• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -5

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம்-5
ரோஹன் கிளம்பி சென்றதும்....
வனஜா லீலாவின் அறைக்கு வந்து அவனுடைய விசிட்டிங் கார்டை கொடுத்தாள்.
அதை வாங்கி கொண்டு....
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டி ....
என்னடி.... தேங்க்ஸ் எல்லாம் சொல்லாத.... நீ பண்ணியதை விட நான் உனக்கு பண்றது கம்மிதான்.....
நாளைக்கு ஒரு பத்து மணிக்கு ஆஃபீஸூக்கு வர சொன்னார்....என்றாள் வனஜா.
சரி டி.....
அப்புறம்.... என்னோட டைவர்ஸ் கேஸ் முடிஞ்சதும்.... என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு.... என்றாள் வனஜா கண்கள் கலங்க.
லீலாவிற்கும் கண்கள் கலங்கியது.
ரொம்ப ரொம்ப சந்தோஷம் டி..... உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போவதை நினைச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷப் படறேன்.... என்றாள் லீலா.
அப்புறம்.... ஒண்ணு சொன்னா தப்பா நினைக்காத....
சொல்லு டி....
வேலை கிடைச்சதும் நீங்க இங்க தங்க வேண்டாம் ன்னு சொன்னாரு....
ஏய்.... நானே அதை சொல்லனும் ன்னு நினைச்சேன்.... இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு.
இல்ல டி.... எனக்கு அதை சொல்ல சங்கடமா இருக்கு....
என்ன சொல்லு....
அவரு எங்களுக்கு பிரைவசி வேண்டும் ன்னு நினைக்கிறாரு.... அதனால தான்.... என்றாள் வனஜா.
இதுல என்னடி இருக்கு.... நான் இங்கேயே இருக்கப் போறேன் ன்னு சொன்னா தான் உனக்கு கஷ்டம். நான் தான் கிளம்பறேன்னு சொல்றேனே.... என்றாள் லீலா.
தேங்க்ஸ் டி.... என்றாள் வனஜா.
இப்போ தான் என்னை தேங்க்ஸ் சொல்லாத ன்னு சொன்ன.... இப்போ நீ தேங்க்ஸ் சொல்ற....
சரி சரி சாரி....
சாரி மட்டும் சொல்லலாமா?
சாரி சொன்னதுக்கும் சாரி.... என்று சொல்லி சிரித்தாள் வனஜா.
லீலாவும் சிரித்தாள்.
வெகு நாட்களுக்கு பிறகு அன்று இரவு நிம்மதியாக தூங்கினாள் லீலா.
காலை பத்து மணிக்கு ரோஹனின் ஆஃபீஸூக்கு சென்றனர் லீலா மற்றும் ராஜூ.
ராஜூக்கு ஆஃபீஸ் பாய் வேலை கொடுத்து விட்டு.... லீலாவிற்கு ரிசெப்ஷனில் வேலை கொடுத்தான் ரோஹன்.
இருவரும் தேங்க்ஸ் என்றனர்.
ராஜூ வெளியே கணபதி ன்னு ஒருத்தர் இருப்பாரு.... அவர் கிட்ட கேட்டு எல்லா வேலையும் செய்யனும்.
சரிங்க சார்.... என்றான்.
சரி நீ போ.... என்றான் ரோஹன்.
பின்னர் லீலாவிடம்....
கம்பியூட்டர் பேசிக்ஸ் தெரியுமா உனக்கு.
ஹாங் தெரியும் சார்.
ஒரு ஃபைலை எடுத்து அவளிடம் நீட்டி....
இதை இதில் டைப் பண்ணு.... என்று தன் லேப் டாப்பை அவள் புறம் திருப்பினான்.
ஓகே சார்..... என்றாள்.
சார் பாஸ்வேர்டு.... என்று லேப் டாப்பை திருப்ப வந்தவளை....
இல்ல இல்ல இரு நானே வரேன்.... என்று சொல்லி விட்டு எழுந்து அவளருகில் சென்று குனிந்து..... அவளுடைய கைகளின் மேல் கை வைத்து.... பாஸ்வேர்டு டைப் செய்தான்.... அவளுடைய கழுத்தை முகர்ந்து பார்த்து.....
வாவ்.... உன் பர்ஃபியூம் ரொம்ப நல்லா இருக்கு.... என்றான்.
லீலாவிற்கு நெஞ்சம் படபடத்தது.... நேத்து நீ ன்னு தெரிஞ்சு தான் உனக்கு முத்தம் கொடுத்தேன்..... எப்படி இருந்துச்சு.... இன்னொன்று வேண்டுமா.... என்று அவளுடைய கழுத்தில் மறுபடியும் முத்தமிட்டான்.
அவனை தள்ளி விட்டு சேரில் இருந்து எழுந்தாள்.....
ஆ.... என்று அளரிக்கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்தாள்..... அவள் பெட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள்.... ராஜூ தூரமாக இருந்த சோஃபாவில் தூங்கிக் கொண்டிருந்தான்....
அடச்சீ.... கனவா.... என்று நினைத்து கொண்டே வெளியே வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.
அப்போது வனஜாவின் அறையில் லைட் ஆன் ஆனது.
இவள் வேகமாக சென்று ரூமில் படுத்துக் கொண்டாள். அப்போது ரோஹன் வெளியே வந்து ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் மற்றும் ஒரு டிரே ஐஸ் கியூப்ஸ் எடுத்து சென்றான்.
அவளுடைய ரூமிற்கு வருவானோ.... என்று பயந்தாள்.... ஆனால் அவன் இந்த பக்கம் திரும்பி பார்க்கக்கூட இல்லை.... தண்ணீரையும் ஐஸ்ஸையும் எடுத்து கொண்டு அவனுடைய ரூமிற்கு சென்றான்.
ரோஹன் அவனுடைய ரூமிற்கு சென்றதும்....
ரிலாக்ஸாக இருக்க லீலா வெளியே வந்து மறுபடியும் சோஃபாவில் அமர்ந்தாள் லீலா.
அப்போது வனஜாவின் அறை சரியாக மூடப்படவில்லை என்பது தெரிந்தது.... அவர்கள் இருவரும் இணைந்து படுத்திருந்தது தெரிந்தது.... அதைப் பார்த்த உடன் லீலா தன் ரூமிற்கு வந்துவிட்டாள்.
ரோஹன் நல்லவன் தானா.... இல்ல நல்லவன் மாதிரி நடிக்கிறானா.... என்று நினைத்து கொண்டாள் லீலா..... கடவுளே கனவு பலிக்கக்கூடாது..... அது கெட்ட கனவாகவே இருக்க வேண்டும்.... என்று
நினைத்து கொண்டாள்.
மறுநாள் காலை டிபன் சாப்பிட்டு விட்டு ஆஃபீஸூக்கு சென்றுவிட்டான் ரோஹன்.
வனஜா.... நாங்க ஆஃபிஸூக்கு போய் பார்த்து விட்டு.... அங்கே பக்கத்தில ஒரு வீடு வாடகைக்கு எடுத்திட்டு வந்து.... இந்த திங்ஸ் எல்லாம் எடுத்திட்டு போறோம்.... என்று அவர்கள் கொண்டு வந்த மூன்று பேகுகளை காட்டி சொன்னாள் லீலா.
சரி டி.... அதெல்லாம் கேட்கணுமா?
ஆல் தி பெஸ்ட்.... என்றாள் வனஜா.
தேங்க்ஸ் டி.... என்று சொல்லி வனஜாவை கட்டிக் கொண்டாள் லீலா.
ராஜூ.... உனக்கும் ஆல் தி பெஸ்ட்.
தேங்க்ஸ் அக்கா.... பை.... என்று சொல்லி கிளம்பினார்கள். வனஜாவே அவர்கள் இருவருக்கும் ஆட்டோ புக் செய்தாள்.
இருவரும் ஆட்டோவில் இருந்து ஆஃபீஸில் இறங்கினர்.
அப்பாடா.... என்று நினைத்து கொண்டாள் லீலா. ஏனெனில் அவள் கனவில் வந்தது போல இல்லை அந்த ஆஃபீஸ்.
பிறகு உள்ளே சென்றதும் அமரச் சொன்னார்கள். ரிசெப்ஷனில் நான்கு பேர் இருந்தார்கள். மறுபடியும் அப்பாடா.... இந்த ரிசெப்ஷனிஸ்ட் வேலையை நமக்கு கொடுக்கமாட்டார்..... என்று நினைத்து கொண்டாள்.
நீங்க ரெண்டு பேரும் உள்ளே போகலாம் என்று ஒரு பெண் வந்து கூற....
அவர்கள் இருவரும் பிரமித்து கொண்டே உள்ளே சென்றனர்.
அங்கே கோட் சூட்டில் இன்னும் அழகாக இருந்தான் ரோஹன். ஒரு நிமிடம் இவளே அவனை பார்த்து ஸ்தம்பித்து போய் விட்டாள்.
வாங்க உட்காருங்க.... என்றான் இருவரையும் பார்த்து.
ராஜூ.... உனக்கு ஆஃபீஸ் பாய் வேலை தரேன்.... வெளியே கணேஷ் ன்னு ஒருத்தர் இருப்பாரு அவரு கிட்ட கேட்டு உன்னோட வேலைகளை ஒழுங்கா செய்யனும் சரியா.... என்றான் ரோஹன்.
சரி சார்.... என்று சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டான் ராஜூ. இது எதையுமே உணராமல்.... அவள் கனவில் வந்தது போல ராஜூ ஆஃபீஸ் பாய்.... கணபதிக்கு பதிலாக கணேஷ்.... இது எல்லாம் நடந்ததால்.... அடுத்தது என்ன நடக்குமோ.... என்ற பயத்தில் உறைந்து போய் அமர்ந்து இருந்தாள் லீலா.
லீலா.... லீலா....என்று கத்தியவன்.... பிறகு தன் முன்னால் இருந்த டேபிளை தட்டினான்.
ஹலோ.... மிஸ். லீலாவதி..... வாட் ஹேப்பண்டு டூ யூ..... என்று சத்தமாக கேட்டான் ரோஹன்.
சுயநினைவுக்கு வந்தவளாய்....
சார்.... சாரி சார்.... என்றாள்.
உங்களுக்கு கம்பியூட்டர்ல என்ன தெரியும்?
சார்.... பேசிக்ஸ்.... டாலி (tally course) கோர்ஸ் முடிச்சிருக்கேன் சார்.
குட்.... அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல அப்பாயின்ட் பண்றேன்.... என்று சொல்லி பெல் அடித்தான்.
அப்போது ஒருவர் வந்து நின்றார்.
சார்....
ஹாங் பிரதாத் சார்.... இவங்க பேரு லீலா.... அக்கவுண்ட் செக்ஷன்ல அப்பாயின்ட் பண்ணிருக்கேன்.... நீங்க தான் டிரெய்னர்.... என்றான் ரோஹன்.
ஓகே சார்.... வாங்க மேடம்.... என்றார் பிரசாத்.
லீலா இவரோட போங்க.... என்ன ஒர்க் ன்னு இவரு உங்களுக்கு டிரெயினிங் கொடுப்பாரு..... என்றான் ரோஹன்.
ஓகே சார்.... தேங்க்ஸ்.... என்றாள்.
யெஸ்.... யூ கேன் கோ.... என்றவன் தன் முன்னால் இருந்த ஃபைலை எடுத்து புரட்டிக் கொண்டு வேறு ஒரு பேப்பரில் நம்பர் எழுதிக்கொண்டு இருந்தான்.
அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.
சே.... இவரை போய் தப்பா நினைச்சிட்டோமே..... என்று நினைத்து கொண்டாள் லீலா.


தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari