பகுதி – 4.
சென்னை...
வைஷாலி, அந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தாள். முக்கியமான நாளின் தன் வண்டி சதி செய்துவிட்டதில் சற்று எரிச்சலாக வந்தது. தன் அலைபேசியை எடுத்தவள், ரூபிக்கு அழைக்க, அவளது அழைப்பை ஏற்றவள், “சொல்லுடி...” என்றாள்.
“ரூபி எங்கே இருக்க? என் வண்டி கழுத்தை அறுத்துடுச்சு... நீ வந்தால்தான் ஆச்சு” சற்று பதட்டமாக பேசினாள்.
“அதுக்கு எதுக்குடி இவ்வளவு டென்ஷன் ஆகற? மணி எட்டுதான் ஆகுது. பத்து மணிக்குதான் இன்டர்வியூ. நாம தவழ்ந்து போனால் கூட அரைமணி நேரத்தில் அங்கே போய்டலாம். நீயும் டென்ஷனாகி, என்னையும் டென்ஷன் பண்ணாத.
“நான் என் வண்டியில்தான் வரப் போறேன், நீ எங்கே இருக்கன்னு மட்டும் சொல்லு” தோழியின் பதட்டத்தில் கொஞ்சம் கூட பாதிக்கப் படாதவளாக கேட்டாள்.
“நான் வீட்ல இல்லைன்னு எப்படிடி சரியா கண்டு பிடிச்ச?” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“ம்... உன் வீட்டு கேமராவில் பார்த்தேன். படுத்தாதடி, உன் வீட்டு ஏரியாப்பக்கம் வண்டி வர்றதே அபூர்வம். இப்போ என்னன்னா நீ பேசும்போது பின்னாடி அவ்வளவு வண்டி போற சத்தம் கேட்குது அதை வச்சுத்தான் சொல்றேன். இப்போ சொல்லு... எங்கே இருக்க?” நிதானமாகவே கேட்டாள்.
“ஓ... எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்ல தான் நிக்கறேன். நீ வா...” பார்வையை இங்கும் அங்கும் சுழல விட்டவாறே சொன்னாள்.
“வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு தெரிஞ்ச உடனேயே வீட்லேயே இருந்துட்டு எனக்கு கூப்ட்டு இருக்க வேண்டியது தானே. எதுக்கு இப்போ அவ்வளவு தூரம் நடந்து வந்த நீ?” மென்மையாக கடிந்து கொண்டாள்.
“ரூபி... வீட்ல இருக்கவே முடியலை டி... நிஜமாவே பயங்கர டென்ஷன்” தாய் கொடுக்கும் அழுத்தத்தில் நிஜமாகவே அவளுக்கு அழுகையே வரும்போல் இருந்தது.
“அட ஆண்டவா... என்னடி இது? என்னவோ நீ சம்பாதிச்சுக் கொட்டலைன்னா, உங்க வீட்டில் அடுத்த வேளை சாப்பாடே சாப்பிட முடியாதுங்கற மாதிரி பேசற. இதெல்லாம் ரொம்ப ஓவர் டி” வைஷாலியின் வீட்டின் செல்வநிலை தெரிந்தவள் என்பதால் கேலியாகச் சொன்னாள்.
“அப்படி இருந்தால் கூட இவ்வளவு டென்ஷன் ஆக மாட்டேன் டி. இது வேற... நீ வா...” பேசுகையிலேயே கண்கள் கலங்கும்போல் இருந்தது. தன் தாய் தனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் எனச் சொன்னது அப்படி ஒரு அழுத்தத்தைக் கொடுத்தது.
“என்ன ஷாலு...? என்னடி என்னவோ போல பேசற?” ரூபி அவளது நெருங்கிய தோழிதான் என்றாலும் தன் தாயைப் பற்றி இன்று வரைக்கும் அவளிடம் வைஷாலி சொன்னதே இல்லை. தன் தாய் இப்படிப்பட்டவள் என, தோழியே என்றாலும் அவளிடம் சொல்ல முடியவில்லை.
ஒன்று அவளிடம் அதைச் சொல்ல வேண்டிய தேவை இதுவரைக்கும் அவளுக்கு வந்ததில்லை. இரண்டாவது தோழியே என்றாலும், அவளிடம் தன் தாயை அப்படி விட்டுக் கொடுத்துவிட முடியவில்லை. இன்று வரைக்கும் தன் தகப்பனே தன் தாயை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத பொழுது, அவள் மட்டும் எப்படி அதைச் செய்ய?
“அது... நீ நேர்ல வா சொல்றேன்” தன்னை மீட்டுக் கொள்ள முயன்றாள். நிஜத்தில் தன் வீட்டில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை நினைத்தாலே அடி மனதுக்குள் அப்படி ஒரு கலக்கம் சூழ்ந்தது.
‘முத்துப்பாண்டி’ என்ற பெயரை நினைக்க கூட பிடிக்காதவளுக்கு, அவனைத் தனக்கு மாப்பிள்ளையாக்க தாய் பார்க்கிறார் என்பதை நினைத்தாலே வாந்தி வரும்போல் இருந்தது.
அவள் அதை நினைத்தவாறு நிற்க, “நீ ஃபோனை வச்சால்தான் நான் வர முடியும். பேசிகிட்டே வா வான்னா எப்படி முடியும்?” அவள் ஒரு மாதிரி கலங்கி நிற்பது தெரிய அவளிடம் சொன்னாள் ரூபி.
“ஆமால்ல... நீ வா... நான் ஃபோனை வைக்கறேன்” என்றவள் அழைப்பை துண்டிக்கப் போனாள்.
“ஷாலு... ஆர் யூ ஓகே? சமாளிச்சுப்பியா?” தோழி அப்படிக் கேட்கவே, வைஷாலிக்கு கண்கள் கலங்கியே போனது.
“ம்...” என்றவளின் குரலில் அழுகை அப்பட்டமாகத் தெரிய, பதறிப் போனாள்.
“ஷாலு... லூசே அழறியா? எதுக்குடி இப்போ அழற? இப்போ என்ன உனக்கு வேலை கிடைக்கணும் அவ்வளவு தானே? நீ இன்டர்வியூவுக்கே போகலைன்னா கூட உனக்கு அந்த வேலை கிடைக்கும் போதுமா?” ‘ஒரு வேலைக்காக இத்தனை கலக்கமா?’ எனத் தோன்றினாலும் தோழியை ஆறுதல்படுத்த முயன்றாள்.
“ஏய்... இதெல்லாம் ரொம்ப ஓவர் டி...” குரல் இன்னும் தெளியவில்லை என்றாலும் தன் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.
“நீ முதல்ல ஃபோனை வை... உன்னை வந்து மந்திரிக்கறேன். ரெண்டு நாளா நீ சரியே இல்லை. கேட்டாலும் சொல்லாமல் இப்போ அழற? உன்னை வந்து வச்சுக்கறேன். தயவு செய்து இப்போ பப்ளிக்ல நின்னு அழாதே. சுத்தி இருக்கறவங்க பார்த்தால் என்ன நினைப்பாங்க?
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு நினை ஷாலு. கொஞ்ச நேரத்துக்கு எதைப்பத்தியும் யோசிக்காமல் வேடிக்கை பார்ப்பியாம். சரி... பக்கத்தில் யாரும் சிகரெட் பிடிக்கலையா என்ன? அப்படி பிடிச்சாங்கன்னா அவங்க பக்கத்தில் போய் நின்னுப்பியாம், நான் இப்போ வந்துடுவேனாம்” குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்ல, நிஜத்தில் சிரித்துவிட்டாள்.
“ரூபி...” கொஞ்சம் சிணுங்கவும் செய்தாள்.
“நான் என்ன பொய்யா சொல்றேன்? உனக்குத்தான் சிகரெட் வாசனை, பெட்ரோல் வாசனை, மண் வாசனை எல்லாம் பிடிக்குமே” தோழியின் மனநிலையை மாற்ற வேண்டியே பேசினாள்.
“அதுக்கு... இப்படி சொல்லுவியா?” கோபம் கொள்ள முயன்றாலும் அது அவளால் முடியவில்லை.
“குட், இப்படியே இரு... இப்போ வந்துடறேன்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டு வண்டியைக் கிளப்ப முயன்றாள்.
அந்த நேரம் அவள் வீட்டுக்குள் இருந்து, அலுவலகம் செல்ல வேண்டி வெளியே வந்த அவளது அப்பா ராமராஜன் மகளைப் பார்த்துவிட்டு ஆச்சரியமானார்.
“ரூபி... அப்போவே இன்டர்வியூ போறேன்னு கிளம்பி வெளியே வந்த. இன்னுமா போகாமல் இருக்க? ரிசல்ட் இப்போவே தெரிஞ்சுடுச்சே...” அவர் கேலி பேச, அப்பாவை முறைத்தாள்.
“அப்பா... எனக்கு இப்போ பேச நேரம் இல்லை, உங்களை வந்து கவனிச்சுக்கறேன்” என்றவள் தன் வெஸ்பாவை கிளப்பிச் சென்றாள். அவள் செல்லவே, அந்த ஓசையில், அவளது அம்மா தேவியும், அக்கா சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“ரூபியா போறா?” தேவி பெரிய மகளிடம் கேட்க, “அப்படித்தான் தோணுது. இவ்வளவு நேரம் வெளியே என்ன பண்ணிட்டு இருந்தாளோ?” என்றாள் சித்ரா.
“ஒரு வேளை வண்டியை துடைச்சுட்டு இருந்திருப்பா” தேவி சொல்ல, அவள் அப்படித்தான் என்பதால் சித்ராவும் அதை ஏற்றுக் கொண்டாள்.
தன் வண்டியில் சென்ற ரூபியோ விரைவாகவும், லாவகமாகவும் வண்டியைச் செலுத்தினாள். செல்லும் வழி எங்கும் அவளுக்கு வைஷாலியின் நினைவுதான். அவள் சொன்ன இடத்துக்கு வந்து சேர, பதினைந்து நிமிடங்கள் பிடித்தது.
வைஷாலி இவளைப் பார்த்துவிட்டு அவள் வண்டியின் அருகே வரவே, “என்னடி போகலாமா?” அவளிடம் கேட்டாள்.
“ம்... போகலாம்...” என்றவள் அவள் பின்னால் அமர,
“ஷாலு, சட்டிஃபிகேட், ஐடி ப்ரூப் எல்லாம் எடுத்துட்ட தானே? பழைய கம்பெனியோட எக்ஸ்பீரியன்ஸ் சட்டிஃபிகேட், ரிலீவிங் ஆர்டர் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சு இருக்கியா?” வண்டியைக் கிளப்பியவாறே கேட்டாள்.
“ஆமா நேத்து நைட்டே எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்” என்றவள் அமைதியானாள்.
”இன்டர்வியூவுக்கு ஏதாவது பிரிப்பேர் பண்ணியா? ஓபன் இன்டர்வியூ இது, எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியலையே. கும்பல்ல நசுங்கி சாகப் போறோமா? இல்லன்னா ப்ராப்பர் அரேஞ்ச்மென்ட் எதுவும் செஞ்சாங்களான்னு தெரியலை” கொஞ்சம் புலம்பலாகவே சொன்னாள்.
“நான் அதைப்பத்தி யோசிக்கவே இல்லையே. ரொம்ப கூட்டமா இருக்குமா?” இப்படிக் கேட்ட தோழியை ரிவர்வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தாள்.
‘இவ என்ன யோசனையில், இல்ல குழப்பத்தில், இல்லன்னா கவலையில் இருக்கான்னே தெரியலையே... கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறா?’ இவளுக்குள் யோசனை ஓடியது.
“சாப்ட்டியா ஷாலு?” சற்று கவலையாகவே கேட்டாள்.
“சாப்ட்டேன்...” என்றவள், உள்ளுக்குள்... ‘நான் சாப்பிடலைன்னா உடனே வேலைக்காரக்கா என் அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிடுவாங்களே’ என எண்ணியதை வெளியே சொல்லவில்லை.
“ஷாலு... பெட்ரோல் கொஞ்சம் கம்மியா இருக்கு. பெட்ரோல் போட்டு போகலாமா?” அவளிடம் கேட்டாள்.
“சரி...” அவள் சொல்ல, சிட்டியில் பரபரப்புக்கு வெளியே இருந்த அந்த பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தினாள். வைஷாலி இறங்கிக் கொள்ள, தானும் இறங்கியவள் பெட்ரோல் போட வேண்டி சீட்டை உயர்த்திவிட்டு, மூடியைத் திறந்தாள்.
வைஷாலி நகம் கடித்தவாறு நிற்க, அவள் டென்ஷனாக இருப்பது இவளுக்குப் புரிந்தது. “ஷாலு, கர்ச்சீப் வச்சிருக்க?” அவளை நெருங்கியவள் மெதுவாகக் கேட்டாள்.
“எதுக்குடி இப்போ கர்ச்சீப்?” என்றவள் தன் கைக்குட்டையை அவள் பக்கம் நீட்டினாள்.
சென்னை...
வைஷாலி, அந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தாள். முக்கியமான நாளின் தன் வண்டி சதி செய்துவிட்டதில் சற்று எரிச்சலாக வந்தது. தன் அலைபேசியை எடுத்தவள், ரூபிக்கு அழைக்க, அவளது அழைப்பை ஏற்றவள், “சொல்லுடி...” என்றாள்.
“ரூபி எங்கே இருக்க? என் வண்டி கழுத்தை அறுத்துடுச்சு... நீ வந்தால்தான் ஆச்சு” சற்று பதட்டமாக பேசினாள்.
“அதுக்கு எதுக்குடி இவ்வளவு டென்ஷன் ஆகற? மணி எட்டுதான் ஆகுது. பத்து மணிக்குதான் இன்டர்வியூ. நாம தவழ்ந்து போனால் கூட அரைமணி நேரத்தில் அங்கே போய்டலாம். நீயும் டென்ஷனாகி, என்னையும் டென்ஷன் பண்ணாத.
“நான் என் வண்டியில்தான் வரப் போறேன், நீ எங்கே இருக்கன்னு மட்டும் சொல்லு” தோழியின் பதட்டத்தில் கொஞ்சம் கூட பாதிக்கப் படாதவளாக கேட்டாள்.
“நான் வீட்ல இல்லைன்னு எப்படிடி சரியா கண்டு பிடிச்ச?” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“ம்... உன் வீட்டு கேமராவில் பார்த்தேன். படுத்தாதடி, உன் வீட்டு ஏரியாப்பக்கம் வண்டி வர்றதே அபூர்வம். இப்போ என்னன்னா நீ பேசும்போது பின்னாடி அவ்வளவு வண்டி போற சத்தம் கேட்குது அதை வச்சுத்தான் சொல்றேன். இப்போ சொல்லு... எங்கே இருக்க?” நிதானமாகவே கேட்டாள்.
“ஓ... எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்ல தான் நிக்கறேன். நீ வா...” பார்வையை இங்கும் அங்கும் சுழல விட்டவாறே சொன்னாள்.
“வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு தெரிஞ்ச உடனேயே வீட்லேயே இருந்துட்டு எனக்கு கூப்ட்டு இருக்க வேண்டியது தானே. எதுக்கு இப்போ அவ்வளவு தூரம் நடந்து வந்த நீ?” மென்மையாக கடிந்து கொண்டாள்.
“ரூபி... வீட்ல இருக்கவே முடியலை டி... நிஜமாவே பயங்கர டென்ஷன்” தாய் கொடுக்கும் அழுத்தத்தில் நிஜமாகவே அவளுக்கு அழுகையே வரும்போல் இருந்தது.
“அட ஆண்டவா... என்னடி இது? என்னவோ நீ சம்பாதிச்சுக் கொட்டலைன்னா, உங்க வீட்டில் அடுத்த வேளை சாப்பாடே சாப்பிட முடியாதுங்கற மாதிரி பேசற. இதெல்லாம் ரொம்ப ஓவர் டி” வைஷாலியின் வீட்டின் செல்வநிலை தெரிந்தவள் என்பதால் கேலியாகச் சொன்னாள்.
“அப்படி இருந்தால் கூட இவ்வளவு டென்ஷன் ஆக மாட்டேன் டி. இது வேற... நீ வா...” பேசுகையிலேயே கண்கள் கலங்கும்போல் இருந்தது. தன் தாய் தனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் எனச் சொன்னது அப்படி ஒரு அழுத்தத்தைக் கொடுத்தது.
“என்ன ஷாலு...? என்னடி என்னவோ போல பேசற?” ரூபி அவளது நெருங்கிய தோழிதான் என்றாலும் தன் தாயைப் பற்றி இன்று வரைக்கும் அவளிடம் வைஷாலி சொன்னதே இல்லை. தன் தாய் இப்படிப்பட்டவள் என, தோழியே என்றாலும் அவளிடம் சொல்ல முடியவில்லை.
ஒன்று அவளிடம் அதைச் சொல்ல வேண்டிய தேவை இதுவரைக்கும் அவளுக்கு வந்ததில்லை. இரண்டாவது தோழியே என்றாலும், அவளிடம் தன் தாயை அப்படி விட்டுக் கொடுத்துவிட முடியவில்லை. இன்று வரைக்கும் தன் தகப்பனே தன் தாயை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத பொழுது, அவள் மட்டும் எப்படி அதைச் செய்ய?
“அது... நீ நேர்ல வா சொல்றேன்” தன்னை மீட்டுக் கொள்ள முயன்றாள். நிஜத்தில் தன் வீட்டில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை நினைத்தாலே அடி மனதுக்குள் அப்படி ஒரு கலக்கம் சூழ்ந்தது.
‘முத்துப்பாண்டி’ என்ற பெயரை நினைக்க கூட பிடிக்காதவளுக்கு, அவனைத் தனக்கு மாப்பிள்ளையாக்க தாய் பார்க்கிறார் என்பதை நினைத்தாலே வாந்தி வரும்போல் இருந்தது.
அவள் அதை நினைத்தவாறு நிற்க, “நீ ஃபோனை வச்சால்தான் நான் வர முடியும். பேசிகிட்டே வா வான்னா எப்படி முடியும்?” அவள் ஒரு மாதிரி கலங்கி நிற்பது தெரிய அவளிடம் சொன்னாள் ரூபி.
“ஆமால்ல... நீ வா... நான் ஃபோனை வைக்கறேன்” என்றவள் அழைப்பை துண்டிக்கப் போனாள்.
“ஷாலு... ஆர் யூ ஓகே? சமாளிச்சுப்பியா?” தோழி அப்படிக் கேட்கவே, வைஷாலிக்கு கண்கள் கலங்கியே போனது.
“ம்...” என்றவளின் குரலில் அழுகை அப்பட்டமாகத் தெரிய, பதறிப் போனாள்.
“ஷாலு... லூசே அழறியா? எதுக்குடி இப்போ அழற? இப்போ என்ன உனக்கு வேலை கிடைக்கணும் அவ்வளவு தானே? நீ இன்டர்வியூவுக்கே போகலைன்னா கூட உனக்கு அந்த வேலை கிடைக்கும் போதுமா?” ‘ஒரு வேலைக்காக இத்தனை கலக்கமா?’ எனத் தோன்றினாலும் தோழியை ஆறுதல்படுத்த முயன்றாள்.
“ஏய்... இதெல்லாம் ரொம்ப ஓவர் டி...” குரல் இன்னும் தெளியவில்லை என்றாலும் தன் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.
“நீ முதல்ல ஃபோனை வை... உன்னை வந்து மந்திரிக்கறேன். ரெண்டு நாளா நீ சரியே இல்லை. கேட்டாலும் சொல்லாமல் இப்போ அழற? உன்னை வந்து வச்சுக்கறேன். தயவு செய்து இப்போ பப்ளிக்ல நின்னு அழாதே. சுத்தி இருக்கறவங்க பார்த்தால் என்ன நினைப்பாங்க?
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு நினை ஷாலு. கொஞ்ச நேரத்துக்கு எதைப்பத்தியும் யோசிக்காமல் வேடிக்கை பார்ப்பியாம். சரி... பக்கத்தில் யாரும் சிகரெட் பிடிக்கலையா என்ன? அப்படி பிடிச்சாங்கன்னா அவங்க பக்கத்தில் போய் நின்னுப்பியாம், நான் இப்போ வந்துடுவேனாம்” குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்ல, நிஜத்தில் சிரித்துவிட்டாள்.
“ரூபி...” கொஞ்சம் சிணுங்கவும் செய்தாள்.
“நான் என்ன பொய்யா சொல்றேன்? உனக்குத்தான் சிகரெட் வாசனை, பெட்ரோல் வாசனை, மண் வாசனை எல்லாம் பிடிக்குமே” தோழியின் மனநிலையை மாற்ற வேண்டியே பேசினாள்.
“அதுக்கு... இப்படி சொல்லுவியா?” கோபம் கொள்ள முயன்றாலும் அது அவளால் முடியவில்லை.
“குட், இப்படியே இரு... இப்போ வந்துடறேன்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டு வண்டியைக் கிளப்ப முயன்றாள்.
அந்த நேரம் அவள் வீட்டுக்குள் இருந்து, அலுவலகம் செல்ல வேண்டி வெளியே வந்த அவளது அப்பா ராமராஜன் மகளைப் பார்த்துவிட்டு ஆச்சரியமானார்.
“ரூபி... அப்போவே இன்டர்வியூ போறேன்னு கிளம்பி வெளியே வந்த. இன்னுமா போகாமல் இருக்க? ரிசல்ட் இப்போவே தெரிஞ்சுடுச்சே...” அவர் கேலி பேச, அப்பாவை முறைத்தாள்.
“அப்பா... எனக்கு இப்போ பேச நேரம் இல்லை, உங்களை வந்து கவனிச்சுக்கறேன்” என்றவள் தன் வெஸ்பாவை கிளப்பிச் சென்றாள். அவள் செல்லவே, அந்த ஓசையில், அவளது அம்மா தேவியும், அக்கா சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“ரூபியா போறா?” தேவி பெரிய மகளிடம் கேட்க, “அப்படித்தான் தோணுது. இவ்வளவு நேரம் வெளியே என்ன பண்ணிட்டு இருந்தாளோ?” என்றாள் சித்ரா.
“ஒரு வேளை வண்டியை துடைச்சுட்டு இருந்திருப்பா” தேவி சொல்ல, அவள் அப்படித்தான் என்பதால் சித்ராவும் அதை ஏற்றுக் கொண்டாள்.
தன் வண்டியில் சென்ற ரூபியோ விரைவாகவும், லாவகமாகவும் வண்டியைச் செலுத்தினாள். செல்லும் வழி எங்கும் அவளுக்கு வைஷாலியின் நினைவுதான். அவள் சொன்ன இடத்துக்கு வந்து சேர, பதினைந்து நிமிடங்கள் பிடித்தது.
வைஷாலி இவளைப் பார்த்துவிட்டு அவள் வண்டியின் அருகே வரவே, “என்னடி போகலாமா?” அவளிடம் கேட்டாள்.
“ம்... போகலாம்...” என்றவள் அவள் பின்னால் அமர,
“ஷாலு, சட்டிஃபிகேட், ஐடி ப்ரூப் எல்லாம் எடுத்துட்ட தானே? பழைய கம்பெனியோட எக்ஸ்பீரியன்ஸ் சட்டிஃபிகேட், ரிலீவிங் ஆர்டர் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சு இருக்கியா?” வண்டியைக் கிளப்பியவாறே கேட்டாள்.
“ஆமா நேத்து நைட்டே எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்” என்றவள் அமைதியானாள்.
”இன்டர்வியூவுக்கு ஏதாவது பிரிப்பேர் பண்ணியா? ஓபன் இன்டர்வியூ இது, எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியலையே. கும்பல்ல நசுங்கி சாகப் போறோமா? இல்லன்னா ப்ராப்பர் அரேஞ்ச்மென்ட் எதுவும் செஞ்சாங்களான்னு தெரியலை” கொஞ்சம் புலம்பலாகவே சொன்னாள்.
“நான் அதைப்பத்தி யோசிக்கவே இல்லையே. ரொம்ப கூட்டமா இருக்குமா?” இப்படிக் கேட்ட தோழியை ரிவர்வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தாள்.
‘இவ என்ன யோசனையில், இல்ல குழப்பத்தில், இல்லன்னா கவலையில் இருக்கான்னே தெரியலையே... கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறா?’ இவளுக்குள் யோசனை ஓடியது.
“சாப்ட்டியா ஷாலு?” சற்று கவலையாகவே கேட்டாள்.
“சாப்ட்டேன்...” என்றவள், உள்ளுக்குள்... ‘நான் சாப்பிடலைன்னா உடனே வேலைக்காரக்கா என் அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிடுவாங்களே’ என எண்ணியதை வெளியே சொல்லவில்லை.
“ஷாலு... பெட்ரோல் கொஞ்சம் கம்மியா இருக்கு. பெட்ரோல் போட்டு போகலாமா?” அவளிடம் கேட்டாள்.
“சரி...” அவள் சொல்ல, சிட்டியில் பரபரப்புக்கு வெளியே இருந்த அந்த பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தினாள். வைஷாலி இறங்கிக் கொள்ள, தானும் இறங்கியவள் பெட்ரோல் போட வேண்டி சீட்டை உயர்த்திவிட்டு, மூடியைத் திறந்தாள்.
வைஷாலி நகம் கடித்தவாறு நிற்க, அவள் டென்ஷனாக இருப்பது இவளுக்குப் புரிந்தது. “ஷாலு, கர்ச்சீப் வச்சிருக்க?” அவளை நெருங்கியவள் மெதுவாகக் கேட்டாள்.
“எதுக்குடி இப்போ கர்ச்சீப்?” என்றவள் தன் கைக்குட்டையை அவள் பக்கம் நீட்டினாள்.