• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 3

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
4
0
1
Chennai
சுடர் -3

அதோ இதோ என்று மூன்று நாட்கள் ஓடி விட, அகிலனுக்கு இன்று தான் சூனியமான நாட்கள் தொலைந்து போய்,சொர்கத்தின் வாசல் திறந்தார் போல், அவ்வளவு மகிழ்ச்சியாகவும் துள்ளல்லாகவும், கிளம்பி வந்தான்.

சகு அழைத்து வந்த ஜோதிடரோ, பொண்ணு வீட்டுக்கு தூரம் என்றதும், பிறகு பார்த்து கொள்ளலாம் சென்று விட, அவருடைய இடத்தில் இருந்து, போனில் சொன்ன விசயத்தை அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை சொல்ல காத்து கொண்டு இருந்தாள் அகியின் தாய்.

“அன்னைக்கு வீட்டுல நடந்த விசயங்கள் மனசுக்கு நெருடலாக இருந்தது, அதான் ஜோதிடரை நம்ம எல்லோரட ஜாதகத்தை பார்க்க சொன்னேன்” மனுஷன் என்ன சொல்லுவாரோ தயங்கிய வாரு கணவனின் முகத்தை பார்த்தாள்.
ஜோதிடத்தில் பெரியதாக பிடித்தம் இல்லையென்றாலும் மனைவியின் உணர்வுக்கு மதிப்பளித்து “என்னமா சொன்னாரு?” சாப்பிட்ட கையினை கழுவியவாறு கேட்டார்.

“சொல்லுங்க அம்மா!” என்ன சொன்னார் என்று விசயம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பரபரப்பாக கேட்டான் அகில்.

சுடர் என்ன என்பது போல் அவர்களின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள்.“அவரு நம்ம குடும்பத்தோட குல தெய்வக் கோவில்க்கு போய் பொங்க வைச்சிட்டு வர சொன்னாரு, அதுவரைக்கும்…” இழுத்தவாறு மகனின் முகத்தை பார்க்க,
“அதுவரைக்கும் என்ன மா?” என அவசர படுத்தினான்,

“நீ இவ்வளவு நாள் எப்படி இருந்தாயோ, இனியும் அப்படி தான் இருக்கணும்” என்றாள் கல்யாணி.
“பேசாம கல்யாணம் பண்ணாம ஒழுங்காக லவ் மட்டும் பண்ணிட்டு இருந்து இருக்கலாம்,அவளை தினமும் காலேஜ் ல வைச்சி, சைட் அடிச்சி கிட்டு, ஜாலியா இருந்து இருக்கலாம்,எல்லாம் என்னோட நேரம், என்னத்தை சொல்ல!” என்று சுடரை முழுங்குவது போல் பார்த்து சென்றான்.

“என்ன இங்க பார்வை கண்ணை நோண்டி காக்காக்கு போட்டுவிடுவன் பார்த்துக்க” எதிரே நின்றவள், குறும்பாக சொன்னாள்

“மானத்தை வாங்காதே அகிலா!” என சொல்லி விட்டு மகேந்திரன் தனது அறைக்கு சென்றார்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த கல்யாணியிடம் சென்று

“அம்மா எப்ப கோவிலுக்கு போக போறோம்?”

“இன்னும் ஆறு நாட்கள் கழித்து தான் போகனும்!” என்றதும்,

“என்னது ஆறு நாளா?…” ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்’ என முனங்கினான் அகிலன்

“அப்ப வேலைக்காவது அனுப்பிவிங்களா மாட்டீங்களா?’கடுகடுத்து கொண்டே கேட்டான்.
“அதெல்லாம் வருவா, கொஞ்சம் வாலை சுருட்டி கிட்டு அமைதியா இரு,அது போதும்” என்றவள் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள்.

“ஹே சுடர் இங்கே வா” என்றான் அகி.


“மாட்டேன் பா நான் என்னோட ரூம்க்கு போறேன்,” என்றவள் ஓடியே சென்று விட்டாள்.

“என்னை பெத்தத்தும் சரியில்லை, எனக்கு வாய்ச்சதும் சரியில்லை, எல்லாம் என் தலை எழுத்து, ‘அட கடவுளே எனக்கு எழுதும் போது கல்யாணம் ஆகியும் சன்னியாசியாக தான் இருக்கணும்’ என கொடூரமாக எழுதிட்டான் போல” மேலே பார்த்து புலம்பினான்.

இவற்றை எல்லாம் நின்று பார்த்தவளுக்கு
‘எல்லாம் கொஞ்ச நாள் தான்’ மனதிலே சொல்லி கொண்டாள்.

காலேஜில் இது நாள் வரை வேலை செய்தவள், இன்று அகிலனோட மனைவியாக, திருமதி. சுடர்கொடி அகிலன் ஆக முதல் முறையாக,
காலேஜில் வந்துவளும், வழமையாக தனது வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.அவளை நோக்கி வந்தவரும், வணக்கம் வைக்கும் முறையே சொன்னது, அவளை முதலாளியின் மனைவியாக பார்ப்பதாக.
பொறுத்து பொறுத்து பார்த்தவள், அனைவரும் மதியம் சாப்பிடும் இடத்திற்கு வந்தவள்.

“இங்க பாருங்க நான் எப்போதுமே, உங்க கூடவே இருந்த அந்த பழைய சுடர் தான், இனிமேல் யாராவது மேடம் சொன்னிங்க, அவ்வளவு தான் நான் பொல்லதவலாய்
மாறிடுவேன் பார்த்துக்கோங்க” என உரிமையாக அனைவரிடமும் சண்டைக்கு நின்றாள்.

“என்னடி பண்ணுவ” என்றாள் தோழி தீபா.

“வழக்கமா நீ தானே எல்லாரோட சாப்பாட்டை திருடி சாப்பிடுவ, ஆனா எல்லோரும் கொண்டு வந்ததை நான் எடுத்துப்பேன்,” என்றவளுக்கு பொய்யாக நடிக்கக்கூட வரவில்லை.

அவளின் அருகில் வந்த தீபா அவளை கட்டி அணைத்து கொண்டு, முத்தம் வைத்தவள் “இந்தா எடுத்துக்கோ, என் நண்பி கேட்டா உயிரே கூட தருவேன், ஆனா சோறு தரமாட்டேன் தரவேமாட்டேன்” என்று பாக்ஸ் ஹை பின்னால் ஒளித்து வைத்தாள்.

விளையாட்டு பசங்க, “கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மாவா எப்ப தான் நடந்துக்க போற, போதா குறைக்கு சுடரையும் சேர்த்து கெடுத்து வைக்காத!” என்று தலையில் ஒரு கொட்டு வைத்து சென்றார் தீபாவின் கணவன் மாணிக்கமும் மற்ற சகாக்களும்.

“யோவ் கொட்டிட்டா போற எப்படி இருந்தாலும், நைட்டு வீட்டுக்கு வந்து ' தீபா…' என்று பின்னாடியே சுத்துவல அப்ப தெரியும் இந்த தீபா யாரு உனக்கு?” கொட்டிய இடத்தில் வலி இல்லையென்றாலும் வலிப்பது போல் தேய்த்து கொண்டு இருந்தாள்

‘என்னோட பொண்டாட்டியை எப்படி கரெக்ட் பண்ணணும், எனக்கு தெரியும், சரிதான் போடி..” என்றான் அவனும் விடாது.

இருவரும் காதலித்து மணந்து கொண்டவர்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்துவார்கள், இவர்களின் காதல் சண்டையே அடிப்படையாக கொண்டது,சாப்பிட்டியா என்று கேட்பது கூட ஒரு வித, கண்டிப்புடன் இருக்கும். ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததும் இல்லை, பேசாமல் இருந்ததும் இல்லை.

( உங்க வீட்டில் எப்படி…)

“ஐய்யோ சாப்பிட்ட வரைக்கும் போதும், கையை கூட கழுவ விடாமல் தீபாவை தர தரவென்று இழுத்து கொண்டு சென்றாள் சுடர். இதை பார்த்த தீபாவின் கணவனோ

“முதலாளி அம்மா…, சுடர்கொடி தாயே..! எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்டாட்டி, எந்த சேதாரமும் இல்லாமல் திருப்பி கொடுத்துட்டு போ மா..” கெஞ்சுவது போல் நடித்தான்.

“யோவ் போயா..” என்று சொல்லி தீபாவை தனியாக அழைத்து சென்று இருந்தாள்.

“தீபா, தீ..பா..”

“ம்ம்”

“தீபா…”

“அடிங்க என்னடி ஏதோ புதுசா கல்யாணம் ஆன பொண்ணு சந்தேகம் கேக்கணும் வந்து இருப்ப நினைச்சி, என்னோட மாணிக்கத்தை விட்டு வந்தா, ‘என்னோட பேரை தேய்ந்து போன ரெக்கார்ட்ஸ் மாதிரி’ பேரை மட்டும் சொல்லிட்டு இருக்க, இப்ப விசயத்தை சொல்றியா, இல்ல என்னோட புருஷன் கிட்ட போகட்டுமா!” கடுப்பாக கேட்டாள்.

‘ம்ம்’ என்று பெரு மூச்சை விட்டவள்,

சுடரின் மனதில் இவ்வளவு நாளாக அழுத்தி கொண்டு இருந்த கடந்த காலத்தையும், நிகழ்காலத்தை சொல்லி “இப்ப அவன் எனக்குள்ள முழுசா ஆலமரம் கணக்கா பிரமாண்டமாக வளர்ந்து நிக்கிறான்,’ எப்படி என்னோட எண்ணத்தை நிறைவேற்ற முடியும் சொல்லு.” என்றாள் சுடர்.

தீபா சுடரை நெருங்கி, “உனக்குள்ளே இவ்வளவு வலியை வைச்சி கிட்டு தான், இவ்வளவு நாள் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிச்சியா, நீ ரொம்பவே பாவம் டி” என்று வாஞ்சியாக அவளின் தலையை வருடி விட்டவள்,

“சரி நான் சொல்ற மாதிரி செய், ஆனா அகிலன் சார் மேல வைச்சி இருக்கிற காதல் உண்மைதானே!” சந்தேகமாக கேட்டாள்.

“என்னோட எண்ணம் நிறைவேறிய பிறகு நான் இந்த மாதிரி இருக்க மாட்டேன் டி” அவனின் மேல் இருந்த காதலில் கண்கள் மின்ன கூறினாள்.

“அப்ப சரி”சலனபட்ட மனதை தெளிவு செய்து இருந்தாள் தீபா.
தான் அடுத்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் தனக்குள் வகுத்து கொண்டு இருந்தாள்.
பழிவாங்க வழிகிடத்துவிட்ட சந்தோசத்தில், முகம் மகிழ்ச்சியில் ஜொலித்து.

“என்னடி சுடர்கொடி, சுடரொளியா மின்னுற!”என கேட்டவள், சுடருக்கு முத்ததை கொடுத்து விட்டு, அவளின் சந்தோசத்தை பார்த்தவளுக்கு, வந்த வேலை முடிந்தது என்று, தனது தலைவனை தேடி சிட்டாக பறந்து சென்றாள் தீபா.

மகிழ்சியோடு சென்றவளை ஏக்கத்தோடு பார்த்தவள், ‘சாதாரண மனிதன் வாழ்க்கை வாழ கூட போராட வேண்டியதா இருக்கு!’ நினைத்தவளின் தோலை பற்றினான் அகிலன்.

சில நொடிகள், பதட்டமாக மாறி, யாருடைய கையென உணர்ந்த பிறகு தன்னிலை அடைந்தாள்
“அப்பாடா நீங்களா?, இப்படி பின்னாடி இருந்து தொட்டு பயமுறுத்திறிங்க!”என கோவமாக கேட்டாள்.

“இந்த அகிலனோட பொண்டாட்டி, இந்த காலேஜுக்கு ஓனர், என்னை தவற தொட யாருக்கு தைரியம் வரும் சொல்லு” என்றான்.


அவனை முறைத்து பார்த்தவளோ “அந்த சரத்தை மறந்துட்டிங்க? அப்படி தானே!” என்றாள்.
இது வரை இருந்த மனநிலை முற்றிலும் வடிந்து விட்டது அகிலுக்கு, எப்படி பேசினால் அவன் வருத்தம் படுவான் என்பதை அறிந்தே வைத்து இருந்தாள் சுடர்.
“இப்ப எதுக்கு அவனை பத்தி பேசிக்கிட்டு, நம்மை பத்தி பேசு,” என்றவன் வெடுக்கென்று எழுந்து கொண்டான்.
அவனை சீண்டி விட்டவள், சமாதானம் செய்ய முயற்சி
செய்யவில்லை, கோவமாக எழுந்தவன், தன்னை சமன் செய்து கொண்டு மீண்டும் அவளிடம் வந்து

“சரி சுடர் சாந்திரம் வேலை முடிந்ததும், வெளியே எங்கேயாவது போய்ட்டு வரலாம்.” என்று சொன்னவன், திரும்பி பாரது தனது அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தது இருந்தான்.

கோவமாக நடந்து சென்றவனை வெறித்து பார்த்தவள்,

“இந்த காதல் என்னோட வைராக்கியத்தை விட பெரியது இல்லை!” என்று விரக்தியாக கூறியவள் போனை எடுத்து தனது மாமனுக்கு அழைப்பை விடுத்தாள்.

“மாமா அவருக்கு கிடைக்க வேண்டிய டெண்டர், என்ன ஆச்சி! என்று கேட்டவளுக்கு, அவரின் பதிலில் உற்சாகமாக விசில் அடித்து கொண்டு, தனது வேலையை பார்க்க சென்றாள்.

இங்கே அலுவலகம் வந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை, “எப்படி அவ என்னைய அவமானம் படித்துற மாதிரி பேச முடியுது,” என்று அவளின் பேச்சையே மீண்டும் மீண்டும் மண்டைக்குள் ஓடி கொண்டு எரிச்சலைக் கிளப்பியது.
“ஹலோ சார் உள்ளே வரலாமா?” என்ற ரகுவின் குரலில் சிந்தனை கலைந்து இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டி கொண்டான்.

“என்னடா கேள்வி இது உள்ளே வா!” என்றான்.

“இப்ப என்னோட அண்ணாவை பார்க்க வரல, கம்ப்யூட்டர் லேப் இன்சார்ஜ் ஹா வந்து இருக்கேன்” என்றாள்.

“சரி வந்த விசயம் சொல்லுங்க!” என்று தனது இருக்கையில், கம்பீரமாக கால் மேல் கால் போட்டு கொண்டு நிமிர்ந்து விரைப்பாக கேட்டான் அகில்.

‘ரொம்பதான் ஒரு பேச்சுக்கு சொன்னா, அப்படியே அய்யா உக்கார்ந்து கொண்டு இருக்குற தோரணையை பாரு, இரு இதுக்கு வட்டி முதலா என்கிட்ட ஐடியா கேக்க வரும் போது பாத்துக்கிறேன்’ என தனது வாய்க்குள்ளவே முனங்கினான் ரகு.

“ஹம்ம்” என்று கனைத்து “வந்த விசயம் சொல்லுங்க சார், இப்படி அமைதியா நின்றால் என்ன அர்த்தம், சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று ரகுவின் பொறுமையை சோதித்து இருந்தான் அகி.

“சார் லேப்க்கு இன்னும் ஒரு சில கம்ப்யூட்டர் வாங்கனும், அப்புறம் லேப் ரூம்ல நிறைய வொர்க் இருக்கு, மேனேஜ்மென்ட் கொஞ்சம் சீக்கிரம் செஞ்சி கொடுக்கணும், அடுத்த மாதம் பிராக்டிகல் வேற வர போகுது” என்றான்.

“அவ்வளவு தானே பாத்துக்கலாம்!” வெகு இயல்பாக சொன்னான்.

“ரகு உன்கிட்ட ஒரு விஷயத்தை பத்தி பேசணும்” என்றான்.

“சாரி சார் வேலை நேரத்துல, யாருடைய பர்சனல் விசயமும் பேசறது இல்லை!” என்றான்.

“எல்லாம் என் நேரம் இந்த நண்டா சுண்டா கிட்டயெல்லம், அனுமதி கேட்டு கொண்டே இருக்க வேண்டியதா இருக்கு.”என்று சொல்லி தலையில் தட்டி கொண்டான்.

இதை பார்த்த ரகுவோ, ‘மவனே என்கிட்டேயே அதிகார தோரணை காட்டுற, அப்படி வா வழிக்கு’ என்று சிரித்தவன்.

“காலேஜ் முடிஞ்சதும் பிளே கிரவுண்ட் வந்துடுங்க!” என்று சொல்லி அவனின் பதிலை எதிர் பார்க்காமல் சென்றான்.
“இதை தான் ‘கர்மா இஸ் பூமரிங்’ சும்மாவா சொன்னாங்க ஆனா இவ்வளவு சீக்கிரம் எனக்கு வரும் நினைச்சி பார்க்கவில்லை” என்றான் அகிலன்.

என்னதான் அகிலிடம் விளையாட்டாக பேசிவிட்டு வந்தாலும், கண்டிப்பா அது சுடரை பற்றி தான் இருக்கும், நினைத்தவன் கவலையில் ஆழ்ந்து போனான்.
அவனுக்கு தான் தெரியுமே, அவளின் குணத்தை பற்றி.


நேரம் போக போக வீட்டில் என்ன நடக்கும், என்ற ஆர்வத்தில் சுடர் சந்தோசமாக தீபாவை பார்க்க வந்தாள்.