பகுதி – 11.
கோபால், முத்துப்பாண்டி அவர்களது அடி பொடிகள் என அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களோடு வைஷாலியின் அப்பா பைரவனும் ஊருக்கு கிளம்பிப் போயிருக்க, ஒரு மாதிரி மனநிலையில் அமர்ந்திருந்தாள்.
தகப்பன் தன்னை விட்டு கிளம்பிச் சென்றது கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் அப்பா தன்னுடனே இருக்க முடியாது என அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவளை மிகவும் தொல்லை செய்து கொண்டிருந்தவன் முத்துப்பாண்டி தான்.
அவர்கள் ஊரின் பக்கம் அத்தை மகன், மாமன் மகளை திருமணம் செய்துகொள்ளும் வழக்கமே கிடையாது. அப்படியும் முத்துப்பாண்டி அவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என பிடிவாதமாக இருந்தான்.
கோபாலின் குடும்பத்திலேயே அதிகம் படித்தவன் அவன்தான். கல்லூரிக்கு மூன்று வருடங்கள் சென்றான். ஆனால் டிகிரியை கரத்தில் வாங்கினானா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. எத்தனை பேப்பர் அரியர் வைத்திருக்கிறான் என்றும் தெரியாது.
பிஞ்சிலேயே பழுத்துவிட்ட அவனது குடும்பத்து வழக்கத்துக்கு தப்பாமல், அவனும் பதினைந்து வயதிலேயே அவனது அடாவடியைத் துவங்கி இருந்தான். வைஷாலியை விட பத்து பன்னிரண்டு வயது பெரியவன்.
பெண்களை அவன் பார்க்கும் பார்வையே ஒரு மாதிரி வக்கிரம் இருக்கும். அவன் பார்க்கும் இடங்கள் அதைவிட கீழானவை. அவர்கள் ஊரில், அவளது பள்ளியில் படிக்கும் எத்தனையோ தோழியர் முத்துப்பாண்டியைப் பற்றி வைஷாலியின் காதுபட இதைப்பற்றி பேசி இருக்கிறார்கள்.
அவள் சின்னப் பெண்ணாக இருந்த பொழுது அவளை தூக்கி வைத்துக் கொள்வது, கொஞ்சுவது, முத்தமிடுவது எனச் செய்வான். ஒரு வயது வரைக்கும், அவள் வயதுக்கு வரும் வரைக்குமே அதையெல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை.
அவள் வயதுக்கு வந்த பிறகு, அத்துமீறி அவள் தேகத்தை தொட்டு வருடி, “நல்லா வளர்ந்துட்ட...” என அவன் வக்கிரமாக சொன்ன பொழுது அருவருத்துப் போனாள். அவளை முத்தமிட முயன்ற பொழுது அவள் விலகி ஓடினாள்.
“ஏய்... நான்தானே உன்னை வளர்த்தேன்... என்ன புதுசா ஓடி ஒளியிற?” என அவளை விரட்டினான். அவள் வீட்டில் தன் அறையில் இருக்கையில், முற்றத்தில் தோழியரோடு விளையாடுகையில் பின்னால் இருந்து அவளைக் கட்டிப் பிடித்து தூக்குவான்.
ஆனால் அந்த கட்டிப்பிடிப்பு எல்லாம் ‘பேட் டச்’ விதத்திலேயே இருந்தது. அதுவும் அந்த கரங்களுக்கு அவன் கொடுக்கும் அழுத்தமே, அவன் தெரியாமல் செய்யவில்லை, கை படவில்லை... அவன் வேண்டும் என்றே செய்கிறான் என அவளுக்குச் சொன்னது.
தன் தாயிடம் சொன்னால் வேலைக்கே ஆகாது எனத் தெரிந்து, தன் தகப்பனிடம் சொன்னாள். பைரவன் முத்துப்பாண்டியை நேரடியாக அழைத்து, “இனிமேல் என் மகளை தொட்டுப் பேசாதே” எனச் சொல்லி கண்டித்துவிட்டார்.
அதை முத்துப்பாண்டி தன் அத்தை ரத்னாவிடம் சொல்லி, “உனக்கு ஒரு நியாயம், என் அண்ணன் மகனுக்கு ஒரு நியாயமா? ஏன் நீ உன் அத்தை மகளை கட்டிக்க நினைக்கலை? உரிமைப்பட்டவன்னு அப்படி இப்படின்னு இல்லாமலா இருந்திருப்ப?
“என் அண்ணன் மகனுக்கு என்ன குறைங்கறேன்? படிப்பில்லையா? பணமில்லையா? வசதி இல்லையா? அவன் பார்க்க நல்லாத்தான் இல்லையா? என்ன குறையை கண்டங்கறேன்? அவன் ஆசைப்பட்டா என் பொண்ணை அவனுக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்” ரத்னா ஆடித் தீர்த்துவிட்டாள்.
ஆனாலும் மனைவியின் பேச்சை அவர் கண்டுகொள்ளவே இல்லை. முத்துப்பாண்டி இனிமேல் தன் வீட்டுக்குள் தன் அனுமதியின்றி வரக் கூடாது என கண்டிஷனாகவே சொல்லிவிட்டார். அதற்கெல்லாம் அவன் அடங்குவானா என்ன? வைஷாலியைப் பார்த்தாலே ஒரு மாதிரியாக சிரித்து வைப்பான்.
அவளைப் பார்த்து கண்ணடிப்பான்... ‘பொண்டாட்டி’ என அழைப்பான். அவளை நெருங்கி நிற்பான், அவளை அப்பட்டமாக உரசுவான். அவள் தேகத்தில் தெரியாமல் பட்டது எனச் சொல்லிக் கொண்டு கை கூட வைத்திருக்கிறான்.
இது எல்லாம தெரிந்த பிறகே, மகள் பண்ணிரண்டாவதை முடித்த உடனே பைரவன் தன் மகளை சென்னையில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தார். அவளை லீவுக்கு ஊருக்கு கூட வர வைப்பது இல்லை. அவர்தான் இங்கே வந்து மகளைப் பார்த்துச் செல்வார்.
அவர்களுடனே இருப்பவருக்கு கோபாலின் மகன்களைப்பற்றி தெரியாதா என்ன? முத்துப்பாண்டியோ பைரவன் வேலைக்கு ஆகமாட்டார் எனத் தெரிந்தே தன் தகப்பனை நாடினான். பைரவன் மகளை எப்படியாவது கண் மறைவாக வைத்து காப்பாற்ற நினைக்க, அதற்கு ரத்னாவே விட வேண்டுமே.
ரத்னா மகளிடமே ஒன்று இரண்டு முறை, முத்துப்பாண்டியை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சொல்லிவிட்டார். தாயிடம் அவள் கொஞ்சமும் பிடி கொடுக்கவே இல்லை. ஆனால் இப்பொழுது, முத்துப்பாண்டிதான் மாப்பிள்ளை என ரத்னா முடிவே எடுத்துவிட்டிருந்தார்.
பைரவன் அவளைக் காப்பாற்றுவதாக சொல்கிறார்தான். ஆனால் தன் அப்பாவால் நிச்சயம் அது முடியாது என அவளுக்குத் தெரியும். அதுவும் இப்பொழுது சென்னைக்கு வந்தவன், இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் அவளிடம் வாலாட்ட மறக்கவில்லை.
அவன் ஊருக்குச் செல்லும் வரைக்கும் அறைக்கதவை பூட்டிக் கொண்டு தன் அறையிலேதான் அடைந்து கிடந்தாள். அவளை அப்படியே அவன் விட்டுவிடுவானா என்ன?
இங்கே முதலமைச்சரோடு மீட்டிங் முடிய, கோபால் ஊருக்குச் செல்லலாம் என முடிவெடுத்தார். அப்பொழுது அவளைத் தேடி வந்தான் முத்துப்பாண்டி. கோபால் கிளம்பும் நேரம் உள்ளே இருப்பது எப்படி? எனவே அவள் வெளியே வந்தாள்.
“மருமகளே, அப்போ நாங்க ஊருக்கு கிளம்பறோம். ஒரு வருஷம் கழிச்சுதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டியாம். எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம்தான். இவனுக்கு வயசு போகுதே... ஆனாலும் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்.
“உன்கிட்டே ஆசையா பேசிப் பழகணும்னே என்கூட வந்தான். ஆனால் வந்த இடத்தில் என்னென்னவோ ஆகிப் போச்சு. அந்த கதையெல்லாம் இப்போ எதுக்கு... அவன்கிட்ட ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசி அனுப்பி வை...” அவர் சாதாரணமாகச் சொல்வதுபோல் இருந்தாலும் ஒரு கட்டளை ஒளிந்து இருப்பது அவளுக்குப் புரிந்தது.
முத்துப்பாண்டி என்றாலே அவளுக்கு வேப்பங்காயாக கசக்கையில், அவள் எப்படி அவனிடம் முகம் கொடுத்துப் பேச? அவள் தன் தகப்பனைப் பார்க்க, ‘பேசு...’ என்பதுபோல் அவரும் ஒரு செய்கை செய்தார்.
பைரவனோ, ‘நான் இங்கேயே மகளுடனேயே இருக்கிறேன்’ எனச் சொல்ல, கோபால் அதற்கு அனுமதிக்கவே இல்லை.
“மாப்ள, சின்னஞ்சிறுசுக கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறது வழக்கம் தானே. ஒரு ரெண்டு நிமிஷம் பேசிக்கட்டும், நாம வெளியே இருப்போம் வாங்க...” கோபால் பேச, தன் கண் முன்பே தன் மகளை இப்படி ஒரு நிலையில் நிறுத்தி வைப்பது அந்த தகப்பனுக்கு கொடுமையாக இருந்தது.
கோபால் அன்று வீட்டுக்கு வந்த பொழுதே, “என் மகனோட ஆசைக்கு குறுக்க யார் வந்தாலும் அதையெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். என் பசங்க சந்தோஷம்தான் எனக்கு முக்கியம், நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்” பைரவனிடம் மறைமுகமாக மிரட்டி இருந்தார்.
பைரவன் வேறு வழியின்றி கோபாலோடு செல்ல, முத்துப்பாண்டி அவளை நெருங்கினான். அவளை நெருங்கி நின்றவன், ஒரு மாதிரி நாக்கை சுழற்றினான். அந்த செய்கையே அவளுக்கு அருவருப்பாக இருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“பொண்டாட்டி... சும்மா கும்முன்னு ஆயிட்ட. இது வரைக்கும் எத்தனையோ பொண்ணுங்களை தொட்டு அனுபவிச்சாலும், உன்னை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கேன் தெரியுமா?” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்டு வைக்க, அவனது பேச்சு ஒவ்வாமையைக் கொடுத்தது.
அதுவும் தன்னிடமே பல பெண்களோடு இருந்தான் என்பதைச் சொல்ல, வாந்தி வரும்போல் இருந்தது. அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருந்தாள். அந்த இடத்தை விட்டு அகல அவளுக்கு ஒரு நொடி கூட ஆகி இருக்காது.
ஆனால் அவன் தன்னை அப்படியே விட்டுவிடுவான் என அவள் நம்பவில்லை. தான் அறைக்குள் சென்றால், பின்னாலேயே வந்து அத்துமீறி தன்னைத் தொட்டால், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை விட, தன் தகப்பன் இருக்கையிலேயே தனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் அவர் உடைந்துபோவார் எனப் புரிய அப்படியே நின்றாள்.
“சரி, நீ எதுக்குன்னு கேட்க மாட்ட... நானே சொல்றேன். உன் கழுத்தில் தாலி கட்டிட்டு, ஃப்ரஷ்ஷா போடணும். அதுவும் அணு அணுவா ரசிச்சு... ஷ்ஷ்... இப்போவே போட்டுட்டா அப்போ இன்ட்ரஸ்ட் போய்டும் அதுக்குத்தான் விட்டு வச்சிருக்கேன்.
“அதோட... உன்னை இப்படி பார்த்து பார்த்து வெறி ஆவறது ஒரு மாதிரி கிளுகிளுப்பா நல்லா இருக்கு. சும்மா தளதளன்னு இருக்க... எல்லாமே நான் எதிர்பார்த்ததை விட அதிகமாத்தான் வச்சிருக்க” என்றவன், அவள் எதிர்பாராத நேரம் அதைச் செய்திருந்தான்.
“ஸ்... ம்மா... பொறுக்கி நாயே...” அவள் தன்னை மீறி வலியில் அலறி இருந்தாள்.
“நாய் தான்... இந்த நாய் எங்கே எல்லாம் *** போகுதுன்னு நீயும் தெரிஞ்சுக்கத்தான் போற. வரட்டா பொண்டாட்டி...” என்றவன் கண்ணடித்து, நாக்கை சுழற்றியவாறே சென்றான். ஒரு பக்கா பொறுக்கி என்பதை அவனது செய்கை அப்பட்டமாகச் சொன்னது.
தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டவள், அவன் தொட்ட தன் தேகத்தை வெறுத்தாள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை?’ எண்ணியவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அவன் செய்த செய்கையால் தேகம் நொந்ததை விட, மனம் அதிகம் நொந்தது. மனம் வலித்தது. எதுவும் செய்ய இயலாத கையறு நிலை நெஞ்சை அறுத்தது.
வெளியில் இருந்த பைரவனோ மீண்டும் உள்ளே வந்து தன் மகளைப் பார்க்காமலேயே ஊருக்குச் சென்றுவிட்டார். செல்லும் முன்னர் அருணாவிடம் தன் மகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார்.
தன் மகள், அந்த ‘முத்துப்பாண்டி தன்னை தவறாகப் பார்க்கிறான், மேலே கை வைக்கிறான்’ எனச் சொல்லியும் தன் மகளை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாத அந்த நிலையை அறவே வெறுத்தார்.
“அவன் நல்லவன் இல்லை... நம்ம மகளுக்கு அவன் வேண்டாம்” என மனைவியிடம் போராடிப் பார்த்துவிட்டார்.
“இங்கே நல்லவங்க எல்லாம் பொண்டாட்டியை தலைக்கு மேலே தூக்கி வச்சு ஒன்றும் பார்த்துக்கலை. எவளையோ மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டுத்தான் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துறாங்க.
“இல்லையா பொண்டாட்டியைத் தொடாமல் தள்ளி வச்சிருக்காங்க. அதுக்கு என் பொண்ணு மேலே அவ்வளவு ஆசை வச்சிருக்கற என் மருமகன் எவ்வளவோ பரவாயில்லை. வயசுப் பசங்க சில நேரம் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறது சகஜம் தான்.
“பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா, அவ முந்தானையை பிடிச்சுகிட்டு சுத்தி வருவாங்க. நம்ம பொண்ணு கொஞ்சம் திறமைசாலியா இருந்துட்டா அவனை முந்தானைக்குள் சுருட்டி வச்சுக்கலாம். இதெல்லாம் ஒரு குறைன்னு பேச வந்துட்டீங்க” என்றவள் ஆடித் தீர்த்துவிட்டாள்.
கோபால், முத்துப்பாண்டி அவர்களது அடி பொடிகள் என அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களோடு வைஷாலியின் அப்பா பைரவனும் ஊருக்கு கிளம்பிப் போயிருக்க, ஒரு மாதிரி மனநிலையில் அமர்ந்திருந்தாள்.
தகப்பன் தன்னை விட்டு கிளம்பிச் சென்றது கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் அப்பா தன்னுடனே இருக்க முடியாது என அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவளை மிகவும் தொல்லை செய்து கொண்டிருந்தவன் முத்துப்பாண்டி தான்.
அவர்கள் ஊரின் பக்கம் அத்தை மகன், மாமன் மகளை திருமணம் செய்துகொள்ளும் வழக்கமே கிடையாது. அப்படியும் முத்துப்பாண்டி அவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என பிடிவாதமாக இருந்தான்.
கோபாலின் குடும்பத்திலேயே அதிகம் படித்தவன் அவன்தான். கல்லூரிக்கு மூன்று வருடங்கள் சென்றான். ஆனால் டிகிரியை கரத்தில் வாங்கினானா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. எத்தனை பேப்பர் அரியர் வைத்திருக்கிறான் என்றும் தெரியாது.
பிஞ்சிலேயே பழுத்துவிட்ட அவனது குடும்பத்து வழக்கத்துக்கு தப்பாமல், அவனும் பதினைந்து வயதிலேயே அவனது அடாவடியைத் துவங்கி இருந்தான். வைஷாலியை விட பத்து பன்னிரண்டு வயது பெரியவன்.
பெண்களை அவன் பார்க்கும் பார்வையே ஒரு மாதிரி வக்கிரம் இருக்கும். அவன் பார்க்கும் இடங்கள் அதைவிட கீழானவை. அவர்கள் ஊரில், அவளது பள்ளியில் படிக்கும் எத்தனையோ தோழியர் முத்துப்பாண்டியைப் பற்றி வைஷாலியின் காதுபட இதைப்பற்றி பேசி இருக்கிறார்கள்.
அவள் சின்னப் பெண்ணாக இருந்த பொழுது அவளை தூக்கி வைத்துக் கொள்வது, கொஞ்சுவது, முத்தமிடுவது எனச் செய்வான். ஒரு வயது வரைக்கும், அவள் வயதுக்கு வரும் வரைக்குமே அதையெல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை.
அவள் வயதுக்கு வந்த பிறகு, அத்துமீறி அவள் தேகத்தை தொட்டு வருடி, “நல்லா வளர்ந்துட்ட...” என அவன் வக்கிரமாக சொன்ன பொழுது அருவருத்துப் போனாள். அவளை முத்தமிட முயன்ற பொழுது அவள் விலகி ஓடினாள்.
“ஏய்... நான்தானே உன்னை வளர்த்தேன்... என்ன புதுசா ஓடி ஒளியிற?” என அவளை விரட்டினான். அவள் வீட்டில் தன் அறையில் இருக்கையில், முற்றத்தில் தோழியரோடு விளையாடுகையில் பின்னால் இருந்து அவளைக் கட்டிப் பிடித்து தூக்குவான்.
ஆனால் அந்த கட்டிப்பிடிப்பு எல்லாம் ‘பேட் டச்’ விதத்திலேயே இருந்தது. அதுவும் அந்த கரங்களுக்கு அவன் கொடுக்கும் அழுத்தமே, அவன் தெரியாமல் செய்யவில்லை, கை படவில்லை... அவன் வேண்டும் என்றே செய்கிறான் என அவளுக்குச் சொன்னது.
தன் தாயிடம் சொன்னால் வேலைக்கே ஆகாது எனத் தெரிந்து, தன் தகப்பனிடம் சொன்னாள். பைரவன் முத்துப்பாண்டியை நேரடியாக அழைத்து, “இனிமேல் என் மகளை தொட்டுப் பேசாதே” எனச் சொல்லி கண்டித்துவிட்டார்.
அதை முத்துப்பாண்டி தன் அத்தை ரத்னாவிடம் சொல்லி, “உனக்கு ஒரு நியாயம், என் அண்ணன் மகனுக்கு ஒரு நியாயமா? ஏன் நீ உன் அத்தை மகளை கட்டிக்க நினைக்கலை? உரிமைப்பட்டவன்னு அப்படி இப்படின்னு இல்லாமலா இருந்திருப்ப?
“என் அண்ணன் மகனுக்கு என்ன குறைங்கறேன்? படிப்பில்லையா? பணமில்லையா? வசதி இல்லையா? அவன் பார்க்க நல்லாத்தான் இல்லையா? என்ன குறையை கண்டங்கறேன்? அவன் ஆசைப்பட்டா என் பொண்ணை அவனுக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்” ரத்னா ஆடித் தீர்த்துவிட்டாள்.
ஆனாலும் மனைவியின் பேச்சை அவர் கண்டுகொள்ளவே இல்லை. முத்துப்பாண்டி இனிமேல் தன் வீட்டுக்குள் தன் அனுமதியின்றி வரக் கூடாது என கண்டிஷனாகவே சொல்லிவிட்டார். அதற்கெல்லாம் அவன் அடங்குவானா என்ன? வைஷாலியைப் பார்த்தாலே ஒரு மாதிரியாக சிரித்து வைப்பான்.
அவளைப் பார்த்து கண்ணடிப்பான்... ‘பொண்டாட்டி’ என அழைப்பான். அவளை நெருங்கி நிற்பான், அவளை அப்பட்டமாக உரசுவான். அவள் தேகத்தில் தெரியாமல் பட்டது எனச் சொல்லிக் கொண்டு கை கூட வைத்திருக்கிறான்.
இது எல்லாம தெரிந்த பிறகே, மகள் பண்ணிரண்டாவதை முடித்த உடனே பைரவன் தன் மகளை சென்னையில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தார். அவளை லீவுக்கு ஊருக்கு கூட வர வைப்பது இல்லை. அவர்தான் இங்கே வந்து மகளைப் பார்த்துச் செல்வார்.
அவர்களுடனே இருப்பவருக்கு கோபாலின் மகன்களைப்பற்றி தெரியாதா என்ன? முத்துப்பாண்டியோ பைரவன் வேலைக்கு ஆகமாட்டார் எனத் தெரிந்தே தன் தகப்பனை நாடினான். பைரவன் மகளை எப்படியாவது கண் மறைவாக வைத்து காப்பாற்ற நினைக்க, அதற்கு ரத்னாவே விட வேண்டுமே.
ரத்னா மகளிடமே ஒன்று இரண்டு முறை, முத்துப்பாண்டியை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சொல்லிவிட்டார். தாயிடம் அவள் கொஞ்சமும் பிடி கொடுக்கவே இல்லை. ஆனால் இப்பொழுது, முத்துப்பாண்டிதான் மாப்பிள்ளை என ரத்னா முடிவே எடுத்துவிட்டிருந்தார்.
பைரவன் அவளைக் காப்பாற்றுவதாக சொல்கிறார்தான். ஆனால் தன் அப்பாவால் நிச்சயம் அது முடியாது என அவளுக்குத் தெரியும். அதுவும் இப்பொழுது சென்னைக்கு வந்தவன், இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் அவளிடம் வாலாட்ட மறக்கவில்லை.
அவன் ஊருக்குச் செல்லும் வரைக்கும் அறைக்கதவை பூட்டிக் கொண்டு தன் அறையிலேதான் அடைந்து கிடந்தாள். அவளை அப்படியே அவன் விட்டுவிடுவானா என்ன?
இங்கே முதலமைச்சரோடு மீட்டிங் முடிய, கோபால் ஊருக்குச் செல்லலாம் என முடிவெடுத்தார். அப்பொழுது அவளைத் தேடி வந்தான் முத்துப்பாண்டி. கோபால் கிளம்பும் நேரம் உள்ளே இருப்பது எப்படி? எனவே அவள் வெளியே வந்தாள்.
“மருமகளே, அப்போ நாங்க ஊருக்கு கிளம்பறோம். ஒரு வருஷம் கழிச்சுதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டியாம். எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம்தான். இவனுக்கு வயசு போகுதே... ஆனாலும் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்.
“உன்கிட்டே ஆசையா பேசிப் பழகணும்னே என்கூட வந்தான். ஆனால் வந்த இடத்தில் என்னென்னவோ ஆகிப் போச்சு. அந்த கதையெல்லாம் இப்போ எதுக்கு... அவன்கிட்ட ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசி அனுப்பி வை...” அவர் சாதாரணமாகச் சொல்வதுபோல் இருந்தாலும் ஒரு கட்டளை ஒளிந்து இருப்பது அவளுக்குப் புரிந்தது.
முத்துப்பாண்டி என்றாலே அவளுக்கு வேப்பங்காயாக கசக்கையில், அவள் எப்படி அவனிடம் முகம் கொடுத்துப் பேச? அவள் தன் தகப்பனைப் பார்க்க, ‘பேசு...’ என்பதுபோல் அவரும் ஒரு செய்கை செய்தார்.
பைரவனோ, ‘நான் இங்கேயே மகளுடனேயே இருக்கிறேன்’ எனச் சொல்ல, கோபால் அதற்கு அனுமதிக்கவே இல்லை.
“மாப்ள, சின்னஞ்சிறுசுக கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறது வழக்கம் தானே. ஒரு ரெண்டு நிமிஷம் பேசிக்கட்டும், நாம வெளியே இருப்போம் வாங்க...” கோபால் பேச, தன் கண் முன்பே தன் மகளை இப்படி ஒரு நிலையில் நிறுத்தி வைப்பது அந்த தகப்பனுக்கு கொடுமையாக இருந்தது.
கோபால் அன்று வீட்டுக்கு வந்த பொழுதே, “என் மகனோட ஆசைக்கு குறுக்க யார் வந்தாலும் அதையெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். என் பசங்க சந்தோஷம்தான் எனக்கு முக்கியம், நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்” பைரவனிடம் மறைமுகமாக மிரட்டி இருந்தார்.
பைரவன் வேறு வழியின்றி கோபாலோடு செல்ல, முத்துப்பாண்டி அவளை நெருங்கினான். அவளை நெருங்கி நின்றவன், ஒரு மாதிரி நாக்கை சுழற்றினான். அந்த செய்கையே அவளுக்கு அருவருப்பாக இருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“பொண்டாட்டி... சும்மா கும்முன்னு ஆயிட்ட. இது வரைக்கும் எத்தனையோ பொண்ணுங்களை தொட்டு அனுபவிச்சாலும், உன்னை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கேன் தெரியுமா?” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்டு வைக்க, அவனது பேச்சு ஒவ்வாமையைக் கொடுத்தது.
அதுவும் தன்னிடமே பல பெண்களோடு இருந்தான் என்பதைச் சொல்ல, வாந்தி வரும்போல் இருந்தது. அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருந்தாள். அந்த இடத்தை விட்டு அகல அவளுக்கு ஒரு நொடி கூட ஆகி இருக்காது.
ஆனால் அவன் தன்னை அப்படியே விட்டுவிடுவான் என அவள் நம்பவில்லை. தான் அறைக்குள் சென்றால், பின்னாலேயே வந்து அத்துமீறி தன்னைத் தொட்டால், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை விட, தன் தகப்பன் இருக்கையிலேயே தனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் அவர் உடைந்துபோவார் எனப் புரிய அப்படியே நின்றாள்.
“சரி, நீ எதுக்குன்னு கேட்க மாட்ட... நானே சொல்றேன். உன் கழுத்தில் தாலி கட்டிட்டு, ஃப்ரஷ்ஷா போடணும். அதுவும் அணு அணுவா ரசிச்சு... ஷ்ஷ்... இப்போவே போட்டுட்டா அப்போ இன்ட்ரஸ்ட் போய்டும் அதுக்குத்தான் விட்டு வச்சிருக்கேன்.
“அதோட... உன்னை இப்படி பார்த்து பார்த்து வெறி ஆவறது ஒரு மாதிரி கிளுகிளுப்பா நல்லா இருக்கு. சும்மா தளதளன்னு இருக்க... எல்லாமே நான் எதிர்பார்த்ததை விட அதிகமாத்தான் வச்சிருக்க” என்றவன், அவள் எதிர்பாராத நேரம் அதைச் செய்திருந்தான்.
“ஸ்... ம்மா... பொறுக்கி நாயே...” அவள் தன்னை மீறி வலியில் அலறி இருந்தாள்.
“நாய் தான்... இந்த நாய் எங்கே எல்லாம் *** போகுதுன்னு நீயும் தெரிஞ்சுக்கத்தான் போற. வரட்டா பொண்டாட்டி...” என்றவன் கண்ணடித்து, நாக்கை சுழற்றியவாறே சென்றான். ஒரு பக்கா பொறுக்கி என்பதை அவனது செய்கை அப்பட்டமாகச் சொன்னது.
தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டவள், அவன் தொட்ட தன் தேகத்தை வெறுத்தாள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை?’ எண்ணியவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அவன் செய்த செய்கையால் தேகம் நொந்ததை விட, மனம் அதிகம் நொந்தது. மனம் வலித்தது. எதுவும் செய்ய இயலாத கையறு நிலை நெஞ்சை அறுத்தது.
வெளியில் இருந்த பைரவனோ மீண்டும் உள்ளே வந்து தன் மகளைப் பார்க்காமலேயே ஊருக்குச் சென்றுவிட்டார். செல்லும் முன்னர் அருணாவிடம் தன் மகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார்.
தன் மகள், அந்த ‘முத்துப்பாண்டி தன்னை தவறாகப் பார்க்கிறான், மேலே கை வைக்கிறான்’ எனச் சொல்லியும் தன் மகளை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாத அந்த நிலையை அறவே வெறுத்தார்.
“அவன் நல்லவன் இல்லை... நம்ம மகளுக்கு அவன் வேண்டாம்” என மனைவியிடம் போராடிப் பார்த்துவிட்டார்.
“இங்கே நல்லவங்க எல்லாம் பொண்டாட்டியை தலைக்கு மேலே தூக்கி வச்சு ஒன்றும் பார்த்துக்கலை. எவளையோ மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டுத்தான் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துறாங்க.
“இல்லையா பொண்டாட்டியைத் தொடாமல் தள்ளி வச்சிருக்காங்க. அதுக்கு என் பொண்ணு மேலே அவ்வளவு ஆசை வச்சிருக்கற என் மருமகன் எவ்வளவோ பரவாயில்லை. வயசுப் பசங்க சில நேரம் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறது சகஜம் தான்.
“பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா, அவ முந்தானையை பிடிச்சுகிட்டு சுத்தி வருவாங்க. நம்ம பொண்ணு கொஞ்சம் திறமைசாலியா இருந்துட்டா அவனை முந்தானைக்குள் சுருட்டி வச்சுக்கலாம். இதெல்லாம் ஒரு குறைன்னு பேச வந்துட்டீங்க” என்றவள் ஆடித் தீர்த்துவிட்டாள்.