• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை -43

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
492
113
Tirupur
தாமரை - 43

கணவனின் ஆழ்ந்த முத்ததை ரசிக்க முடியவில்லை தாமரையால். நொடியில் அவள் உடல் இறுகிவிட்டது.. அதை இளங்கோவாலும் உணர முடிந்தது.

அதனால் அதற்கு மேல் தாமரையைக் கட்டாயப்படுத்த விரும்பாமல் “படு.. நான் பாட்டியைப் பார்த்துட்டு வரேன்” என அவளைப் படுக்க வைத்துவிட்டு, சங்கடப்படுத்தாமல் அறையை விட்டு வெளியில் வந்துவிட்டான் இளங்கோ.

“என்ன இளா..?” என வசந்தி பேரன் கீழே வருவதைப் பார்த்து பதட்டத்துடன் கேட்க,

“ம்ச் ஒன்னுமில்ல பாட்டி. அவளுக்கு தூங்கனும். நான் இருந்தா விரைச்சிட்டு இருப்பா. அதான் ரிலாக்ஸா இருக்கட்டும்னு வந்தேன்..” என அவரின் எதிரில் அமர்ந்தான்.

“இப்படியே இருந்தா சரியா வருமா தம்பி. பாப்பாவோட கோபம் போக நீங்க தான் முயற்சி செய்யனும். குழந்தை பிறக்கிறதுக்குள்ள உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடனும் தம்பி..” என ராணியும் வந்து கூற,

எனக்கும் புரியுது ராணிம்மா.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதுவரைக்கும் தாராக்கிட்ட நார்மலா பேச முடியும்னு தோணல.” என்றதும்,

“என்ன இளா..?” என்ற வசந்தியிடம்,

“என்னனு சொல்லத் தெரியல பாட்டி. ஆனா நாயகி அத்தைக்கிட்ட ஏதோ சரியில்லன்னு மட்டும் தெரியுது..” என்றான் யோசனையாக.

“எப்படி? எப்படி சொல்ற? அவளுக்கு நீ ப்ரீத்தாவை வேண்டாம்னு சொன்ன கோபம். அது இருக்கத்தானே செய்யும். ஒரு அம்மாவா அவ கோபம் சரிதானே தம்பி.” என்றார் வசந்தி.

“அது சரிதான் பாட்டி. ஆனா இது வேற..” என யோசனையாக இழுத்தவன் “இந்த செழியன் இருக்கான்ல அவனுக்கும் நம்ம ப்ரீக்குட்டிக்கும் மேரேஜ் பண்ற ஐடியால அத்தை இருக்காங்க போல..” என நிறுத்த,

“நல்லதுதானே தம்பி.. எப்படியோ நாயகி உன்னை விட்டாளே. அப்புறம் நம்ம ப்ரீக்குட்டிக்கும் சொந்தத்துலயே இடம் அமைஞ்சது சந்தோசம்தானே.” என வசந்தியும் கூற,

“ம்ச் பாட்டி.. அத்தை அப்படி நினைச்சு செஞ்சிருந்தா சரி. ஆனா இதுல வேற இருக்கு. எங்களுக்கு பேசும் முன்னமே அவன்கிட்ட ‘நீதான் ப்ரீத்தாவை கல்யாணம் செய்துக்கப் போற’ன்னு சொல்லிருக்காங்க.” என்றான் யோசனையாக.

“அப்படியா? ஒரு வேளை அந்த பையன் ஏமாந்துடக்கூடாதுனு கூட நாயகி சொல்லிருக்கலாம் இளா. அவளுக்கு உனக்கு கொடுக்கத்தான் விருப்பம். அது உனக்கேத் தெரியும்..” என்றவரிடம் அடுத்து எதுவும் பேசவில்லை இளங்கோ.

அவனுக்கு இதில் ஏதோ இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. அதோடு அன்று ஊரில் நடந்த சம்பவமும் கண் முன்னால் வந்து போனது.

இத்தனை நாள் தாமரையின் மேல் இருந்த கோபத்தில் அதையெல்லாம் யோசிக்கவே இல்லை. ஆனால் இப்போது யோசிக்க ஆரம்பித்தான்.

வீட்டிலிருந்து அவனும் ப்ரீத்தாவும்தான் கிளம்பி தோட்ட வீட்டிற்கு போனார்கள். சென்ற சில நிமிடத்திலயே தோப்பில் வேலை செய்பவர் இளநீர் கொண்டு வந்து கொடுத்தார்.

அதை குடித்த சில நிமிடத்திலயே அவனுக்கு தலை சுற்றியது. கண்கள் இருட்டியது, உடலெல்லாம் ஏதோ போல் முறுக்கிக்கொண்டு வந்தது. அதன் பிறகு நடந்த எதுவும் ஞாபகத்தில் இல்லை.

அடுத்து இளங்கோ விழித்துப் பார்க்கும் போது அவனும், தாமரையும் ஆடைகளில்லா உடல்கள் பின்னி பினைந்த நிலையில் இருந்தனர்.

தாமரை அங்கு எப்படி வந்தாள்? ப்ரீத்தா எங்கு எப்போது போனாள்? என மிகுந்த குழப்பம்.

தாமரையை தன்னோடு அப்படி பார்த்த அதிர்ச்சியில் அவளைத் தள்ளிவிட்டு தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

அப்போது விழித்த தாமரை ஏதோ சொல்ல வந்தாள். அவன்தான் கோபத்தில் எதையும் கேட்கவில்லை. கேட்க தயாராகவும் இல்லை.

அவள் மேலும், அந்த குடும்பத்தின் மேலும் இருந்த கோபத்தில் நிதானமில்லாமல் வார்த்தைகளால் அவளை வதைத்துவிட்டு வந்திருந்தான்.

அன்றே சற்று சுதாரித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கண்டுபிடித்திருக்கலாம் என தன் முன் கோபத்தை நினைத்து தன்னையே திட்டிக்கொண்டான்.

“என்ன தம்பி? என்ன யோசிக்கிற..?” என பேரனின் யோசனை முகத்தைப் பார்த்து கலக்கமாக கேட்டார் வசந்தி.

“ஷ்யாம் பத்தி என்ன நினைக்கிறீங்க பாட்டி.?” என்றான் திடிரென.

“ஏன் ப்பா.. அந்த பையனுக்கு என்ன? நல்ல பையன். நல்ல குடும்பம். நல்ல வேலை.” என கேள்வியாக பார்க்க,

“நம்ம ப்ரீத்தாவும், ஷ்யாமும் விரும்புறாங்கன்னு நினைக்கிறேன் பாட்டி. இது நாயகி அத்தைக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ தெரியல. செழியன் பத்தி அத்தை ப்ரீத்தாக்கிட்ட பேசிட்டாங்களான்னும் தெரியல.” என்றான் இளங்கோ.

“அது.. அதெல்லாம் நடக்காது இளா.. கண்டிப்பா நாயகி நடக்க விடமாட்டா. உனக்கு முன்னாடியே செழியனுக்கு பேசினான்னு சொல்ற. அப்போ உன்னையவே ஒரு ஆப்சனலாதான் வச்சிருக்கா. அப்புறம் எப்படி ஷ்யாமை ஒத்துப்பா..” என வசந்தி கேட்க,

“எனக்கு அதுதான் யோசனை பாட்டி. என்னை கேட்டா ப்ரீத்தா PG பண்ணலாம். அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தா அப்ராட் கூட அனுப்பிடலாம். இந்த வயசுலயே ஏன் இவ்ளோ கஷ்டம். அவ மனசையும் யோசிக்கனும்..”

“ம்ம் புரியுதுப்பா.. ஆனா நாயகி விடனுமே..”

“நான் எதுக்கும் மாமாகிட்ட பேசுறேன் பாட்டி. நாளைக்கு வந்துடுவார். அப்போ பொறுமையா பேசுவோம்..”

“சீனி சொன்னா நாயகி கேட்பான்னு நினைக்கிறியா?”

“வாய்ப்பில்லதான். ஆனா அவர் என்ன நினைக்கிறார்னு தெரிஞ்சிக்கலாம்.. தாரா தூங்கட்டும் பாட்டி. நான் ஆஃபிஸ் போய்ட்டு வந்து அவளை கூப்பிட்டு போறேன்..” என அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

இங்கு செழியன் என்பவனோ தன்னிடமிருந்த மெமரிகார்டைப் பார்த்து குரோதமாக சிரித்துக் கொண்டான்.

‘ஹான் டேய் என் ரீத்துக்குட்டிடா அவ. அவளை எங்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நினைச்சா உன்னை நான் சும்மா விடுவேனா? நீயும் அந்த தாமரையும் ஒன்னு சேரும் நாளுக்காகத்தாண்டா காத்துட்டு இருந்தேன். அப்போதான இந்த வீடியோவுக்கு மவுஸ் இருக்கும்.’

அன்னைக்கு உன் பொண்டாட்டிக்கு அனுப்பினது ஜஸ்ட் சாம்பிள்தான். மெயின் பிக்சர் எங்கிட்ட பத்திரமா இருக்கு.

ஹாஹா.. உனக்கு தெரியாம இதை அவளுக்கு அனுப்பனும். அவளுக்கு தெரியாம உனக்கு அனுப்பனும். ரெண்டு பேரும் வெளிய சொல்ல முடியாம மன அழுத்தத்துல பைத்தியம் பிடிச்சு அலையனும்.

என் ரீத்துமா எனக்கு இல்லன்னு நான் எப்படி வேதனைபட்டிருப்பேன். அந்த வேதனை உனக்கும் தெரியனும்.’ என செழியன் குரோதமாக நினைத்துக்கொண்டே அந்த மெமரிகார்டைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாமரையை எழுப்பியது அலைபேசியின் ஒலி.

யாரென்று பார்க்காமலே காதில் வைக்க “அம்மு..” என்ற செல்வத்தின் குரலில் நன்றாக விழித்து, முகத்தைத் துடைத்து மணியைப் பார்த்தாள். அது மாலை ஆறைக் காட்ட, தினமும் செல்வம் மகளுக்கு அழைக்கும் நேரம்.

“ப்பா..” என்றாள் குரல் கரகரப்பாக.

“என்ன அம்மு? ஏன் குரல் சோர்ந்து வருது.? உடம்புக்கு எதுவும் முடியலயா?” என பதறி கேட்க

“இல்லப்பா தூங்கிட்டேன். இப்போதான் விழிச்சேன்.. அதான் குரல் தூக்க சடவா இருக்கு..”

ம்ம் நீங்க எங்க ப்பா இருக்கீங்க. முத்தண்ணன பார்த்தீங்களா? என கேட்க,

“அதுக்குத்தான்டா கூப்பிட்டேன். அவனைப் பிடிச்சு விசாரிச்சேன். அந்த நாயகியா இருக்கும்னு நானும் ஆரம்பத்துல நினைச்சேன். ஆனா அவன் அடிச்சு சொல்றான்டா.. ஒரு பையன்தான் கொடுத்தான். அவன்தான் அந்த பொடியை கலந்தான்னு சொல்றான்..”

“அப்படி யாருப்பா நம்ம ஊர்ல அத்தானுக்கு வேண்டாதவங்க இருப்பாங்க. அவருக்கு ரொம்ப தெரிஞ்ச, ரொம்ப பழகின ஒருத்தர்தான் இந்த வேலையை செஞ்சிருக்கனும். அவங்க ரிலேடிவ்ஸ் யாரையும் எனக்கு இங்க தெரியல ப்பா.. பாட்டிக்கிட்ட விசாரிக்கவா.”

“வேண்டாம் அம்மு.. அவங்க பயந்துக்குவாங்க. வளைகாப்புக்கு எப்படியும் பத்திரிக்கை வைப்போம்ல அப்போ நானும் அம்மாவும் பார்த்து விசாரிக்கிறோம். நீ இதையெல்லாம் நினைக்காத, அந்த வீட்டுல இருக்க கவனமா இரு..”

“ம்ம் சரிப்பா… ஆனா அவன் அடுத்து எந்த மெசேஜோ போனோ பண்ணவே இல்லப்பா. கையில விடியோவை வச்சிக்கிட்டு பொறுமையா இருக்கான்னா ஏதோ பெருசா பிரச்சினை பண்ண போறான்னு தோனுது ப்பா..”

“எனக்கும் அந்த எண்ணம் தான் அம்மு. நான் எனக்கு தெரிஞ்ச போலிஸ் அதிகாரிக்கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லிருக்கேன். அவரும் சீக்கிரம் முடிச்சிடுறேன்னு சொல்லிருக்கார். நீ எதுக்கும் கவலைப்படக்கூடாது. அப்படியே அந்த வீடியோ வந்தாலும் நீ பயமோ, பதட்டமோ இல்லாம பிரச்சினையை ஹேன்டில் பண்ணனும். நீ இப்போ ஒரு உயிர் இல்ல புரிஞ்சுதா? நீ டென்சன் ஆனாலோ, பயந்தாலோ அது உள்ள இருக்குற குழந்தையையும் அஃபெக்ட் பண்ணும்..”

“இல்லப்பா.. நான் அதெல்லாம் யோசிக்கல. அப்படி வந்தா கவனமாவே இருப்பேன்.. அம்மா என்னை இங்க இருக்க சொல்றாங்க ப்பா.. என்ன செய்யட்டும்..?”

“உனக்கு அங்க ஓக்கே.. செட் ஆகிடுச்சுன்னா இருடா. இங்கேயும் வேலை அதிகம்தான். அம்மா வந்தா உதவியா இருக்கும்..”

“சரிப்பா.. நான் ஷ்யாம்கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்று வைத்துவிட்டவள், உடனே ஷ்யாம்க்கு அழைத்து “ஷ்யாமா
இந்த அநியாயத்தை கேட்கமாட்டியா? உங்க அத்தை என்னை என் புருசன் வீட்டுக்கு துரத்தி விட்டுடுச்சு..” என பாவமாக பேச,

“ரொம்ப நல்லதா போச்சு, ரொம்ப ரொம்ப நல்லதா போச்சு. இனி நிம்மதியா என் பெட்ல படுக்கலாம்..” என சந்தோசித்தவன், “அந்த குண்டாத்தி மண்டோதரி தான் அங்க இல்லையாமே, அப்புறம் உனக்கு என்ன பிரச்சினை. இருந்துட்டு வா.. ஆனா உன் புருசன்கூட மட்டும் சேராத. அவன் சரியில்ல..” என ஷ்யாம் எச்சரிக்கை செய்ய,

“அதென்னவோ உண்மைதான்” என வாய்க்குள் முனகியவள், “நீ சொல்லிட்ட இல்ல.. நான் இனி ரொம்ப கவனமா இருக்கேன்..” என அவனுக்கு சத்தியம் செயயாத குறையாக பேசி நம்ப வைத்த பிறகே போனை வைத்தாள்.

பின் மகேஸ்வரிக்கு அழைத்து இங்கிருக்க போவதாக சொல்லிவிட்டு, ரெஸ்ட் ரூம் சென்று கீழே வந்தாள்.

இவள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர் வசந்தியும், ராணியும்.

“வா பாப்பா.. என்ன இவ்ளோ நேரம் தூங்கிட்ட. பயந்துட்டோம்..” என பாதி வழியில் வந்து அவள் கையைப் பிடித்து அழைத்து போனார் ராணி.

“எனக்கே தெரியல ராணிம்மா.. நல்லா தூங்கிட்டேன்..” என அவளும் அசட்டு சிரிப்பு சிரிக்க,

“இளா வேற கூப்பிட்டுட்டே இருந்தான். நீ எழுந்ததும் முதல்ல அவனுக்கு கூப்பிட்டு சொல்ல சொன்னான்.” என்ற நேரம் சரியாக இளங்கோவும் வீட்டுக்குள் பதட்டமாகவே வந்தான்.

வந்தவன் நேராக தாமரையிடம் சென்று “என்னாச்சு தாரா? ஏன் இவ்ளோ நேரம் தூங்கின?” என படபடப்புடன் கேட்க,

“ஒன்னுமில்ல.. டயர்ட் அவ்ளோதான்..” என முணுமுணுக்க,

“வேற ஒன்னுமில்லயே..” என மீண்டும் கேட்க,

“இல்ல.. இல்ல..” என்றவள் ராணி நீட்டிய சத்து மாவு கஞ்சியை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள்..

‘ஊப்ஸ்’ என்று தளர்ந்து சோபாவில் விழுந்தவன் ‘இந்த ஷ்யாம் என்னை டென்சன் பண்ணிட்டான்’ என முணுமுணுத்து, ‘டேய்’ என பல்லைக் கடித்தான்.

 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
351
6
28
Hosur
Ha ha