• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -22

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -22

ஒளிந்து கொண்டு இருந்த லீலாவை பார்த்துவிட்டான் ரமேஷ்.

ஏய் இவ இங்கே இருக்கா டா.... என்றான் ரமேஷ்.

ரமேஷ்.... பிளீஸ் என்னை விட்டு விடு....

அன்னைக்கு கோர்ட்டில இப்படி பேசலையே நீ.... என்னம்மா துள்ளி குதிச்ச.... இப்போ என்ன பம்புற.... என்று சொல்லி சிரித்தான் ரமேஷ்.

என் கூட ஒருமுறை படு டி.... கல்யாணம் ஆன புதுசுல எப்போ பார்த்தாலும் உன்னை பத்தியே பேசுவா இந்த வனஜா.... அவ சொல்ல சொல்ல உன்னையும் ஒருநாளைக்கு அனுபவிக்கனும் ன்னு நினைச்சேன்.... ஆனா அது இவ்வளவு சீக்கிரமா நடக்கும்னு நினைக்கல.... அமைதியா என்னையும் உன் கஸ்டமர் மாதிரி நினைச்சிக்கிட்டீன்னா உன்னோட உடம்பிற்கு எந்த சேதாரமும் ஆவாது.... ஒவ்வொருத்தரா முடிச்சிட்டு உன்னை உன் வீட்டிலேயே விட்டிரோம்.... இன்னொன்று.... நீயும் வனஜாவும் உடலமைப்புல ஒரே மாதிரி தான் இருக்கீங்க.... அதனால இப்போ மேட்டர் பண்ணும் போது வீடியோ எடுத்துக்கிறோம்.... பயப்படாத.... உன் முகத்திற்கு பதிலா வனஜா முகத்தை கிராஃபிக்ஸ்ஸில் ஒட்டிடலாம்.... அப்போ தான அந்த ரோஹன் காசு தருவான்.... உனக்கு வேணும்னா ஒரு அமௌன்ட் கொடுத்திடறோம்.... என்னடா சொல்றீங்க.... என்று அவர்களை பார்த்து கேட்க....

ஹூம்.... ஹூம்.... நீ சீக்கிரம் முடிச்சிட்டு வா.... என்றனர்.

என்ன சொல்ற லீலா....என்று சொல்லி அவளுடைய இதழ்களுக்கு முத்தம் கொடுக்க குனிந்தான்.

தன்னுடைய முட்டியை வைத்து அவனுடைய மெயின் பார்டை உதைத்து விட்டு அங்கிருந்து ஓடினாள்.

ஏய் புடிங்கடா அவளை.... வலியில் துடித்துக் கொண்டே மண்டியிட்டு கத்தினான் ரமேஷ்.

ஏய்.... தனித் தனியா போனா இவ கிட்ட வேலைக்கு ஆகாது.... மச்சி.... நீ கையை புடி.... மச்சி நீ காலைப் புடி.... என்றான் சேகர்.

அப்போ யாருடா வீடியோ எடுக்கிறது.... என்றான் ரமேஷ்.

அதுக்கு நான் ஒரு ஐடியா வெச்சிருக்கேன் என்று சொல்லி ஒரு ஸ்டேன்டில் கேமராவை வைத்து விட்டு.... மூவரும் மங்கி மாஸ்க் போட்டு கொண்டனர்....

இருவர் கை கால்களை பிடித்து கொள்ள....

அவள் ஆடைகளை கழட்டி விட்டெறிந்தான் முத்து.

வீடியோவில் ரெக்கார்டு பட்டனை அழுத்திவிட்டு அவளருகில் சென்றான்.

ஒரு டயர் வந்து அந்த கேமராவின் மேல் விழுந்தது. கேமரா கீழே விழுந்து உடைந்தது.

அவள் கை கால்களை விட்டுவிட்டு யாரென்று திரும்பி பார்த்தனர் மூவரும்.

லீலா ஓடிச் சென்று தன் ஆடைகளை எடுத்து உடுத்தி கொண்டாள்.

அப்போது அங்கே தினேஷ் ரோஹன் வந்து அவர்களை அடிக்க தொடங்கினார்கள். ராஜூவும் ரமேஷை அடித்தான். பின்னர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் வந்து அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

கூனிக்குருகி அழுதுகொண்டு இருந்தாள் லீலா.

தினேஷ் அவள் முன்னே போய் நின்றான்.

அவளால் அவனை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை.

அவளருகில் அமர்ந்து அவள் முகத்தை திருப்பி....

இப்பவும் சொல்றேன்....

ஐ லவ் யூ.... என்றான் தினேஷ்.

தினேஷ்.... என்றாள் அர்ச்சனா.

அக்கா.... பிளீஸ்.... ஐ லவ் ஹெர்.... என்றான்.

ஒரே நாள்ல அவளை பத்தி என்ன தெரியும்னு அவளை லவ் பண்றேன்னு சொல்ற?

அக்கா.... இவளை எனக்கு ஏற்கனவே தெரியும்.... என்று பாண்டிச்சேரியில் நடந்தவற்றையும் அவளுக்காக அவன் தேடி அலைந்ததையும் கூறினான் தினேஷ்.

ஆச்சரியமாக பார்த்தாள் லீலா.... தனக்காக ஒருவன் அலைந்திருக்கிறான்.... தன்னை உண்மையாக ஒருவன் காதலிக்கிறான் என்பதை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்டாள்.

என்னடா சொல்ற.... அப்படின்னா இவ ஒரு பிராஸ்டிட்டியூட்டா....

முன்னாடி.... இப்போ இல்ல....

இவளை நீ கல்யாணம் பண்ணிக்க போறீயா?

ஆமாம்....

நீ புரியாம பேசுற.... இது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது.

அக்கா.... நான் முடிவு பண்ணிட்டேன்.... இந்த ஜென்மத்தில எனக்கு கல்யாணம் ன்னு ஒண்ணு நடந்தா அது லீலா கூடத்தான்.... என்றான் தினேஷ்.

அதுக்கு மேல உன் இஷ்டம்.... நான் கிளம்பறேன் என்று சொல்லி விட்டு தன் ஜீப்பில் மூன்று அக்கியூஸூடுகளையும் ஏற்றிக் கொண்டு கிளம்பினாள் அர்ச்சனா.

ரோஹன் தினேஷின் கைகளை குளுக்கி...வெரி குட்.... நல்ல ஒரு முடிவு எடுத்திருக்கீங்க....

நீங்களும் தான சார் இந்த மாதிரி ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கீங்க.... உங்களுக்கும் வாழ்த்துக்கள்..... என்றான் தினேஷ்.

தேங்க்ஸ்.... வாங்க சீக்கிரம் கிளம்பலாம்.... என் ஒயிஃப் தனியா இருக்கா வீட்டில்.... என்றான் ரோஹன்.

சார்.... என்றாள் லீலா.

ரோஹன் திரும்பி பார்த்தான்.

என்னை மன்னிச்சிடுங்க.... உங்களை தப்பா நினைச்சிட்டேன்.... நீங்க வார்த்தைக்கு வார்த்தை என் ஒயிஃப் ன்னு சொல்லும் போது புரிஞ்சிக்கிட்டேன் நீங்க வனஜாவை எவ்வளவு லவ் பண்றீங்கன்னு.... உண்மையிலேயே அவ கொடுத்து வச்சவ தான்.... என்றாள் லீலா.

இட்ஸ் ஓகே.... நோ இஷ்யூஸ்.... நீங்க அவ மேல ரொம்ப பாசம் வெச்சிருக்கீங்க அதான் உங்களுக்கு ஒரு பயம் அவளுக்கு எதாவது ஆயிடுமோன்னு.... அதை என்னால புரிஞ்சிக்க முடியுது....

அப்புறம் அன்னைக்கு டாக்டர் கிட்ட....

வாங்க கார்ல போகும் போது சொல்றேன்.... என்றான் ரோஹன்.

டாக்டர் கூறியதையும் இவன் சொன்னதையும் விளக்கமாக கூறினான் ரோஹன்.

ரியலி சாரி சார்.... நான் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்.... ரொம்ப ரொம்ப தப்பா பேசிட்டேன்.... மன்னிச்சிடுங்க.... என்றாள் லீலா.

சரி சரி.... மன்னிச்சிட்டேன்.... தினேஷூக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க.... பாவம் அவரு எவ்வளவு நேரமா உங்களோட பதிலுக்காக காத்திருக்காரு.... என்றான் ரோஹன்.

லீலா ராஜூவை பார்த்தாள்.

அக்கா.... தினேஷ் அண்ணா ரொம்ப நல்லவர் அக்கா.... நம்ம ரோஹன் சார் மாதிரியே.... என்றான்.

தினேஷை பார்த்து சிரித்தாள் லீலா. அவள் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்து பிடித்து கொண்டான் தினேஷ். முதல் முறையாக தனக்கென ஒருவன் இருக்கிறான் என்றும் மிகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தாள் லீலா.

ரோஹனின் வீட்டு வாசலில் கார் நின்றது.

வாங்க உள்ள வாங்க.... என்றான் ரோஹன்.

வீட்டு வாசலில் போலீஸ் நின்று கொண்டு இருந்தனர்.

ஆம்புலன்ஸூம் வந்திருந்தது.

வனஜாவை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

அளரி அடித்து கொண்டு ஓடினார்கள் ரோஹன் மற்றும் லீலா.

என்னாச்சு.... என்று தன்னுடைய வேலைக்காரர்கள் அனைவரிடமும் கத்தினான்.

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அப்போது போலீஸ்காரர் ஒருவர் ரோஹன் அருகில் வந்து....

சார்.... நீங்க....

என் பெயர் ரோஹன்.... என் ஒயிஃபுக்கு என்னாச்சு.... சொல்லுங்க சார்.... பிளீஸ்....என்றான் பதட்டப்படமாக.

அவங்களுக்கு ஒண்ணும் ஆகல........ என்றார்.

என்ன சார் ஆம்புலன்ஸில் ஏத்தறீங்க.... ஒண்ணும் இல்ல ன்னு சொல்றீங்க....
என்றான் ரோஹன்.

ஆம்புலன்ஸில் லீலாவும் ஏறிக்கொண்டாள்.

உண்மையை சொல்லனும் ன்னா.... உங்க ஒயிஃப் மயக்கித்துல இருந்து எழுந்தா தான் உண்மை என்ன ன்னு தெரியும்......


தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
Last edited:
  • Like
Reactions: Kameswari