• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN 8

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai
தான் சொன்ன வார்த்தையால் தான் ஆதி இன்று தன்னுடன் வந்து இருக்கிறான் என்று கூட அறியாத ஆரண்யாவிற்கு இந்த பயணம் அத்தனை சந்தோஷமாய் இருந்தது.

அவளுக்கே இந்த வெளி நாட்டு பயணம் புதிது,அதும் அவள் நேசிக்கும் ஆதியுடன் முதல் விமான பயணம். அவன் எந்த காரணத்திற்காக வந்து இருந்தாலும் அது எல்லாம் இப்போது அவளுக்கு கவலை இல்லை அவளுக்கு இந்த பயணம் அத்தனை சந்தோஷமாய் உற்சாகமாய் இருந்தது.
ஃப்லைட் அனௌன்ஸ்மென்ட் வரவும், இவர்கள் எல்லாரும் ஃப்லைட் ஏற, "டேய்! விண்டோ சீட் குடுடா" என்று ஆரண்ய மிதுனிடம் கேட்டு கொண்டு இருந்தால்,
எதோ பேசுகிறார்கள் என்று ஆதி நினைத்து இருக்க, மிதுன் "முடியாது முடியாது நான் விலாக் எடுக்கணும் "என்று அவன் சொல்லவும் ஆரண்யா சோகமாவதை கண்டு ஆதி "என்ன ஆச்சு?" என்று அவர்களிடம் வந்தான்.

ஆதி வந்ததும் "இல்லை பாஸ் அது..." என்று மிதுன் தடுமாறா
"சொல்லுங்க என்ன ?" என்று அவன் மீண்டும் கேட்க
"இல்லை ஆரண்யாக்கு விண்டோ சீட் வேணுமாம்" என்று மிதுன் சொல்ல

அவளை முறைத்தவன் உடனே . "don't be சில்லி" என்று முன்னே நடக்க.

ஆரண்யாவை பார்த்து நக்கலாய் சிரித்தபடி மிதுன் செல்ல அவன் தலையில் தட்டியவள் "குட்டி குரங்கே, இத debug பன்ன ஹெல்ப் பண்ணு, மெயில் அனுப்ப ஹெல்ப் பண்ணுனு வருவலடா அப்போ இருக்கு உனக்கு" என்று சொல்லிவிட்டு அவள் ஃப்லைட் உள் சென்றால்.

அவனோ விலாக் எடுத்து கொண்டு பொறுமையா நடந்தான்.

உள்ளே சென்ற ஆரண்யா அவள் சீட் தேடிக்கொண்டு பொறுமையா வர சட்டென்று ஆதி எழுந்து நிற்க அவள் ஒரு நொடி அவன் மேல் மோதி பயந்து நின்றால்.

"எதுக்கு இப்படி வந்து நிக்கிறீங்க?" என்று கடுப்பாய் கேட்டவள் சுத்தி பார்க்க, "உள்ளே உக்கார்" என்றான்,

அவள் அவனை பார்க்க "விண்டோ சீட் வேணும்னு கேட்ட இல்லையா, போ என் சீட் தான் உக்கார் "என்று சொல்ல

அவள் கண்கள் உடனே விரிந்தது.

"என்ன ? உள்ள போ எல்லாரும் வராங்க இப்படி நின்னு வழியை ஜாம் பன்ன போறியா ?" என்று அவன் கேட்க

உடனே வேகமாய் தன் ஹேண்ட் பாக் எடுத்து மேலே வைக்க, அவள் அணிந்து இருந்த சட்டை கொஞ்சம் மேலே தூக்கி அவள் இடை தெரிய, ஒரு நொடி தடுமாறியவன், அவளிடம் "நீ ப்ரீ ஷோ காட்டினது போதும் என்கிட்ட கொடு" என்று அவள் பேக் வாங்கியவன் அதை மேலே வைத்தான் இவளோ என்ன சொல்றான் என்று புரியாமல் அவனை பார்த்த படி அவள் சீட்டில் அமர்ந்தாள் .

அவனும் அதன் பின் அவள் அருகில் அமர." தேங்க்ஸ்" என்றால் .

அவன் அவளை பார்த்து விட்டு ஃபோன் எடுக்க சரியா அந்த நேரம் அவனுக்கு தன் தந்தையிடம் இருந்து கால் வந்தது.

"சொல்லுங்க டாட், எஸ் ஃப்லைட் ஏறிட்டேன். சரி டாட் பிரண்ட்ஸ் பார்க்கன்னு வெளியில் ரொம்ப நேரம் இல்லாமல் சிக்கிரம் வீட்டுக்கு வந்து சாப்டுங்க வெளிய சாப்பிட கூடாது சரியா ? "என்று அவன் சொல்ல

அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ, "ஆமா உங்க மருமக கையில் சாப்பிடனுமா ? நான் என்ன குக்கையா கல்யாணம் பன்ன போறேன் உங்களுக்கு சமச்சி போட்டுடு வீட்டில் உக்காரா ? அது எல்லாம் என் அளவிற்கு படித்த பொண்ணாய் நம்ம கம்பெனியை என்கூட சேர்ந்து பார்த்துகிறவள தான் கல்யாணம் பண்ணுவேன். உங்க கற்பனை எல்லாம் மூத்த கட்டி வசித்து படுங்க. ரீச் ஆனதும் கால் பண்றேன்." அந்த பக்கம் என்ன சொல்ல பாடதோ இவன் இங்கு "மிஸ் யூ டாட்!" என்று சொல்லி ஃபோன் வைத்தான்.

அவன் பேசியது விழி எடுக்காது அவள் பார்த்து கொண்டு இருந்தால்.

"ஃபோன் எடுத்து ஃப்லைட் மோட் மாற்றியவன், ஃபோன் ஃப்லைட் மோட் போட்டுட்டு இந்த காட்டன் காதுல வச்சிக்கோ "என்று அவன் சொல்லியபடி திரும்ப

அவள் அவனை பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தது. "வாட் ?"
"நீங்க உங்க அப்பாகிட்டையா பேசிட்டு இருந்தீங்க ?"
"டாட் என்றால் அப்பா தான " என்று அவன் கேட்க
"இல்லை இப்படி கூட அப்பா பையன் பேசுவாங்களா?" அவள் ஆச்சரியமா கேட்க
"புரியலை "
"இல்லை நான் எல்லாம் என் அப்பா கிட்ட இப்படி எல்லாம் பேசினது இல்லை அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் " என்று அவள் சொல்ல
"ஓ !!" என்றான்.

"உங்க அம்மா எப்படி ?" என்று அவள் கேட்க
"அவங்களை நான் பெருசா பார்த்த மாறி ஞாபகம் இல்லை நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துடாங்க" என்றான்.
என் ஆதிக்கு அம்மா இல்லையா என்று அவள் மனம் வாடியது பின் மெல்லமாய் சாரி என்றால்.
"ஃபோன் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு இதை காதில் வை டேக் ஆஃப் அப்போ காது ரொம்ப அடைக்கும்." என்றான்

உடனே அவன் சொல்லியது போல் செய்தவள்.

மிதுன் அபி, சாரா மூவரையும் தேட "இப்போ என்ன?" என்றான்.

"இல்லை அவங்க மூணு பெரு எங்க என்று பார்க்குறேன், எல்லாரும் ஒன்னா வந்து இருக்கலாம் இல்லையா அவங்க எங்கையாச்சு போய்ட போறாங்க" என்று அவள் கொஞ்சம் பதட்டமாய் சொல்ல

"நீங்க எல்லாம் என்ன ? ஸ்கூல் பசங்களா ? லைன்னா நீக்க வச்சு கை புடிச்சு ஒன் பை ஒன் வர சொல்ல, அது எல்லாம் வந்துடுவாங்க எல்லாருக்கும் ஸ்டே அண்ட் அதர் டீட்டைல்ஸ் எல்லாமே மெயில் பண்ணிற்கு, லேண்ட் ஆனதும் பிக்கப்க்கு ஆள் வந்துடுவாங்க அப்புறம் என்ன ?" என்று அவன் சொல்ல

"ஹம் என்னை விட சின்ன பசங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க எனக்கு தான் கொஞ்சம் பயமா இருக்கு ஃபர்ஸ்ட் டைம் நாளா இப்படி இருக்கோ என்று அவள் மனதுக்குள் நினைத்து கொண்டால்.

அடுத்த 10 நிமிடத்தில் ஃப்லைட் டேக் ஆஃப் ஆக, "முருகா முருகா முருகா என்று கண்களை நன்றாக மூடியபடி கை கூப்பி அவள் முனங்க ஆரம்பிக்க

ஆதியோ அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான், ஏன் என்று தெரியவில்லை இத்தனை நாள் அவனுக்குள் இருந்த இறுக்கம் இவள் தன் கம்பெனிக்கு வந்ததில் இருந்து கொஞ்சம் தொலைந்து போயிர்ந்தது.

அவனுக்கே தெரியவில்லை எப்படி இவளுடன் இவளோ சகஜமாய் தன்னால் இருக்க முடிகிறது கல்லூரி நாட்களில் இவள் என்றால் அவனுக்கு சுத்தமாய் பிடிக்காது.

ஆனால் இன்று அவள் அருகாமையை விரும்பியே ஏற்கிறான், அது இல்லாமல் இவளுக்காக 3 மாதம் இப்படி கம்பெனியை விட்டு விட்டு பயணம் செய்கிறான் இது எல்லாம் 6 மாதம் முன் நடக்குமா என்று கேட்டு இருந்தால் சத்தியமாய் சிரித்து இருப்பான்.

ஏனோ இந்த 6 மாதம் அவள் தன் திறமையை நிரூபிக்க அவள் செயல்களா என்று தெரியவில்லை தன்னை அறியாமல் அவன் மனம் அவளை சுற்றியது, அதிலும் அவள் தன்னை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் இன்னும் அத்தனை உற்சாகம், அதுவே அவன் இறுக்கத்தை விடுத்து அவளிடம் பழக தூண்டி இருக்கிறது.



ஆதி ஆரண்யா வருவார்கள் 💜


இனிமேல் ஜாலி லவ் ஸ்டோரி காத்து கொண்டு இருக்கிறது மறக்காமல் லைக் அண்ட் கமெண்ட் பண்ணிடுங்க பிரண்ட்ஸ்

குட் நைட்