப்போ என்னால ஒண்ணும் பண்ண முடியல.... நான் எதாவது பண்ண போய் இதுவும் மிஸ் ஆயிடிச்சுன்னா.... அதான் இதை அப்படியே கூட்டியாந்தேன்.... இன்னொன்னு தெரியுமா?.... இது போலீஸை எல்லாம் ஃபாலோ பண்ணிக்கிட்டு வர சொல்லுச்சு.... நான் எல்லாத்தையும் கட் பண்ணிட்டு இதை ஒரு குத்து விட்டு கூட்டியாந்தேன்.... என்றான் முத்து.

ஏய்.... இதை வெச்சு என்னடா பண்றது.... இவளாள நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே.... என்றான் ரமேஷ்.

ஆமாம் டா.... இது செத்தா சாகட்டும் ன்னு சொல்லுவான் அந்த ரோஹன். அவன் இவ பொஞ்சாதியை தான் லவ் பண்றான்.... அவளுக்கு எதாவது ஆபத்துன்னா தான் காசு கொடுப்பான்.... என்றான் சேகர்.

சரி இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க....

இவ்வளோ பிளானும் சொதப்பிடிச்சு....

சரி.... வா .... ஒவ்வொருத்தரா மூணு பேரும் அவளை முடிக்கலாம்.... இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு கூட்டியாந்ததற்கு அதுக்காவது யூஸாகட்டும்.... என்று சொல்லி சிரித்தான் முத்து.

ஏய்.... அவ முழிச்சுக்கிட்டு இருந்தாலே ஒண்ணும் பிரச்சனை இல்லை.... அவளும் இவன் பொண்டாட்டி மாதிரி தான் பாண்டிச்சேரில தொழில் பண்ணவ.... என்றான் சேகர்.

ஓ அப்படியா.... என்றான் முத்து.

என் கிட்ட வேற ஐடியா இருக்கு.... இவளை வெச்சே நம்ம வீடியோ எடுத்திட்டு அவளோட முகத்தை கிராஃபிக்ஸ்ஸில் ஒட்டிடலாம்.... கல்யாணத்துக்கு முன்னாடி அவ தொழில் பண்ணும் போது எடுத்த வீடியோ ன்னு சொல்லி அவன் கிட்ட இருந்து காசு புடுங்கிடலாம்.... என்றான் ரமேஷ்.

ஏய்.... செம மூளைக்காரன் டா நீ.... என்றான் சேகர்.

முழிச்சா காசு கேட்பா டா.... மயக்கத்தில இருக்கும் போதே முடிச்சிடலாம்.... என்றான்
ரமேஷ்.

யாரு முதல்ல....

எனக்கு முதல்ல இருந்தே இவ மேல ஒரு கண்ணு.... ஆனா நல்லவனா நடிச்சேனா.... அதான் அமைதியா இருந்திட்டேன்....என்றான் ரமேஷ்.

மச்சி.... நான் முதல்ல டா.... என்றான் சேகர்.

சரி.... போய்த்தொலை...... என்றான் ரமேஷ்.

அவளை அந்த கார் கராஜில் தரையில் படுக்க வைத்து விட்டு மெதுவாக அவளிடம் நெருங்கினான் சேகர்....

அவளுடைய துப்பட்டாவை கழட்டி விட்டு அவளுடைய கழுத்திற்கு கீழே தன் சிகெரெட்டால் சுட்டான்....

ஆ.... என்று வலியில் கத்தினாள் லீலா.... மயக்கத்தில் இருந்து எழுந்தவள் நெருங்கி வந்த சேகரை தள்ளி விட்டு விட்டு.... எழுந்து தன் ஆடைகளை சரி செய்து கொண்டு ஓடினாள்....

ஏய்.... அவ ஓடுறா.... பிடிங்க என்று கத்தினான் சேகர்.

பின்னர் மற்ற இருவரும் ஓடினார்கள். அங்கே ஓடி ஒளிந்து கொண்டு இருந்தாள்.

************
ரோஹன் பிரசாத் சாரிடம் விஷயத்தை கேட்டு விட்டு பதறிப் போய் வீட்டிற்கு சென்றிருந்தான். அங்கே வனஜாவை பார்த்ததும் தான் உயிர் வந்தது. வனஜா ஓடி வந்து ரோஹனை கட்டி பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள். பிளீஸ் டார்லிங் என் ஃபிரெண்டை காப்பாத்துங்க.... அவ என்னை காப்பாற்ற அவ உயிரை பணையம் வைத்து போயிருக்கா.... என்று சொல்லி அழுதாள்.

கவலைப்படாதே ஸ்வீட்டி.... என்று சொல்லி ராஜூவிற்கு கால் செய்தான் ரோஹன்.

அர்ச்சனா தன்னுடைய கன்ட்ரோல் ரூமிற்கு கால் செய்து லாஸ்ட் பேசின கால் டவர் லோகேஷன் ஷேர் பண்ண சொல்லி கேட்டாள்.

அப்போது ரோஹனிடமிருந்து ராஜூவிற்கு கால் வந்தது.

சார்.... என்று அழுதுகொண்டே சொன்னான் ராஜூ.

அழாதே டா ராஜூ.... என்னாச்சு சொல்லு.

லீலா அக்கா.... என்று சொல்லி மறுபடியும் அழுதான்.

அவனிடமிருந்து ஃபோனை வாங்கி....

சார்.... நான் தினேஷ். கான்ஸ்டபிள் அர்ச்சனாவோட பிரதர். நாங்க லீலாவை ஃபாலோ பண்ணிக்கிட்டு போனோம்.... இப்போ லைன் கட் ஆயிடிச்சு.... என்றான் சற்றே சோகமாக.

என் கிட்ட இருந்து என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க பண்றேன்..... என் ஒயிஃபை பத்திரமா வீட்டுக்கு அனுப்பிட்டு அவங்க ரிஸ்க் எடுத்து போயிருக்காங்க.... அவங்களை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்ய தயாரா இருக்கேன்.... சப்போஸ் கால் பண்ணி எதாவது அமௌன்ட் கேட்டாலும் பரவாயில்லை.... என் கிட்ட சொல்லுங்க.... நான் அரேஞ்ச் பண்றேன்.

இல்ல சார்.... அவங்க பணத்துக்காக அவங்களை கடத்திருப்பாங்கன்னு தோணல.... ஏன்னா லீலாவுக்கு ராஜூ வை தவிர வேற யாரும் இல்ல.... அவனால அமௌன்ட் எதுவும் தர முடியாது.

என்ன பண்ணலாம் சொல்லுங்க....

அக்கா சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்டில் பேசிக்கிட்டு இருக்காங்க.... எனக்கு தெரிஞ்சு லீலா ஃபோன் தான் ஆஃப் ஆகியிருக்கு.... உங்க ஒயிஃப் ஃபோன் ஆஃப் ஆகல.... ஸோ.... உங்க மொபைலில் இருந்து அவங்களை கண்டுபிடிக்க ஃபிரெண்ட் ஃபைன்டர் ஆப் எதாவது வெச்சிருக்கீங்களா?....

சூப்பர் ஐடியா டா.... என்றாள் அர்ச்சனா ஃபோனை வைத்து விட்டு.

இருக்கும் ன்னு நினைக்கிறேன் சார்.....

சார்.... இங்க வரமுடியுமா.... நான் லொகேஷன் ஷேர் பண்றேன்....

பிளீஸ் போயிட்டு வாங்க.... என்று கெஞ்சினாள் வனஜா.

சரி சார் நான் வரேன்.... என்று சொல்லி விட்டு தன்னுடைய வேலையாட்களை அழைத்து நான் ஒரு முக்கியமான வேலையா போறேன்.... நான் வரும் வரைக்கும்.... யாரும் வீட்டுக்கு போகக் கூடாது.... ஸ்வீட்டியை பத்திரமா பார்த்துக்கணும்.... என்றான் ரோஹன்.

சரிங்க சார்.... என்றனர் அனைவரும்.

கௌரி அம்மா.... கொஞ்சம் இங்கே வாங்க....

என்னப்பா....

இவளை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு....

நீ சொல்லனுமா பா.... நான் பார்த்துக்கிறேன்.... நீ தைரியமா போயிட்டு வா.... என்றாள் கௌரி.

வனஜாவை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு....

ஜாக்கிரதையா இரு.... டென்ஷன் ஆகாத.... ஜூஸ் குடி.... என்று சொல்லி விட்டு ரோஹன் சென்றான்.

அவன் சென்றதும்.... வனஜா தன் ரூமிற்கு சென்றாள்.

கௌரி அம்மா.... ரொம்ப டையர்டா இருக்கு.... நான் போய் படுக்கிறேன்.

என்னாச்சு மா....

அம்மா.... அது வந்து.... வாங்க.... உள்ளே வாங்க என்று தன் ரூமிற்கு அழைத்து சென்றாள் வனஜா.

என்னம்மா....

அம்மா... உங்களை என் அம்மா மாதிரி நினைச்சு சொல்றேன்.... நான் முழுகாம இருக்கேன்....

என்னம்மா சொல்றீங்க.... உண்மையாவா?

ஆமாம்.... என்று சொல்லி சிரித்தாள் வனஜா. ஆனால் எனக்கு முழு சந்தோஷம் என் ஃபிரெண்டு லீலாவும் பத்திரமா வீட்டுக்கு வந்தா தான். ரோஹன் சார் சொல்லி இருக்காரு.... அதனால நான் பயப்பட மாட்டேன்.... அவர் என் ஃபிரெண்டை பத்திரமா கூட்டிக்கிட்டு வந்திடுவாரு.... என்றாள்.

சரிம்மா.... நீ ரெஸ்ட் எடு.... நான் போய் உனக்கு ஜூஸ் போட்டு கொண்டு வந்து தரேன்.... என்றாள் கௌரி.

சரிங்க அம்மா.... என்று சொல்லி தன் கப்போர்டில் இருக்கும் ஆல்பங்களை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள் வனஜா.


தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari