• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 19:

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
19

“அவ சொல்ல வந்த நேரத்துல நடந்த பிரச்சனையால தான் இப்போ இங்க வந்து நிக்கறிங்க.” என்றான் அமுதன் மெதுவாக.

“என்ன?” என்றான் தீரன் அதிர்ச்சியாய்.

’என்ன இவ்ளோ அதிர்ச்சியாகுறார்?’ என்று நினைத்தவன்.

“என்ன என்ன?” என்றான் அமுதன்.

“இல்ல..” என்ற தயங்கிய தீரனை ஒன்றும் புரியாமல் பார்த்த அமுதன், “என்ன ஸார் ஏன் தயங்குறீங்க? நீங்க கொஞ்சம் தெளிவா பேசினா தான் திகூட உங்களை சேர்த்து வைக்க எங்களால ஹெல்ப் பண்ண முடியும்.” என்றான் அமுதன்.

“இல்ல அமுதன். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியாம தான் இந்த மூணு வருஷமா ரொம்ப நொந்து போய்ருக்கேன்.” என்றான் தீரன்.

“என்ன சொல்றீங்க தீரன்?” என்றான் அமுதன் அதிர்ச்சியாய்.

“ஆமா. அன்னைக்கு ஓவரா குடிச்சிருந்ததால... என்ன நடந்ததுன்னு.. எனக்கே தெரியலை. விடிஞ்சு வீட்டுக்கு வந்து மிருதியை காணாம தேடினேன். யாருமே எதுவுமே சொல்லலை. அவங்க அப்பா அம்மாகிட்ட போயி கேட்டேன். அவங்களுக்கும் எதுவும் தெரியலை. உங்கக்கூட தானே என் பொண்ணு இருந்தா திடீர்னு வந்து எங்கன்னு எங்ககிட்ட கேக்குறிங்கன்னு பெரிய பிரச்சனை ஆகிட்டு. அதுக்கப்புறம் எவ்வளவோ ட்ரை பண்ணியும் மிருவ கண்டுபிடிக்க முடியலை. ரொம்ப நாள் அவங்க அப்பா அம்மாகிட்ட மன்னிப்புக்காக அவங்க வீட்டு வாசல்ல போயி நின்னுருக்கேன். ஆனா கடைசி வரைக்கும் அவளை பத்தி ஒரு தகவலும் எனக்கு கிடைக்கல. உங்ககிட்ட கண்டிப்பா மிருதி எல்லாத்தையும் சொல்லிருப்பா. தயவு செஞ்சு என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என்றான் தீரன் உருக்கமாக.

“நான் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். உங்களை என் திகூட சேர்த்து வைக்கணும்னு நான் இப்போ நினைக்கிறேன். ஆனா, அன்னைக்கு நான் ... எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை. நைட் 3 மணிக்கு போன் பண்ணி ஹாஸ்பிடல் வர சொன்னா. தி என்னைக்குமே எவ்ளோ பிரச்சனை வந்தாலும் நைட் 8மணிக்கு மேல போன் பண்ண மாட்டா. காலேஜ் படிக்கும் போது எவ்ளோ பசங்க அவ பின்னாடி சுத்திருக்காங்க தெரியுமா? ஆனா அவளோட ஒரே பதில். எனக்கு உலகமே எங்க அப்பா அம்மா தான். அவங்க யாரை கை காட்றாங்களோ அவங்க தான் என் கழுத்துல தாலி கட்ட முடியும்னு சொன்னவ. அவளோட கனவே வேற. ரொம்ப பெருசு. அவளுக்கு கனவெல்லாம் எம்.எஸ்.டபல்யு படிச்சு அதுலயே ஹெச்.ஆர் முடிக்கனும். அவங்க அப்பாக்காக இந்த கல்யாணதுக்கு சம்மதிச்சா.

அவ எதுவுமே என்கிட்ட சொன்னதில்லை. அன்னைக்கு நான் ஹாஸ்பிட்டல்ல இருந்த நிலமைல நீங்க என் முன்னாடி இருந்திருந்தீங்க சத்தியமா சொல்றேன். கண்டிப்பா அடிதடில தான் போய் முடிஞ்சிருக்கும்.” என்றான் அமுதன் கோபத்தை அடக்கி.

அவனின் வார்தைகள் தீரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“இங்க கூட்டிட்டு வந்தப்புறம் அவ எங்கக்கூட சகஜமா பேசுறதுக்கு முழுசா மூணு மாசம் ஆச்சு. எப்படி சொல்றது அவ வந்தப்ப சித்த பிரம்மை பிடிச்ச மாதிரி இருந்தா. ரெண்டு நாள் எதுவுமே சாப்பிடலை. அபார்ஷன் ஆன பொண்ணு சாப்பிடாம மூணு நாள் இருந்தா என்ன ஆகுணும்னு யாரும் சொல்லா தேவை இல்ல உங்களுக்கு. அதிக ரத்த போக்கு காரணமா மயக்கமாய் அடுத்த ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி அதுக்கப்புறம் அவளை சாப்பிட வைக்க ஒரு ஒரு வேளையும் போராட்டம் தான். நாங்க செஞ்சோம்னு சொல்லி காட்டலை. ஆனா அந்த அளவுக்கு மிருதி உங்களால காயபட்ருக்கா. ரெண்டு மாசம் கழிச்சி தான் அவ வயதுள்ள இன்னொரு கரு வளருதுன்னு எங்களுக்கு தெரியும். அதுக்கப்புறம் அவளை ஒரு வழியா தேற்றி கொஞ்ச கொஞ்சமா பழைய நிலைக்கு கொண்டு வந்தோம்.

அது மட்டுமில்ல, எங்களுக்கு பாரமா இருக்க கூடாதுன்னு வேலைக்கு போறேன்னு அடம் பிடிச்சு வெளிய போய் எவ்ளோ கஷ்டபட்டான்னு சொல்ல முடியாது. புருஷன் கூட இல்லன்னா அது அவளோட தப்புன்னு சொல்லி இந்த சமுதாயம் அவளை ஒதுக்கி வைக்குது. அதோட அவகிட்ட முடிஞ்ச வரைக்கும் ஒரு சில ஆண்கள் தப்பா நடக்க முயற்சியும் செய்றாங்க. அப்படி பட்ட ஒருத்தங்கிட்ட மாட்டி உடைஞ்சு போய் வந்தா. அப்போ முடிவு பண்ணி வெளிய அனுப்பாம என்கூடயே கேப்ல ஒரு வேலை கொடுத்து பார்த்துக்க சொன்னேன். இன்னும் நிறைய இருக்கு. உங்களால அவ நிறைய பட்ருக்கா. அதனால அவகிட்ட மன்னிப்பு உடனே கிடைக்கும்னு எதிர் பார்க்காதீங்க. முயற்சி பண்ணுங்க.மாறிட்டிங்கன்னு அவளுக்கு புரிய வைங்க. உங்க உண்மையான அன்பை அவளுக்கு காட்டுங்க. அப்போ தான் தி உங்கக்கூட சேரதுக்கு வழி இருக்கு. என்னடா இவன் இவ்ளோ பேசுறானேன்னு நினைக்காதீங்க. நான் அவளோட ஃப்ரெண்ட் நிச்சயமா நா கேட்பேன். அப்புறம் ஸ்ரீஷா என்னோட வருங்கால மனைவி. நாங்க அஞ்சு வருஷமா விரும்பறோம். இன்னும் ரெண்டு மாசதுல கல்யாணம். அதனால என்னையும் தியும் தப்பாலாம் யோசிக்காதீங்க.” என்றான் அமுதன் ஒரே மூச்காய்.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய் இறங்கியது தீரனின் நெஞ்சத்தில்.

“அப்புறம் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நாங்க எதுவுமே கேட்டதில்லை. மூணு மாசம் கழிச்சி அவளே எங்ககிட்ட சொன்னா. ஆனா, அதைபத்தி என்னால சொல்லமுடியாது. அது நீங்க அவகிட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.” என்றான் அமுதன்.

விழிகளில் நீரோடு தலைகுனிந்து அமர்ந்திருந்த தீரனை, “மாமா! அவர் பேசுனது எல்லாமே உண்மை தான். ஆனா எல்லாம் முடிஞ்சு போனது. இனி நடக்க போறதை பத்தி யோசிங்க. நீங்க பண்ண தப்பை எப்படி சரி செஞ்சு எப்படி அக்கா கூட சேரதுன்னு யோசிங்க. எல்லாம் சரி ஆகிடும்” என்றாள் ஆறுதலாக. .

.
 
Top