தாமரை - 03
தாமரையின் முகத்தை பார்த்ததுமே அந்த டாக்டருக்கு மகேஸ்வரியின் மேல் அத்தனை கோபம் வந்துவிட்டது.
“என்ன மகேஸு புள்ளைய பண்ணி வச்சிருக்க.?” என கோபமாக கடிந்தவர், நர்ஸை அழைத்து “உள்ளே படுக்க வைங்க..” என்றார்.
“நடந்தது நடந்து போச்சு. அதுக்காக தாமரையை இப்படியே வச்சிருக்க போறீயா.? நடந்து முடிஞ்சதுல இருந்து முதல்ல நீங்க வெளியே வாங்க. நீங்க வந்தாதான் அவ மறந்தும், அதை கடந்தும் வர முடியும்.” என ஆறுதலாக கூற,
“எனக்கு முடியல அண்ணி, நானே என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டேன். அவன் மேல ஆசையை வர வச்சு, என் பொண்ணு மனச நானே கொன்னுட்டேன் அண்ணி. அவன் இப்படியெல்லாம் இருப்பானு நான் நினைக்கவே இல்லை. இப்போ என் பொண்ணு வாழ்க்கைதான் நாசாமா போச்சு..” என கதறியழ,
உள்ளே இருந்த தாமரையின் கண்களிலும் நீர் கோடாய் இறங்கியது.
“மகேஸு என்ன இருந்தாலும் அவ நம்ம பொண்ணு, அவளை அப்படியே விட முடியாது. தைரியமா இரு. எதையும் எதிர்கொள்ற, சமாளிக்கிற மன தைரியத்தை வச்சிக்கோ..” என்றவர் மகேஸ்வரியின் அதிர்ந்த பார்வையில் ‘ஆம்’ என்பதுபோல் கண்ணை மூடித் திறக்க, ‘அய்யோ’ என அதிர்ச்சியில் கையால் வாயை மூடிக்கொண்டார் மகேஸ்வரி.
அதிர்ச்சியில் மூச்சே நின்று விடும் போல் இருந்தது மகேஸ்வரிக்கு. அய்யோ இதை எப்படி மறந்தேன். கடவுளே என் பொண்ணை நான் சரியா கவனிக்காம, என் கவலையிலேயே இருந்துட்டேனா, இந்த மனுசனுக்கு தெரிஞ்சா என்னாகும்? உயிரையே விட்டுடுவாரே, இல்ல இல்ல அவன் உயிரை எடுத்துடுவாரே..’ என பயத்தில் ஏதேதோ யோசித்தபடியே அமர்ந்திருக்க, அவர் பயந்ததை போலவே டாக்டரும் அதே செய்தியை சொல்ல, தாமரையின் முகம் பயத்தில் வெளுத்துப் போனது.
“த்ரீ மந்த்ஸ் கம்ப்ளீட் ஆகிடுச்சு மகேஸு.” என்று கையை கழுவியபடி வந்து அமர்ந்த மருத்துவர் சுமதியிடம்,
“என்ன பண்ணலாம் அண்ணி. அவருக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ? ஏற்கனவே இவ வாழ்க்கை திசை மாறி போய்டுச்சுன்னு கவலையில இருக்கார். இப்போ இதுவும் தெரிஞ்சா?” என பயந்தவர், “அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்கமாட்டார் அண்ணி..?” என அழ,
“ம்ச் மகேஸ்… இனி எதுவும் பண்ண முடியாது. சும்மா சும்மா அழறதை நிறுத்து. வேறவழியே இல்லை. அந்த பையனை கூப்பிட்டு பேசி பாருங்க..” என அவர் முடிக்கும் முன்னே,
“அது அதெல்லாம் வேண்டாம் ஆன்டி. அவருக்கு இப்போ கல்யாணம் ஆகிருக்கும். அதோட இந்த குழந்தைக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..” என மெல்லியக் குரலில் சொன்னாலும், தீர்க்கமாக கூறினாள் தாமரை.
“அமைதியா இரு தாமரை. பெரியவங்க பேசி முடிவெடுக்கட்டும். ஒரு தப்பு நடந்துடுச்சு. அதையே நினைச்சு வேதனை படாம, அதை எப்படி சரி செய்றதுன்னுதான் பார்க்கனும்.” என்ற சுமதி, “அண்ணனை கூப்பிட்டு பேசுவோம்..” என்றவர், நர்சிடம் வெளியில் இருக்க்கும் செல்வத்தை அழைக்குமாறு கூற,
அடுத்த நிமிடம் பதட்டமாக உள்ளே வந்த செல்வம் மூன்று பேரின் முகத்தைப் பார்த்ததும், புரிந்து தளர்ந்து போய் தரையில் அமர்ந்தார்.
“என்னங்க..” என மகேஸ் பதறியபடி வர,
“அண்ணா..” என அதட்டிய சுமதி “நீங்க உடைஞ்சு விழற ஒவ்வொரு தடவையும் உங்க பொண்ணு உயிரோட செத்துட்டு இருக்கான்றதை மறந்துடாதீங்க. ஏற்கனவே தப்பு செஞ்சிட்டோம்னு குற்றவுணர்ச்சியில இருக்கிறவளை நீங்க மேலும் மேலும் அழுத்தத்துக்கு தள்ளாதீங்க..” என கோபமாக பேச,
அப்போதுதான் மகளின் முகத்தைப் பார்த்தார் செல்வம். யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு அவமானத்தில் முகம் கருத்து, குனிந்தபடியே சத்தம் வெளியில் வராத அளவிற்கு அழுதுகொண்டே இருந்தாள்.
“ச்சே ச்சே ஒன்னுமில்ல ஒன்னுமில்ல கண்ணு. இங்க பாரு அப்பாவுக்கு ஒன்னுமில்ல. நான் நான் நல்லா இருக்கேன்..” என சிரித்து பேச என்னதான் முயன்றாலும், முடியவில்லை குரல் உடைந்து “அய்யோ” என தலையிலடித்துக் கொண்டார்.
“கண்ணு.. நீ சொல்லு. எனக்காக, அம்மாவுக்காக எல்லாம் யோசிக்காத. உனக்கு அவன் வேனுமா? சொல்லு. அப்பா அவன் கால்ல விழுந்தாவது கூட்டிட்டு வரேன். நீ சரின்னு மட்டும் சொல்லு கண்ணு..” என தாமரையின் கையைப் பிடித்து கலக்கமாக கேட்க, ‘வேண்டாம்’ என்பது போல் வேகமாக தலையை அசைத்தாள் பெண்.
“ஏன் தாமரை. எங்களை யோசிக்காத ராசாத்தி. எல்லாமே சீக்கிரம் சரியாகும். இளாவும் உன்னை புரிஞ்சிப்பான் கண்ணு..” என மகேஸும் மகளிடம் பேச,
“வேண்டாம் வேண்டாம்.. அவன் எனக்கு எப்பவுமே வேண்டாம். வேசின்னு சொன்னவன் கூட என்னைப்போய் பொழைக்க சொல்றீங்களா.? அப்போ அவன் சொன்னது உண்மையாகிடுமே. அவனை பார்க்குற ஒவ்வொரு நொடியும் அந்த வார்த்தைதான் என் மனசுக்குள்ள வரும். அப்போ நான் தினம் தினம் வாழ முடியாம செத்துட்டு இருப்பேன். அதுதான் உங்களுக்கு வேணுமா.?” என இத்தனை நாள் இருந்த அமைதிக்கு மாறாக கத்தி கதறினாள் தாமரை.
“தாமரை அமைதியா இரு. உன்னை யாரும் கட்டாயப்படுத்தல அமைதியா இரு. நீ ஸ்ட்ரெஸ் ஆகாத. அது பேபிஸ்க்கு நல்லது இல்ல. கூல் கூல்” என வேகமாக வந்த சுமதி, தாமரையைப் பிடித்து சமாதானம் செய்து, “மகேஸ் அந்த தண்ணியை எடு” என அவரையும் அதட்டல் போட,
மகளின் அந்த சத்தத்தில் அரண்டு போயிருந்த இருவரும், சுமதியின் அதட்டலில்தான் நிகழ்வுக்கு வந்தனர்.
அதற்குள் சுமதியின் மேலே மயங்கி விழுந்திருந்தாள் தாமரை. உடனே அவளை அங்குள்ள பெட்டில் கிடத்தி முதலுதவி செய்துவிட்டு அமர, சுமதியே கலைத்து போனார்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், வழி தெரியா குழந்தைகள் போல் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து சுமதிக்கே பாவமாக இருந்தது.
டம்ளரில் நீர் ஊற்றி இருவருக்கும் கொடுத்தவர், தானும் குடித்து “அண்ணா அபார்ட் பன்ற சூழல் எல்லாம் தாண்டியாச்சு. அப்படி பண்ணினா அது தாமரைக்கும் பிரச்சினையாகிடும். அந்த பையன்கிட்ட பேசி பார்க்கலாம்னா அவனை வேண்டவே வேண்டாம்னு முடிவா சொல்லிட்டா, இனி நீங்கதான் யோசிக்கனும்.” என்று அமைதியாக.
“தெரியலையே அண்ணி.. எங்க குடும்பத்தையே சந்தி சிரிக்க வைப்பான்னு நான் நினைக்கவே இல்ல அண்ணி..” என மகேஸ்வரி இயலாமையில் அழ,
“தாமரையோட முடிவு அதுதான்னா, நாம அதை மதிக்கனும் மகேஸு. என் பொண்ணுக்கு பிடிக்கலன்னா வேண்டாம் விடு. இனி அவன் பேச்சு எங்கேயும் வேண்டாம்..” என செல்வம் உறுதியாக சொல்ல,
“அண்ணா இந்த நேரம் நான் இப்படி பேசுறேன்னு நீங்க நினைக்க வேண்டாம். என் பையன் ஷ்யாம் பத்தி உங்க அபிப்ராயம் என்ன.? அவனுக்கு தாமரை மேல விருப்பம் இருக்கு. இந்த பிரச்சினை நடக்காம இருந்திருந்தா நாங்களே பொண்ணு கேட்டு வந்திருப்போம். இப்போவும் ஒன்னு கெட்டுடல. உங்களுக்கு சரின்னா மட்டும் சொல்லுங்க நான் ஷ்யாமை வர சொல்றேன்.” என தயக்கமாக
“என்னம்மா நீ..? என் பொண்ணுக்கு மறு பொறப்பு கொடுத்துருக்க, என் கண் முன்னாடி வளர்ந்த பையன்மா ஷ்யாம். அவனை வேண்டாம்னு சொல்ல எப்படி எனக்கு மனசு வரும். ஆனா நீ தம்பிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லு..” என செல்வம் கூற, மகேஸ்வரிக்கு முகமே கருத்துப் போனது.
மனைவியின் முகத்தை கவனித்த செல்வம், “நீ நினைக்கிறது நடக்காது மகேஸு. உன் மனசை தேத்திக்கோ. நமக்கு நம்ம பொண்ணு வாழ்க்கை முக்கியம்” என கண்டிப்பாக சொல்லிவிட,
அந்த பேச்சுக்கு பதில் பேசக்கூட பயமாக இருந்தது மகேஸ்வரிக்கு.
“நான் தாமரைக்கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன் சுமதி. நீயும் தம்பிக்கிட்ட பேசி முடிவு எடு..” என்றவர் வெளியில் செல்ல, மகேஸூம் கணவரின் பின்னே சென்றார்.
இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்ட சுமதிக்கு, தாமரையை நினத்து மிகவும் வருத்தமே.
அவர் பார்த்து வளர்ந்த பெண். படிப்பிலும் சரி, வளர்ப்பிலும் சரி குறையென்று எதுவும் சொல்ல முடியாது. இப்படி நடந்ததும் கூட அவருக்கு சந்தேகம்தான். தாமரை அப்படிப்பட்ட பெண்ணில்லை என்று அவருமே நம்பத்தான் செய்தார். யாருக்காகவோ பயந்து பழி மொத்தத்தையும் தன்மேல் போட்டுக் கொள்கிறாளோ என்றுதான் தோன்றியது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் தாமரையோடு வீட்டுக்கு வந்த செல்வம், சூட்டோடு சூடாக மகளிடமும் பேசி சம்மதத்தை வாங்கிவிட்டார்.
மறுநாள் காலை சுமதிக்கு அழைத்து மகளின் சம்மதத்தை கூற, அவரும் ஷ்யாமிடம் பேசிவிட்டதாக கூற, அந்த வார இறுதியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வைத்துவிடலாம் என்று முடிவு செய்துவிட, கணவரின் இந்த வேகம் மகேஸ்வரிக்கு மிகுந்த பயத்தைக் கொடுத்தது.
மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாத தாயாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவள் மனதில் இளங்கோவை எப்படி வைத்திருக்கிறாள் என்று அறிந்தவர் எப்படி தன் மகளின் வாழ்க்கையை அப்படியே விடுவார்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற தைரியத்தில் முதன்முறையாக தன் எண்ணிலிருந்து இளங்கோவிற்கு அழைத்தார் மகேஸ்வரி. முதலில் அழைப்பே போகவில்லை. ஒருவேளை எண்ணை ப்ளாக் செய்துவிட்டானோ என்று பயந்து, மகளின் போனில் வாட்சாப் பார்க்க, அதில் அவன் ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல் ஒரு போட்டோ இருக்க, உடனே வாட்சாபில் கால் செய்தார்.
இப்போதும் முதலில் அந்த அழைப்பை அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைக்க, அப்போதுதான் எடுத்தான். எடுத்தவன் தாமரை என நினைத்து “ஏய் என்ன தைரியம் இருந்தா எனக்கு கால் பண்ணுவ, இன்னும் உன் நம்பரை ப்ளாக் பண்ணாம வச்சிருந்த என்னை சொல்லனும்டி..” என வார்த்தைகளை விட,
“நான் தாமரையோட அம்மா பேசுறேன்..” என்ற மகேஸ்வரியின் ஆத்திரமான குரலில் “அத்தம்மா..” என்ற இளங்கோவின் குரல் சிறிதாகிப் போனது.
“என் ஜென்மம் முழுசுக்கும் உங்கிட்ட பேசிடக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா விதி யாரை விட்டது.” என அதே ஆத்திரத்தோடு பேசியவர் “நீ ஒன்னுமே பண்ணாம, என் பொண்ணு மட்டுமே பண்ண தப்புல, இப்போ என் பொண்ணு மாசமா இருக்கா. அவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். என் பொண்ணை என்னால பார்த்துக்க முடியும். ஆனா அவ வயித்துல வளர்ர உன் குழந்தையை பார்த்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. ரெண்டு நாள்ள அபார்சன் பண்ண போறோம். இதை ஏன் எங்கிட்ட சொல்றீங்கன்னு கேட்டுடாத. நாளைக்கு நீ வந்து என்னை கேட்காம ஏன் செஞ்சிங்கன்னு நெஞ்சை நிமிர்த்தி கேட்கக்கூடாது பார், அதுக்காகத்தான். நீயும் என் பொண்ணு மாதிரி கல்யாணம் பண்ணி நல்லா இருப்பா..” என்றவருக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்கவே முடியவில்லை.
“அத்தம்மா அத்தம்மான்னு என்னை மொத்தமா ஏமாத்திட்ட இல்ல சாமி..” என்றவர் போனை வைத்துவிட்டு அப்படியொரு அழுகை.
இங்கே மகேஸ்வரியின் வார்த்தைகளைக் கேட்ட இளங்கோவிற்கும் உள்ளுக்குள் எதுவோ உடைந்தது போல் இருந்தது.
அவரின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை சாட்டையால் அடிப்பது போலிருந்தது. அதோடு தன் குழந்தையை அழிக்கும் அளவுக்கு செல்லும் தாமரையின் மேல் கொலைவெறியே வந்தது.
‘தன் குழந்தை’ அந்த பதமே அவனை நிதானத்தை இழக்க வைக்க போதுமானதாக இருந்தது. அன்றே கிடைத்த ப்ளைட்டில் கிளம்பியவன், வசந்தியிடம் மட்டும் கூறிவிட்டு நேராக மதுரை வந்துவிட்டான்.
நள்ளிரவு என்று நேரத்தைக் கூட பார்க்காமல், மீனாட்சிபுரம் வந்தவன் வீட்டின் மத்தியில் நின்று காரின் ஹாரனை அதிரவிட்டான்.
அந்த சத்தத்தில் முதலில் வெளியே வந்தது மகேஸ்வரிதான். அவன் வருவான் என்று முழுதாக நம்பவில்லைதான். ஆனால் அவனைப் பார்த்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.
தனக்கு பின்னே வந்த கணவரைப் பார்த்து, “பொண்ணு வாழ்க்கை மாமா, அவன் கூப்பிட்டா அனுப்பி வச்சிடலாம். அவளுக்கு இளங்கோவைத்தான் பிடிக்கும். இப்போ இல்ல, சின்ன வயசுல இருந்தே அவனை மட்டும்தான் பிடிக்கும். உங்க கோபத்தை தயவுசெய்து அவன்கிட்ட காமிச்சு நம்ம தாமரையை பழிவாங்கிடாதீங்க மாமா..” என கெஞ்ச,
மனைவியையே கூர்மையாக பார்த்தவர், தன் ஆறடிக்கும் திமிரிக்கொண்டு நின்றிருந்த இளங்கோவை நோக்கி சென்றார்.
“மாமா.. மாமா..” என மகேஸும் அவர் பின்னே செல்ல,
“இங்க என்ன பன்ற.?” என்றார் மிகவும் சாதாரணமாக.
“எனக்கு என் குழந்தை வேணும். அதை அழிக்க நான் விடமாட்டேன்..” என கர்ஜிக்க,
“நீதான் ஒன்னுமே பண்ணலையே, அப்போ அது எப்படி உன் குழந்தையாகும்..” என செல்வம் நிதானமாக கேட்க,
“தேவையில்லாம பேசாதீங்க. என் குழந்தை எனக்கு வேணும்..” என மீண்டும் திமிறிக்கொண்டு பேச,
“அது சரி. ஆனா நான் என் பொண்ணை அப்படியே அனுப்ப முடியாதே. அப்புறம் நீ பேசினது உண்மையாகிடுமே. அதனால தாலிக்கட்டி உன் பொண்டாட்டியா என் பொண்ணைக் கூப்பிட்டு போ. அதுக்கு ஒத்துக்கிட்டா நானும் உன் குழந்தையை உங்கிட்ட அப்படியே கொடுக்குறேன்..” என பேச,
“என்ன.. என்னை மிரட்டி உங்க பொண்ணுக்கு கட்டி வைக்க பார்க்குறீங்களா.? அது இந்த ஜென்மத்துல நடக்காது.” என இளங்கோ எகிற,
“அப்போ உன் குழந்தையும் உனக்கு கிடைக்காது கிளம்பு..” என செல்வம் வீட்டை நோக்கி நகர, அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிட, வந்தவர்கள் விசயம் தெரிந்து இளங்கோவை பார்த்து முணுமுணுக்க,
“என் குழந்தையை எப்படி வாங்கனும்னு எனக்குத் தெரியும்” என்றான் கர்ஜனையாக.
“ஓ.. அப்படியா? சரி நீ எப்படி வாங்க முடியுமோ வாங்கு. எங்க போவ போலிஸ் ஸ்டேஷனுக்கா, இல்ல கோர்ட்டுக்கா? எங்க போனாலும் இவ யாரு? இந்த குழந்தை எப்படி வந்ததுன்னு கேட்பாங்க. அப்போ என்ன சொல்வ? நான் ஒன்னுமே பண்ணாம அவ கர்ப்பமாகிட்டான்னு சொல்லுவியா? சொல்லு. அப்படியே சொல்லு. அப்போதான் நீ ஒரு ______ ண்ணு அவங்களுக்கு தெரியும்..” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேச,
செல்வத்தின் அந்த வார்த்தையில் “ஏய்..” என அவர் சட்டையைப் பிடிக்க, அதற்குள் தாமரையும் வெளியே வந்துவிட்டாள்.
மகேஸ்வரி செல்வத்தை பிடித்து இழுக்க, மற்றவர்கள் இளங்கோவைப் பிடித்துக்கொள்ள, மீண்டும் ஒரு கைகலப்பு, மீண்டுமொரு பஞ்சாயத்து என விடிய விடிய பேச்சு வார்த்தை நடக்க கடைசியில் வேறு வழியே இல்லாமல், மனம் முழுக்க வன்மத்துடன் தாமரையின் கழுத்தில் தாலியைக் கட்டி தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டான் இளங்கோ.
தாமரையின் முகத்தை பார்த்ததுமே அந்த டாக்டருக்கு மகேஸ்வரியின் மேல் அத்தனை கோபம் வந்துவிட்டது.
“என்ன மகேஸு புள்ளைய பண்ணி வச்சிருக்க.?” என கோபமாக கடிந்தவர், நர்ஸை அழைத்து “உள்ளே படுக்க வைங்க..” என்றார்.
“நடந்தது நடந்து போச்சு. அதுக்காக தாமரையை இப்படியே வச்சிருக்க போறீயா.? நடந்து முடிஞ்சதுல இருந்து முதல்ல நீங்க வெளியே வாங்க. நீங்க வந்தாதான் அவ மறந்தும், அதை கடந்தும் வர முடியும்.” என ஆறுதலாக கூற,
“எனக்கு முடியல அண்ணி, நானே என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டேன். அவன் மேல ஆசையை வர வச்சு, என் பொண்ணு மனச நானே கொன்னுட்டேன் அண்ணி. அவன் இப்படியெல்லாம் இருப்பானு நான் நினைக்கவே இல்லை. இப்போ என் பொண்ணு வாழ்க்கைதான் நாசாமா போச்சு..” என கதறியழ,
உள்ளே இருந்த தாமரையின் கண்களிலும் நீர் கோடாய் இறங்கியது.
“மகேஸு என்ன இருந்தாலும் அவ நம்ம பொண்ணு, அவளை அப்படியே விட முடியாது. தைரியமா இரு. எதையும் எதிர்கொள்ற, சமாளிக்கிற மன தைரியத்தை வச்சிக்கோ..” என்றவர் மகேஸ்வரியின் அதிர்ந்த பார்வையில் ‘ஆம்’ என்பதுபோல் கண்ணை மூடித் திறக்க, ‘அய்யோ’ என அதிர்ச்சியில் கையால் வாயை மூடிக்கொண்டார் மகேஸ்வரி.
அதிர்ச்சியில் மூச்சே நின்று விடும் போல் இருந்தது மகேஸ்வரிக்கு. அய்யோ இதை எப்படி மறந்தேன். கடவுளே என் பொண்ணை நான் சரியா கவனிக்காம, என் கவலையிலேயே இருந்துட்டேனா, இந்த மனுசனுக்கு தெரிஞ்சா என்னாகும்? உயிரையே விட்டுடுவாரே, இல்ல இல்ல அவன் உயிரை எடுத்துடுவாரே..’ என பயத்தில் ஏதேதோ யோசித்தபடியே அமர்ந்திருக்க, அவர் பயந்ததை போலவே டாக்டரும் அதே செய்தியை சொல்ல, தாமரையின் முகம் பயத்தில் வெளுத்துப் போனது.
“த்ரீ மந்த்ஸ் கம்ப்ளீட் ஆகிடுச்சு மகேஸு.” என்று கையை கழுவியபடி வந்து அமர்ந்த மருத்துவர் சுமதியிடம்,
“என்ன பண்ணலாம் அண்ணி. அவருக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ? ஏற்கனவே இவ வாழ்க்கை திசை மாறி போய்டுச்சுன்னு கவலையில இருக்கார். இப்போ இதுவும் தெரிஞ்சா?” என பயந்தவர், “அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்கமாட்டார் அண்ணி..?” என அழ,
“ம்ச் மகேஸ்… இனி எதுவும் பண்ண முடியாது. சும்மா சும்மா அழறதை நிறுத்து. வேறவழியே இல்லை. அந்த பையனை கூப்பிட்டு பேசி பாருங்க..” என அவர் முடிக்கும் முன்னே,
“அது அதெல்லாம் வேண்டாம் ஆன்டி. அவருக்கு இப்போ கல்யாணம் ஆகிருக்கும். அதோட இந்த குழந்தைக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..” என மெல்லியக் குரலில் சொன்னாலும், தீர்க்கமாக கூறினாள் தாமரை.
“அமைதியா இரு தாமரை. பெரியவங்க பேசி முடிவெடுக்கட்டும். ஒரு தப்பு நடந்துடுச்சு. அதையே நினைச்சு வேதனை படாம, அதை எப்படி சரி செய்றதுன்னுதான் பார்க்கனும்.” என்ற சுமதி, “அண்ணனை கூப்பிட்டு பேசுவோம்..” என்றவர், நர்சிடம் வெளியில் இருக்க்கும் செல்வத்தை அழைக்குமாறு கூற,
அடுத்த நிமிடம் பதட்டமாக உள்ளே வந்த செல்வம் மூன்று பேரின் முகத்தைப் பார்த்ததும், புரிந்து தளர்ந்து போய் தரையில் அமர்ந்தார்.
“என்னங்க..” என மகேஸ் பதறியபடி வர,
“அண்ணா..” என அதட்டிய சுமதி “நீங்க உடைஞ்சு விழற ஒவ்வொரு தடவையும் உங்க பொண்ணு உயிரோட செத்துட்டு இருக்கான்றதை மறந்துடாதீங்க. ஏற்கனவே தப்பு செஞ்சிட்டோம்னு குற்றவுணர்ச்சியில இருக்கிறவளை நீங்க மேலும் மேலும் அழுத்தத்துக்கு தள்ளாதீங்க..” என கோபமாக பேச,
அப்போதுதான் மகளின் முகத்தைப் பார்த்தார் செல்வம். யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு அவமானத்தில் முகம் கருத்து, குனிந்தபடியே சத்தம் வெளியில் வராத அளவிற்கு அழுதுகொண்டே இருந்தாள்.
“ச்சே ச்சே ஒன்னுமில்ல ஒன்னுமில்ல கண்ணு. இங்க பாரு அப்பாவுக்கு ஒன்னுமில்ல. நான் நான் நல்லா இருக்கேன்..” என சிரித்து பேச என்னதான் முயன்றாலும், முடியவில்லை குரல் உடைந்து “அய்யோ” என தலையிலடித்துக் கொண்டார்.
“கண்ணு.. நீ சொல்லு. எனக்காக, அம்மாவுக்காக எல்லாம் யோசிக்காத. உனக்கு அவன் வேனுமா? சொல்லு. அப்பா அவன் கால்ல விழுந்தாவது கூட்டிட்டு வரேன். நீ சரின்னு மட்டும் சொல்லு கண்ணு..” என தாமரையின் கையைப் பிடித்து கலக்கமாக கேட்க, ‘வேண்டாம்’ என்பது போல் வேகமாக தலையை அசைத்தாள் பெண்.
“ஏன் தாமரை. எங்களை யோசிக்காத ராசாத்தி. எல்லாமே சீக்கிரம் சரியாகும். இளாவும் உன்னை புரிஞ்சிப்பான் கண்ணு..” என மகேஸும் மகளிடம் பேச,
“வேண்டாம் வேண்டாம்.. அவன் எனக்கு எப்பவுமே வேண்டாம். வேசின்னு சொன்னவன் கூட என்னைப்போய் பொழைக்க சொல்றீங்களா.? அப்போ அவன் சொன்னது உண்மையாகிடுமே. அவனை பார்க்குற ஒவ்வொரு நொடியும் அந்த வார்த்தைதான் என் மனசுக்குள்ள வரும். அப்போ நான் தினம் தினம் வாழ முடியாம செத்துட்டு இருப்பேன். அதுதான் உங்களுக்கு வேணுமா.?” என இத்தனை நாள் இருந்த அமைதிக்கு மாறாக கத்தி கதறினாள் தாமரை.
“தாமரை அமைதியா இரு. உன்னை யாரும் கட்டாயப்படுத்தல அமைதியா இரு. நீ ஸ்ட்ரெஸ் ஆகாத. அது பேபிஸ்க்கு நல்லது இல்ல. கூல் கூல்” என வேகமாக வந்த சுமதி, தாமரையைப் பிடித்து சமாதானம் செய்து, “மகேஸ் அந்த தண்ணியை எடு” என அவரையும் அதட்டல் போட,
மகளின் அந்த சத்தத்தில் அரண்டு போயிருந்த இருவரும், சுமதியின் அதட்டலில்தான் நிகழ்வுக்கு வந்தனர்.
அதற்குள் சுமதியின் மேலே மயங்கி விழுந்திருந்தாள் தாமரை. உடனே அவளை அங்குள்ள பெட்டில் கிடத்தி முதலுதவி செய்துவிட்டு அமர, சுமதியே கலைத்து போனார்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், வழி தெரியா குழந்தைகள் போல் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து சுமதிக்கே பாவமாக இருந்தது.
டம்ளரில் நீர் ஊற்றி இருவருக்கும் கொடுத்தவர், தானும் குடித்து “அண்ணா அபார்ட் பன்ற சூழல் எல்லாம் தாண்டியாச்சு. அப்படி பண்ணினா அது தாமரைக்கும் பிரச்சினையாகிடும். அந்த பையன்கிட்ட பேசி பார்க்கலாம்னா அவனை வேண்டவே வேண்டாம்னு முடிவா சொல்லிட்டா, இனி நீங்கதான் யோசிக்கனும்.” என்று அமைதியாக.
“தெரியலையே அண்ணி.. எங்க குடும்பத்தையே சந்தி சிரிக்க வைப்பான்னு நான் நினைக்கவே இல்ல அண்ணி..” என மகேஸ்வரி இயலாமையில் அழ,
“தாமரையோட முடிவு அதுதான்னா, நாம அதை மதிக்கனும் மகேஸு. என் பொண்ணுக்கு பிடிக்கலன்னா வேண்டாம் விடு. இனி அவன் பேச்சு எங்கேயும் வேண்டாம்..” என செல்வம் உறுதியாக சொல்ல,
“அண்ணா இந்த நேரம் நான் இப்படி பேசுறேன்னு நீங்க நினைக்க வேண்டாம். என் பையன் ஷ்யாம் பத்தி உங்க அபிப்ராயம் என்ன.? அவனுக்கு தாமரை மேல விருப்பம் இருக்கு. இந்த பிரச்சினை நடக்காம இருந்திருந்தா நாங்களே பொண்ணு கேட்டு வந்திருப்போம். இப்போவும் ஒன்னு கெட்டுடல. உங்களுக்கு சரின்னா மட்டும் சொல்லுங்க நான் ஷ்யாமை வர சொல்றேன்.” என தயக்கமாக
“என்னம்மா நீ..? என் பொண்ணுக்கு மறு பொறப்பு கொடுத்துருக்க, என் கண் முன்னாடி வளர்ந்த பையன்மா ஷ்யாம். அவனை வேண்டாம்னு சொல்ல எப்படி எனக்கு மனசு வரும். ஆனா நீ தம்பிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லு..” என செல்வம் கூற, மகேஸ்வரிக்கு முகமே கருத்துப் போனது.
மனைவியின் முகத்தை கவனித்த செல்வம், “நீ நினைக்கிறது நடக்காது மகேஸு. உன் மனசை தேத்திக்கோ. நமக்கு நம்ம பொண்ணு வாழ்க்கை முக்கியம்” என கண்டிப்பாக சொல்லிவிட,
அந்த பேச்சுக்கு பதில் பேசக்கூட பயமாக இருந்தது மகேஸ்வரிக்கு.
“நான் தாமரைக்கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன் சுமதி. நீயும் தம்பிக்கிட்ட பேசி முடிவு எடு..” என்றவர் வெளியில் செல்ல, மகேஸூம் கணவரின் பின்னே சென்றார்.
இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்ட சுமதிக்கு, தாமரையை நினத்து மிகவும் வருத்தமே.
அவர் பார்த்து வளர்ந்த பெண். படிப்பிலும் சரி, வளர்ப்பிலும் சரி குறையென்று எதுவும் சொல்ல முடியாது. இப்படி நடந்ததும் கூட அவருக்கு சந்தேகம்தான். தாமரை அப்படிப்பட்ட பெண்ணில்லை என்று அவருமே நம்பத்தான் செய்தார். யாருக்காகவோ பயந்து பழி மொத்தத்தையும் தன்மேல் போட்டுக் கொள்கிறாளோ என்றுதான் தோன்றியது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் தாமரையோடு வீட்டுக்கு வந்த செல்வம், சூட்டோடு சூடாக மகளிடமும் பேசி சம்மதத்தை வாங்கிவிட்டார்.
மறுநாள் காலை சுமதிக்கு அழைத்து மகளின் சம்மதத்தை கூற, அவரும் ஷ்யாமிடம் பேசிவிட்டதாக கூற, அந்த வார இறுதியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வைத்துவிடலாம் என்று முடிவு செய்துவிட, கணவரின் இந்த வேகம் மகேஸ்வரிக்கு மிகுந்த பயத்தைக் கொடுத்தது.
மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாத தாயாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவள் மனதில் இளங்கோவை எப்படி வைத்திருக்கிறாள் என்று அறிந்தவர் எப்படி தன் மகளின் வாழ்க்கையை அப்படியே விடுவார்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற தைரியத்தில் முதன்முறையாக தன் எண்ணிலிருந்து இளங்கோவிற்கு அழைத்தார் மகேஸ்வரி. முதலில் அழைப்பே போகவில்லை. ஒருவேளை எண்ணை ப்ளாக் செய்துவிட்டானோ என்று பயந்து, மகளின் போனில் வாட்சாப் பார்க்க, அதில் அவன் ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல் ஒரு போட்டோ இருக்க, உடனே வாட்சாபில் கால் செய்தார்.
இப்போதும் முதலில் அந்த அழைப்பை அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைக்க, அப்போதுதான் எடுத்தான். எடுத்தவன் தாமரை என நினைத்து “ஏய் என்ன தைரியம் இருந்தா எனக்கு கால் பண்ணுவ, இன்னும் உன் நம்பரை ப்ளாக் பண்ணாம வச்சிருந்த என்னை சொல்லனும்டி..” என வார்த்தைகளை விட,
“நான் தாமரையோட அம்மா பேசுறேன்..” என்ற மகேஸ்வரியின் ஆத்திரமான குரலில் “அத்தம்மா..” என்ற இளங்கோவின் குரல் சிறிதாகிப் போனது.
“என் ஜென்மம் முழுசுக்கும் உங்கிட்ட பேசிடக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா விதி யாரை விட்டது.” என அதே ஆத்திரத்தோடு பேசியவர் “நீ ஒன்னுமே பண்ணாம, என் பொண்ணு மட்டுமே பண்ண தப்புல, இப்போ என் பொண்ணு மாசமா இருக்கா. அவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். என் பொண்ணை என்னால பார்த்துக்க முடியும். ஆனா அவ வயித்துல வளர்ர உன் குழந்தையை பார்த்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. ரெண்டு நாள்ள அபார்சன் பண்ண போறோம். இதை ஏன் எங்கிட்ட சொல்றீங்கன்னு கேட்டுடாத. நாளைக்கு நீ வந்து என்னை கேட்காம ஏன் செஞ்சிங்கன்னு நெஞ்சை நிமிர்த்தி கேட்கக்கூடாது பார், அதுக்காகத்தான். நீயும் என் பொண்ணு மாதிரி கல்யாணம் பண்ணி நல்லா இருப்பா..” என்றவருக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்கவே முடியவில்லை.
“அத்தம்மா அத்தம்மான்னு என்னை மொத்தமா ஏமாத்திட்ட இல்ல சாமி..” என்றவர் போனை வைத்துவிட்டு அப்படியொரு அழுகை.
இங்கே மகேஸ்வரியின் வார்த்தைகளைக் கேட்ட இளங்கோவிற்கும் உள்ளுக்குள் எதுவோ உடைந்தது போல் இருந்தது.
அவரின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை சாட்டையால் அடிப்பது போலிருந்தது. அதோடு தன் குழந்தையை அழிக்கும் அளவுக்கு செல்லும் தாமரையின் மேல் கொலைவெறியே வந்தது.
‘தன் குழந்தை’ அந்த பதமே அவனை நிதானத்தை இழக்க வைக்க போதுமானதாக இருந்தது. அன்றே கிடைத்த ப்ளைட்டில் கிளம்பியவன், வசந்தியிடம் மட்டும் கூறிவிட்டு நேராக மதுரை வந்துவிட்டான்.
நள்ளிரவு என்று நேரத்தைக் கூட பார்க்காமல், மீனாட்சிபுரம் வந்தவன் வீட்டின் மத்தியில் நின்று காரின் ஹாரனை அதிரவிட்டான்.
அந்த சத்தத்தில் முதலில் வெளியே வந்தது மகேஸ்வரிதான். அவன் வருவான் என்று முழுதாக நம்பவில்லைதான். ஆனால் அவனைப் பார்த்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.
தனக்கு பின்னே வந்த கணவரைப் பார்த்து, “பொண்ணு வாழ்க்கை மாமா, அவன் கூப்பிட்டா அனுப்பி வச்சிடலாம். அவளுக்கு இளங்கோவைத்தான் பிடிக்கும். இப்போ இல்ல, சின்ன வயசுல இருந்தே அவனை மட்டும்தான் பிடிக்கும். உங்க கோபத்தை தயவுசெய்து அவன்கிட்ட காமிச்சு நம்ம தாமரையை பழிவாங்கிடாதீங்க மாமா..” என கெஞ்ச,
மனைவியையே கூர்மையாக பார்த்தவர், தன் ஆறடிக்கும் திமிரிக்கொண்டு நின்றிருந்த இளங்கோவை நோக்கி சென்றார்.
“மாமா.. மாமா..” என மகேஸும் அவர் பின்னே செல்ல,
“இங்க என்ன பன்ற.?” என்றார் மிகவும் சாதாரணமாக.
“எனக்கு என் குழந்தை வேணும். அதை அழிக்க நான் விடமாட்டேன்..” என கர்ஜிக்க,
“நீதான் ஒன்னுமே பண்ணலையே, அப்போ அது எப்படி உன் குழந்தையாகும்..” என செல்வம் நிதானமாக கேட்க,
“தேவையில்லாம பேசாதீங்க. என் குழந்தை எனக்கு வேணும்..” என மீண்டும் திமிறிக்கொண்டு பேச,
“அது சரி. ஆனா நான் என் பொண்ணை அப்படியே அனுப்ப முடியாதே. அப்புறம் நீ பேசினது உண்மையாகிடுமே. அதனால தாலிக்கட்டி உன் பொண்டாட்டியா என் பொண்ணைக் கூப்பிட்டு போ. அதுக்கு ஒத்துக்கிட்டா நானும் உன் குழந்தையை உங்கிட்ட அப்படியே கொடுக்குறேன்..” என பேச,
“என்ன.. என்னை மிரட்டி உங்க பொண்ணுக்கு கட்டி வைக்க பார்க்குறீங்களா.? அது இந்த ஜென்மத்துல நடக்காது.” என இளங்கோ எகிற,
“அப்போ உன் குழந்தையும் உனக்கு கிடைக்காது கிளம்பு..” என செல்வம் வீட்டை நோக்கி நகர, அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிட, வந்தவர்கள் விசயம் தெரிந்து இளங்கோவை பார்த்து முணுமுணுக்க,
“என் குழந்தையை எப்படி வாங்கனும்னு எனக்குத் தெரியும்” என்றான் கர்ஜனையாக.
“ஓ.. அப்படியா? சரி நீ எப்படி வாங்க முடியுமோ வாங்கு. எங்க போவ போலிஸ் ஸ்டேஷனுக்கா, இல்ல கோர்ட்டுக்கா? எங்க போனாலும் இவ யாரு? இந்த குழந்தை எப்படி வந்ததுன்னு கேட்பாங்க. அப்போ என்ன சொல்வ? நான் ஒன்னுமே பண்ணாம அவ கர்ப்பமாகிட்டான்னு சொல்லுவியா? சொல்லு. அப்படியே சொல்லு. அப்போதான் நீ ஒரு ______ ண்ணு அவங்களுக்கு தெரியும்..” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேச,
செல்வத்தின் அந்த வார்த்தையில் “ஏய்..” என அவர் சட்டையைப் பிடிக்க, அதற்குள் தாமரையும் வெளியே வந்துவிட்டாள்.
மகேஸ்வரி செல்வத்தை பிடித்து இழுக்க, மற்றவர்கள் இளங்கோவைப் பிடித்துக்கொள்ள, மீண்டும் ஒரு கைகலப்பு, மீண்டுமொரு பஞ்சாயத்து என விடிய விடிய பேச்சு வார்த்தை நடக்க கடைசியில் வேறு வழியே இல்லாமல், மனம் முழுக்க வன்மத்துடன் தாமரையின் கழுத்தில் தாலியைக் கட்டி தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டான் இளங்கோ.