• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 4

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
5
0
1
Chennai
ரகுவும் அகிலனும் பேசி கொண்டு இருந்த அதே இடத்தை தள்ளி, தீபாவும் சுடரும் பேசி கொண்டு இருந்தனர்.

இங்கே அவளை கல்யாணம் பண்ணிய பிறகும், கரெக்ட் பண்ண ஐடியா கேட்டு அவனும்,
அவனிடம் இருந்து விலகி போக, ஐடியா கேட்டு கொண்டு இவளும்,ஒரே இடம், தம்பதி இருவருக்கும் இடையே வெவ்வேறு எண்ணம்.

“என்ன அகி இன்னும் சுடரை பார்த்து பயந்து கொண்டே இருந்தா, நான் எப்போ சித்தாவா மாறுவது, அதுக்கு தான் அப்பவே சொன்னேன், இந்த ராட்சசி எல்லாம் ஒத்து வராது, சொன்னா கேக்கணும், யாரு சொல்ற பேச்சை கேட்கிறாங்க!”என கிண்டலாக அவனை பார்த்து சொல்லி கொண்டு இருந்தான்.

“டேய் இன்னும் பக்கத்துல போய் பேச கூட ஆரம்பிக்கல, அதுக்குள்ள எப்படி நான் பயந்திட்டேன் சொல்ற!” என்றான் அகி.

“என்னது பேச கூட ஆரம்பிக்களையா?,ஏதோ மூணு வருசமா காதலிச்சேன் அப்படி இப்படி சொன்னிங்க?” திகைத்து பார்த்தான்.

“ஆமாம் மூணு வருசமா
காதலிச்சேன் தான், ஆனா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து
காதலிச்சோம் சொல்லவே இல்லையே!” என்றான்.

“இந்த ஒருதலை ராகம் எப்படி கல்யாணத்துல போய் முடிந்துச்சி!” வியப்பாக கேட்டான்.

“நான் எங்க அம்மாகிட்ட அவளை பார்த்ததில் இருந்து இப்ப வரைக்கும், அவளை பத்தி பேசுறதை வைத்து, அவங்களா கேட்டாங்க, அவளை பொண்ணு பார்த்து கட்டி வைக்கவா என்று, இது தான் சமயம் சொல்லி நானும் சரி சொல்லிட்டேன், ‘சுடர் எங்க அப்பாவுக்கு நல்ல பழக்கம்’ என்பதால், என்னோட வேலை சுலபமான முறையில் முடிந்தது,” என்றவனை கோபத்துடன் முறைத்து கொண்டே இருந்தான் ரகு.

“நீ போட்ட சவால் ல தோத்து போய் இருக்க, என்னயைய ஏமாத்தாதே!” என்றான் ரகு.

“ஹலோ ப்ரோ நான் அவளை கல்யாணம் பண்ணிப்பேன் தான் சொன்னேன், அவளை லவ் பண்ண வைப்பேன் சொல்லி சவால் விடல, என்ன புரிந்ததா!” என ரகுவின் நெற்றியை தட்டி விட்டான்.

“இரு நான் ரீவைண்ட் பண்ணி பார்க்கிறேன்!” என்றான் ரகு.

அன்றைய சம்பவம் மனதில் ஓட்டி பார்த்து கொண்டான்.

“சரி பொழைச்சி போ, இப்ப எதுக்கு என்கிட்ட பேசணும் சொன்னிங்க?, அங்கே பாருங்க சுடர் என்னையே பார்த்து முறைத்து கொண்டே, பேசுற மாதிரி இருக்கு” அவளின் கூர்மையாக பார்வை எதிர்கொள்ளமுடியாமல்

“உன்னையே எதுக்குடா பாக்க போறா? நான் பக்கத்துல இருக்கேன், இந்த மாமனை ரசித்து கொண்டே பேசுரா..” காதல் பொங்க அவளை ரசித்தவாறு பார்த்தான்.

“ஐய்யோ சாருக்கு ரொம்ப ஆசை தான், அவ பார்வையை பார்த்தா, ரசிக்கிற மாதிரியா தெரியுது? அவ பார்வையிலேயே எரிக்கிற மாதிரி இருக்கு” கிண்டலாக ரகு சொல்லவும், கடுப்புடன்

“அப்ப நான் கிளம்புறேன், அவ எனக்காக காத்து கொண்டு இருக்கா,” சொல்லி கொண்டே காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான், இவனுக்காக காத்து கொண்டு இருந்த ஒரு ஜீவனை கண்டுகொள்ளாமல் கிளம்பிவிட்டான்.

“என்னைய எதுக்கு கூப்பிட்டான், என்ன விசயம்!, ஏதும் சொல்லாமல், பேருக்கு ரெண்டு வார்த்தை பேசிட்டு, இப்படி புலம்ப விட்டு போறதே, இந்த அகிலுக்கு வேலையா போச்சி, நண்பன் தான் இப்படி பண்ணுவாங்க, ஆனா அண்ணனோட நண்பன் இப்படி தான் பண்றான், ‘நண்பன் மெட்ரியல் என்றாலே இப்படி தான் இருப்பாங்க போல!’ ரகு புலம்பி கொண்டு இருக்க.

அவனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு “என்ன சார் தனியா பேசிக்கொண்டு இருக்கீங்க?” என்றாள் பெண்ணொருத்தி,

“நான் எங்க தனியா பேசிக்கிட்டு இருக்கேன்,” இங்க பக்கத்துல பாருங்க என்று, காலியா இருந்த இடத்தை காண்பித்து,
“செத்துப்போன உங்க பாட்டி கூட பேசிக்கிட்டு இருக்கேன்!” என்றான் ரகு.

' ஹம்' என்று கோவமாக மூச்சை இழுத்து விட்டவள் “சாருக்கு கொழுப்பு கூடி போச்சி!” என்று அவனின் முதுகில் ஒரு அடியை வைத்தாள்.

“ஏய் அடிக்காதடி! வலிக்குது” என்றவன் அவளின் கையை பிடித்து ஒரு சுற்று சுற்றி தன் வளைவுக்கு கொண்டு வந்தான். அவன் சுற்றியதில் இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி குறைந்து, இருவரின் இதய துடிப்பு கேட்கும் அளவிற்கு நெருங்கி இருந்தனர், இந்த தருணம் அனைத்தையும் மறந்த நிலையில் இருவரும் இருக்க, முதலில் நிதர்சனத்தை வந்தது என்னவோ அவள் தான்.

“விடுங்க ரகு, என்ன பண்ணிட்டு இருக்க, எங்கே இருக்கோம் தெரியுதா?” கூச்சதில் நெளிந்து அவனை பார்த்து சொன்னாள்.

“இப்ப இடம் தான் பிரச்சனையா! வேற இடம் போலாமா?’ என்று மனம் கேட்டாலும், அமைதியாக விலகி நின்று கொண்டு இருந்தான்.

“என்னடி! எதுக்காக என்னை தேடி வந்த, என்ன விசயம்” அவளை பார்த்து கண்ணை அடித்து கொண்டு கேட்டான்.

“சும்மா தான் நீ தனியா இருக்கிறதை பார்த்தேன், அதான்..” என்று அவள் அவனின் செய்கையில் வெக்கப்பட்டு குனிந்து கொண்டாள்.

“அத்தானை பார்த்ததும், காதல் பொங்கி வந்துடுச்சி மேடத்துக்கு அதானே!” அவளை பார்வையிலேயே விழுங்கியபடி அவளை மேலும் மேலும் நாணம் கொள்ள வைத்தான்.

“ஐய்யோ டா.. நினைப்புதான், டேய் ரகு!” என்றாள் வேண்டுமென்றே

சட்டென்று முகத்தை மாற்றி கொண்டு, “பேரு சொல்லி கூப்பிடாமல்,அத்தான் சொல்லும் போது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா! டேய்.., ரகு.. இது நீ சொல்றதும் மத்தவங்க சொல்றதும் ஒரே மாதிரி இருக்கு, அத்தான் சொல்லுடி!” அவளின் கையை பிடித்து கொண்டு கொஞ்சலாக கெஞ்சினான்.

“ஓ.. அவ்வளவு ஆசையா இருந்தா,
கல்யாணம் ஆனா பிறகு சொல்றேன், இப்ப ரகு தான்” என்றவள், தன்னோட கைப்பையை மாட்டிக்கொண்டு நடந்து சென்றாள்.

கண்ணை விட்டு மறையும் வரை தன்னையே மறந்து அவளை ரசித்து பார்த்தான்.
ரகுவும் மலரும் ஒரே டிபார்ட்மெண்ட் ஸ்டாப், முதலில் எலியும் பூனையுமாக இருந்தவர், இன்று காதலர்கள்.
ரகு வீட்டில் காதலுக்கு தடை இல்லை ஆனால், மலரின் வீட்டில் இவளை வருமானத்தை நம்பியும் இரண்டு ஜீவன் இருக்கிறதே, அதனால் திருமணத்தை தள்ளி கொண்டே இருக்கிறாள்.

ரகு உதவி செய்கிறேன் என்றாலும், சுயமரியாதை அப்படி இப்படி சொல்லி காதில் இரத்தம் வர வைத்து விடுவாள். இன்னும் ஒரு வருட படிப்பை அவளின் தம்பி முடித்து விட்டாள், அவன் வேலைக்கு சென்றதும், பேசி கல்யாணம் பண்ணலாம் என்று பரஸ்பர ஒப்பந்தம் இருவருக்குள்ளும்.

அகிலன் காரை எடுத்து கொண்டு வருவதை பார்த்த தீபா,

“இங்கன பாரு நீ எதுக்கா அவங்க வீட்டுக்கு போனியோ, அதை முடிக்காமல் மனசை அலை பாய விடாதே!, உன்னால் முடியும், அகிலன் பாவம் தான், எல்லாம் முடிச்சிட்டு அவரை சமாதானம் பண்ணிக்கலாம் விடு” என்றாள் தீபா.

“நான் எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்கேன், இந்த சுடர் கெட்டவங்களை எதிர்க்கும் போது, அவனை சுத்தி இருக்கிற, நல்லவங்களும் கஷ்டம் படனுமா! என்று தான் யோசிக்கிறேன், மத்தபடி வேற எந்த குழப்பம் இல்லை!” என தீர்க்கமாக சொன்னாள்.

“இது போதும் நீ ஜெயிச்சிடுவ, போ உன்னோட புருஷன் வண்டி வருது” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள் தீபா.

இருவரும் பயணம் ஆரம்பிக்க, தீபா கையசைத்து விடை பெற்றவள் மாணிக்கத்தின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தாள்.

“ஐய்யா சுடர் நீ என்னோடு கார்ல, தனியா வர, கனவுல நினச்சது எல்லாம், இப்ப நிஜத்துல நடக்கும் போது சந்தோஷ இருக்கு தெரியுமா!” என்று அவளை பேச விடாது, இவனே கேள்வி கேட்டு, இவனே பதில் சொல்லி கொண்டு இருந்தான், அவள் ‘ம்ம்’ கொட்டி கொண்டு வந்தாள், நினைத்து நடந்த சந்தோசத்தில் அவள் எண்ணங்களோ, வேற உலகத்தில் இருந்து.

சட்டென்று காரை நிறுத்தினான் அகிலன், என்ன என்பது போல் அவனின் முகத்தை பார்த்தாள்,

“இறங்கு சுடர் பீச் வந்துடுச்சி” என்றான்.

அவன் சொல்லியே பிறகே சுற்றி பார்த்தாள், இதுவரை அவன் பேசியது அனைத்தும் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ என்பது போல் வெறுமனே தலையசைத்தவளின் எண்ணம் முழுக்க எக்கேயோ இருக்கவே, அகிலன் இவ்வளவு நேரம் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் பேச முடிந்தது, இதுவே அவள் கவனித்து இருந்தாள்,
சுடர்கொடி அவனை ஒரு வழி செய்து இருப்பாள்.

இருவரும் மணலில் நடந்து சென்று, சிறிது நேரம் கடலில் கால்களை நனைத்தவர்கள் மணற்பரப்பில் அமர்ந்தனர், இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் இரண்டு பேர் இருக்கலாம்.

“என்ன சுடர் இவ்வளவு தள்ளி உட்கார்ந்து இருக்க?” என்றான் அகிலன்.

கடலில் இருந்த கண்ணை இவன் பக்கம் திரும்பி முறைத்து பார்க்க

“சரி சரி இப்படியே உட்கார்ந்தாலும் தப்பு இல்லை, அப்படி பார்க்காதே!” என்றான்.

இவனின் வெகுளி தனத்தை தன்னுள்ளே அவனே அறியாமல் ரசித்து கொண்டாலும், வெளியே முறைப்பும், கடுகடுப்பும் தான்.

அவள் அலையை ரசித்து கொண்டு இருக்க, இவனோ இவளை ரசித்து கொண்டு இருந்தான்.

“யாப்பா புதுசா கல்யாண ஆன ஜோடி மாதிரி தெரியுது, பூ வாங்கி வைச்சி விடுப்பா!” என்று பூவினை வைத்து கொண்டு பூவிற்பவள் நச்சரித்து கொண்டு இருக்க, அவளிடம் இருந்து தப்பிக்கவே பூவினை வாங்கியவன், சுடரையும் பூவையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான், அவளிடம் கொடுத்து விடவேண்டும் என்று “ஏங்க சுடர்” என்று அவளை அழைத்தவன் கையில் இருந்த பூவினை அவளின் புறம் நீட்டினான்.

என்ன என்பது போல், அவனை பார்த்தவள், எதற்காக அழைத்தான் என்று தெரிந்தும், “என்ன?” என்றாள்.

“இந்தாங்க பூ வைச்சிக்கிங்க!” என்று நீட்டிய அவனை முறைத்து பார்க்க, “நான் சொல்ல சொல்ல அந்த அம்மா தான் கொடுத்துட்டு போனாங்க! வேண்டாம் என்றால்
பரவலை!”என்றவன் சோகமாக முகத்தை வைத்து கொண்டான்.

“இதுக்கு அப்புறம் என்னை கேட்காமல், வாங்கினால் நான் வைச்சிக்க மாட்டேன்,” உறுதியாக சொன்ன சுடரிடம் “கண்டிப்பா நீங்களா கேக்காமல் வாங்க மாட்டேன், இந்த முறை மட்டும் பிளீஸ்!” சொல்லி கொடுத்து இருந்தான்.


பீச்சில் ஜோடி ஜோடியாக, அமர்ந்து கொண்டு, சேட்டை செய்து கொண்டு இருந்தவர்களை, விரட்டி கொண்டு இருந்த போலீஸ், இவர்கள் பக்கம் வந்து,

“யார் நீங்க, புருசன் பொண்டாட்டியா இல்லை வேற யாரவதா?” என்ற பேச்சை முடிக்கும் முன்னமே, பேசியவரின் முன் விர்ரென்று எழுந்தவள்,

“எங்களை பார்த்தா எப்படி தெரியுது!, அதுக்கென்று அலைரவங்க எப்படி உட்கார்ந்து கொண்டு இருப்பாங்க தெரியுமா? என்று அகிலனை தனது புறம் இழுத்து நெருக்கி அணைத்து கொண்டு, பிறகு அவனை தள்ளி நிறுத்தினாள்,

(இவளின் செயலில் அகிலன் தலையில் ஒரு ஐஸ் கட்டி வைத்தது போல் உறைந்து போனான்)

இப்படி உரசிக்கொண்டு, முகம் சுழிக்கிற மாதிரி இன்னும் நெருக்கமாக இருப்பாங்க, ஏன் உங்களுக்கு தெரியாதா? இதே பீச்ல எத்தனை பேரை ஒரு நாளைக்குள் பார்க்கிறிங்க, ‘எங்க இரண்டு பேருக்கும் நடுவுல எவ்வளவு இடைவெளி இருந்து என்று தூரத்துல இருந்து பார்க்கும் போது கூட நல்லா தெரியுமே!’ நீங்க மட்டும் போலீஸ் துணில மட்டும் இல்லாமல் இப்படி பேசி இருக்கணும், என்னோட பதிலே வேற மாதிரி இருந்து இருக்கும்.” என்று ஆத்திரத்திலும் கோவத்திலும் கத்தி கொண்டு இருந்தாள் சுடர்.

இவளை எப்படி அமைதி படுத்துவது என்று தெரியாமல்,
“சுடர் விடுங்க, எல்லோரும் நம்மளை தான் பார்க்கிறாங்க!” என்று சங்கடமாக சொல்லி கொண்டு இருந்தான்.

இது எல்லாம் அவள் காதில் விழுந்தால் தானே!

“ஐய்யோ தாயே! தெரியாம பேசிட்டேன் என்றவர், தம்பி நீ தான் இந்த மகராசி யோட புருஷனா”

ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான் அகி.

“இப்படி ஒரு பாஜரி கிட்ட வந்து நல்லா சிக்கிட்ட உன்னை அந்த கடவுள் தான் உன்னை காப்பாத்தணும்” என்றவர்.

பஜாரி என்றதும், இருவரையும் முறைத்து கொண்டு இருந்தாள்
சுடர்கொடி.

அருகில் இருக்கும் இன்னொரு போலீஸிடம், “அந்த பொண்ணுகிட்ட தெரியாம மாட்டிகிட்டான் போல, நம்மகிட்டயே இந்த போடு பொடுது, அவன் செத்தான்” என்று பேசிக் கொண்டே நடந்தனர்.

அவர்களை பார்த்து கொண்டு இருந்த கூட்டமும் கலைந்து சென்றது.
கலைந்து சென்றார்கள் என்பதை விட, விரட்டி விட்டு இருந்தாள் என்றே சொல்லலாம், அது தான் சரியும் கூட.

ஒருவழியாக அவளின் காலில் விழாத குறையாக,சமாதானம் செய்து அவளை காரில் ஏறியவனால், அவளின் முகத்தில் இருக்கும் உணர்ச்சிகளை பார்த்து, தன்னை தானே எச்சரித்து கொண்டான்.

‘டேய் அகிலு அவளை பார்க்கும் போது, அந்த சரத்தை ஒரு வழி பண்ணும் போது எப்படி இருந்தாலோ, இப்ப பார்க்கும் போது அப்படியே தெரியுறா, வாய் திறந்தா உனக்கு தான்டா சேதாரம் இப்படியே அமைதியா வீடு போய் சேர்ந்துடு!’ என்று தனக்கு தானே அறிவுரை வழங்கி கொண்டான்.