Single PaRent!
உதாசீனம்!
இந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரியும் போது கூடவே அதை அனுபவித்த வலியுமே மனதில் நின்றிருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
"உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இங்க இடமில்லை. நீ இப்படினு தெரிந்திருந்தா நா வீடே கொடுத்திருக்க மாட்டேனே! ச்சிச்சி.. எப்படி தான் இப்படியெல்லாம் வாழுறீங்களோ?" என்ற அந்த வீட்டு உரிமையாளர் அவனின் தட்டுமுட்டு சாமானங்களை எல்லாம் எடுத்து ரோட்டில் வீசிவிட்டு, வீட்டை இழுத்து பூட்டு விட்டே சென்றிருந்தார்.
வீதியே அந்த அவலத்தைப் பார்த்து கைக் கட்டி நின்றது. ஏன் பல ஆண்டுகளாக அவனை அவர்களுக்குத் தெரியும் தான், இருந்தாலும் இப்போதைய அவனின் நிலையும் சூழலும் அவர்களை எட்டவே நிற்க வைத்தது தான், மனிதர்களின் உண்மை நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள ஒரு வழியாக இருந்தது போலும்!
தன் துணிப் பையை எடுத்துக்கொண்டு, சிதறு தேங்காயாய் இருந்த பாத்திரங்களை ரோட்டிலேயே ஓரமாக நிலைப்படுத்தி வைத்தவன், தன் கால்களைக் கட்டிக்கொண்ட தன் நான்கு வயது மகனை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான், சத்யன்.
அவமானம் எல்லாம் இந்த மூன்று வருட காலத்தில் பழகிப்போன ஒன்றாக இருந்தாலும், இப்போது புதிதாக முளைத்திருக்கும் உதாசினம் தான் அவனையும் சரி அவன் மகன் சஞ்சயையும் சரி பெரிதாக தாக்கியுள்ளது.
சொந்த வீட்டிலும் சரி வெளியே நண்பர் வட்டம், பிற ஆட்களிடமும் சரி ஒரு பெரும் ஒதுக்கத்தோடுக் கூடிய முகச்சுழிப்பே அவர்களை விட்டு இவனே தள்ளிவர வேண்டியதாயிற்று.
அமைந்த துணையும் அவனின் நிலையுணர் பிள்ளையையும் விட்டுச் சென்றிருக்க, மனதிற்குள்ளேயே மருகிக் கொண்டவனுக்கு போக்கிடம் தான் அமையவே இல்லை.
இந்த ஒர் ஆண்டாக பார்ப்பது என்னவே சொந்த தொழில் தான், ஆனால் இவனின் அடையாளம் தெரிந்தால் அடுத்த நொடி வாடிக்கையாளர்களின் அருவருப்பு பார்வைத் தான் சகிக் முடியாத ஒன்று.
"ப்பா பசிக்கி" என்ற சஞ்சயின் குரலுக்கு நடப்பிற்கு வந்தவன், விரைந்து தன் வைத்திருக்கும் கம்பியூட்டர் சென்டருக்குச் சென்றான்.
அது அவன் உழைப்பால் உயிர்ந்து, அவனின் பணத்தால் அமைத்த ஒரு இருபதற்கு பத்து அளவு இருக்கும் கடை. வாடகை கடையானாலுமே, அவனின் நிலை புரிந்தே அக்கடைக்காரரும் இவனுக்குக் கொடுத்திருந்தார் கடையை.
ஆனால், வாடகை மட்டும் இரண்டு மடங்கு!
சத்யனைப் போன்றோருக்கு கடைகள் கிடைப்பதே குதிரைக்கொம்பு தானே. அதில் இதுவெல்லாமா பார்க்க முடியும்.
பிள்ளையின் பசியைப் போக்கியவன் எண்ணமோ, 'ஒண்டிக் குடுத்தனம் செய்யக் கூட இடமில்ல. இதுல இனி என்ன தான் செய்ய போறேனோ' விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தவனுக்கு
இயற்கை அழைப்பு படுத்த, கட்டனக் கழிப்பறை நோக்கி நடையிட்டவனை தடுத்தது முன்னே அமர்ந்திருப்பவரின் குரல்.
"என்ன.. இந்த பக்கம்?" என்றவரின் கேள்விக்கு விடை தெரியாது நின்றவனின் காதைத் தீண்டியது என்னவோ, "ப்பா.. இங்க போ" என்ற சஞ்சயின் குரலுக்கு எந்த பக்கம் தான் சத்யனும் செல்வான்?!
"அய்ய ஒரே பேஜாரா போச்சு உன்னோட" என்றவர் சத்யானை அனுமதித்திருந்தார்.
'ஒற்றை ஆளாய் இனி இப்பிள்ளையை எப்படி வளர்ப்பேன்' என்ற எண்ணம் தோன்றினாலும், "என்ன ம்மா.. வரியா" என்ற பல பேச்சுக்கையும் சகித்து தனி ஒரு ஆளாய் பிள்ளையை வளர்ப்பதில் உள்ள சவால்கள் பெண்ணுக்கோ ஆணுக்கோ இருப்பதை விட, சத்யனைப் போன்ற திருநம்பிகளுக்கு மிகுந்த சவலாகத் தானே இருக்கும்!
சொந்தமாய் உழைத்து காசைக் கொடுத்து இருந்தாலும் கூட, ஒரு துண்டு இடம் இவர்களைப் போன்றவர்ளுக்கு கிடைக்காமல் இருக்கிறதற்கு காரணம் நம் மனப்பக்குவத்தைத் தானே காட்டுகிறது.
இன்னுமே மூன்றாம் பலினத்தவரை சக மனிதர்களாகப் பார்க்கும் திறனோ மனப்பக்குவமோ பலரிடம் வருவதே இல்லை.
அதிலும் சத்யனைப் போன்றவர்களுக்கு இருப்பிடம் முதல் அனைத்திலும் பிரச்சணைகள் தான்.
ஒற்றை பெற்றவனாய் அவனின் தன்னம்பிக்கையுடன் மகனை வளர்க்கும் இவனுக்கு கிடைக்கும் பெயர்கள் தான்? சொல்ல சகியாதவை.
பிள்ளை உடன் இருந்தாலுமே, அக்குழந்தை இச்சமூகத்தால் எந்த விதமான கோணத்தில் முதலில் பார்ப்பார்கள் என்று நாம் கணிக்க முடியும்?!
"என்ன எங்கிருந்து பிள்ளைய திருடீட்டு வந்த?" என்ற கேள்விகள் எல்லாம் சத்(யா)யன் இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ முறை கேட்ட ஒன்றே.
ஒற்றைப் பெற்றோரின் வலிகளும் சரி அதே அளவிற்கான அவர்களின் தன்னம்பிக்கையும் சரி எப்போதுமே பாராட்ட பட வேண்டியவை தான்.
ஆனால் திருநங்கை/நம்பியரின் வளர்ப்புமே அவர்களுக்கு நிகர் தானே! அதை நாம் சரியாக பார்த்தாலே அவர்களும் நம்மைப் போன்றவர்கள் என்ற எண்ணம் வந்தாலே போதுமானது.