• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் - பாகம் 8

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -8
ஸ்டாப் இட் ஸ்வீட்டி.... நான் உன்னை சின்ஸியரா லவ் பண்றேன். ஆனா நீ இன்னும் என்னை ஒரு கஸ்டமர் மாதிரி தான் நினைக்கிறியா? உன்னை விட அவ நல்லா நடந்துக்குவா ன்னு என் கிட்டியே சொல்றீயா.... என்று கத்தினான்.
அச்சச்சோ சத்தியமா இல்லீங்க.... என்னைக்கு நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்களோ.... அந்த நொடியில இருந்து உங்களைத் நான் புருஷனா மட்டும் இல்ல கடவுளா நினைக்கிறேன். நீங்க லீலாவை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க.... அதுக்காக தான் அப்படி சொன்னேன்.
ஒருவேளை.... லீலா உன் கிட்ட வந்து.... என்னை அவளுக்காக விட்டுக் கொடுக்க சொன்னா.... என்ன பண்ணுவ....
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் பிறகு....
நமக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னாடி கேட்டான்னா.....கண்டிப்பா விட்டுக் கொடுத்திடுவேன்......உங்க கிட்ட கூட சொல்லாம எங்காவது போயிடுவேன்....
ஏய்.... என்ன பேசற ன்னு தெரிஞ்சு தான் பேசறீயா....என்னைவிட அவ தான் உனக்கு முக்கியமா?
அவ என்னோட உயிர் தோழிங்க.... என் உயிரை காப்பாற்ற அவ மானத்தையே வித்தவ.... அவளை தப்பா நினைக்காதீங்க பிளீஸ்....
அவ அப்படி நினைக்குற மாதிரி தெரியலையே....
நீங்க முதலில் இருந்தே அவளை தப்பா நினைச்சிருக்கீங்க.... நான் என் காதலையே அவளுக்காக விட்டுக் கொடுக்கிறேன் ன்னா அவ எந்த அளவுக்கு என் மேல பாசம் வச்சிருப்பா ன்னு உங்களுக்கு புரியலையா.... அவளுக்கு நல்லாவே தெரியும் நான் உங்களை லவ் பண்றேன்னு.... நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க போறீங்க ன்னு கூட சொன்னேன். என்னைவிட அவ ரொம்ப சந்தோஷ பட்டா தெரியுமா... அப்படி இருக்க அவ ஏன் உங்களை விட்டு கொடுக்க சொல்லி என் கிட்ட கேட்கப் போறா சொல்லுங்க..... என்றாள்.
அடிப்பாவி.... நீ தான் அவளை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க.... என்று நினைத்து கொண்டான் ரோஹன். இதற்கு மேல் அவளிடம் வாதம் செய்ய விரும்பவில்லை அவன்.
சரி சரி.... விடு.... நம்ம மூடை ஸ்பாயில் பண்ண வேண்டாம்.... வா.... என்று சொல்லி அவளை கட்டிலில் இழுத்து அவனருகில் படுக்க வைத்தவன்....பின்னர் ஒரு ஐஸ் கட்டியை வனஜாவின் உதட்டின் மேல் வைத்தான்.
ஏங்க.... இப்போ சரி ஆகிடிச்சு.... இன்னும் எதுக்கு ஐஸ் வைக்கிறீங்க....
உன் உதடுகள் நார்மலாகும் வரை நான் தினமும் ஐஸ் வைப்பேன்.... அதுவும் இல்லாம இது டிஃபரெண்டா இருக்கில்ல....என்று சொல்லி விட்டு ஒரு ஐஸ்ஸை அவளுடைய உதட்டின் மேல் வைத்து அதை தன் உதட்டால் தேய்த்து கரைத்தான். பின்னர் இருவரும் ஒன்றாயினர்..... இவை அனைத்தையும் அவர்களுக்கு தெரியாமல் பின் பக்கமாக இருந்த ஜன்னலை மிக கம்மியாக திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் லீலா கண்களில் நீர் வழிய.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் மெதுவாக அந்த ஜன்னலை சாத்திவிட்டு.... திரும்பியவள் அதிர்ந்தாள்.
அங்கே ராஜூ நின்றுக் கொண்டு இருந்தான்.
என்னாச்சு அக்கா.... ஏன் இங்க நிர்கறீங்க....
ஒண்ணும் இல்ல டா.... தூக்கம் வரலைன்னு.... அப்படியே நடந்துக்கிட்டு இருந்தேன்.... நல்லவேளை ராஜூ அவள் ஜன்னலை சாத்தும் போது பார்க்கவில்லை. அவள் அந்த பெரிய ஹாலில் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் நடப்பது போல நடித்தாள்.
சரிக்கா.... நான் போய் தூங்கறேன்.... நான் எழுந்து பார்க்கும் போது நீ காணும்.... அதான் எழுந்து வந்து பார்த்தேன்.... என்று சொல்லி விட்டு அவன் ரூமிற்கு சென்றான்.
அவன் சென்ற பிறகு..... சிறிதுநேரம் சோஃபாவில் அமர்ந்தாள் லீலா. வனஜாவின் வார்த்தைகள் அனைத்தும் அவளை நெஞ்சில் குத்துவது போல இருந்தது. வனஜா என் மேல எவ்வளவு பாசமா இருக்கா.... அவளுக்கே நாம் துரோகம் செய்ய நினைக்கிறோமே.... என்று நினைத்து கொண்டாள். பிறகு அவளே நினைத்தாள் நாம் என்ன அவளை விரட்டி விட்டுவிட்டு அந்த இடத்திற்கு வரவா நினைத்தேன்..... அவளுடன் நானும் என் வாழ்க்கையை பங்கு போட்டுக்கொள்ள தானே நினைத்தேன்.... இது எப்படி துரோகம் ஆகும். எந்த ஒரு ஆணும் தன்னவளை இப்படி தாங்குவதை அவள் இதுவரை பார்த்ததில்லை.... அவளிடம் வந்த அனைத்து ஆண்களும் வீட்டில் இருக்கும் தன் மனைவியிடம் பொய் சொல்லி விட்டு வருபவர்களே..... ரோஹன் வனஜாவை தன் உயிரை போல பார்த்துக் கொள்வதால்....மனைவியாகக் கூட ஆகவில்லை.... அவளுக்காகவே வாழ்கிறான்.... மற்ற பெண்களை ஏறெடுத்தும் அவன் பார்க்கவில்லை.... என்பதை பார்த்து ஏங்கி போனவளுக்கு அவளுக்கும் அவனுடைய அன்பும் பாசமும் வேண்டும் என்று தோன்றியது. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் துளிர் விட்டது. தன் மேலும் அவனுக்கு காதல் வர என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தவள்.... தன்னையும் அறியாமல் அந்த சோஃபாவிலேயே படுத்து உறங்கி விட்டாள்.
என்று ரோஹன் வனஜாவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று சொன்னானோ அன்றிலிருந்தே அவள் அவனை தன் கணவனாக நினைத்து வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவளுடைய மேற்பார்வையில் செய்யத் தொடங்கினாள். சமையல் அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பதால் அவனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டுக் கேட்டு அதை ருசியாகவும் அன்போடும் அவனுக்கு பரிமாறத் தொடங்கினாள். ஏற்கனவே அவளுடைய அழகிலும் அன்பிலும் கைதியானவன் இப்போது அவளுடைய சமையல் ருசிக்கும் அடிமையாகிவிட்டான்.
வனஜாவின் டைவர்ஸ் கேஸூக்காக அவளை கோர்ட்டுக்கு அழைத்து சென்றான் ரோஹன்.
டார்லிங் பிளீஸ்.... என் கூட லீலாவை கட்டிக்கொள்ளவா.... அவ கூட இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.
நான் தான் இருக்கேனே ஸ்வீட்டி....
அவளும் இருந்தா இன்னும் கொஞ்சம் எக்ஸ்டிரா தைரியமா இருக்கும்....
மிச்....
பிளீஸ்...
அவளுக்கு என் ஆஃபீஸ்ல வேலை இருக்கு....
அரைநாள் தானே.... ராஜூ வை கூட்டிக்கிட்டு வரச்சொல்லுங்க.... கேஸ் முடிஞ்சதும்.... அவன் கூடவே அனுப்பிடறேன்..... என்றாள் வனஜா.
சரி....என்று சொல்லி விட்டு.... பிரசாத் சாருக்கு கால் செய்தான் ரோஹன்.
ஹலோ பிரசாத் சார்.... நீங்க பைக்கிலா ஆஃபீஸ் வந்தீங்க?
ஆமாம் சார்....
ராஜூ கிட்ட உங்க பைக்கை கொடுத்து நான் அனுப்புற லொகேஷனுக்கு லீலாவதியை கூட்டிக்கிட்டு வரச்சொல்லுங்க.....
ஓகே சார்.... என்று சொல்லி விட்டு விஷயத்தை லீலாவிடம் சொன்னார் பிரசாத்.
ஓகே சார் என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு ராஜூவுடன் கிளம்பி சென்றாள்.
கோர்ட்டில்.....
லீலா வை பார்த்ததும் வனஜா அவளை கட்டி அணைத்து கொண்டாள்.
ஏய்.... கொஞ்சம் நர்வஸ்ஸா இருக்கு டி.... அதான் உன்னை வரச்சொன்னேன்.
டென்ஷன் ஆகாத....நாங்க தான் இருக்கோம் இல்ல....என்று சொன்னாள் லீலா.
தீர்ப்பு வழங்கிவிட்டார் நீதிபதி.... இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. சந்தோஷமாக வெளியே வந்தாள் வனஜா. லீலாவின் கையைப் பிடித்து கொண்டு வெளியே வந்தாள்.
அப்போது வனஜாவின் முன்னாள் கணவன் அங்கு வந்தான். லீலா வேகமாக சென்று அவனுடைய கன்னத்தில் அரைந்தாள்.
வனஜா நடுக்கத்தில் லீலாவை பிடித்து தடுத்தாள்.
டேய்.... உன்னை நம்பி வந்தவளை இப்படி பண்ணிட்டியே.... நீ நல்லா இருப்பீயா.... என்று சொல்லி அவன் சட்டை காலரைப் பிடித்து உளுக்கினாள்.
ஏய்.... அவளே சும்மா இருக்கா.... நீ என்ன ஓவரா குதிக்கிற.... சென்னைக்கு வந்து பொழப்பு நடத்தவே தான்.... இப்போ புளியங்கொம்பாட்டம் ஒரு ஆளை புடிச்சு செட்டில் ஆயிட்டா.... என்று சொல்லி முடிக்கும் முன் அவனுடைய கன்னத்தில் விழுந்த அடியால் பக்கவாட்டில் கீழே விழுந்தான்.
இன்னொரு வார்த்தை என் ஸ்வீட்டியை பத்தி தப்பா பேசின.... உன்னை இங்கேயே கொன்று புதைச்சிடுவேன்.... என்றான் ரோஹன்.
வனஜா, லீலா மற்றும் ராஜூ மூவரும் ரோஹனை ஆச்சிரியமாக பார்த்து கொண்டு இருந்தனர்.
தொடரும்.....
அ.வைஷ்ணவி விஜயராகவன்.