தாமரை - 42
இளங்கோ கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர, நாயகி மட்டுமே இலகுவாக மூச்சு விட்டார்.
செல்வம் மனைவியைப் பார்க்க, “இப்போ கட்டாயப்படுத்த வேண்டாம் மாமா..” என்று மகேஸ்வரி கூறியதும், அவருக்கும் புரியத்தான் செய்தது.
அதனால் “சரி அப்போ நீயும் கிளம்பு… கொஞ்ச நாள் அங்க இருந்து பார்த்துட்டு வா.. முடிஞ்சா கையோட கூப்பிட்டு வந்துடு.. பாப்பாவை நான் பார்த்துக்கிறேன்.” என்று மனைவியைப் புரிந்து, அவரைத் தேற்றி அனுப்பினார்.
இதோ அவர்கள் வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. நாயகியின் செயல்கள் மகேஸ்வரிக்கு பிடிக்கவில்லை என்றாலும், வசந்தி இருக்கும் போது அவர் பெரிதாக பயப்படவில்லை.
இளங்கோ பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். இந்த வருட படிப்பு முடிந்ததும் ஊருக்கே வந்து விடுகிறேன் என்று சொல்லி இளங்கோவே மகேஸ்வரியை ஊருக்கு அனுப்பி வைத்தான்.
அந்த வார்த்தைகள் மகேஸ்வரிக்கு புது தெம்பை கொடுத்தது. ஆனால் நாயகியின் போக்கை யோசித்து, தன் ஒன்றுவிட்ட சகோதரியான ராணியை இளங்கோவை பார்க்க அனுப்பினார்.
தன் சொந்தம் என்று தெரிந்தால் ராணியை அனுமதிக்க மாட்டார்கள் என்றுதான் வேலைக்கு என அனுப்பி வைத்தார். அதை முன்கூட்டியே வசந்திக்கும் தெரியப்படுத்தினார்.
அந்த வருட படிப்பின் முடிவில் ஹாஸ்டலில் சேர்ந்து கொள்கிறேன் என்றான் இளங்கோ. யோசித்தாலும் சரி என்றார் மகேஸ்வரி.
அடுத்தடுத்து அவன் போக்குவரத்தே குறைந்தது. பேச்சுவார்த்தையும் குறைந்தது. வசந்தியின் மூலமாக அங்கு நடப்பதை தெரிந்து கொண்ட மகேஸ்வரி கணவரைப் பார்க்க, “இழுத்து பிடிக்கனும்னு நினைக்காத. அது எங்க போய் முடியும்னு உனக்கேத் தெரியும். அவன் கதிரவனோட மகன். அதை எப்பவும் மறக்காத..” என முடிவாக சொல்லிவிட்டார்.
ஆனாலும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அழைத்து வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை மகேஸ்வரி.
நாயகி தன் திட்டத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அவர் நினைத்ததைப் போலவே இளங்கோவின் மனதில் விசத்தை தெளித்தார்.
மகேஸ்வரியைப் பற்றியும், செல்வத்தைப்பற்றியும் தவறாகவே சித்தரித்து கூற ஆரம்பித்தார்.. இளங்கோவும் அதை உண்மை என்றே நம்பினான்.
அதன்பிறகு மகேஸ்வரியை விட்டு மொத்தமாகவே ஒதுங்கினான். அவரிடம் நல்ல முறையில் பேசினாலும் செல்வத்தின் மேல் இருந்த கோபம் அவரிடம் நெருங்க விடவில்லை.
கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் போதே ப்ரீத்தாவைப்பற்றி கூறி, ‘உன் அம்மாவின் கடைசி ஆசை’ என்று முடித்துவிட்டார் நாயகி.
அந்த ஒரு வார்த்தையில் இளங்கோ மிகவும் கவனமாக இருந்தான். மனதை அலைபாய விடவில்லை. கல்லூரி முடிந்ததுமே திருமணத்தை வைக்கத்தான் நாயகிக்கு ஆசை. ஆனால் அப்போது ப்ரீத்தாவிற்கு வயது பதினாறுதான். அதனால் அப்போது அந்த பேச்சை விட்டுவிட்டார்.
வசந்திக்கு முதலில் நாயகியின் திட்டங்கள் புரியவில்லை. நாட்கள் செல்ல, இளங்கோவின் நடவடிக்கையில் புரிந்து கொண்டார். அவரே மகேஸ்வரியைப் பற்றி நல்ல முறையில் சொன்னாலும், அதை ஏற்கும் பக்குவத்தை தாண்டிவிட்டான் என புரிந்து கொண்டார். அதோடு பேசி மேலும் அவர்கள் மேல் கோபத்தை வளர்த்துவிட அவர் தயாராக இல்லை. கல்லூரி படிப்பு முடிந்ததும், வசந்தியின் பிடிவாதத்தால் தான் இளங்கோவை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பியது.
சீனிக்கும் அதுதான் சரியெனப்பட்டது. தாயின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து அனுப்பி வைத்தார்.
மூன்றாண்டுகள் கழித்து மிகவும் வித்தியாசமாக வந்தான் இளங்கோ. முன்பே அழகன்தான். இப்போது மேலும் அழகாக, கம்பீரமாக, திமிறாக வந்திருந்தான்.
வந்து ஒரு வாரத்திதிலேயே தொழிலை கையில் வாங்கிக்கொண்டான். அதில் வெற்றியும் பெற்றான். நாயகி திருமணம் பற்றி பேசும் போது யோசித்தான். அப்போது ப்ரீத்தாவிற்கு படிப்பு முடியவில்லை. ஏன் அவசரம் என்று அவனுக்கு அப்போது புரியவில்லை. பாட்டியிடம் பேசினான். அவர்தான் ஊருக்கு போக வேண்டும் என்றார்.
நாயகியின் திட்டம் பாழானது அங்குதான். தன் பெற்றோரை இழுத்து பேசினால் அவனின் கோபமும், வெறியும் வெளிப்படும். அந்த மகேஸ்வரி முகத்தில் கூட விழிக்கமாட்டான் என அவர் தீட்டிய திட்டங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போனது..
அவர் ஒவ்வொரு செங்கலாக கட்டிய கனவுக்கோட்டையை தாமரை நொடியில் தகர்த்தெரிந்தது அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
இத்தனை வருடம் அவர் பட்ட கஷ்டங்கள், அவர் தீடிய திட்டங்கள் அனைத்தும் தாமரையின் செயலில் தவிடு பொடியானதில் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இனி அவர் நல்லவராக வேசம் போட வேண்டிய அவசியம் இல்லை. சீக்கிரம் இதற்கொரு முடிவை கட்டியே ஆகவேண்டும் என்று கடந்த காலத்தையெல்லாம் யோசித்து முடித்தவரின் மனதில் தாமரையும், அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் மின்னலாக வந்து போயினர்.
“அம்மா.. மாமா என்ன சொல்றார். நான் இங்க இருந்து காலேஜ் போகனுமா?” என்றபடியே ப்ரீத்தா வர,
“ஆமாண்டி கொஞ்ச நாள் நாம இங்க இருக்கலாம். என்னால அங்க இருக்க முடியாது. அங்க இருந்தா அவங்களை எல்லாம் நான் ஏதாவது கோபமா பேசிடுவேனோன்னு பயமா இருக்கு. அதனால என் மனசு சமாதானம் ஆகுற வரைக்கும் இங்கதான் இருக்கனும்..” என மகள் நம்பும்படியாக பேசினார் நாயகி.
“ம்ம்… சரிம்மா.. நீ அதெல்லாம் யோசிக்காத. மாமாவுக்கு தாமரைதான் சரியான ஆள். நீ இந்தளவுக்கு மனசு மாறினதே போதும்..” என்று ப்ரீத்தா செல்ல, நாயகியின் முகம் கொடூரமாக மாறியது.
இங்கு காரில் ஏறியதில் இருந்து உர்ரென்று இருந்தவளை பார்த்து சிரித்தபடியே வந்தான் இளங்கோ.
“இப்போ எதுக்கு இந்த இளிப்பு சகிக்கல..” என்றவள் முகத்தை திருப்பிக்கொள்ள, அதற்கும் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை.
தாமரையோடு வருவான் என்று எதிர்பார்க்காத வசந்தி, அவர்களைப் பார்த்து புன்னகைத்து “அப்படியே நில்லுங்க்..” என்றவர், “ராணி சீக்கிரம் ஆரத்தி எடுத்துட்டு வா..” என கத்தினார்.
“எதுக்கு பாட்டி இதெல்லாம்..?” என இளங்கோ சிரிக்க,
“ம்ச்.. அன்னைக்கே இப்படித்தான் உள்ள கூப்பிட்டிருக்கனும், சூழ்நிலை சரியில்ல. அதனால் என்ன, இன்னைக்கு மூனு பேரா உள்ள வாங்க..” என்றவரின் பார்வை தாமரையின் வயிற்றில் விழுந்தது.
“தாமரை டாக்டர் என்ன சொன்னாங்க.?” என்ற கேள்வியோடு பார்க்க,
அதற்குள் ராணி ஆரத்தியோடு வர, முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார்.
வீடு அமைதியாக இருப்பதை உணர்ந்து நாயகி இல்லையென்று புரிந்து கொண்டாள் தாமரை. அவளுக்கு இங்கு வர விருப்பம் இல்லைதான். இந்த சில நாட்களாக மகேஸ்வரியின் போதனையில் தன் கோபத்தை கொஞ்சம் குறைத்திருந்தாள். அதனால் அமைதியாகவே அவனோடு வந்தாள்.
இன்னுமே வசந்தியின் முகத்தில் திகைப்பு மாறவில்லை. தன் கேள்விக்கு தாமரை பதில் சொல்லாததிலேயே அவருக்கு உண்மை புரிந்து விட்டது. பேரனுக்கு இது தெரியுமோ, தன்னிடம் மறைத்து விட்டானோ என பார்க்க, தாமரையின் முகத்தில் இருந்த பதட்டத்தில் அவள் யாரிடமும் சொல்லவில்லை என புரிந்தது.
“பாப்பா.. நீ வரேன்னு சொல்லவே இல்ல. சொல்லிருந்தா உனக்குப் பிடிச்சதா செஞ்சிருப்பேன்..” என்ற ராணியிடம்,
“ராணிம்மா.. ஏற்கனவே இவ்ளோ செஞ்சிருக்கீங்க.. இனி எனக்கு வேற தனியா செய்யனுமா? ஏன் உங்க மகாராஜா இத்தன் வெரைட்டி இருந்தா தான் சாப்பிடுவாரா?” என கிண்டலடித்தபடியே மெதுவாக டைனிங்க் ஹால் நோக்கி நடந்தாள்.
அவள் கிண்டலில் மூவரும் சிரித்தபடியே அவளுடன் நடந்தனர்.
தட்டை வைத்து பரிமாறிய ராணி “பாப்பா காரம் கம்மியா சேர்த்துக்கனும்..” என்றபடியே சாதத்தை வைத்தார்.
“ராணிம்மா.. எனக்கு காட்டுப்பசி.. நீங்க அதை சாப்பிடாத, இதை சாப்பிடாதன்னு கன்ட்ரோல் பண்னாதீங்க. எல்லாம் சாப்பிட்டு ஜெலுசில் குடிச்சிப்பேன். ஷ்யாம் க்கு மட்டும் சொல்லாதீங்க.” என சாப்பிட ஆரம்பித்தாள்.
இவர்கள் இருவரின் பேச்சையும் ரசித்தபடியே இளங்கோவும் சாப்பிட்டு முடித்தான். உணவுக்கு இடையில் நாயகி ஊருக்குப் போனதை பற்றியும் சொல்லி முடித்தார் வசந்தி.
“இளா.. உடனே போக வேண்டாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம். தாமரை இடுப்பை சாய்க்கட்டும்..” என்ற வசந்தியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவளைத் தன் அறைக்கு அழைத்து சென்றான்.
முதல்நாள் இந்த அறைக்கு வந்தது அழையா விருந்தாளியாக மன கண்ணில் வந்து விழ, தாமரையின் உடல் இறுகியது.
அதை உணர்ந்த இளங்கோ “ம்ச்.. ரிலாக்ஸ் பண்ணு.. எதையும் யோசிக்காத..” என சமாதானம் செய்தபடி படியில் ஏறினான்.
கீழிருந்து பார்த்த இருவருக்கும் கண்ணே கலங்கிவிட்டது. இவர்கள் வாழ்க்கை சீக்கிரம் சரியாகிவிட வேண்டும் என அவசர வேண்டுகோள் வேறு வைத்தனர்.
அறைக்குள் வந்தவன் “இந்த ட்ரெஸ் ஓக்கே வா.. இல்ல சேஞ்ச் பன்றியா..?” என்றான் தன் டகின் செய்த சர்டை வெளியில் எடுத்து விட்டபடி.
அதிலே புரிந்தது அவன் உடை மாற்ற போகியான் என, அவளுக்கும் மாற்றினால் நன்றாக இருக்கும் போலத்தான் இருந்தது. ஆனால் மாற்ற உடை வேண்டுமே என யோசித்தபடியே இருந்தாள்.
அனைத்தும் அவனைப் பார்த்தப்டியேதான். இப்போது சர்டை கழட்டிவிட்டு பேண்டில் கைவைக்க, அப்போதும் அவள் பார்வை மாறவில்லை.
முதலில் இளங்கோ கவனிக்கவில்லை. தன் கேள்விக்கு இன்னும் ஏன்பதில் சொல்லாமல் இருக்கிறாள் என்று பார்க்க நிமிர, அப்போதுதான் மனைவியின் பார்வையை உணர்ந்தான்.
அந்த பார்வையில் அவனுக்கே வெட்கம் வந்துவிடும் போல் இருந்தது.
“ஹேய் என்னடி நீ..” என இளங்கோ தன் டீ சர்டை தூக்கி அவள் மேல் எரிய, அப்போதுதான் சுயம் உணர்ந்தவள், மொத்தமாக சிவந்து போனாள் தன் பார்வையை உணர்ந்து.
“ம்ச்.. நானா இப்படி..” என முகத்தை வேறு அழுந்த துடைத்துக் கொண்டு, வேறு பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
ஆனால் இளங்கோவிற்கு மனைவியின் பார்வையில் உல்லாசம் பிறக்க, அவளை தின்னும் பார்வை பார்த்தபடி அவளிடம் நடந்தான்.
தாமரைக்கு கணவனின் காலடி தன்னை நெருங்க நெருங்க, உள்ளங்கைகள் வேர்க்க ஆரம்பித்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
என்னதான் தன் உணர்வுகளை அவனுக்கு மறைத்து அனைக்கட்டி வைத்தாலும், இந்த நொடி அவள் கட்டுப்பாட்டில் அவளே இல்லை என்பது ஏறி இளங்கிய மூச்சிலே தெரிந்தது.
இளங்கோ அவளை நெருங்கிவிட்டான். தன் முன்னே நிற்கிறான். தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான்.
இறுக மூடிய கண்களில் கூட அவளால் அதை உணர முடிந்தது. அவனின் அன்று உணர்ந்த அந்த ஆண்மையின் வாசம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்தது.
தாமரைக்கு என்னமோ நெஞ்சே அடைத்த உணர்வு. அவளின் இதயம் தாளம் தப்பி அதிவேகமாக துடித்தது.
கைகள் அந்த பெட்டின் சீட்டை இறுக்கமாக பிடித்து முறுக்கியது.
பெண்ணவளின் அவஸ்தைகளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அதற்கு மேல் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை.
அவளை அப்படியே தன் நெஞ்சோடு அணைக்க, அதில் அவள் நிமிர்ந்து பார்க்க நான்கு விழிகளும் ஒன்றோடு ஒன்று கவ்வி கவி படிக்க, உணர்வுகளின் பெருக்கில் இருந்த மனைவியின் துடித்த இதழ்களை மிகவும் நிதானமாக தனக்குள் இழுத்துக்கொண்டான் கணவன்.
இளங்கோ கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர, நாயகி மட்டுமே இலகுவாக மூச்சு விட்டார்.
செல்வம் மனைவியைப் பார்க்க, “இப்போ கட்டாயப்படுத்த வேண்டாம் மாமா..” என்று மகேஸ்வரி கூறியதும், அவருக்கும் புரியத்தான் செய்தது.
அதனால் “சரி அப்போ நீயும் கிளம்பு… கொஞ்ச நாள் அங்க இருந்து பார்த்துட்டு வா.. முடிஞ்சா கையோட கூப்பிட்டு வந்துடு.. பாப்பாவை நான் பார்த்துக்கிறேன்.” என்று மனைவியைப் புரிந்து, அவரைத் தேற்றி அனுப்பினார்.
இதோ அவர்கள் வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. நாயகியின் செயல்கள் மகேஸ்வரிக்கு பிடிக்கவில்லை என்றாலும், வசந்தி இருக்கும் போது அவர் பெரிதாக பயப்படவில்லை.
இளங்கோ பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். இந்த வருட படிப்பு முடிந்ததும் ஊருக்கே வந்து விடுகிறேன் என்று சொல்லி இளங்கோவே மகேஸ்வரியை ஊருக்கு அனுப்பி வைத்தான்.
அந்த வார்த்தைகள் மகேஸ்வரிக்கு புது தெம்பை கொடுத்தது. ஆனால் நாயகியின் போக்கை யோசித்து, தன் ஒன்றுவிட்ட சகோதரியான ராணியை இளங்கோவை பார்க்க அனுப்பினார்.
தன் சொந்தம் என்று தெரிந்தால் ராணியை அனுமதிக்க மாட்டார்கள் என்றுதான் வேலைக்கு என அனுப்பி வைத்தார். அதை முன்கூட்டியே வசந்திக்கும் தெரியப்படுத்தினார்.
அந்த வருட படிப்பின் முடிவில் ஹாஸ்டலில் சேர்ந்து கொள்கிறேன் என்றான் இளங்கோ. யோசித்தாலும் சரி என்றார் மகேஸ்வரி.
அடுத்தடுத்து அவன் போக்குவரத்தே குறைந்தது. பேச்சுவார்த்தையும் குறைந்தது. வசந்தியின் மூலமாக அங்கு நடப்பதை தெரிந்து கொண்ட மகேஸ்வரி கணவரைப் பார்க்க, “இழுத்து பிடிக்கனும்னு நினைக்காத. அது எங்க போய் முடியும்னு உனக்கேத் தெரியும். அவன் கதிரவனோட மகன். அதை எப்பவும் மறக்காத..” என முடிவாக சொல்லிவிட்டார்.
ஆனாலும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அழைத்து வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை மகேஸ்வரி.
நாயகி தன் திட்டத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அவர் நினைத்ததைப் போலவே இளங்கோவின் மனதில் விசத்தை தெளித்தார்.
மகேஸ்வரியைப் பற்றியும், செல்வத்தைப்பற்றியும் தவறாகவே சித்தரித்து கூற ஆரம்பித்தார்.. இளங்கோவும் அதை உண்மை என்றே நம்பினான்.
அதன்பிறகு மகேஸ்வரியை விட்டு மொத்தமாகவே ஒதுங்கினான். அவரிடம் நல்ல முறையில் பேசினாலும் செல்வத்தின் மேல் இருந்த கோபம் அவரிடம் நெருங்க விடவில்லை.
கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் போதே ப்ரீத்தாவைப்பற்றி கூறி, ‘உன் அம்மாவின் கடைசி ஆசை’ என்று முடித்துவிட்டார் நாயகி.
அந்த ஒரு வார்த்தையில் இளங்கோ மிகவும் கவனமாக இருந்தான். மனதை அலைபாய விடவில்லை. கல்லூரி முடிந்ததுமே திருமணத்தை வைக்கத்தான் நாயகிக்கு ஆசை. ஆனால் அப்போது ப்ரீத்தாவிற்கு வயது பதினாறுதான். அதனால் அப்போது அந்த பேச்சை விட்டுவிட்டார்.
வசந்திக்கு முதலில் நாயகியின் திட்டங்கள் புரியவில்லை. நாட்கள் செல்ல, இளங்கோவின் நடவடிக்கையில் புரிந்து கொண்டார். அவரே மகேஸ்வரியைப் பற்றி நல்ல முறையில் சொன்னாலும், அதை ஏற்கும் பக்குவத்தை தாண்டிவிட்டான் என புரிந்து கொண்டார். அதோடு பேசி மேலும் அவர்கள் மேல் கோபத்தை வளர்த்துவிட அவர் தயாராக இல்லை. கல்லூரி படிப்பு முடிந்ததும், வசந்தியின் பிடிவாதத்தால் தான் இளங்கோவை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பியது.
சீனிக்கும் அதுதான் சரியெனப்பட்டது. தாயின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து அனுப்பி வைத்தார்.
மூன்றாண்டுகள் கழித்து மிகவும் வித்தியாசமாக வந்தான் இளங்கோ. முன்பே அழகன்தான். இப்போது மேலும் அழகாக, கம்பீரமாக, திமிறாக வந்திருந்தான்.
வந்து ஒரு வாரத்திதிலேயே தொழிலை கையில் வாங்கிக்கொண்டான். அதில் வெற்றியும் பெற்றான். நாயகி திருமணம் பற்றி பேசும் போது யோசித்தான். அப்போது ப்ரீத்தாவிற்கு படிப்பு முடியவில்லை. ஏன் அவசரம் என்று அவனுக்கு அப்போது புரியவில்லை. பாட்டியிடம் பேசினான். அவர்தான் ஊருக்கு போக வேண்டும் என்றார்.
நாயகியின் திட்டம் பாழானது அங்குதான். தன் பெற்றோரை இழுத்து பேசினால் அவனின் கோபமும், வெறியும் வெளிப்படும். அந்த மகேஸ்வரி முகத்தில் கூட விழிக்கமாட்டான் என அவர் தீட்டிய திட்டங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போனது..
அவர் ஒவ்வொரு செங்கலாக கட்டிய கனவுக்கோட்டையை தாமரை நொடியில் தகர்த்தெரிந்தது அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
இத்தனை வருடம் அவர் பட்ட கஷ்டங்கள், அவர் தீடிய திட்டங்கள் அனைத்தும் தாமரையின் செயலில் தவிடு பொடியானதில் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இனி அவர் நல்லவராக வேசம் போட வேண்டிய அவசியம் இல்லை. சீக்கிரம் இதற்கொரு முடிவை கட்டியே ஆகவேண்டும் என்று கடந்த காலத்தையெல்லாம் யோசித்து முடித்தவரின் மனதில் தாமரையும், அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் மின்னலாக வந்து போயினர்.
“அம்மா.. மாமா என்ன சொல்றார். நான் இங்க இருந்து காலேஜ் போகனுமா?” என்றபடியே ப்ரீத்தா வர,
“ஆமாண்டி கொஞ்ச நாள் நாம இங்க இருக்கலாம். என்னால அங்க இருக்க முடியாது. அங்க இருந்தா அவங்களை எல்லாம் நான் ஏதாவது கோபமா பேசிடுவேனோன்னு பயமா இருக்கு. அதனால என் மனசு சமாதானம் ஆகுற வரைக்கும் இங்கதான் இருக்கனும்..” என மகள் நம்பும்படியாக பேசினார் நாயகி.
“ம்ம்… சரிம்மா.. நீ அதெல்லாம் யோசிக்காத. மாமாவுக்கு தாமரைதான் சரியான ஆள். நீ இந்தளவுக்கு மனசு மாறினதே போதும்..” என்று ப்ரீத்தா செல்ல, நாயகியின் முகம் கொடூரமாக மாறியது.
இங்கு காரில் ஏறியதில் இருந்து உர்ரென்று இருந்தவளை பார்த்து சிரித்தபடியே வந்தான் இளங்கோ.
“இப்போ எதுக்கு இந்த இளிப்பு சகிக்கல..” என்றவள் முகத்தை திருப்பிக்கொள்ள, அதற்கும் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை.
தாமரையோடு வருவான் என்று எதிர்பார்க்காத வசந்தி, அவர்களைப் பார்த்து புன்னகைத்து “அப்படியே நில்லுங்க்..” என்றவர், “ராணி சீக்கிரம் ஆரத்தி எடுத்துட்டு வா..” என கத்தினார்.
“எதுக்கு பாட்டி இதெல்லாம்..?” என இளங்கோ சிரிக்க,
“ம்ச்.. அன்னைக்கே இப்படித்தான் உள்ள கூப்பிட்டிருக்கனும், சூழ்நிலை சரியில்ல. அதனால் என்ன, இன்னைக்கு மூனு பேரா உள்ள வாங்க..” என்றவரின் பார்வை தாமரையின் வயிற்றில் விழுந்தது.
“தாமரை டாக்டர் என்ன சொன்னாங்க.?” என்ற கேள்வியோடு பார்க்க,
அதற்குள் ராணி ஆரத்தியோடு வர, முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார்.
வீடு அமைதியாக இருப்பதை உணர்ந்து நாயகி இல்லையென்று புரிந்து கொண்டாள் தாமரை. அவளுக்கு இங்கு வர விருப்பம் இல்லைதான். இந்த சில நாட்களாக மகேஸ்வரியின் போதனையில் தன் கோபத்தை கொஞ்சம் குறைத்திருந்தாள். அதனால் அமைதியாகவே அவனோடு வந்தாள்.
இன்னுமே வசந்தியின் முகத்தில் திகைப்பு மாறவில்லை. தன் கேள்விக்கு தாமரை பதில் சொல்லாததிலேயே அவருக்கு உண்மை புரிந்து விட்டது. பேரனுக்கு இது தெரியுமோ, தன்னிடம் மறைத்து விட்டானோ என பார்க்க, தாமரையின் முகத்தில் இருந்த பதட்டத்தில் அவள் யாரிடமும் சொல்லவில்லை என புரிந்தது.
“பாப்பா.. நீ வரேன்னு சொல்லவே இல்ல. சொல்லிருந்தா உனக்குப் பிடிச்சதா செஞ்சிருப்பேன்..” என்ற ராணியிடம்,
“ராணிம்மா.. ஏற்கனவே இவ்ளோ செஞ்சிருக்கீங்க.. இனி எனக்கு வேற தனியா செய்யனுமா? ஏன் உங்க மகாராஜா இத்தன் வெரைட்டி இருந்தா தான் சாப்பிடுவாரா?” என கிண்டலடித்தபடியே மெதுவாக டைனிங்க் ஹால் நோக்கி நடந்தாள்.
அவள் கிண்டலில் மூவரும் சிரித்தபடியே அவளுடன் நடந்தனர்.
தட்டை வைத்து பரிமாறிய ராணி “பாப்பா காரம் கம்மியா சேர்த்துக்கனும்..” என்றபடியே சாதத்தை வைத்தார்.
“ராணிம்மா.. எனக்கு காட்டுப்பசி.. நீங்க அதை சாப்பிடாத, இதை சாப்பிடாதன்னு கன்ட்ரோல் பண்னாதீங்க. எல்லாம் சாப்பிட்டு ஜெலுசில் குடிச்சிப்பேன். ஷ்யாம் க்கு மட்டும் சொல்லாதீங்க.” என சாப்பிட ஆரம்பித்தாள்.
இவர்கள் இருவரின் பேச்சையும் ரசித்தபடியே இளங்கோவும் சாப்பிட்டு முடித்தான். உணவுக்கு இடையில் நாயகி ஊருக்குப் போனதை பற்றியும் சொல்லி முடித்தார் வசந்தி.
“இளா.. உடனே போக வேண்டாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம். தாமரை இடுப்பை சாய்க்கட்டும்..” என்ற வசந்தியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவளைத் தன் அறைக்கு அழைத்து சென்றான்.
முதல்நாள் இந்த அறைக்கு வந்தது அழையா விருந்தாளியாக மன கண்ணில் வந்து விழ, தாமரையின் உடல் இறுகியது.
அதை உணர்ந்த இளங்கோ “ம்ச்.. ரிலாக்ஸ் பண்ணு.. எதையும் யோசிக்காத..” என சமாதானம் செய்தபடி படியில் ஏறினான்.
கீழிருந்து பார்த்த இருவருக்கும் கண்ணே கலங்கிவிட்டது. இவர்கள் வாழ்க்கை சீக்கிரம் சரியாகிவிட வேண்டும் என அவசர வேண்டுகோள் வேறு வைத்தனர்.
அறைக்குள் வந்தவன் “இந்த ட்ரெஸ் ஓக்கே வா.. இல்ல சேஞ்ச் பன்றியா..?” என்றான் தன் டகின் செய்த சர்டை வெளியில் எடுத்து விட்டபடி.
அதிலே புரிந்தது அவன் உடை மாற்ற போகியான் என, அவளுக்கும் மாற்றினால் நன்றாக இருக்கும் போலத்தான் இருந்தது. ஆனால் மாற்ற உடை வேண்டுமே என யோசித்தபடியே இருந்தாள்.
அனைத்தும் அவனைப் பார்த்தப்டியேதான். இப்போது சர்டை கழட்டிவிட்டு பேண்டில் கைவைக்க, அப்போதும் அவள் பார்வை மாறவில்லை.
முதலில் இளங்கோ கவனிக்கவில்லை. தன் கேள்விக்கு இன்னும் ஏன்பதில் சொல்லாமல் இருக்கிறாள் என்று பார்க்க நிமிர, அப்போதுதான் மனைவியின் பார்வையை உணர்ந்தான்.
அந்த பார்வையில் அவனுக்கே வெட்கம் வந்துவிடும் போல் இருந்தது.
“ஹேய் என்னடி நீ..” என இளங்கோ தன் டீ சர்டை தூக்கி அவள் மேல் எரிய, அப்போதுதான் சுயம் உணர்ந்தவள், மொத்தமாக சிவந்து போனாள் தன் பார்வையை உணர்ந்து.
“ம்ச்.. நானா இப்படி..” என முகத்தை வேறு அழுந்த துடைத்துக் கொண்டு, வேறு பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
ஆனால் இளங்கோவிற்கு மனைவியின் பார்வையில் உல்லாசம் பிறக்க, அவளை தின்னும் பார்வை பார்த்தபடி அவளிடம் நடந்தான்.
தாமரைக்கு கணவனின் காலடி தன்னை நெருங்க நெருங்க, உள்ளங்கைகள் வேர்க்க ஆரம்பித்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
என்னதான் தன் உணர்வுகளை அவனுக்கு மறைத்து அனைக்கட்டி வைத்தாலும், இந்த நொடி அவள் கட்டுப்பாட்டில் அவளே இல்லை என்பது ஏறி இளங்கிய மூச்சிலே தெரிந்தது.
இளங்கோ அவளை நெருங்கிவிட்டான். தன் முன்னே நிற்கிறான். தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான்.
இறுக மூடிய கண்களில் கூட அவளால் அதை உணர முடிந்தது. அவனின் அன்று உணர்ந்த அந்த ஆண்மையின் வாசம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்தது.
தாமரைக்கு என்னமோ நெஞ்சே அடைத்த உணர்வு. அவளின் இதயம் தாளம் தப்பி அதிவேகமாக துடித்தது.
கைகள் அந்த பெட்டின் சீட்டை இறுக்கமாக பிடித்து முறுக்கியது.
பெண்ணவளின் அவஸ்தைகளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அதற்கு மேல் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை.
அவளை அப்படியே தன் நெஞ்சோடு அணைக்க, அதில் அவள் நிமிர்ந்து பார்க்க நான்கு விழிகளும் ஒன்றோடு ஒன்று கவ்வி கவி படிக்க, உணர்வுகளின் பெருக்கில் இருந்த மனைவியின் துடித்த இதழ்களை மிகவும் நிதானமாக தனக்குள் இழுத்துக்கொண்டான் கணவன்.