காதல் களவாணி
பாகம் 4
"ஆமாம் காலியா தான் இருக்கு அபி, இன்னைக்கு கூட ரெண்டு பேர் வந்து பார்த்திட்டு தான் போனாங்க. நீ சொல்றன்னா முதல் முக்கியத்துவம் உனக்கு தான் கொடுப்பேன். என் பையன் கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டா போதும். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, வாடகைக்கு விட்டு விடுவேன்" என்றார் மாலா அக்கா.
" ஹாங், நான் இவங்க கிட்ட சொல்லிட்டேன் அக்கா. இப்போ இவங்களோட அப்பா ஹாஸ்பிடல் ல தான் இருக்காரு. அவருக்கு ஹார்ட் ஆபரேஷன் ஆக போது. அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் அவருக்கும் இவங்களுக்கும் தான் வீடு வேணும். அதான் இவங்களுக்கு கொடுக்கிறீர்களா என்று கேட்க கூட்டி கிட்டு வந்தேன் " என்றாள் அபிநயா.
" என்ன அபி, உனக்கு தெரிஞ்சவங்க என்றால், நான் என்ன சொல்லப் போறேன். உனக்கு தான் என்னை பற்றி தெரியும் இல்ல? "
" எல்லாமே இவங்க கிட்ட சொல்லிட்டேன் அக்கா. வாடகை, அட்வான்ஸ் அதைப் பற்றி எல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாங்க, அக்ரிமெண்ட் போட்டுக்கோங்க"
"சரிம்மா, போய் வீட்டைப் பார்த்திட்டு வாங்க. இந்தாங்க சாவி. இரண்டாவது மாடி, வலது பக்கம் இருக்கிற வீடு" என்றார் மாலா அக்கா.
" ஒரு நிமிஷம் மேடம்" என்று அவரிடம் சொல்லிவிட்டு,
"அபி" என்றாள் அபிராமி.
" சொல்லுங்க அபி அக்கா"
" இரண்டாவது மாடினா கஷ்டம், அப்பாவால ஏற முடியாதுல்ல?"
" அட, ஆமாம் அக்கா, நான் அதைப் பத்தி யோசிக்க மறந்துட்டேனே? "
" முதல் மாடின்னா கூட ஓகே. நெக்ஸ்ட் வீக் ஆபரேஷன் முடிஞ்சு அப்புறம் 10, 15 டேஸ் கழிச்சு தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க. அப்போ ஒன் ஃப்ளோர் ஏறிடலாம். இரண்டு மாடின்னா கஷ்டம் ஆச்சே? "
" கரெக்டு தான் அக்கா, நான் அதை யோசிக்கல. சாரி"
" சாரி எல்லாம் எதுக்கு சொல்ற? "
"அக்கா சாரி, உங்க நேரத்தையும் வீண் ஆக்கிட்டேன்" என்றாள் அபிநயா மாலாவைப் பார்த்து.
" அபி, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. உடம்பு சரி இல்லைனா எப்படி மாடி ஏற முடியும். சரி தான் அவங்க சொல்றது. அபி, அவங்களுக்கு முதல் மாடி பரவாயில்லைன்னா, உன் வீட்டு மாடியிலேயே ஒரு போர்ஷன் இருக்கு இல்ல.? அதை கொடு " என்றார் மாலா அக்கா.
" மாலா அக்கா, அது சீலிங் கூட இல்லாத வெறும் ஷீட் போட்டு இருக்கும் ரூம். வேஸ்ட் திங்ஸ் எல்லாம் போட்டு வச்சிருக்கோம். சின்ன ரூம் தான் இருக்கு கிச்சன் கூட கிடையாது. அதையெல்லாம் எப்படி கொடுக்க முடியும்? " என்றாள் அபிநயா.
"தேங்க்ஸ் மேடம்" என்று மாலாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் அபிராமி.
அபிநயா அபிராமியின் பின்னால் வந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
" உட்காருங்க அக்கா, நான் காஃபி கொண்டு வரேன்" என்று சொல்லி கிச்சனுக்கு சென்று, இரண்டு டம்ளரில் குழந்தைகளுக்கு புரோட்டீன் ஷேக் கலந்து கொடுத்துவிட்டு, இரண்டு டம்ளரில் தனக்கும் அபிராமிக்கும் காஃபி போட்டு எடுத்து வந்து சோஃபாவில் அபிராமியின் பக்கத்தில் அமர்ந்தாள் அபிநயா.
அவ்வளவு நேரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் அபிராமி.
அபிநயா வந்ததும் தன் சிந்தனை கலந்தவளாய்,
" எனக்கு பிரச்சனை இல்ல அபி, உனக்கு ஓகேன்னா எனக்கு ஒரே ஒரு ரூம் இருந்தாலும் போதும். நான் அதிலேயே டேபிள் வைத்து சமைச்சுக்குவேன்" என்றாள் அபிராமி.
" அபி அக்கா உங்க அப்பாவையும் வெச்சு அங்கு இருக்கிறது ரொம்ப கஷ்டம். ஏசி கூட பிக்ஸ் பண்ண முடியாது" என்றாள் அபிநயா.
" பாத்ரூம் டாய்லட் இருக்கா? "
" இருக்கு "
" அப்போ பிரச்சனை இல்லை. உனக்கும் உன் ஹஸ்பண்டுக்கும் ஓகேன்னா? எவ்வளவு அட்வான்ஸ் வாடகைனு சொல்லுங்க.
எனக்கு 15 டேஸ் தான் ஹாஸ்பிடல் கெஸ்ட் ஹவுஸ் ல தங்குவதற்கு பர்மிஷன் இருக்கு. அதுக்குள்ள நான் வீடு பார்க்கணும். ஆல்ரெடி நான் ஒன் வீக் முடிஞ்சிடுச்சு. போன வாரம் எல்லாம் நான் ஹாஸ்பிடலுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஏரியாவில் வீடு தேடிட்டேன். எதுவும் செட் ஆகல.
உனக்கு நான் உன் வீட்டுக்கு மாடியில் தங்குவது ஓகே இல்லனா நான் வேற பாத்துக்குறேன். ஆனா என்ன டிசைடு பண்றீங்கன்னு கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடு.
முடிஞ்சா நாளைக்கு காலைல டியூட்டிக்கு வரும்போது சொல்லு. அப்பதான் டியூட்டி முடிஞ்சு நானு ஈவினிங் வேற வீடு தேட முடியும் " என்றாள் அபிராமி.
" அக்கா நீங்க என் வீட்டு மாடியில் தங்கறதுக்கு எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை. இருந்தாலும் என் ஹஸ்பண்ட் கிட்ட கேட்டுட்டு சொல்றேன். நீங்க வாடகை அட்வான்ஸ் எதுவுமே தர வேண்டாம். இவ்வளவு நாளா நாங்க யூஸ் பண்ணாம அந்த ரூமை சும்மாதான் போட்டு வச்சிருக்கோம். அப்படி இருக்கும்போது எதுக்கு நீங்க வாடகை எல்லாம் தரணும்? "
" அட்வான்ஸ் வாடகை அதெல்லாம் வாங்காம நீ வீடு விடுறேனா எனக்கு வேண்டாம். நான் வேறவே பாத்துக்குறேன். நீ உன் ஹஸ்பண்ட் கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். நான் கிளம்புறேன்" என்றாள் அபிராமி.
" அக்கா ஒரு நிமிஷம் இருங்க. ஏன் கோவிச்சுக்கிறீங்க? முதல்ல காஃபியை குடிங்க" என்றாள் அபிநயா.
" இல்ல அபி, அந்த மாதிரி வாடகை எதுவும் கொடுக்காமல் தங்கினா ஒரு கில்ட்டி ஃபீலிங் வந்துரும். அப்புறம் எனக்கும் அப்பாவுக்கும் சங்கடமா போயிடும் "
" ஓகே அக்கா, நான் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசிட்டு உங்களுக்கு நாளை காலை டியூட்டிக்கு வரும்போது சொல்லிடறேன்" என்றாள் அபிநயா ஸ்மைல் செய்தபடி.
" தேங்க்ஸ் அபி, சரி மறுபடியும் எனக்கு வண்டி புக் பண்ணி தரியா? "
" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணீங்கன்னா? என் ஹஸ்பண்ட் வந்துருவாரு, அவர் வந்த அப்புறமா குழந்தைங்கள அவர் கிட்ட விட்டுட்டு, நானே உங்கள டிராப் பண்ணிடுவேன்"
" ஐயோ அதெல்லாம் வேண்டாம் அபி, நீ குழந்தைகளை பார்த்துக்கொள், நான் கிளம்புறேன். எனக்கு இந்த வண்டி புக் பண்ணி எல்லாம் பழக்கம் இல்லை. அதனால தான் உன்னை கேட்கிறேன்.
எப்படி புக் பண்ணனும்னு நாளைக்கு எனக்கு சொல்லிக் கொடு அதுக்கப்புறம் நானே புக் பண்ணிப்பேன்"
" ஓகே அக்கா" என்று சொல்லிவிட்டு தன் ஃபோனில் இருந்து அபிராமிக்கு ஹாஸ்பிடல் செல்ல வண்டி புக் செய்தாள் அபிநயா.
ஆட்டோ வந்தவுடன் அபிராமி குழந்தைகளுக்கும் அபிநயாவிற்கும் பை சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவள் கிளம்பித் தெருமுனை திரும்பும் போது, தன் காரில் வீட்டுக்கு வந்தான் அர்ஜுன்.
உள்ளே நுழைந்த தன் கணவனை பார்த்து,
" என்னங்க ஒரு அஞ்சு இல்ல பத்து நிமிஷம் முன்னாடி வந்து இருக்க கூடாது? "
" ஏன்? என்ன ஆச்சு?"
" ஒன்னும் இல்ல என் கூட ஹாஸ்பிடல்ல வேலை செய்றாங்க அபிராமி வந்திருந்தாங்க. இப்பதான் கிளம்பி போனாங்க "
" ஓகே, அதனால என்ன? "
" இல்லைங்க மாடி ரூமை அவங்களுக்கு
வாடகைக்கு விட முடியுமா? என்று கேட்டாங்க" என்று ஆரம்பித்து பக்கத்து வீட்டில் வீடு பார்த்தது முதல் அபிராமி அவளிடம் சொல்லிவிட்டு சென்றது வரை அனைத்தும் சொல்லி முடித்ததும்,
"நீங்க என்ன சொல்றீங்க? " என்றாள் அபிநயா.
" வேண்டாம் அபி, எனக்கு செட் ஆகும்னு தோணல. வசதி இருக்கு இல்லையென்றது அவங்களோட பிரச்சனை. நம்ம பிரைவசி கெட்டு போயிடுமோன்னு யோசிக்கிறேன்"
" ஏங்க அப்படி சொல்றீங்க? "
" என்னதான் மாடிக்கு வெளிப்பக்கம் ஒரு வழி இருந்தாலும், நம்மளோட வீட்டு உள்ளே இருக்கும் படியிலும் ஏறி போகலாம். அதனால எதுக்கு அதெல்லாம்? "
" அவங்க வெளிப்பக்கப் படியே யூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னா நமக்கு அதனால எந்த பிரச்சனையும் இல்லல? "
" எனக்கு என்னமோ சரியா படல அபி, அப்புறம் உன் விருப்பம் "
" இப்படி சொன்னீங்கன்னா நான் என்ன பண்றதுங்க? "
" நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். நீ அப்புறமும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி காரணம் சொல்லிக்கிட்டு இருக்க"
" சரிங்க சாரி. நான் இதுக்கு மேல கேட்கல, புரிஞ்சுகிட்டேன்" என்ற சொல்லிவிட்டு அங்கிருந்து கிச்சனுக்கு சென்று காஃபி கலந்து வந்து தன் கணவனுக்கு கொடுத்தாள்.
அவன் மாடி போர்ஷனை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதால் அவளுடைய முகத்தில் சற்று சோகம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான் அர்ஜுன்.
பின்னர் கிச்சனுக்கு சென்று டின்னர் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் அபிநயா.
குழந்தைகள் இருவருக்கும் டிபன் கொடுத்துவிட்டு, அவர்களை அவர்களுடைய ரூமில் படுக்க வைத்து விட்டு வந்தாள்.
அர்ஜுனுக்கு புரியாதது என்னவென்றால், 'காலையில் தான் அறிமுகமானால் அபிராமி என்று அவளே கூறினாள். அப்படி இருக்க அன்று இரவே தங்களுடைய வீட்டு மாடியில் தங்குவதற்கு தன்னிடம் கேட்கிறாளே?' என்று நினைத்துக் கொண்டான். 'உண்மையிலேயே அந்த அபிராமி நல்லவள் தானா?' என்று யோசித்தான்.
" அபி" என்றான் அர்ஜுன்.
" சொல்லுங்க"
" ரொம்ப பசிக்குது"
" நீங்க போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. சப்பாத்தி டால் பண்ணி இருக்கேன். கொண்டு வரேன்" என்றாள் அபிநயா.
"ஓகே டி" என்று சொல்லிவிட்டு கை கால் முகம் கழுவி டிரஸ் மாற்றி விட்டு வந்து அமர்ந்தான்.
இரண்டு சப்பாத்திகளை அவன் தட்டில் வைத்து விட்டு இன்னொரு தட்டில் தனக்கு இரண்டு சப்பாத்திகளை வைத்துக் கொண்டு, அவன் பக்கத்தில் அமர்ந்தாள் அபிநயா.
அபிராமியை பற்றி யோசித்து கொண்டு இருந்ததால், சில நிமிடங்களாக தன் கையில் சப்பாத்தியை எடுத்து அவள் வாய் அருகில் அவளுக்கு ஊட்டுவதற்காக கையை நீட்டிக் கொண்டிருக்கும் தன் கணவனை கவனிக்க வில்லை அபிநயா.
"அபி, அபி" என்று அவன் கூறிய போது சிந்தனை கலைந்தவளாய்,
" சாரிங்க நான் என்னமோ யோசிச்சுகிட்டு இருந்தேன் " என்று சொல்லி தன் வாயை திறந்தாள்.
அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டாலும்,
ஏனோ இன்று வழக்கமாக அவனுக்கு இருக்கும் சந்தோஷம் இல்லை. மாறாக சற்று சங்கடமாக இருந்தது.
அபிநயா விருப்பப்படுவதால், தனக்கு விருப்பமில்லை என்றாலும், மாடி போர்ஷனை அபிராமியை தங்க வைக்க சம்மதம் சொல்லலாம் என்று நினைத்து,
"அபி, உனக்கு சரின்னு பட்டுச்சின்னா, அவங்கள நம்ம வீட்டு மாடியில் தங்க வை. எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை. போதுமா?"
" உண்மையாவா சொல்றீங்க? இல்ல கோபத்தினால் சொல்றீங்களா? "
" இல்ல, உனக்காக சொல்றேன். உன்னோட சந்தோஷத்துக்காக சொல்றேன்" என்றான் அர்ஜுன்.
" ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ங்க. ஐ லவ் யூ ஸோ மச்" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அபிநயா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
பாகம் 4
"ஆமாம் காலியா தான் இருக்கு அபி, இன்னைக்கு கூட ரெண்டு பேர் வந்து பார்த்திட்டு தான் போனாங்க. நீ சொல்றன்னா முதல் முக்கியத்துவம் உனக்கு தான் கொடுப்பேன். என் பையன் கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டா போதும். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, வாடகைக்கு விட்டு விடுவேன்" என்றார் மாலா அக்கா.
" ஹாங், நான் இவங்க கிட்ட சொல்லிட்டேன் அக்கா. இப்போ இவங்களோட அப்பா ஹாஸ்பிடல் ல தான் இருக்காரு. அவருக்கு ஹார்ட் ஆபரேஷன் ஆக போது. அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் அவருக்கும் இவங்களுக்கும் தான் வீடு வேணும். அதான் இவங்களுக்கு கொடுக்கிறீர்களா என்று கேட்க கூட்டி கிட்டு வந்தேன் " என்றாள் அபிநயா.
" என்ன அபி, உனக்கு தெரிஞ்சவங்க என்றால், நான் என்ன சொல்லப் போறேன். உனக்கு தான் என்னை பற்றி தெரியும் இல்ல? "
" எல்லாமே இவங்க கிட்ட சொல்லிட்டேன் அக்கா. வாடகை, அட்வான்ஸ் அதைப் பற்றி எல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாங்க, அக்ரிமெண்ட் போட்டுக்கோங்க"
"சரிம்மா, போய் வீட்டைப் பார்த்திட்டு வாங்க. இந்தாங்க சாவி. இரண்டாவது மாடி, வலது பக்கம் இருக்கிற வீடு" என்றார் மாலா அக்கா.
" ஒரு நிமிஷம் மேடம்" என்று அவரிடம் சொல்லிவிட்டு,
"அபி" என்றாள் அபிராமி.
" சொல்லுங்க அபி அக்கா"
" இரண்டாவது மாடினா கஷ்டம், அப்பாவால ஏற முடியாதுல்ல?"
" அட, ஆமாம் அக்கா, நான் அதைப் பத்தி யோசிக்க மறந்துட்டேனே? "
" முதல் மாடின்னா கூட ஓகே. நெக்ஸ்ட் வீக் ஆபரேஷன் முடிஞ்சு அப்புறம் 10, 15 டேஸ் கழிச்சு தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க. அப்போ ஒன் ஃப்ளோர் ஏறிடலாம். இரண்டு மாடின்னா கஷ்டம் ஆச்சே? "
" கரெக்டு தான் அக்கா, நான் அதை யோசிக்கல. சாரி"
" சாரி எல்லாம் எதுக்கு சொல்ற? "
"அக்கா சாரி, உங்க நேரத்தையும் வீண் ஆக்கிட்டேன்" என்றாள் அபிநயா மாலாவைப் பார்த்து.
" அபி, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. உடம்பு சரி இல்லைனா எப்படி மாடி ஏற முடியும். சரி தான் அவங்க சொல்றது. அபி, அவங்களுக்கு முதல் மாடி பரவாயில்லைன்னா, உன் வீட்டு மாடியிலேயே ஒரு போர்ஷன் இருக்கு இல்ல.? அதை கொடு " என்றார் மாலா அக்கா.
" மாலா அக்கா, அது சீலிங் கூட இல்லாத வெறும் ஷீட் போட்டு இருக்கும் ரூம். வேஸ்ட் திங்ஸ் எல்லாம் போட்டு வச்சிருக்கோம். சின்ன ரூம் தான் இருக்கு கிச்சன் கூட கிடையாது. அதையெல்லாம் எப்படி கொடுக்க முடியும்? " என்றாள் அபிநயா.
"தேங்க்ஸ் மேடம்" என்று மாலாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் அபிராமி.
அபிநயா அபிராமியின் பின்னால் வந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
" உட்காருங்க அக்கா, நான் காஃபி கொண்டு வரேன்" என்று சொல்லி கிச்சனுக்கு சென்று, இரண்டு டம்ளரில் குழந்தைகளுக்கு புரோட்டீன் ஷேக் கலந்து கொடுத்துவிட்டு, இரண்டு டம்ளரில் தனக்கும் அபிராமிக்கும் காஃபி போட்டு எடுத்து வந்து சோஃபாவில் அபிராமியின் பக்கத்தில் அமர்ந்தாள் அபிநயா.
அவ்வளவு நேரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் அபிராமி.
அபிநயா வந்ததும் தன் சிந்தனை கலந்தவளாய்,
" எனக்கு பிரச்சனை இல்ல அபி, உனக்கு ஓகேன்னா எனக்கு ஒரே ஒரு ரூம் இருந்தாலும் போதும். நான் அதிலேயே டேபிள் வைத்து சமைச்சுக்குவேன்" என்றாள் அபிராமி.
" அபி அக்கா உங்க அப்பாவையும் வெச்சு அங்கு இருக்கிறது ரொம்ப கஷ்டம். ஏசி கூட பிக்ஸ் பண்ண முடியாது" என்றாள் அபிநயா.
" பாத்ரூம் டாய்லட் இருக்கா? "
" இருக்கு "
" அப்போ பிரச்சனை இல்லை. உனக்கும் உன் ஹஸ்பண்டுக்கும் ஓகேன்னா? எவ்வளவு அட்வான்ஸ் வாடகைனு சொல்லுங்க.
எனக்கு 15 டேஸ் தான் ஹாஸ்பிடல் கெஸ்ட் ஹவுஸ் ல தங்குவதற்கு பர்மிஷன் இருக்கு. அதுக்குள்ள நான் வீடு பார்க்கணும். ஆல்ரெடி நான் ஒன் வீக் முடிஞ்சிடுச்சு. போன வாரம் எல்லாம் நான் ஹாஸ்பிடலுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஏரியாவில் வீடு தேடிட்டேன். எதுவும் செட் ஆகல.
உனக்கு நான் உன் வீட்டுக்கு மாடியில் தங்குவது ஓகே இல்லனா நான் வேற பாத்துக்குறேன். ஆனா என்ன டிசைடு பண்றீங்கன்னு கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடு.
முடிஞ்சா நாளைக்கு காலைல டியூட்டிக்கு வரும்போது சொல்லு. அப்பதான் டியூட்டி முடிஞ்சு நானு ஈவினிங் வேற வீடு தேட முடியும் " என்றாள் அபிராமி.
" அக்கா நீங்க என் வீட்டு மாடியில் தங்கறதுக்கு எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை. இருந்தாலும் என் ஹஸ்பண்ட் கிட்ட கேட்டுட்டு சொல்றேன். நீங்க வாடகை அட்வான்ஸ் எதுவுமே தர வேண்டாம். இவ்வளவு நாளா நாங்க யூஸ் பண்ணாம அந்த ரூமை சும்மாதான் போட்டு வச்சிருக்கோம். அப்படி இருக்கும்போது எதுக்கு நீங்க வாடகை எல்லாம் தரணும்? "
" அட்வான்ஸ் வாடகை அதெல்லாம் வாங்காம நீ வீடு விடுறேனா எனக்கு வேண்டாம். நான் வேறவே பாத்துக்குறேன். நீ உன் ஹஸ்பண்ட் கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். நான் கிளம்புறேன்" என்றாள் அபிராமி.
" அக்கா ஒரு நிமிஷம் இருங்க. ஏன் கோவிச்சுக்கிறீங்க? முதல்ல காஃபியை குடிங்க" என்றாள் அபிநயா.
" இல்ல அபி, அந்த மாதிரி வாடகை எதுவும் கொடுக்காமல் தங்கினா ஒரு கில்ட்டி ஃபீலிங் வந்துரும். அப்புறம் எனக்கும் அப்பாவுக்கும் சங்கடமா போயிடும் "
" ஓகே அக்கா, நான் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசிட்டு உங்களுக்கு நாளை காலை டியூட்டிக்கு வரும்போது சொல்லிடறேன்" என்றாள் அபிநயா ஸ்மைல் செய்தபடி.
" தேங்க்ஸ் அபி, சரி மறுபடியும் எனக்கு வண்டி புக் பண்ணி தரியா? "
" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணீங்கன்னா? என் ஹஸ்பண்ட் வந்துருவாரு, அவர் வந்த அப்புறமா குழந்தைங்கள அவர் கிட்ட விட்டுட்டு, நானே உங்கள டிராப் பண்ணிடுவேன்"
" ஐயோ அதெல்லாம் வேண்டாம் அபி, நீ குழந்தைகளை பார்த்துக்கொள், நான் கிளம்புறேன். எனக்கு இந்த வண்டி புக் பண்ணி எல்லாம் பழக்கம் இல்லை. அதனால தான் உன்னை கேட்கிறேன்.
எப்படி புக் பண்ணனும்னு நாளைக்கு எனக்கு சொல்லிக் கொடு அதுக்கப்புறம் நானே புக் பண்ணிப்பேன்"
" ஓகே அக்கா" என்று சொல்லிவிட்டு தன் ஃபோனில் இருந்து அபிராமிக்கு ஹாஸ்பிடல் செல்ல வண்டி புக் செய்தாள் அபிநயா.
ஆட்டோ வந்தவுடன் அபிராமி குழந்தைகளுக்கும் அபிநயாவிற்கும் பை சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவள் கிளம்பித் தெருமுனை திரும்பும் போது, தன் காரில் வீட்டுக்கு வந்தான் அர்ஜுன்.
உள்ளே நுழைந்த தன் கணவனை பார்த்து,
" என்னங்க ஒரு அஞ்சு இல்ல பத்து நிமிஷம் முன்னாடி வந்து இருக்க கூடாது? "
" ஏன்? என்ன ஆச்சு?"
" ஒன்னும் இல்ல என் கூட ஹாஸ்பிடல்ல வேலை செய்றாங்க அபிராமி வந்திருந்தாங்க. இப்பதான் கிளம்பி போனாங்க "
" ஓகே, அதனால என்ன? "
" இல்லைங்க மாடி ரூமை அவங்களுக்கு
வாடகைக்கு விட முடியுமா? என்று கேட்டாங்க" என்று ஆரம்பித்து பக்கத்து வீட்டில் வீடு பார்த்தது முதல் அபிராமி அவளிடம் சொல்லிவிட்டு சென்றது வரை அனைத்தும் சொல்லி முடித்ததும்,
"நீங்க என்ன சொல்றீங்க? " என்றாள் அபிநயா.
" வேண்டாம் அபி, எனக்கு செட் ஆகும்னு தோணல. வசதி இருக்கு இல்லையென்றது அவங்களோட பிரச்சனை. நம்ம பிரைவசி கெட்டு போயிடுமோன்னு யோசிக்கிறேன்"
" ஏங்க அப்படி சொல்றீங்க? "
" என்னதான் மாடிக்கு வெளிப்பக்கம் ஒரு வழி இருந்தாலும், நம்மளோட வீட்டு உள்ளே இருக்கும் படியிலும் ஏறி போகலாம். அதனால எதுக்கு அதெல்லாம்? "
" அவங்க வெளிப்பக்கப் படியே யூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னா நமக்கு அதனால எந்த பிரச்சனையும் இல்லல? "
" எனக்கு என்னமோ சரியா படல அபி, அப்புறம் உன் விருப்பம் "
" இப்படி சொன்னீங்கன்னா நான் என்ன பண்றதுங்க? "
" நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். நீ அப்புறமும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி காரணம் சொல்லிக்கிட்டு இருக்க"
" சரிங்க சாரி. நான் இதுக்கு மேல கேட்கல, புரிஞ்சுகிட்டேன்" என்ற சொல்லிவிட்டு அங்கிருந்து கிச்சனுக்கு சென்று காஃபி கலந்து வந்து தன் கணவனுக்கு கொடுத்தாள்.
அவன் மாடி போர்ஷனை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதால் அவளுடைய முகத்தில் சற்று சோகம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான் அர்ஜுன்.
பின்னர் கிச்சனுக்கு சென்று டின்னர் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் அபிநயா.
குழந்தைகள் இருவருக்கும் டிபன் கொடுத்துவிட்டு, அவர்களை அவர்களுடைய ரூமில் படுக்க வைத்து விட்டு வந்தாள்.
அர்ஜுனுக்கு புரியாதது என்னவென்றால், 'காலையில் தான் அறிமுகமானால் அபிராமி என்று அவளே கூறினாள். அப்படி இருக்க அன்று இரவே தங்களுடைய வீட்டு மாடியில் தங்குவதற்கு தன்னிடம் கேட்கிறாளே?' என்று நினைத்துக் கொண்டான். 'உண்மையிலேயே அந்த அபிராமி நல்லவள் தானா?' என்று யோசித்தான்.
" அபி" என்றான் அர்ஜுன்.
" சொல்லுங்க"
" ரொம்ப பசிக்குது"
" நீங்க போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. சப்பாத்தி டால் பண்ணி இருக்கேன். கொண்டு வரேன்" என்றாள் அபிநயா.
"ஓகே டி" என்று சொல்லிவிட்டு கை கால் முகம் கழுவி டிரஸ் மாற்றி விட்டு வந்து அமர்ந்தான்.
இரண்டு சப்பாத்திகளை அவன் தட்டில் வைத்து விட்டு இன்னொரு தட்டில் தனக்கு இரண்டு சப்பாத்திகளை வைத்துக் கொண்டு, அவன் பக்கத்தில் அமர்ந்தாள் அபிநயா.
அபிராமியை பற்றி யோசித்து கொண்டு இருந்ததால், சில நிமிடங்களாக தன் கையில் சப்பாத்தியை எடுத்து அவள் வாய் அருகில் அவளுக்கு ஊட்டுவதற்காக கையை நீட்டிக் கொண்டிருக்கும் தன் கணவனை கவனிக்க வில்லை அபிநயா.
"அபி, அபி" என்று அவன் கூறிய போது சிந்தனை கலைந்தவளாய்,
" சாரிங்க நான் என்னமோ யோசிச்சுகிட்டு இருந்தேன் " என்று சொல்லி தன் வாயை திறந்தாள்.
அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டாலும்,
ஏனோ இன்று வழக்கமாக அவனுக்கு இருக்கும் சந்தோஷம் இல்லை. மாறாக சற்று சங்கடமாக இருந்தது.
அபிநயா விருப்பப்படுவதால், தனக்கு விருப்பமில்லை என்றாலும், மாடி போர்ஷனை அபிராமியை தங்க வைக்க சம்மதம் சொல்லலாம் என்று நினைத்து,
"அபி, உனக்கு சரின்னு பட்டுச்சின்னா, அவங்கள நம்ம வீட்டு மாடியில் தங்க வை. எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை. போதுமா?"
" உண்மையாவா சொல்றீங்க? இல்ல கோபத்தினால் சொல்றீங்களா? "
" இல்ல, உனக்காக சொல்றேன். உன்னோட சந்தோஷத்துக்காக சொல்றேன்" என்றான் அர்ஜுன்.
" ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ங்க. ஐ லவ் யூ ஸோ மச்" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அபிநயா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.