• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 10

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
492
113
Tirupur
தாமரை 10

வெகுநேரமாக தனக்கு வந்த போட்டோவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

அதைப் பார்க்க பார்க்க அவனின் கோபம் ஏறிக்கொண்டே போனது.

‘யார் இவன்?’ என்ற கேள்வி ஒருபுறம், தன் வாழ்க்கையை சீரழித்து விட்டு எவனோ ஒருவனுடன் குழைந்து கொண்டிருக்கிறாளே என்ற ஆத்திரம் ஒருபுறம், என இளங்கோவிற்கு கோபமும் ஆத்திரமும் தாறுமாறாக கூடிக் கொண்டே போனது.

உடனே அந்த மெசேஜ் வந்த எண்ணிற்கு அழைக்க, அது நாயகியின் மற்றொரு எண் என அவர் ‘ஹலோ’ சொல்லும்போதே புரிந்து போனது இளங்கோவிற்கு.

இவர் ஏன் இதை தனக்கு அனுப்புகிறார் என சட்டென கேள்வி முளைக்க, தன் கோபத்தை மறைத்து, எடுத்த உடனே “இதெல்லாம் எனக்கு ஏன் அனுப்புறீங்க அத்தை?” என்றான் கோபமே இல்லாத குரலில்.

“என்ன இளா இப்படி சொல்லிட்ட? உங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டோம்னு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம, ஒருத்தன் கூட கொஞ்சி குழாவிக்கிட்டு இருக்கா, அதை பார்த்த எனக்கு ஆத்திரமா வருது. ப்ரீகுட்டி இதை பார்த்துட்டு ரூமுக்குள்ள போனவதான் இன்னும் வெளியேவே வரல. என் பொண்ணு என்ன பாவம் பண்ணா சொல்லு?” என நீலிக்கண்ணீர் வடிக்க, இங்கு இளங்கோவிற்கு எரிச்சல் கூடியது.

“அத்தை” என அவள் அடுத்து பேசும் முன் தடுத்தவன், “நான் நெக்ஸ்ட் மந்த் வந்துடுவேன். நான் வந்த பிறகு இதெல்லாம் பேசிக்கலாம். நீங்கள் டென்ஷன் ஏத்தாதீங்க ரீத்துகிட்ட நான் பேசுறேன். அவளை ஸ்டடிஸ்ல கான்சன்றேட் பண்ண சொல்லுங்க.” என கராராக பேச, நாயகியால் அடுத்து எதுவும் பேச முடியவில்லை.

ஆனாலும் விடாமல் “நீ சொன்னா சரிதான் இளா. எனக்குத்தான் இங்க நடக்கிறதை பார்க்க பார்க்க மனசே ஆற மாட்டேங்குது. நீ மறக்காமல் ஃப்ரீகுட்டி
கிட்ட பேசு. நான் வெச்சிடுறேன்.” என தேவைக்கு அதிகமாகவே தன் நாடகத்தை நடித்து போனை வைத்தாள் நாயகி.

நாயகி வைத்ததுமே, வசந்திக்கு தான் அழைத்தான் இளா. அவரிடம் சாதாரணமாக பேசிவிட்டு, வீட்டிற்கு வந்தவன் யார் என கேட்டான்.

சாதரணமாக கேட்டாலும் பேரனின் குரலில் இருந்த கோபத்தை வசந்தியால் உணர முடிந்தது.

“தாமரை கல்யாணம் செய்துக்கப் போற பையனாம். இங்கதான் டாக்டரா இருக்கான். குழந்தை பிறந்த பிறகு கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க போல.” என அவர் முடிக்க,

“யார் இதெல்லாம் சொன்னது? தாமரையா? அவளுக்கு அவ்வளவு தைரியமா?” என இளங்கோ பல்லை கடிக்க,

“என்ன பேசுற இளா? குழந்தை பிறந்ததும் நீயும்தான் நம்ம ப்ரீகுட்டியை கல்யாணம் செய்துக்க போற, அதை யாராவது கேள்வி கேட்டாங்களா? நீ இன்னொரு கல்யாணம் செய்துக்கும்போது, அவ மட்டும் அப்படியே இருக்கனுமா என்ன? அந்த வீட்டுக்கு அவ ஒரே பொண்ணு. உன் அத்தை அப்படியே விட்டுடுவாங்களா என்ன?” என ஏற்ற இறக்கமாக பேச, இங்கு அவனுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.

“பாட்டிமா புரிஞ்சுதான் பேசுறீங்களா? குழந்தை பிறந்ததும் எப்படி உடனே கல்யாணம் செய்ய முடியும்? குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கணும். மத்ததெல்லாம் எப்படி?” என எரிச்சலில் கத்தினான்.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நீ தானே அந்த பொண்ணுகிட்ட குழந்தை பிறந்ததும் கொடுத்துட்டு கிளம்பனும்னு சொன்ன, இப்போ இப்படி சொல்ற. ஏன் மாத்தி மாத்தி பேசுற. ஃப்ரீகுட்டிக்கு வேற ப்ராமிஸ் பண்ணியிருக்க, ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை உனக்கு விளையாட்டா போயிடுச்சா?” என வசந்தியும் கோபமாக பேசினார்.

“பாட்டிமா நான் ரீத்துகிட்ட பேசுறேன். இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம். அவ படிப்பை முதலில் முடிக்கட்டும்.” என்றான் இளாவும் கோபமாக.

“இந்த பேச்சு ஆரம்பிக்கும் போதே அவ படிப்பு முடியட்டும். தேவையில்லாம அவ மனசுல ஆசையை வளர்க்காதீங்கன்னு சொன்னேன். யாரும் கேட்கல இப்ப வந்து மாத்தி மாத்தி பேசினா, அவ மனசு என்ன பாடுபடும். சின்ன பொண்ணுடா அவ. தப்பா ஏதாவது முடிவு எடுத்துட்டா என்ன பண்ணுவ? சும்மாவே உங்க அத்தை ஆடுவா இப்ப நீ சலங்கை வேற கட்டி விட சொல்ற.” என எரிச்சலும் சலிப்புமாக பேரனைத் திட்டினார்.

“போதும் பாட்டிம்மா. உங்களால முடியாதுன்னா விடுங்க. நான் வந்து பேசிக்கிறேன்.” என்று பட்டென சொன்னவன் ஃபோனையும் வைத்து விட்டான்.

பேரனின் இந்த குணம் தெரிந்ததால் தான், ஆரம்பித்திலேயே தன் மகனிடம் பேத்திக்கு ‘வேறு இடம் பார்த்து விடு’ என்று கண்டிப்பாக சொல்லியிருந்தார். இதோ அவர் நினைத்தது போலவே சொல்லி விட்டானே இனி இந்த நாயகி என்னவெல்லாம் செய்யப் போகிறாளோ என உள்ளுக்குள் பயபந்து உருள ஆரம்பித்தது அந்த பெரியவருக்கு.

அடுத்த நாள் காலையில் வழக்கம்போல ஷ்யாம் தாமரையை அழைக்க வந்திருந்தான். அப்போதுதான் கல்லூரிக்கு செல்வதற்காக பிரீத்தாவும் வெளியே வந்தாள்.

ஷியாமை பார்த்ததும் பேசலாமா வேண்டாமா என யோசித்தபடியே நடக்க, அவனுக்கு அப்படியெல்லாம் இல்லை போல. அவளைப் பார்த்ததும் புன்னகையுடன் “ஹாய் எப்படி இருக்கீங்க?” என்றான் மிகவும் சாதாரணமாக.

பிரீத்தாவும் வேறு வழியில்லாமல் “ஹாய்… நல்லா இருக்கேன். நீங்க?” என்றாள் சம்பிரதாயமாக.

“நானும் பைன் தாங்க. எங்க காலேஜுக்கா? வாங்க நான் டிராப் பண்றேன். உங்க காலேஜ் வழிதான் நான் போகணும். அப்படியே டிராப் பண்ணிடறேன். என சாதாரணமாக கூப்பிட அரண்டு போனாள் ப்ரீத்தா.

“என்ன நானா? நான் எப்படி? அதெல்லாம் வேண்டாம். நான் எப்பவும் போல காலேஜ் பஸ்ல போய்க்கிறேன், நீங்க பாருங்க. பாய்..” என்றவள் நிற்காமல் நடக்க,

“அட என்னங்க நீங்க. ஜஸ்ட் ஒரு ஹெல்ப் அவ்வளவு தானே. இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? நான் ஒன்னும் உங்களுக்காக எதுவும் செய்யலமா. போற வழியில இறக்கி விடுறேன்னு சொன்னேன். என்னமோ நான் உங்ககிட்ட மிஸ் பிஹேவ் பண்ண மாதிரி இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகுறீங்க. இட்ஸ் ஓகே. நீங்க போங்க.” என முகத்தை திருப்பிக்கொள்ள

“ஐயோ அப்படியெல்லாம் இல்ல. நீங்க ரெண்டு பேரும் போகும்போது, நான் ஏன் இடையிலன்னு யோசிச்சுதான், அப்படி சொன்னேன். சாரி உங்களை ஹர்ட் பண்ணனும்னு நெனச்சு அப்படி சொல்லல ரியலி சாரி.” என்றாள் படபடப்பாக.

“நாங்க ரெண்டு பேர் போனா என்ன? எங்க கூட நீங்க வரக்கூடாதுன்னு யாரும் சொல்லவே இல்லையே. ஒருவேளை உங்க மாமா சொல்லி இருப்பாரா இருக்கும். சாரி! நான் தான் யோசிக்காமல் கூப்பிட்டேன். இனி இப்படி நடக்காது” என ஷ்யாம் பேசிக் கொண்டிருக்கும் போதே தாமரையும், அவளது பைகளை எடுத்துக்கொண்டு ராணியும் வர, இப்போது என்ன பேசுவது என தெரியாமல் வேகமாக காரின் பின் கதவை திறந்து அமர போனாள் பிரீத்தா.

அதைவிட வேகமாக அவளை தடுத்த ஷியாமை கேள்வியாக பார்த்தாள் ப்ரீத்தா.

“அது தாமரைக்கு முன்னாடி உட்கார வசதிப்படாது. அவ பின்னாடி நல்லா உட்காரட்டும். நீ முன்னாடி உட்கார்ந்துக்கோ.” என்றுவிட, பன்மையிலிருந்து ஒருமைக்கு மாறிய ஷ்யாமின் பேச்சை யோசித்துக் கொண்டே முன்னிருக்கையில் அமர்ந்தாள் பிரீத்தா.

ஷியாமை ஒரு பார்வை பார்த்த தாமரை, சிறு சிரிப்புடன் பின் இருக்கையில் அமர, அவளிடம் லேப்டாப் பேக் மற்றும் லஞ்சு பேக்கை கொடுத்து விடை கொடுத்தார் ராணி.

“காரைக் கிளப்பியபடியே “என்ன சாப்பிட்ட அம்மு? டேப்லட்ஸ் எடுத்துக்கிட்டியா? வேற எதுவும் வாங்கணுமா?” என கேள்விகளை அடுக்க,

“டேய் எப்பா ஷ்யாமா எல்லாம் ஆச்சு. கேள்வியா கேட்டு என்னை கொல்லாதே. நான் அப்படியே தூங்குறேன் ஆபீஸ் வந்ததும் எழுப்பு.” என தாமரை கண்ணை மூடிட,

“தூங்கு மூஞ்சி தூங்கு மூஞ்சி இப்படி தூங்கிக்கிட்டே இருடி. உள்ளே இருக்கிறதும் தூங்கு மூஞ்சிய பிறக்க போகுது.” என திட்டிக்கொண்டே கண்ணாடியில் பார்க்க, அதற்குள் தூங்கி இருந்தாள் தாமரை.

“ரெண்டு செகண்ட்ல தூங்குற ஒரே ஆளு இவ மட்டும் தான்.” என சிரித்தபடியே ப்ரித்தவை பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரீத்தாவின் பார்வையை உணர்ந்தவன் ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்த,

“சாரி! நான் மறுபடியும் இதை கேட்கிறேன் என்று தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு அவங்க மேல கோபமே வரலையா?” என்றாள் சின்ன குரலில்.

ஆனால் ஷியாம் இதற்கு உடனே பதில் கொடுக்கவில்லை சில நிமிடங்கள் அமைதியாக வண்டியை ஓட்டியவன் பின் “எனக்கு ஏன் கோபம் வரணும். இது அவளோட வாழ்க்கை. எந்த முடிவா இருந்தாலும் அவ தான் எடுக்கணும். இப்படியெல்லாம் நடக்கும்னு அவளை நினைச்சிருக்க மாட்டா. ஆனா நடந்துடுச்சு. அதுக்காக என்ன செய்ய முடியும். நடந்தது இல்லைன்னு சொல்ல முடியுமா? அடுத்து என்ன செய்யணும்ணு அதை நோக்கி நகர்ந்துடுறது தானே நல்லது.” என்றான் பொறுமையாக.

“ம்ம்ம்.” என்றாள் ப்ரீத்தா ஒரு பெருமூச்சுடன்.

“ஏன் என்னாச்சு? உடனே டல்லாகிடீங்க. நீங்க எதிர்பார்த்த பதிலை நான் சொல்லலையோ.?” என சிறு புன்னகையுடன். ஷ்யாம் கேட்டதுமே ப்ரீத்தாவின் முகம் கன்றி போனது.

மேலும் அதைப் பற்றி பேசி அவளை சங்கடபடுத்தாமல், அவளின் கல்லூரியை பற்றி பேசியவன் “உங்க வெட்டிங் நின்னது. உங்க பிரண்ட்ஸ்க்கு தெரியுமா? உங்களை சங்கடப்படுத்துற மாதிரி யாரும் பேசிட்டாங்களா? நீங்க ஓகே தானே.” என்றான் வாஞ்சையாக.

“ம்ம்ம் நான் ஓகேதான். ஆரம்பத்துல ஃபிரண்ட்ஸ் கொஞ்சம் கிண்டல் பண்ணாங்க. அப்புறம் விட்டுட்டாங்க. க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸும் என்னோட ஹச்ஓடியும்தான் ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க. படிக்கும்போது மேரேஜ் எல்லாம் கூடவே கூடாது. லைஃப்ல ஒரு கோல் இருக்கணும். அதை அச்சீவ் பண்ணனும். அதுக்குப் பிறகு தான் மேரேஜ் இருக்கணும். இப்ப நின்னது கூட நல்லதுதான்னு சொன்னாங்க.” என்றாள் மெதுவாக.

“எதையும் யோசிக்காதீங்க ப்ரீத்தா. உங்களை விட்டு ஒன்னு தள்ளிப்போனா, அதை விட பெட்டரா ஒன்னு கிடைக்கப் போறதுக்காக கூட இருக்கலாம். மனசை குழப்பாமல் படிப்புல கவனம் செலுத்துங்க. இப்போ உங்க கவனத்தை அதுல மட்டும் காட்டுங்க. மற்றது எல்லாம் தானா நடக்கும்.” என மிகவும் மென்மையாக கூற, அந்த குரலுக்கு கட்டுப்பட்டு அமைதியாக வந்தாள் பிரீத்தா.

சில நிமிடங்களில் அவளின் கல்லூரியும் வந்துவிட, ஒரு நன்றியுடன் அவனிடமிருந்து விடைபெற்றாள் ப்ரீத்தா.

அவள் கல்லூரிக்குள் போகும் வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு, காரை திருப்பினான் ஷாம்.

“டேய் ஷ்யாமா தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்குற போல..” என சிரித்தபடியே தாமரைக் கேட்க,

“நீ எப்போ எழுந்த..” என்றவனிடம்,

“இப்போதான்.. கார் நிற்கவும் ஆபிஸ் வந்துடுச்சோன்னு நினைச்சேன்..” என்றவள் “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மேன்..” எனவும்,

“சின்ன பொண்ணுடி. ரொம்ப குழப்பத்துல இருக்கா. அவளுக்கு சரியான கைட் இல்ல. இருந்திருந்தால் நிச்சயமா இவ்வளவு குழப்பத்துக்கு ஆளாகிருக்க மாட்டா.” என்றான் ஷ்யாமும் வருத்தமாக.

“எனக்கும் புரியுதுப்பா… அவங்க அம்மா அவளை அப்படி டியூன் பண்ணி வச்சிருக்காங்க. அவளும் அதைக் கேட்டு பழகிட்டா. இதை உடனே மாத்த முடியாது. நீ வேணும்னா ட்ரை பண்ணு. பட் அது சரியா வருமான்னு எனக்கு தெரியல. அப்படியே ரிவெஞ் ஆகவும் வாய்ப்பு இருக்கு.” என்றாள் தாமரை.

“எல்லாம் பாத்துக்கலாம் விடு. அத்தை போன் பண்ணாங்களா, அடுத்து எப்ப வராங்க..” என்றான்.

“இன்னும் இல்லடா. நான்தான் ஆபீஸ் போன பிறகு பேசுறேன்னு, சொல்லி இருக்கேன். நெக்ஸ்ட் செக்கப்புக்கு வருவாங்க.” என்றாள் தாமரையும்.

“சரி கவனமா நடக்கணும். உட்காரும்போது எழுந்துக்கும் போது ரொம்ப கவனமாக இருக்கணும். பாரு இப்பவே வயிறு நல்லா தெரியுது. 5 மந்த்ஸ்ல உனக்கு கஷ்டமா இருக்கும். அப்போ கண்டிப்பா ஆஃபீஸ் வர முடியாது வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டுக்கோ.” என்றான் அக்கறையாக.

“ஆப்டர் லாங் லீவ் இன்னைக்கு தான் மறுபடியும் போறேன். அதுக்குள்ள இவ்ளோ கண்டிஷன்ஸ் சொன்னா? அப்படியே வீட்டுக்கு போம்மான்னு அனுப்பி வச்சிடுவாங்க, நீ வேற ஏண்டா.” என சிரிக்க,

“சரி சரி இப்போ விடு. ஆனால் சீக்கிரம் சொல்லிடு” என்றவன் அவளை ஆபீசில் விட்டு தன் மருத்துவமனைக்கு கிளம்பினான்.

பல மாதங்கள் கழித்து அலுவலகத்திற்கு வந்த, தாமரையை அத்தனை பேரும் பிடித்துக் கொண்டனர். ‘திடீரென்று கல்யாணம் ஆயிடுச்சு’ என காரணம் சொல்லி, தப்பிப்பதற்குள் ஒரு வழியாகியிருந்தாள் தாமரை.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 10)


ஐ திங்க்... இந்த ஷ்யாமாக்கு ப்ரீத்தி மேல இருக்கிறது சிம்பத்தியா, கர்ட்டஸியா, இல்லை லவ்வா....? எனக்கென்னவோ, இது லவ் மாதிரித் தான் தெரியுது.
அதே மாதிரி இளங்கோ மேல ப்ரீத்திக்கு இருக்கிறது லவ்வே கிடையாது. அவங்கம்மா நாயகியோட பேராசை & துர்போதனை. அதனாலத்தான் ரிங் மாஸ்டர் மாதிரி அவங்கம்மா ஆட்டி வைச்ச ஆட்டத்துக்கு எல்லாம் இந்த ப்ரீத்தி ஆடிட்டிருக்கா. அவளோட அப்பாவோ, இளங்கோவோ, இல்லை ஷ்யாமா ஒரு பத்து நிமிசம் அவ கூட உட்கார்ந்து பேசினா அதை ரியலைஸ் பண்ணி இந்த துர்போதனையில இருந்து வெளியே வந்துடறதோட, தனக்கான நல்லது கெட்டதையும் அவளே பார்த்துப்பான்னு தோணுது.


😀😀😀
CRVS (or) CRVS 2797