• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 06

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
492
113
Tirupur
தாமரை - 06

“மாமா.. அவ குழந்தையை கொடுத்துட்டு போயிடுவாதான, நம்ம கல்யாணம் நடக்கும்ல்ல..” என இளங்கோவிற்கே சலிப்பு வரும் வரை கேட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா.

முதலில் மிகவும் பொறுமையாக அவளுக்கு பதில் கொடுத்தவன், நேரம் ஆக ஆக பொறுமையை இழக்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே தெரிந்தோ தெரியாமலோ தாமரைக்கு துரோகம் செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில் இருந்தவனை, ப்ரீத்தா வேறு பேசிப்பேசியே நிதானம் இழக்க வைத்திருந்தாள்.

அவள் மீண்டும் ஆரம்பிக்கும் நேரம், “ரீத்து..” என அதட்டியவன், “என் பக்கம் தப்பு நடந்துடுச்சு, அதனாலதான் இவ்வளவு பொறுமையா பதில் கொடுத்துட்டு இருக்கேன். என் பொறுமையை நீ ரொம்பவே சோதிக்கிற.” என பல்லைக் கடித்தவன்,

“இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம், உனக்கு இன்னும் ஒன் யேர் காலேஜ் இருக்கு. ஆரம்பத்துலயே சொன்னேன் காலேஜ் முடியட்டும், அப்புறம் மேரேஜ் பத்தி பேசலாம்னு யாரும் கேட்கல..” எனவும்,

“மாமா இது தப்பு.. நீங்க என்னை ஹர்ட் பன்றீங்க. இது சின்ன வயசுல இருந்தே பேசி வச்சது. அது உங்களுக்கே தெரியும். நான் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன். ஆனா நீங்க.?” என்றவள் அழ ஆரம்பிக்க,

“ஷிட்.. முதல்ல இப்படி அழறதை நிறுத்து ரீத்து.. நீ சொன்ன எதையும் நான் இல்லைன்னு சொல்லவே இல்ல. நான் கேட்டது இப்போ என்ன அவசரம்னுதான். ஃபர்ஸ்ட் உன்னோட ஸ்டடீசை கம்ப்ளீட் பண்ணு, அப்புறம் இதை பேசலாம். அதுக்குள்ளா தாராவுக்கும் குழந்தை பிறந்திடும்..” என ப்ரீத்தாவை அதட்ட,

“தாராவா.?” என ப்ரீத்தாவின் விழிகள் பயத்தில் விரிய,

“ம்ச் அவளை அப்படித்தானே கூப்பிடுவேன், புதுசா என்ன இது.?” என சலித்த நேரம், அவனுக்கான பயண அழைப்பு வந்துவிட்டது.

அதில் ப்ரீத்தா பயத்துடன் இளங்கோவைப் பார்க்க, “ரீத்து” என்றவன் அவளை அனைத்து, “ரீத்துமா.. நீ இப்படி டென்சன் ஆகுற அளவுக்கு எல்லாம் ஒன்னுமேயில்ல. முதல்ல குழந்தை நல்லபடியா பிறக்கட்டும். அவளும் குழந்தையும் சேஃப் ஜோனுக்கு வந்துட்டாதான், நம்ம வேலை நடக்கும். அதுவரை நீ உன் படிப்புல கவனம் செலுத்தனும், தாராவை பார்த்துக்கனும், அவளை நல்லா பார்த்துக்கிட்டாத்தான் குழந்தை நல்லா பிறக்கும். குழந்தை நல்லா ஹெல்தியா பிறந்தாதான் தாமரை எந்த பிரச்சினையும் இல்லாம அனுப்ப முடியும். புரியுதா.?” என சிறு பிள்ளைக்கு சொல்வது போல சொல்ல,

‘புரிந்தது’ என்பது போல் அவளும் தலையை ஆட்ட, ‘இட்ஸ் மை கேர்ள்’ என அவள் தலையை ஆட்டி விடைபெற்று, விமானத்திற்கு ஓடினான்.

இளங்கோவை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்த ப்ரீத்தாவை வரவேற்றது, தாமரையின் அருகில் அமர்ந்து, அவளைத் தன்மேல் சாய்த்து தலையை வருடியபடி இருந்த ஒரு ஆடவனைத்தான்.

‘யார் இது’ என யோசித்தபடியே உள்ளே வந்தவள் புதியவனை பார்த்து யோசனையாக நிற்க,

அவளைப் பார்த்து ‘ஹாய்’ என்றான். ப்ரீத்தா புரியாமல் பார்க்க, “ஐம் டாக்டர் ஷ்யாம் சுந்தர். தாமரையோட கசின்..” என்றதும்,

“ஓ..” என்றவள், “ஓக்கே.” என்றுவிட்டு நகர,

“மிஸ்..” என இழுக்க,

“ப்ரீத்தா சீனிவாசன்..” என்றதும்,

“எஸ் ப்ரீத்தா, நாளைக்கு தாமரைக்கு செக்கப் இருக்கு, நான் வந்து கூட்டிட்டு போய்ட்டு, கொண்டு வந்து விட்டுடுறேன்..” என சிரித்துக்கொண்டே கூற,

“ஸாரி.. இதெல்லாம் பாட்டிக்கிட்ட சொல்லுங்க. இவங்களைப்பத்தின எல்லாம் பாட்டிதான் பார்த்துக்குறாங்க, சோ அவங்ககிட்ட பெர்மிசன் வாங்கினா போதும்..” என அங்கிருந்து நகர பார்க்க,

“ஓ… சரிங்க.. ரொம்ப தேங்க்ஸ்.. இந்த குழந்தையை நீங்கதான் வளர்க்கப் போறதா தாமரை சொன்னா, அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு சொன்னேன்..” என்றதும்,

“ஹான் ஆமா.. ஆமா நான் நான்தான் வளர்க்கப் போறேன்..” என மெல்ல முணுமுணுக்க

“உண்மையிலேயே நீங்க ரொம்ப கிரேட்ங்க, உங்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தையை வளர்க்கிறேன் சொல்றீங்களே, உங்க பெரிய மனசு யாருக்குமே வராது.” என்ன சிரித்துக் கொண்டே பாராட்ட,

“அது.. அது மாமாவோட குழந்தையும்தான” என திணற

“உண்மைதான். ஆனா இது அதுக்கும் மேல.. பத்து மாசம் சுமந்து, வலி கண்டு பெத்து எடுக்குறதைவிட, அடுத்து வர காலம் முழுக்க அந்த குழந்தையை வளர்க்கிறதுதான் பெரிய விசயமே.. நீங்க ஒத்துக்கிட்டாலும், இல்லைன்னாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு..” என ஷ்யாம் விடாமல் பேச,

“அது அப்படியெல்லாம் இல்லங்க.. மாமாவுக்காகத்தான் எல்லாம். அவருக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்ங்க..” என்ற ப்ரீத்தாவுக்கு ஷ்யாமின் பேச்சு எதையோ சுட்டிக்காட்ட முனைகிறது என்றளவிற்கு புரிந்தது.

“உங்களை நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்குங்க. உங்க லவ் எவ்ளோ பியூர் தெரியுமா.? உங்க மாமா கொடுத்து வச்சவர், இன்னைக்கு அவர் கேட்டதுக்காக இந்த குழந்தையை வளர்க்க ஓக்கே சொல்லிட்டீங்க, நாளைக்கு நமக்கு இந்த ஒரு குழந்தையே போதும்னு உங்க மாமா சொன்னாலும் ஓக்கேதானே சொல்லுவீங்க. அதுக்கும் சேர்த்து தான் உங்களை அப்ரிசியேட் பண்றேன்ங்க..” என்றதும், ப்ரீத்தாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

இப்படியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. ஏன் நாயகி கூட இப்படியெல்லாம் நடக்கலாம் என அவளிடம் கூறியிருக்கவில்லை. ஷ்யாமின் இந்த பேச்சை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ப்ரீத்தா அமைதியாக நிற்க, “அம்மு.. மார்னிங்க் ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். மறக்காம மெடிசின் எடுத்துக்கோ, கண்டிப்பா தனியா இருக்கக்கூடாது. அந்த ராணி அக்காவை உன்கூட தங்க வச்சுக்கோ..” என்ற ஷ்யாமைப் பார்த்து ‘சரி’ என்பதுபோல் தலையை அசைத்தாள் தாமரை.

“தலையை ஆட்டினா மட்டும் போதாது, செய்யனும். நான் நைட் கால் பண்றேன். இப்போ இந்த திங்க்ஸ் போதும்ல. மீதியை நாளைக்கு வாங்கிக்கலாம்..” என்றவனிடம்,

“ம்ம்.. ஐ கேன் மேனேஜ்டா.. நீ ஸ்ட்ரெஸ் ஆகாம போ..” என்றதும்,

“ம்ம் ஓக்கேடா.. டேக் கேர். பை…” என்ற ஷ்யாம், ப்ரீத்தாவைப் பார்த்து, “பை ங்க..” என கிளம்ப,

“ஸார்..” என்றபடியே அவனுக்கு பின்னே வேகமாக நடந்தாள் ப்ரீத்தா.

“ஹான்..” என நின்றவன், தாமரை இருவரையும் பார்ப்பதை உணர்ந்து, “ப்ளீஸ் வாங்க. அப்படியே பேசிக்கிட்டே நடக்கலாம்.” என்றதும், ப்ரீத்தாவும் அவனுடனே நடந்தாள்.

தாமரையின் பார்வை வட்டத்தை விட்டு வெளியில் வந்த ஷ்யாம், அவளைப் பார்த்தவாறு நிற்க, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்து போய் நின்றாள் ப்ரீத்தா.

“என்ன சொல்லனுமோ சொல்லுங்க ப்ரீத்தா, உங்களை தப்பா எல்லாம் நினைக்கமாட்டேன்..”

“இல்ல.. சாரி அது.. அதுவந்து உங்களுக்கு அவங்க மேல கோபமே இல்லையா.?” என்றாள் திணறிப்போய்.

“யார் மேல.? உங்க மாமா மேலையா.?” என்றான் கூர்மையாக.

“இல்ல… இல்ல மாமா இல்ல. அவங்க, அவங்கதான் உங்க கசினை கேட்குறேன். தாமரை! அவங்கமேல கோபமே இல்லையா.?” என்றாள் தயக்கமாக.

“எதுக்கு கோபப்படனும்.? அவ தெரியாமலா தப்பு செஞ்சா.? அதோட அந்த தப்பு நடக்கும் போதே அதோட வீரியம் எப்படி இருக்கும்னு தெரியாத சின்னபிள்ளை இல்லையே, அதோட தப்பு செஞ்சிட்டு, தெரியாம செஞ்சிட்டேன்னு ஓடி ஒழிய தாமரை ஒன்னும் மிஸ்டர் இளங்கோ கிடையாது.” என கடினமாக பேச, அந்த குரலில் அதிர்ந்து விட்டாள் ப்ரீத்தா.

“மிஸ் ப்ரீத்தா.. நடந்தது ஒன்னும் ரேப் இல்ல. அதோட ஒரு வலிமையான ஆணை வளைச்சு ஈசியா ஒரு பெண்ணால செக்ஸ் வச்சிக்க முடியாது. ஒரு பெண்ணோட ஒத்துழைப்பு இல்லாம கூட ஒரு உடலுறவு நடக்கலாம். ஆனா ஒரு ஆணோட ஒத்துழைப்பு இல்லாம ஒரு உடலுறவு நடக்க சான்ஸே இல்ல.” என்றதும், ப்ரீத்தாவின் முகம் அவமானத்தில் கருத்து போனது.

“நீங்க வருத்தப்பட இதை சொல்லல மிஸ் ப்ரீத்தா. இப்போ எவ்ளோ நியுஸ் வருது. அதை நீங்களே கவனிங்களேன். எங்கையாவது ஒரு ஆண் வன்புனர்வு செய்யப்பட்டான். பலாத்காரம் செய்யப்பட்டான்னு வருதா.? வாய்ப்பு ரொம்ப கம்மி. அஸ் எ டாக்டர் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..” என்றதும், ப்ரீத்தாவின் முகம் வாடிப்போனது.

“எனக்கு மாமாவை ரொம்ப பிடிக்கும்.” என்ற போது அவள் குரல் கரகரத்து போனது.

“ப்ளீஸ்.. உங்களை நான் எங்கேயும் தப்பாவே நினைக்கல ப்ரீத்தா. ஆனா பிடித்தம் வேற, காதல் வேறன்னு உங்களுக்கு இன்னும் தெரியலன்னு நினைக்கிறேன். உங்க லைஃப் நீங்க நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க..” என்றவன், “ஸாரி உங்களை ஹர்ட் பண்ணிட்டேன்..” என வருத்தமான குரலில் மன்னிப்பு கேட்டான்.

“இல்ல.. பரவாயில்ல. நான் ஏதோ ஒரு கோபத்துல அவங்களை அடிச்சிட்டேன். யோசிக்காம செஞ்சிட்டேன். சாரி..” என்றாள்.

“ஆக்சுவல்லா இந்த சாரி அவங்ககிட்டதான் கேட்கனும், பட் ஓகே. எங்கிட்ட கேட்டாலும் அம்முக்கிட்ட கேட்டாலும் ஒன்னுதான். நான் அவக்கிட்ட சொல்றேன்..” என சிரிக்க,

அதில் ப்ரீத்தா குழப்பமாக பார்க்க, “இந்த குழந்தை பிறந்ததும் எப்படி நீங்களும் உங்க மாமாவும் எப்படி கல்யாணம் செய்துக்க போறீங்களோ, அதேபோல நானும் அம்முவும் மேரேஜ் செய்துக்க போறோம்..” என சிரிக்க, ப்ரீத்தாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டே போனது.

அதை கவனித்தாலும், வெளிக்காட்டாமல் “ஓக்கேங்க நான் கிளம்பறேன். பேசன்ட் வந்துடுவாங்க..” என கிளம்பிவிட, ப்ரீத்தாவிடம் பெரும் குழப்பம்.

அதே குழப்பத்துடன் உள்ளே வர, “ஏய் யாருடி அது.? நடுவீட்டுல உக்காந்து கொஞ்சிட்டு இருக்கான். இதென்ன உன் வீடா? கண்டவனெல்லாம் வந்துட்டு போக.” என நாயகி, தாமரையை வார்த்தைகளால் வதைத்துக் கொண்டிருந்தார்.

“ம்மா என்ன பேசிட்டு இருக்க.? மாமா அவங்க விசயத்துல எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருகாங்க இல்ல, நீ அமைதியா இரு..” என ப்ரீத்தா அடக்க,

“எப்படிடி.. எப்படி உனக்கு சாதாரணமா பேச மனசு வருது. உன் வாழ்க்கையை நாசம் பண்ணிருக்கா.? நீ வாழ வேண்டிய வாழ்க்கையை கெடுத்துருக்கா.?” என கத்திக் கொண்டிருக்க,

“போதும் நாயகி..” என்று அதட்டினார் வசந்தி.

“ராணி..” என சத்தமாக அழைத்து, அவர் ஓடிவரவும், “இந்த பொண்ணை மேல கூப்பிட்டு போ..” என ராணியை சத்தம் போட,

“வா.. வா பாப்பா..” என தாமரையை அங்கிருந்து அழைத்து செல்ல,

“நாயகி இவ்வளவு நேரம் உங்கிட்ட சொன்னதெல்லாம் மண்டைல ஏறிச்சா இல்லையா.? அந்த பையன் டாக்டர். அவன்தான் தாமரையை கல்யாணம் செய்துக்க போறவன். அப்படியே விட்டா அவளும் அப்படியே போய்டுவா, அதைவிட்டு இப்படி அந்த பொண்ணை கரிச்சுக் கொட்டினா, அப்புறம் இளா என்ன முடிவெடுப்பான்னு என்னால சொல்ல முடியாது. நான் பொறுப்பாகவும் முடியாது..” என கோபமாக சொல்ல,

“ம்ச் இப்படியே பேசிப்பேசி என் வாயை அடைங்க. ஆனா அவளை அப்படியே விட எனக்கு மனசே இல்ல. எப்படியும் எங்கிட்ட மாட்டாமலா போவா? அப்போ மொத்தமா கவனிச்சிக்கிறேன்..” என வன்மத்துடன் கூறிவிட்டு செல்ல, நடக்கும் அனைத்தையும் மிகவும் குழப்பத்துடன் உள்வாங்கிக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா.






 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
ஶ்யாம்.. நீ வேர லெவல் கண்ணா
இந்த இளங்கோ வேண்டாம்.. நீயே தாமரையை கல்யாணம் செய்துக்கோ.
அந்த டாக் அப்படியே போகட்டும்
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
ப்ரீத்தாவை நினைச்சாலும் கஷ்டமாதான் இர்க்க்கு..
இளங்கோ எதாச்சும் ஒரு பக்கம் பேசுடா லூசே
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
வாரே வா.. ஷ்யாம் சரியா சொன்னடா..
இவங்களுக்கெல்லாம் பொண்ணுங்க ந்னா அவ்ளோ இளக்காரம்..
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
93
43
Tanjur
நீ ப்ரீத்தாக்கிட்ட பேசுற்துக்கு பதிலா இந்த பேச்சை இளங்கோ கிட்ட பேசிருக்கனும். அப்போதான் அந்த லூசுக்கு கொஞ்சமாவது தன்னோட தப்பு புரியும்...
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 6)


அப்பாடா...! நான் கேட்க நினைச்சது எல்லாத்தையும் இந்த ஷ்யாமாவது கேட்டானே தாங்க் காட்...! ஒரு பெண்ணைக் கூட வன்புணர்வு பண்ணலாம், ஆனா ஒரு ஆணை அவனோட கன்சிஸ்டன்சி இல்லாம வளைக்க கூட முடியாது..
அது தான் உண்மை. ஷியாம் ப் ரீ த் தா மனசுல குழப்பத்தை உண்டாக்கிட்டான், இனி குழப்பமே அவளுக்கு ஒரு நல்ல தெளிவை கொடுத்திடும் பாருங்க.


அது சரி, இந்த இளங்கோ அப்படி என்ன பிசினஸ் பண்ணி கிழிக்கிறான்னு ஓடி ஓடி போயிடறான். வந்தான், மேட்டரை முடிச்சான், போயே போயிட்டான் என்கிற மாதிரியே நடந்துக்குறான்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
792
79
63
Coimbatore
ப்ரீதாவை நன்றாக குழப்பி விட்டான் ஷ்யாம். தாமரைக்கு நல்லது நடந்தால் சரி.