அத்தியாயம் 2
கல்லூரி நினைவுகள் – மறைந்த உண்மைகள்


சென்னையின் மழையான இரவு. அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகள் ஆரண்யாவின் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. அதிலும், CEO ஆதி கூறிய வார்த்தைகள்:
"இந்த இடத்தில் இருக்க கூட உனக்கு தகுதி இல்லை போல ."
அந்த வார்த்தைகளில் ஒரு விதமான அவமானம் இருந்தது. ஆனால் அதைவிட அவனது முகம், அவன் பார்வை, அவன் நடையிலிருந்த அந்த தன்னம்பிக்கை நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது. அவளுக்கு அந்த முகம் புதிதல்ல என்று தோன்றியது.
அவள் தனது பழைய கல்லூரி ஆல்பத்தை எடுத்தாள். பக்கங்களைத் துழாவி பார்த்தாள். ஒரு புகைப்படத்தில் இருந்த ஒரு இளம் முகம் – அந்த பார்வை, அந்த தன்னம்பிக்கை – அது ஆதி தான். ஆம், ஆதி மற்றும் ஆரண்யா ஒரே கல்லூரியில் இருந்தவர்கள். ஆனால் அப்போது இருவரும் ஒருவரை ஒருவன் வெறுத்தனர்.
கல்லூரியில் ஆதி, மிகவும் கம்பீரமாகவும், arrogant ஆன மாணவர் தலைவராகவும் இருந்தான். உயர்ந்த குடும்பம், பணம், power – அவன் கல்லூரியிலும் அவனின் status உயர்ந்ததாக இருந்தது
ஆரண்யாவோ அவள் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவி, துருதுரு பெண், ஆனால் சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது அறிவாற்றல் பலருக்கும் தெரிந்தது, ஆனால் அந்த அறிவை ஆதி முக்கியமாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருநாள் கல்லூரியில் நடந்த ஒரு சிறப்பு விழாவில், ஆரண்யா ஒரு பெரிய பரிசை வென்றாள். அந்த பரிசை பெற்ற பின் நடந்த கூட்டத்தில், அனைவரும் ஆரண்யாவைப் பாராட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கே இருந்த ஆதி, அவள் வெற்றியை சிறுமைப்படுத்தியது போல ஒரு கருத்தை கூறினான்.
"வெற்றி என்பது சீரான பின்னணி இல்லாமல் எதுவும் இல்லை. சிலர் புத்திசாலித்தனம் காட்டுவார்கள், ஆனால் அது ஒரு கால வரையில்தான், வெற்றி கூட நல்ல ஸ்டேட்டஸியில் இருப்பவர்கள் கிட்ட தான் நிலைத்து இருக்கும் " என்றான்.
அந்த வார்த்தை ஆரண்யாவை அத்தனை ரண்மாய் வருத்தியது . அவளது திறமையை அவன் கண்டுகொள்ளாதது, அவளை மிகவும் காயப்படுத்தியது. ஆனால் அவள் அந்த சமயத்தில் நிமிர்ந்து,
"உங்கள் பேச்சு உங்களின் தனி அடையாளத்தை காட்டவில்லை உங்க அப்பா தாத்தா சம்பாரித்து வைத்து இருக்கும் பண்ணத்தின் திமிரை தான் காட்டிகிறது, அதனால் அதற்கு மதிப்பு கொடுக்க முடியாது, என் அடையாளம் நான் உருவாக்கியது என் அறிவே என் பின்னணி," என்று அவனிடம் பதிலடி கொடுத்தாள்.
அவளின் பதிலடி நிச்சயம் ஆதிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது, அதுவே அவனின் சொந்த அடையாளத்தை உருவாக்க அவனுக்கு அத்தனை உறுதியை கொடுத்தது. அதன் பின்
அந்த இடத்தில் எல்லோரும் அடுத்து அடுத்து விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள் .
அந்த சிறிய சம்பவம் தான் இருவருக்குள் ஒரு அழகான தூரத்தை ஏற்படுத்தியது. ஆரண்யா அவனை மறந்துவிட்டாள் என்று நினைத்தாள். ஆனால் இன்று, அந்த arrogant CEO அவளுடைய மேலாளராக வந்துவிட்டான்.
ஆரண்யா தன்னையே நம்பிக்கையுடன் பார்த்தாள். “இப்போது நான் காலிஜியில் பார்த்த அந்த மழலை பெண் இல்லை ஆதி . என் திறமையால் இந்த ஆபீஸில் நான் உயர்ந்து நிற்பேன் உன் கம்பெனியிலே எனக்கு ஒரு நீங்காத இடத்தை உருவாக்குவேன் , அந்த ஆதி மீண்டும் என்னை குறைத்து இடை பொடா முடியாத நிலை கொண்டு வருவேன் ” என்று உறுதியுடன் இருந்தால் .
அதே நேரத்தில், ஆதி தனது penthouse apartment-இல் நின்று மழையை பார்த்துக்கொண்டிருந்தான். அலுவலகத்தில் இன்று அவளிடம் பேசியது அவனது நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. அவன் மனதில் தோன்றியது –
“அவள் பெயர் ஆரண்யா...அந்த கண்கள்...இந்த பெயர் ஏதோ அவனுக்கு முன்னாடியே பழகியது போல் இருந்தது …”
அவனது மனம் மெல்ல கல்லூரி காலத்துக்கு பயணம்செய்தது. அந்த college stage-இல் நடந்த அவளது பதில். அவன் அவளிடம் வெறுப்போடு இருந்தாலும், அவள் தன்னம்பிக்கையை நினைத்து அதிர்ச்சியடைந்தான்.
அவளது அறிவும் தையிறியமும் அவனுக்கு சின்ன வியப்பை கொடுத்தது உண்மை தான் ஆனால் வெளியில் அவன் கர்வமாய் இருந்தான் .
அவளின் தன்னம்பிக்கை அத்தனை பேர் முன்னாடி அவள் அவனை பேசியது எல்லாம் அவனுக்கு இந்த நொடி மீண்டும் நினைவு வந்தது
ஓ ஆரண்யா பிரபாகர், வெரி இன்டெரெஸ்ட்டிங், என் கம்பெனியில் நீ லைப் is full of surprises என்றவன் முகம் அடுத்த நொடி மாறியது.
சீனியர் என்று கூட பார்க்கமால் அன்னைக்கு அவளோ திமிராய் என்னிடம் பேசிவிட்டாய், இனி என்ன பன்ன போற என்று பார்க்குறேன் என்று நினைத்தவன் ஒரு புன்னகையுடன் அவளுடைய நினைவுகளை தான் தூங்கும் வரை மனதில் ஓட்டி கொண்டு இருந்தான் .
"அவளோடு என்ன சம்பந்தம்? இப்போது நான் CEO, அவள் ஒரு சாதாரண வேலைக்காரி. என்று அவன் மனம் சொல்லியது இருந்தாலும் அவனுக்கு அவளுடனான இத்தனை வர்ஷத்திற்கு பின் கிடைத்த சந்திப்பு கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது.
ஆதி - ஆரண்யா வருவார்கள்.