• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 12

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
இப்படியே ஆத்விக் சக தொழிலதிபர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஐந்து வருடங்களின் பின் மீண்டும் வருணைக் கண்டிருந்தான். தான் காண்பது நனவா கனவா என புரியாத அதிர்ச்சியில் அவன்...

அவனது அதிர்ந்த பார்வை சென்ற திக்கில் பார்த்த நவீனிற்கும் கழுத்து நரம்புகள் புடைத்து நின்றன. அந்த வருணோ இன்னொரு பெண்ணின் இடையை அணைத்துப் பிடித்தாற் போன்று நின்று பேசிக் கொண்டிருந்தான். அவர்களின் நெருக்கமே அவர்களின் உறவை படம் போட்டு காட்டி விடும். அந்தளவுக்கு நெருக்கமாக நின்றிருந்தனர். நவீன் பற்களை நறநறுத்துக் கொண்டிருக்கும் போது க்ருஷ்ண மூர்த்தி என்ற கம்பனி பார்ட்னர் அழைக்க அந்தப் பக்கம் போய் விட்டான்.

இது ஓர் பக்கம் நடக்க, அங்கே பார்ட்டியில் வந்ததிலிருந்து ஆத்விக்கின் கம்பீர அழகையும் நவீனின் சாந்தமான குறும்பழகையும் பெண்கள் ஓர் பக்கம் ரசித்துக் கொண்டிருக்க, அங்கே தான் அந்த அழகிய நயனங்களுக்கு சொந்தக்காரியும் அமர்ந்திருந்தாள். ஆடவர்கள் இவர்களை கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. இவளோ தன்னவனை மற்றைய பெண்கள் ரசிப்பதை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால் அதை அவன் தூசிக்கும் மதிக்காமல் இருப்பதில் அவனை நினைத்து கர்வமும் கொண்டாள்.

ஆத்விக்கோ "இவன்..இவன் அவன் தானே..? இவன் வேறொரு பொண்ணு கூட.. சத்ய ஸ்ரீ..? ஓஓ நோ.. அப்போ நான் தான் தப்பா புரிஞ்சிட்டு இருக்கிறேனா? இல்லையே, இவன் பேசுனத என் காதால கேட்டேனே. அப்போ அப்போ எல்லாம்..? ஓ காட் ரெண்டு பேருக்கும் ப்ரேக்கப் ஆகிட்டா..சிட்.." என மனதில் குழப்பதுடன் தத்தளித்துக் கொண்டிருந்தவன் மெதுவாக அவனை நோட்டமிட்டான். சிறிது நேரத்தில் வருணின் நண்பன் வந்தழைக்க இவளிடம் ஏதோ கூறி விட்டு அங்கே நடையைக்கட்டினான். யாரும்மறியா வண்ணம் ஆத்விக்கும் அவனைப் பின் தொடர்ந்தான்.

அவர்களின் பேச்சுக்கு இவன் செவி தாழ்த்திக் கொண்டிருந்தான்.

வருணிடம் அவனது நண்பன் "என்னடா வருண். இதென்ன புது டிக்கெட்டா..?" என்றதும் உதட்டை கோணலாக வளைத்த வருண் "இது தான் லாஸ்ட்டும்.." என்றான்.

"அப்போ திருந்திட்டியா..?" இப்போது மற்றைய நண்பன்.

"எவ்வளவு நாளைக்குத் தான் அடுத்தவன்ட வாழ்க்கைல விளையாட்டுறது. கொஞ்சம் நம்ம சொந்த வாழ்க்கையிலையும் விளையாடிப் பார்ப்போமே..." என்றவன் ஆர்பாட்டமாக சிரித்து வைக்க அதனைத் தொடர்ந்து நண்பர்களும் சிரித்தனர்.

அதில் ஒருத்தன் "ஆனா மச்சி அந்த சத்ய ஸ்ரீட லய்ஃப்ல விளையாடுன பாரு, காட்.. அது தான் செம்ம ஆட்டம். அவ செம்ம ஃபிகர்டா. ஆனால் பாவம் செய்யாத தப்புக்காக தண்டனைய அனுபவிச்சிட்டா..ஹா..ஹா" என்றவனிடம்

"டேய் நான் அவளை என்னடா செஞ்சேன்..? அந்த ஆத்விக்க பழிவாங்க அவளை யூஸ் பண்ணிக்கிட்டேன். தட்ஸ் ஆல்..." என்றான்.

சத்ய ஸ்ரீ என்ற பெயரைக் கேட்டவுடன் ஆத்விக்கின் காது இன்னும் கூர்மையானது.

"என்னடா சொல்லுற..?" என விழித்த நண்பனிடம்
"ஆமான்டா. அவ என்னவோ அண்ணன் மாதிரி தான் என் கூட பேசினாள்.அவ லவ் பண்ணுனது அந்த ஆத்விக்க தான். பட் இடைல அந்த ஆத்விக் ஓவரா வாலாட்டினான்டா. அதான் என் ஸ்டைல்ல அவன்ட வாலை மடக்கி விட்டேன்.." என்று அன்று நடந்த அனைத்தையும் முழுவதுமாக நண்பர்களிடம் சொல்லி முடிக்க, இந்தப் பக்கம் ஆத்விக் ஆடி விட்டான்.

ஆத்விக்கோ மனதில் "எ..எ..என்ன சொல்றான் இவன்? இவன் சொல்றது உண்மையா?அன்னைக்கு ஸ்ரீ.. ஸ்ரீ சொல்ல வந்தது இதை தானா? ஓ காட், நான் தான் அவளை நம்பலயா..?" என புலம்பியவாறு தன்னைக் கட்டுப்படுத்த வழியின்றி தலையை கோதிக் கொண்டான்.

வருணும் அவனது நண்பர்களும் அவ்விடம் விட்டகழும் போதே வருண் ஆத்விக்கை கண்டிருந்தான்.

முன்பே விட சற்று என்ன அதிகமாகவாகவே தோற்றத்தில் தெளிந்தும், கம்பீரமாகவும், ஆளை அசத்தும் வசீகரிக்கும் அழகுடன் இருந்தவனை வெறியுடன் பார்த்த வருண் "ஹேய் ஆத்விக் நீ என்ன இங்கே.. அது சரி எப்படி இருக்க..?" என்றான் எகத்தாளமாய்.

ஆத்விக்கிற்கோ ஒன்று மட்டுமே இப்போதைக்கு தேவைப்பட்டது.
"ஏய் வருண் நீ..நீ இப்போ சொன்னதெல்லாம்..?" என இடையிலே நிறுத்தியவனிடம்
"எதக் கேக்குற..?" என்றான் வருணும் புரியாதவனாய்.

"எ..என் சத்யா பற்றி" என்றான் சற்றே கறகறத்த குரலில்.

அவனும் "ஓஓ அதுவா..? கேட்டுட்ட போல எல்லாத்தையும்..?" என கோணல் சிரிப்புடன் கேட்டவன் அவனை ஆழ்ந்து பார்த்தவாறே "ம்ம் உண்மை தான். உன்னைய பழிவாங்க அவளை யூஸ் பண்ணினேன்..." என்று முடிப்பதற்குள் ஆத்விக் எட்டி உதைந்ததில் தூரப் போய் விழுந்தான் வருண்.

ஓடி வந்து அவனது சேர்ட் காலரை பிடித்து தூக்கியவன் அவன் சுதாரிப்பதற்குள் தலையால் இடித்ததில் சித்தம் கலங்கியது வருணுக்கு. நெற்றி வெடித்து இரத்தம் ஓர் பக்கம் வடிய அவனது நண்பர்கள் வந்து ஆத்விக்கைப் பிடித்தனர். அவர்களை வெறி பிடித்தவன் போல தள்ளி விட்டவன் "டேய் விடுங்கடா. இன்னைக்கு இவனுக்கு சமாதி கட்டாம விட மாட்டேன்..." என்றவாறு நண்பர்களில் ஒருவனுக்கு மூக்கில் குத்த அவன் மூக்கைப் பொத்திக் கொண்டு போய் கீழே விழுந்தான். அதில் மற்றவர்களின் கை தானாக ஆத்விக்கை விட அவர்களை முறைத்து விட்டு திரும்பியவன் தள்ளாடிக் கொண்டு நின்ற வருணை கீழே தள்ளி விட்டு அவன் மேல் ஏறி ஓங்கி ஓங்கி முகத்தில் குத்த இரத்தம் பீறிட்டது அவனுக்கு. அவன் வலியில் துடிக்க ஆத்விக் இன்னும் கொலைவெறியில் அவனை நசுக்கினான்.

அதற்கிடையில் அனைவரும் அவ்விடம் வந்து விட, ஒருவர் "சார் சார் என்னாச்சு..?" என்றவாறு அவனை ஆளாளுக்கு சார் போட்டு அழைத்தனர். இருந்தும் யாரும் அவனைத் தடுக்கவில்லை. அவனது அந்தஸ்து அப்படி.. இதனை பார்த்துக் கொண்டிருந்த வருணின் நண்பர்கள் தங்களது முகத்தை திரும்பிப் பார்த்து விட்டு பேசாமல் வாயை மூடிக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

அப்போது தான் அவ்விடம் வந்த நவீன் இருவரையும் இப்படிப் பார்த்து விட்டு அவசரமாக ஆத்விக்கிடம் வந்து "டேய் மச்சி என்னாச்சுடா..? ஏன்டா இவனை அடிக்கிற..?" என்றான்.

அவனோ "மச்சான் என் லய்ஃப நாசமாக்கினவன் இவன் தான்டா. இவன சும்மா விடக்கூடாது. என் கையால இவன் உயிர் போகனும்.." என இன்னொரு குத்து விட அப்படியே மயங்கி விழுந்தான் வருண் என்ற அரக்கன்.

"ஓஹோ நம்மாளுக்கு எல்லாம் தெரிஞ்சிட்டு போல.. ஐ ஜாலி.." என நவீன் மனதில் குதூகலித்து விட்டு
"அவன் ஆல்ரெடி மயங்கிட்டான். இனியும் அடிச்சா செத்துப் போய்ருவான்.." என்றவனும் அவன் பங்கிற்கு இன்னொரு மொத்தைக் கொடுக்க, அவனவள் தன்னவனின் இந்த சிறுபிள்ளை தனத்தில் சிரித்து வைத்தாள். இவர்கள் இப்போதைக்கு தேற மாட்டார்கள் என அங்கிருந்தவர்கள் நினைத்தார்களோ ஓடி வந்து அவர்களைப் பிடித்து "சார் நீங்க விடுங்க. மீதிய நாங்க பார்த்துக்கிறோம்..." என்றனர்.

கீழே குனிந்து வருணைப் பார்த்த ஆத்விக் "இனி இவன திரும்பிப் பார்த்தேன்.." என அங்கிருந்தவர்களை எச்சரிக்கையாக பார்த்து விட்டு நவீனுடன் கிளம்பி விட்டான்.

போகும் வழியில் ஆத்விக் நடந்தவைகளை நவீனிடம் கூற
அவனோ "ஐ நோ ஆல்ரெடி மச்சி.." என்றவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தவன் "என்னடா சொல்லுற..?" என்றான்.

"ஆமாம் மச்சி..." என்று சத்ய ஸ்ரீயை சந்தித்தது, அவள் கூறிய உண்மைகள், இறுதியில் தன்னை உதாசீனப்படுத்திய அவளது வருத்தம் என அனைத்தையும் கூறி முடிக்க ஆத்விக்கிற்கு முகத்தை எங்கு வைப்பதென்று தெரியவில்லை. குற்றவுணர்ச்சியில் வெந்து கொண்டிருந்தான்.

கண்களிலிருந்து விழுந்த சொட்டுக் கண்ணீரை துடைத்தவன் "அப்போ ஏன்டா நேத்தே என் கிட்ட சொல்லைல.." என்றவனிடம் "நீ நம்ப மாட்டேனு தான் மச்சான்.." என்றவனது பதில் அவனை கன்னத்தில் அறைந்திருந்தது.

தீடீரென அவன் வேகமாக எங்கோ ஓட அவனைத் தடுத்த நவீன் "எங்கடா போற..?" என்றான்.

"அவ..அவ என் ஸ்ரீய பார்க்க போறேன்டா. இதுக்கு மேல என்னால முடிலடா..." என்றான் தவிப்பாய்.

"இப்போ போனா உடனே உன்னைய மன்னிச்சு ஏத்துக்குவானு நெனைக்கிறியா..? ஆனால் ஒன்னு மச்சான். நம்ம ரெண்டு பேரையும் ஜென்மத்துக்கும் மன்னிக்க மாட்டா.." என்றான் சோகமாய்.

ஆத்விக்கோ கலங்கிய விழிகளை மறைத்தவனாக "இல்லை மச்சி. அவ எனக்கு வேணுன்டா.." என்றான் சிறுபிள்ளையாய்.

சரியாக அந்நேரம் பார்த்து "ஹேப்பி நியூ இயர்.." என வானவேடிக்கைகள் வானத்தை வண்ணமயமாக்க அனைவரும் சந்தோஷத்துடன் கூச்சலிட்டு அந்த இரவை வரவேற்றனர்.

அதில் ஆத்விக்கும் நவீனும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர்.

தொடரும்...

தீரா.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
509
168
43
Dindugal
VERY nicema
oruvaliya avanukku unmai therinjittu
analum ava udane ok solla koodathu,
nallaa suththa vidanum..
 
  • Like
Reactions: Dheera

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
253
155
43
Theni
Adenkappaa...
ippo mattum aen thudikkanum avlai parkka
kaadhalukku muthalla nambikka thane venum, adhuve illannum pohu ippadi
enakku intha erumai mela semma kovam
sathya ivanai aethukkave koodathu
 
  • Like
Reactions: Dheera

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
304
119
43
Tanjur
ஏண்டா தக்காளி, நீ நினைச்சா வருவ, நினைச்சா போவியா.. என்ன நடந்ததுன்னே தெரியாம சன்ட்ஹேகப்பட்டு விட்டுட்டு போயிட்டு, இப்போ வந்து அவ வேனும்னு சொன்னா, உடனே அவ அண்ணன் தூக்கி கொடுத்துடுவானா.? அதான் இப்போ ஒரு மண்ட கசாயம் லுக்கு விடுதே அதை அப்படியே தள்ளிக்கிட்டு போய் சேர். உனக்கு சத்யா எல்லாம் கிடையாது. டென்சன் பன்றான்யா இந்த ஆத்விக்..
 
  • Haha
Reactions: Dheera

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
304
119
43
Tanjur
1677745899350.png
 
  • Haha
Reactions: Dheera

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
Adenkappaa...
ippo mattum aen thudikkanum avlai parkka
kaadhalukku muthalla nambikka thane venum, adhuve illannum pohu ippadi
enakku intha erumai mela semma kovam
sathya ivanai aethukkave koodathu
Aalaluku thittadhaingaiya en hero va 🥲
 

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
ஏண்டா தக்காளி, நீ நினைச்சா வருவ, நினைச்சா போவியா.. என்ன நடந்ததுன்னே தெரியாம சன்ட்ஹேகப்பட்டு விட்டுட்டு போயிட்டு, இப்போ வந்து அவ வேனும்னு சொன்னா, உடனே அவ அண்ணன் தூக்கி கொடுத்துடுவானா.? அதான் இப்போ ஒரு மண்ட கசாயம் லுக்கு விடுதே அதை அப்படியே தள்ளிக்கிட்டு போய் சேர். உனக்கு சத்யா எல்லாம் கிடையாது. டென்சன் பன்றான்யா இந்த ஆத்விக்..
Ivan eadho palaya kovathula irikan en hero mela 🤣🙊