காதல் களவாணி
பாகம் 5
ஸ்மைல் செய்தான் அர்ஜுன்.
பின்னர் தன்னுடைய தட்டில் இருந்து அவனுக்கு ஒரு வாய் சப்பாத்தி ஊட்டி விட்டாள்.
சாப்பிட்ட பிறகு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு படுக்க வந்தாள் அபிநயா. ஆனால் அதற்குள் தூங்கி விட்டிருந்தான் அர்ஜுன்.
எப்போதுமே படுத்தவுடன் இருவருக்கும் தூக்கம் வராது. மற்றொருவர் வந்த பிறகு, அர்ஜுனின் கையில் சில நிமிடங்கள் அபிநயா படுத்துக் கொள்வாள். இருவரும் இதழ் முத்தம் கொடுத்து குட் நைட் சொல்லிவிட்டு கட்டிப்பிடித்தபடி சில நிமிடங்கள் தூங்குவார்கள். அதன் பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு தூக்கத்தில் தங்களையும் அறியாமல் தான் சற்று தள்ளி படுப்பார்கள்.
இன்று அபிநயாவின் மேல் இருந்த சற்று வருத்தத்தினால், அதையே யோசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் அப்படியே தூங்கி விட்டான்.
நன்றாக தூங்கும் அர்ஜுனை, அவன் தூக்கத்தை கலைத்து, எழுப்பி அவன் கையில் படுத்துக்கொள்ள சங்கடமாக இருந்தது அபிநயாவிற்கு.
இதழ் முத்தம் கொடுக்காததாலும், அவனுக்கு குட்நைட் சொல்லாததாலும், அவன் கையில் படுக்காததாலும், வெகு நேரமாக தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள் அபிநயா. அவளுக்கு தூக்கமே வரவில்லை. வெகு நேரத்திற்குப் பிறகே தூங்கினாள்.
தாமதமாக தூங்கியதால் தாமதமாக எழுந்தாள் அபிநயா.
பிறகு கிச்சனுக்கு சென்று அவசர அவசரமாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
அப்போது பின்னாலிருந்து அவளை இறுக்கமாக அணைத்தப்படி அழுத்தமாக அவள் கழுத்தில் முத்தம் கொடுத்து,
"குட் மார்னிங் மை டியர் பொண்டாட்டி " என்றான் அர்ஜூன்.
தீடீரென்று பின்னாலிருந்து அவளை அணைக்க கை வந்து அவள் இடையை தொடும் போது ஒரு நொடி திடுக்கிட்டாலும் அணைத்த கை தன் தலைவனுடையது என்று அந்த ஸ்பரிசத்திலேயே தெரிந்து கொண்ட நம் நாயகியின் இதழில் புன்னகை மலர்ந்தது.
"குட் மார்னிங் புருஷா" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அபிநயா.
பின்னர் குழந்தைகளை எழுப்பி குளிக்க வைத்து ரெடி செய்ய அர்ஜூன் சென்றான்.
அவன் கொடுத்த முத்தம் என்னும் உத்வேகத்தால் தன்னுடைய வேலைகளை தடையின்றி வேகமாகவும் திடமாகவும் செய்து முடித்தாள்.
இரவு முத்தம் கொடுத்துக் கொள்ளாமலும், கட்டிப் பிடிக்காமலும் தூங்கியதால் காலையில் கூட வருத்தமாக இருந்தாள் அபிநயா. ஆனால் அவளை நன்றாக அறிந்த அர்ஜூன் அவளுக்கு முத்தம் கொடுத்து அவளை நார்மலாக்கி விட்டான்.
பிறகு அனைவரும் ரெடி ஆகி சென்றனர்.
வண்டியில் குழந்தைகளை ஏற்றிக் கொண்ட பிறகு, காரில் ஏறிய தன் கணவனிடம்,
"என்னங்க" என்றாள் அபிநயா.
"சொல்லுமா" என்று கார் கண்ணாடியை இறக்கிக் கேட்டான்.
"அப்போ, நான் அபி அக்கா கிட்ட வீடு விடறதுக்கு ஓகே சொல்லிடவா?"
"சரி மா"
"ரென்ட், அட்வான்ஸ் எவ்ளோ சொல்லலாம்?"
"அது உன் விருப்பம், நான் அதுல தலையிட மாட்டேன். அதெல்லாம் நீயே டிசைடு பண்ணிக்கோ, பார்த்துக்கோ"
என்று சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு "பை செல்லம்ஸ்", "பை மா" என்று சொல்லிவிட்டு காரை ஓட்டிக் கொண்டு சென்றான் அர்ஜூன்.
"பை அப்பா" என்று குழந்தைகள் இருவரும் சொன்னார்கள்.
"பைங்க" என்று சொல்லிவிட்டு 'என்ன வாடகை சொல்லலாம்?' என்று நினைத்து கொண்டே பைக்கில் சென்று தன் குழந்தைகளை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு ஆஸ்பிட்டலுக்கு சென்றாள் அபிநயா.
"குட் மார்னிங்" என்று சிரித்தபடி ரோகிணி, லலிதா, கீதா மற்றும் அபிராமியை பார்த்து கூறினாள் அபிநயா.
லலிதா அபிநயாவிடம்,
"அபி, என் டியூட்டி முடிஞ்சிருச்சு, நான் இப்ப வீட்ல போய் தூங்க போறேன் அதனால குட் நைட். " என்ற சொல்லி சிரித்து விட்டு அனைவருக்கும் பை சொல்லிவிட்டு கிளம்பினாள் லலிதா.
அபிநயா மற்றும் கீதாவிற்கு ஜென்ரல் வார்ட் டூயூட்டியும், ரோகிணி மற்றும் அபிராமிக்கு பிரசவ வார்டு டியூட்டியும் போட்டிருந்தார்கள்.
' அபிநயா என்ன சொல்லப் போகிறாள்?' என்று டியூட்டிக்கு செல்வதற்கு முன் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிராமி.
' எதுவுமே சொல்லவில்லை என்றாலும், வீடு கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்டு. தான் வேறு வீடு பார்க்கலாம்' என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
லெட்ஜர் புக்கை எடுத்துக்கொண்டு அபிராமி செல்லும் முன் அவள் கையைப் பிடித்து,
" அபி அக்கா, எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் சம்மதம். நீங்க தாராளமா எங்க வீட்டு மாடியில் குடி வந்துக்கோங்க " என்றாள் புன்னகைத்தபடி.
அபிராமி அபிநயாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.
" தேங்க்யூ அபி, தேங்க்யூ சோ மச்" என்றாள் அபிராமி.
" மத்ததை லன்ச் டைம்ல மீட் பண்ணி பேசலாம் " என்றாள் அபிநயா.
"ஓகே அபி"
என்று சொல்லிவிட்டு அவரவர் வேலைகளை செய்ய சென்றனர்.
லஞ்ச் டைமில் நால்வரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
அபிநயாவை போலவே அபிராமியும் கீதாவை அக்கா என்றும் ரோகினியை ரோகிணி என்றும் கூப்பிட்டாள்.
அபி என்று ஏற்கனவே அபிநயாவை கூப்பிடுவதால் அபிராமியை அனைவரும் முழு பெயர் இட்டு கூப்பிடார்கள். ரோகிணி அபிராமியை 'அபிராமி அக்கா' என்றும், அபிநயா மட்டும் 'அபி அக்கா' என்றும் கூப்பிட்டனர். மற்றவர்கள் எல்லாம் அபிராமி என்றே அழைத்தனர்.
அப்போது அபிநயா அபிராமி இடம்,
" இந்த வீக் எண்டு வரைக்கும் டைம் கொடுங்க அபி அக்கா, நாங்க அந்த ரூம்ல இருக்கிற திங்க்ஸ் எல்லாம் கிளீன் பண்ணிட்டு உங்களுக்கு தங்கறதுக்கு வசதி பண்ணி தரோம்" என்றாள் அபிநயா.
" ஓகே அபி, கிளீன் பண்றதுக்கு ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க நான் வந்து ஹெல்ப் பண்றேன்"
" என்னால எல்லாம் கிளீன் பண்ண முடியாது அக்கா, வீட்டு வேலை செய்றவங்கள வச்சு தான் பண்ணுவேன்"
" சரி அட்வான்ஸும், ரென்ட்டும் எவ்வளவு என்று சொல்லுங்க "
" அதுதான் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அக்கா. நீங்களே ஏதாவது ஒரு அமௌன்ட் கொடுத்துடுங்க. எனக்கு வாடகை வாங்கி எல்லாம் பழக்கம் இல்லை"
" நான் சொல்றேன், அது ஓகேவா என்று மட்டும் நீங்க சொல்லுங்க "
" பெயர் சொல்லி கூப்பிடறீங்க இல்ல? அப்படியே வா போ ன்னு சொல்லுங்க. வாங்க போங்கன்னு சொன்னா ரொம்ப டிஸ்டன்ஸ்ல இருக்கிற மாதிரி இருக்கு"
"ஓகே, 20000 ரூபாய் அட்வான்ஸ்,
அஞ்சாயிரம் ரூபா வாடகையும். ஓகேவா?"
" ஒரே ரூம் தானே அக்கா இருக்கு. இதுவே அதிகம் தான் போதும். எனக்கு நீங்க அட்வான்ஸ் கூட கொடுக்க வேண்டாம். உங்களோட மனதிருப்திக்காக வாடகை மட்டும் கொடுங்க"
" இல்ல அப்படி ஒன்னும், நான் அட்வான்ஸ் ரொம்ப அதிகமா எல்லாம் சொல்லல, 20000 தான் சொன்னேன். சரி மூணு மாசம் வாடகை கணக்கு பண்ணி 15 ஆயிரம் கொடுத்துடறேன். ஓகே? "
"சரி அபி அக்கா, ஓகே" என்றாள் அபிநயா.
" ஈவினிங் உன் கூட வீட்டுக்கு வரட்டுமா வீட்ட பாத்துட்டு அப்படியே உங்க ஹஸ்பண்ட் கிட்டயும் தேங்க்ஸ் சொல்லிடுறேன்"
" அதெல்லாம் பரவாயில்லை அபி அக்கா, நீங்க சண்டே வந்து பால் காய்ச்சிக்கோங்க. நான் சாட்டர்டேல ரூம் கிளீன் பண்ணிடுறேன் "
"ஓகே அபி" என்று சொல்லி விட்டு
தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அபிநயாவுக்கு ஏனோ அபிராமி அவளுடைய வீட்டுக்கு வருவது சந்தோஷமாக இருந்தது. தன்னுடைய அக்காவே வருவது போல நினைத்துக் கொண்டாள்.
சனிக்கிழமை வரை காத்திராமல், வியாழக்கிழமையே பர்மிஷன் போட்டுவிட்டு வேலையாட்களை வர சொல்லி தேவையில்லாத பொருட்களை பழைய சாமான் காரனிடம் போட்டுவிட்டு, தேவையான பொருட்களை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு தன் வீட்டில் இருக்கும் ஸ்டோர் ரூம் கப்போர்ட்டில் வைத்தாள்.
அந்த ரூமின் ஒரு பக்கமாக சுவற்றை ஒட்டி கிரானைட் கல்லால் அடுப்பு மேடை வைக்கச் சொன்னாள். அபிராமி கொடுத்த 15 ஆயிரம் மொத்தத்தையும் செலவழித்து அந்த ரூமை பெயிண்ட் செய்து, ஒரு சிறிய பூஜை அலமாரி கட்டச் சொன்னாள், பின்னர் சில பாத்திரங்களை வைப்பதற்கு வசதியாக அந்த அடுப்பு மேடை பக்கத்தில் ஒரு அலமாரி கட்டிச் சொன்னாள்.
அந்த ரூமுக்கு வெளியே வந்து தான் அந்த பாத்ரூம் டாய்லட்டிற்கு செல்ல வேண்டும். மழைக்காலத்தில் நனைந்து கொண்டே அவர்கள் எப்படி வருவார்கள் என்று நினைத்து, இரண்டு பக்கமும் கம்பி வைத்து சீட் போடச் சொன்னாள்.
மேலும் அபிராமியின் அப்பா ஹார்ட் பேஷன் என்பதால் அவரால் இந்தியன் டாய்லெட் யூஸ் பண்ண முடியாது என்று ஒரு புதிய வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டையும் பிக்ஸ் செய்ய சொன்னாள்.
சனிக்கிழமை மத்தியானத்துக்குள் அனைத்து வேலையும் முடித்து விட்டாள்.
சனிக்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு வந்த தன் கணவனை அழைத்துக் கொண்டு போய் தான் செய்த அனைத்தையும் காண்பித்தாள்.
" என்னடி இது, இப்படி ரெடி பண்ணி இருக்க எல்லாத்தையும்? மொத்தம் எவ்வளவு செலவு ஆச்சு? உன்கிட்ட இருந்ததா? செலவுக்கு என்ன பண்ண? "
" அபிராமி அக்கா கொடுத்த அட்வான்ஸ் காசை யூஸ் பண்ணிக்கிட்டேன், அது இல்லாம மேல ஒரு 5 ஆயிரம் ஆயிடுச்சுங்க" என்று சொல்லி பயப்படுவது போல புன்னகைத்து நடித்தாள்.
" அடிப்பாவி, என்னவோ போ. நீ ரொம்ப மெனக்கெடுற மாதிரி தோணுது. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்"
என்றான் அர்ஜுன்.
" சரி சரி, கோச்சுக்காதீங்க வாங்க சாப்பிடலாம் பசிக்குது " என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு கீழே சென்று சாப்பிட அமர்ந்தனர்.
அர்ஜுன் லேட்டாக வரவே குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டிருந்தனர்.
அர்ஜுனுக்கு வீட்டை காட்டுவதற்காக விழித்திருந்தாள் அபிநயா.
காலை 6:00 மணிக்கே அபிராமியை வரச் சொல்லி இருந்தாள் அபிநயா.
ஐந்து மணிக்கு அலாரம் அடித்தது.
" என்னடி சண்டே அதுவும் அலாரம் வச்சுக்கிட்டு " என்று கடுப்பானான் அர்ஜுன்.
" சாரிங்க சாரி" என்று அவனுக்கு முத்தம் கொடுத்து தாஜா செய்துவிட்டு,
" நீங்க தூங்குங்க " என்று சொல்லிவிட்டு, வெளியே வந்து ஹாலில் இருக்கும் இன்னொரு பாத்ரூமில் குளித்துவிட்டு ரெடியாகி அபிராமிக்காக காத்திருந்தாள்.
6:15 மணியளவில் அபிராமி வந்தாள்.
புடவை கட்டிக் கொண்டு வந்தாள்.
" வாவ் சூப்பரா இருக்கீங்க அபி அக்கா "
என்று சொல்லி கட்டிப்பிடித்து வரவேற்றாள் அபிநயா.
" தேங்க்ஸ் அபி, தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்" என்றாள் அபிராமி.
" வாங்க மாடிக்கு போகலாம் " என்று சொல்லி தன் வீட்டிற்குள் இருக்கும் வழியில் அழைத்துச் சென்றாள்.
" என்ன அபி இந்த வழி தானா? ஒரு ஒரு முறையும் உங்கள டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்குமே? "
" அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா, உங்களுக்கு வழி தனியா இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் வரிங்களே, அதனால எங்க வீட்டு வழியா உங்களை கூட்டிட்டு போகலாம் என்று நினைத்தேன்"
" ஓ ஓகே ஓகே "
" நீ வேற பால் காய்ச்சணும்னு சொல்லிட்ட, பால் பாக்கெட் தவிர வேற என்ன வாங்கணும்னு எனக்கு தெரியல, அதனால அத மட்டும் தான் வாங்கிட்டு வந்தேன். வேற என்ன வேணும்? " என்றாள் அபிராமி.
" எல்லாம் எங்க வீட்ல இருந்து எடுத்துக்கலாம் அக்கா, நீங்க ஏன் டென்ஷன் ஆக்குறீங்க? அப்படியே இல்லனாலும் ஸ்விக்கி, செப்டோன்னு பல ஆப்ஸ் இருக்கு. ஆர்டர் பண்ணா கால் மணி நேரத்துல வீட்டுக்கே வந்துரும் " என்றாள் அபிநயா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
பாகம் 5
ஸ்மைல் செய்தான் அர்ஜுன்.
பின்னர் தன்னுடைய தட்டில் இருந்து அவனுக்கு ஒரு வாய் சப்பாத்தி ஊட்டி விட்டாள்.
சாப்பிட்ட பிறகு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு படுக்க வந்தாள் அபிநயா. ஆனால் அதற்குள் தூங்கி விட்டிருந்தான் அர்ஜுன்.
எப்போதுமே படுத்தவுடன் இருவருக்கும் தூக்கம் வராது. மற்றொருவர் வந்த பிறகு, அர்ஜுனின் கையில் சில நிமிடங்கள் அபிநயா படுத்துக் கொள்வாள். இருவரும் இதழ் முத்தம் கொடுத்து குட் நைட் சொல்லிவிட்டு கட்டிப்பிடித்தபடி சில நிமிடங்கள் தூங்குவார்கள். அதன் பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு தூக்கத்தில் தங்களையும் அறியாமல் தான் சற்று தள்ளி படுப்பார்கள்.
இன்று அபிநயாவின் மேல் இருந்த சற்று வருத்தத்தினால், அதையே யோசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் அப்படியே தூங்கி விட்டான்.
நன்றாக தூங்கும் அர்ஜுனை, அவன் தூக்கத்தை கலைத்து, எழுப்பி அவன் கையில் படுத்துக்கொள்ள சங்கடமாக இருந்தது அபிநயாவிற்கு.
இதழ் முத்தம் கொடுக்காததாலும், அவனுக்கு குட்நைட் சொல்லாததாலும், அவன் கையில் படுக்காததாலும், வெகு நேரமாக தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள் அபிநயா. அவளுக்கு தூக்கமே வரவில்லை. வெகு நேரத்திற்குப் பிறகே தூங்கினாள்.
தாமதமாக தூங்கியதால் தாமதமாக எழுந்தாள் அபிநயா.
பிறகு கிச்சனுக்கு சென்று அவசர அவசரமாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
அப்போது பின்னாலிருந்து அவளை இறுக்கமாக அணைத்தப்படி அழுத்தமாக அவள் கழுத்தில் முத்தம் கொடுத்து,
"குட் மார்னிங் மை டியர் பொண்டாட்டி " என்றான் அர்ஜூன்.
தீடீரென்று பின்னாலிருந்து அவளை அணைக்க கை வந்து அவள் இடையை தொடும் போது ஒரு நொடி திடுக்கிட்டாலும் அணைத்த கை தன் தலைவனுடையது என்று அந்த ஸ்பரிசத்திலேயே தெரிந்து கொண்ட நம் நாயகியின் இதழில் புன்னகை மலர்ந்தது.
"குட் மார்னிங் புருஷா" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அபிநயா.
பின்னர் குழந்தைகளை எழுப்பி குளிக்க வைத்து ரெடி செய்ய அர்ஜூன் சென்றான்.
அவன் கொடுத்த முத்தம் என்னும் உத்வேகத்தால் தன்னுடைய வேலைகளை தடையின்றி வேகமாகவும் திடமாகவும் செய்து முடித்தாள்.
இரவு முத்தம் கொடுத்துக் கொள்ளாமலும், கட்டிப் பிடிக்காமலும் தூங்கியதால் காலையில் கூட வருத்தமாக இருந்தாள் அபிநயா. ஆனால் அவளை நன்றாக அறிந்த அர்ஜூன் அவளுக்கு முத்தம் கொடுத்து அவளை நார்மலாக்கி விட்டான்.
பிறகு அனைவரும் ரெடி ஆகி சென்றனர்.
வண்டியில் குழந்தைகளை ஏற்றிக் கொண்ட பிறகு, காரில் ஏறிய தன் கணவனிடம்,
"என்னங்க" என்றாள் அபிநயா.
"சொல்லுமா" என்று கார் கண்ணாடியை இறக்கிக் கேட்டான்.
"அப்போ, நான் அபி அக்கா கிட்ட வீடு விடறதுக்கு ஓகே சொல்லிடவா?"
"சரி மா"
"ரென்ட், அட்வான்ஸ் எவ்ளோ சொல்லலாம்?"
"அது உன் விருப்பம், நான் அதுல தலையிட மாட்டேன். அதெல்லாம் நீயே டிசைடு பண்ணிக்கோ, பார்த்துக்கோ"
என்று சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு "பை செல்லம்ஸ்", "பை மா" என்று சொல்லிவிட்டு காரை ஓட்டிக் கொண்டு சென்றான் அர்ஜூன்.
"பை அப்பா" என்று குழந்தைகள் இருவரும் சொன்னார்கள்.
"பைங்க" என்று சொல்லிவிட்டு 'என்ன வாடகை சொல்லலாம்?' என்று நினைத்து கொண்டே பைக்கில் சென்று தன் குழந்தைகளை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு ஆஸ்பிட்டலுக்கு சென்றாள் அபிநயா.
"குட் மார்னிங்" என்று சிரித்தபடி ரோகிணி, லலிதா, கீதா மற்றும் அபிராமியை பார்த்து கூறினாள் அபிநயா.
லலிதா அபிநயாவிடம்,
"அபி, என் டியூட்டி முடிஞ்சிருச்சு, நான் இப்ப வீட்ல போய் தூங்க போறேன் அதனால குட் நைட். " என்ற சொல்லி சிரித்து விட்டு அனைவருக்கும் பை சொல்லிவிட்டு கிளம்பினாள் லலிதா.
அபிநயா மற்றும் கீதாவிற்கு ஜென்ரல் வார்ட் டூயூட்டியும், ரோகிணி மற்றும் அபிராமிக்கு பிரசவ வார்டு டியூட்டியும் போட்டிருந்தார்கள்.
' அபிநயா என்ன சொல்லப் போகிறாள்?' என்று டியூட்டிக்கு செல்வதற்கு முன் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிராமி.
' எதுவுமே சொல்லவில்லை என்றாலும், வீடு கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்டு. தான் வேறு வீடு பார்க்கலாம்' என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
லெட்ஜர் புக்கை எடுத்துக்கொண்டு அபிராமி செல்லும் முன் அவள் கையைப் பிடித்து,
" அபி அக்கா, எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் சம்மதம். நீங்க தாராளமா எங்க வீட்டு மாடியில் குடி வந்துக்கோங்க " என்றாள் புன்னகைத்தபடி.
அபிராமி அபிநயாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.
" தேங்க்யூ அபி, தேங்க்யூ சோ மச்" என்றாள் அபிராமி.
" மத்ததை லன்ச் டைம்ல மீட் பண்ணி பேசலாம் " என்றாள் அபிநயா.
"ஓகே அபி"
என்று சொல்லிவிட்டு அவரவர் வேலைகளை செய்ய சென்றனர்.
லஞ்ச் டைமில் நால்வரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
அபிநயாவை போலவே அபிராமியும் கீதாவை அக்கா என்றும் ரோகினியை ரோகிணி என்றும் கூப்பிட்டாள்.
அபி என்று ஏற்கனவே அபிநயாவை கூப்பிடுவதால் அபிராமியை அனைவரும் முழு பெயர் இட்டு கூப்பிடார்கள். ரோகிணி அபிராமியை 'அபிராமி அக்கா' என்றும், அபிநயா மட்டும் 'அபி அக்கா' என்றும் கூப்பிட்டனர். மற்றவர்கள் எல்லாம் அபிராமி என்றே அழைத்தனர்.
அப்போது அபிநயா அபிராமி இடம்,
" இந்த வீக் எண்டு வரைக்கும் டைம் கொடுங்க அபி அக்கா, நாங்க அந்த ரூம்ல இருக்கிற திங்க்ஸ் எல்லாம் கிளீன் பண்ணிட்டு உங்களுக்கு தங்கறதுக்கு வசதி பண்ணி தரோம்" என்றாள் அபிநயா.
" ஓகே அபி, கிளீன் பண்றதுக்கு ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க நான் வந்து ஹெல்ப் பண்றேன்"
" என்னால எல்லாம் கிளீன் பண்ண முடியாது அக்கா, வீட்டு வேலை செய்றவங்கள வச்சு தான் பண்ணுவேன்"
" சரி அட்வான்ஸும், ரென்ட்டும் எவ்வளவு என்று சொல்லுங்க "
" அதுதான் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அக்கா. நீங்களே ஏதாவது ஒரு அமௌன்ட் கொடுத்துடுங்க. எனக்கு வாடகை வாங்கி எல்லாம் பழக்கம் இல்லை"
" நான் சொல்றேன், அது ஓகேவா என்று மட்டும் நீங்க சொல்லுங்க "
" பெயர் சொல்லி கூப்பிடறீங்க இல்ல? அப்படியே வா போ ன்னு சொல்லுங்க. வாங்க போங்கன்னு சொன்னா ரொம்ப டிஸ்டன்ஸ்ல இருக்கிற மாதிரி இருக்கு"
"ஓகே, 20000 ரூபாய் அட்வான்ஸ்,
அஞ்சாயிரம் ரூபா வாடகையும். ஓகேவா?"
" ஒரே ரூம் தானே அக்கா இருக்கு. இதுவே அதிகம் தான் போதும். எனக்கு நீங்க அட்வான்ஸ் கூட கொடுக்க வேண்டாம். உங்களோட மனதிருப்திக்காக வாடகை மட்டும் கொடுங்க"
" இல்ல அப்படி ஒன்னும், நான் அட்வான்ஸ் ரொம்ப அதிகமா எல்லாம் சொல்லல, 20000 தான் சொன்னேன். சரி மூணு மாசம் வாடகை கணக்கு பண்ணி 15 ஆயிரம் கொடுத்துடறேன். ஓகே? "
"சரி அபி அக்கா, ஓகே" என்றாள் அபிநயா.
" ஈவினிங் உன் கூட வீட்டுக்கு வரட்டுமா வீட்ட பாத்துட்டு அப்படியே உங்க ஹஸ்பண்ட் கிட்டயும் தேங்க்ஸ் சொல்லிடுறேன்"
" அதெல்லாம் பரவாயில்லை அபி அக்கா, நீங்க சண்டே வந்து பால் காய்ச்சிக்கோங்க. நான் சாட்டர்டேல ரூம் கிளீன் பண்ணிடுறேன் "
"ஓகே அபி" என்று சொல்லி விட்டு
தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அபிநயாவுக்கு ஏனோ அபிராமி அவளுடைய வீட்டுக்கு வருவது சந்தோஷமாக இருந்தது. தன்னுடைய அக்காவே வருவது போல நினைத்துக் கொண்டாள்.
சனிக்கிழமை வரை காத்திராமல், வியாழக்கிழமையே பர்மிஷன் போட்டுவிட்டு வேலையாட்களை வர சொல்லி தேவையில்லாத பொருட்களை பழைய சாமான் காரனிடம் போட்டுவிட்டு, தேவையான பொருட்களை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு தன் வீட்டில் இருக்கும் ஸ்டோர் ரூம் கப்போர்ட்டில் வைத்தாள்.
அந்த ரூமின் ஒரு பக்கமாக சுவற்றை ஒட்டி கிரானைட் கல்லால் அடுப்பு மேடை வைக்கச் சொன்னாள். அபிராமி கொடுத்த 15 ஆயிரம் மொத்தத்தையும் செலவழித்து அந்த ரூமை பெயிண்ட் செய்து, ஒரு சிறிய பூஜை அலமாரி கட்டச் சொன்னாள், பின்னர் சில பாத்திரங்களை வைப்பதற்கு வசதியாக அந்த அடுப்பு மேடை பக்கத்தில் ஒரு அலமாரி கட்டிச் சொன்னாள்.
அந்த ரூமுக்கு வெளியே வந்து தான் அந்த பாத்ரூம் டாய்லட்டிற்கு செல்ல வேண்டும். மழைக்காலத்தில் நனைந்து கொண்டே அவர்கள் எப்படி வருவார்கள் என்று நினைத்து, இரண்டு பக்கமும் கம்பி வைத்து சீட் போடச் சொன்னாள்.
மேலும் அபிராமியின் அப்பா ஹார்ட் பேஷன் என்பதால் அவரால் இந்தியன் டாய்லெட் யூஸ் பண்ண முடியாது என்று ஒரு புதிய வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டையும் பிக்ஸ் செய்ய சொன்னாள்.
சனிக்கிழமை மத்தியானத்துக்குள் அனைத்து வேலையும் முடித்து விட்டாள்.
சனிக்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு வந்த தன் கணவனை அழைத்துக் கொண்டு போய் தான் செய்த அனைத்தையும் காண்பித்தாள்.
" என்னடி இது, இப்படி ரெடி பண்ணி இருக்க எல்லாத்தையும்? மொத்தம் எவ்வளவு செலவு ஆச்சு? உன்கிட்ட இருந்ததா? செலவுக்கு என்ன பண்ண? "
" அபிராமி அக்கா கொடுத்த அட்வான்ஸ் காசை யூஸ் பண்ணிக்கிட்டேன், அது இல்லாம மேல ஒரு 5 ஆயிரம் ஆயிடுச்சுங்க" என்று சொல்லி பயப்படுவது போல புன்னகைத்து நடித்தாள்.
" அடிப்பாவி, என்னவோ போ. நீ ரொம்ப மெனக்கெடுற மாதிரி தோணுது. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்"
என்றான் அர்ஜுன்.
" சரி சரி, கோச்சுக்காதீங்க வாங்க சாப்பிடலாம் பசிக்குது " என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு கீழே சென்று சாப்பிட அமர்ந்தனர்.
அர்ஜுன் லேட்டாக வரவே குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டிருந்தனர்.
அர்ஜுனுக்கு வீட்டை காட்டுவதற்காக விழித்திருந்தாள் அபிநயா.
காலை 6:00 மணிக்கே அபிராமியை வரச் சொல்லி இருந்தாள் அபிநயா.
ஐந்து மணிக்கு அலாரம் அடித்தது.
" என்னடி சண்டே அதுவும் அலாரம் வச்சுக்கிட்டு " என்று கடுப்பானான் அர்ஜுன்.
" சாரிங்க சாரி" என்று அவனுக்கு முத்தம் கொடுத்து தாஜா செய்துவிட்டு,
" நீங்க தூங்குங்க " என்று சொல்லிவிட்டு, வெளியே வந்து ஹாலில் இருக்கும் இன்னொரு பாத்ரூமில் குளித்துவிட்டு ரெடியாகி அபிராமிக்காக காத்திருந்தாள்.
6:15 மணியளவில் அபிராமி வந்தாள்.
புடவை கட்டிக் கொண்டு வந்தாள்.
" வாவ் சூப்பரா இருக்கீங்க அபி அக்கா "
என்று சொல்லி கட்டிப்பிடித்து வரவேற்றாள் அபிநயா.
" தேங்க்ஸ் அபி, தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்" என்றாள் அபிராமி.
" வாங்க மாடிக்கு போகலாம் " என்று சொல்லி தன் வீட்டிற்குள் இருக்கும் வழியில் அழைத்துச் சென்றாள்.
" என்ன அபி இந்த வழி தானா? ஒரு ஒரு முறையும் உங்கள டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்குமே? "
" அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா, உங்களுக்கு வழி தனியா இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் வரிங்களே, அதனால எங்க வீட்டு வழியா உங்களை கூட்டிட்டு போகலாம் என்று நினைத்தேன்"
" ஓ ஓகே ஓகே "
" நீ வேற பால் காய்ச்சணும்னு சொல்லிட்ட, பால் பாக்கெட் தவிர வேற என்ன வாங்கணும்னு எனக்கு தெரியல, அதனால அத மட்டும் தான் வாங்கிட்டு வந்தேன். வேற என்ன வேணும்? " என்றாள் அபிராமி.
" எல்லாம் எங்க வீட்ல இருந்து எடுத்துக்கலாம் அக்கா, நீங்க ஏன் டென்ஷன் ஆக்குறீங்க? அப்படியே இல்லனாலும் ஸ்விக்கி, செப்டோன்னு பல ஆப்ஸ் இருக்கு. ஆர்டர் பண்ணா கால் மணி நேரத்துல வீட்டுக்கே வந்துரும் " என்றாள் அபிநயா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.