தாமரை - 27
வசந்திக்கு அந்த கூட்டத்தில் நிற்கவே உடல் எல்லாம் கூசியது. அங்குள்ளவர்கள் தன் மகளை அசிங்கமாக பேசுவதை அவரால் காதால் கூட கேட்க முடியவில்லை.
நடந்த அனைத்திற்கும் கதிரவன் தான் முழு பொறுப்பு என்றாலும், முதல்முறை மகன் அழைத்து வந்த அன்றே வீட்டுக்குள் விடாமல் இருந்திருந்தால், உன் வீட்டில் பேசி அவர்களை அழைத்து வந்து முறையாக பேசு என அழுத்தமாக தன் முடிவை கூறி இருந்தால், நிச்சயம் அப்போதே அனைத்தும் சரியாகியிருக்கும் என்று அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நேற்று கதிரவனின் தந்தை வந்து போனதிலிருந்து, அவர் மனம் வெகுவாக கலங்கித் தான் போயிருந்தது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போவதாக, அவர் உள் மனம் எச்சரித்துக் கொண்டே தான் இருந்தது.
அடுத்து நொடியும் தாமதிக்காமல், கதிரவன் உடனே ஊருக்கு போக வேண்டும் என்று நிற்க, மகள் வேண்டாம் என உறுதியாக மறுத்ததை நினைத்து, கோபம் தலைக்கேறியது வசந்திக்கு.
ஒருவேளை உடனே வந்திருந்தால், வந்த உடனே இவர்களை சமாதானம் செய்திருந்தால், அவரின் மன அழுத்தம் குறைந்து, உயிரோடாவது இருந்திருப்பாரோ என யோசிக்க, யோசிக்க மகளையும் மகனையும் மன்னிக்கவே முடியவில்லை அந்த தாயால்.
அதிலும் தன் மகளை மகேஸ்வரி பார்த்து சென்ற பார்வை, அவருக்கே அசிங்கமாக இருக்க, மகளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்க நினைக்க பிள்ளைகளின் தவறு பெரிதாக தெரிந்தது.
நேற்று மருமகன் மகளிடம் கெஞ்சியது இப்போதும் மனதை பிசைந்தது. “நான் உடனே கிளம்பனும் ஜெயந்தி.. அவங்க ஏன் இங்க வந்தாங்க? என்ன நடந்தது எதுவும் தெரியாது. அம்மாவுக்கு இப்போ எல்லாம் அடிக்கடி உடம்பு முடியாம போகுது. ஒருவேளை அது தான் பிரச்சனையான்னும் தெரியல..” என பதட்டமாக கதிரவன் கிளம்ப எத்தனிக்க,
“வேண்டாம் கதிர்.. நீங்க போக வேண்டாம்.. எனக்கு பயமா இருக்கு கதிர்… நீங்க போனா நம்மளை பிரிச்சிடுவாங்க.. புரிஞ்சுக்கோங்க கதிர்.. நீங்க போறதில்ல எனக்கு விருப்பம் இல்ல..” என ஜெயந்தி பிடிவாதமாக பேச,
சீனியும் கூட “ஆமாம் கதிர்.. அங்க என்ன வேணும்னாலும் நடக்கும். உங்களை மிரட்டி கூட எல்லாம் செய்யலாம். ஜெயந்தி சொல்றதுல என்ன தப்பு..? இத்தோட அவங்களை அப்படியே விட்டுடுங்க.. உங்க வாழ்க்கைய பாருங்க..” என சீனியும் கூற, அதிர்ந்து போனார்கள் கதிரும் வசந்தியும்.
“என்னடா பேசுற..?” என வசந்தி மகனை அதட்ட
“அவர் சொல்றதுல ஒரு தப்பும் இல்ல அத்தை… நம்ம ஜெயந்தி வாழ்க்கை தான் நமக்கு முக்கியம். அவங்க வாழ்க்கையை மட்டும் நீங்க யோசிங்க..” என நாயகியும் பேச, எரிச்சலாக பார்த்தார் மூவரையும்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க..? அங்க என்ன பிரச்சனைன்னு தெரியாம இவரை போக வேண்டாம்னு சுயநலமா பேசிட்டு இருக்கீங்க. அவங்க வீட்டில ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன செய்வீங்க. அவர் ஊருக்கு வந்ததையும் வீட்டுல சொல்லல. ஒரு வேலை அங்க தகவல் சொல்லி, அவர் இல்லைன்னு தெரிஞ்சு, பயத்துல எதுவும் நடந்திருக்குமோ.?” என வசந்தி சொல்ல சொல்லவே, கதிரவனின் பயம் அவர் முகத்தில் தெரிந்தது.
“அப்படியும் இருக்கலாம் அத்தை.. இந்த வாரம் நானும் வீட்டுக்கு போனும் பண்ணல.. அம்மா பயந்து தான் இங்க வரை அனுப்பி விசாரிக்க சொல்லி இருப்பாங்க..” என்ற கதிர் ”நான் போயிட்டு வரேன் ஜெயந்தி.. என்னை விடுங்க..” என வெளியில் நடக்க,
“எங்க போறீங்க கதிர்? எனக்கு நீங்க போறது பிடிக்கல.. ப்ளீஸ் என்னையும் என் பயத்தையும் புரிஞ்சுக்கோங்க.. உங்களை விட்டுட்டு என்னால வாழ முடியாது.. அங்க என்ன வேணும்னாலும் நடக்கும்.. என்னால் அதை எல்லாம் ஏத்துக்க முடியாது..” என ஆத்திரமும் அழுகையுமாக ஜெயந்தி பேச,
“ஜெயந்தி கொஞ்சம் அமைதியா இரு.. அவரைப் போகவிடு.. வீணா பிடிவாதம் பிடிக்காத..” என வசந்தியும் மகளை அதட்டினார்.
“அம்மா நீங்க அமைதியா இருங்க.. அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்..” என சீனி, தன் தாயின் வாயை அடைத்தார்.
“போதும் ஜெயந்தி! இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது..” என கத்திய கதிர் “உன் கூட ஏழு வருஷம் வாழ்ந்திருக்கேன். இந்த ஏழு வருஷம் வாழ்க்கையில நான் பயங்கரமா தோத்துப் போயிட்டேன்னு இப்பதான் எனக்கு புரியுது. உனக்காக… உனக்காக மட்டும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்ததையே தப்புன்னு யோசிக்க வச்சிட்ட..” என்றார் கோபமாக.
“என்ன பேச்சு இதெல்லாம்..? நான் எப்போ அப்படி பேசினேன்..” என ஜெயந்தியும் கூட பேச,
“ஆமா அதுதான் உண்மை. நீ பேசல்லனாலும், உன்னோட நடவடிக்கை அதைத்தானே காட்டுது. உன் குடும்பம் என் குடும்பமா மாறி ரொம்ப நாளாச்சு. ஆனா என் குடும்பம் உனக்கு ஒரு பொருட்டே இல்லயில்லை. இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது நீயா எங்க வீட்டுக்கு போகலாமா? அவங்க எப்படி இருக்காங்க? என்ன பண்றாங்கன்னு கேட்டிருக்கியா? எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா அவளை பற்றியாவது விசாரிச்சு இருப்பியா? அந்த வருத்தம் எனக்கு இருந்தும் கூட, அதையெல்லாம் வெளியே காட்டாம, உன் விருப்பம் தான் முக்கியம்னு வாழ்ந்ததுக்கு எனக்கு நல்ல பரிசு கொடுத்துட்ட.” என ஆத்திரமும், வருத்தமுமாக கதிர் பேச, வாயடைத்துப் போனார்கள் அனைவரும்.
“என்ன இது பெரிய வார்த்தை எல்லாம்..?” என சீனி ஆரம்பிக்கும் போதே,
“வேண்டாம் சீனி எதுவும் பேச வேண்டாம்.. அன்னைக்கு நீ சொன்ன வார்த்தைக்காக மட்டும்தான், நான் இவகிட்ட எதையும் சொல்லாமல் விட்டேன்… ஆனா சொல்லியிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்.. என் குடும்பமும் நிம்மதியா இருந்திருக்கும்..” என தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டார்.
“என்ன சொல்ல வரீங்க கதிர்? என்னால தான் உங்க வாழ்க்கையே போச்சுன்னு சொல்றீங்களா.?” என அப்போதும் ஜெயந்தி அடங்காமல் கத்த,
“இல்ல.. அப்படி இல்ல… இத்தனை வருஷம் வாழ்ந்தும் கூட என்னால உனக்கு என் மேல நம்பிக்கை வர வைக்க முடியல.. அப்போ இந்த வாழ்க்கையில நான் தோத்துதான போயிட்டேன். அதைத்தான் சொல்றேன்..” என்றவர் ஜெயந்தியின் அதிர்ந்த முகம் பார்த்து “உனக்கு என் மேல நம்பிக்கை இருந்திருந்தால், இந்நேரம் நீயே கிளம்புங்க நானும் வரேன் போகலாம்னு சொல்லியிருப்ப, ஆனா..?” எனக் கத்தியவர் “மோசமா தோத்து போயிட்டேன். இந்த வாழ்க்கையில படு மோசமா தோத்துப் போயிட்டேன்..” என்று வெளியில் நடக்க, இளங்கோ வேகமாக சென்று தந்தையின் கையைப் பிடித்தான்.
மகனின் கையை இறுக்கமாக பிடித்தவர், அனைவரையும் வெறுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வெளியில் நடந்து விட்டார்.
மருமகனின் தளர்ந்த நடையும், வருத்தம் தோய்ந்த முகவும் வசந்தியை வெகுவாக பாதித்தது.
“உன்கிட்ட இருந்து இதை நான் சுத்தமா எதிர்பார்க்கல ஜெயந்தி.. என்னோட வளர்ப்பு பொய்யா போச்சா.? எப்போ இருந்து நீ இப்படி ஆன.?” என வருத்தமாக கேட்டவர் “அவர் சொல்லாத ஒன்னை நான் சொல்லட்டுமா.?” என மகளை தீர்க்கமாக பார்த்தார்.
ஜெயந்தியும் என்னவோ என்பது போல் மிகவும் பயத்துடன் தான் தாயை திரும்பிப் பார்த்தார்.
“நீ அவரை விரும்பல, அவரோட பணத்தை தான் விரும்பி இருக்க. அதை அவர் சொல்லல.. அவரை விரும்பியிருந்தா அவர் குடும்பத்தையும் நீ விரும்பியிருப்ப அவரைப்போல.” என நிறுத்தி மகளைக் கூர்மையாக பார்த்து “நீ தான் அவரை விரும்பவே இல்லையே..” என்றதோடு மருமகனை தேடி வெளியில் நடந்தார் வசந்தி.
தாயின் பேச்சில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார் ஜெயந்தி.. நடந்தது எல்லாம் பார்த்து நாயகிக்கு எரிச்சல்தான் வந்தது. ஜெயந்தியை வைத்து தான் இந்த வீட்டிற்குள் வந்தார் நாயகி. அவரிடம் நல்ல பெயர் வாங்கினால் தான், இங்கு சமாளிக்க முடியும் என்ற நிலையில் தான் இருந்தார். அதனால்தான் ஜெயந்திக்கும் மூளைச்சலவை செய்தார். அது சரியாக வேலையும் செய்தது. இப்போது மாமியாரின் பேச்சில் ஜெயந்தி தெளிவடைந்து விட்டால் என்ன செய்ய? என யோசிக்கும் போதே,
“அண்ணா என்னை கூப்பிட்டு போ.. அவர் என்னை தப்பா நினைச்சுட்டார்.. நான் போனால்தான் அப்படியெல்லாம் இல்லைன்னு நம்புவார்.. ப்ளீஸ் அண்ணா..” என சீனியிடம் கேட்டு விட்டார் ஜெயந்தி.
சீனிக்கும் தங்கை சொல்வதே சரியென்று பட “வா ஜெயந்தி…” என்று அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
கதிரவன் தங்கத்தின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்க, ஊராட்களும் சமாதானம் பேச முயற்சிக்க, எதற்கும் பிடி கொடுக்கவில்லை தங்கம்.
செல்வம் கூட இந்த பிரச்சினையில் தலையிடவில்லை. தங்கத்திடம் கூட “உனக்கு விருப்பம் இருந்த சொல்லு அத்த..” என சொல்லிவிட்டார்.
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல. எனக்கு என் பொண்ணு மட்டும்தான்..” என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
பங்காளிகளும் கதிரவனை வைத்து செல்வத்திடம் மூளைச் சலவை செய்தனர்.. ‘அத்தையோட முடிவுதான் கடைசி’ என எதற்கும் செல்வம் இறங்கி வரவில்லை.
கதிரவனின் குடும்பம் வெளியில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தது. இளங்கோதான் கதிரை விட்டு எங்கும் செல்லவில்லை. நடந்ததை எல்லாம் பார்த்து அவன் மனம் பெரிதளவில் பாதித்தது.
இவர்களுக்கு என் தந்தையை பிடிக்கவில்லை. அதனால் இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தான்.
அதோடு கதிரவனின் சட்டையைப் பிடித்த செல்வத்தின் மீது அப்போதே அவனுக்கு கோபம் வந்தது. தன் தந்தை தவறு செய்யமாட்டார் என்று பிள்ளைகள் நினைப்பதில் தவறில்லையே. இளங்கோவும் அப்படித்தான் நினைத்தான்.
கருப்பையாவின் இறுதி காரியங்கள் ஆரம்பித்தது. எங்கேயும் கதிரவனை விடவில்லை தங்கம். பங்காளிகள் மகன் உயிரோடிருக்கும் போது செய்யாமல் இருக்ககூடாது.. இது பல தலைமுறைக்கும் பாவம் வந்து சேரும் என பேசி பார்த்தும் தங்கம் இறங்கி வரவில்லை.
‘கதிர் வேண்டாம்னா விடு தங்கம், அந்த பையனை வச்சு செய்யலாம்..’ என மீண்டும் பங்காளிகள் ஆரம்பிக்க, செல்வம் எதுவும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே நேரம் சரியென்றும் சொல்லவில்லை.
அதனால் கந்தசாமியை அழைத்து கேட்கலாம் என அவரை வரவைத்து கேட்க, “என் மச்சானோட ஆத்மா நிம்மதியா சந்தியடையனும். எங்க கோபம் கதிரவனோடத்தான். அந்த சின்ன பையனை வச்சு செய்ங்க..” என முடித்துவிட, அப்போதும் தங்கம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொன்னார்.
மகேசும், செல்வமும் தான் சமாதானம் செய்தனர். அதனால் இளங்கோவை வைத்து கருப்பையாவின் இறுதி காரியங்கள் நடத்தப்பட்டது.
கதிரவனால் இந்த ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை. தன் மேல் எந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தால் இப்படியோரு கோபத்தைக் காட்டுவார்கள்’ என யோசித்தவருக்கு, காலம் கடந்து ஞானோதயம் வந்தது.
அனைவரும் கருப்பையாவின் வீட்டில் இருக்க, லட்சுமியைத் தேட மறந்து போயினர். கந்தசாமி மகளிடம் பொறுமையாகவே அனைத்தையும் எடுத்து சொல்லியிருந்தார். அவள் தப்பாக யோசிக்க மாட்டாள் என்று யோசித்து, ‘அங்க நீ வேண்டாம் கண்ணு.. நான் போய் அடக்கம் முடிஞ்சதும்.. வந்துடுறேன்..’ என சொல்லி சென்றவர், அதுதான் அவர் மகளை கடைசியாக பார்த்தது.
வசந்திக்கு அந்த கூட்டத்தில் நிற்கவே உடல் எல்லாம் கூசியது. அங்குள்ளவர்கள் தன் மகளை அசிங்கமாக பேசுவதை அவரால் காதால் கூட கேட்க முடியவில்லை.
நடந்த அனைத்திற்கும் கதிரவன் தான் முழு பொறுப்பு என்றாலும், முதல்முறை மகன் அழைத்து வந்த அன்றே வீட்டுக்குள் விடாமல் இருந்திருந்தால், உன் வீட்டில் பேசி அவர்களை அழைத்து வந்து முறையாக பேசு என அழுத்தமாக தன் முடிவை கூறி இருந்தால், நிச்சயம் அப்போதே அனைத்தும் சரியாகியிருக்கும் என்று அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நேற்று கதிரவனின் தந்தை வந்து போனதிலிருந்து, அவர் மனம் வெகுவாக கலங்கித் தான் போயிருந்தது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போவதாக, அவர் உள் மனம் எச்சரித்துக் கொண்டே தான் இருந்தது.
அடுத்து நொடியும் தாமதிக்காமல், கதிரவன் உடனே ஊருக்கு போக வேண்டும் என்று நிற்க, மகள் வேண்டாம் என உறுதியாக மறுத்ததை நினைத்து, கோபம் தலைக்கேறியது வசந்திக்கு.
ஒருவேளை உடனே வந்திருந்தால், வந்த உடனே இவர்களை சமாதானம் செய்திருந்தால், அவரின் மன அழுத்தம் குறைந்து, உயிரோடாவது இருந்திருப்பாரோ என யோசிக்க, யோசிக்க மகளையும் மகனையும் மன்னிக்கவே முடியவில்லை அந்த தாயால்.
அதிலும் தன் மகளை மகேஸ்வரி பார்த்து சென்ற பார்வை, அவருக்கே அசிங்கமாக இருக்க, மகளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்க நினைக்க பிள்ளைகளின் தவறு பெரிதாக தெரிந்தது.
நேற்று மருமகன் மகளிடம் கெஞ்சியது இப்போதும் மனதை பிசைந்தது. “நான் உடனே கிளம்பனும் ஜெயந்தி.. அவங்க ஏன் இங்க வந்தாங்க? என்ன நடந்தது எதுவும் தெரியாது. அம்மாவுக்கு இப்போ எல்லாம் அடிக்கடி உடம்பு முடியாம போகுது. ஒருவேளை அது தான் பிரச்சனையான்னும் தெரியல..” என பதட்டமாக கதிரவன் கிளம்ப எத்தனிக்க,
“வேண்டாம் கதிர்.. நீங்க போக வேண்டாம்.. எனக்கு பயமா இருக்கு கதிர்… நீங்க போனா நம்மளை பிரிச்சிடுவாங்க.. புரிஞ்சுக்கோங்க கதிர்.. நீங்க போறதில்ல எனக்கு விருப்பம் இல்ல..” என ஜெயந்தி பிடிவாதமாக பேச,
சீனியும் கூட “ஆமாம் கதிர்.. அங்க என்ன வேணும்னாலும் நடக்கும். உங்களை மிரட்டி கூட எல்லாம் செய்யலாம். ஜெயந்தி சொல்றதுல என்ன தப்பு..? இத்தோட அவங்களை அப்படியே விட்டுடுங்க.. உங்க வாழ்க்கைய பாருங்க..” என சீனியும் கூற, அதிர்ந்து போனார்கள் கதிரும் வசந்தியும்.
“என்னடா பேசுற..?” என வசந்தி மகனை அதட்ட
“அவர் சொல்றதுல ஒரு தப்பும் இல்ல அத்தை… நம்ம ஜெயந்தி வாழ்க்கை தான் நமக்கு முக்கியம். அவங்க வாழ்க்கையை மட்டும் நீங்க யோசிங்க..” என நாயகியும் பேச, எரிச்சலாக பார்த்தார் மூவரையும்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க..? அங்க என்ன பிரச்சனைன்னு தெரியாம இவரை போக வேண்டாம்னு சுயநலமா பேசிட்டு இருக்கீங்க. அவங்க வீட்டில ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன செய்வீங்க. அவர் ஊருக்கு வந்ததையும் வீட்டுல சொல்லல. ஒரு வேலை அங்க தகவல் சொல்லி, அவர் இல்லைன்னு தெரிஞ்சு, பயத்துல எதுவும் நடந்திருக்குமோ.?” என வசந்தி சொல்ல சொல்லவே, கதிரவனின் பயம் அவர் முகத்தில் தெரிந்தது.
“அப்படியும் இருக்கலாம் அத்தை.. இந்த வாரம் நானும் வீட்டுக்கு போனும் பண்ணல.. அம்மா பயந்து தான் இங்க வரை அனுப்பி விசாரிக்க சொல்லி இருப்பாங்க..” என்ற கதிர் ”நான் போயிட்டு வரேன் ஜெயந்தி.. என்னை விடுங்க..” என வெளியில் நடக்க,
“எங்க போறீங்க கதிர்? எனக்கு நீங்க போறது பிடிக்கல.. ப்ளீஸ் என்னையும் என் பயத்தையும் புரிஞ்சுக்கோங்க.. உங்களை விட்டுட்டு என்னால வாழ முடியாது.. அங்க என்ன வேணும்னாலும் நடக்கும்.. என்னால் அதை எல்லாம் ஏத்துக்க முடியாது..” என ஆத்திரமும் அழுகையுமாக ஜெயந்தி பேச,
“ஜெயந்தி கொஞ்சம் அமைதியா இரு.. அவரைப் போகவிடு.. வீணா பிடிவாதம் பிடிக்காத..” என வசந்தியும் மகளை அதட்டினார்.
“அம்மா நீங்க அமைதியா இருங்க.. அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்..” என சீனி, தன் தாயின் வாயை அடைத்தார்.
“போதும் ஜெயந்தி! இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது..” என கத்திய கதிர் “உன் கூட ஏழு வருஷம் வாழ்ந்திருக்கேன். இந்த ஏழு வருஷம் வாழ்க்கையில நான் பயங்கரமா தோத்துப் போயிட்டேன்னு இப்பதான் எனக்கு புரியுது. உனக்காக… உனக்காக மட்டும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்ததையே தப்புன்னு யோசிக்க வச்சிட்ட..” என்றார் கோபமாக.
“என்ன பேச்சு இதெல்லாம்..? நான் எப்போ அப்படி பேசினேன்..” என ஜெயந்தியும் கூட பேச,
“ஆமா அதுதான் உண்மை. நீ பேசல்லனாலும், உன்னோட நடவடிக்கை அதைத்தானே காட்டுது. உன் குடும்பம் என் குடும்பமா மாறி ரொம்ப நாளாச்சு. ஆனா என் குடும்பம் உனக்கு ஒரு பொருட்டே இல்லயில்லை. இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது நீயா எங்க வீட்டுக்கு போகலாமா? அவங்க எப்படி இருக்காங்க? என்ன பண்றாங்கன்னு கேட்டிருக்கியா? எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா அவளை பற்றியாவது விசாரிச்சு இருப்பியா? அந்த வருத்தம் எனக்கு இருந்தும் கூட, அதையெல்லாம் வெளியே காட்டாம, உன் விருப்பம் தான் முக்கியம்னு வாழ்ந்ததுக்கு எனக்கு நல்ல பரிசு கொடுத்துட்ட.” என ஆத்திரமும், வருத்தமுமாக கதிர் பேச, வாயடைத்துப் போனார்கள் அனைவரும்.
“என்ன இது பெரிய வார்த்தை எல்லாம்..?” என சீனி ஆரம்பிக்கும் போதே,
“வேண்டாம் சீனி எதுவும் பேச வேண்டாம்.. அன்னைக்கு நீ சொன்ன வார்த்தைக்காக மட்டும்தான், நான் இவகிட்ட எதையும் சொல்லாமல் விட்டேன்… ஆனா சொல்லியிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்.. என் குடும்பமும் நிம்மதியா இருந்திருக்கும்..” என தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டார்.
“என்ன சொல்ல வரீங்க கதிர்? என்னால தான் உங்க வாழ்க்கையே போச்சுன்னு சொல்றீங்களா.?” என அப்போதும் ஜெயந்தி அடங்காமல் கத்த,
“இல்ல.. அப்படி இல்ல… இத்தனை வருஷம் வாழ்ந்தும் கூட என்னால உனக்கு என் மேல நம்பிக்கை வர வைக்க முடியல.. அப்போ இந்த வாழ்க்கையில நான் தோத்துதான போயிட்டேன். அதைத்தான் சொல்றேன்..” என்றவர் ஜெயந்தியின் அதிர்ந்த முகம் பார்த்து “உனக்கு என் மேல நம்பிக்கை இருந்திருந்தால், இந்நேரம் நீயே கிளம்புங்க நானும் வரேன் போகலாம்னு சொல்லியிருப்ப, ஆனா..?” எனக் கத்தியவர் “மோசமா தோத்து போயிட்டேன். இந்த வாழ்க்கையில படு மோசமா தோத்துப் போயிட்டேன்..” என்று வெளியில் நடக்க, இளங்கோ வேகமாக சென்று தந்தையின் கையைப் பிடித்தான்.
மகனின் கையை இறுக்கமாக பிடித்தவர், அனைவரையும் வெறுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வெளியில் நடந்து விட்டார்.
மருமகனின் தளர்ந்த நடையும், வருத்தம் தோய்ந்த முகவும் வசந்தியை வெகுவாக பாதித்தது.
“உன்கிட்ட இருந்து இதை நான் சுத்தமா எதிர்பார்க்கல ஜெயந்தி.. என்னோட வளர்ப்பு பொய்யா போச்சா.? எப்போ இருந்து நீ இப்படி ஆன.?” என வருத்தமாக கேட்டவர் “அவர் சொல்லாத ஒன்னை நான் சொல்லட்டுமா.?” என மகளை தீர்க்கமாக பார்த்தார்.
ஜெயந்தியும் என்னவோ என்பது போல் மிகவும் பயத்துடன் தான் தாயை திரும்பிப் பார்த்தார்.
“நீ அவரை விரும்பல, அவரோட பணத்தை தான் விரும்பி இருக்க. அதை அவர் சொல்லல.. அவரை விரும்பியிருந்தா அவர் குடும்பத்தையும் நீ விரும்பியிருப்ப அவரைப்போல.” என நிறுத்தி மகளைக் கூர்மையாக பார்த்து “நீ தான் அவரை விரும்பவே இல்லையே..” என்றதோடு மருமகனை தேடி வெளியில் நடந்தார் வசந்தி.
தாயின் பேச்சில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார் ஜெயந்தி.. நடந்தது எல்லாம் பார்த்து நாயகிக்கு எரிச்சல்தான் வந்தது. ஜெயந்தியை வைத்து தான் இந்த வீட்டிற்குள் வந்தார் நாயகி. அவரிடம் நல்ல பெயர் வாங்கினால் தான், இங்கு சமாளிக்க முடியும் என்ற நிலையில் தான் இருந்தார். அதனால்தான் ஜெயந்திக்கும் மூளைச்சலவை செய்தார். அது சரியாக வேலையும் செய்தது. இப்போது மாமியாரின் பேச்சில் ஜெயந்தி தெளிவடைந்து விட்டால் என்ன செய்ய? என யோசிக்கும் போதே,
“அண்ணா என்னை கூப்பிட்டு போ.. அவர் என்னை தப்பா நினைச்சுட்டார்.. நான் போனால்தான் அப்படியெல்லாம் இல்லைன்னு நம்புவார்.. ப்ளீஸ் அண்ணா..” என சீனியிடம் கேட்டு விட்டார் ஜெயந்தி.
சீனிக்கும் தங்கை சொல்வதே சரியென்று பட “வா ஜெயந்தி…” என்று அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
கதிரவன் தங்கத்தின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்க, ஊராட்களும் சமாதானம் பேச முயற்சிக்க, எதற்கும் பிடி கொடுக்கவில்லை தங்கம்.
செல்வம் கூட இந்த பிரச்சினையில் தலையிடவில்லை. தங்கத்திடம் கூட “உனக்கு விருப்பம் இருந்த சொல்லு அத்த..” என சொல்லிவிட்டார்.
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல. எனக்கு என் பொண்ணு மட்டும்தான்..” என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
பங்காளிகளும் கதிரவனை வைத்து செல்வத்திடம் மூளைச் சலவை செய்தனர்.. ‘அத்தையோட முடிவுதான் கடைசி’ என எதற்கும் செல்வம் இறங்கி வரவில்லை.
கதிரவனின் குடும்பம் வெளியில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தது. இளங்கோதான் கதிரை விட்டு எங்கும் செல்லவில்லை. நடந்ததை எல்லாம் பார்த்து அவன் மனம் பெரிதளவில் பாதித்தது.
இவர்களுக்கு என் தந்தையை பிடிக்கவில்லை. அதனால் இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தான்.
அதோடு கதிரவனின் சட்டையைப் பிடித்த செல்வத்தின் மீது அப்போதே அவனுக்கு கோபம் வந்தது. தன் தந்தை தவறு செய்யமாட்டார் என்று பிள்ளைகள் நினைப்பதில் தவறில்லையே. இளங்கோவும் அப்படித்தான் நினைத்தான்.
கருப்பையாவின் இறுதி காரியங்கள் ஆரம்பித்தது. எங்கேயும் கதிரவனை விடவில்லை தங்கம். பங்காளிகள் மகன் உயிரோடிருக்கும் போது செய்யாமல் இருக்ககூடாது.. இது பல தலைமுறைக்கும் பாவம் வந்து சேரும் என பேசி பார்த்தும் தங்கம் இறங்கி வரவில்லை.
‘கதிர் வேண்டாம்னா விடு தங்கம், அந்த பையனை வச்சு செய்யலாம்..’ என மீண்டும் பங்காளிகள் ஆரம்பிக்க, செல்வம் எதுவும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே நேரம் சரியென்றும் சொல்லவில்லை.
அதனால் கந்தசாமியை அழைத்து கேட்கலாம் என அவரை வரவைத்து கேட்க, “என் மச்சானோட ஆத்மா நிம்மதியா சந்தியடையனும். எங்க கோபம் கதிரவனோடத்தான். அந்த சின்ன பையனை வச்சு செய்ங்க..” என முடித்துவிட, அப்போதும் தங்கம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொன்னார்.
மகேசும், செல்வமும் தான் சமாதானம் செய்தனர். அதனால் இளங்கோவை வைத்து கருப்பையாவின் இறுதி காரியங்கள் நடத்தப்பட்டது.
கதிரவனால் இந்த ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை. தன் மேல் எந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தால் இப்படியோரு கோபத்தைக் காட்டுவார்கள்’ என யோசித்தவருக்கு, காலம் கடந்து ஞானோதயம் வந்தது.
அனைவரும் கருப்பையாவின் வீட்டில் இருக்க, லட்சுமியைத் தேட மறந்து போயினர். கந்தசாமி மகளிடம் பொறுமையாகவே அனைத்தையும் எடுத்து சொல்லியிருந்தார். அவள் தப்பாக யோசிக்க மாட்டாள் என்று யோசித்து, ‘அங்க நீ வேண்டாம் கண்ணு.. நான் போய் அடக்கம் முடிஞ்சதும்.. வந்துடுறேன்..’ என சொல்லி சென்றவர், அதுதான் அவர் மகளை கடைசியாக பார்த்தது.
Last edited: