• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -21

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -21

தினேஷ் பாண்டிச்சேரியில் அவளிடம் முத்தம் பெற்றதையும் அதற்கு பின் நடந்தவற்றை நினைத்து பார்த்து கொண்டான்.

அவனுடைய ஃபிரெண்ட் திருமணம் முடிந்த பின் மார்கெட் செல்லும் போது ஏதேச்சையாக லீலாவை பார்த்தான். முந்தைய நாள் இரவு அவளை பார்த்ததை விட பகலில் அவள் மிகவும் அழகாக இருந்தாள். அன்று முழுவதும் தன் நண்பர்களிடம் வேறு எங்கோ போவதாக சொல்லிவிட்டு அவளை ஃபாலோ செய்தான். அப்போது அந்த மசாஜ் சென்டரில் அவளுக்கு ஏற்பட்ட துன்பமும் வனஜாவிற்கு அடிபட்டதால் வேறுவழியின்றி அந்த தொழிலை செய்ய தொடங்கினாள் என்பதை தெரிந்து கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். அவளுடைய அழகால் ஈர்க்கப்பட்டவனுக்கு அவளின் மேல் கருணை தோன்றியது பின்பு அது காதலாக மாறியது.

லீலா சென்னை வந்தது தெரியாமல் அவளை பாண்டிச்சேரியில் வெகுநாட்களாக தேடி அலைந்தான். கஸ்தூரி மற்றும் காஞ்சனா கூட வேறு இடத்திற்கு மாறிவிட்டிருந்தனர்.... இரண்டு நாட்களுக்கு பிறகு அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் லீலா வை பற்றி கேட்டு தெரிந்து கொண்டான்.... கஸ்தூரி மற்றும் காஞ்சனாவிற்கு அவள் கருவை கலைத்து விட்டு சென்னை போய் விட்டாள் என்று மட்டும் தெரியும்.... ஆனால் அட்ரெஸ் இல்லை.... ஃபோன் நம்பரை மாற்றிவிட்டாள்.....இல்லையென்றால் அந்த லோகேஷ் மறுபடியும் தொல்லை பண்ணுவான்.... புதிய நம்பர் தங்களுக்கு தெரியாது..... என்று சொன்னார்கள்.

சென்னையிலும் நிறைய இடங்களில் தேடிப் பார்த்தான்.... லீலாவை பற்றிய எந்த ஒரு விஷயமும் தெரியவில்லை. சென்னையிலும் அவள் அந்த தொழில் தான் செய்யப்போகிறாள் என்று காஞ்சனா மற்றும் கஸ்தூரி கூறியதால் நிறைய இடங்களில் தேடிப் பார்த்தான். எங்கும் கிடைக்காததால் மிகவும் வருந்தினான்.... அன்று அவளை அவனுடைய அக்காவுடன் பார்த்ததும் அவளை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருந்தான். இன்று தான் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்.... அவளுடைய ரெஸ்பான்ஸ் என்ன என்று கூடத் தெரியவில்லை.... அதற்குள் இப்படி.... என்று நினைக்கும் போது தன்னையும் அறியாமல் அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அப்போது ரோஹன் அங்கே வந்தான். அவனுடைய மொபைலில் ஃபைன்டு டிவைஸ் என்று தேடி அந்த இடத்திற்கு சென்றனர். தினேஷ் ராஜூ மற்றும் ரோஹன் மூவரும் ரோஹனின் காரில் சென்றனர். அர்ச்சனா சுந்தரம் மற்றும் இன்னும் ஒரு கான்ஸ்டபிள் அவர்களுடன் சேர்ந்து ஜீப்பில் காரை ஃபாலோ செய்து கொண்டு வந்தனர்.

************

கிட்சனில் கௌரி....

ராமு.... என்றாள்.

சொல்லுங்க மா.... என்றான்.

மார்கெட் போயி.... நான் சொல்றதை எல்லாம் வாங்கிட்டு வா....

என்னம்மா....

சின்னம்மாவுக்கு ஜூஸ் போட....

சின்னம்மாவா?

ஷெரின் அம்மா வந்திட்டாங்களா....

அவ எப்படி வருவா.... நான் தான் பிளான் பண்ணி அவளை அந்த முரளியோட ஓட விட்டுட்டேனே.....

அப்படியா.... இப்போ யாரை சின்னம்மா ன்னு சொல்றீங்க.... என்றான்.

அதான் இப்போ இருக்காளே அந்த சிறுக்கி தான்....

என்னாச்சு மா.... கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க....

இந்த ரோஹனுக்கு யாரும் இல்லை.... அவனோட சின்ன வயசுல இருந்து நான் வேலை செய்யறேன்.... அவங்க அம்மா அவன் பொறந்ததும் செத்து போயிட்டா.... அவனோட அப்பாவை நான் கைக்குள்ள போட்டுக்கிட்டு இந்த சொத்தை ஆண்டு அனுபவிக்கலாம்னு நினைச்சேன்.... ஆனா அந்த ஆளு ஒரு ஒரு முறையும் என் கூட படுத்திட்டு காசு கொடுத்திட்டான்.... அவன் ஒரு வழியா போய் சேர்ந்தான்....

அம்மா.... அதை கூட நீங்க தான் பண்ணீங்களா?

சே சே.... இல்லடா.... தானா நடந்துச்சு....

அப்புறம்.... தூரத்து சொந்தத்தில் ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைக்கலாம் ன்னு பார்த்தா.... இவன் ஷெரினை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னானே..... எனக்கு வந்தது பாரு கோபம்.... அப்பவே முடிவு பண்ணிட்டேன்.... அவங்களை பிரிக்கனும்னு....

அப்புறம்....

அதான் அந்த பாடி பில்டர் முரளியை என் சொந்தக்காரன்னு அறிமுகப்படுத்தினேன் ....

அதுலே அவங்க விழுந்திட்டாங்களா....

ஏய்.... அவ்வளவு சீக்கிரமா விழற பொண்ணு இல்லடா அவ....

பின்ன என்ன பண்ணீங்க....

அந்த ரோஹன் எப்போ எல்லாம் லேட்டா வருவான்னு தெரிஞ்சுதோ...
அப்போ எல்லாம் அந்த ஷெரின் குடிக்கும் பாலில் மூடு அதிகமாக்குற மாத்திரையை கலந்து விட்டேன்.... அப்புறம் முரளிக்கிட்ட சொல்லி லேப்டாப்பில் ஏதோ டவுட் கேட்குற மாதிரி அவளோட நெருங்கி பழக விட்டேன்.... ஒரு நாள் தாக்குப்பிடிச்சா.... அப்புறம் அவளால் முடியல.... முரளி கிட்ட விழுந்திட்டா....

அம்மா.... இவ்வளோ நாள் உங்க கூடவே இருக்கேன்.... என் கிட்ட சொல்லவில்லையே....

ஹா ஹா....

பெரிய ஆளு மா நீங்க.... என்றான் ராமு.

அவ போன பிறகு இவன் பணம் நகை எப்படியாவது நாம அடிச்சிடலாம்னு பார்த்தேன்.... அதுவும் முடியாம போச்சு..... இப்போ இவளை கல்யாணம் பண்ணிக்க போறான்.... போதாதற்கு அவன் குழந்தையை வயித்துல வேற சுமக்குறா....

பெரக்னென்டா இருக்காங்களா வனஜா அக்கா....

அக்காவா.... அவளை அப்படி எல்லாம் சொல்லாத....

இல்ல அவங்களை அப்படி கூப்பிட்டு பழக்கமாயிடிச்சு....

இவளை கூட்டிக்கிட்டு வந்தவுடனே.... இவளையும் துறத்திடனும் நினைச்சேன்.... ஆனா இவ ஒரு விபச்சாரி ன்னு தெரிஞ்சதும்.... சரி.... பொண்டாட்டி ஓடிப் போயிடவே இவளை வெச்சிருக்கான்னு நினைச்சேன்.... அவ கூட ரொம்ப ரொம்ப அன்யோன்யமா இருக்குற மாதிரி எனக்கு தோணுச்சு.... இவளையும் எப்படியாவது ஓட வெச்சிடனும் நினைச்சேன்.... அப்புறம் அந்த ரோஹனுக்கு அந்த மாத்திரையை டபுள் டோஸ் போட்டுக் கொடுத்தேன்.... அவன் ஸெக்ஸ் டார்ச்சர் பண்றான்னு ஓடிப் போயிடுவா ன்னு நினைச்சேன்.... ஆனா அவ விபச்சாரி இல்ல அதான் அவன் ஒரு நாளைக்கு எத்தனை முறை கூப்பிட்டாலும் போயிருக்கா.... இப்போ வயித்துல வேற தங்கிடிச்சு.... முதல்ல அதை அழிக்கனும்.... அவன் வரதுக்குள்ள.... நீ போய் நாட்டு மருந்து கடையில ஒரு பொடியின் பெயரை சொல்லி.... அதை வாங்கிட்டு வா.... ஒரு ஜூஸ் போட்டு அந்த பொடியை கலந்து கொடுத்திடலாம்.... அவ வயித்துல இருக்குறதும் கலையும்.... அவளும் சேர்ந்து போனா நமக்கு டபுள் போனஸ்.... வாழ்நாள் பூராவும் அந்த ரோஹன் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து சாவான்.... அப்புறம் வீட்டில இருக்குற நகை பணம் எல்லாத்தையும் எடுத்து கொண்டு ஊரை விட்டு போயிடலாம்..... உனக்கு ஒரு ஷேர் தரேன்....

சரி.... உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் ரோஹன் சார் மேல....

என் பையனை ஜெயிலுக்கு அனுப்பியவன்.... அவனை கூடவே இருந்து கழுத்தறுக்க முடிவு பண்ணேன்....

இது என்ன புது கதை.... உங்களுக்கு பையன் இருக்கானா....

ஆமாம்.... நான் சொல்லித்தான் ஷெரின் வீட்டை விட்டு ஓடிப் போகும் போது வந்தான்.... அப்போது பணம் நகையை திருடிக்கொண்டு போயிடு டா.... பழி அந்த ஷெரின் மேல போயிடும் ன்னு சொன்னேன்.... அதை நம்பி அவனும் வந்தான்.... அந்த ரோஹன் இவனை பார்த்துவிட்டான்.... புடிச்சு ஜெயிலில் போட்டுட்டான்.... மூணு வருஷம்.... என் புள்ள ஜெயில்ல பட்ட கஷ்டத்துக்கு ஈடு கட்ட வேண்டாமா.... என்று சொல்லி சிரித்தாள் கௌரி.

என்னை மட்டும் எப்படி நம்புறீங்க மா....

உங்க அம்மாவுக்கு ஆப்பிரேஷன் இருக்கு நீ ஃபோன்ல பேசினதை கேட்டேன்.... அதான் நீ என் கூட சேருவ ன்னு தோணுச்சு....

அமைதியாக இருந்தான் ராமு.

என்னடா யோசிக்கிற.... ரோஹன் கிட்ட கேட்க போறேன்னு தான சொன்ன உங்க அம்மா கிட்ட....

ஆமாம்....

நீ கேட்டவுடனே.... இந்தா பா எடுத்துக்கோ ன்னு எடுத்து கொடுப்பான்னு நினைச்சியா?

மறுபடியும் அமைதியாக இருந்தான் ராமு.

நான் சொல்றதை கேளு.... இந்தா காசு.... நீ போய் நான் சொன்னதை எல்லாம் வாங்கிட்டு வா.... என்றாள் கௌரி.

சரிம்மா.... என்று சொல்லி காசை வாங்கிக் கொண்டு கடைக்கு சென்றான் ராமு....


தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
505
170
43
Dindugal
வெரி வெரி நைஸ் சிஸ்