• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கனா காணும் பேனாக்கள் - 2023

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

ஆடிப்பெருக்கில் பொங்கும், புது வெள்ளம் போல், வைகை தளத்தில் புதுக் கதைகள் ததும்ப, புத்தம் புது போட்டி அறிவிப்போடு,
ஆடியிலே வீசும் சூறைக்காற்றை போல் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வந்து விட்டோம்.
ஆடியிலே தேடி விதைத்த விதை போல், உங்கள் உள்ளங்களில் வேரூன்ற வைகைத்தளக் கதைகள் உங்களை நாடி வரப்போகிறது.


வைகை தளம் பெருமையுடன் வழங்கும், வைகை கதை திருவிழா-2023
"கனா காணும் பேனாக்கள்"

கதாசிரியர்களையும், கதை பிரியர்களையும் கற்பனையில் கலந்தாட வைத்து, அவர்களை களிப்பூட்டும் விதமாக, ஏராளமான பரிசுகளோடு ஆடி ஒன்று முதல் இனிதே ஆரம்பமாகப் போகிறது, வைகை தளத்தின் கோலாகலமான குறுநாவல் போட்டி!

ஆயக்கலைகள் அறுபத்து நான்கிலிருந்து ஒன்பது கலைகளை மட்டும் நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம், அந்த ஒன்பது கலைகளில் ஒரு கலையைத் தேர்ந்தெடுத்து நீங்கள் எழுதலாம்.

‘எழுத்து, மருத்துவம், போர்ப்பயிற்சி, வில்லாற்றல், நாடகம்(சினிமா), மறவனப்பு (இதிகாசம்), ஆடற்கலை, பாடல், வீணை’ என்ற இந்த நவகலைகளில் காதல் மட்டுமே கதையின் கருவாக இருக்க வேண்டும். இந்த நவகலைகளை மையமாகவோ அல்லது அதைசார்ந்தோ கதை தளம் அமைய வேண்டும்.

வித்தியாசமான சிந்தனைகளை, கற்பனைகளை தங்களின் எழுத்தில் கலந்து வடிக்க வேண்டும். காதலோடு சேர்த்து குடும்பம், சஸ்பென்ஸ், திகில் போன்ற சுவைகளையும் இணைத்துப் படைக்கலாம்.

கொடுக்கப்பட்ட கதையின் கருவை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு எழுத்தாளரின் சுய விருப்பம் மட்டுமே. எழுத்தாளர் தங்களின் பெயரை மறைத்துத் தான் எழுத வேண்டும்.

கதையின் கரு கண்டிப்பாக கொடுக்கப்பட்ட ஆயக்கலைகள் ஒன்பதில் ஒன்றாக இருக்க வேண்டும்.

எழுத்தாளரின் சொந்த முயற்சியில் தான் கதை இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியானதோ, மற்றவரின் படைப்பை சார்ந்தோ இருக்கக் கூடாது.


இது குறுநாவல் போட்டி ஆகையால் உங்களின் கதை 25000 - 35000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

வரும் ஆகஸ்ட் 03 ஆம் தேதி ஆடி பெருக்கில் இருந்து உங்கள் கதையை நீங்கள் வைகை தளத்தில் பதிவு செய்ய ஆரம்பிக்கலாம். போட்டி முடியும் நாள் அக்டோம்பர் 31 ஆம் தேதி. (போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் எந்த சூழ்நிலையிலும் நாட்கள் நீட்டிக்கப்படாது என்பதை புரிந்து கொண்டு எங்களுக்கு துணை நிற்கவும்.)

போட்டியில் பங்குபெற விரும்புவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

போட்டியின் முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி, அதாவது தீபாவளியன்று வெளியிடப்படும்.

பரிசு தொகையாக,

முதல் பரிசு பெறும் கதைக்கு ரூபாய் 5000,
இரண்டாம் பரிசு பெறும் கதைக்கு ரூபாய் 3000,
மூன்றாம் பரிசு பெறும் கதைக்கு ரூபாய் 2000 வழங்கப்படும்.

புத்தகம் போட விரும்பினால், வைகை பதிப்பகம் சார்பாக உங்களின் கதையை புத்தகமாக போடலாம். விருப்பம் இல்லாத பட்சத்தில், பரிசு தொகை மட்டும் வழங்கப்படும்.

மேலும் இந்தப் போட்டியை மெருகேற்றும் விதமாக, தங்களுக்கு நன்கு அறிமுகமான ஐந்து முன்னணி எழுத்தாளர்கள் , சிறப்பு விருந்தினர்களாக ( guest performance ) கலந்து கொண்டு, தங்கள் பெயர்களை மறைத்து எழுத இருக்கின்றனர்.

அவர்களைக் கண்டுபிடிப்பது இந்த குறுநாவல் போட்டிக்குள் ஒளிந்திருக்கும் மற்றொரு போட்டி.

கடைசியாக, வாசகர்களுக்கான போட்டி!

சிறந்த விமர்சனம், மீம் மற்றும் கமெண்ட் என்ற மூன்று போட்டிகள் வாசகர்களுக்காக தளத்தில் நடைபெறும்.

தொடர்ந்து அதில் பங்குபெற்று, எழுத்தாளரை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.

இவை இல்லாமல் வாசகர்களுக்கான பிற போட்டிகள் போட்டியின் தொடக்க நாள் அன்று அறிவிக்க படும்.

தொடர்புக்கு..
vaigaitamilnovels@gmail.com (or)
வதனி

நன்றி

வைகை தளம்
 

Attachments

  • WhatsApp Image 2023-07-17 at 1.47.42 PM.jpeg
    WhatsApp Image 2023-07-17 at 1.47.42 PM.jpeg
    169.7 KB · Views: 46

chitrasaraswathi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 24, 2021
33
8
18
Coimbatore
கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்