பகுதி – 2.
வைஷாலி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் அவளது அலைபேசி இசைத்து அவளைக் கலைத்தது. அழைப்பது யாராக இருக்கும் என அவளுக்குப் புரிந்தாலும் அந்த அழைப்பை ஏற்பதா? வேண்டாமா? என உள்ளுக்குள் ஒருவித மனப் போராட்டமே எழுந்தது.
அழைப்பு நின்று, மீண்டும் அழைப்பு வர வேறு வழியின்றி அழைப்பை ஏற்றாள். “சொல்லுங்கம்மா...” சற்று சோர்வாகவே குரல் கொடுத்தாள்.
“நீதான் சொல்லணும், எப்போ கிளம்பி ஊருக்கு வர்ற?” சற்று கடுமையாகவே அவளிடம் கேட்டார்.
“ம்மா... படிச்சு முடிச்சதும் நான் என்ன சொன்னேன்? ஒரு ரெண்டு வருஷம் என்னை இப்படியே விடுன்னு சொன்னேனா இல்லையா? அப்படியும் ஃபோனைப் போட்டு இப்படி எதுக்கு என் நிம்மதியைக் குலைக்கறீங்க?” சற்று கோபமாகவே கேட்டான்.
“என்னடி வாய் ரொம்ப நீளுது? நான் உன் நிம்மதியைக் குலைக்கிறேனா? எல்லாம் உன் அப்பன் கொடுக்கற தைரியம்தான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது. என் எதிர்ல இருந்து இப்படி பேசுவியா? நீ அங்கே இருந்து வேலை தேடிக் கிழிச்சது எல்லாம் போதும். ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு கிளம்பி வா” அவளை விட அதிகமாக கத்தினார்.
“அம்மா இன்னும் கொஞ்ச நாள்ம்மா...” கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
“உனக்கு நான் மாப்பிள்ளை பார்த்தாச்சு. லேட் பண்ணாமல் வந்து சேருற. இல்ல... நான் என்ன செய்வேன்னே தெரியாது” குரல் உச்சமாக வந்தது.
‘என்னது மாப்பிள்ளையா?’ அவள் அதிர்ந்து போனாள். அந்த அதிர்விலோ என்னவோ அலைபேசியை கட் செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.
“என்ன ரத்னா? யார்கிட்டே இவ்வளவு கோபமா பேசிகிட்டு இருக்க? வைஷாலி கிட்டேயா? ஃபோனை என்கிட்டே கொடு” என்ற பைரவன் அலைபேசியை மனைவியிடமிருந்து கைப்பற்றுவது புரிந்தது.
“நீங்க இன்னும் வெளியே போகலையா?” ரத்னா கத்த, அதையெல்லாம் பைரவன் கண்டுகொள்ளவே இல்லை.
“எனக்கு எப்போ வெளியே போகணும், எப்போ வீட்ல இருக்கணும்னு தெரியும். நீ சமையலைப் பார்க்கப் போகாமல் இங்கே என்ன பண்ற? அதுவும் காலங்கார்த்தாலே பொண்ணுக்கு ஃபோனைப் போட்டு இப்படி பேயாட்டம் போடலைன்னா தான் என்ன?” பைரவன் கோபமாக பேச, அதைக் கேட்ட வைஷாலிக்கு அடுத்து நடக்கப் போவது இன்னது எனப் புரிந்து போனது.
அப்படியும் அலைபேசியை வைத்துவிடலாம் என்றால், ஒரு வேளை அம்மா சொன்ன ‘மாப்பிள்ளை’ யாராக இருக்கும் என அவர்கள் பேச்சில் வெளிப்படுமோ என்ற எண்ணத்தில் அமைதி காத்தாள்.
அவள் பயந்தது போலவே, “என்ன நான் பேயாட்டம் போடறேனா? என் அப்பன் வீட்டு சொத்தில் உட்கார்ந்து சாப்ட்டுட்டு என்னையவே குத்தம் சொல்லுவீங்களா? உங்களுக்கு எவ்வளவு திணக்கம் இருக்கணும்? இருங்க நான் என் அண்ணனுக்கு கூப்பிடறேன்” ரத்னா கூச்சலிட வைஷாலிக்கு கண்கள் கலங்கிப் போனது.
சிஏ படித்து, தன் அரசியல்வாதி மாமாவின் அனைத்து சொத்துக்கள், நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை பார்க்கும் தன் தகப்பனை தாய் பேசுவது மிகவும் அதிகம் எனத் தோன்றியது.
அதோடு அவளது அப்பா ஒன்றும் வேறு வழியின்றி அவரது மாமாவோடு இருக்கவில்லையே. அவர்கள்தானே இவரை வேறு எங்கும் செல்ல விடாமல், பல மடங்கு பணம் கொடுத்து பிடித்து வைத்து இருக்கிறார்கள். அதை தாய் இப்படி திரித்துப் பேச, கடுப்பாக வந்தது.
அவளுக்கும் கணக்கில் அதிக ஆர்வம் இருந்த பொழுதும், தந்தையைப் போல சிஏ படிக்காமல் போனதும் அதனால்தானே. அவர்களுக்கு இன்னொரு அடிமையாக தானும் சிக்கிவிடக் கூடாது என்பதால் தானே கெமிக்கல் இஞ்சினியரிங் படித்தாள்.
அதைவிட எந்த துறையை தேர்ந்தெடுத்தால், தன் மாமனின் நிழலில் இருந்து வெளியே செல்ல முடியும் என யோசித்தே செய்தாள். இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கும் எத்தனையோ தொழில்களில் ஒன்றில் அவளைப் போட்டு புதைத்து இருப்பார்களே.
“எங்கே கூப்பிடு பார்ப்போம்... அவனுக இதுவரைக்கும் என்னை என்ன பண்ணிட்டானுக? இனிமேல் என்னை என்ன பண்ணிடப் போறானுகன்னு நானும் பார்க்கறேன்” பைரவன் பேச, ரத்னாவுக்கு உடுக்கை அடித்த நிலைதான்.
“அவங்க ஒன்னும் உங்களுக்கு பயந்துகிட்டு பேசாமல் இருக்கலை. நான் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்னு தான் பேசாமல் இருக்காங்க. நான் புருஷன், பிள்ளைன்னு வாழணும்னு தான் உங்களை விட்டு வச்சிருக்காங்க. இல்லன்னா நீங்க எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா?” ரத்னா வார்த்தைகளில் விஷம் தோய்த்தாள்.
“நீ நிம்மதியா இருக்கணும்னு தான் என் உயிரை வாங்கறாங்களே, எனக்கு அது தெரியாதா? என் வழியைப் பார்த்துக்க எனக்குத் தெரியாமல் இல்லை” பொதுவாகவே ரத்னா பேசத் துவங்கினால் அமைதியாகப் போய்விடும் அவர், இன்று பேசினார்.
“நல்லா பார்ப்பீங்களே... என்ன பழைய காதலி கூட போய்டலாம்னு நினைப்போ? அவ புருஷனும் போய் சேர்ந்துட்டானே. இனிமேல் என்ன...? பழைய காதலியை சேர்த்துக்கலாம்னு இருக்கோ? விடமாட்டேன்” அத்தனை ஆங்காரமாக பேசினாள்.
“அவளை இப்படி அபாண்டமா பேசாதடி” திருமணம் முடிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தன் அத்தை மகள் இவள் வாயில் விழுந்து எழுகிறாளே என்று இருந்தது.
“ஓஹோன்னானா... காதலியைப் பேசின உடனே பொத்துகிட்டு வருதோ?” அவிழ்ந்த கொண்டையை அள்ளி முடிந்துகொண்டு கத்தினார் ரத்னா.
“அவ பிள்ளைகளுக்கே கல்யாணமாகி பேரன் பேத்தி எல்லாம் எடுத்துட்டா. ஆனா அவ இன்னும் உன் வாயில் விழுந்து அரை பட்டுகிட்டு இருக்கா பார்” பைரவனுக்கு மனதை என்னவோ செய்தது.
“அவ சாகற வரைக்கும் பேசுவேன்... என்னை நிம்மதியா வாழ விட்டாளா அவ? நீங்க என்ன கேட்கறது? நான் அவளைப் பேசினா உமக்கு வலிக்குதோ?” ரத்னா குத்திப் பேச, பைரவனுக்கு மனதே விட்டுப் போனது.
“என்னவோ உனக்கு மறைச்சு உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டது மாதிரி பேசற? இப்படியெல்லாம் அபாண்டமா பேசாத, நாக்கு அழுகிப் போய்டும்” தன் வாழ்க்கையில் இந்த ரத்னா விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் அவருக்கு கண்முன் விரிந்தது.
“என்னய்யா சொன்ன? என் நாக்கு அழுகிப் போய்டுமா? அவதான் அழுகிப் போய்டுவா. பீத்த சிறுக்கி, என்ன மாய்மாலம் பண்ணாளோ, இப்ப கூட அவளுக்கு பரிஞ்சுகிட்டு வர்றியே. உன்னை நம்பி என் பொண்ணை வீட்ல உக்காத்தி வைக்கச் சொல்றியா? நடக்காதுய்யா... அதுக்குத்தான் அவளை வீட்டுக்கு வரச் சொல்றேன்” மனைவி பேச, அப்பொழுதுதான் மகள் தொடர்பில் இருப்பதே அவர் நினைவுக்கு வந்தது.
அதே நேரம், தாய் தான் பயந்த விஷயத்தை தொட்டுவிட்டது புரிய, வைஷாலி தன் செவிகளை தீட்டிக் கொண்டாள். கூடவே தாய் பேசிய அந்த பேச்சுகள் அவளையும் என்னவோ செய்தது.
கையில் இருந்த அலைபேசியை அவர் பார்க்க, மகள் இன்னும் இணைப்பில் இருப்பது தெரிந்தது. அதைப் பார்த்த உடனே மனம் ஒரு மாதிரி கசங்கிப் போனது.
இத்தனை வருடங்களில், மனைவி வாயைத் திறந்து வேறு மாதிரி பேசத் துவங்கினாலே அவர் பேச்சை நிறுத்தி விடுவார். இரு கை தட்டினால் தானே ஓசை வரும்? ஒரு கை மட்டும் வீசினால் ஓசை வருமா என்ன?
இன்று மகள் எதிரில் இல்லாமல் போகவே, அவரும் மனம் தாளாமல் பேசிவிட்டார். ஆனால் இப்படியான பேச்சுக்கள் மகளின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என அவருக்குத் தெரியாதா என்ன?
அலைபேசியை எடுத்துக்கொண்டு வேகமாக மாடிக்குச் சென்றுவிட்டார். “பாப்பா...” அவர் மெதுவாக குரல் கொடுத்தார்.
“அப்பா... எப்படிப்பா இருக்கீங்க?” மகள் கேட்க, தான் அவளிடம் கேட்க வேண்டிய கேள்வியை மகள் தன்னிடம் கேட்க, அந்த மனிதருக்கு கண்கள் பனித்தது.
“எனக்கென்னம்மா? நான் நல்லா இருக்கேன். நீ எப்படிம்மா இருக்க? நீ வேலைக்குப் போகணும்னு அவசியமே இல்லை, கொஞ்ச நாள் அங்கேயே நிம்மதியா இருந்துட்டு வாம்மா” அவர் சொல்ல, அவளுக்கு அழுகை முட்டியது.
‘அப்பா எத்தனை பாசமான மனிதர், அவருக்குப் போய் தன் தாயைப் போன்ற பெண் ஒருத்தி மனைவியாக வாய்த்திருக்க வேண்டாம்’ என அவளுக்கு விவரம் வந்த பொழுது நினைத்த அதையே இப்பொழுதும் நினைத்துக் கொண்டாள்.
அவளுக்குத் தெரியும், தன் தகப்பன் இத்தனை அவமானங்களையும், ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு ரத்னாவோடு வாழ்வதே அவளுக்காகத்தான். அவளுக்கு பன்னிரண்டு வயது இருக்கும், அப்பொழுதும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை.
ஏதோ ஒரு பெண்ணோடு தன் அப்பாவையும் தொடர்பு படுத்தி தாய் பேசுகிறாள் என அவளுக்கு புரிந்த நாள் அது. இதற்கு முன்னரும் தகப்பனை தாய் கரித்துக் கொட்டிக் கொண்டேதான் இருப்பாள். அது எதனால் என அவளுக்குப் புரிந்ததே இல்லை.
ஆனால் அன்று ரத்னா பேசியது அப்பட்டமாக அவளுக்குப் புரிய, மகளின் முன்னால் மனைவி இப்படி பேசவே அவமானமும், கோபமும் போட்டி போட, பைரவன் மனைவியை எதிர்த்து பேசிவிட்டார்.
இத்தனை வருடங்களாக தன் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசி இராத கணவன் இன்று பேச, அவ்வளவுதான், ரத்னாவுக்கு எங்கே இருந்துதான் அத்தனை ஆத்திரமும் ஆங்காரமும் வந்ததோ, அவரை கை நீட்டி அடித்துவிட்டாள்.
மனைவி இதுவரை வாய்க்கு வந்தபடி பேசுவதை தாங்கிக் கொண்டவருக்கு இந்த அவமானம், அதுவும் தான் பெற்ற மகளின் முன்பாகவே நடந்துவிட அவரால் தாங்க முடியவில்லை. அடுத்த நிமிடம், தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டவர் வீட்டை விட்டு வெளியேறப் போனார்.
அதைப் பார்த்த ரத்னாவோ, “நீ எங்க போனாலும் இங்கேதான் வந்து நின்னாகணும். அது உனக்கும் தெரியும்னு நினைக்கறேன்” அவள் பேச, நின்று நிதானமாக அவளைப் பார்த்தார்.
“நான் எங்கே இருக்கேன்னு தெரிஞ்சா தானே மறுபடியும் என்னை இங்கே வர வைப்ப? அந்த வாய்ப்பையே நான் உங்களுக்கு கொடுக்கப் போறதில்லை” அவர் சொல்ல, அங்கே கிடந்த சோபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
அழுகையோடு தகப்பன் வெளியே செல்லப் போகிறான் என்பதைக் கண்ட வைஷாலி ஓடிபோய் தகப்பனைக் கட்டிக் கொண்டாள். தகப்பனின் கூனி குறுகிய தோற்றமும், அவமானம் சுமந்த முகமும் அவளை என்னவோ செய்தது. தாய் அடித்த அவரது கன்னத்தை தன் கரத்தால் வருடிக் கொடுத்தாள்.
அது அவரை இன்னுமே உடைத்துப் போட, அதில் ஒரு மிகப்பெரும் ஆறுதலையும் உணர்ந்தார்.
“என்னையும் உங்களோட அழைச்சுட்டு போய்டுங்கப்பா. என்னை இங்கே தனியா விட்டுப் போயிடாதீங்கப்பா. எனக்கு பயமா இருக்குப்பா. நீங்களும் இல்லன்னா நான் செத்துப் போய்டுவேன்ப்பா” வைஷாலி அவரைக் கட்டிக்கொண்டு அழ அப்படியே நின்றுவிட்டார்.
தன் மகள் செத்துப் போவேன் எனச் சொல்வதா? அவர் இத்தனை காலம் ரத்னாவோடு வாழ்ந்ததே தன் மகளுக்காகத்தானே. அப்படி இருக்கையில் மகள் செத்துப் போகிறேன் எனச் சொன்னால் அவர் நிலை என்னவாகும்?
வைஷாலி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் அவளது அலைபேசி இசைத்து அவளைக் கலைத்தது. அழைப்பது யாராக இருக்கும் என அவளுக்குப் புரிந்தாலும் அந்த அழைப்பை ஏற்பதா? வேண்டாமா? என உள்ளுக்குள் ஒருவித மனப் போராட்டமே எழுந்தது.
அழைப்பு நின்று, மீண்டும் அழைப்பு வர வேறு வழியின்றி அழைப்பை ஏற்றாள். “சொல்லுங்கம்மா...” சற்று சோர்வாகவே குரல் கொடுத்தாள்.
“நீதான் சொல்லணும், எப்போ கிளம்பி ஊருக்கு வர்ற?” சற்று கடுமையாகவே அவளிடம் கேட்டார்.
“ம்மா... படிச்சு முடிச்சதும் நான் என்ன சொன்னேன்? ஒரு ரெண்டு வருஷம் என்னை இப்படியே விடுன்னு சொன்னேனா இல்லையா? அப்படியும் ஃபோனைப் போட்டு இப்படி எதுக்கு என் நிம்மதியைக் குலைக்கறீங்க?” சற்று கோபமாகவே கேட்டான்.
“என்னடி வாய் ரொம்ப நீளுது? நான் உன் நிம்மதியைக் குலைக்கிறேனா? எல்லாம் உன் அப்பன் கொடுக்கற தைரியம்தான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது. என் எதிர்ல இருந்து இப்படி பேசுவியா? நீ அங்கே இருந்து வேலை தேடிக் கிழிச்சது எல்லாம் போதும். ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு கிளம்பி வா” அவளை விட அதிகமாக கத்தினார்.
“அம்மா இன்னும் கொஞ்ச நாள்ம்மா...” கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
“உனக்கு நான் மாப்பிள்ளை பார்த்தாச்சு. லேட் பண்ணாமல் வந்து சேருற. இல்ல... நான் என்ன செய்வேன்னே தெரியாது” குரல் உச்சமாக வந்தது.
‘என்னது மாப்பிள்ளையா?’ அவள் அதிர்ந்து போனாள். அந்த அதிர்விலோ என்னவோ அலைபேசியை கட் செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.
“என்ன ரத்னா? யார்கிட்டே இவ்வளவு கோபமா பேசிகிட்டு இருக்க? வைஷாலி கிட்டேயா? ஃபோனை என்கிட்டே கொடு” என்ற பைரவன் அலைபேசியை மனைவியிடமிருந்து கைப்பற்றுவது புரிந்தது.
“நீங்க இன்னும் வெளியே போகலையா?” ரத்னா கத்த, அதையெல்லாம் பைரவன் கண்டுகொள்ளவே இல்லை.
“எனக்கு எப்போ வெளியே போகணும், எப்போ வீட்ல இருக்கணும்னு தெரியும். நீ சமையலைப் பார்க்கப் போகாமல் இங்கே என்ன பண்ற? அதுவும் காலங்கார்த்தாலே பொண்ணுக்கு ஃபோனைப் போட்டு இப்படி பேயாட்டம் போடலைன்னா தான் என்ன?” பைரவன் கோபமாக பேச, அதைக் கேட்ட வைஷாலிக்கு அடுத்து நடக்கப் போவது இன்னது எனப் புரிந்து போனது.
அப்படியும் அலைபேசியை வைத்துவிடலாம் என்றால், ஒரு வேளை அம்மா சொன்ன ‘மாப்பிள்ளை’ யாராக இருக்கும் என அவர்கள் பேச்சில் வெளிப்படுமோ என்ற எண்ணத்தில் அமைதி காத்தாள்.
அவள் பயந்தது போலவே, “என்ன நான் பேயாட்டம் போடறேனா? என் அப்பன் வீட்டு சொத்தில் உட்கார்ந்து சாப்ட்டுட்டு என்னையவே குத்தம் சொல்லுவீங்களா? உங்களுக்கு எவ்வளவு திணக்கம் இருக்கணும்? இருங்க நான் என் அண்ணனுக்கு கூப்பிடறேன்” ரத்னா கூச்சலிட வைஷாலிக்கு கண்கள் கலங்கிப் போனது.
சிஏ படித்து, தன் அரசியல்வாதி மாமாவின் அனைத்து சொத்துக்கள், நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை பார்க்கும் தன் தகப்பனை தாய் பேசுவது மிகவும் அதிகம் எனத் தோன்றியது.
அதோடு அவளது அப்பா ஒன்றும் வேறு வழியின்றி அவரது மாமாவோடு இருக்கவில்லையே. அவர்கள்தானே இவரை வேறு எங்கும் செல்ல விடாமல், பல மடங்கு பணம் கொடுத்து பிடித்து வைத்து இருக்கிறார்கள். அதை தாய் இப்படி திரித்துப் பேச, கடுப்பாக வந்தது.
அவளுக்கும் கணக்கில் அதிக ஆர்வம் இருந்த பொழுதும், தந்தையைப் போல சிஏ படிக்காமல் போனதும் அதனால்தானே. அவர்களுக்கு இன்னொரு அடிமையாக தானும் சிக்கிவிடக் கூடாது என்பதால் தானே கெமிக்கல் இஞ்சினியரிங் படித்தாள்.
அதைவிட எந்த துறையை தேர்ந்தெடுத்தால், தன் மாமனின் நிழலில் இருந்து வெளியே செல்ல முடியும் என யோசித்தே செய்தாள். இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கும் எத்தனையோ தொழில்களில் ஒன்றில் அவளைப் போட்டு புதைத்து இருப்பார்களே.
“எங்கே கூப்பிடு பார்ப்போம்... அவனுக இதுவரைக்கும் என்னை என்ன பண்ணிட்டானுக? இனிமேல் என்னை என்ன பண்ணிடப் போறானுகன்னு நானும் பார்க்கறேன்” பைரவன் பேச, ரத்னாவுக்கு உடுக்கை அடித்த நிலைதான்.
“அவங்க ஒன்னும் உங்களுக்கு பயந்துகிட்டு பேசாமல் இருக்கலை. நான் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்னு தான் பேசாமல் இருக்காங்க. நான் புருஷன், பிள்ளைன்னு வாழணும்னு தான் உங்களை விட்டு வச்சிருக்காங்க. இல்லன்னா நீங்க எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா?” ரத்னா வார்த்தைகளில் விஷம் தோய்த்தாள்.
“நீ நிம்மதியா இருக்கணும்னு தான் என் உயிரை வாங்கறாங்களே, எனக்கு அது தெரியாதா? என் வழியைப் பார்த்துக்க எனக்குத் தெரியாமல் இல்லை” பொதுவாகவே ரத்னா பேசத் துவங்கினால் அமைதியாகப் போய்விடும் அவர், இன்று பேசினார்.
“நல்லா பார்ப்பீங்களே... என்ன பழைய காதலி கூட போய்டலாம்னு நினைப்போ? அவ புருஷனும் போய் சேர்ந்துட்டானே. இனிமேல் என்ன...? பழைய காதலியை சேர்த்துக்கலாம்னு இருக்கோ? விடமாட்டேன்” அத்தனை ஆங்காரமாக பேசினாள்.
“அவளை இப்படி அபாண்டமா பேசாதடி” திருமணம் முடிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தன் அத்தை மகள் இவள் வாயில் விழுந்து எழுகிறாளே என்று இருந்தது.
“ஓஹோன்னானா... காதலியைப் பேசின உடனே பொத்துகிட்டு வருதோ?” அவிழ்ந்த கொண்டையை அள்ளி முடிந்துகொண்டு கத்தினார் ரத்னா.
“அவ பிள்ளைகளுக்கே கல்யாணமாகி பேரன் பேத்தி எல்லாம் எடுத்துட்டா. ஆனா அவ இன்னும் உன் வாயில் விழுந்து அரை பட்டுகிட்டு இருக்கா பார்” பைரவனுக்கு மனதை என்னவோ செய்தது.
“அவ சாகற வரைக்கும் பேசுவேன்... என்னை நிம்மதியா வாழ விட்டாளா அவ? நீங்க என்ன கேட்கறது? நான் அவளைப் பேசினா உமக்கு வலிக்குதோ?” ரத்னா குத்திப் பேச, பைரவனுக்கு மனதே விட்டுப் போனது.
“என்னவோ உனக்கு மறைச்சு உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டது மாதிரி பேசற? இப்படியெல்லாம் அபாண்டமா பேசாத, நாக்கு அழுகிப் போய்டும்” தன் வாழ்க்கையில் இந்த ரத்னா விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் அவருக்கு கண்முன் விரிந்தது.
“என்னய்யா சொன்ன? என் நாக்கு அழுகிப் போய்டுமா? அவதான் அழுகிப் போய்டுவா. பீத்த சிறுக்கி, என்ன மாய்மாலம் பண்ணாளோ, இப்ப கூட அவளுக்கு பரிஞ்சுகிட்டு வர்றியே. உன்னை நம்பி என் பொண்ணை வீட்ல உக்காத்தி வைக்கச் சொல்றியா? நடக்காதுய்யா... அதுக்குத்தான் அவளை வீட்டுக்கு வரச் சொல்றேன்” மனைவி பேச, அப்பொழுதுதான் மகள் தொடர்பில் இருப்பதே அவர் நினைவுக்கு வந்தது.
அதே நேரம், தாய் தான் பயந்த விஷயத்தை தொட்டுவிட்டது புரிய, வைஷாலி தன் செவிகளை தீட்டிக் கொண்டாள். கூடவே தாய் பேசிய அந்த பேச்சுகள் அவளையும் என்னவோ செய்தது.
கையில் இருந்த அலைபேசியை அவர் பார்க்க, மகள் இன்னும் இணைப்பில் இருப்பது தெரிந்தது. அதைப் பார்த்த உடனே மனம் ஒரு மாதிரி கசங்கிப் போனது.
இத்தனை வருடங்களில், மனைவி வாயைத் திறந்து வேறு மாதிரி பேசத் துவங்கினாலே அவர் பேச்சை நிறுத்தி விடுவார். இரு கை தட்டினால் தானே ஓசை வரும்? ஒரு கை மட்டும் வீசினால் ஓசை வருமா என்ன?
இன்று மகள் எதிரில் இல்லாமல் போகவே, அவரும் மனம் தாளாமல் பேசிவிட்டார். ஆனால் இப்படியான பேச்சுக்கள் மகளின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என அவருக்குத் தெரியாதா என்ன?
அலைபேசியை எடுத்துக்கொண்டு வேகமாக மாடிக்குச் சென்றுவிட்டார். “பாப்பா...” அவர் மெதுவாக குரல் கொடுத்தார்.
“அப்பா... எப்படிப்பா இருக்கீங்க?” மகள் கேட்க, தான் அவளிடம் கேட்க வேண்டிய கேள்வியை மகள் தன்னிடம் கேட்க, அந்த மனிதருக்கு கண்கள் பனித்தது.
“எனக்கென்னம்மா? நான் நல்லா இருக்கேன். நீ எப்படிம்மா இருக்க? நீ வேலைக்குப் போகணும்னு அவசியமே இல்லை, கொஞ்ச நாள் அங்கேயே நிம்மதியா இருந்துட்டு வாம்மா” அவர் சொல்ல, அவளுக்கு அழுகை முட்டியது.
‘அப்பா எத்தனை பாசமான மனிதர், அவருக்குப் போய் தன் தாயைப் போன்ற பெண் ஒருத்தி மனைவியாக வாய்த்திருக்க வேண்டாம்’ என அவளுக்கு விவரம் வந்த பொழுது நினைத்த அதையே இப்பொழுதும் நினைத்துக் கொண்டாள்.
அவளுக்குத் தெரியும், தன் தகப்பன் இத்தனை அவமானங்களையும், ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு ரத்னாவோடு வாழ்வதே அவளுக்காகத்தான். அவளுக்கு பன்னிரண்டு வயது இருக்கும், அப்பொழுதும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை.
ஏதோ ஒரு பெண்ணோடு தன் அப்பாவையும் தொடர்பு படுத்தி தாய் பேசுகிறாள் என அவளுக்கு புரிந்த நாள் அது. இதற்கு முன்னரும் தகப்பனை தாய் கரித்துக் கொட்டிக் கொண்டேதான் இருப்பாள். அது எதனால் என அவளுக்குப் புரிந்ததே இல்லை.
ஆனால் அன்று ரத்னா பேசியது அப்பட்டமாக அவளுக்குப் புரிய, மகளின் முன்னால் மனைவி இப்படி பேசவே அவமானமும், கோபமும் போட்டி போட, பைரவன் மனைவியை எதிர்த்து பேசிவிட்டார்.
இத்தனை வருடங்களாக தன் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசி இராத கணவன் இன்று பேச, அவ்வளவுதான், ரத்னாவுக்கு எங்கே இருந்துதான் அத்தனை ஆத்திரமும் ஆங்காரமும் வந்ததோ, அவரை கை நீட்டி அடித்துவிட்டாள்.
மனைவி இதுவரை வாய்க்கு வந்தபடி பேசுவதை தாங்கிக் கொண்டவருக்கு இந்த அவமானம், அதுவும் தான் பெற்ற மகளின் முன்பாகவே நடந்துவிட அவரால் தாங்க முடியவில்லை. அடுத்த நிமிடம், தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டவர் வீட்டை விட்டு வெளியேறப் போனார்.
அதைப் பார்த்த ரத்னாவோ, “நீ எங்க போனாலும் இங்கேதான் வந்து நின்னாகணும். அது உனக்கும் தெரியும்னு நினைக்கறேன்” அவள் பேச, நின்று நிதானமாக அவளைப் பார்த்தார்.
“நான் எங்கே இருக்கேன்னு தெரிஞ்சா தானே மறுபடியும் என்னை இங்கே வர வைப்ப? அந்த வாய்ப்பையே நான் உங்களுக்கு கொடுக்கப் போறதில்லை” அவர் சொல்ல, அங்கே கிடந்த சோபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
அழுகையோடு தகப்பன் வெளியே செல்லப் போகிறான் என்பதைக் கண்ட வைஷாலி ஓடிபோய் தகப்பனைக் கட்டிக் கொண்டாள். தகப்பனின் கூனி குறுகிய தோற்றமும், அவமானம் சுமந்த முகமும் அவளை என்னவோ செய்தது. தாய் அடித்த அவரது கன்னத்தை தன் கரத்தால் வருடிக் கொடுத்தாள்.
அது அவரை இன்னுமே உடைத்துப் போட, அதில் ஒரு மிகப்பெரும் ஆறுதலையும் உணர்ந்தார்.
“என்னையும் உங்களோட அழைச்சுட்டு போய்டுங்கப்பா. என்னை இங்கே தனியா விட்டுப் போயிடாதீங்கப்பா. எனக்கு பயமா இருக்குப்பா. நீங்களும் இல்லன்னா நான் செத்துப் போய்டுவேன்ப்பா” வைஷாலி அவரைக் கட்டிக்கொண்டு அழ அப்படியே நின்றுவிட்டார்.
தன் மகள் செத்துப் போவேன் எனச் சொல்வதா? அவர் இத்தனை காலம் ரத்னாவோடு வாழ்ந்ததே தன் மகளுக்காகத்தானே. அப்படி இருக்கையில் மகள் செத்துப் போகிறேன் எனச் சொன்னால் அவர் நிலை என்னவாகும்?