"ஏய் விடுடி....இல்ல...அய்யோ என் முடி முடி...அவ்...விடு..."
"ம்ஹீம்....நீ விடு.... ஆஆஆஆஹ்....ஏண்டி இங்க கடிச்ச..."
"நீ முதல்ல என் கழுத்த விடு...ஆஆஆஹ்.... மாறி மாறி பெரியவளும் சிறியவளும் கிடந்து உருள...தேஜூ கிடைத்த இடைவெளியில் கல்பனாவின் கையை மறுபடி கடித்து தப்பித்தவள்...பெட்டில் ஏறி குதித்து ஓடும் முன்பே அவளின் ஒற்றை கால் தங்கையிடம் மாட்ட... இவள் வேண்டாமென கத்த கத்தவே காலை நன்றாய் பிடித்து இழுத்து விட...அப்படியே குப்புறடித்து தரையில் விழுந்தாள்...
"அய்யோம்மா...அய்யோ...இடுப்பெலும்பு போச்சு...அய்யோ மா....காப்பாத்துமா..."
இப்போதில்லை...கடந்த அரை மணி நேரமாகவே நடந்த இந்த ரெஸ்ட்லின் சண்டைக்கு நடுவராக எவ்வளவு முறை அழைத்தும் காயத்திரி மட்டும் எட்டி பார்க்கவே இல்லை(பயபுள்ள கிரேட் எஸ்கேப்)...மாறி மாறி அடித்து ஓய்ந்தவர்கள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்படியே இருந்த இடத்தில் இருந்தபடியே கவிழ்ந்து விட...தேஜூதான் பேச முடியாமல் பேசினாள்..
"அடியே...ஹ ஹ...அய்யோ முடியலயே...அடியேய் ஏய்...சில்வண்டு ஏண்டி வந்ததும் வராததுமா என்னை போட்டு இந்த அடி அடிக்கற...யம்மா என்னா அடி அடிக்குறா...அட லூசே என்னன்னு சொல்லி தொலை...இல்லே..."
"இல்லேன்னா..."
"இல்லேன்னா ஒன்னும் பிரச்சனையில்ல...தேஜூக்கு நாளைக்கு வைக்க போற RIP ஸ்டேட்டஸ்க்கு போட்டோ ஒன்னு செலக்ட் பண்ணி அப்புறமா என்கிட்ட வாங்கிக்க... சரியா...இப்ப முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு..."
இன்னும் முழுதாய் பேச முடியாமல் தேஜூ பக்கத்திலிருந்த மிராண்டா பாட்டிலை எட்டி எடுத்தவள் அதை குடிக்க குடிக்க கல்பனா என்ன நினைத்தாளோ மறுபடி எட்டி ஒரு உதை விட...தெறித்து போய் ஸ்டூலை தள்ளி விழுந்தாள்..
"அடியேய்...உனக்கென்ன பேய் புடிச்சுடுச்சா....காஞ்சனா படத்துல நடிக்குற பேய்க்கெல்லாம் உன் உடம்ப எதுவும் கம்மி விலைல வாடக்கைக்கு விட்டுட்டியா என்ன....திடீர் திடீர்னு அடிக்கற....இத குடிச்சதுக்கு ஏன்டி அடிச்ச...இப்ப எனக்கு தெரிஞ்சாகணும்.. சொல்லுடி..பிசாசே.."
"நீ இந்த கருமத்த குடிச்சதுக்கு இல்லடி என் பட்டர் கட்டரு....இது மாதிரி ஒரு ஓசி ஜூஸூக்கு ஆசப்பட்டு என்னை பத்தி அவன்ட்ட என்னடி சொன்ன நீ??..."
"எவன்ட்ட"
"ஏய் ஏய் நடிக்காத....அதான் அந்த பைக்காரன்கிட்ட என்னடி சொல்லி தொலைஞ்சிருக்க... எந்தங்கச்சி நல்லா பாடுவா... செமய்யா டேன்ஸ் ஆடுவா... டெய்லி ஜிம் போறா...அவ சமைச்சா எங்க வீட்டு நாயெல்லாம் போய் அக்கம் பக்கத்துல இருக்கற மத்த நாய்ங்கள கூட்டிட்டு வர்ற அளவுக்கு செம்மயா சமைப்பான்னு எல்லாம்.... என்ன...என்ன ஈரக்கூந்தலுக்குடி நீ சொன்ன...அவன் சொல்றான்... நான்தான் அவன் டிரீம் வைப்பாம்...எனக்காகத்தான் அவன் பொறந்து இத்தனை நாளா காத்திருக்கானாம்... இன்னும் ரெண்டு நாள்ள அவன் அப்பா அம்மாவ கூட்டிட்டு இங்க பொண்ணு கேக்க வர்றானாம்... அப்ப நான்தான் சமைக்கனுமாம்.... நினைச்சு பாருடி.... வெங்காய சாம்பாரில் வீழ்ந்த வாலிபரின் வாழ்க்கை... வயதுப்பெண்ணின் வெறிச்செயல்...வானாவுக்கு வானான்னு பேப்பர்ல போட்டு என் வாழ்க்கையையே மொத்தமா முடிச்சிடுவானுங்க... உன்ட்ட என்னை பத்தி அந்த மெண்டல்கிட்ட நல்லா சொல்லுன்னு சொன்னேனா... சொல்லுடி...சப்போஸ் அவன் வந்து என்னை பாட சொன்னா கூட கியா மியா சாங் மட்டும்தான் மனப்பாடம்.. அதுல்லாம் பாடுனேன்னா அவன் செத்துருவான்டி... செத்துருவான்..."
"அய்யய்யோ...அவன் இவகிட்ட எதுவும் மூச்சு விட மாட்டேன்னு சொன்னத நம்பிதான இவ்ளோ பொய்ய பப்ளிக்கா சொன்னேன்...பரதேசி கடைசில என் மூச்சவே நிறுத்த பிளான் பண்ணிட்டானே படுபாவி பய..."
கண்ணை அங்குமிங்கும் உருட்டி அவசரமாய் யோசித்தவள்...சட்டென முகத்தை பாவமாய் வைத்து கொண்டாள்..
"விடுடி கல்ப்ஸ்...எப்படியும் நீ சமைச்சாலும் பாடுனாலும் இல்ல டேன்ஸ் ஆடி இந்த ப்ளோர் உடைஞ்சு அவன் மண்டைல விழுந்தாலும் ஆக மொத்தம் அவன் இன்னும் இரண்டு நாள்ள சாகப்போறது உறுதி ...அப்படி நாளைக்கு சாகப்போறவனுக்காக 22 இயர்ஸா கூடப்பொறந்தவள இப்படி அடிக்கற பார்த்தியா..டூ பேட் யூ நோ..."
"அடியேய்..அவனாவது இரண்டு நாள் கழிச்சுதான் சாவான்... ஆனா நீ இப்பவே இங்கயே சாவடி.... பார்க்கறியா.. பார்க்கறியா...இந்தா பாரு.."
பேசியபடியே தேஜூவை கீழே தள்ளி மேலே ஏறியவள் கையிலிருந்த ஷாலை போட்டு கழுத்தை நெறிக்க....தேஜூ என்ன செய்தும் அவளை கீழே தள்ள முடியவில்லை...
"குந்தானி சிறுக்கி இந்த ஆட்டம் ஆடுறேன்...கீழ விழறாளான்னு பாரு..."
ம்ஹூம்...கல்பனா அசையவேயில்லை...வேறு வழியில்லாமல் தேஜூ தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டியவள் இப்போது கல்பனாவின் மேலேறி முடியை பிடித்து ஆட்ட...சிறியவள் கத்திய கத்தில் அவர்கள் வீட்டின் சொர்க்கவாசல் படீரென திறந்தது..
இருவரின் தலையும் மற்றொருவரின் கையிலிருக்க...வேர்த்து பூர்த்து வெறியோடு மூச்சு விட்டிருந்த இருவரும் காயத்திரியை ஒரு நம்பிக்கையோடு பார்த்தனர்...
"ஸாரி பார் த டிஸ்டர்பன்ஸ் கேர்ள்ஸ்...வெங்காய பக்கோடா சூடு ஆறிடுமே... சாப்பிட கூப்டலாமேன்னு வந்தேன்...இரண்டு பேரும் பிஸியா இருக்கீங்க போல...சரி ஓகே...அப்பறமா ப்ரீ ஆகிட்டு வாங்க....சாப்பிடுவீங்களாம்.."
சொன்னவர் மறுபடி கதவை அடித்து சாத்திவிட்டு போய்விட....பெண்கள் இருவரும் பேவென ஒருவரையொருவர் பார்த்தவர்கள் அவசரமாய் கதவை திறந்து ஓடினர் பக்கோடாவிற்காக...
அவசரமாய் நாலு தட்டை உள்ளே தள்ளியபின்பே கண்பார்வை தெளிவாகவும்...இப்போது ஒருவரின் கசங்கிய தோற்றத்தை பார்த்து மற்றவர் சிரிக்க...சற்று நேரம் அந்த வீடே அகோரிகளின் சத்தத்தில் அதிர்ந்தது...
"சரி தின்னுட்டீங்கன்னா கிளம்புங்க... ஷாப்பிங் போகணும்.."
அம்மாவின் வார்த்தையில்... தேஜூ கல்பனா இருவருக்கும் டிரெண்டில் இருக்கும் ஆடைகள் அதன் விலையோடு கண்களின் மின்ன...ஆசையாய் பார்த்து தலையாட்டி கொண்டனர்..
"தேஜூ சக்தி சைஸ் உனக்கு தெரியுமா..."
"என்ன சைஸ் எதுக்கு சைஸ்.."
"ஆமா பின்ன வேண்டாமா... பர்சேஸே அவனுக்காகதான்... அதான் ஷர்ட் சைஸ் தெரியுமா கேக்கறேன்..."
"மா இதெல்லாம் அநியாயம்...அப்ப எங்களுக்கு இல்லையா...சக்திக்கு எடு..வேணாங்கல..அப்படியே எங்களுக்கும் எடும்மா...ப்ளீஸ் ப்ளீஸ்..."
"ஏய் அடங்குங்கடி..உங்களுக்கு என்னாத்துக்கு....அடிச்சு கிழிச்சுக்கவா...பைத்தியங்களா...அந்த பையன் சக்தி எவ்ளோ தங்கம் தெரியுமா...அப்படி ஒரு பையன பெத்ததுக்கு மது புண்ணியம் பண்ணிருக்கணும்...நானும் பெத்துருக்கேனே...கடவுளே கடவுளே....உங்கள எல்லாம் பெத்த டைம்ல தமிழ் படம் 1st பார்ட்ல வர்ற மாதிரி கள்ளிபால் சேஷே மட்டும் கிடைச்சிருந்தது...."
"கிடைச்சிருந்தா..."...தேஜூ எடுத்து கொடுக்க...
"ம்ம்ம்...கள்ளிப்பால் ஊத்தி உன்னை கொன்னுட்டு என்னை மட்டும் பெத்திருந்திருப்பாங்க... இல்லம்மா..."
"இல்ல...அவளுக்கு பாதி குடுத்துட்டு உனக்கு மிச்சத்த எடுத்து ஸ்டாக் வச்சிருப்பேன்.. பொண்ணுங்களாடி நீங்க... அரை மணி முன்னாடி என்ன கத்து கத்துனீங்க...சக்தி என்னைக்காவது அப்படி பேசி பார்த்திருக்கியா.."
"மா அவன ரொம்ப புகழாத... என்ன இருந்தாலும் நாங்க உன் பொண்ணுங்க...சிலபல விஷயங்களுக்கு நீ எங்ககிட்டதான் வரணும்..."
"நீ மூடு...ரொம்ப தாளிக்காத...என்னடி தெரியும் உனக்கு அவனப்பத்தி...போன மாசம் பஸார் போய்ட்டு வந்தப்ப பீரியட்ல என் சேலைல எல்லாம் அசிங்கமா ஆயிடுச்சு...எனக்கு என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுட்டு நின்னேன்... சக்திதான் சட்டுனு அவன் ஜெர்கின் கழட்டி மாட்டுவிட்டு வீடு வரை எல்லாம் கொண்டு வந்து குடுத்தான் தெரியுமா... அப்புறமும் போய் மதுகிட்ட கேட்டு எனக்கு ஜூஸ்லாம் கொண்டு வந்து தந்தான்... அவன் பையன்டி... சொக்க தங்கம்...நீங்களும்தான் இருக்கீங்களே... தண்டங்க... முடியலேன்னு ஒரு டம்ளர் மோர் கேட்டாகூட ஆளுக்கு பாதி குடிச்சுட்டு கால்வாசி தருவீங்க.. போய் தொலைங்க..நானே போய்க்கறேன்.."
என்னதான் அவர்களுக்குள் அடித்தாலும் கடித்து புரண்டாலும்...சக்தி என்று வந்துவிட்டால் எப்போதும் அவர்கள் ஒன்றாகி விடுவர்...ஏனெனில் இந்த அராத்துகள் செய்யும் எந்த வேலையையும் அவன் யாரிடமும் சொல்லவே மாட்டான்..அத்தோடு அழகாய் சிரித்தபடி அவர்களை பார்த்திருக்கும் அந்த சிறியவனை கண்டால் இவர்களுக்கும் அவ்வளவு பிடிக்கும்...எனவே அந்த நாள் சக்திக்கான உடை தேர்வில் மனநிம்மதியோடும் பெண்களின் செல்ல முணுமுணுப்போடும் கழிந்துவிட...அடுத்த நாள் களேபரமாய் விடிந்தது...
அன்று அவர்களின் அபார்ட்மெண்டில் இருந்த பல நட்பு குடும்பங்களில் ஒன்றான ஜானகி ஆன்ட்டியின் மருமகளுக்கு வளைகாப்பு... சற்றே அலட்டல் பேர்வழியான ஜானகி ஆன்டியின் பெரிய தொண்டைக்கு பயந்தே அங்கிருந்த அநேகம் பேர் அங்கு கிளம்பி விட...இந்த இளையவர் பட்டாளம் அட்டகாசமாய் குதூகலமாய் கிளம்பி வந்தது...
காய்த்ரி மற்ற விஷயங்களில் ஜாலியான அம்மா என்றாலும் இதுபோன்ற குடும்ப விழாக்களின் போது அவர் பெண்களின் உடை தேர்வு கண்டிப்பாக சேலையாகத்தான் இருக்கும்...அழகாய் பட்டுசேலை கட்டி தலைநிறைய பூ...வளையல் பொட்டு என பெண்கள் இருக்கும் அழகே தனி என்ற எண்ணத்தை அழகாய் பிள்ளைகளிடமும் கடத்தியிருக்க...அவர்களும் விரும்பியே அதை அணிவர்... அது போல இன்றும் பிங்க் மற்றும் மெரூன் கலர் சேலையில் அசரடிக்கும் அழகோடு கிளம்பியவர்கள் முதலில் போய் நின்ற இடம் பக்கத்திலிருந்த மதுரா ஆன்ட்டியின் வீடு..
என்ன தட்டியும் பதில்லாமல் போக...சற்று பொறுத்து கதவை திறந்து உள்ளே போக... அவர்களின் ஆசை ஆன்ட்டியோ பெட்சீட்டை முழுதாய் முதுகுவழியே சுற்றி உட்கார்ந்திருக்கவும்...என்னவோ என பயந்து போயினர்..
"ஆன்ட்டி என்னாச்சு ஆன்ட்டி... ஏன் இப்படி பெட்சீட்டை போர்த்திட்டு இருக்கீங்க.."
"அடடே..வாங்க பொண்ணுங்களா...என்ன இவ்வளவு தூரம்...காலைலயே சேலை கட்டிட்டு ஜாகிங்கா... ம்ம்...சூப்பர்... ரோட்ல நாயையெல்லாம் பயமுறுத்தாம பார்த்து ஓடுங்க போங்க " பேசிக்கொண்டே லேப்டாப்பை காட்டி அவர் கண்ஜாடை காட்ட அதை அந்த பேக்குகள் இரண்டும் கவனிக்கவே இல்லை..
"எதே...எங்கயா...இன்னைக்கு ஜானகி ஆன்ட்டி வீட்டு பங்ஷன்...கண்டிப்பா போகணும்னு நீங்கதான சொன்னீங்க...இந்த சேலை கூட நீங்கதான செலக்ட் பண்ணீங்க.."
"அப்படியா..அப்படீன்னா அப்படிதான்..." மறுபடி ஜாடை காட்ட...இப்போது ஏதோ புரிந்தது..
"யாரும்மா...காஞ்ஜரிங் பேமிலியா... வந்துடுச்சா..."
"ஆமாப்பா ஆமா...அதே காஞ்சி போன பேமிலிதான் பார்க்கறியா..பாரு அட பயப்படாம பாருடா..."
சொன்னவர் சட்டென லேப்டாப்பை இவர்கள் புறம் திருப்பி விட..அதன் வழியே சட்டென வந்து விழுந்த பிம்பத்தில் இரு புறத்தில் இருந்தவர்களும் உறைந்து போயினர்..
தேஜூவிற்கோ அன்று அவள் ஆன்ட்டி சொன்ன அந்த இளவயது பாலகன் அஷ்வத்தின் தாக்கமெனில்.. அஷ்வத்திற்கோ இதுவரை சுடிதார் ஜீன்ஸில் கண்றாவியாய் சுற்றிய ஒருத்தியை அழகாய் பாந்தமாய் சேலையில் கண்ட இனிய அதிர்ச்சி...ஏற்கனவே தேஜூவின் குறும்புகளின் செல்ல ரசிகன் எனும்போது அவனின் செல்ல ராட்சசி இப்படி அழகோவியமாய் நிற்க பேச்சே வரவில்லை... இமைக்காமல் பார்த்திருந்தான்...
"ஓய்.." அவனின் அழைப்பு அவனுக்கே கேட்கவில்லை... ஆனால் பெண்ணவளை சரியாய் மென்மையாய் தீண்டியது..
"ம்ம்ம்..என்ன ஓய்..."
"என்ன புதுசா சேலையெல்லாம்.."
குறுகுறுவென பார்த்தபடி கேட்ட அவன் கேள்வியில் தேஜூவிற்கு சட்டென முகம் சிவந்து போய் அவள் தலை குனிந்து கொள்ள...
"ஹலோ அது புதுசுல்லாம் இல்ல...ரொம்ப பழசு.. எங்காம்மாவே ஒரு ஐம்பது அறுபது தடவை கட்டின இத்து போன சேலை இது...இதுக்கு இப்படி ஒரு பீலிங்கா..."
"தேஜூ..." அவனின் அழுத்தமான குரலில் என்னவென நிமிர்ந்தாள்...
"உன் லைப்ல நீ உருப்படணும்னா ஒன்னே ஒன்னு பண்ணு போதும்...அது பண்ணா...நாளைக்கே நீ கலெக்டரா ஆயிட்டா கூட ஆச்சரியபடுறதுக்கில்ல...."
"ம்ம்...என்ன பண்ணனும் சொல்லுங்க பண்றேன்..."
"ம்ம்..உந்தங்கச்சிய டைவர்ஸ் பண்ணிடு...இல்லேன்னா எங்கயாவது சேது படத்துல வர்ற பாண்டி மடத்துல கொண்டு போய் சேர்த்திரு.. அங்க சங்கிலில கட்டி வச்சாலாவது திருந்தறாலான்னு பார்க்கலாம்.."
"ஹலோ மிஸ்டர் லண்டன் பெல்...வேணாம்...சக்தி அண்ணன திட்ட கூடாதுங்கற ஒரே காரணம் என் வாய கட்டி போட்டிருக்கு..இல்ல..."
சிலிர்த்து கொண்ட கல்பனாவை ஊதி தள்ளுவது போல் அஷ்வத் செய்ய இங்கு இவளும் பழிப்பு காட்ட..மறுபடி தேஜூவிடம் வந்து நின்ற கண்கள் அவளையே பார்க்க...சட்டென திரை மறைந்து போனது..
"அடி பாவி...கொஞ்ச நேரம் அவன டைவர்ட் பண்ண லேப்டாப்ப திருப்புனா நீங்க மொத்தமா அவன உங்க ரூட்ல டைவர்ட் பண்ணிடுவீங்க போலயே... அடியேய் கல்பனா அவ அங்க என்ன பண்றா.."
லேப்டாப் ஆப் அனதுகூட தெரியாமல் வெறும் திரையையே பார்த்து வெட்கத்தில் சிரித்து கொண்டிருந்த தன் அக்காவை விநோதமாய் அப்படியும் இப்படியும் தலை சாய்த்து பார்த்தவள் அவசரமாய் தான் அணிந்திருந்த சேலையை உதறி பார்க்க..மதுராவோ தலையிலடித்து கொண்டார்...
"ஆண்டவா..ஏதோ ஒன்னுன்னா பரவால்ல..என்கிட்ட வர்றது எல்லாமே பைத்தியமா இருக்கே...ஏய் நீ ஏண்டி இப்படி உதறிட்டு இருக்கற... என்னாச்சு..சேலைக்குள்ள எதுனா பூச்சி பூந்துடுச்சா..."
"அய்யோ இல்ல ஆன்ட்டி...நீங்களே நியாயத்த சொல்லுங்க...இவளும் நானும் ஒன்னாதான் சேலைய கட்டினோம்..ஆனா இவ மட்டும் சேலை கட்டினப்புறம் என்னமோ வெட்கப்படுறா... சிவக்கற...சிரிக்கறா..அதான் நானும் என்னோட வெக்கம் நாணமெல்லாம் சேலை கட்டும்போது இங்க எங்கயாவது சிக்கியிருக்குமோன்னு உதறி பார்த்துட்டு இருக்கேன்..."
"ஆஹ் நீ வேற ஏண்டி ....ஆத்தா பரதேவதை நீ சேலைய உதறி இல்ல உருவி பார்த்தாகூட அதுக்கு மட்டும் வாய்ப்பில்ல ராஜா..வாய்ப்பே இல்ல..ஹே சரி..கிளம்பு கிளம்பு நேரமாச்சு..மறுபடி அவன் போன் பண்றதுக்குள்ள கிளம்பு..ந்தா அவள தள்ளிட்டு வா.."
அவசரமாய் அங்கிருந்து ஹாலிற்கு வரவரவே தேஜூவின் போனடிக்கவும்... அவள் யாரென பார்க்காமலே ஏதோ கனவுலகில் மிதந்தபடி போன் எடுக்க..அது அஷ்வத்தின் வீடியோ கால்...
"அம்மா எங்க குடு" ...என்றவனின் வார்த்தை புரியாமல் அவளும் இருந்த மயக்கத்தில் அப்படியே மது புறமாய் திருப்ப...அங்கு பட்டுபுடவையில் இருந்த அம்மாவை பார்த்து பல்லை கடித்தான்..
"எங்கம்மா போற..."
"டேய் டேய்...அஷ்வத் கண்ணா கிளம்பிட்டேண்டா பங்ஷன்கு... இந்த ஒருதடவை மட்டும் போய்ட்டு வந்தர்றேன்.. ப்ளீஸ்...ப்ளீஸ்"
"அவ எங்க அவகிட்ட குடு..."
மது தேஜூவை பாவமாய் பார்த்து கொண்டே போனை திருப்ப..." அம்மா வரமாட்டாங்க..நீங்க போங்க....என்னை கேட்டா உன்னையும் போக வேண்டாம்னுதான் சொல்வேன்..ஆனா அத சொல்ல எனக்கு அந்த ரைட்ஸ் இல்லல்ல...சோ நீ போய்க்க...எங்கம்மா வேண்டாம்.."
அஷ்வத்தின் வார்த்தையில் அதுவரை இருந்த மயக்கம் தெளிந்துவிட..இப்போது இளையவர்கள் இருவரும் சிலிர்த்து கொண்டு சண்டைக்கு கிளம்பினர்..
"ஏன் ஏன் ஏன் வேண்டாம்..ஆன்ட்டி இந்த வீட்ட விட்டு எங்க போறாங்க வர்றாங்க..பாவம் தெரியுமா...சும்மா நீங்க அங்க இருந்துட்டு உங்க அம்மாவ அநியாயத்துக்கு கன்ட்ரோல் பண்றீங்க..என்ன ஒரு பங்ஷன் போக உங்ககிட்ட பர்மிஷன் வாங்கணுமோ... அவங்க என்ன சின்ன புள்ளயா...பாருங்க உங்களுக்கு பயந்துட்டு ஏதோ மலையூர் மம்பட்டியான் மாதிரி சொந்த வீட்டுக்குள்ளயே பெட்சீட்ட போர்த்தீட்டு உட்கார்ந்திருக்காங்க...என்ன நினைச்சு பண்றீங்க இதெல்லாம்..."
இவர்கள் அவ்வளவு திட்டியும் அசையாமல் எல்லாம் கேட்டவன்... "அவங்க வரல அவ்ளோதான்" என்க... ஓடிப்போய் அவர்கள் அப்பா அம்மாவை அழைத்து வந்து பேச செய்தும் அவன் மலையிறங்கவே இல்லை..
"ஆன்ட்டி உங்ககிட்ட அம்மாவோட எல்லா சிட்சுவேஷனும் க்ளியரா சொல்லியிருக்கேன்...இப்போ இப்படி துள்ளி குதிச்சுட்டு போவாங்க..பட் 2 டேஸ்ல பிபீ ஷூட் அப் ஆய்ட்டு விழுந்திருவாங்க...இதெல்லாம் சொல்லிதான உங்கள பார்த்துக்க சொல்லி விட்டுட்டு வந்தேன்..இப்ப நீங்களே இப்படி சொன்னா எப்படி... அதுவும் அந்த ஜானகி ஆன்ட்டி வீட்டுக்கு... அவங்க பேச்சுக்கு.... வேண்டாம் அங்கிள்... அம்மாவ கூட்டிட்டு போகாதீங்க..ஆன்ட்டி உங்களயும்தான்... நீங்களும் போகாதீங்க....நீங்களே போகாதப்ப அவங்க இரண்டு பேரும் எதுக்கு...அவங்களும் போக வேண்டாம்...ஓகேவா ஆன்ட்டி..."
காயூவும் ஜோசப்பும் என்ன சொல்வதென தெரியாமல் திருதிருக்க...சரியாய் சக்தி அந்த பங்ஷன் வீட்டிற்கு போனவன் கையில் இரண்டு கப் ஐஸ்க்ரீம் வித் ஹாட் குலோப் ஜாமூனோடு வந்து...ஒன்றை மட்டும் மதுவிடம் குடுத்தவன் அங்கேயே உட்கார்ந்து மற்றொன்றை கண்ணைமூடி ரசித்து சாப்பிட...
பெண்கள் இருவரும் புசுபுசுவென மூச்சு விட்டு...ஏதோ சொல்ல வந்த மதுராவை கைநீட்டி தடுத்தவர்கள்...
"ஹேட் யூ அஷ்வத்".....என கண்ணை மூடி உச்சஸ்தாயில் கத்த....
சில நொடி பொறுத்தவன்..."ஐ லவ் யூ" ...என தேஜூவை பார்த்து கண்சிமிட்டி சொன்னவன்..."லவ் யூ ஆல் கைஸ்"....என பொதுவாய் பார்த்து கையாட்டி ஒரு முத்தத்தை பறக்கவிட்டான்...
தென்றல் தாலாட்டும்...
"ம்ஹீம்....நீ விடு.... ஆஆஆஆஹ்....ஏண்டி இங்க கடிச்ச..."
"நீ முதல்ல என் கழுத்த விடு...ஆஆஆஹ்.... மாறி மாறி பெரியவளும் சிறியவளும் கிடந்து உருள...தேஜூ கிடைத்த இடைவெளியில் கல்பனாவின் கையை மறுபடி கடித்து தப்பித்தவள்...பெட்டில் ஏறி குதித்து ஓடும் முன்பே அவளின் ஒற்றை கால் தங்கையிடம் மாட்ட... இவள் வேண்டாமென கத்த கத்தவே காலை நன்றாய் பிடித்து இழுத்து விட...அப்படியே குப்புறடித்து தரையில் விழுந்தாள்...
"அய்யோம்மா...அய்யோ...இடுப்பெலும்பு போச்சு...அய்யோ மா....காப்பாத்துமா..."
இப்போதில்லை...கடந்த அரை மணி நேரமாகவே நடந்த இந்த ரெஸ்ட்லின் சண்டைக்கு நடுவராக எவ்வளவு முறை அழைத்தும் காயத்திரி மட்டும் எட்டி பார்க்கவே இல்லை(பயபுள்ள கிரேட் எஸ்கேப்)...மாறி மாறி அடித்து ஓய்ந்தவர்கள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்படியே இருந்த இடத்தில் இருந்தபடியே கவிழ்ந்து விட...தேஜூதான் பேச முடியாமல் பேசினாள்..
"அடியே...ஹ ஹ...அய்யோ முடியலயே...அடியேய் ஏய்...சில்வண்டு ஏண்டி வந்ததும் வராததுமா என்னை போட்டு இந்த அடி அடிக்கற...யம்மா என்னா அடி அடிக்குறா...அட லூசே என்னன்னு சொல்லி தொலை...இல்லே..."
"இல்லேன்னா..."
"இல்லேன்னா ஒன்னும் பிரச்சனையில்ல...தேஜூக்கு நாளைக்கு வைக்க போற RIP ஸ்டேட்டஸ்க்கு போட்டோ ஒன்னு செலக்ட் பண்ணி அப்புறமா என்கிட்ட வாங்கிக்க... சரியா...இப்ப முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு..."
இன்னும் முழுதாய் பேச முடியாமல் தேஜூ பக்கத்திலிருந்த மிராண்டா பாட்டிலை எட்டி எடுத்தவள் அதை குடிக்க குடிக்க கல்பனா என்ன நினைத்தாளோ மறுபடி எட்டி ஒரு உதை விட...தெறித்து போய் ஸ்டூலை தள்ளி விழுந்தாள்..
"அடியேய்...உனக்கென்ன பேய் புடிச்சுடுச்சா....காஞ்சனா படத்துல நடிக்குற பேய்க்கெல்லாம் உன் உடம்ப எதுவும் கம்மி விலைல வாடக்கைக்கு விட்டுட்டியா என்ன....திடீர் திடீர்னு அடிக்கற....இத குடிச்சதுக்கு ஏன்டி அடிச்ச...இப்ப எனக்கு தெரிஞ்சாகணும்.. சொல்லுடி..பிசாசே.."
"நீ இந்த கருமத்த குடிச்சதுக்கு இல்லடி என் பட்டர் கட்டரு....இது மாதிரி ஒரு ஓசி ஜூஸூக்கு ஆசப்பட்டு என்னை பத்தி அவன்ட்ட என்னடி சொன்ன நீ??..."
"எவன்ட்ட"
"ஏய் ஏய் நடிக்காத....அதான் அந்த பைக்காரன்கிட்ட என்னடி சொல்லி தொலைஞ்சிருக்க... எந்தங்கச்சி நல்லா பாடுவா... செமய்யா டேன்ஸ் ஆடுவா... டெய்லி ஜிம் போறா...அவ சமைச்சா எங்க வீட்டு நாயெல்லாம் போய் அக்கம் பக்கத்துல இருக்கற மத்த நாய்ங்கள கூட்டிட்டு வர்ற அளவுக்கு செம்மயா சமைப்பான்னு எல்லாம்.... என்ன...என்ன ஈரக்கூந்தலுக்குடி நீ சொன்ன...அவன் சொல்றான்... நான்தான் அவன் டிரீம் வைப்பாம்...எனக்காகத்தான் அவன் பொறந்து இத்தனை நாளா காத்திருக்கானாம்... இன்னும் ரெண்டு நாள்ள அவன் அப்பா அம்மாவ கூட்டிட்டு இங்க பொண்ணு கேக்க வர்றானாம்... அப்ப நான்தான் சமைக்கனுமாம்.... நினைச்சு பாருடி.... வெங்காய சாம்பாரில் வீழ்ந்த வாலிபரின் வாழ்க்கை... வயதுப்பெண்ணின் வெறிச்செயல்...வானாவுக்கு வானான்னு பேப்பர்ல போட்டு என் வாழ்க்கையையே மொத்தமா முடிச்சிடுவானுங்க... உன்ட்ட என்னை பத்தி அந்த மெண்டல்கிட்ட நல்லா சொல்லுன்னு சொன்னேனா... சொல்லுடி...சப்போஸ் அவன் வந்து என்னை பாட சொன்னா கூட கியா மியா சாங் மட்டும்தான் மனப்பாடம்.. அதுல்லாம் பாடுனேன்னா அவன் செத்துருவான்டி... செத்துருவான்..."
"அய்யய்யோ...அவன் இவகிட்ட எதுவும் மூச்சு விட மாட்டேன்னு சொன்னத நம்பிதான இவ்ளோ பொய்ய பப்ளிக்கா சொன்னேன்...பரதேசி கடைசில என் மூச்சவே நிறுத்த பிளான் பண்ணிட்டானே படுபாவி பய..."
கண்ணை அங்குமிங்கும் உருட்டி அவசரமாய் யோசித்தவள்...சட்டென முகத்தை பாவமாய் வைத்து கொண்டாள்..
"விடுடி கல்ப்ஸ்...எப்படியும் நீ சமைச்சாலும் பாடுனாலும் இல்ல டேன்ஸ் ஆடி இந்த ப்ளோர் உடைஞ்சு அவன் மண்டைல விழுந்தாலும் ஆக மொத்தம் அவன் இன்னும் இரண்டு நாள்ள சாகப்போறது உறுதி ...அப்படி நாளைக்கு சாகப்போறவனுக்காக 22 இயர்ஸா கூடப்பொறந்தவள இப்படி அடிக்கற பார்த்தியா..டூ பேட் யூ நோ..."
"அடியேய்..அவனாவது இரண்டு நாள் கழிச்சுதான் சாவான்... ஆனா நீ இப்பவே இங்கயே சாவடி.... பார்க்கறியா.. பார்க்கறியா...இந்தா பாரு.."
பேசியபடியே தேஜூவை கீழே தள்ளி மேலே ஏறியவள் கையிலிருந்த ஷாலை போட்டு கழுத்தை நெறிக்க....தேஜூ என்ன செய்தும் அவளை கீழே தள்ள முடியவில்லை...
"குந்தானி சிறுக்கி இந்த ஆட்டம் ஆடுறேன்...கீழ விழறாளான்னு பாரு..."
ம்ஹூம்...கல்பனா அசையவேயில்லை...வேறு வழியில்லாமல் தேஜூ தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டியவள் இப்போது கல்பனாவின் மேலேறி முடியை பிடித்து ஆட்ட...சிறியவள் கத்திய கத்தில் அவர்கள் வீட்டின் சொர்க்கவாசல் படீரென திறந்தது..
இருவரின் தலையும் மற்றொருவரின் கையிலிருக்க...வேர்த்து பூர்த்து வெறியோடு மூச்சு விட்டிருந்த இருவரும் காயத்திரியை ஒரு நம்பிக்கையோடு பார்த்தனர்...
"ஸாரி பார் த டிஸ்டர்பன்ஸ் கேர்ள்ஸ்...வெங்காய பக்கோடா சூடு ஆறிடுமே... சாப்பிட கூப்டலாமேன்னு வந்தேன்...இரண்டு பேரும் பிஸியா இருக்கீங்க போல...சரி ஓகே...அப்பறமா ப்ரீ ஆகிட்டு வாங்க....சாப்பிடுவீங்களாம்.."
சொன்னவர் மறுபடி கதவை அடித்து சாத்திவிட்டு போய்விட....பெண்கள் இருவரும் பேவென ஒருவரையொருவர் பார்த்தவர்கள் அவசரமாய் கதவை திறந்து ஓடினர் பக்கோடாவிற்காக...
அவசரமாய் நாலு தட்டை உள்ளே தள்ளியபின்பே கண்பார்வை தெளிவாகவும்...இப்போது ஒருவரின் கசங்கிய தோற்றத்தை பார்த்து மற்றவர் சிரிக்க...சற்று நேரம் அந்த வீடே அகோரிகளின் சத்தத்தில் அதிர்ந்தது...
"சரி தின்னுட்டீங்கன்னா கிளம்புங்க... ஷாப்பிங் போகணும்.."
அம்மாவின் வார்த்தையில்... தேஜூ கல்பனா இருவருக்கும் டிரெண்டில் இருக்கும் ஆடைகள் அதன் விலையோடு கண்களின் மின்ன...ஆசையாய் பார்த்து தலையாட்டி கொண்டனர்..
"தேஜூ சக்தி சைஸ் உனக்கு தெரியுமா..."
"என்ன சைஸ் எதுக்கு சைஸ்.."
"ஆமா பின்ன வேண்டாமா... பர்சேஸே அவனுக்காகதான்... அதான் ஷர்ட் சைஸ் தெரியுமா கேக்கறேன்..."
"மா இதெல்லாம் அநியாயம்...அப்ப எங்களுக்கு இல்லையா...சக்திக்கு எடு..வேணாங்கல..அப்படியே எங்களுக்கும் எடும்மா...ப்ளீஸ் ப்ளீஸ்..."
"ஏய் அடங்குங்கடி..உங்களுக்கு என்னாத்துக்கு....அடிச்சு கிழிச்சுக்கவா...பைத்தியங்களா...அந்த பையன் சக்தி எவ்ளோ தங்கம் தெரியுமா...அப்படி ஒரு பையன பெத்ததுக்கு மது புண்ணியம் பண்ணிருக்கணும்...நானும் பெத்துருக்கேனே...கடவுளே கடவுளே....உங்கள எல்லாம் பெத்த டைம்ல தமிழ் படம் 1st பார்ட்ல வர்ற மாதிரி கள்ளிபால் சேஷே மட்டும் கிடைச்சிருந்தது...."
"கிடைச்சிருந்தா..."...தேஜூ எடுத்து கொடுக்க...
"ம்ம்ம்...கள்ளிப்பால் ஊத்தி உன்னை கொன்னுட்டு என்னை மட்டும் பெத்திருந்திருப்பாங்க... இல்லம்மா..."
"இல்ல...அவளுக்கு பாதி குடுத்துட்டு உனக்கு மிச்சத்த எடுத்து ஸ்டாக் வச்சிருப்பேன்.. பொண்ணுங்களாடி நீங்க... அரை மணி முன்னாடி என்ன கத்து கத்துனீங்க...சக்தி என்னைக்காவது அப்படி பேசி பார்த்திருக்கியா.."
"மா அவன ரொம்ப புகழாத... என்ன இருந்தாலும் நாங்க உன் பொண்ணுங்க...சிலபல விஷயங்களுக்கு நீ எங்ககிட்டதான் வரணும்..."
"நீ மூடு...ரொம்ப தாளிக்காத...என்னடி தெரியும் உனக்கு அவனப்பத்தி...போன மாசம் பஸார் போய்ட்டு வந்தப்ப பீரியட்ல என் சேலைல எல்லாம் அசிங்கமா ஆயிடுச்சு...எனக்கு என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுட்டு நின்னேன்... சக்திதான் சட்டுனு அவன் ஜெர்கின் கழட்டி மாட்டுவிட்டு வீடு வரை எல்லாம் கொண்டு வந்து குடுத்தான் தெரியுமா... அப்புறமும் போய் மதுகிட்ட கேட்டு எனக்கு ஜூஸ்லாம் கொண்டு வந்து தந்தான்... அவன் பையன்டி... சொக்க தங்கம்...நீங்களும்தான் இருக்கீங்களே... தண்டங்க... முடியலேன்னு ஒரு டம்ளர் மோர் கேட்டாகூட ஆளுக்கு பாதி குடிச்சுட்டு கால்வாசி தருவீங்க.. போய் தொலைங்க..நானே போய்க்கறேன்.."
என்னதான் அவர்களுக்குள் அடித்தாலும் கடித்து புரண்டாலும்...சக்தி என்று வந்துவிட்டால் எப்போதும் அவர்கள் ஒன்றாகி விடுவர்...ஏனெனில் இந்த அராத்துகள் செய்யும் எந்த வேலையையும் அவன் யாரிடமும் சொல்லவே மாட்டான்..அத்தோடு அழகாய் சிரித்தபடி அவர்களை பார்த்திருக்கும் அந்த சிறியவனை கண்டால் இவர்களுக்கும் அவ்வளவு பிடிக்கும்...எனவே அந்த நாள் சக்திக்கான உடை தேர்வில் மனநிம்மதியோடும் பெண்களின் செல்ல முணுமுணுப்போடும் கழிந்துவிட...அடுத்த நாள் களேபரமாய் விடிந்தது...
அன்று அவர்களின் அபார்ட்மெண்டில் இருந்த பல நட்பு குடும்பங்களில் ஒன்றான ஜானகி ஆன்ட்டியின் மருமகளுக்கு வளைகாப்பு... சற்றே அலட்டல் பேர்வழியான ஜானகி ஆன்டியின் பெரிய தொண்டைக்கு பயந்தே அங்கிருந்த அநேகம் பேர் அங்கு கிளம்பி விட...இந்த இளையவர் பட்டாளம் அட்டகாசமாய் குதூகலமாய் கிளம்பி வந்தது...
காய்த்ரி மற்ற விஷயங்களில் ஜாலியான அம்மா என்றாலும் இதுபோன்ற குடும்ப விழாக்களின் போது அவர் பெண்களின் உடை தேர்வு கண்டிப்பாக சேலையாகத்தான் இருக்கும்...அழகாய் பட்டுசேலை கட்டி தலைநிறைய பூ...வளையல் பொட்டு என பெண்கள் இருக்கும் அழகே தனி என்ற எண்ணத்தை அழகாய் பிள்ளைகளிடமும் கடத்தியிருக்க...அவர்களும் விரும்பியே அதை அணிவர்... அது போல இன்றும் பிங்க் மற்றும் மெரூன் கலர் சேலையில் அசரடிக்கும் அழகோடு கிளம்பியவர்கள் முதலில் போய் நின்ற இடம் பக்கத்திலிருந்த மதுரா ஆன்ட்டியின் வீடு..
என்ன தட்டியும் பதில்லாமல் போக...சற்று பொறுத்து கதவை திறந்து உள்ளே போக... அவர்களின் ஆசை ஆன்ட்டியோ பெட்சீட்டை முழுதாய் முதுகுவழியே சுற்றி உட்கார்ந்திருக்கவும்...என்னவோ என பயந்து போயினர்..
"ஆன்ட்டி என்னாச்சு ஆன்ட்டி... ஏன் இப்படி பெட்சீட்டை போர்த்திட்டு இருக்கீங்க.."
"அடடே..வாங்க பொண்ணுங்களா...என்ன இவ்வளவு தூரம்...காலைலயே சேலை கட்டிட்டு ஜாகிங்கா... ம்ம்...சூப்பர்... ரோட்ல நாயையெல்லாம் பயமுறுத்தாம பார்த்து ஓடுங்க போங்க " பேசிக்கொண்டே லேப்டாப்பை காட்டி அவர் கண்ஜாடை காட்ட அதை அந்த பேக்குகள் இரண்டும் கவனிக்கவே இல்லை..
"எதே...எங்கயா...இன்னைக்கு ஜானகி ஆன்ட்டி வீட்டு பங்ஷன்...கண்டிப்பா போகணும்னு நீங்கதான சொன்னீங்க...இந்த சேலை கூட நீங்கதான செலக்ட் பண்ணீங்க.."
"அப்படியா..அப்படீன்னா அப்படிதான்..." மறுபடி ஜாடை காட்ட...இப்போது ஏதோ புரிந்தது..
"யாரும்மா...காஞ்ஜரிங் பேமிலியா... வந்துடுச்சா..."
"ஆமாப்பா ஆமா...அதே காஞ்சி போன பேமிலிதான் பார்க்கறியா..பாரு அட பயப்படாம பாருடா..."
சொன்னவர் சட்டென லேப்டாப்பை இவர்கள் புறம் திருப்பி விட..அதன் வழியே சட்டென வந்து விழுந்த பிம்பத்தில் இரு புறத்தில் இருந்தவர்களும் உறைந்து போயினர்..
தேஜூவிற்கோ அன்று அவள் ஆன்ட்டி சொன்ன அந்த இளவயது பாலகன் அஷ்வத்தின் தாக்கமெனில்.. அஷ்வத்திற்கோ இதுவரை சுடிதார் ஜீன்ஸில் கண்றாவியாய் சுற்றிய ஒருத்தியை அழகாய் பாந்தமாய் சேலையில் கண்ட இனிய அதிர்ச்சி...ஏற்கனவே தேஜூவின் குறும்புகளின் செல்ல ரசிகன் எனும்போது அவனின் செல்ல ராட்சசி இப்படி அழகோவியமாய் நிற்க பேச்சே வரவில்லை... இமைக்காமல் பார்த்திருந்தான்...
"ஓய்.." அவனின் அழைப்பு அவனுக்கே கேட்கவில்லை... ஆனால் பெண்ணவளை சரியாய் மென்மையாய் தீண்டியது..
"ம்ம்ம்..என்ன ஓய்..."
"என்ன புதுசா சேலையெல்லாம்.."
குறுகுறுவென பார்த்தபடி கேட்ட அவன் கேள்வியில் தேஜூவிற்கு சட்டென முகம் சிவந்து போய் அவள் தலை குனிந்து கொள்ள...
"ஹலோ அது புதுசுல்லாம் இல்ல...ரொம்ப பழசு.. எங்காம்மாவே ஒரு ஐம்பது அறுபது தடவை கட்டின இத்து போன சேலை இது...இதுக்கு இப்படி ஒரு பீலிங்கா..."
"தேஜூ..." அவனின் அழுத்தமான குரலில் என்னவென நிமிர்ந்தாள்...
"உன் லைப்ல நீ உருப்படணும்னா ஒன்னே ஒன்னு பண்ணு போதும்...அது பண்ணா...நாளைக்கே நீ கலெக்டரா ஆயிட்டா கூட ஆச்சரியபடுறதுக்கில்ல...."
"ம்ம்...என்ன பண்ணனும் சொல்லுங்க பண்றேன்..."
"ம்ம்..உந்தங்கச்சிய டைவர்ஸ் பண்ணிடு...இல்லேன்னா எங்கயாவது சேது படத்துல வர்ற பாண்டி மடத்துல கொண்டு போய் சேர்த்திரு.. அங்க சங்கிலில கட்டி வச்சாலாவது திருந்தறாலான்னு பார்க்கலாம்.."
"ஹலோ மிஸ்டர் லண்டன் பெல்...வேணாம்...சக்தி அண்ணன திட்ட கூடாதுங்கற ஒரே காரணம் என் வாய கட்டி போட்டிருக்கு..இல்ல..."
சிலிர்த்து கொண்ட கல்பனாவை ஊதி தள்ளுவது போல் அஷ்வத் செய்ய இங்கு இவளும் பழிப்பு காட்ட..மறுபடி தேஜூவிடம் வந்து நின்ற கண்கள் அவளையே பார்க்க...சட்டென திரை மறைந்து போனது..
"அடி பாவி...கொஞ்ச நேரம் அவன டைவர்ட் பண்ண லேப்டாப்ப திருப்புனா நீங்க மொத்தமா அவன உங்க ரூட்ல டைவர்ட் பண்ணிடுவீங்க போலயே... அடியேய் கல்பனா அவ அங்க என்ன பண்றா.."
லேப்டாப் ஆப் அனதுகூட தெரியாமல் வெறும் திரையையே பார்த்து வெட்கத்தில் சிரித்து கொண்டிருந்த தன் அக்காவை விநோதமாய் அப்படியும் இப்படியும் தலை சாய்த்து பார்த்தவள் அவசரமாய் தான் அணிந்திருந்த சேலையை உதறி பார்க்க..மதுராவோ தலையிலடித்து கொண்டார்...
"ஆண்டவா..ஏதோ ஒன்னுன்னா பரவால்ல..என்கிட்ட வர்றது எல்லாமே பைத்தியமா இருக்கே...ஏய் நீ ஏண்டி இப்படி உதறிட்டு இருக்கற... என்னாச்சு..சேலைக்குள்ள எதுனா பூச்சி பூந்துடுச்சா..."
"அய்யோ இல்ல ஆன்ட்டி...நீங்களே நியாயத்த சொல்லுங்க...இவளும் நானும் ஒன்னாதான் சேலைய கட்டினோம்..ஆனா இவ மட்டும் சேலை கட்டினப்புறம் என்னமோ வெட்கப்படுறா... சிவக்கற...சிரிக்கறா..அதான் நானும் என்னோட வெக்கம் நாணமெல்லாம் சேலை கட்டும்போது இங்க எங்கயாவது சிக்கியிருக்குமோன்னு உதறி பார்த்துட்டு இருக்கேன்..."
"ஆஹ் நீ வேற ஏண்டி ....ஆத்தா பரதேவதை நீ சேலைய உதறி இல்ல உருவி பார்த்தாகூட அதுக்கு மட்டும் வாய்ப்பில்ல ராஜா..வாய்ப்பே இல்ல..ஹே சரி..கிளம்பு கிளம்பு நேரமாச்சு..மறுபடி அவன் போன் பண்றதுக்குள்ள கிளம்பு..ந்தா அவள தள்ளிட்டு வா.."
அவசரமாய் அங்கிருந்து ஹாலிற்கு வரவரவே தேஜூவின் போனடிக்கவும்... அவள் யாரென பார்க்காமலே ஏதோ கனவுலகில் மிதந்தபடி போன் எடுக்க..அது அஷ்வத்தின் வீடியோ கால்...
"அம்மா எங்க குடு" ...என்றவனின் வார்த்தை புரியாமல் அவளும் இருந்த மயக்கத்தில் அப்படியே மது புறமாய் திருப்ப...அங்கு பட்டுபுடவையில் இருந்த அம்மாவை பார்த்து பல்லை கடித்தான்..
"எங்கம்மா போற..."
"டேய் டேய்...அஷ்வத் கண்ணா கிளம்பிட்டேண்டா பங்ஷன்கு... இந்த ஒருதடவை மட்டும் போய்ட்டு வந்தர்றேன்.. ப்ளீஸ்...ப்ளீஸ்"
"அவ எங்க அவகிட்ட குடு..."
மது தேஜூவை பாவமாய் பார்த்து கொண்டே போனை திருப்ப..." அம்மா வரமாட்டாங்க..நீங்க போங்க....என்னை கேட்டா உன்னையும் போக வேண்டாம்னுதான் சொல்வேன்..ஆனா அத சொல்ல எனக்கு அந்த ரைட்ஸ் இல்லல்ல...சோ நீ போய்க்க...எங்கம்மா வேண்டாம்.."
அஷ்வத்தின் வார்த்தையில் அதுவரை இருந்த மயக்கம் தெளிந்துவிட..இப்போது இளையவர்கள் இருவரும் சிலிர்த்து கொண்டு சண்டைக்கு கிளம்பினர்..
"ஏன் ஏன் ஏன் வேண்டாம்..ஆன்ட்டி இந்த வீட்ட விட்டு எங்க போறாங்க வர்றாங்க..பாவம் தெரியுமா...சும்மா நீங்க அங்க இருந்துட்டு உங்க அம்மாவ அநியாயத்துக்கு கன்ட்ரோல் பண்றீங்க..என்ன ஒரு பங்ஷன் போக உங்ககிட்ட பர்மிஷன் வாங்கணுமோ... அவங்க என்ன சின்ன புள்ளயா...பாருங்க உங்களுக்கு பயந்துட்டு ஏதோ மலையூர் மம்பட்டியான் மாதிரி சொந்த வீட்டுக்குள்ளயே பெட்சீட்ட போர்த்தீட்டு உட்கார்ந்திருக்காங்க...என்ன நினைச்சு பண்றீங்க இதெல்லாம்..."
இவர்கள் அவ்வளவு திட்டியும் அசையாமல் எல்லாம் கேட்டவன்... "அவங்க வரல அவ்ளோதான்" என்க... ஓடிப்போய் அவர்கள் அப்பா அம்மாவை அழைத்து வந்து பேச செய்தும் அவன் மலையிறங்கவே இல்லை..
"ஆன்ட்டி உங்ககிட்ட அம்மாவோட எல்லா சிட்சுவேஷனும் க்ளியரா சொல்லியிருக்கேன்...இப்போ இப்படி துள்ளி குதிச்சுட்டு போவாங்க..பட் 2 டேஸ்ல பிபீ ஷூட் அப் ஆய்ட்டு விழுந்திருவாங்க...இதெல்லாம் சொல்லிதான உங்கள பார்த்துக்க சொல்லி விட்டுட்டு வந்தேன்..இப்ப நீங்களே இப்படி சொன்னா எப்படி... அதுவும் அந்த ஜானகி ஆன்ட்டி வீட்டுக்கு... அவங்க பேச்சுக்கு.... வேண்டாம் அங்கிள்... அம்மாவ கூட்டிட்டு போகாதீங்க..ஆன்ட்டி உங்களயும்தான்... நீங்களும் போகாதீங்க....நீங்களே போகாதப்ப அவங்க இரண்டு பேரும் எதுக்கு...அவங்களும் போக வேண்டாம்...ஓகேவா ஆன்ட்டி..."
காயூவும் ஜோசப்பும் என்ன சொல்வதென தெரியாமல் திருதிருக்க...சரியாய் சக்தி அந்த பங்ஷன் வீட்டிற்கு போனவன் கையில் இரண்டு கப் ஐஸ்க்ரீம் வித் ஹாட் குலோப் ஜாமூனோடு வந்து...ஒன்றை மட்டும் மதுவிடம் குடுத்தவன் அங்கேயே உட்கார்ந்து மற்றொன்றை கண்ணைமூடி ரசித்து சாப்பிட...
பெண்கள் இருவரும் புசுபுசுவென மூச்சு விட்டு...ஏதோ சொல்ல வந்த மதுராவை கைநீட்டி தடுத்தவர்கள்...
"ஹேட் யூ அஷ்வத்".....என கண்ணை மூடி உச்சஸ்தாயில் கத்த....
சில நொடி பொறுத்தவன்..."ஐ லவ் யூ" ...என தேஜூவை பார்த்து கண்சிமிட்டி சொன்னவன்..."லவ் யூ ஆல் கைஸ்"....என பொதுவாய் பார்த்து கையாட்டி ஒரு முத்தத்தை பறக்கவிட்டான்...
தென்றல் தாலாட்டும்...