• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கருவூரான் க. கார்த்திக் - வலிக்குது அம்மா..

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
வலிக்குது அம்மா....

அந்த சம்பவம் நடந்து சில நாட்கள் இருக்கும். இன்று அதை நினைத்தாலும் கண்களில் ரத்தக்கண்ணீரின் வெள்ளோட்டமும், என் உடல் நடுக்கமும் ஏற்படுகிறது. என் நா வார்த்தையால் தடுமாறுகிறது. நரம்புகள் பின்னி பிணைக்கின்றன. ஏன்? என்ன நடந்தது அப்பிடி? வாருங்கள் என்னுடன் சேர்ந்து இக்கதையில் பயணிக்கலாம் அப்பொழுது புரியும் உங்களுக்கே...

எங்கள் தெரு மிகவும் குறுகியது.ஒத்தையடிப்பாதை என்று கூறுவார்களே அதுபோலத்தான். தீப்பெட்டிகள் போல குடியிருப்புகள். கூலி தொழிலாளி மக்கள். அந்தக்கூட்டத்தில் சில குள்ளநரிகளும் இருந்தனர். அதில் 100 வீடுகளும், 400க்கும் மேற்பட்ட மக்களும் உள்ளனர். அதில் என் வீட்டின் அருகில் ரோசாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையும், வறுமையும் நிறைந்தது. பசியில் வாடும் பச்சிளம் குழந்தைகளுடன் கிடைத்த வேலையை செய்து கொண்டு வந்தனர் கந்தனும் ,கருத்தம்மாளும். இவர்களுக்கு 3 குழந்தைகள் ராமு, சோமு இன்னும் ஒரு அழகிய தேவதை தான் ரோசா. அண்ணன்களில் ராமு 5வது, சோமு 4வதும் படித்து வருகிறார்கள். ரோசாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். 2வது படிக்கும் 7வயது குழந்தைதான். ஆனால் வெண்மதியும் தோற்று போகும் அவள் முகமதியில், அவளின் புன்னகை முன்னால் பூக்களும் வாடி போகும், பால்மணம் மாறாத பச்சிளம் பிள்ளை அவள் தேவதைதான்..

என் எதிர் வீட்டு நண்பன் கருப்பன். அவன் பெயருக்கு ஏற்றார் போல தோற்றமும் உருவமும் கொண்டவன். அவனுக்கும் திருமணமாகி ஆகி 5 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.அவள் பெயர் ஆஸா.அவன் மனைவி பெயர் கமலி. அவனும் நானும் எப்பொழுதும் கந்தன் குடும்பத்தின் மீது இரக்கம் கொண்டவர்கள். பாவம் அந்த பிஞ்சு குழந்தைகளுக்காகதான், அவர்களுக்கு அடிக்கடி தின்பண்டங்கள் வாங்கி தருவோம். ரோசாவும் மாமா என்று எங்களுக்கு புன்னகையின் இனிப்பு முத்தம் தருவாள். அவளின் அன்பு முத்தம் கடவுள் தந்த பரிசு தான் எனக்கு.

கந்தன் கூலி வேலைக்கு செல்பவன். கருத்தம்மாளோ பத்துபாத்திரம் தேய்த்து பிழைப்பவள். பாவம் அன்றாட கூலிகள். அவர்கள் வீட்டில் பசிக்கும் பஞ்சத்திற்க்கும் என்றுமே பஞ்சம் இல்லை.

உடல் நிலை பிரச்சனைகளால் 10 நாள் வேலைக்கு செல்லாமல் இருந்தனர். பாவம் பணகஷ்டம் அவர்களை வாட்டியது.அந்த உடல் நிலையிலும் அவர்களுக்கு

அன்று காலையில் வேலை வந்தது சரி செல்வோம் என்று புறப்பட தயாரானார்கள். .வீட்டில் இருந்த கடைசி படி அரிசியையும் பிள்ளைகளுக்கு சமைத்து வைத்து விட்டு, வீட்டின் வேலைகள் எல்லாம் முடித்த பிறகு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். காலில் காலணி கூட இல்லமால் அந்த வெயிலில் நடந்து சென்றனர். அன்று

குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் மூவரும் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது நான் பார்த்த அந்த முகமும் அப்பழுக்கற்ற தேகமும் தான், இப்பொழுது ஏன் இப்பிடி இருக்கிறது என்று அறியாமல் இருக்கிறேன் . சரி ஏதோ உடல் நிலை சரியில்லை போல என்று எண்ணவும் தோன்றவில்லை .

வழக்கம் போல அன்று நான் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் வீட்டின் பக்கத்து வீட்டு சின்னச்சிறுமி எதிரில் கிழிந்த ஆடையுடனும், உடலில் காயங்கள், தடிப்புகள், உதட்டின் ஓரத்தில் உறையாமல் இருந்த ரத்தம், கீழாடை பாவாடை முழுதும் ரத்த கறைகள், நன்கு உற்று பார்த்தேன் அப்பொழுது தான் தெரிந்தது அவள் நம் பக்கத்து வீட்டு ரோசா என்று. அவள் அருகில் சென்று என்ன ஆச்சு என்று கேட்டேன் அவள் பதில் கூறாமல் என்னை ஒரு ஏக்க பார்வை பார்த்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளின் பின்னாலயே சென்று வீட்டை சென்று அடைந்தோம். அவள் தள்ளாடி தள்ளாடியே நடந்து சென்றாள். சென்றதுமே படுத்து உறங்கி விட்டாள் போல ரோசா..



(இரவு பொழுது வந்தது )

சரி,இரவு பொழுதில் அவர்களின் வீட்டிற்க்கு சென்று இரவல் வாங்கலாம் என அவர்களின் வீட்டுக்கு சென்று அப்பிடியே ரோசாவிற்கு என்ன ஆயிற்று என்று பார்க்கலாம் என சென்றேன். அப்போது தான் ரோசாவின் அம்மாவும் வீட்டிற்க்கு வந்தார் போல, ரோசாவினை பார்த்த உடன் என்ன ஆச்சு என்றார் உடம்பு வலி என்றால் ரோசா. உடனே அம்மா பார்த்தார் காய்ச்சல் அடித்தது உடலில் தடிப்புகள் காயங்கள் என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று அழுது கொண்டே மேலும் கிழும் பார்த்து கொண்டே பாவாடையை பார்த்தார் ரத்தக்கறைகள் ஐயோ கண்ணீர் ஆறு, இடியை மிஞ்சும் தாயின் கர்ஜனை கதறல், கொட்டிவிட்டார் என்ன ஆனது என்று புரிந்து கொண்ட தாயின் கதறல் காண்போரை கட்டி போட்டுவிடும் கண்ணீர் துளிகளில்..

நான் வாசலின் ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த பொழுது தான் அந்த வலியும் வேதனையும் ஏன் என்று அறிந்தேன்.

அம்மா எப்பிடி எப்பிடி என்ன ஆனது என்று கேட்கையில் அந்த பிஞ்சு நெஞ்சத்தின் இலவம் பூ இதழ்கள் கதைக்க தொடங்கியது. நான் வீட்டு திண்ணையில் நின்று உளவாளி போல கேட்டு கொண்டிருந்தேன்.



பிஞ்சு தொடங்கியது :-நான் வீட்டுக்கு முன் விளையாடிடு இருந்தேன். ரொம்ப நேரம் அண்ணா கூட ஜாலியா சிருச்சு, சிருச்சு விளையாடிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் விளையாடியதால் பசி ரொம்ப எடுத்ததுச்சு, அப்போ மாமா வந்தார். உனக்கு மிட்டாய், சாக்லேட், பிரியாணி வாங்கித்தரேன் வா என்று சொன்னார். நான் வேணான்னு சொன்னே, வா ரோசா, மாமா தானே கூப்புடுறேன் வா என்றார். சரி நானும் ஐயா ஜாலி என்று அவரின் வண்டியில் ஏறி உக்கார்ந்தேன் அப்போ அவரு ஏங்கயோ யாரும் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போனாரு நான் பசிக்குதுனு சொன்னே அவரு ஒரு ரொட்டி வாங்கித்தந்தார். நான் அத சாப்பிட்டேன். அப்புறம் மாமா ஒரு மாடில யாரும் இல்லை அங்க கூட்டிட்டு போனாரு. அங்க போய்ட்டு என்னய என்ன என்னமோ பண்ணாரு. நா விடுங்க விடுங்க சொன்னே ஆன அவரு விடல என்ன கட்டிபுடிச்சி, உடம்பு எல்லாம் கடுச்சு வச்சு, என் வாய பொத்தி, என்னமோ பண்ணாரு, எனக்கு வலிச்சது, கத்துனே, ரத்தம் வந்துச்சு அப்போவும் விடல என்ன அவரு என்றாள் ரோசா.. அதை கேட்ட உடனே கதறிய தாய் பாவம் எனக்கே அழுகை வந்து விட்டது. பாவம் அது என்ன என்று கூட அறியாத வயது.

தாயின் அழுகையுடனே ரோசா கேட்டாள் :



ஏன் அம்மா அவரு என்ன யாரும் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போனாரு?

ஏன் அம்மா அவரு என் டிரஸ் எல்லாம் கிழிச்சாறு?

ஏன் அம்மா அவரு என்ன உடம்பு எல்லாம் கடுச்சாரு? ஏன் எனக்கு உடம்பு எல்லாம் வலிக்குது?

ஏன் அம்மா எனக்கு ரத்தம் வருது? எனக்கு வலிக்குதுனு சொன்னே ஆனா என்று ரோசா சொல்வதற்குள் அவள் வாயில் கையை வைத்து போதும் ரோசா போதும் என்று கருத்தம்மாளின் கதறலுடன், யார் யாருனு கேட்க வலிவோட இருந்த ரோசா அழுதுகிட்டே சொல்லாம படுத்துவிட்டாள். ஒரு பெண்ணின் தாய் என்ற நிலையில் என்னை நிறுத்தி அந்த வலியை புரியசெய்தது..

பதில் என்ன கூறுவது என்று அந்த தாயின் கதறல்.. வெளியில் நின்ற என் கண்களில் ரோசாவின் ரத்தமும் அந்த தாயின் கண்ணீரும் சேர்ந்து ரத்தக்கண்ணீர் வடிந்தது.

அந்த பிஞ்சு நெஞ்சுருக கதறிய கதறலலிலும் அவள் கேட்ட கேள்விகளுக்கு அழுது கொண்டே இருந்தது அவள் அம்மா மட்டுமல்ல.. அன்று இரவு முழுவதும் நானும் தான்....

மறுநாள் காலை ரோசாவை பார்க்க சென்றேன். கருத்தம்மாள் என்னை தம்பி ரோசாவை பார்த்து கொள்ளுங்கள் என்றார், நான் சரிங்க அம்மா என்றேன். அப்போது யாரும் இல்லை, நான் ரோசாவிடம் கேட்டேன் :ரோசா நேத்து நீ அம்மா கிட்ட சொன்னத கேட்டு எனக்கு ராத்திரி எல்லாம் தூக்கமே இல்ல அழுதுடே இருந்தேன், அந்த மாமா யாருனு என்கூட சொல்லு ரோசா நான் அவங்கள அடிச்சு உன் கிட்ட மன்னிப்பு கேக்க வைக்குறேனு கேட்டேன்.. அப்பொழுது அவள் மீண்டும் ஒரு பார்வை பார்த்தாள்... அந்த பார்வை நெருப்பில் என்னை உருகவைத்தது போல இருந்தது.. அவளால் பேசவே முடியவில்லை... அழுதாள்.. நான் சரி ரோசம்மா நீ தூங்கு என்று கூறிவிட்டு கிளம்பி என் நண்பன் கருப்பன் வீட்டிற்கு சென்றேன்..

நான் அவன் வீட்டிற்கு செல்லும் போதே அவன் பதற்றமாக இருந்தான். ஆஷா ஓடி வந்து அப்பா என்று அவன் மீது பாய்கையில் அவன் ஐயோ !!ஐயோ !! என்று அவன் ஆஷாவை தள்ளிவிட்டான். அப்பொழுதே எனக்கு மனதில் ஏதோ ஒன்று தோன்றியது..கமலி எதிரில் வந்தாள். அவள் என்னிடம் :அவர் சரியில்ல அண்ணா, ஆஷாவை கண்டாலே தள்ளி தள்ளி செல்கிறார். தனியாக உக்காந்து கொள்கிறார். ஆஷாவை தொட்டு தூக்கவே ஏதோ பயந்து சாகுகிறார் என்று கூறி கமலி வரேன் அண்ணா என்று கிளம்ப, எனக்கு ஏன் கருப்பன் அந்த மாரி நடந்து கொண்டான் என புரிந்து விட்டது..

அப்பொழுது அவன் எதிரில் வந்தான் நான் அழுதுகொண்டே மனதிற்குள் கோவமுடன் கூறினேன் ஏன்டா இப்புடி செய்த என்று?? , பதட்டமாக அழுது கொண்டே என் காலில் விழுந்து மன்னித்து கொள்ளுடா நான் தான் நான்தான் என்றான்.. என் கோவம் அவனை எரிமலையாய் எரித்தது.



நான் சில வார்த்தை அவனிடம் கூறினேன் ரோசாவை நீ பார்க்கையில், தூக்குகையில், முத்தம் கொடுக்கையில் ஆஷாவை போல தான் அவளை நினைத்து இருப்பாய் என்று எண்ணினேன்.ஆனால்.... அந்த வார்த்தையை என்னால் கூற முடியவில்லை. பாவம்டா அந்த பிஞ்சு பசியில் இருந்த அவளை உன் காமப்பசிக்கு தீனியாக்கிவிட்டாய் என்றேன். அவள் அழுகை, கண்ணீர், ரத்தத்தில் நீ நினைக்கவில்லையா?? ஐயோ நம் மகள் ஆஷாவும், இவள்தான் என்று கூறி கொண்டு இருக்கையிலே ஆஷா வந்தாள் அப்பா என்று, அப்பொழுது கருப்பனிடம் கூறினேன் நீ செய்த இந்த பாவத்திற்கு இனி வாழ்நாளெல்லாம் ஆஷாவை தொடவே யோசிப்பாய், அவளை பார்க்கையில் உனக்கு ரோசாவின் நினைவுதான் வரும் இதான் உமக்கு தண்டனை. பெற்ற மகளே இனி உனக்கு..... என்று அந்த வார்த்தை கூறாமல் ஆஷாவை பார்த்து இருடா பாப்பா என்று கூறி கிளம்பிட்டேன்..

அப்பொழுது அறிந்தேன் பல ஆண்களின் வேடத்தில் இருக்கும் ஒரு வெறிநாய் ஒன்று

அழகு ரோசாவின் மீது தான் நம்பிய முள் ஒன்றே அவளின் இதழை கிழித்தது..நான் முடிவு எடுத்தேன் இனி ரோசாவிற்கு நான் மாமாவாக இல்லை ஒரு தாயாகவும் மாற எண்ணினேன் அதற்கு காரணம் ரோசாவின் அந்த பார்வையும்,

அவளின் விழிகளில் இருந்து வடிந்த கண்ணீர் துளிகளுடனும் அவள் யோனியில் வடிந்த உதிரத்தின் வலிகளிலும்.......

(விடை தெரியாமல் இருக்கும் சிறுமியர்களின் பாலியல் கொடுமைகளுக்கு இக்கதை சமர்ப்பணம் )

***

நன்றி.
 
  • Like
Reactions: Karthik