• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 4

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai

அத்தியாயம் 4

🌸மெல்ல மெல்ல காதல் மலர்ந்தது 🌸


அந்த வாரம் project அதிக வேலைப்பளுவில் இருந்தது. ஆரண்யா project-ஐ perfect ஆக முடிக்க வேண்டுமென்று தனது இரவுகளை sacrifice செய்து office-ல் தங்கிக்கொண்டாள். அவளது முயற்சி, plan-ஐ execution செய்யும் திறமை அனைத்தும் management-ஐ impress செய்தது. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல ஆதி மட்டும் appreciation கொடுக்கவில்லை. அவன் professional ஆன இடத்தில் அவளுக்கு இடம் கொடுத்தாலும், அந்த முகத்தில் எப்போதும் ஒரு கடுமையான பதற்றம் இருந்தது.

ஒருநாள் இரவு, office-ல் அனைவரும் வெளியேறிய பிறகு, ஆரண்யா project presentation-ஐ fine-tune செய்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில், அந்த அறையில் ஆதி நுழைந்தான். அப்போது அவள் மட்டும் அங்கு வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்தான். அவள் கண்கள் தூங்காமல், விரல் keyboard-ல் dance போல் typing செய்தது அவனுக்கு அவள் சின்சியாரிட்டி நினைத்து மனம் பாராட்டியது. இருந்தாலும் வெளியில் கடுமையான முகத்துடன் “Miss Aaranya, இன்னும் வேலை பாக்குறீங்களா?” என்றான் அவன்.

ஆரண்யா மெதுவாக தலையசைத்தாள். “ஆமாம் sir. இந்த project-க்கு இது தேவை.”

ஆதி அருகில் வந்து, அவளது screen-ஐ பார்த்தான். அவள் உள்ள data, charts, analysis அனைத்தும் மிகவும் impressive-ஆ இருந்தது. அவன் மெதுவாக சொன்னான், “குட் ஜாப் . உன் dedication நன்றாக இருக்கு.”

ஆரண்யா அதை கேட்டதும், அவள் கண்களில் ஒரு சிறிய மின்சாரம் கிளம்பியது. “நன்றி sir. இந்த project-ஐ perfect ஆக முடிக்க வேண்டும் என்று தான்,” என்றாள்.

அந்த இரவு இருவரும் வேலை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில், மழை தூறிக்கொண்டிருந்தது. அந்த சத்தம் இவர்களுக்கு கேட்க அதை எதோ இசை என்று நினைத்த படி இருவரும் அவர் அவர் வேலையில் மூழ்கி இருந்தனர்.
மணியை பார்த்த ஆதி இரவு 2 என்று பார்த்ததும் மெதுவாய் காபி மெஷின் அருகில் சென்றவன் இரண்டு கப் காபி எடுத்து கொண்டு அவளிடம் வந்தான் கண்ணாடி போட்டு கொண்டு அவள் கவனமாய் வேலை செய்வதை பார்த்தவனுக்கு இப்படி கூட பெண்கள் இருப்பார்களா என்று தான் தோன்றியது.

ஏனோ ஆரண்யா மட்டும் அவனுக்கு மற்ற பெண்களிடம் இருந்து வித்தியாசமாய் தோன்றினால். அவன் அவளுக்கு coffee கொடுத்தான். ஒரு நொடி அவள் கண்கள் ஆச்சரியத்துடன் அவனை பார்க்க, hmm டேக் இட் என்று அவன் நீட்ட


தேங்க்ஸ் சார் என்றாள் சிறு தயக்கத்துடன்.

"பொறுமையா குடிச்சிட்டு, ரிலாக்ஸ் பண்ணிட்டு தென் ஒர்க் பண்ணு" என்று அவன் கூற அவளோ அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் .
ஏனோ அவனை பார்க்க கூடாது என்று நினைத்தாலும் கண்கள் அவனை சுற்றி தான் வந்தது.


ஆதியோ அப்படியே நடந்த படி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவன் காபி குடித்து கொண்டு நின்றான். ஆரண்யா கண்களோ இவளோ முயன்றும் அவனிடமே தன் பார்வையை நிலைத்து விட்டது, கருப்பு பண்ட் ப்ளூ சட்டை அணிந்து இருந்தான், காலையில் பார்மலா இன் செய்து இருந்தவன் இப்போது அதை வெளியில் எடுத்து விட்டு, கையை கூட மடக்கி வைத்து கொஞ்சம் தளர்வாக அந்த சட்டையை போட்டு இருந்தான், கையில் பிராண்ட் வாட்ச் ஒரு கையில் தங்க காப்பு, அழகாய் ட்ரிம் செய்ய பட்ட தாடி, தீர்க்கமான கண்கள் அளவான நெற்றி அதில் வந்து விழும் அவனின் அடங்காத கேசம் என்று அவன் அத்தனை அம்சமான ஒரு ஆண் மகனாய் திடீரெண்டு இவள் கண்களுக்கு தெரிய, ஆரண்யாவால் அந்த நொடி முச்சு கூட விட முடியாமல் திகைத்தாள்.

என்ன செய்து கொண்டு இருக்க ஆர்ண்யா என்று அவள் மன கேள்வி கேட்க அது நொடி அந்த அறையே வெப்பமாய் அவளுக்கு தெரிந்தது, தான் எப்படி ஆதியை இப்படி பார்க்கலாம் என்று அவள் பதில் தெரியாமல் திகைத்தாள்.


அதே சமயம் ஆதி அவளிடம் மெதுவாக ஆக பேச ஆரம்பித்தான். project-ஐ பற்றி அவன் பேச ஆரம்பிக்க அவளால் சத்தியமாய் அவனை பார்த்து பேச முடியாமல் ஏதேதோ பதில் சொல்லி கொண்டு இருந்தால்

"ஆரண்யா are யூ ஆல்ரைட்?" என்று அவன் கேட்க "எஸ்" என்று வேகமாய் தலை அசைத்தவள் பின் கைகளை இறுக்க மூடி கொண்டு அமர்ந்து இருக்க

"if யூ வான்ட் யு கேன் டேக் ரெஸ்ட்" என்றான்.

"இல்லை இல்லை" என்று அவள் வேகமாய் சொல்ல

"ஓகே" என்று தோலை குளிக்கியவன் வெளி ஏறினான்.

அவளுக்குக்கோ இப்போ தான் மூச்சே வந்தது சற்று நேரத்தில் அவள் மனம் அத்தனை வேகமாய் துடிக்க ஆரம்பித்தது, எப்படி தன் மனம் இப்படி எல்லாம் நினைக்க ஆரம்பித்தது என்று அவளுக்கு தெரியவில்லை அதுவே அவளுக்கு படபடப்பை ஏற்படுத்தியது.

ஒரு மணி நேரம் கண்களை மூடி கொண்டு அப்படியே அவள் சாரில் சாய்ந்து அமர்ந்து இருந்தால், அந்த சமயம் ஆதியும் அவள் அறைக்குள் வந்தவன் அவள் அப்படியே தூங்குவதை பார்த்தவன், அவள் தூங்கட்டும் என்று வெளியேற நினைத்தான் ஆனால் எதோ ஒன்று தோன்றவும் அவள் அருகில் வந்தவன் அவள் அணிந்து இருக்கும் கண்ணாடியை கழட்டி டேபிள் மேல் வைத்து விட்டு, சில நிமிடம் அவள் முகத்தை ஆழந்து பார்த்து கொண்டு இருந்தவன் வெளி ஏறினான்.

விடியற் காலையில் கண் முழித்த ஆரண்ய திடுக்கிட்டு விழிக்க

அவள் மட்டும் அந்த அறையில் படுத்து இருக்க, ஒரு நொடி ஒன்றும் புரியாமல் அவள் முழித்தபடி இருந்தால்.
சரியா அந்த நேரம் ஆதியும் உள்ளே வந்தவன், "எழுந்தாச்சா ?" என்றவன்.

"சரி ஆரண்யா நீ வீட்டுக்கு போய்ட்டு ரெஸ்ட் எடு ஆப்ட்டர்நூன் மேல வந்து அந்த presentation கிளைன்ட்யிடம் எக்ஸ்ப்ளைன் செய் " என்றான்.

இல்லை சார் நான் இன்னும் அதை என்று அவள் இழுக்க.

"மத்ததை நான் முடிச்சிட்டேன், உனக்கு மெயில் செய்து இருக்கேன் சோ நீ இப்போ வீட்டுக்கு கிளம்பலாம்" என்று அவன் சொல்ல

அதிர்ந்தவள் "நீங்களா ?"

"ஏன் என் கம்பெனி ப்ராஜெக்ட் நான் செய்தா என்ன ?" என்று அவன் கேட்க

அவளுக்கோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றவள், அவனை பார்க்க.
"சரி வா நான் உன்னை ட்ராப் செய்றேன்" என்று அவன் வெளியில் செல்ல

அவள் கண்கள் மேலும் அதிர்ச்சியில் விரிந்தது, "என்ன இவரா ?" என்று அதிர்ந்தவள் அவன் பின்னாடி ஓடினால் .

ஆதி வீட்டில் அவனது தந்தையுடன் அன்று காலையிலே அத்தனை சத்தமாய் அந்த அரண்மனையே அதிர ஒரு argument நடந்தது கொண்டு இருந்தது.


“நீ இவ்வளவு பெரிய empire-ஐ lead பண்ணுகிறாய், ஆனா உன்னோட personal life settle இன்னும் நீ செட்டில் ஆகமால் இப்படி இருப்பது சரியா ஆதி? உன் வயசு பசங்க எல்லாம் இந்நேரம் குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிட்டாங்க ஆனா நீ . எனக்கு தெரியாது எப்போ நீ கல்யாணம் செய்ய போறனு இப்போவே சொல்லு" என்று ஆதியின் தந்தை கேசவ் அவனை விடாது அத்தனை தீர்க்கமாய் கேட்க

ஆதி அதற்கு மெதுவாக: “ என் வாழ்க்கை எப்படி இருக்கனும் என்று நான் டிசைட் பண்ணிப்பேன் டாட் அண்ட் moreover என் company success தான் முதன்மை,” அது இல்லாமல் "எனக்கு எந்த ஒரு பெண்ணும் என் வாழ்கையை கட்டுப்படுத்துறது எனக்கு பிடிக்காது. இப்போதைக்கு எனக்கு கல்யாணத்தில் இன்டரெஸ்ட் இல்லை, அண்ட் என்னுடைய டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்க்கும் எந்த பொன்னும் செட் ஆக மாட்டாங்க சப்போஸ் அப்படி எதாச்சு பொண்ணு கிடைச்சா நான் நிச்சயம் உங்க கிட்ட சொல்றேன்" என்று அவன் சொல்ல

"டேய் ! என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்சா ?? ஆர் யூ மேட் ஆதி, மேரேஜ் இஸ் அ கமிட்மென்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் ஓகே ஆகுற விஷயம் இல்லை" என்று அவர் கத்த


"ரிலாக்ஸ் டாட் . சரி ஆப்ட்டர்நூன் எனக்கு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு நான் இப்போ ரெஸ்ட் எடுக்கணும் "என்று
சொல்லிவிட்டு அவன் அறைக்கு செல்ல படிகள் ஏறினான்.


ரைட்டு ! ஆதி ஒரு முடிவுடன் தான் இருக்கான் போல, சரி அவன் என்ன நினைக்குறான் என்ன செய்ய போரான் என்று அடுத்த அடுத்த எபிசோட்களில் பார்க்கலாம்


பை

ஆதி - ஆரண்யா வருவார்கள்🩷
 
Last edited: