• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கருவறை தொட்ட காதல்

Hariuma

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
25
10
3
Nagapatinam
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழீஸ்வரர் என அழைக்கப்படும் ,"கங்கைகொண்டசோழபுரம்" இந்த கோவிலின் அழகே" கட்டிட கலை" தான். முழுவதும் பாராங்கற்களாலான கோவில் .

இந்த கோவிலை விரும்பாதவர்களே கிடையாது எனலாம். அத்தகைய வகையில் இந்த கோவிலின் சிறப்புகளை பற்றி கேள்விப்பட்டு பல ரசனையோடு சுற்றி பார்க்க வந்திருக்கிறார்கள் "ஜானகி". " ரம்யா". இவர்கள் இருவரும் "வான்முகில் பத்திரிகை நிறுவனத்தில் "நிருபராக பணிபுரிபவர்கள்.அதோடு இருவரும் ‌ நெருங்கிய தோழிகள்.

இதுபோன்று பல கட்டிடக் கலைகளை புகைப்படம் எடுத்து அதைப்பற்றி, நுணுக்கமாக கட்டுரை எழுதுவது தான் இவர்களின் வேலை. மேலும்., சிறந்த பல செய்தி துணுக்குகளையும் தந்துவிடுவார்கள் .அதுபோன்று வார இதழுக்காக ஒரு செய்தித் துணுக்கு எடுக்கவே இப்பொழுது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.


சுற்றுப்புறத்தில், உள்ள மதிலில் அழகிய கற்சிலைகளை, "ரம்யா" தொட்டுப் பார்த்து பிரமிப்போடு ரசித்துக் கொண்டிருக்கிறாள்., அவளின், அருகில் வந்த "ஜானு" ரம்யாவின், வலது தோளினை தட்டி ,

ஹே.... ரம்யா ..! அங்க பாரேன்... என பிரமிப்போடு" ஜானு" தனது கையை நீட்டிடவே, எந்தவித எதிர்பார்ப்புமின்றி அலட்சியமாக திரும்பிப் பார்த்தவளின் கண்களுக்கு விருந்தாக இருப்பதுபோல், அந்த இடத்தில் துளியளவும் "அவள் எதிர்பார்க்காத அழகிய பதுமை" சிலையின் அருகில் சிலையாய் அமர்ந்து, ஏதோ எழுதிக் கொண்டிருக்க அவளையே இமையசைக்காது "ரம்யா " பார்த்திருக்க,

ஜானுவும் அருகில் வந்து ரம்யாவை தட்டி அவங்க " மது" தானே என்க.ரம்யாவும் அவளை பார்த்தபடியே தலையை மட்டும் அசைத்திடவே ஜானுவும், ரம்யாவின் கையை பிடித்து இழுத்து, வா நம்ப போய் அவங்க கூட பேசிவிட்டு வருவோம் என்றழைக்கவே அந்த இடத்தை விட்டு நகர்ந்து "மது" நோக்கி செல்கிறார்கள்.

ஒரு நொடியில் ஏதோ சிந்தனையோடு "ஜானு" ஒரு யோசனை தோணுது என்று கூற,
"ரம்யாவும்" சொல்லுடி என்ன யோசனை ?? என்று கேட்க

நம்ப போன தடவை அந்த மதுவை பார்த்த பொழுது நம்பளையும், நம்ப நட்பையும் பார்த்து கண்கலங்கினாளே உனக்கு நினைவிருக்கா?? என்று "ஜானு"கேட்டுவிட,

ஆமாம்..... நினைவிருக்குடி , அதோடு நம்மள மாதிரி நெருக்கமான ஒரு தோழி, அவங்க வாழ்க்கையிலும் இருக்குன்னு சொன்னாங்களே, அதுவும் நினைவிருக்கு என்றிட,

குட் ரம்யா, இப்போ அவங்க கிட்ட பேசும் பொழுது நல்லா உற்று கவனித்துக் கொள், இந்த வாரம் இதழ்ல இவங்க நட்ப பத்தி போடுவோம். சரியா?? என்று" ஜானு" கேட்க ,

வாவ்....இதுவும் நல்ல யோசனை தான்டி.
வா நம்ப முதல்ல அவங்கள பார்த்து பேசிவிட்டு வருவோம் , கிளம்பிட போறாங்க சீக்கிரம் வா என்று‌ விரைந்து" மதுவை" நோக்கி செல்கிறார்கள்.

மதுவின் அருகில் சென்று இருவரும் அமர்ந்து ஹாய்....!" மது" என்றழைக்க மதுவும், நிமிர்ந்து பார்த்து அழகிய புன்னகையோடு" ஹாய்..! என்றிட

என்ன?? மது, எங்களை நினைவிருக்கா உங்களுக்கு என்று ரம்யா கேட்டிட

நல்லாவே நினைவிருக்கு உங்கள் இரண்டு பேரையும், நான் முதல் தடவை பார்த்த பொழுதே மெய்சிலிர்த்துப் போனேன். என் வாழ்நாளில் உங்கள் நட்பை நான் பார்த்து ரசித்து ஏங்கிய அந்த நாளையும், உங்களையும் மறக்க மாட்டேன் என்று கூறுகிறாள்.

நீங்க மட்டும் இல்லை அது எங்களை பார்க்கிற அனைவரும் இப்படித்தான் சொல்லுவாங்க என்று சிரித்தபடியே ஜானு கூறிவிட

சரி... சரி ....இப்படியே பேசிட்டே இருந்தா, எப்படி?? "மது" நீங்க உங்களுக்கு இப்படி ஒரு ப்ரெண்ட் இருக்கான்னு சொன்னீங்களே?? அவங்கள பத்தி உங்க நட்ப பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன் , என்று ரம்யா கேட்கவே

ம்ம்ம்.....கண்டிப்பா சொல்றேன் ரம்யா ,என்று மது கூறி முடிக்கும் முன்பே , "ஜானுவும்" ஆர்வமாக சொல்லுங்க... சொல்லுங்க... சீக்கிரமா சொல்லுங்க ...அதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தோம் என்க

சிரித்தபடியே...," மது" என் உயிர் தோழி அவள் பெயர் "மித்ரா" அவளுக்கு சொந்த ஊர் "இலங்கை." நல்ல திறமையான எழுத்தாளர் கதை எழுதுகிறது , படிக்கிறதுன்னா போதும் சாப்பாடு தூக்கம் கூட வேண்டாம் அவளுக்கு அத்தனை இஷ்டம் கதையின் மீது , என்று கூறிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்த ரம்யா ஒரு நிமிஷம்," மது "அவங்க இலங்கை சொல்றீங்க ?? நீங்களும் இலங்கையா?? எப்படி உங்களுக்குள் பழக்கம் அதை பத்தி சொல்லுங்க என்று விரிவாய் கேட்கிறாள்‌.

நான் இலங்கை கிடையாதுமா, இந்தியாதான் சமூக வலைத்தளம் மூலம் அவளோடு இணைந்தேன். பழகிய ஒரே நாளில் இருவரும் ஒட்டி கொண்டோம் .

இன்று தான் நாங்க பேசி பழகி காதலித்த நாள் எங்கள் காதல் பிறந்தநாள் "ஜூலை 27 , 2020" ஒரு வருடம் முடிந்து, இன்று முதலாவது ஆன்வர்சரி என்று ஆனந்தமாய் கூறவே.

அதனைக் கேட்ட "ஜானுவும்" அதிவேகமாக என்னது காதலா??? உங்க தோழியின் பெயர் மித்ரா தானே சொன்னீங்க, அவங்க பொண்ணு தானே என்று சந்தேகமாக ஒரு குழப்பத்தோடு கேட்டிடவே

மெதுவாகத் தலையை அசைத்துக் கொண்டே "மதுவும்" ஆமாம்....! அவள் பெயர்" மித்ரா "தான். பொண்ணு தான் நாங்க முதன் முதலில் ஒரு "புலன" குழுவிலே தான் பேசத் தொடங்கினோம். அந்த குழுவில் உள்ள மற்ற நண்பர்கள் எல்லாம் நாங்கள் பேசுவதை பார்த்து கணவன்-மனைவி காதலர்கள் போல் கொஞ்சுகிறீர்கள் என கிண்டலாக பேசவே நாளடைவில் அதுவே எங்களுக்குள் பழகிவிட்டது தினமும் காலை எழுந்ததும், அவள் கண் திறந்ததும் முதலில் தேடுவது என்னைத்தான், என் நெற்றியில் முத்தமிட்டு விட்டு தான் அடுத்த வேலையை தொடங்கிடுவாள்.

நொடிக்கு ஒரு தரம் போன் செய்துக்கொள்வோம், முகத்தை பார்த்தபடியே பேசிக்கொள்வோம் நாள் ஒன்றுக்கு பத்துமுறை பேசினாள் எட்டுமுறை சண்டையிட்டு விடுவோம் என்று கூற

"வாவ் சாம்திங் டிஃபரண்ட்" நீங்க சொல்றதைப் பார்த்தா உண்மையாவே அந்த மித்ரா, பையனா பொண்ணா எனக்கு சந்தேகம் வருதுபா, ஒழுங்கா உண்மையை சொல்லிடுங்க என்று விளையாட்டாய் கேட்க

நீங்கள் மட்டும் இல்ல ஜானு நிறைய பேர் கேட்பாங்க என்கிட்ட, ‌இத்தனைக்கும் மேல் அவளுடன் குறுஞ்செய்தியில் பேசிக்கொள்வதை பார்க்கும் பொழுது என் கணவருக்கு கூட சற்று கோபம் வந்துவிடும் .என்னைவிட அவள் பெரிதா என்ற கேள்வியும் அவரிடம் எழுந்து விடும்

நானும் என் மித்ராவும் நிறைய பேசிக்கொள்வோம். தாயிடம் கூற முடியாத விஷயங்களைக்கூட நாங்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வோம். தோழின்னா இப்படித்தான் இருக்கணும்னு இல்லாமல், இப்படியும் இருக்கலாம் என்பதுபோல் பழகிக்கொள்வோம். அவளோட குறும்புத்தனம் தான் எனக்கு நிறைய ஆறுதல் தரும். அவளுடன் பேசிட்டு இருக்கும்போது , என்னையே நான் மறந்து விடுவேன் . இன்னும் சொல்ல போனா, என்னை சுத்தி நடக்கிற எதுவும் எனக்குத் தெரியாது. அவள் தான் என்னோட உலகமே , அவ தான் என்னோட சந்தோஷம் அவதான்.அதேபோலவே அவகிட்ட போய் உன்னோட சந்தோஷம் யாருன்னு கேட்டா " மது" தான் சொல்லுவா, உன்னோட உயிர் யாருன்னு கேட்டா புஜ்ஜி சொல்லுவா ,

இடையில் புகுந்த ரம்யா ஒரு நிமிஷம் அது யாருப்பா?? இந்த "புஜ்ஜி" இடையில வந்தாங்க, யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ?? என்றிட,
ம்ம்ம்.... அவ எனக்கு வச்ச "செல்லப் பெயர் புஜ்ஜி" "புஜ்ஜி , டார்லு, டார்லும்மா, கண்ணுகுட்டி, பட்டு குட்டி , தங்கு, தங்கமணி.... இப்படி இன்னும் பல பேர் சொல்லி கொஞ்சிப்போம்.

என் மித்ரா கூட பழகுன அளவுக்கு , நான் யார்கிட்டயும் மனசார மனசு திறந்து பேசி பழகவில்லை . அவன் எங்கேயோ இருக்க, நான் எங்கேயோ இருக்க , எங்களுக்குள் இப்படி ஒரு புனிதமான நட்பு கொடுத்த கடவுளுக்கு ரொம்ப நன்றி ......! சொல்வேன் .

ஆனால் , அந்த கடவுள் மேல கோபமும் வருது இப்படி அழகா ஆழமா உண்ணதமா ஒரு காதலை தந்த கடவுள் , பாதியிலே என் கிட்டயிருந்து , பிரித்து விட்டாரென்று. அடிக்கடி சாமி கிட்ட சண்டை போடுவேன்.

இதனைக் கேட்டு அதிர்ந்த "ஜானு" என்னது பிரிவா??? ஒண்ணுமே புரியலையே, புரியிற மாதிரி தெளிவா சொல்லுங்க என்றிட

இல்லை .... இல்லை ...மா , பிரியல அவ என் கூட தான் இருக்கா.. எப்பவும் என் கூடவே தான் இருப்பாள். என்னோட உயிர் மூச்சு உள்ளவரை. சந்தர்ப்ப சூழ்நிலை , நாங்கள் பேசிக்கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கின்றோம்‌.
பேசிக்கொள்ள முடியவில்லை மட்டும் தான், ஆனால் அவளின் மனமெங்கும் நானும் என் மனமெங்கும் அவளும் நிறைந்து கிடக்கின்றோம்..

மீண்டும் எங்களுக்குள் பழைய காலம் வந்துவிடாதா பழைய மாதிரி பேசிக்கொள்ள மாட்டோமா?? அவளை கட்டிக்க மாட்டோமா?? முத்தம் மிட மாட்டோமா?? என பலமுறை மனசு தவிக்குது.தினம் ...தினம் ...அவளையே தேடி , தேடி மனசு தவிக்குது என்றவளிடம், ஏன்?? என்னாச்சு?? ஏன்?? பேசகொள்ள முடியவில்லை, அதற்கு காரணம் சொல்லுங்க மது என்றே "ரம்யா" கேட்டிட,

சாரி..... "ரம்யா"..! அது எங்க பர்சனல் பிறகு சொல்றேன் என்றிட , எப்படி மது?? பேசாமா இருக்கீங்க?? நொடிக்கு ஒரு தரம் போன் செய்ற நீங்க என்று "ஜானு" கேள்வி எழுப்பிட,

ம்ம்ம்....நான் ஒரு" unlucky fellow" ன்னு சொல்லலாம் ஜானு . கிடைத்த பொக்கிஷத்தை பாதியிலே தொலைத்து விட்டேன் , ஏதாவது ஒரு மனகஷ்டம் வந்தா ஓடிப்போய் அவ கிட்ட தான் முதல்ல சொல்லுவேன் இன்னிக்கி அவகிட்டயும் எதையுமே சொல்ல முடியல ரொம்ப தனிமையும், வெறுமையாவும் இருக்க மாதிரி இருக்கு .

இந்த சூழ்நிலையில எனக்கு அவ வேணும்கிறத, விட அவளுக்கு நான் வேணும்கிறது தான் நிதர்சனமான உண்மை. நான் எந்த அளவு அவளை நேசிக்கிறேன்னோ,அதையும் தாண்டி அவளும் என்னை நேசிக்கிறாள். அவ என்கிட்ட வரனுங்கிறதை விட நான் அவகிட்ட போயிறனும். இது ஒன்னு மட்டும் நடந்தால் போதும் ரொம்ப ரொம்ப ,ரொம்ப சந்தோஷமா இருப்பேன்.

எங்க நட்பு இணைந்த " நூறாவது நாள்" கூட நாங்கள் ரொம்ப சந்தோஷமா கொண்டாடினோம். ஆனால் இன்னிக்கி "முதலாமாண்டு அனிவர்சரி " எங்க லவ்க்கு பார்த்துடே,எங்களால் இணைந்து கொண்டாட முடியல . அவ ஒரு மூலையில் இருக்க, நான் ஒரு மூலையில் இருக்கேன் என்று கலங்கிய கண்களோடு மது கூறிவிட , "மது" வின் கைகளை பற்றிக்கொண்ட" ரம்யா" ஏன் ??? கண் கலக்குறீங்க உங்க மித்ரா கிட்ட சீக்கிரம் நீங்க போய்டுவிங்க , ஹாப்பியா லவ் பண்ணுவிங்க நாங்களும் அந்த கடவுள் கிட்ட வேண்டுகிறோம் பீல் பண்ணாதீங்க என்று கூறவே

உடனே ரம்யாவை பார்த்து "மது" உங்ககிட்ட நான் ஒரு கேள்வி கேட்க வா??

கேளுங்க மது என்று அவளும் கூறவே

நீங்களும் "ஜானுவும்" எத்தனை வருடமா?? ஃப்ரெண்ட்ஸ் என்றிட
இப்போது, இரண்டு வருடமா நான் பிரண்ட்ஸ் உங்கள மாதிரி தான் நாங்களும் , எங்களுக்குள்ளும் நிறைய அன்பு ,எல்லை மீறிய பாசம் எங்கு போனாலும் சேர்ந்து தான் போவோம் சேர்ந்துதான் வருவோம் ,ஒரே மாதிரி டிரஸ் பண்ணி போம், எனக்கு கிடைச்ச பொக்கிஷம் இவதான் என்று ஜானுவின் கரங்களை இறுக்கி பிடித்து கொண்டாள்.


அதெல்லாம், சரிதான்....! ரம்யா இப்போ உங்க நட்பு உங்க தோழி ஜானுவ உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்னு கேட்டா?? என்ன சொல்லுவீங்க என்றிட

இது என்ன கேள்வி என்னைவிட எனக்கு அவளை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன் என்கிறாள்.

இதுவே நீங்க என்னோட மித்ரா கிட்ட போயி உன்னோட பூஜ்ஜிய உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு கேட்டா??என்னோட உயிரே அவதான் எல்லாமே என்னுடைய மொத்தமும் அவள் தான்னு சொல்லுவா. இப்படிதான் அவளை மீறி அந்த பாசத்தையும் என் மேல கொட்டுவா,எனக்கு அவகிட்ட பிடிச்சதே அவ என்னை லவ் பன்ற ஸ்டைல் தான்.என்க

என்னது?? லவ் பன்ற ஸ்டைலா?? அது என்ன ஸ்டைல் என "ஜானு" கேட்க

சிரித்துக் கொண்டே மது அவ என்னோட ராட்ஷசி எப்ப பார்த்தாலும் சண்டை போடுவா, கோபம் வந்துட்டா அவ்வளவு தான் அவ வாயில வர வார்த்தைகளை கேட்டிட முடியாது. கேவலமா பேசிப்போம் ஆனால் எவ்வளவு சண்டை போட்டாலும் நைட் தூங்கும் போது சமாதானமாகி கட்டிபிடித்து , கிஸ் பன்னிட்டு தான் தூங்குவோம்.என்றிட

நிஜமாவே உங்கள் இரண்டு பேரையும் பார்த்தா எங்கள் நட்பு கம்மி தான் போல .சண்டை போட்டா ஒரு வாரம் கூட பேசாமலே இருப்போம் இனிமே நீங்க சொன்ன மாதிரி அன்னிக்கே பேசிவிட வேண்டும். நாங்களும் உங்களை போலவே இருக்க போகிறோம் என்று ரம்யா கூற

வேண்டாம் ரம்யா.... நீங்க நீங்களாவே இருங்க நம்ப யாரை நேசிக்கிறோமோ, அவங்க கிட்ட சின்னதா பிரிவு வந்தா அத ஏத்துக்கிற மனப்பக்குவம் வேண்டும். எங்க இரண்டு பேர் கிட்டயும் அது இல்லை. எங்களால எங்களை பிரிஞ்சு இருக்க முடியல. காரணம் அளவுக்கு மீறிய பாசம் . நீங்க நீங்களாவே இருங்கள் என்னிக்குமே நாங்கள் நாங்க மட்டும்தான் எங்களைப்போல யாரும் இல்லை என்று கூறிடவே

இப்போது.. புரியுது," மது" எனக்கு உங்கள் ஆழமான நட்பு . சரி நாங்க வரும்போது ஏதும் எழுதிக்கிட்டு இருந்தீங்களே அது என்னது என்று கேட்க

அதுவா அது என் செல்ல குட்டிக்கு நான் எழுதிய கவிதை என்றிட

கவிதையா??? எங்க வாசிங்க பார்கலாம் உங்க செல்லக்குட்டி கவிதையை என்று ஜானு கேட்க

சரி..... என்று "மதுவும் கவிதையை வாசிக்கிறாள்"....

"அவளின் கை பிடிக்கவில்லை
உலகம் சுற்றி காட்டி விட்டாள்,

அவளின் தோல் சாயவில்லை
பல நேரங்களில் ஆறுதல் தந்து விட்டாள் ,

அவளின் மடி சாய வில்லை
அன்னையாய் அரவணைத்துக் கொள்வாள்,

அதிகாலையிலேயே அழகாய்
நெற்றியில் முத்தமிட்டு எழுப்பி விடுவாள் ,

தாயாக மாறி உணவு ஊட்டி விடுவாள் ,

தோழியாய் கவலைகளைத் தீர்த்து விடுவாள்,

காதலியாய் நேசித்திடுவாள்,

குறும்பாக சேட்டை செய்திடுவாள்,

பிள்ளையாய் கொஞ்சிடுவாள்,

ராட்ஷசியாக சண்டையிடுவாள்,

திடீரென்று தொலைந்து விடுவாள்,

நித்தமும் என்னை தேட வைத்துவிடுவாள்,

அவளை என்னில் பார்த்திடுவாள்,

மையிட்ட கண்களிலே ஈர்த்திடுவாள்,

இரட்டை ஜடை பின்னலிலே கவர்ந்திடுவாள் ,

கோபம் என்னை மூடிக் கொள்ளும் போதே காதலால் எண்ணில் அரங்கேறிடுவாள் ,

தூரத்தில் இருந்து கட்டிக் கொள்வாள்,

எச்சில் படாமல் முத்தம் பதிப்பாள்,

துரத்தித் , துரத்தி அடித்து விடுவாள் ,

உரிமையாய் எல்லைமீறிவிடுவாள்,

உயிராய் காதல் செய்திடுவாள்
என் உயிரானவள் ....

அவளுக்கு நிகரில்லை என் உலகில்....!

கவிதை ரொம்ப அழகா இருக்கு மது , ஆனால் ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கு பக்கத்துல இருந்து , ஒன்னா இருக்கிறவங்க கூட இவ்வளவு நேசிக்கலயே, தூரத்துல இருந்து நீங்க இவ்வளவு நெருக்கமா இத்தனை நட்பா இருக்கீங்கன்னு நினைக்கும் போது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு, நீங்க சொல்ற மாதிரி இந்த உறவுக்கு என்ன பெயர் வைக்கிறது எனக்கும் தெரியல நீங்க காதல்னு நினைச்சா காதல் ,
நட்பு நினைச்சா நட்பு, உங்களோட காதல் புரிந்தவர்களுக்கு புனிதம் புரியாதவர்களுக்கு அமிலம்.

இந்த வாரம், எங்களோட "மெகஸின்ல" உங்களோட நட்பை பத்தி எழுத போறேன் "மதுமித்ராவின் கருவறை தொட்ட காதல் "என்ற தலைப்பில் எழுதப் போறேன்.

உண்மையில் ஒரு ஆணும் பொண்ணும் நேசிச்சா கூட இவ்வளவு நெருக்கம் இருக்காது. ஒரு ஆண் பெண்ணும் நேசிக்குக்கும்போது அவங்களோட காதலின் இதயத்தை மட்டும் தான் நாம் தொட முடியும் ஆனால் உங்களோட காதல் உங்களோட கருவறையை தொட்டுவிட்டது...! உங்களுக்கு தாயா அவளும் அவளுக்கு தாயா நீங்களும் இருக்கிற ,இந்த காதலும் என்றுமே புனிதமானது தான். உங்களை சந்தித்ததில் ரொம்பவும் சந்தோஷம் "மது " ....!!

நாங்க கிளம்புரோம்....பைய் என்று அங்கிருந்து வெளியேறினார்கள்..

சுபம்....!!!!