"என்ன சொல்ற மிருதி?" என்றான் தீரன் நம்பாமல்.
"உண்மையை தான் சொல்றேன். உங்க பொண்ணு என்கிட்ட தான் இருக்கா. அதனால, நீங்க அவளை கூட்டிட்டு போய்டுங்க? இனி என்னால பார்த்துக்க முடியாது." என்றாள் மிருதி உள்ளுக்குள் உடைந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்.
"இல்ல... நான் நம்பமாட்டேன். குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க? அதனால தான நீ என்னைவிட்டு பிரிஞ்சிருக்க? அப்புறம் எப்படி என் குழந்தை உயிரோட இருக்க முடியும்?" என்றான் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.
'நான் எதுக்காக பிரிஞ்சிருக்கேன்னு கூட உன்னால யோசிக்கமுடியல இல்ல? நீ என்ன பண்ணுவ? உனக்கே தெரியாது அன்னைக்கு என்ன நடந்துதுன்னு?' என்று தனக்குள் புகைந்தவள்.
"இப்போ என்ன சொல்ல வரிங்க? எனக்கு வேற வேலையில்லாம சும்மா உங்களை கூட்பிட்டு பொய் சொல்றேனா?" என்றாள் கோபமாக.
"இல்லல்ல... நான் அப்படி சொல்லலை. குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க. அதான் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை. இப்பவும் சரியா புரியலை. பிளீஸ் கோவிச்சிக்காம கொஞ்சம் என்ன நடந்ததுன்னு சொல்றியா?" என்றான் தீரன் தயக்கமாக.
அவனை பார்க்க மிருதிக்கும் பாவமாக தான் இருந்தது. குழந்தை பிறந்ததை கூட அவனுக்கு சொல்லாத பொழுது அவனுக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தவள்.
மெல்ல மூச்கை இழுத்துவிட்டவள், "உண்மை தான். அன்னைக்கு நடந்ததுல எனக்கு அபார்ஷன் ஆனது உண்மை தான். ஆனா, இது தான் என் வாழ்க்கைன்னு ஏதோ நடை பிணமா வாழ ஆரம்பிச்சப்ப தான் எனக்குள்ள குழந்தை இருக்க மாதிரி ஒரு உணர்ச்சி இருந்துகிட்டே இருந்தது. அதே ஸிம்ப்டம்ஸ் இருந்தது. என்னன்னு ஹாஸ்பிடல் போயி பார்த்தப்புறம் தான் தெரிஞ்சது. எனக்கு..." என்று நிறுத்தியவள் அவனை காணாமல் "நமக்கு இரட்டை குழந்தை உருவாகி அதுல ஒரு குழந்தை தான் இறந்ததுன்னு" என்று பேச முடியாமல் நா குழறி அழத்தொடங்கினாள்.
இவையெல்லாம் தன்னால் தான் நடந்தது என்று இன்னும் மனம் நொறுங்க தொடங்கினான் தீரன்.
ஒரு பிள்ளை மீண்டாலும் தாய்க்கு இரு பிள்ளையும் ஒன்று தானே. இன்னொரு பிள்ளையை பறிகொடுத்த வேதனையில் அழும் மிருதியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரிய்மால் திண்டாடினான் தீரன்.
"மிருதி! ஐ ஆம் சாரி. இதுக்கு நான் தான் காரணம்" என்று அவளின் தோளை ஆறுதலாக தொட, அவனின் ஸ்பரிசதில் உடல் தீயாய் எரிய விழிகளில் அக்னியின் கோபம் கொண்டு முறைத்தாள்.
அவளின் பார்வையே அவனின் கரத்தை சுட்டுவிட, பட்டென உருவிகொண்டான் தீரன். தனக்கான இடம் அவள் இதயத்தில் எந்தளவு என்பதை தவறாக உணர்ந்துகொண்டான்.
"இட்ஸ் ஓகே. இத்தனை வருஷம் இந்த வலியோடு இருந்த எனக்கு இப்பவும் இருக்க தெரியும். உங்க கருணை எனக்கு தேவை இல்லை." என்று பொரிந்தாள்.
"மிருதி. எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. நான் பண்ணது தப்பு தான். அதுக்கு தான் என்னைவிட்டு மூணு வருஷ பிரிஞ்சிருக்க தண்டனை போதாதா? பிளீஸ் என்கிட்ட வந்துடு என் ராணியா உன்னை வச்சு பார்த்துக்குறேன்." என்றான் தீரன்.
அவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் குளிர்ந்தாலும் மதி மயங்காதே என்று மூளை உரைத்துகொண்டே இருந்தது.
"இல்ல எனக்கான புது வாழ்க்கைய நான் தேர்ந்தெடுத்துட்டேன். குழந்தை அப்பாவ கேக்குறா? ஒரு கணவனா நீங்க எனக்கு சரியா இல்ல. ஆனா என் பொண்ணுக்கு அவ அப்பாகூட இருக்கிற உரிமை இருக்கு. அதனால தான் உங்களை வர சொன்னேன்." என்றாள் மிருதி.
"நீ என்ன சொல்ற?" என்றான் தீரன்.
"ஹிம்... முதல் தடவை என் அப்பாக்காக சம்மதிச்சதால என் வாழ்க்கைல நிறைய ஏமாற்றங்கள். சோ, இந்த முறை என் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தரை நான் பார்த்துட்டேன். கூடிய சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் நடக்க போகுது. அவருக்கும் பாப்பாவை ரொம்ப பிடிக்கும்." என்றாள் அவனின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து.
இதயம் சில்லு சில்லாக நொறுங்குவதை போல் உணர்ந்தான் தீரன்.
"ஒஹ். காங்கிராட்ஸ்." என்று சோக புன்னகையை இதழில் படரவிட்டவன்.
"நான் பாப்பாவை பார்க்கணும்" என்றான்.
மிருதியின் திடீர் முக மாற்றங்களை தீரன் கவனித்தான்.
"என்ன ஆச்சு? " என்றான்.
அவன் முகத்தை காணாமல் வேறுபுறம் திரும்பி கொண்டு இதழை அழுந்த கடித்து "ஒன்னுமில்லை" என்றாள்.
'விழபோகிறேன்' என்று நிற்கும் கண்ணீரை வராமல் விழிகளை இறுக மூடினாள்.
"நாளைக்கு இதே டைம் வரமுடியுமா? கூட்டிட்டு வரேன்" என்றாள் மெதுவாக.
"சரி" என்றான் அவளை உற்று பார்த்து.
"சரி. நான் கிளம்பறேன். நாளைக்கு பார்க்கலாம்" என்றாள் மிருதி.
"நான் டிராப் பண்ணவா?" என்றான் நப்பாசையில்.
"நோ தாங்கஸ். வண்டி இருக்கு" என்றவள் வேகமாக வெளியேறினாள்.
வீட்டிற்குள் வேகமாக வந்து சோபாவில் விழுந்தவளிடம் ஓடி வந்தான் தோழன்.
"என்ன ஆச்சு?" என்றான் பதற்றமாக.
"என்னால வலி தாங்க முடியல" என்று அழ ஆரம்பித்தாள் மிருதி.
"உண்மையை தான் சொல்றேன். உங்க பொண்ணு என்கிட்ட தான் இருக்கா. அதனால, நீங்க அவளை கூட்டிட்டு போய்டுங்க? இனி என்னால பார்த்துக்க முடியாது." என்றாள் மிருதி உள்ளுக்குள் உடைந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்.
"இல்ல... நான் நம்பமாட்டேன். குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க? அதனால தான நீ என்னைவிட்டு பிரிஞ்சிருக்க? அப்புறம் எப்படி என் குழந்தை உயிரோட இருக்க முடியும்?" என்றான் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.
'நான் எதுக்காக பிரிஞ்சிருக்கேன்னு கூட உன்னால யோசிக்கமுடியல இல்ல? நீ என்ன பண்ணுவ? உனக்கே தெரியாது அன்னைக்கு என்ன நடந்துதுன்னு?' என்று தனக்குள் புகைந்தவள்.
"இப்போ என்ன சொல்ல வரிங்க? எனக்கு வேற வேலையில்லாம சும்மா உங்களை கூட்பிட்டு பொய் சொல்றேனா?" என்றாள் கோபமாக.
"இல்லல்ல... நான் அப்படி சொல்லலை. குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க. அதான் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை. இப்பவும் சரியா புரியலை. பிளீஸ் கோவிச்சிக்காம கொஞ்சம் என்ன நடந்ததுன்னு சொல்றியா?" என்றான் தீரன் தயக்கமாக.
அவனை பார்க்க மிருதிக்கும் பாவமாக தான் இருந்தது. குழந்தை பிறந்ததை கூட அவனுக்கு சொல்லாத பொழுது அவனுக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தவள்.
மெல்ல மூச்கை இழுத்துவிட்டவள், "உண்மை தான். அன்னைக்கு நடந்ததுல எனக்கு அபார்ஷன் ஆனது உண்மை தான். ஆனா, இது தான் என் வாழ்க்கைன்னு ஏதோ நடை பிணமா வாழ ஆரம்பிச்சப்ப தான் எனக்குள்ள குழந்தை இருக்க மாதிரி ஒரு உணர்ச்சி இருந்துகிட்டே இருந்தது. அதே ஸிம்ப்டம்ஸ் இருந்தது. என்னன்னு ஹாஸ்பிடல் போயி பார்த்தப்புறம் தான் தெரிஞ்சது. எனக்கு..." என்று நிறுத்தியவள் அவனை காணாமல் "நமக்கு இரட்டை குழந்தை உருவாகி அதுல ஒரு குழந்தை தான் இறந்ததுன்னு" என்று பேச முடியாமல் நா குழறி அழத்தொடங்கினாள்.
இவையெல்லாம் தன்னால் தான் நடந்தது என்று இன்னும் மனம் நொறுங்க தொடங்கினான் தீரன்.
ஒரு பிள்ளை மீண்டாலும் தாய்க்கு இரு பிள்ளையும் ஒன்று தானே. இன்னொரு பிள்ளையை பறிகொடுத்த வேதனையில் அழும் மிருதியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரிய்மால் திண்டாடினான் தீரன்.
"மிருதி! ஐ ஆம் சாரி. இதுக்கு நான் தான் காரணம்" என்று அவளின் தோளை ஆறுதலாக தொட, அவனின் ஸ்பரிசதில் உடல் தீயாய் எரிய விழிகளில் அக்னியின் கோபம் கொண்டு முறைத்தாள்.
அவளின் பார்வையே அவனின் கரத்தை சுட்டுவிட, பட்டென உருவிகொண்டான் தீரன். தனக்கான இடம் அவள் இதயத்தில் எந்தளவு என்பதை தவறாக உணர்ந்துகொண்டான்.
"இட்ஸ் ஓகே. இத்தனை வருஷம் இந்த வலியோடு இருந்த எனக்கு இப்பவும் இருக்க தெரியும். உங்க கருணை எனக்கு தேவை இல்லை." என்று பொரிந்தாள்.
"மிருதி. எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. நான் பண்ணது தப்பு தான். அதுக்கு தான் என்னைவிட்டு மூணு வருஷ பிரிஞ்சிருக்க தண்டனை போதாதா? பிளீஸ் என்கிட்ட வந்துடு என் ராணியா உன்னை வச்சு பார்த்துக்குறேன்." என்றான் தீரன்.
அவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் குளிர்ந்தாலும் மதி மயங்காதே என்று மூளை உரைத்துகொண்டே இருந்தது.
"இல்ல எனக்கான புது வாழ்க்கைய நான் தேர்ந்தெடுத்துட்டேன். குழந்தை அப்பாவ கேக்குறா? ஒரு கணவனா நீங்க எனக்கு சரியா இல்ல. ஆனா என் பொண்ணுக்கு அவ அப்பாகூட இருக்கிற உரிமை இருக்கு. அதனால தான் உங்களை வர சொன்னேன்." என்றாள் மிருதி.
"நீ என்ன சொல்ற?" என்றான் தீரன்.
"ஹிம்... முதல் தடவை என் அப்பாக்காக சம்மதிச்சதால என் வாழ்க்கைல நிறைய ஏமாற்றங்கள். சோ, இந்த முறை என் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தரை நான் பார்த்துட்டேன். கூடிய சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் நடக்க போகுது. அவருக்கும் பாப்பாவை ரொம்ப பிடிக்கும்." என்றாள் அவனின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து.
இதயம் சில்லு சில்லாக நொறுங்குவதை போல் உணர்ந்தான் தீரன்.
"ஒஹ். காங்கிராட்ஸ்." என்று சோக புன்னகையை இதழில் படரவிட்டவன்.
"நான் பாப்பாவை பார்க்கணும்" என்றான்.
மிருதியின் திடீர் முக மாற்றங்களை தீரன் கவனித்தான்.
"என்ன ஆச்சு? " என்றான்.
அவன் முகத்தை காணாமல் வேறுபுறம் திரும்பி கொண்டு இதழை அழுந்த கடித்து "ஒன்னுமில்லை" என்றாள்.
'விழபோகிறேன்' என்று நிற்கும் கண்ணீரை வராமல் விழிகளை இறுக மூடினாள்.
"நாளைக்கு இதே டைம் வரமுடியுமா? கூட்டிட்டு வரேன்" என்றாள் மெதுவாக.
"சரி" என்றான் அவளை உற்று பார்த்து.
"சரி. நான் கிளம்பறேன். நாளைக்கு பார்க்கலாம்" என்றாள் மிருதி.
"நான் டிராப் பண்ணவா?" என்றான் நப்பாசையில்.
"நோ தாங்கஸ். வண்டி இருக்கு" என்றவள் வேகமாக வெளியேறினாள்.
வீட்டிற்குள் வேகமாக வந்து சோபாவில் விழுந்தவளிடம் ஓடி வந்தான் தோழன்.
"என்ன ஆச்சு?" என்றான் பதற்றமாக.
"என்னால வலி தாங்க முடியல" என்று அழ ஆரம்பித்தாள் மிருதி.