ஒரு விபச்சாரியின் காதல் பாகம்-6
லீலாவிற்கு பிரசாத் சார்.....
அவள் அங்கு செய்ய வேண்டிய அனைத்து அக்கவுண்ட்ஸ் வேலைகளையும் சொல்லிக் கொடுத்தார்.
ரொம்ப தேங்க்ஸ் சார்.... கிளியர்ரா புரியும் படி சொல்லித் தந்தீங்க....
சரிம்மா.... வேற எதாவது டவுட்ஸ் இருந்தா என்னை கேளு.... அது தான் என் கேபின்.... என்றார்.
ஓகே சார்.... என்றாள் லீலா.
இரண்டு முறை ரெஸ்ட் ரூம் செல்வதற்கு எழுந்து சென்றாள் லீலா.... ரோஹன் கேபினை தாண்டி தான் ரெஸ்ட் ரூம் செல்லவேண்டும். அப்போது அவனை பார்த்து கொண்டே சென்றாள்.... திரும்பி வரும்போதும் பார்த்து கொண்டே வந்தாள்.... ஆனால் ரோஹன் அவனுடைய வேலைகளை தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.... லீலா கடந்து போனதை பார்க்கவில்லை.
பெல்லை அழுத்தினான் ரோஹன்.
யெஸ் சார்.... என்று உள்ளே சென்றான் ராஜூ.
என்ன ராஜூ.... வேலை என்னன்னு கணேஷ் சொன்னாரா?
ஹாங்.... சொன்னாரு சார்....
உனக்கு ஓகே வா....
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்.... என்றான் சிரித்த முகத்துடன்.
சரி... நீ போய் லீலாவை வரச்சொல்லு.... என்றான் ரோஹன்.
ஓகே சார்....
வெளியே சென்று....
அக்கா.... என்றான்.
என்னடா.... இங்க எல்லாம் அக்கான்னு சொல்லாத...
ஓகே ஓகே.... மேடம்....
சொல்லுப்பா....
சார் உங்களை கூப்பிட்டார்....
அதற்காகவே காத்திருந்தவள் போல.... வேகமாக எழுந்து சென்றாள்.
எக்ஸ்கியூஸ்மீ சார்.....
யெஸ் கம் இன்.....
சார் கூப்பிட்டீங்களா.....
ஆமாம்.... இரண்டு விஷயங்கள்.
என்ன.... என்பது போல பார்த்தாள்.
இது இங்கே நியர் பை ஏரியாவில இருக்கிற வீடு வாடகைக்கு.... அவங்க அட்ரெஸ் அன்ட் ஃபோன் நம்பர்.....
ஓகே சார்.... தேங்க்ஸ்....
இன்னொன்று.... எதுக்கு நீ நாலு முறை இந்த பக்கம் போகும் போதும் வரும்போதும் என்னை பார்த்துக்கிட்டே போன?
அது வந்து சார்.... சார் அது.... என்று திணறினாள் லீலா.
சார் நீங்க பார்க்கலையே.... உங்களுக்கு எப்படி தெரியும்?
சிசிடிவி ன்னு ஒண்ணு இருக்கு இல்ல.... என்று சொல்லி வெளியே இருந்த மற்றும் உள்ளே இருந்த கேமராக்களை காட்டினான்.
ஓ.... ஓகே.... சாரி சார்.....
இதுக்கு மேல உங்களுக்கு எதாவது ஆஃபீஸ் வேலை இருந்தா மட்டும் இந்த ரூமிற்கு வரனும் என்னை பார்க்கனும்.... இல்ல எதாவது ஆஃபீஸ் வேலை இருந்தா நானே உங்களை கூப்பிடுவேன்.... இந்த மாதிரி நடந்தா.... அப்புறம் நீங்க வேற வேலை தேட வேண்டி இருக்கும்..... காட் இட்....
ஓகே சார்.... சாரி சார்.... என்றாள்.
அப்போது ரோஹனின் ஃபோன் அடித்தது எடுத்து....
ஹலோ.... சொல்லு ஸ்வீட்டி.... என்றான்.
.........
நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா... வீடு அட்ரஸ், ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்திட்டேன்.....
.........
தேங்க்ஸ் எல்லாம் வேணாம்..... என்று வனஜா விடம் பேசிக் கொண்டே கையால் ஜாடை காட்டி லீலாவை வெளியே போகச் சொன்னான் ரோஹன்.
அவள் வெளியே சென்றதும் கதவு சாத்தப்படும் முன்னர் லீலாவின் காதில் கேட்ட வார்த்தைகள்... ஸ்வீட்டி.... ஐ லவ் யூ டி.....ச்....
முதல் முறையாக லீலாவிற்கு தன் தோழி வனஜாவின் மேல் பொறாமை தோன்றியது.
லஞ்ச் டைம்.... அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ரோஹன் மட்டும் எப்போதுமே வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருவார் என்றார் பிரசாத்.
சார்.... ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.... என்றாள் லீலா.
சொல்லுங்க மேடம்....
சார்.... மேடம் ன்னு சொல்லாதீங்க.... உங்களுக்கு என்ன வயசு சார்....
54 மா....
சார்.... என்னோட அப்பா வயசு சார் உங்களுக்கு.... தயவு செய்து வாங்க போங்க மேடம் ன்னு சொல்லாதீங்க சார்....
சரிம்மா....
இது ஓகே.... என்று சொல்லி சிரித்தாள்.
என்னவோ கேட்கணும் ன்னு சொன்னீயே.... என்னம்மா?
ரோஹன் சார்.... மூடி டைப்பா....
அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லை மா.... ரொம்ப நல்ல மனுஷன்.... பாவம் அவரோட திருமண வாழ்க்கை தான் அவருக்கு பெரிய இழப்பா போயிடிச்சு.... ஆனா கடவுள் இருக்காரு இல்ல... அவருக்கு தெரியும்.... நல்லவங்களை எப்போதும் கை விடமாட்டார்.
என்ன சார் சொல்றீங்க....
ஆமாம் மா.... இந்தியாவிலேயே நம்பர் 3 ஐ இருந்துச்சு இந்த கம்பெனி.... அதை எப்படியாவது முதல்ல கொண்டு வரணும் ன்னு பாடுபட்டார் ரோஹன் சார்.... அதனால அவர் அவரோட ஒயிஃப் கூட டைம் ஸ்பென்டு பண்ண முடியல.... அந்த பொண்ணு வேற ஒருத்தன் கூட ஓடிப் போயிடிச்சு.... அதுல மனுஷன் ரொம்ப ஒடஞ்சி போயிட்டாரு.... அதுல இருந்து ரொம்ப டல்லா ஆயிட்டாரு....
கடவுள் கைவிட மாட்டார் ன்னு சொன்னீங்களே....
ஆமாம் மா.... ரோஹன் சாரோட ஒயிஃப் பேரு ஷெரின். அச்சு அசல்ல அவங்களை மாதிரியே ஒரு பொண்ணை பார்த்திருக்கிறார். அந்த பொண்ணு கூடத் தான் இருக்காரு.... அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அது கஷ்டத்தை அனுபவிச்சிக்கிட்டு இருந்துச்சாம் பாவம்.... அந்த பொண்ணுக்கு டைவர்ஸ் வாங்கிட்டு அப்புறம் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னார்....
அந்த பொண்ணோட ஃபிரெண்டு தான் சார் நான்.... அவ தான் ரோஹன் சார் கிட்ட சொல்லி எனக்கு வேலை வாங்கி தரச் சொன்னா....
ஓ.... அப்படியா.... அதான பார்த்தேன்.... இந்த வேலைக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம எடுக்கக் கூடாது.... உன்னை எப்படி போடச் சொன்னார் ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.... இப்போ தான் புரியுது.... அந்த பொண்ணு சொல்லவே தான் உனக்கு வேலை போட்டு கொடுத்திருக்கிறார்.
சார்.... ரோஹன் சார் அவங்க ஒயிஃபை ஸ்வீட்டி ன்னு கூப்பிடுவாறா?....
ஆமாம்.... அந்த பொண்ணு இவரை டார்லிங் ன்னு கூப்பிடும். அந்த பொண்ணு இவருக்கு துரோகம் செஞ்சாலும் இவரு அந்த பொண்ணு கஷ்டப்படக் கூடாதுன்னு எல்லா விதத்திலும் ஹெல்ப் பண்ணினாரு.... அந்த ஆளு ஏதோ சாதாரண வேலைல தான் இருந்தான்.... அவனுக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தார்.... அந்த அளவுக்கு நல்ல மனுஷன்.
பிரசாத் சார் சொல்ல சொல்ல ரோஹன் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகமாகிக் கொண்டே போனது லீலாவிற்கு..... அதுவே காதலாக துளிர்த்தது.
சாப்பிட்டு முடித்து விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட லேப் டாப்பை எடுத்து ஓப்பன் செய்து.... ரோஹன் லிங்கிடு இன் பிரோஃபைல் போட்டோவை ஜூம் செய்து தனது மொபைலில் ஃபோட்டோ எடுத்து கொண்டாள். பிறகு தன் ஆஃபீஸ் வேலைகளை செய்ய தொடங்கினாள்.
மூன்று மணி ஆகிவிட்டதே.... இன்னும் வரவில்லையே என்று அடிக்கடி ஆஃபீஸ் வாசலைப் பார்த்து கொண்டு இருந்தாள் லீலா.
பின்னர் பிரசாத் சாரிடம் சென்று....
சார்... ரோஹன் சார் எத்தனை மணிக்கு வருவாரு?.... என்றாள்.
ஏன் மா....
அவர் அப்படி கேட்டதும்.... என்ன சொல்வது என்று தெரியாமல்.....இல்ல சார்.... வீடு வாடகைக்கு ஒரு அட்ரஸ் ஃபோன் நம்பர் கொடுத்தாரு.... அந்தக் கார்டை மிஸ் பண்ணிட்டேன்.... அதான்....
ஓ.... மூணு இல்லை மூன்றரை மணி ஆகும் அவர் வர.... என்றார்.
சரிங்க சார்.... என்று சொல்லி விட்டு தன் வேலையை அவசரமாக முடித்து விட்டு.... அதே காரணம் சொல்லி ரோஹனிடம் போய் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
மூன்று மணி நாற்பத்தி ஐந்து நிமிடம் ஆனது.... அப்போது வந்தான் ரோஹன்.
அவன் வந்தவுடன் ரிலாக்ஸ் ஆக வெயிட் செய்துவிட்டு.... பத்து நிமிடத்திற்கு பிறகு அவனுடைய அறைக்கு சென்றாள்.
எக்ஸ்கியூஸ்மீ சார்....
எஸ்.... கம் இன்.... என்று சொன்னவன் தீவிரமாக கம்பியூட்டரில் வேலை செய்துக் கொண்டே நிமிர்ந்து கூட பார்க்காமல்.... வாட் டூ யூ வான்ட் மிஸ் லீலா.... என்றான்.
சார்.... நீங்க கொடுத்த அந்த அட்ரஸ் அன்ட் ஃபோன் நம்பர் மிஸ் பண்ணிட்டேன்....
இடது கையை நீட்டி.... அந்த டேபிலில் இருக்கும் விசிட்டிங் கார்டில் ஃபோன் நம்பர் இருக்கும்.... அவருக்கு கால் பண்ணி அட்ரஸ் கேட்டு விட்டு போய் பார்த்துக்கோங்க....
ஓகே சார்.... என்று சொல்லி விட்டு அந்த டேபிலின் பக்கம் சென்றாள். அப்போது ரோஹனின் மேல் வனஜாவின் பர்ஃபியூம் வாசனை வந்தது. இப்போது அவளுடன் ஒன்றாக இருந்து விட்டு வந்திருக்கிறான்.... என்று தெரிந்து கொண்டாள்.
அந்த விசிட்டிங் கார்டை எடுத்து கொண்டு வெளியே வந்தாள். ஏனோ அவளுக்கு கடுப்பாக இருந்தது.
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
லீலாவிற்கு பிரசாத் சார்.....
அவள் அங்கு செய்ய வேண்டிய அனைத்து அக்கவுண்ட்ஸ் வேலைகளையும் சொல்லிக் கொடுத்தார்.
ரொம்ப தேங்க்ஸ் சார்.... கிளியர்ரா புரியும் படி சொல்லித் தந்தீங்க....
சரிம்மா.... வேற எதாவது டவுட்ஸ் இருந்தா என்னை கேளு.... அது தான் என் கேபின்.... என்றார்.
ஓகே சார்.... என்றாள் லீலா.
இரண்டு முறை ரெஸ்ட் ரூம் செல்வதற்கு எழுந்து சென்றாள் லீலா.... ரோஹன் கேபினை தாண்டி தான் ரெஸ்ட் ரூம் செல்லவேண்டும். அப்போது அவனை பார்த்து கொண்டே சென்றாள்.... திரும்பி வரும்போதும் பார்த்து கொண்டே வந்தாள்.... ஆனால் ரோஹன் அவனுடைய வேலைகளை தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.... லீலா கடந்து போனதை பார்க்கவில்லை.
பெல்லை அழுத்தினான் ரோஹன்.
யெஸ் சார்.... என்று உள்ளே சென்றான் ராஜூ.
என்ன ராஜூ.... வேலை என்னன்னு கணேஷ் சொன்னாரா?
ஹாங்.... சொன்னாரு சார்....
உனக்கு ஓகே வா....
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்.... என்றான் சிரித்த முகத்துடன்.
சரி... நீ போய் லீலாவை வரச்சொல்லு.... என்றான் ரோஹன்.
ஓகே சார்....
வெளியே சென்று....
அக்கா.... என்றான்.
என்னடா.... இங்க எல்லாம் அக்கான்னு சொல்லாத...
ஓகே ஓகே.... மேடம்....
சொல்லுப்பா....
சார் உங்களை கூப்பிட்டார்....
அதற்காகவே காத்திருந்தவள் போல.... வேகமாக எழுந்து சென்றாள்.
எக்ஸ்கியூஸ்மீ சார்.....
யெஸ் கம் இன்.....
சார் கூப்பிட்டீங்களா.....
ஆமாம்.... இரண்டு விஷயங்கள்.
என்ன.... என்பது போல பார்த்தாள்.
இது இங்கே நியர் பை ஏரியாவில இருக்கிற வீடு வாடகைக்கு.... அவங்க அட்ரெஸ் அன்ட் ஃபோன் நம்பர்.....
ஓகே சார்.... தேங்க்ஸ்....
இன்னொன்று.... எதுக்கு நீ நாலு முறை இந்த பக்கம் போகும் போதும் வரும்போதும் என்னை பார்த்துக்கிட்டே போன?
அது வந்து சார்.... சார் அது.... என்று திணறினாள் லீலா.
சார் நீங்க பார்க்கலையே.... உங்களுக்கு எப்படி தெரியும்?
சிசிடிவி ன்னு ஒண்ணு இருக்கு இல்ல.... என்று சொல்லி வெளியே இருந்த மற்றும் உள்ளே இருந்த கேமராக்களை காட்டினான்.
ஓ.... ஓகே.... சாரி சார்.....
இதுக்கு மேல உங்களுக்கு எதாவது ஆஃபீஸ் வேலை இருந்தா மட்டும் இந்த ரூமிற்கு வரனும் என்னை பார்க்கனும்.... இல்ல எதாவது ஆஃபீஸ் வேலை இருந்தா நானே உங்களை கூப்பிடுவேன்.... இந்த மாதிரி நடந்தா.... அப்புறம் நீங்க வேற வேலை தேட வேண்டி இருக்கும்..... காட் இட்....
ஓகே சார்.... சாரி சார்.... என்றாள்.
அப்போது ரோஹனின் ஃபோன் அடித்தது எடுத்து....
ஹலோ.... சொல்லு ஸ்வீட்டி.... என்றான்.
.........
நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா... வீடு அட்ரஸ், ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்திட்டேன்.....
.........
தேங்க்ஸ் எல்லாம் வேணாம்..... என்று வனஜா விடம் பேசிக் கொண்டே கையால் ஜாடை காட்டி லீலாவை வெளியே போகச் சொன்னான் ரோஹன்.
அவள் வெளியே சென்றதும் கதவு சாத்தப்படும் முன்னர் லீலாவின் காதில் கேட்ட வார்த்தைகள்... ஸ்வீட்டி.... ஐ லவ் யூ டி.....ச்....
முதல் முறையாக லீலாவிற்கு தன் தோழி வனஜாவின் மேல் பொறாமை தோன்றியது.
லஞ்ச் டைம்.... அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ரோஹன் மட்டும் எப்போதுமே வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருவார் என்றார் பிரசாத்.
சார்.... ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.... என்றாள் லீலா.
சொல்லுங்க மேடம்....
சார்.... மேடம் ன்னு சொல்லாதீங்க.... உங்களுக்கு என்ன வயசு சார்....
54 மா....
சார்.... என்னோட அப்பா வயசு சார் உங்களுக்கு.... தயவு செய்து வாங்க போங்க மேடம் ன்னு சொல்லாதீங்க சார்....
சரிம்மா....
இது ஓகே.... என்று சொல்லி சிரித்தாள்.
என்னவோ கேட்கணும் ன்னு சொன்னீயே.... என்னம்மா?
ரோஹன் சார்.... மூடி டைப்பா....
அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லை மா.... ரொம்ப நல்ல மனுஷன்.... பாவம் அவரோட திருமண வாழ்க்கை தான் அவருக்கு பெரிய இழப்பா போயிடிச்சு.... ஆனா கடவுள் இருக்காரு இல்ல... அவருக்கு தெரியும்.... நல்லவங்களை எப்போதும் கை விடமாட்டார்.
என்ன சார் சொல்றீங்க....
ஆமாம் மா.... இந்தியாவிலேயே நம்பர் 3 ஐ இருந்துச்சு இந்த கம்பெனி.... அதை எப்படியாவது முதல்ல கொண்டு வரணும் ன்னு பாடுபட்டார் ரோஹன் சார்.... அதனால அவர் அவரோட ஒயிஃப் கூட டைம் ஸ்பென்டு பண்ண முடியல.... அந்த பொண்ணு வேற ஒருத்தன் கூட ஓடிப் போயிடிச்சு.... அதுல மனுஷன் ரொம்ப ஒடஞ்சி போயிட்டாரு.... அதுல இருந்து ரொம்ப டல்லா ஆயிட்டாரு....
கடவுள் கைவிட மாட்டார் ன்னு சொன்னீங்களே....
ஆமாம் மா.... ரோஹன் சாரோட ஒயிஃப் பேரு ஷெரின். அச்சு அசல்ல அவங்களை மாதிரியே ஒரு பொண்ணை பார்த்திருக்கிறார். அந்த பொண்ணு கூடத் தான் இருக்காரு.... அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அது கஷ்டத்தை அனுபவிச்சிக்கிட்டு இருந்துச்சாம் பாவம்.... அந்த பொண்ணுக்கு டைவர்ஸ் வாங்கிட்டு அப்புறம் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னார்....
அந்த பொண்ணோட ஃபிரெண்டு தான் சார் நான்.... அவ தான் ரோஹன் சார் கிட்ட சொல்லி எனக்கு வேலை வாங்கி தரச் சொன்னா....
ஓ.... அப்படியா.... அதான பார்த்தேன்.... இந்த வேலைக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம எடுக்கக் கூடாது.... உன்னை எப்படி போடச் சொன்னார் ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.... இப்போ தான் புரியுது.... அந்த பொண்ணு சொல்லவே தான் உனக்கு வேலை போட்டு கொடுத்திருக்கிறார்.
சார்.... ரோஹன் சார் அவங்க ஒயிஃபை ஸ்வீட்டி ன்னு கூப்பிடுவாறா?....
ஆமாம்.... அந்த பொண்ணு இவரை டார்லிங் ன்னு கூப்பிடும். அந்த பொண்ணு இவருக்கு துரோகம் செஞ்சாலும் இவரு அந்த பொண்ணு கஷ்டப்படக் கூடாதுன்னு எல்லா விதத்திலும் ஹெல்ப் பண்ணினாரு.... அந்த ஆளு ஏதோ சாதாரண வேலைல தான் இருந்தான்.... அவனுக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தார்.... அந்த அளவுக்கு நல்ல மனுஷன்.
பிரசாத் சார் சொல்ல சொல்ல ரோஹன் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகமாகிக் கொண்டே போனது லீலாவிற்கு..... அதுவே காதலாக துளிர்த்தது.
சாப்பிட்டு முடித்து விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட லேப் டாப்பை எடுத்து ஓப்பன் செய்து.... ரோஹன் லிங்கிடு இன் பிரோஃபைல் போட்டோவை ஜூம் செய்து தனது மொபைலில் ஃபோட்டோ எடுத்து கொண்டாள். பிறகு தன் ஆஃபீஸ் வேலைகளை செய்ய தொடங்கினாள்.
மூன்று மணி ஆகிவிட்டதே.... இன்னும் வரவில்லையே என்று அடிக்கடி ஆஃபீஸ் வாசலைப் பார்த்து கொண்டு இருந்தாள் லீலா.
பின்னர் பிரசாத் சாரிடம் சென்று....
சார்... ரோஹன் சார் எத்தனை மணிக்கு வருவாரு?.... என்றாள்.
ஏன் மா....
அவர் அப்படி கேட்டதும்.... என்ன சொல்வது என்று தெரியாமல்.....இல்ல சார்.... வீடு வாடகைக்கு ஒரு அட்ரஸ் ஃபோன் நம்பர் கொடுத்தாரு.... அந்தக் கார்டை மிஸ் பண்ணிட்டேன்.... அதான்....
ஓ.... மூணு இல்லை மூன்றரை மணி ஆகும் அவர் வர.... என்றார்.
சரிங்க சார்.... என்று சொல்லி விட்டு தன் வேலையை அவசரமாக முடித்து விட்டு.... அதே காரணம் சொல்லி ரோஹனிடம் போய் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
மூன்று மணி நாற்பத்தி ஐந்து நிமிடம் ஆனது.... அப்போது வந்தான் ரோஹன்.
அவன் வந்தவுடன் ரிலாக்ஸ் ஆக வெயிட் செய்துவிட்டு.... பத்து நிமிடத்திற்கு பிறகு அவனுடைய அறைக்கு சென்றாள்.
எக்ஸ்கியூஸ்மீ சார்....
எஸ்.... கம் இன்.... என்று சொன்னவன் தீவிரமாக கம்பியூட்டரில் வேலை செய்துக் கொண்டே நிமிர்ந்து கூட பார்க்காமல்.... வாட் டூ யூ வான்ட் மிஸ் லீலா.... என்றான்.
சார்.... நீங்க கொடுத்த அந்த அட்ரஸ் அன்ட் ஃபோன் நம்பர் மிஸ் பண்ணிட்டேன்....
இடது கையை நீட்டி.... அந்த டேபிலில் இருக்கும் விசிட்டிங் கார்டில் ஃபோன் நம்பர் இருக்கும்.... அவருக்கு கால் பண்ணி அட்ரஸ் கேட்டு விட்டு போய் பார்த்துக்கோங்க....
ஓகே சார்.... என்று சொல்லி விட்டு அந்த டேபிலின் பக்கம் சென்றாள். அப்போது ரோஹனின் மேல் வனஜாவின் பர்ஃபியூம் வாசனை வந்தது. இப்போது அவளுடன் ஒன்றாக இருந்து விட்டு வந்திருக்கிறான்.... என்று தெரிந்து கொண்டாள்.
அந்த விசிட்டிங் கார்டை எடுத்து கொண்டு வெளியே வந்தாள். ஏனோ அவளுக்கு கடுப்பாக இருந்தது.
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.