• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 31

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரை - 31

மருத்துவமனையிலிருந்து இளங்கோ வீட்டிற்கு வர மணி நான்காகியிருந்தது. ராணி மட்டும் விழிந்திருந்தார். மகேஸ்வரி அழைத்து சொல்லியிருப்பார் என்று புரிந்து கொண்ட இளங்கோவிற்கு மேலும் குற்றவுணர்வுதான் வந்தது.

அதை வெளிக்காட்டாமல் சோர்வாக வந்து சோபாவில் விழ, “காபி கொடுக்கட்டுமா? இல்ல பால் கொண்டு வரட்டுமா தம்பி..?” என்ற ராணியிடம்,

“நீங்களாச்சும் எங்கிட்ட உண்மையை சொல்லிருக்கலாமே ராணிம்மா..” என்றான் வேதனையாக.

“எனக்கு பயமா இருந்தது தம்பி. அப்புறம் மகேசும் இதைப் பத்தி பேசவே கூடாதுனு சொல்லிட்டா.. உங்க பாட்டி சொல்லாம நானா எப்படி சொல்ல முடியும் தம்பி. அப்புறம் என்னைய அனுப்பிடுவாங்க. பிறகு உன்கூடா யார் இருப்பா? உன்னை யார் பார்த்துப்பா..” என்றார் வருத்தமாக.

“ம்ம் ஆனா ஊருக்கு போனோமே அந்த நேரம் சொல்லிருக்கலாம். ரொம்ப தப்பு பண்ணிட்டேன். இந்த குற்றவுணர்ச்சியை எப்படி போக்குறதுனே தெரியல..” என்றவனுக்கு, ராணியால் பதில் சொல்ல முடியவில்லை.

அன்றைய இளங்கோவின் பேச்சு அவருக்கே பிடிக்கவில்லைதானே. அவர் அமைதியாக இருக்க, “சரி நீங்க போய் படுங்க..” என எழ,

“இரு.. இரு… நீ வந்ததுல இருந்து எதுவும் சாப்பிடலையாம். ப்ரெட் டோஸ்ட் பண்ணி கொடுக்க சொல்லுச்சு மகேஸ்.. கை கழுவிட்டு உட்கார். நான் எடுத்து வைக்கிறேன்..” என்றதும்,

“ப்ரெட் வேண்டாம் ராணிம்மா.. மாவு இருந்தா தோசை ஊத்துங்க.. பொடி இருந்தா போதும். நம்ம சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு..” என்றான் சோர்வாகவே.

ஒருவேளை நன்றாக சாப்பிட்டால் தான் இந்த சோர்வு போகுமோ? அதன்பிறகு நிம்மதியாக, சரியாக யோசிக்க முடியுமோ என நினைத்துதான் சாப்பிட கேட்டான்.

“சரி தம்பி. பொடியும் இருக்கு.. சாம்பாரும் இருக்கு.. சூடு பண்ணி வைக்கிறேன்..” என்ற ராணி மடமடவென தோசைகளை சுட்டு வைக்க, அது அதிகாலை என்பதையும் மறந்து மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்தான் இளங்கோ.

அவன் உண்ணும் வேகம் பார்த்து, “எப்போ கடைசியா சாப்பிட்ட தம்பி..” என்றார் ராணி.

“தெரில ராணிம்மா.. இங்க வந்து தாராவை பார்க்கிற வரை ஒன்னுமே ஓடல.. பசியும் தெரியல..”

“ம்ம்.. பாப்பா எப்படி இருக்கு தம்பி.. மகேஸ்கிட்ட இதை கேட்கவே இல்ல..”

“என்கூட சண்டை போடுற அளவுக்கு தெம்பா இருக்கா.. பயப்படாதீங்க.. பாட்டி எப்படி இருக்காங்க.?”

“அவங்க போன் செஞ்சி நீ எடுக்கலன்னு கொஞ்சம் வருத்தம், அப்புறம் வீட்டுக்கு வராம நேரா ஹாஸ்பிடல் போனது வேற வருத்தம்.. அதனால அமைதியா இருந்தாங்க. உங்க அத்தைதான் மூச்சு விடாம பேசிட்டே இருந்தாங்க..”

“ம்ம் எனக்கு யாருக்கிட்டயும் பேசுற மூட் இல்ல ராணிம்மா. அப்படி பேசினா கோபமா வார்த்தையை விட்டுடுவோமோ என்றுதான் பண்ணல. அது தப்புன்னு எனக்கும் தெரியுது. ஆனா அப்போ தாராவை பார்க்கிறதுதான் முக்கியமா இருந்தது. சரி நீங்களும் தேவையில்லாம யோசிக்காதீங்க. நாளைக்கு மார்னிங்க் பாட்டிக்கிட்ட பேசிக்கிறேன்..”

“ம்ம் அது வந்து தம்பி… நேத்து உங்க அத்தை செஞ்ச பிரச்சினையில பிரீத்தா பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சு, அவங்க அப்படி பேசினதே அதிர்ச்சு வேற, அதோட வசந்தி அத்தையும் ப்ரீத்தாக்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டாங்க. அது உங்க அத்தைக்கு தெரியாது, இந்த பொண்ணு கோபத்துல உங்க அத்தைக்கிட்ட உளறி வச்சிட்டா, உங்க அத்தையை சமாளிக்க முடியாது.. முக்கியமா நீங்க ப்ரீத்தாக்கிட்டயும் பேசுங்க..”

“ஓ.. பாட்டி எல்லாமே சொல்லிட்டாங்களா?” என்று யோசனையாகத் தன் நாடியைத் தேய்த்தவன், “அதுவும் நல்லதுதான்.. நானும் அவக்கிட்ட பேசனும்தான். லேட் பண்ணாம நாளைக்கு பேசிடுறேன்.” என்றுவிட்டு மாடியை நோக்கி நடந்தான்.

இப்போது வரை இருந்த ஒரு சோர்வும், இறுக்கமும் தளர்ந்து போன உணர்வு இளங்கோவிற்கு. ப்ரீத்தாவிடம் இனி பேசினால் அவள் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

தாமரையை இனி விட முடியாது என்று உணர்ந்த பிறகு, அவனுக்குள் இருந்த பெரும் பயம் ப்ரீத்தாவை எப்படி சமாளிப்பது என்றுதான்.

நாயகி எல்லாம் அவனுக்கு ஒரு ஆளே இல்லை. அவன் பயம் சிறு பெண் மனதில் ஆசையை வளர்த்து விட்டோமே, அதிலிருந்து அவளை எப்படி மீட்பது என்பதுதான் அவன் கவலையாக இருந்தது.

அவளிடம் நேரடியாக பேசினால் மட்டுமே தன்னை புரிந்து கொள்வாள் என்றுதான் ஜெர்மனியில் இருக்கும் போது பேசவில்லை.

இப்போது பாட்டியும் அவளிடம் பேசியிருக்க, அவன் பேசப் போவதை பொறுமையாக கேட்டு, சரியான முடிவை எடுப்பாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

அதோடு மகேஸ்வரியிடம் பேசிய பிறகு அவன் புரிந்து கொண்ட ஒரே விசயம், தனக்கு பிடிக்கவில்லையென்றால், ஒத்து வரவில்லையென்றால் தயக்கமே இல்லாமல் அதை சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விட வேண்டும் என்பதுதான்.

அவர்களுக்காக, இவர்களுக்காக என தள்ளிக்கொண்டே சென்றால் இழப்புகளும், கோபங்களும், அதனால் பிரச்சினைகளும் தான் அதிகமாகும் என புரிந்து கொண்டான்.

தன் தந்தையிடம் அவன் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம். அவரைப் போல இருக்கவே கூடாது என்பதுதான்.

அதனால் நாளையே பிரீத்தாவிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு உறங்கச் சென்றுவிட்டான்.

இளங்கோ நகர்ந்ததுமே ராணியிடம் ஒரு பெருமூச்சு உண்டானது. நாயகியைப் பற்றி அவனுக்கு இன்னும் முழுதாக தெரியவில்லை என்ற எண்ணத்தில் உண்டான பெருமூச்சுதான் அது.

நாளை இளங்கோ ப்ரீத்தாவிடம் பேசிய பிறகு நாயகி இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்ற பயம் ராணிக்கு வந்தது.

அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது. பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் நாயகி.

அதை இளங்கோ புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ராணியின் ஆசை.

அடுத்த நாள் விடியல் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வாக அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டியபடி தன் அறைக்குச் சென்றார் ராணி..

காலையில் காபிக்கு வரும்போதே, ராணி எதிர்பார்த்தது போலவே நாயகியின் முகம் சாதாரணமாக இல்லை. எதையோ உடனே செய்து முடிக்க வேண்டிய தீவிரம் தெரிந்தது.

அப்போதே ராணியிடம் ஒரு பயமும், பதட்டமும் வந்துவிட்டது.

என்ன கேட்பாரோ? என்ன பேசுவாரோ? என்று யோசித்த படியே காப்பியை அவரிடம் கொடுக்க, “இளா எப்ப வந்தான் ராணி..?” என்றார் அதிகாரமாக.

“விடிய காலைல நாலு மணி ஆகிடுச்சுமா..” என்றார் ராணி சற்று பதட்டமாக.

“மார்னிங் டிபன் எப்பவும் போல இளங்கோவுக்கு பிடிச்சதே செஞ்சிடு.. ப்ரீத்தா காலேஜுக்கு கிளம்பினா, இன்னைக்கு போக வேண்டாம்னு சொல்லி இருக்க சொல்லு.. நான் கொஞ்சம் வெளியே போறேன், பத்து மணிக்கு வந்துடுவேன்..” என ராணியின் பதிலை கேட்காமலே, வேகமாக வெளியில் சென்றார் நாயகி.

அவர் வாசலை கடக்கும் நேரம், தன் நடை பயணத்தை முடித்துவிட்டு உள்ளே வந்தார் வசந்தி.

“என்ன நாயகி கோவிலுக்கா.?” என்றபடி மருமகளை ஆராய்ச்சியாக பார்த்தார்.

“இல்ல அத்தை.. நேத்துதான் நம்ம ஜோசியருக்கு பேசினேன். அவர் இன்னைக்கு வர சொல்லிருக்கார். ரெண்டு பேரோட ஜாதகத்தையும் பாத்துட்டு ஏதோ கண்டம் இருக்காம். அதுக்கு பரிகாரம் இருக்கு, வாங்க சொல்றேன்னு சொன்னார். நான் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன். ப்ரீத்தா காலேஜ்க்கு போக வேண்டாம். இன்னைக்கே போய் அந்த பரிகாரமெல்லாம் செஞ்சுட்டு வந்துடலாம். இளாவும் இங்க தானே இருக்கான்..” என்றதும், வசந்தியின் பார்வை கூர்மையாகியது.

“என்ன பேசுற நாயகி? என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு? நீ என்ன பேசிட்டு இருக்க? அந்த பொண்ணு உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல இருக்கா. அவள வச்சுக்கிட்டு நீ கல்யாணம் பேசுறேன்னு சொல்லிட்டு இருக்க.. இதெல்லாம் சரியா இல்ல.. நீ முதல்ல உள்ள போ. இதெல்லாம் பொறுமையா பேச வேண்டிய விஷயம். எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் பேசக்கூடாது. முதல்ல நீ இப்படி பேசுறது இளாவுக்கு தெரியுமா தெரியாதா? அவனைக் கேட்காம எப்படி நீ அவன் விஷயத்துல ஒரு முடிவு எடுக்க முடியும்.? முதல்ல அவன் கிட்ட பேசு.” என கண்டிப்பாக கூறி விட, நாயகியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“என்ன அத்த மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க..? ப்ரீத்தாவுக்கும் இளங்கோவுக்கும் தான் கல்யாணம்னு நம்ம ஏற்கனவே பேசி வச்சிருந்தது தானே. இடையில அந்த தாமரை மட்டும் வராமல் போயிருந்தா இன்னைக்கு என் பொண்ணு இந்த வீட்டுல மருமகளா வாழ்ந்துட்டு இருந்திருப்பா. அதை மறந்துடாதீங்க.. என் பொண்ண ஏமாத்தணும்னு கனவுல கூட நினைச்சுடாதீங்க அதுக்கப்புறம் இந்த நாயகி நீங்க வேற மாதிரி தான் பார்க்க வேண்டி வரும்.” என மாமியார் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல், எடுத்தெறிந்து கோபமாக பேச, வசந்திக்கு இனி நாயகியை பிடித்து வைக்க முடியாது என்று புரிந்து போனது.

இனி இதை இளா தான் பேசி சரி செய்ய வேண்டும், அவன் தான் நாயகிக்கு சரியான ஆள் என்று புரிந்துவிட, “உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் நாயகி. தெரிஞ்சதுனால தான் சொல்றேன். என்ன செய்றத இருந்தாலும் இளங்கோகிட்ட பேசிட்டு செய்..” என்றவர் மருமகளை முறைத்துவிட்டு, உள்ளே சென்று விட்டார்.

மாமியாரின் எண்ணம் நாயகிக்கு புரியாமல் இல்லை. தாமரை வீட்டிற்கு வந்த அன்றே அவர் தாமரையை விடக்கூடாது என்பது போல தானே பேசினார்.

அன்று இளங்கோ தாமரையின் மீதிருந்த கோபத்தைப் பார்த்து மட்டுமே அமைதியாக இருந்தார்.

இல்லையென்றால் அப்போதே இளங்கோவிடம் பேசி தாமரையுடன் வாழ வைத்திருப்பார்.

‘உங்க திட்டமெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா? என்னை ஏமாத்த நினைச்சா, நான் சும்மாவே இருக்க மாட்டேன். இந்த சொத்து என்னோட கனவு. இதை சாதாரணமா விட்டுக் கொடுத்திட மாட்டேன். என் பொண்ணு இந்த வீட்டுக்கு ராணியா வரணும், அவளோட இந்த வீட்டில நான் மகாராணியா எல்லாத்தையும் அதிகாரம் பண்ணனும். அதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது அதை எப்படி நான் சாதாரணமா தவற விடுவேன். இதுக்காக நான் எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கேன்.’ என மனதுக்குள் தனக்கு தானே சொல்லிக் கொண்டார் நாயகி.

இருவரின் பேச்சையும் கேட்டு ராணிக்கு வழக்கம்போல பயம் வந்துவிட்டது. வசந்திக்கே இந்த மரியாதை என்றால்? மற்றவர்களைப் பற்றி யோசிக்கவே வேண்டாம். துளி கூட மதிக்கமாட்டார் நாயகி.

இன்றைக்கு ஏதோ பூகம்பமே நடக்கப்போவது போல பதட்டத்துடனே வேலைகளை செய்து கொண்டிருந்தார் ராணி.

அப்போது ராணிம்மா எனக்கு ஒரு சூப் வச்சிக்கொடுங்க. நீங்க எப்பவும் செய்வீங்களே கொய்யா இலை போட்டு.. அதுதான் வேணும்..” என்றபடியே சோபாவில் அமர்ந்த மகளை முடிந்த மட்டும் முறைத்து தள்ளினார் நாயகி.

“ஏன் பாப்பா.. உடம்பு சுடுதா என்ன? முகமும் வீங்கின மாதிரி இருக்கே..” என்ற ராணியிடம்,

“நைட் தூங்க லேட்டாகிடுச்சு ராணிம்மா.. அது கொஞ்சம் தலைவலி..” என முகத்தைச் சுருக்க,

“தூங்காம என்னடி பண்ணிட்டு இருந்த?” என அதட்டலாக வந்தது இளங்கோவின் குரல்.

அதைக் கேட்டு சட்டென திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள், “நீங்க ரெடி பண்ணிட்டு ரூமுக்கு கொண்டு வாங்க ராணிம்மா..” என அவனைத் தாண்டி செல்ல, சட்டென அவள் கைகளை இழுத்துப் பிடித்து தன் முன்னே நிறுத்தி, “நான் கேட்டது உன் காதுல விழலயா.?” என்றான் கண்டிப்போடு.

“விழாம என்ன.? ஆனா எனக்கு உங்கக்கிட்ட பேச விருப்பம் இல்ல..?” என்றாள் ப்ரீத்தா பட்டென்று..

“ஏய்.. என்ன பேசுற வாயை உடைச்சிடுவேன்..” என ப்ரீத்தாவின் கையை முறுக்கி, கோபமாக பேச,

“இப்போ எதுக்கு இந்த சீன். நீங்க யார் எனக்கு? நீங்க எதுக்கு என்னை கண்டிக்கிறீங்க? பேசுறீங்க..?” என அவளும் கோபமாக கேட்க,

“ப்ரீத்தா என் கோபத்தை உனக்கே தெரியும். வார்த்தையை விடாம கிளம்பு..” என்றான் எரிச்சலில்.

“ஆமா கிளம்பத்தானே வேனும்.. இப்போ உங்க வாழ்க்கையிலிருந்து, அப்புறம் இந்த வீட்டுல இருந்து..” என ஆத்திரமாக பேச, நாயகிக்கு மகளின் பேச்சு கோபத்தைக் கொடுக்க,

“ஏய் வாய மூடிட்டு போ..” என அதட்டி, “அவளுக்கு தலைவலி.. அந்த டென்சன்ல பேசுறா.?” என இளங்கோவிடம் சமாளிக்க,

“ஆமா தலைவலிதான். எல்லாம் உங்களால்தான். நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன். கல்யாணம் அது இதுனு மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டு, இப்போ நான் எப்படி போனா உங்களுக்கு என்ன..?” ஆங்காரமாக கத்த, அதிர்ந்து போய் பார்த்தனர் அனைவரும்.

நாயகி மட்டும் மகளை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தி, “நீ பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்காது ப்ரீக்குட்டி. உங்க இளா மாமா சொன்ன மாதிரியே அந்த பொண்ணை அனுப்பிடுவான். அவளை அனுப்பிட்டு உன்னைத்தான் கல்யாணம் செய்துப்பான்..” என தன் திட்டத்தை, மகளை சமாதானம் செய்யும் நோக்கில் உறுதி படுத்தி விட்டார்.

தாயின் பேச்சைக் கேட்டதும், ப்ரீத்தாவின் விழிகள் ஒளிர்ந்தன. “நிஜமாவா? அப்போ அந்த தாமரையை துரத்தி விட்டுட்டு மாமா என்னை கல்யாணம் செய்துப்பாரா?” என ஆசையும் அழுகையுமாக கேட்க, அங்கிருந்த மற்ற மூவரும் அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.








 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem
தாமரை - 31

மருத்துவமனையிலிருந்து இளங்கோ வீட்டிற்கு வர மணி நான்காகியிருந்தது. ராணி மட்டும் விழிந்திருந்தார். மகேஸ்வரி அழைத்து சொல்லியிருப்பார் என்று புரிந்து கொண்ட இளங்கோவிற்கு மேலும் குற்றவுணர்வுதான் வந்தது.

அதை வெளிக்காட்டாமல் சோர்வாக வந்து சோபாவில் விழ, “காபி கொடுக்கட்டுமா? இல்ல பால் கொண்டு வரட்டுமா தம்பி..?” என்ற ராணியிடம்,

“நீங்களாச்சும் எங்கிட்ட உண்மையை சொல்லிருக்கலாமே ராணிம்மா..” என்றான் வேதனையாக.

“எனக்கு பயமா இருந்தது தம்பி. அப்புறம் மகேசும் இதைப் பத்தி பேசவே கூடாதுனு சொல்லிட்டா.. உங்க பாட்டி சொல்லாம நானா எப்படி சொல்ல முடியும் தம்பி. அப்புறம் என்னைய அனுப்பிடுவாங்க. பிறகு உன்கூடா யார் இருப்பா? உன்னை யார் பார்த்துப்பா..” என்றார் வருத்தமாக.

“ம்ம் ஆனா ஊருக்கு போனோமே அந்த நேரம் சொல்லிருக்கலாம். ரொம்ப தப்பு பண்ணிட்டேன். இந்த குற்றவுணர்ச்சியை எப்படி போக்குறதுனே தெரியல..” என்றவனுக்கு, ராணியால் பதில் சொல்ல முடியவில்லை.

அன்றைய இளங்கோவின் பேச்சு அவருக்கே பிடிக்கவில்லைதானே. அவர் அமைதியாக இருக்க, “சரி நீங்க போய் படுங்க..” என எழ,

“இரு.. இரு… நீ வந்ததுல இருந்து எதுவும் சாப்பிடலையாம். ப்ரெட் டோஸ்ட் பண்ணி கொடுக்க சொல்லுச்சு மகேஸ்.. கை கழுவிட்டு உட்கார். நான் எடுத்து வைக்கிறேன்..” என்றதும்,

“ப்ரெட் வேண்டாம் ராணிம்மா.. மாவு இருந்தா தோசை ஊத்துங்க.. பொடி இருந்தா போதும். நம்ம சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு..” என்றான் சோர்வாகவே.

ஒருவேளை நன்றாக சாப்பிட்டால் தான் இந்த சோர்வு போகுமோ? அதன்பிறகு நிம்மதியாக, சரியாக யோசிக்க முடியுமோ என நினைத்துதான் சாப்பிட கேட்டான்.

“சரி தம்பி. பொடியும் இருக்கு.. சாம்பாரும் இருக்கு.. சூடு பண்ணி வைக்கிறேன்..” என்ற ராணி மடமடவென தோசைகளை சுட்டு வைக்க, அது அதிகாலை என்பதையும் மறந்து மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்தான் இளங்கோ.

அவன் உண்ணும் வேகம் பார்த்து, “எப்போ கடைசியா சாப்பிட்ட தம்பி..” என்றார் ராணி.

“தெரில ராணிம்மா.. இங்க வந்து தாராவை பார்க்கிற வரை ஒன்னுமே ஓடல.. பசியும் தெரியல..”

“ம்ம்.. பாப்பா எப்படி இருக்கு தம்பி.. மகேஸ்கிட்ட இதை கேட்கவே இல்ல..”

“என்கூட சண்டை போடுற அளவுக்கு தெம்பா இருக்கா.. பயப்படாதீங்க.. பாட்டி எப்படி இருக்காங்க.?”

“அவங்க போன் செஞ்சி நீ எடுக்கலன்னு கொஞ்சம் வருத்தம், அப்புறம் வீட்டுக்கு வராம நேரா ஹாஸ்பிடல் போனது வேற வருத்தம்.. அதனால அமைதியா இருந்தாங்க. உங்க அத்தைதான் மூச்சு விடாம பேசிட்டே இருந்தாங்க..”

“ம்ம் எனக்கு யாருக்கிட்டயும் பேசுற மூட் இல்ல ராணிம்மா. அப்படி பேசினா கோபமா வார்த்தையை விட்டுடுவோமோ என்றுதான் பண்ணல. அது தப்புன்னு எனக்கும் தெரியுது. ஆனா அப்போ தாராவை பார்க்கிறதுதான் முக்கியமா இருந்தது. சரி நீங்களும் தேவையில்லாம யோசிக்காதீங்க. நாளைக்கு மார்னிங்க் பாட்டிக்கிட்ட பேசிக்கிறேன்..”

“ம்ம் அது வந்து தம்பி… நேத்து உங்க அத்தை செஞ்ச பிரச்சினையில பிரீத்தா பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சு, அவங்க அப்படி பேசினதே அதிர்ச்சு வேற, அதோட வசந்தி அத்தையும் ப்ரீத்தாக்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டாங்க. அது உங்க அத்தைக்கு தெரியாது, இந்த பொண்ணு கோபத்துல உங்க அத்தைக்கிட்ட உளறி வச்சிட்டா, உங்க அத்தையை சமாளிக்க முடியாது.. முக்கியமா நீங்க ப்ரீத்தாக்கிட்டயும் பேசுங்க..”

“ஓ.. பாட்டி எல்லாமே சொல்லிட்டாங்களா?” என்று யோசனையாகத் தன் நாடியைத் தேய்த்தவன், “அதுவும் நல்லதுதான்.. நானும் அவக்கிட்ட பேசனும்தான். லேட் பண்ணாம நாளைக்கு பேசிடுறேன்.” என்றுவிட்டு மாடியை நோக்கி நடந்தான்.

இப்போது வரை இருந்த ஒரு சோர்வும், இறுக்கமும் தளர்ந்து போன உணர்வு இளங்கோவிற்கு. ப்ரீத்தாவிடம் இனி பேசினால் அவள் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

தாமரையை இனி விட முடியாது என்று உணர்ந்த பிறகு, அவனுக்குள் இருந்த பெரும் பயம் ப்ரீத்தாவை எப்படி சமாளிப்பது என்றுதான்.

நாயகி எல்லாம் அவனுக்கு ஒரு ஆளே இல்லை. அவன் பயம் சிறு பெண் மனதில் ஆசையை வளர்த்து விட்டோமே, அதிலிருந்து அவளை எப்படி மீட்பது என்பதுதான் அவன் கவலையாக இருந்தது.

அவளிடம் நேரடியாக பேசினால் மட்டுமே தன்னை புரிந்து கொள்வாள் என்றுதான் ஜெர்மனியில் இருக்கும் போது பேசவில்லை.

இப்போது பாட்டியும் அவளிடம் பேசியிருக்க, அவன் பேசப் போவதை பொறுமையாக கேட்டு, சரியான முடிவை எடுப்பாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

அதோடு மகேஸ்வரியிடம் பேசிய பிறகு அவன் புரிந்து கொண்ட ஒரே விசயம், தனக்கு பிடிக்கவில்லையென்றால், ஒத்து வரவில்லையென்றால் தயக்கமே இல்லாமல் அதை சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விட வேண்டும் என்பதுதான்.

அவர்களுக்காக, இவர்களுக்காக என தள்ளிக்கொண்டே சென்றால் இழப்புகளும், கோபங்களும், அதனால் பிரச்சினைகளும் தான் அதிகமாகும் என புரிந்து கொண்டான்.

தன் தந்தையிடம் அவன் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம். அவரைப் போல இருக்கவே கூடாது என்பதுதான்.

அதனால் நாளையே பிரீத்தாவிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு உறங்கச் சென்றுவிட்டான்.

இளங்கோ நகர்ந்ததுமே ராணியிடம் ஒரு பெருமூச்சு உண்டானது. நாயகியைப் பற்றி அவனுக்கு இன்னும் முழுதாக தெரியவில்லை என்ற எண்ணத்தில் உண்டான பெருமூச்சுதான் அது.

நாளை இளங்கோ ப்ரீத்தாவிடம் பேசிய பிறகு நாயகி இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்ற பயம் ராணிக்கு வந்தது.

அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது. பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் நாயகி.

அதை இளங்கோ புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ராணியின் ஆசை.

அடுத்த நாள் விடியல் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வாக அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டியபடி தன் அறைக்குச் சென்றார் ராணி..

காலையில் காபிக்கு வரும்போதே, ராணி எதிர்பார்த்தது போலவே நாயகியின் முகம் சாதாரணமாக இல்லை. எதையோ உடனே செய்து முடிக்க வேண்டிய தீவிரம் தெரிந்தது.

அப்போதே ராணியிடம் ஒரு பயமும், பதட்டமும் வந்துவிட்டது.

என்ன கேட்பாரோ? என்ன பேசுவாரோ? என்று யோசித்த படியே காப்பியை அவரிடம் கொடுக்க, “இளா எப்ப வந்தான் ராணி..?” என்றார் அதிகாரமாக.

“விடிய காலைல நாலு மணி ஆகிடுச்சுமா..” என்றார் ராணி சற்று பதட்டமாக.

“மார்னிங் டிபன் எப்பவும் போல இளங்கோவுக்கு பிடிச்சதே செஞ்சிடு.. ப்ரீத்தா காலேஜுக்கு கிளம்பினா, இன்னைக்கு போக வேண்டாம்னு சொல்லி இருக்க சொல்லு.. நான் கொஞ்சம் வெளியே போறேன், பத்து மணிக்கு வந்துடுவேன்..” என ராணியின் பதிலை கேட்காமலே, வேகமாக வெளியில் சென்றார் நாயகி.

அவர் வாசலை கடக்கும் நேரம், தன் நடை பயணத்தை முடித்துவிட்டு உள்ளே வந்தார் வசந்தி.

“என்ன நாயகி கோவிலுக்கா.?” என்றபடி மருமகளை ஆராய்ச்சியாக பார்த்தார்.

“இல்ல அத்தை.. நேத்துதான் நம்ம ஜோசியருக்கு பேசினேன். அவர் இன்னைக்கு வர சொல்லிருக்கார். ரெண்டு பேரோட ஜாதகத்தையும் பாத்துட்டு ஏதோ கண்டம் இருக்காம். அதுக்கு பரிகாரம் இருக்கு, வாங்க சொல்றேன்னு சொன்னார். நான் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன். ப்ரீத்தா காலேஜ்க்கு போக வேண்டாம். இன்னைக்கே போய் அந்த பரிகாரமெல்லாம் செஞ்சுட்டு வந்துடலாம். இளாவும் இங்க தானே இருக்கான்..” என்றதும், வசந்தியின் பார்வை கூர்மையாகியது.

“என்ன பேசுற நாயகி? என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு? நீ என்ன பேசிட்டு இருக்க? அந்த பொண்ணு உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல இருக்கா. அவள வச்சுக்கிட்டு நீ கல்யாணம் பேசுறேன்னு சொல்லிட்டு இருக்க.. இதெல்லாம் சரியா இல்ல.. நீ முதல்ல உள்ள போ. இதெல்லாம் பொறுமையா பேச வேண்டிய விஷயம். எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் பேசக்கூடாது. முதல்ல நீ இப்படி பேசுறது இளாவுக்கு தெரியுமா தெரியாதா? அவனைக் கேட்காம எப்படி நீ அவன் விஷயத்துல ஒரு முடிவு எடுக்க முடியும்.? முதல்ல அவன் கிட்ட பேசு.” என கண்டிப்பாக கூறி விட, நாயகியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“என்ன அத்த மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க..? ப்ரீத்தாவுக்கும் இளங்கோவுக்கும் தான் கல்யாணம்னு நம்ம ஏற்கனவே பேசி வச்சிருந்தது தானே. இடையில அந்த தாமரை மட்டும் வராமல் போயிருந்தா இன்னைக்கு என் பொண்ணு இந்த வீட்டுல மருமகளா வாழ்ந்துட்டு இருந்திருப்பா. அதை மறந்துடாதீங்க.. என் பொண்ண ஏமாத்தணும்னு கனவுல கூட நினைச்சுடாதீங்க அதுக்கப்புறம் இந்த நாயகி நீங்க வேற மாதிரி தான் பார்க்க வேண்டி வரும்.” என மாமியார் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல், எடுத்தெறிந்து கோபமாக பேச, வசந்திக்கு இனி நாயகியை பிடித்து வைக்க முடியாது என்று புரிந்து போனது.

இனி இதை இளா தான் பேசி சரி செய்ய வேண்டும், அவன் தான் நாயகிக்கு சரியான ஆள் என்று புரிந்துவிட, “உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் நாயகி. தெரிஞ்சதுனால தான் சொல்றேன். என்ன செய்றத இருந்தாலும் இளங்கோகிட்ட பேசிட்டு செய்..” என்றவர் மருமகளை முறைத்துவிட்டு, உள்ளே சென்று விட்டார்.

மாமியாரின் எண்ணம் நாயகிக்கு புரியாமல் இல்லை. தாமரை வீட்டிற்கு வந்த அன்றே அவர் தாமரையை விடக்கூடாது என்பது போல தானே பேசினார்.

அன்று இளங்கோ தாமரையின் மீதிருந்த கோபத்தைப் பார்த்து மட்டுமே அமைதியாக இருந்தார்.

இல்லையென்றால் அப்போதே இளங்கோவிடம் பேசி தாமரையுடன் வாழ வைத்திருப்பார்.

‘உங்க திட்டமெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா? என்னை ஏமாத்த நினைச்சா, நான் சும்மாவே இருக்க மாட்டேன். இந்த சொத்து என்னோட கனவு. இதை சாதாரணமா விட்டுக் கொடுத்திட மாட்டேன். என் பொண்ணு இந்த வீட்டுக்கு ராணியா வரணும், அவளோட இந்த வீட்டில நான் மகாராணியா எல்லாத்தையும் அதிகாரம் பண்ணனும். அதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது அதை எப்படி நான் சாதாரணமா தவற விடுவேன். இதுக்காக நான் எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கேன்.’ என மனதுக்குள் தனக்கு தானே சொல்லிக் கொண்டார் நாயகி.

இருவரின் பேச்சையும் கேட்டு ராணிக்கு வழக்கம்போல பயம் வந்துவிட்டது. வசந்திக்கே இந்த மரியாதை என்றால்? மற்றவர்களைப் பற்றி யோசிக்கவே வேண்டாம். துளி கூட மதிக்கமாட்டார் நாயகி.

இன்றைக்கு ஏதோ பூகம்பமே நடக்கப்போவது போல பதட்டத்துடனே வேலைகளை செய்து கொண்டிருந்தார் ராணி.

அப்போது ராணிம்மா எனக்கு ஒரு சூப் வச்சிக்கொடுங்க. நீங்க எப்பவும் செய்வீங்களே கொய்யா இலை போட்டு.. அதுதான் வேணும்..” என்றபடியே சோபாவில் அமர்ந்த மகளை முடிந்த மட்டும் முறைத்து தள்ளினார் நாயகி.

“ஏன் பாப்பா.. உடம்பு சுடுதா என்ன? முகமும் வீங்கின மாதிரி இருக்கே..” என்ற ராணியிடம்,

“நைட் தூங்க லேட்டாகிடுச்சு ராணிம்மா.. அது கொஞ்சம் தலைவலி..” என முகத்தைச் சுருக்க,

“தூங்காம என்னடி பண்ணிட்டு இருந்த?” என அதட்டலாக வந்தது இளங்கோவின் குரல்.

அதைக் கேட்டு சட்டென திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள், “நீங்க ரெடி பண்ணிட்டு ரூமுக்கு கொண்டு வாங்க ராணிம்மா..” என அவனைத் தாண்டி செல்ல, சட்டென அவள் கைகளை இழுத்துப் பிடித்து தன் முன்னே நிறுத்தி, “நான் கேட்டது உன் காதுல விழலயா.?” என்றான் கண்டிப்போடு.

“விழாம என்ன.? ஆனா எனக்கு உங்கக்கிட்ட பேச விருப்பம் இல்ல..?” என்றாள் ப்ரீத்தா பட்டென்று..

“ஏய்.. என்ன பேசுற வாயை உடைச்சிடுவேன்..” என ப்ரீத்தாவின் கையை முறுக்கி, கோபமாக பேச,

“இப்போ எதுக்கு இந்த சீன். நீங்க யார் எனக்கு? நீங்க எதுக்கு என்னை கண்டிக்கிறீங்க? பேசுறீங்க..?” என அவளும் கோபமாக கேட்க,

“ப்ரீத்தா என் கோபத்தை உனக்கே தெரியும். வார்த்தையை விடாம கிளம்பு..” என்றான் எரிச்சலில்.

“ஆமா கிளம்பத்தானே வேனும்.. இப்போ உங்க வாழ்க்கையிலிருந்து, அப்புறம் இந்த வீட்டுல இருந்து..” என ஆத்திரமாக பேச, நாயகிக்கு மகளின் பேச்சு கோபத்தைக் கொடுக்க,

“ஏய் வாய மூடிட்டு போ..” என அதட்டி, “அவளுக்கு தலைவலி.. அந்த டென்சன்ல பேசுறா.?” என இளங்கோவிடம் சமாளிக்க,

“ஆமா தலைவலிதான். எல்லாம் உங்களால்தான். நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன். கல்யாணம் அது இதுனு மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டு, இப்போ நான் எப்படி போனா உங்களுக்கு என்ன..?” ஆங்காரமாக கத்த, அதிர்ந்து போய் பார்த்தனர் அனைவரும்.

நாயகி மட்டும் மகளை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தி, “நீ பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்காது ப்ரீக்குட்டி. உங்க இளா மாமா சொன்ன மாதிரியே அந்த பொண்ணை அனுப்பிடுவான். அவளை அனுப்பிட்டு உன்னைத்தான் கல்யாணம் செய்துப்பான்..” என தன் திட்டத்தை, மகளை சமாதானம் செய்யும் நோக்கில் உறுதி படுத்தி விட்டார்.

தாயின் பேச்சைக் கேட்டதும், ப்ரீத்தாவின் விழிகள் ஒளிர்ந்தன. “நிஜமாவா? அப்போ அந்த தாமரையை துரத்தி விட்டுட்டு மாமா என்னை கல்யாணம் செய்துப்பாரா?” என ஆசையும் அழுகையுமாக கேட்க, அங்கிருந்த மற்ற மூவரும் அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.









இது ஒரு பைத்தியம் போல பெட்டர் மாக்ஸ் லைட்டே வேணும் ன்னு... அம்மா நாயகி நீ இதுக்கு மேல வேற எப்படி மாற போற இதுவே தாங்கல