• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் களவாணி பாகம் 3

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
287
111
43
Maduravoyal
காதல் களவாணி
பாகம் 3

1000085575.jpg


லலிதா வீட்டிற்கு சென்ற பிறகு,
கீதாவும் ரோகிணியும் மெட்டர்னிட்டி வார்டுக்கு சென்றனர்.

அபிராமியும் அபிநயாவும் ஜென்ரல் வார்டு நர்ஸ் ஸ்டேஷனில் அமர்ந்து பேஷன்ட் லிஸ்ட்டை செக் செய்து கொண்டிருந்தனர்.

"எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே? "
என்றாள் அபிராமி.

"என்ன ஹெல்ப் வேணும் சொல்லுங்க? "

" ஹாஸ்பிடலுக்கு பக்கத்துல எதாவது வீடு வாடகைக்கு கிடைக்குமா? "

"என்னோட பக்கத்து வீடு காலியா தான் இருக்கு. ஹவுஸ் ஓனர் மாலா அக்கா, அவங்களுக்கு ஹஸ்பண்ட் கிடையாது. அவங்க பையனும் வெளிநாட்டுல இருக்கான். இந்த வீட்டு வாடகை எல்லாம் வாங்கி தான் அவங்க காலத்தை ஓட்டுறாங்க.

ரெண்டு நாள் முன்னாடி தான் ஒரு ஃபேமிலி காலி பண்ணாங்க. வீடு காலியா தான் இருக்கு. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் என் வீடு இருக்கு"

" ஓ சூப்பர் அவங்களோட ஃபோன் நம்பர் தர முடியுமா? "

" மாலா அக்காவோட ஃபோன் நம்பர் என்கிட்ட இருக்கு. ஆனா அவங்க வீடு வாடகை விட்றதா இருந்தா, அவங்க பையன் கிட்ட பேச சொல்லிட்டு தான் விடுவாங்க"

" ஓகே அவங்க பையன் நம்பர் உன் கிட்ட இல்லையா? "

" என்னோட ஹஸ்பண்ட் கிட்ட கேட்டு வாங்கி தரேன். இல்லனா ஈவினிங் டியூட்டி முடிஞ்சு என் கூட வாங்க, நானே உங்களை அங்க கூட்டிக்கிட்டு போறேன். முதல்ல வீடு பாருங்க உங்களுக்கு பிடிச்சிருந்தா அதுக்கு அப்புறமா அவங்க கிட்டயே அவங்க பையன் நம்பர் வாங்கி பேசிக்கலாம் "

" ஓகே தேங்க் யூ சோ மச் அபி "

" இட்ஸ் ஓகே, உங்கள பத்தி சொல்லுங்க "

" என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல அபி,

"என் பெயர் அபிராமி வயது 33,
எனக்கு கல்யாணத்தில் பெருசா விருப்பம் இல்லை. அதனால கல்யாணமே பண்ணிக்கல. என்னோட அப்பா பாலச்சந்தர் வயது 59. பேங்கில் வேலை செய்து ரிட்டயர் ஆகிவிட்டார்.

என்னோட அம்மா சகுந்தலா. கோயம்புத்தூர் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு 46 வயசு இருக்கும்போது ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. வேலையில் இருக்கும் பொழுது இறந்து விடவே அந்த வேலை எனக்கு கிடைத்தது. நான் ஃபார்மசி டிகிரி படித்ததால் எனக்கு அங்கேயே நர்ஸ் வேலை கிடைத்தது.

எனக்கு ஒரே தம்பி அரங்கநாதன் வயது 28, லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான். அவன் மனைவி பாத்திமா வயது 26
அவனோட குழந்தை வசீனா வயது 4.

என்னுடைய அப்பாவுக்கு என் தம்பி பண்ண லவ் மேரேஜ் பிடிக்காததுனால அவனை வீட்டுல சேர்த்துக்கல. அடிக்கடி என்னை ஹாஸ்பிடலுக்கு வந்து பார்த்துட்டு போவான், நானும் அடிக்கடி அவனோட வீட்டுக்கு போயி எல்லாரையும் பார்த்துட்டு வருவேன்.

இப்போ என்னோட அப்பாவுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்றதுக்காக சென்னை போகலாம்னு முடிவு பண்ண போது, நானும் சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டு வந்துட்டேன். குழந்தை வசீனாவை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.

சென்னை போக போறேன்னு பாத்திமா அவ கிட்ட சொல்லிட்டா போல?

அபி சென்னைக்கு போவாத, இங்கேயே இரு. இல்ல போறதா இருந்தா என்னையும் கூட்டிகிட்டு போ ன்னு ஒரே அழுகை " என்று அனைத்தையும் சொல்லி முடித்தாள் அபிராமி.

" ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்க இல்ல? " என்றாள் அபிநயா.

" தப்பா நினைக்கிற மாதிரி என்ன கேள்வி கேட்க போறீங்க? "

" இல்ல நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலன்னு தெரிஞ்சுக்கலாம்னு? " என்றாள் அபிநயா.

"அதான் சொன்னேனே, எனக்கு கல்யாணத்துல பெருசா ஈடுபாடு இல்ல, அவ்வளவுதான். வேற எதுவும் பர்டிகுலர் காரணம் எல்லாம் எதுவும் இல்லை" என்றாள் அபிராமி.

"ஓ, ஓகே"

" உங்கள பத்தி சொல்லுங்க " என்றாள் அபிராமி.

அபிநயாவும் தன்னை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

" அபி உங்களுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு"

" என்ன அபி அக்கா? "

" என்னது அக்காவா? " என்று சொல்லி சிரித்தாள் அபிராமி.

" என்னோட பெயரையே எனக்கு கூப்பிடனும்னு ஆசையா இருக்கு. ஆனா உங்களோட டேட் ஆப் பர்த் பார்த்தேன், என் ஹஸ்பண்டை விட நீங்க சிக்ஸ் மன்த்ஸ் தான் சின்னவங்களா இருக்கீங்க, அதனால பேர் சொல்லி கூப்பிடவும் மனசு வரல. ஸோ அபி அக்கா ன்னு கூப்பிடலாம்னு நினைச்சேன். உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்"

" அச்சச்சோ, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அபி. நீங்க என்னை எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான் "

" ஓகே அபி அக்கா, நீங்களும் என்னை வாங்க போங்கன்னு எல்லாம் சொல்ல வேண்டாம். வா போ என்றே சொல்லுங்க"

" ஓகே அபி "

பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து அனைத்து வேலையும் சீக்கிரமாக முடித்துவிட்டு, ஜென்ரல் வார்டில் இருக்கும் அனைத்து பேஷண்டுகளுக்கும், டாக்டர் வருவதற்குள் அனைத்து டெஸ்ட்டும் எடுத்து ரெக்கார்ட் செய்து விட்டனர்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்திருந்தது. இருவரும் ஒன்றாக அமர்ந்து லஞ்ச் சாப்பிட்டார்கள்.

அபிராமி தான் ஆர்டர் செய்த சாப்பாட்டை பாதி அபிநயாவுக்கு கொடுத்தாள். அபிநயா தான் கொண்டு வந்த சாப்பாட்டில் பாதியை அபிராமிக்கு கொடுத்தாள்.

" வாவ், அபி சூப்பர் டேஸ்ட். ரொம்ப நல்லா இருக்கு" என்று சொல்லி இன்னும் கொஞ்சம் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டாள் அபிராமி.

" அபி அக்கா, இந்தாங்க இந்த சாப்பாடு ஃபுல்லாவே நீங்க சாப்பிடுங்க" என்று தன்னுடைய டிபன் பாக்ஸை அவளிடம் கொடுத்து விட்டாள் அபிநயா.

" தேங்க்ஸ் அபி" என்று சொல்லி அவள் வாங்கிய சாப்பாட்டை அபிநயாவுக்கு கொடுத்து விட்டாள்.

அபிநயாவுக்கு அந்த சாப்பாடு பிடிக்காததால்,

"எனக்கு போதும் அக்கா, பசிக்கல" என்று சொல்லி திரும்ப அதையும் கொடுத்து விட்டாள்.

அந்த சாப்பாட்டை வேலை செய்யும் ஆயாவுக்கு கொடுத்து விட்டாள் அபிராமி.

சாப்பிட்ட பிறகு,

" நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமை இருக்குன்னு சொன்னீங்களே என்ன அபி அக்கா? " என்றாள் அபிநயா.

" ஆமாம், நம்ம ரெண்டு பேருமே நர்ஸ். அப்புறம் பேரு அபி "

" ஆமாம் அதைத் தவிர வேறு எதுவும் ஒற்றுமை இருக்கிற மாதிரி தெரியலையே? "

" என்னோட தம்பியும் லவ் மேரேஜ், உன்னோட தங்கச்சியும் லவ் மேரேஜ் "

" அட ஆமா"

" அது மட்டும் இல்ல, ரெண்டு பேருமே ஒரு முஸ்லிம் தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க "

" அட ஆமா இல்ல? "

" ரெண்டு பேரையுமே நம்ம அப்பா அம்மா வீட்ல சேர்த்துக்கல"

" கரெக்டு தான் கா "

" இப்ப நான் வித்தியாசங்கள் சொல்லட்டுமா? "

" நானே சொல்றேன், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு உங்களுக்கு கல்யாணம் ஆகல"

" ஆமாம். அதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் நமக்குள்ள இருக்கிற மாதிரி தெரியல"

" சரியா சொன்னீங்க அக்கா. ரொம்ப நாள் நினைச்சு இருக்கேன் எனக்கு தங்கச்சி மாதிரி ஒரு அக்காவும் வேணும்னு. இப்போ எனக்கு அந்த கவலை போயிடுச்சு " என்று சொல்லி சிரித்தாள் அபிநயா.

" நான் சும்மா சொல்றேன்னு கூட நினைப்ப, எனக்கும் தங்கச்சி இருந்திருக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்போ நீ கிடைச்சுட்ட "
என்றாள் அபிராமி.

இருவரும் மிக சந்தோசமாக இருப்பதாக உணர்ந்தார்கள்.

மாலை டியூட்டி முடிந்ததும்,

" அபி அக்கா இப்ப நான் டியூஷன்ல இருந்து பசங்கள பிக்கப் பண்ணுவேன், அதனால உங்களையும் கூட்டிட்டு போக முடியாது. சோ ஸ்கூல் வரைக்கும் என் கூட பைக்ல வாங்க. அதுக்கு அப்புறமா அங்கிருந்து என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டு ஆட்டோவில் வந்துருங்க "

" ஓகே அபி "

அதன் பின்னர் இருவரும் பேசிக்கொண்டே ஸ்கூட்டரில் குழந்தைகள் படிக்கும் டியூஷன் சென்டருக்கு சென்றனர்.

உள்ளே சென்று அவர்களை அழைத்து வந்தாள் அபிநயா.

" ஹாய்" என்றாள் அபிராமி இருவரையும் பார்த்து.

இருவரும் "ஹலோ ஆன்ட்டி" என்றனர்.

" ஆன்ட்டி எல்லாம் வேண்டாமே? என்னை அபி என்றே கூப்பிடுங்க "

" என்ன அக்கா நீங்க? நானே உங்கள பேர் சொல்லி கூப்பிட மாட்டேன். பசங்க கிட்ட போய் பேர் சொல்லி கூப்பிட சொல்றீங்க? "

" என்னோட தம்பி பொண்ணு கூட என்னை அபி என்று தான் கூப்பிடும். அதனால சொன்னேன்"

" சரி உங்களுக்கு ஆண்டின்னு கூப்பிட பிடிக்கலன்னா நான் மேடம்னு கூப்பிட சொல்றேன் "

" மேடம் வேண்டாம், அபி மேம் ஓகே"
என்றாள் அபிராமி.

தன் இரு குழந்தைகளையும் பார்த்து கண் அசைத்தாள் அபிநயா.

அதை புரிந்து கொண்ட குழந்தைகள்,

" ஹலோ அபி மேம்" என்றனர்.

" சோ க்யூட்" என்று சொல்லி இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

தன்னுடைய பேக்கிலிருந்து இருவருக்கும் இரண்டு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை கொடுத்தாள்.

" அபிமன் எனக்கு 5 ஸ்டார் பிடிக்காது, டைரி மில்க் தான் பிடிக்கும் " என்றான் ஆரவ்.

" சாரி, எனக்கு தெரியாது, நெக்ஸ்ட் டைம் நான் உனக்கு டைரி மில்க் வாங்கி தரேன். இப்போ இதை சாப்பிடு" என்றாள் அபிராமி.

" நான்தான் பிடிக்காதுன்னு சொல்லிட்டேனே? அப்புறம் எப்படி அதை நான் சாப்பிடுவேன் " என்றான் ஆரவ்.

" ஓ ஓகே, இந்தா ரெண்டு சாக்லேட்டையும் நீயே வச்சுக்கோ. எனக்கு டபுள் போனஸ் " என்று சொல்லி சிரித்துக் கொண்டே ஆதித்யாவிடம் சாக்லேட்டை நீட்டினாள் அபிராமி.

" வேண்டாம் அபி மேம், தம்பியை பார்க்க வச்சிட்டு நான் சாப்பிட மாட்டேன். எனக்கும் டைரி மில்கையே அப்புறமா வாங்கி கொடுங்க" என்றான் ஆதித்யா.

இரண்டு குழந்தைகளையும் பார்த்து ஆச்சரிய பட்டாள் அபிராமி.

"வாவ், ரெண்டு பசங்களையும் சூப்பரா வளர்த்து இருக்க அபி. வெரி குட் இவ்வள ஒரு சின்ன வயசுலயே தனக்கு என்ன வேணுமோ அது மட்டும் தான் சாப்பிடுவேன்னு சொல்ற பையன். தம்பிக்காக தானும் சாப்பிட மாட்டேன்னு சொல்ற இன்னொரு பையன். உண்மையிலேயே கிப்டேட் சில்ட்ரன் உனக்கு " என்றாள் அபிராமி.

" ஆமாம் அபிக்கா, அன்பான கணவரும் தங்கமான குழந்தைகளும் கிடைக்க, நான் உண்மையிலேயே கொடுத்து தான் வச்சிருக்கேன்" என்றாள் அபிநயா.

இப்போது அபிநயாவின் கணவரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது அபிராமிக்கு.

" உன்னோட ஹஸ்பண்ட் பெயர் என்ன அபி? "

" அர்ஜுன்"

" வாவ், என்னோட ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோ அர்ஜுன் தான் "
என்றாள் அபிராமி சிரித்துக் கொண்டே.

டியூஷன் சென்டரில் இருந்து தங்களுடைய வீட்டிற்கு ஒரு ஆட்டோ புக் செய்தாள் அபிநயா.

அந்த ஆட்டோ டிரைவரிடம் தன்னை ஃபாலோ செய்து வருமாறு கூறினாள் அபிநயா.

அபிநயா தன் குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் செல்ல அவளை பின்தொடர்ந்து சென்றது அபிராமி அமர்ந்திருந்த ஆட்டோ.

குழந்தைகளை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு,

அபிராமியை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு சென்றாள் அபிநயா.

" வாம்மா அபி, எப்படி இருக்க.? பக்கத்து வீட்ல இருக்கன்னு தான் பேரு, பார்த்து ஒரு வாரம் ஆச்சு" என்றார் அந்த வீட்டு பெண்மணி.

" ஆமாம் மாலா அக்கா. எங்க வேலையே சரியா இருக்கு"

"இவங்க யாரு அபி?"

"இவங்க பேரு அபிராமி. என் கூட தான் ஹாஸ்பிடல்ல வேலை செய்றாங்க. இவங்களும் நர்சு தான். இவங்க கோயம்புத்தூர்ல இருந்து வந்து இருக்காங்க. உங்க வீட்ல ஒரு போர்ஷன் காலி இருக்கு இல்ல?இவங்களுக்கும் இவங்க அப்பாவுக்கும் தான் வீடு வேணும்" என்றாள் அபிநயா.


தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.