“மாமா” என்று அழைத்து கொண்டே அகிலனின் மேல் தாவினாள் தங்கையின் மகள் ருத்ரா.
இவனும் தூக்கி கொஞ்சி கொண்டே சுடரை பார்வையாலே விழுங்கி கொண்டு இருந்தான்.
“அண்ணி உங்களுக்கு ஒரு விசயம் செய்து காட்ட போறேன்” சொல்லி சுடரின் கையைப் பிடித்து அகில் அருகே அழைத்து சென்றாள்.
தங்கை என்ன செய்ய போகிறாள் என்பதை முன்பே அறிந்தவன்“ஏய் காயு சும்மா இரு..” வெக்கத்துடன் சுடரின் முன்பு நெளிந்து கொண்டு இருந்தான்
“என்னோட செல்லம் அம்மாகிட்ட வாங்க என கொஞ்சி அவனது கையில் இருந்த குழந்தையை வாங்கியவள், இங்க யாரு இருக்கா” என்று ருத்ராவின் இதயத்தில் கையை வைத்து கேட்டாள்.
“ என்னோட அகி மாமா” என்று மழலை மொழியில் சொன்னவளோ மீண்டும் அவனை தூக்குமாறு இரண்டு கைகளையும் நீட்டினாள்.
“சரி மாமா கிட்ட போகலாம், இன்னொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க தங்கம், அப்ப அங்க யாரு இருக்கா” என்று அகிலனின் இதயத்தை காட்டி கேட்டதும் பட்டென்று
“நான்தான் இருக்கேன்” சொல்லிய வேகத்தில் தாயிடம் இருந்து அகிலிடம் தாவியது குழந்தை.
ருத்ராவின் இதயத்தில் மென்மையாக ஒரு அடி வைத்தாள் காயத்ரி.
“அய்யோ அடிக்கதிங்க அம்மா! மாமாவுக்கு வலிக்கும் சொல்லி அவளின் நெஞ்சில் தடவி கொண்டே, மாமா வலி போயிச்சா” தலையை ஆட்டி ஆட்டி கேட்டு கொண்டே தாயினை முறைத்தாள் பொடியவள்.
இதை பார்த்த சுடர் சிரித்து விட்டு,
ருத்ராவை தூக்கி வைத்து கொண்டு,
“ உங்க மனசுக்குள்ள நானும் வரட்டுமா! என்னையும் சேர்த்துப்பிங்கள் தானே!” அவளின் மூக்கை பிடித்து ஆட்டிக்கொண்டே கேட்டாள்.
‘ம்ம்’ என்று தலையை ஆட்டிய ருத்ராவை கீழே இறக்கி விட்டு கையில் ஒரு சாக்லேட் கொடுத்தவள்
“சரி போய் விளையாடுங்க!” என்று அனுப்பி வைத்தாள்.
“என்ன காயு இப்படியே இருந்தால் என்ன அர்த்தம், நம்ம வீட்டுக்கு கிளம்பு போலாம்!” என அவசர படுத்தினான் காயுவின் கணவன்.
“என்ன மாமா கல்யாணம் இப்ப தானே முடிச்சி இருக்கு, அதுக்குள்ள தங்கச்சியை கூட்டிட்டு போறேன் சொல்றிங்க? இன்னும் இரண்டு நாட்கள் இருந்துட்டு போகலாம் தானே!” தங்கையை பிரிய மனமில்லாமல்,மாமனை ஏறிட்டு கேட்டான்.
“நான் சொல்லி தான் தெரியனுமா! அகில், என்னோட வேலையை பத்தி, இதுவே அதிசயம் தான்.
இப்ப கிளம்பினா சரியா இருக்கும் வாம்மா”
“சரிங்க மாமா உங்க இஷ்டம்” என்ற சொல்லோடு நிறுத்தி கொண்டான்.
“என்னங்க ஒரு மணி நேரத்தில் கிளம்பிடலாம், அதுகுள்ள அண்ணியை ரெடி பண்ணிட்டு வரேன், நீங்க நம்ம ரூம்ல இருங்க,” கண்ணடித்து அவனின் சம்மதம் வாங்கினாள், அவனும் சிரித்து கொண்டே சென்று இருந்தான்.
சுடரை பார்த்து “அண்ணி நீங்க வாங்க நம்ம பக்கத்து ரூம் போலாம், டேய் நீ அம்மா ரூம் போ, கூப்பிடும் போது வந்தா போதும்” என்று அகிலை விரட்டினாள்
இருவரின் தனிமையை கெடுத்த தங்கையை, முறைத்து கொண்டே சென்றான் அகில்.
இருவரும் சிரித்து கொண்டே அடுத்த ரூம் செல்ல, அவனின் அறையை மலர்களாலும், வாசனை திரவம் கொண்டு முதலிரவுக்காக தயார் செய்து கொண்டு இருந்தனர், சகுவின் கையாட்கள்.
“அண்ணி நீங்க குளிச்சிட்டு வாங்க நான் உங்களை ரெடி பண்றேன்”
“ஐய்யோ காயு எனக்கு புடவை கட்ட தெரியும் நானே பார்த்துக்கிறேன்” என்று வராத வெக்கத்தை வரவழைத்து சொன்னாள்.
“கூச்சம் படாதீங்க அண்ணி, சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, என்னோட புருஷன் வேற எப்ப கிளம்புவோமோ என்று காத்துட்டு இருக்காரு” சொன்னவள் சுடர் எவ்வளவு மறுத்தும் அவளுடனே அந்த ரூமில் அமர்ந்து கொண்டாள்.
இப்போதைக்கு இவள் நினைப்பதை முடிக்காமல் செல்லமாட்டாள் என்பதை உணர்ந்து கொண்ட சுடர் வேற வழியில்லாமல், பாத்ரூம் சென்று கோவமாக கதவை மூடினாள்.
சென்ற சிறிது நேரத்திலேயே “எனக்கு நாப்கின் வேணும், எப்படி என்றே தெரியல, இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு, அதுக்குள்ள எப்படி வந்தது!” என்று சிறிய பதட்டமும், வருத்தமும் கலந்தவாறு, பாத்ரூமில் இருந்து தலையை மட்டும் நீட்டியவாறு தனக்கு வேண்டியதை கேட்டாள்.
“ பரவலை விடுங்க அண்ணி, கல்யாண அலைச்சல் வேற, குழப்பிக்காதீங்க இருங்க வரேன்” என்று அவள் கேட்டதை எடுத்து கொடுத்தவள், கொஞ்சம் தளர்வான ஆடையை அவளிடம் கொடுத்தாள்,
“வந்து இங்க கொஞ்சம் ஓய்வா அமருங்க, அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று கதவை சாத்தி விட்டு சென்றாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து நின்று விட்டான் அகில்.
‘ச்சே இவளா!’ என்று அவளை பார்த்து, மீண்டும் அமர்ந்து கொண்டான்.
இவனின் செயலில் வாய் விட்டே சிரித்தாள்.“அய்யோ பாவம் வடை போச்சே…” என சொல்லி கொண்டே அவனை கடந்து சென்றாள்,
மகள் சொன்னதை கேட்டு விட்டு,
“என்னது இது எல்லாமே தடங்கலாவே இருக்கு, விளக்கு அணைத்து இருக்கு, அவருக்கு வேற அடி பட்டு இருக்கு, இப்ப வந்த முதல் நாளே வீட்டுக்கு தூரமா இருக்கா! நடக்கிறது எதுமே சரியா படலையே!” இவ்வளவு நேரமும் சலனபட்ட மனதை கடினப்பட்டு மாற்றி, இயல்பாக இருந்தவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்து போனாள்.
சரிம்மா நான் கிளம்புறேன் சொன்னவள் தன் கணவனின் காதில் ரகசியமாக சொல்லி, வாயை மூடி சிரித்தாள்.
மகளை அனுப்பிவிட்டு, அமைதியாக அமர்ந்து விட்டாள்,இப்படியே யோசனையோடு எவ்வளவு நேரம் இருக்க முடியும், அடுத்த வேலையை பார்க்க வேண்டும் நினைத்து, சுடரை தேடி சென்றவள் அவளின் தலையை கோதி விட்டு, அவளை இயல்பாக மாற்றும் விதமாக கொஞ்சநேரம் பேசி சென்றாள் அகிலின் அன்னை.
“சகுந்தலா ஆ.. ஆ…” என தனது மனதில் உள்ளே இருக்கும் குழப்பத்தை கோவமாக மாற்றி வேலையாட்களை அழைத்தாள்
“சொல்லுங்க அம்மா! இப்ப என்ன ஆச்சி?” என்று பதட்டமாக ஓடி வந்தாள்.
“போய் பண்ண அலங்காரம் வரைக்கும் போதும் அப்படியே நிறுத்த சொல்லு, அப்படியே சுடருக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா, நாளைக்கு நான் சொல்றதை எல்லாம் ரெடி பண்ணணும் எண்ண சரியா!” என்று கடுமையான குரலில் கூறினாள்.
“எதுக்கு அத்தை இது எல்லாம், என்னவோ இப்பதான் பெரிய பொண்ணு ஆனா மாதிரி!” என்றாள்.
புதியதாக வந்தவள் மிரண்டு விட கூடாது என்று தன்னை ஆசுவாச படுத்தி கொண்டே “ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நடை முறை இருக்குமா, புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாமியார் வீட்டில், முதல் தடவை வீட்டுக்கு தூரமா இருந்தா, முதல் மூணு நாள், வயசுக்கு வந்த போது என்ன சடங்கு பண்ணுவாங்களோ அதை செய்வாங்க, இன்னமும் நிறைய வீட்டுல இருக்கு தெரியுமா, காயத்ரி கல்யாணம் ஆனா ஒரு வாரம் கழித்து இந்த மாதிரி சடங்கு அவங்க மாமியார் வீட்டுல செய்தாங்க, இப்ப நம்ம வீட்டுல, நீ சாப்பிட்டு படுத்துக, இந்த மூணு நாளும் நல்லா சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்க, என்ன வேண்டுமானாலும் சகுவை கேளு, துணைக்கு அவ உன்னோடு படுத்துப்பா என்ன சரியா!” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
சுடரும் அமைதியாக அனைத்தையும் கேட்டு கொண்டு சகுவை பார்த்தாள்.
“பாப்பா சாப்பிட்டு தட்டை கொடு, கீழே இருக்குற வேலையை முடிச்சிட்டு வரேன், நீ படுத்துக்க” என்றவள் கிளம்பி விட்டாள்.
“சரி மா நான் கிளம்புறேன்,” என்று காயத்ரி அகிலனை பார்த்து சிரித்து கொண்டே கணவனிடம் செல்ல, அவனும் சிரித்து கொண்டே
“சரி அப்ப நாங்க கிளம்புறோம்” என்று உறக்கத்தில் இருந்த ருத்ராவை தூக்கி கொண்டு சென்றார்கள்.
“என்னடா இது ஆளுக்கு ஆள் என்னைய பார்த்து சிரிக்கிறாங்க,”நடப்பது என்னவென்று புரியாமல் தலையை அழுத்தி கோதி கொண்டான்.
“சரி டா சாப்பிட்டு போய் உன்னோட ரூம் ல படு” என்று சொன்னவள்,
அவனிடம் சென்று “சுடர் மூணு நாள் கழிச்சி தான் உன்னோட ரூம்க்கு வருவா, அதுவரை இப்ப இருக்குற ரூம்ல தான் இருப்பாள்” என்றதும்.
“ஏன்?, எதுக்கு?...” என்றவன் தாயை நோண்டி எடுத்து விட்டான், ஒருவாறு நிலமையை எடுத்து சொல்லி அனுப்பி வைத்தாள்.
“டேய் அகிலா சாப்பிட்டு போடா…”
“ரொம்ப முக்கியம் போங்கமா சொல்லியவன் சோகமாக மாடியை நோக்கி நடந்தான்.
“பாலாவது குடிச்சிட்டு போடா!”கத்தி சொன்னவள் பேச்சு தான் அவன் மண்டையில் ஏறவில்லை போலும்,
“சரி சகுகிட்ட பால் கொடுத்து விடுகிறேன்” சொன்னதும் நடையை நிறுத்தியவன் தாயின் புறம் திரும்பி பார்த்தவன் “யார் கைல பால் எடுத்துட்டு வருவாங்க” என்றான்.
“சகு டா” என்ற வார்த்தை அவனுக்குள் ' என்னோட பொண்டாட்டி எடுத்துட்டு வருவா, ஆசையா ரெண்டு பேரும் சேர்த்து பேசி, கெஞ்சி, கொஞ்சி குடிக்க வேண்டிய பாலை ' ம்ம்' என்று பெருமூச்சை எடுத்தவன்.
“அமைதியா போ மா, வயிற்று எரிச்சலை கிளப்பிக்கிட்டு” என்று தளர்ந்த நடையில் அவனது அறையை திறந்தான்.
அறைய பார்த்தவனுக்கு ‘எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல’ இருந்தது, முதலிரவு பூ அலங்காரம், இது ஒன்னு தான் குறைச்சல், அழாத குறையாக குப்புற படுத்து கொண்டான். மல்லிகைபூ வாசத்துடன் அவனது மூக்கினை உரச, “ஐய்யோ கடவுளே! இது என்ன சோதனை, இவ்வளவு நாள் தூரத்துல இருந்தவளை, பக்கத்துல கொண்டு வந்து, தள்ளி வைச்சா என்ன அர்த்தம்?” என்று பொறுமிக்கொண்டான்.
கதவை திறந்து வெளியே வந்தவன், சுடர் இருக்கும் அறையை திறந்து பார்க்க, அவளோ சகுவை கட்டி கொண்டு படுத்து கொண்டு இருந்தாள்.
“அடி பாவி நான் இருக்க வேண்டிய இடத்தில… எப்படி தூங்குறா! கொஞ்சமாவது என்னைய நினைச்சி பார்த்தளா” என்று அடித்து கொண்டான்.
“என்ன தம்பி இந்த பக்கம்” புது பொண்டாட்டியை பார்ப்பவனை பாவமாக பார்த்து கேட்டாள் சகு,
“அமைதியா இருகா அவ
எழுந்திருக்க போற” என்றவன்,
அவளை பார்த்து விட்டு பெரு மூச்சை உள்ளிழுத்து விட்டான்.
அவள் தூங்கினால் தானே! “அம்மாடியோ மோக கணல் அதிகமா இருக்கு” என்று ஒற்றை கண்ணை திறந்து அகிலனை பார்த்து சொன்னாள்.
“சரி நீங்க பேசுங்க நான் வெளியே இருக்கேன்,” என நாசுக்கா நழுவ பார்த்தவளை, தடுத்து நிறுத்தி
“இல்லை கா நான் போறேன்,” ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தான் அகி.
கதவை மூடும் போது அவளை ஏக்கமாக பார்தவனை ‘சுடர் கண் அடித்தாள்’
“அடிங்க” என்று நாக்கை கடித்தான்.
“ஐய்யோ இந்த இளசுங்க கிட்ட என்னைய கோத்து விட்டுட்டு, அவங்க பாட்டுக்கு நிம்மதியா தூங்க போய்ட்டாங்க!” என்று புலம்பி கொண்டு படுத்தாள் சகு.
“அட வாங்க அக்கா” என அவளை அணைத்து கொண்டு தூங்கினாள்.
அப்படி இப்படி என்று இந்த கொடிய இரவை முடித்து கொண்டு சூரியன் வந்து சேர்ந்தான் அகிலனுக்கு.
சுடரின் பெயரை ஏலம் விடுவது போல், சதா அவளின் பெயரையே சொல்லி கொண்டு இருந்தான்.
“ என்னங்க எதுக்கு இப்படி இத்தனை முறை என்னோட பேரை சொல்லிட்டு இருக்கீங்க! எனக்கு நல்லாவே காது கேட்கும்!” அவனை பார்த்து நிதானமாக மிகவும் அழுத்தமாக சொன்னவளின் பார்வையில் பயம் கொண்டான் அகில்.
“மணியாச்சி அதான் காலேஜ் போகனும், வேலை இருக்கு” அவளின் பார்வையின் தாக்கத்தில் உள்ளே போன குரலில் மெதுவாக கூறினான்.
“எல்லோரும் வந்துட்டீங்களா வந்து சாப்பிடுங்க” அனைவரையும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
இன்று முக்கியமான டெண்டர் எடுக்க வேண்டி, அடிபட்ட காலுடனே கம்பனிக்கு சென்று இருந்தார் அகியின் தந்தை.
“சரி வாங்க சுடர் காலேஜ் போகலாம்”அவளின் கையை பிடிக்க போனவனின் கையில் ஒரு அடியினை வைத்த தாயை பார்த்தவன், பார்வையே சொன்னது, 'அவ என்னோட பொண்டாட்டி தானே நான் தொட கூடாதா!' என்று.
“இன்னும் ரெண்டு நாள் அவ எங்கேயும் வர மாட்டாள், நீ கிளம்பு, அம்மாடி நீ உள்ளே போமா!” என்றவளை ஏகத்துக்கும் முறைத்தான்.
இவ்வளவு நாள் வேறு வீட்டில் இருந்தவள், தனது வீட்டில் இருக்கிறாள் என்று தனக்கு தானே சொல்லி மனதை தேற்றி கொண்டாலும் கிறக்கமாக,
“அப்ப நான் கிளம்புவா!” என்று சுடரின் முந்தானையை பிடித்து கொண்டு சிணுங்கினான்.
“அத்தை…”
“சரி கிளம்பிட்டேன்” அவளின் முந்தானையை விடுத்து உறுமி கொண்டே, வேக நடையுடன் காரை நோக்கி நடந்தான்.
“நான் ஏதாவது வேலை செய்ய வேண்டியது இருக்கா?” வேலையை செய்ய பெரியதாக விருப்பம் இல்லாதவள், இதற்காக இங்கே வந்தோம் என எண்ணியவள், சும்மா கேட்டு வைப்போமே, எப்படியும் வேலை தர மாட்டார்கள் என்ற தைரியத்தில், மாமியாரிடம் வாயளவில் கேட்டு வைத்தாள்.
“ஒன்னும் இல்ல நீ எது தோணுதோ அது செய், ஒரு நாள் மட்டும் அந்த ரூம் ல இரு, பிறகு அகி ரூம் போகலாம், நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்,சகுவும் இன்னும் நிறைய பேர் இருக்காங்க வேலைய பாக்க, மருமகளிடம் கனிவாக பேசினாள்.
“சரிங்க அத்தை நான் மேல போறேன்.” மேலே வந்தவள் கதவை தாழ் போட்டுக்கொண்டாள், அவளது மாமாவிற்கு அழைப்பு விடுத்தவள்,
“மாமா.. அவங்க எப்படி இருக்காங்க, நல்லா இருக்காங்களா? அப்புறம் அவங்க சாப்பிட்டாங்க தானே!”என்று கேள்வி மேல கேள்வி கேட்டு கொண்டே போனாள்
“அம்மாடி கொஞ்சம் மூச்சை விட்டுக்க, எல்லோரும் நல்லா இருக்கோம், உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே!” என்றார் விருத்தாச்சலம்.
“நல்லபடியா போகுது, ஆனா அகில் தான் பாவம்!” அவனினின் மேல் உண்டான காதலை, இரக்க குணம் நினைத்து, இவருக்கு கோவத்தை வரவைத்தது, இவளின் புதிய போக்கு, கோபத்தை ஏற்படுத்த தன்னை கட்டு படுத்தி கொண்டு,
“சரி இந்தா அத்தை மீதி சொல்லுவாங்க!” எங்கே கோபமாக திட்டிவிடுவேனோ என்ற பயத்தில் மனைவிடம் கொடுத்து விட்டார்.
“என்னங்க என்னை என்ன சொல்ல சொல்றிங்க?” என்றவளிடம் சுடர் பேசியதை விளக்கி கொண்டு இருந்தார்.
“இங்க பாரு சுடர் ‘ஆம்பிள்ளை இரக்கம் பட்டா கடன்காரன், அதுவே ஒரு பொண்ணு இரக்கம் பட்டா புள்ளதாச்சி’ நீ எது நினைச்சி உள்ளே போனியோ அதை முடிக்காமல், எந்த ஆசைக்கும் இறங்கி போகாத, மனசை அலையவிடாமல் பொறுப்பா இருந்துக்க என்ன புரிந்ததா !
“நான் சும்மா தான் வீட்டுக்கு தூரம் சொல்லி தள்ளி போட்டு இருக்கேன், எப்படி அவரை சமாளிக்க போறேன், தெரியல ‘கொள்ள பாசம்’ காட்டி என்னைய சலனம் பட வைக்கிறாரு, என்ன பண்றது ஒண்ணுமே புரியல!” என்றாள் சுடர்.
“அப்ப உங்க நிலமையை மறந்து போய், அவங்க வீட்டு வாரிசை பெத்து எடுக்க போற, அப்படி தானே?” ஏகத்துக்கும் அவளை திட்டி, புதியதாக முளைத்த காதலை கடுஞ்சொற்களினால் காணாமல் போக வைத்தனர் இருவரும்.
“அத்தை… என்ன வார்த்தை சொல்லிட்டீங்க!, கொஞ்சம் சலனம் பட்டுட்டேன், இப்ப தெளிஞ்சிட்டேன், மாமா கிட்ட கொடுங்க” என்றாள்.
“சொல்லு தாயி” என்றவரிடம்.
“இனிமேல் அகிலன் என்னோட பொறுப்பு, நீங்க அவங்க அப்பாவை பாருங்க, அவரு எப்ப என்ன செய்ய போறாரு, என்ற விசயத்தை உங்களுக்கு சொல்லிட்டு இருப்பேன், அதுக்கு ஏத்த மாதிரி வேலையை பாருங்க” என்றவள்.
மீண்டும் போனை எடுத்தவள், காலேஜில் தனது கைபாவைக்கு அழைத்து, அங்கே நடப்பதை ஒன்று விடாமல் சொல்லுமாறு கட்டளை
இட்டு இருந்தாள்.
மடி கணினியை எடுத்தவள், கம்பனியில் இருக்கும் கேமராவில், அங்கே நடப்பதை பார்த்து கொண்டு இருந்தவள் மர்மமாக சிரித்து விட்டு, தனது துணிகளில் மறைத்து வைத்திருந்த புகைபடத்தை ஏக்கமாக பார்த்து வருடி கொண்டு இருந்தாள்.