அத்தியாயம் 16
அரவிந்த் சமைத்து முடித்து அனன்யாவிற்கு கொண்டு செல்ல நினைக்கும் நேரம் அனன்யாவே அவனை தேடி வந்துவிட்டாள்.
"என்ன த்தான் வீட்டை திறந்தே வச்சிருக்கீங்க?" என்று தான் வீட்டினுள் வந்தாள் அனன்யா.
"டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு வந்ததும் நீ ஓடிட்டன்னா? அதான்!" என அரவிந்த் கிண்டல் செய்ய, மிதமான முறைப்பு அனன்யாவிடம்.
நேற்றைய சண்டைகள் எல்லாம் எதுவுமே இல்லை என்பதை போல அத்தனை எளிதாய் இலகுவாய் அந்த நேரம் கடந்து கொண்டிருந்தது இருவருக்கும்.
அங்கேயே இருவரும் பரிமாறிக் கொண்டு ஒன்றாய் அமர்ந்து சாப்பிட, அதை ரசித்தே அமர்ந்திருந்தாலும் எப்பொழுது மனம் மாறி கோபம் கொள்வாளோ எனவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை அரவிந்த்திற்கு.
"எங்கம்மா செய்யுறப்ப ஒரு மாதிரி நான்வெஜ் ஸ்மெல் வரும். ஆனா திகழ் அண்ணி செஞ்சா குழம்பு அவ்வளவு மணமா இருக்கும். உங்களோடது கூட அப்படியே அண்ணி கைமணம்" அனன்யா சொல்லியபடி சாப்பிட,
"அதுக்காக எப்பவுமே என்னை சமைக்க வைக்குற ப்ளனா? நீ சீக்கிரம் கத்துக்கோ! அப்புறம் நான் எப்படி சாப்பிடுறது?" என்று சொல்லி அரவிந்த் குறுகுறுவென பார்க்க, அதன் அர்த்தம் அனன்யா கவனித்தால் தானே புரிந்திருக்கும்!.
"நானெல்லாம் கத்துக்க போறதில்ல த்தான். கொஞ்ச நாள் இப்படியே போகும். இல்லைனா நல்ல சாப்பாடு போடுற ஹாஸ்டல் பார்த்து போய்ட வேண்டியது தான்" என்றவளை வெட்டவா குத்தவா என பார்த்தவன்,
"நீ வாயை திறக்காம சாப்பிடு. இல்லைனா என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு தான் போவ!" என சொல்ல, இரு நொடி தான் அவளும் மௌனம் காத்தது. பின் அவளே பேச ஆரம்பித்துவிட்டாள்.
"அம்மா போன் பண்ணுவாங்களா?" சாப்பிட்டு முடித்ததும் அரவிந்த் கேட்க,
"ஹ்ம்! எப்பவாச்சும்!" என்றாள்.
"நீ பண்ணுவியா?"
"அதுவும் எப்பவாச்சும்"
"ஏன் தினமும் பேச மாட்டியா என்ன?"
"தினமும் பேச என்ன இருக்கு? அப்பாகிட்ட தினமுமே பேசுவேன். அம்மா சும்மா எதாவது டென்ஷன் பண்ற மாதிரி பேசுவாங்க. அதனால அவ்வளவு பேசுறதில்ல!"
"ஹ்ம்!" என்றவனுக்கு இப்பொழுது நினைத்தாலும் கனகாவை சமாளிக்க போகும் பயம் அதிகம் தான்.
"சரி உக்காரு அனு! துணியை மட்டும் மாடில காய போட்டுட்டு வர்றேன்!" என அரவிந்த் சொல்ல,
"இல்லத்தான். நான் கிளம்புறேன்!" என்றாள்.
"அங்க போய் என்ன பண்ண போற? தூங்கி வடிஞ்சுட்டு இருக்க போற. பேசாம இரு எதாவது மூவி பாக்கலாம். நீ சர்ச் பண்ணு நான் வர்றேன்!" என சொல்லி அவன் அலைபேசியை கொடுத்துவிட்டு துணிகளை எடுக்க,
"நானும் மேல வர்றேன்!" என அவன் அலைபேசியை பார்த்தபடி தான் சென்றாள் மொட்டைமாடிக்கு.
"திகழ் அண்ணி கால் பன்றாங்க த்தான்!" அவன் துணியை உலர்த்தி காய வைக்கும் நேரம் அனன்யா சொல்ல,
"எடுத்து பேசு அனு. நான் இதை முடிச்சுட்டு வர்றேன்!" என்று சொல்லவும் அங்கே நிழலில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள் அனன்யா.
"உன்கிட்ட தான் பேச நினைச்சேன் அனு. மாமாவும் அத்தையும் புதன் கிழமை மகிக்கு சாப்பாடு பண்ண வர்றாங்க. அத்தை சொன்னாங்களா உன்கிட்ட?" என திகழ்மதி கேட்க,
"அப்படியா அண்ணி? சொல்லலையே! அப்பா இனி தான் கால் பண்ணுவாங்க. அப்ப சொல்லுவாங்களா இருக்கும்!" என்றாள் அனன்யாவும்.
பொதுவான பேச்சுக்கள் நகர, அடுத்து மகிழினி திருமணப் பேச்சில் நேரம் கடந்தது. அவள் பேசிக் கொண்டிருக்கவும் அரவிந்த்தும் அதை கேட்டபடி அங்கிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நாள் ரொம்ப வேகமா போகுது அண்ணி. நானெல்லாம் கல்யாணத்துக்கு அட்லீஸ்ட் அஞ்சு நாள் முன்னாடியாச்சும் லீவ் போட்டு வந்து உங்க கூட தங்கிப்பேன். நான் இருக்கலாம் தானே உங்க கூட?" என அனன்யா கேட்க, திகழ்மதி அந்த கேள்வியில் அனன்யாவை அதட்டுவது அரவிந்த் வரை புரிந்தது.
'உனக்கு தேவை தான்' நினைத்துக் கொண்டான் அரவிந்த்.
"மகிக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம் முடிச்சுட்டா அடுத்து அர்விக்கு ஆறு மாசத்துல பண்ணிடனும் அனு. அவனுக்கும் இது தான் சரியான வயசு. அடுத்த வருஷம்னா இருபத்தேழு முடிஞ்சுடும்" என சொல்லவும் சட்டென அமைதியாகியவள் புன்னகையும் மறைந்துவிட்டது.
"இப்பவே ரெண்டு மூனு பேர் அத்தைக்கு தெரிஞ்சவங்க கேட்டுட்டு தான் இருக்காங்க!" என்றும் சொல்ல மூச்சு முட்டும் போலானது அனன்யாவிற்கு.
திடீரென அமைதியானவளை புரியாமல் கண்கள் சுருங்க அரவிந்த் பார்க்க, அவளின் குரல்வளை ஏறி இறங்கிய பாவனையில் இன்னும் கூர்ந்து கவனித்தான் அரவிந்த்.
"ஹெலோ அனு!" நீண்ட நேரமாய் அவள் சத்தம் கேட்காததில் திகழ்மதி அழைக்க,
"ஹான்! அண்ணி! அத்தான் வந்துட்டாங்க. அவங்ககிட்ட சொல்லுங்க" என்று சொல்லி கொடுத்துவிட,
"சொல்லுங்க க்கா!" என்ற அரவிந்த் அனன்யாவை பார்த்தபடி பேச ஆரம்பித்தான்.
"சும்மா தான் கூப்பிட்டேன் அர்வி. உன் கல்யாணத்தை பத்தி தான் பேசிட்டு இருந்தோம் அனுவும் நானும். இங்க அத்தை உனக்கு பொண்ணு செலக்ட் பண்ணிட்டு இருக்காங்க!" என்று சொல்லி திகழ்மதி சிரிக்க, அரவிந்த்திற்கே அது அதிர்ச்சி தான்.
அனன்யாவின் மனநிலை சொல்லவும் வேண்டாம் என்பதாய் தெளிவாய் புரிந்து கொண்டவனுக்கு, 'இந்நேரமா இதை இவளிடம் சகோதரி பேசியிருக்க வேண்டும்?' என எங்கே முட்டிக் கொள்ள என்றும் தோன்றாமல் இல்லை.
"மாமா என்ன பன்றாங்க க்கா?" என பேச்சை மாற்றி இருந்தான் அரவிந்த்.
"நான் கிளம்புறேன் த்தான்!" என்று சொல்லி அனன்யா அவன் பதிலையும் எதிர்பாராமல் நகரப் பார்க்கவும் அவள் கையைப் பிடித்துவிட்டவன்,
"ஹ்ம்ம் க்கா! செஞ்சுடலாம். மாமாகிட்ட நான் பேசுறேன்!" என மகிழினி திருமண விஷயமாய் பேசியபடி இலகுவாய் நிற்க, அதிர்ந்து விழித்த அனன்யா கைகளை விலக்கிக் கொள்ளப் பார்த்தது எல்லாம் வீண் முயற்சி தான்.
"த்தான்!" என்றவள் என்ன இவன் என்பதாய் பார்த்து வைக்க, அவனும் பார்த்தான் பதில் பார்வை.
தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் திகழ்மதி பேசும் வரை அப்படியே அரவிந்த்தும் பேசிவிட்டு தான் வைத்தான்.
"சரிக்கா பாக்கலாம். இன்னும் பத்து நாள்ல வர்றேன் க்கா. இப்ப லீவ் போட வேண்டாம்னு பாக்குறேன். மாமாகிட்ட சொல்லிடுங்க!" என பேசிவிட்டு வைத்தவன்,
"என்னவும் சொன்னியா அனு நான் பேசிட்டு இருக்கும் போது?" என கேட்டவன் இன்னும் அவள் கைகளை விடவில்லை என்பது இன்னுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது அனன்யாவை.
கையை விடு என்றெல்லாம் சொல்லாமல் அவள் பார்த்து நிற்க, "ஓய்! என்ன அனு?" என அரவிந்த் சிரிக்கவும் அதில் தெளிந்தவள்,
"ம்ஹும்! நான் கிளம்புறேன்!" என்று சொல்லி அனன்யா தன் கையைப் பார்க்க,
"மூவி பார்க்கலாம் சொன்னேனே! செலக்ட் பண்ணியா இல்லையா?" என அரவிந்த் தன் அலைபேசியில் அவள் பார்த்துக் கொண்டிருந்த படவரிசைகளை கவனித்தான் மற்றொரு கையில்.
"த்தான்! நான் வீட்டுக்கு போறேன்!" என்றாள் மீண்டும்.
"ஏன்?" என்றவன் பார்வை அலைபேசியில் தான் இருந்தது.
நிச்சயம் இந்நேரம் அவள் மனம் நிம்மதியாய் இராது என அத்தனை உறுதி. அப்படியே எப்படி அனுப்ப? என அவன் நினைக்க,
'எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இவங்களால இருக்க முடியுது? என் கையை இவங்க பிடிச்சா தப்பில்லையா?' என கொஞ்சம் கொஞ்சமாய் கோபத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருந்தாள் அனன்யா.
"நான் போனும் த்தான்!" என்றவள் குரலில் பிடிவாதமும் கோபமும் தெரிய, நிமிர்ந்து பார்த்தவன் முறைக்க தான் செய்தான் ஆரம்பத்திலேயே.
"இப்ப என்னாச்சு உனக்கு?" என அவன் சாதாரணமாய் கேட்டது கூட,
'இவ்வளவு சாதாரணமா போச்சா உங்களுக்கு?' என்று கோபத்தை தான் கூட்டியது அவளுக்கு.
இத்தனைக்கும் கையை விட சொல்லி அவள் கேட்கவில்லை என்பதில் அவள் தவிப்பும் புரிந்தவனுக்கு மனதில் இனம் புரியாத வலியும் சுகமும்.
"அக்கா என்ன சொன்னாங்க? மகி பேசலையா?" என அவளை இயல்பாக்கி அனுப்பி விட தான் அரவிந்த் நினைத்தான்.
"சொன்னாங்க! உங்க கல்யாணத்துக்கு எங்க மண்டபம் பாக்கலாம்னு!" என கோபமாய் அனன்யா சொல்ல, சிரிப்பு பொங்கி வந்தது அரவிந்த்திடம்.
"ஓஹ்! பொண்ணு தான் டிசைட் பண்ண போகுதா அதையும்?" அரவிந்த் கேட்க, அதை புரியாதவளுக்கு அவன் புன்னகை இன்னும் கோபத்தை கொடுத்தது.
திருமணம் என்றால் சிரிக்கிறானே அவன் சம்மதம் இல்லாமலா! என எண்ணவும் கோபத்தோடு கண்ணீரும் கூடி நின்றது.
"ப்ச்! இது வேற!" என அழுத்தமாய் அவள் தன் கண்களை துடைக்க துடைக்க பொங்கிக் கொண்டே இருந்தது கண்ணீர்.
தான் அவனுக்கு யார்? தான் அவனை காதலித்ததும் காதலிப்பதும் பூ கொடுத்ததும் என இப்பொழுது வரை அவனை பொறுத்தவரை முட்டாள்தனம் தானே? அவன் தான் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டானே! என எண்ண எண்ண கண்கள் நிறுத்தவே இல்லை கண்ணீரை.
அரை நிமிடம் தாண்டி அரவிந்த்துமே அவளாய் அழுகையை நிறுத்த காத்திருந்தான். ஆனால் அது முடிவதாய் இல்லை என்பதில் தான் அவள் எண்ணங்களும் இன்னும் அடங்கவில்லை என்று புரிந்தவன் பிடித்திருந்த கையோடு இன்னும் நெருங்கி வர அதை உணரும் நிலையில் இல்லை அனன்யா.
"சென்னை வந்தாலும் வந்த. என்னை பார்க்கும் போதெல்லாம் அழுதுட்டு தான் இருக்குற. ரெண்டு நிமிஷம் நல்லா பேசினா நாலு நிமிஷம் கோவமும் கண்ணீரும் தான். இப்படி இருந்தா என்னை எப்படி காலம் முழுக்க பார்த்துட்டு இருக்க முடியும் உனக்கு?" என்ற அரவிந்த் பேச்சோடு அவள் மற்றொரு கையை எடுத்துவிட்டு தானே அந்த கண்ணீரை துடைக்க,
"பேசாதீங்க த்தான்! போங்க நீங்க!" என அவன் கையைத் தட்டிவிட்டவள் மற்றொரு கை அவனிடம் இருப்பதை பிரித்தாள் இல்லை.
"நான் மட்டும் தான் உங்களை கோவப்பட வைக்க கூடாது வருத்தப்பட வைக்க கூடாதுன்னு நினைக்குறேன். ஆனா நீங்க என்னை நினைச்சு கூட பாக்குறது இல்ல. ஒரு காலத்துல உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணினேன் தான? அந்த நியாபகம் கூடவா இல்ல? இவ்வளவு சாதாரணமா உங்க கல்யாணத்தை பத்தி என்கிட்ட பேச எப்படி முடியுது உங்களுக்கு? இவ என்ன செஞ்சிடுவான்ற எண்ணம் தானே?" என அனன்யா சொல்ல,
"அனு! நான் சொல்றது புரியலையா உனக்கு?" என இன்னும் கொஞ்சம் புன்னகைத்தவன் அவள் பேச்சை கேட்டு இன்னும் நெருங்க,
"போங்க சொன்னேன்!" என அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவளுக்கு இன்னும் பயத்தில் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
அவன் புன்னகை தான் அவள் பயத்தின் முக்கிய காரணமே! முன்பு கோபமாய் முகத்தில் விழிக்காதே என்றவன் இப்பொழுது சிரித்தபடி என்னை மனம் நோகாமல் தவிர்க்க நினைக்கிறானோ என நினைத்து அவளே பயத்தை எடுத்துக் கொண்டாள்.
அரவிந்த் சமைத்து முடித்து அனன்யாவிற்கு கொண்டு செல்ல நினைக்கும் நேரம் அனன்யாவே அவனை தேடி வந்துவிட்டாள்.
"என்ன த்தான் வீட்டை திறந்தே வச்சிருக்கீங்க?" என்று தான் வீட்டினுள் வந்தாள் அனன்யா.
"டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு வந்ததும் நீ ஓடிட்டன்னா? அதான்!" என அரவிந்த் கிண்டல் செய்ய, மிதமான முறைப்பு அனன்யாவிடம்.
நேற்றைய சண்டைகள் எல்லாம் எதுவுமே இல்லை என்பதை போல அத்தனை எளிதாய் இலகுவாய் அந்த நேரம் கடந்து கொண்டிருந்தது இருவருக்கும்.
அங்கேயே இருவரும் பரிமாறிக் கொண்டு ஒன்றாய் அமர்ந்து சாப்பிட, அதை ரசித்தே அமர்ந்திருந்தாலும் எப்பொழுது மனம் மாறி கோபம் கொள்வாளோ எனவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை அரவிந்த்திற்கு.
"எங்கம்மா செய்யுறப்ப ஒரு மாதிரி நான்வெஜ் ஸ்மெல் வரும். ஆனா திகழ் அண்ணி செஞ்சா குழம்பு அவ்வளவு மணமா இருக்கும். உங்களோடது கூட அப்படியே அண்ணி கைமணம்" அனன்யா சொல்லியபடி சாப்பிட,
"அதுக்காக எப்பவுமே என்னை சமைக்க வைக்குற ப்ளனா? நீ சீக்கிரம் கத்துக்கோ! அப்புறம் நான் எப்படி சாப்பிடுறது?" என்று சொல்லி அரவிந்த் குறுகுறுவென பார்க்க, அதன் அர்த்தம் அனன்யா கவனித்தால் தானே புரிந்திருக்கும்!.
"நானெல்லாம் கத்துக்க போறதில்ல த்தான். கொஞ்ச நாள் இப்படியே போகும். இல்லைனா நல்ல சாப்பாடு போடுற ஹாஸ்டல் பார்த்து போய்ட வேண்டியது தான்" என்றவளை வெட்டவா குத்தவா என பார்த்தவன்,
"நீ வாயை திறக்காம சாப்பிடு. இல்லைனா என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு தான் போவ!" என சொல்ல, இரு நொடி தான் அவளும் மௌனம் காத்தது. பின் அவளே பேச ஆரம்பித்துவிட்டாள்.
"அம்மா போன் பண்ணுவாங்களா?" சாப்பிட்டு முடித்ததும் அரவிந்த் கேட்க,
"ஹ்ம்! எப்பவாச்சும்!" என்றாள்.
"நீ பண்ணுவியா?"
"அதுவும் எப்பவாச்சும்"
"ஏன் தினமும் பேச மாட்டியா என்ன?"
"தினமும் பேச என்ன இருக்கு? அப்பாகிட்ட தினமுமே பேசுவேன். அம்மா சும்மா எதாவது டென்ஷன் பண்ற மாதிரி பேசுவாங்க. அதனால அவ்வளவு பேசுறதில்ல!"
"ஹ்ம்!" என்றவனுக்கு இப்பொழுது நினைத்தாலும் கனகாவை சமாளிக்க போகும் பயம் அதிகம் தான்.
"சரி உக்காரு அனு! துணியை மட்டும் மாடில காய போட்டுட்டு வர்றேன்!" என அரவிந்த் சொல்ல,
"இல்லத்தான். நான் கிளம்புறேன்!" என்றாள்.
"அங்க போய் என்ன பண்ண போற? தூங்கி வடிஞ்சுட்டு இருக்க போற. பேசாம இரு எதாவது மூவி பாக்கலாம். நீ சர்ச் பண்ணு நான் வர்றேன்!" என சொல்லி அவன் அலைபேசியை கொடுத்துவிட்டு துணிகளை எடுக்க,
"நானும் மேல வர்றேன்!" என அவன் அலைபேசியை பார்த்தபடி தான் சென்றாள் மொட்டைமாடிக்கு.
"திகழ் அண்ணி கால் பன்றாங்க த்தான்!" அவன் துணியை உலர்த்தி காய வைக்கும் நேரம் அனன்யா சொல்ல,
"எடுத்து பேசு அனு. நான் இதை முடிச்சுட்டு வர்றேன்!" என்று சொல்லவும் அங்கே நிழலில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள் அனன்யா.
"உன்கிட்ட தான் பேச நினைச்சேன் அனு. மாமாவும் அத்தையும் புதன் கிழமை மகிக்கு சாப்பாடு பண்ண வர்றாங்க. அத்தை சொன்னாங்களா உன்கிட்ட?" என திகழ்மதி கேட்க,
"அப்படியா அண்ணி? சொல்லலையே! அப்பா இனி தான் கால் பண்ணுவாங்க. அப்ப சொல்லுவாங்களா இருக்கும்!" என்றாள் அனன்யாவும்.
பொதுவான பேச்சுக்கள் நகர, அடுத்து மகிழினி திருமணப் பேச்சில் நேரம் கடந்தது. அவள் பேசிக் கொண்டிருக்கவும் அரவிந்த்தும் அதை கேட்டபடி அங்கிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நாள் ரொம்ப வேகமா போகுது அண்ணி. நானெல்லாம் கல்யாணத்துக்கு அட்லீஸ்ட் அஞ்சு நாள் முன்னாடியாச்சும் லீவ் போட்டு வந்து உங்க கூட தங்கிப்பேன். நான் இருக்கலாம் தானே உங்க கூட?" என அனன்யா கேட்க, திகழ்மதி அந்த கேள்வியில் அனன்யாவை அதட்டுவது அரவிந்த் வரை புரிந்தது.
'உனக்கு தேவை தான்' நினைத்துக் கொண்டான் அரவிந்த்.
"மகிக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம் முடிச்சுட்டா அடுத்து அர்விக்கு ஆறு மாசத்துல பண்ணிடனும் அனு. அவனுக்கும் இது தான் சரியான வயசு. அடுத்த வருஷம்னா இருபத்தேழு முடிஞ்சுடும்" என சொல்லவும் சட்டென அமைதியாகியவள் புன்னகையும் மறைந்துவிட்டது.
"இப்பவே ரெண்டு மூனு பேர் அத்தைக்கு தெரிஞ்சவங்க கேட்டுட்டு தான் இருக்காங்க!" என்றும் சொல்ல மூச்சு முட்டும் போலானது அனன்யாவிற்கு.
திடீரென அமைதியானவளை புரியாமல் கண்கள் சுருங்க அரவிந்த் பார்க்க, அவளின் குரல்வளை ஏறி இறங்கிய பாவனையில் இன்னும் கூர்ந்து கவனித்தான் அரவிந்த்.
"ஹெலோ அனு!" நீண்ட நேரமாய் அவள் சத்தம் கேட்காததில் திகழ்மதி அழைக்க,
"ஹான்! அண்ணி! அத்தான் வந்துட்டாங்க. அவங்ககிட்ட சொல்லுங்க" என்று சொல்லி கொடுத்துவிட,
"சொல்லுங்க க்கா!" என்ற அரவிந்த் அனன்யாவை பார்த்தபடி பேச ஆரம்பித்தான்.
"சும்மா தான் கூப்பிட்டேன் அர்வி. உன் கல்யாணத்தை பத்தி தான் பேசிட்டு இருந்தோம் அனுவும் நானும். இங்க அத்தை உனக்கு பொண்ணு செலக்ட் பண்ணிட்டு இருக்காங்க!" என்று சொல்லி திகழ்மதி சிரிக்க, அரவிந்த்திற்கே அது அதிர்ச்சி தான்.
அனன்யாவின் மனநிலை சொல்லவும் வேண்டாம் என்பதாய் தெளிவாய் புரிந்து கொண்டவனுக்கு, 'இந்நேரமா இதை இவளிடம் சகோதரி பேசியிருக்க வேண்டும்?' என எங்கே முட்டிக் கொள்ள என்றும் தோன்றாமல் இல்லை.
"மாமா என்ன பன்றாங்க க்கா?" என பேச்சை மாற்றி இருந்தான் அரவிந்த்.
"நான் கிளம்புறேன் த்தான்!" என்று சொல்லி அனன்யா அவன் பதிலையும் எதிர்பாராமல் நகரப் பார்க்கவும் அவள் கையைப் பிடித்துவிட்டவன்,
"ஹ்ம்ம் க்கா! செஞ்சுடலாம். மாமாகிட்ட நான் பேசுறேன்!" என மகிழினி திருமண விஷயமாய் பேசியபடி இலகுவாய் நிற்க, அதிர்ந்து விழித்த அனன்யா கைகளை விலக்கிக் கொள்ளப் பார்த்தது எல்லாம் வீண் முயற்சி தான்.
"த்தான்!" என்றவள் என்ன இவன் என்பதாய் பார்த்து வைக்க, அவனும் பார்த்தான் பதில் பார்வை.
தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் திகழ்மதி பேசும் வரை அப்படியே அரவிந்த்தும் பேசிவிட்டு தான் வைத்தான்.
"சரிக்கா பாக்கலாம். இன்னும் பத்து நாள்ல வர்றேன் க்கா. இப்ப லீவ் போட வேண்டாம்னு பாக்குறேன். மாமாகிட்ட சொல்லிடுங்க!" என பேசிவிட்டு வைத்தவன்,
"என்னவும் சொன்னியா அனு நான் பேசிட்டு இருக்கும் போது?" என கேட்டவன் இன்னும் அவள் கைகளை விடவில்லை என்பது இன்னுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது அனன்யாவை.
கையை விடு என்றெல்லாம் சொல்லாமல் அவள் பார்த்து நிற்க, "ஓய்! என்ன அனு?" என அரவிந்த் சிரிக்கவும் அதில் தெளிந்தவள்,
"ம்ஹும்! நான் கிளம்புறேன்!" என்று சொல்லி அனன்யா தன் கையைப் பார்க்க,
"மூவி பார்க்கலாம் சொன்னேனே! செலக்ட் பண்ணியா இல்லையா?" என அரவிந்த் தன் அலைபேசியில் அவள் பார்த்துக் கொண்டிருந்த படவரிசைகளை கவனித்தான் மற்றொரு கையில்.
"த்தான்! நான் வீட்டுக்கு போறேன்!" என்றாள் மீண்டும்.
"ஏன்?" என்றவன் பார்வை அலைபேசியில் தான் இருந்தது.
நிச்சயம் இந்நேரம் அவள் மனம் நிம்மதியாய் இராது என அத்தனை உறுதி. அப்படியே எப்படி அனுப்ப? என அவன் நினைக்க,
'எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இவங்களால இருக்க முடியுது? என் கையை இவங்க பிடிச்சா தப்பில்லையா?' என கொஞ்சம் கொஞ்சமாய் கோபத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருந்தாள் அனன்யா.
"நான் போனும் த்தான்!" என்றவள் குரலில் பிடிவாதமும் கோபமும் தெரிய, நிமிர்ந்து பார்த்தவன் முறைக்க தான் செய்தான் ஆரம்பத்திலேயே.
"இப்ப என்னாச்சு உனக்கு?" என அவன் சாதாரணமாய் கேட்டது கூட,
'இவ்வளவு சாதாரணமா போச்சா உங்களுக்கு?' என்று கோபத்தை தான் கூட்டியது அவளுக்கு.
இத்தனைக்கும் கையை விட சொல்லி அவள் கேட்கவில்லை என்பதில் அவள் தவிப்பும் புரிந்தவனுக்கு மனதில் இனம் புரியாத வலியும் சுகமும்.
"அக்கா என்ன சொன்னாங்க? மகி பேசலையா?" என அவளை இயல்பாக்கி அனுப்பி விட தான் அரவிந்த் நினைத்தான்.
"சொன்னாங்க! உங்க கல்யாணத்துக்கு எங்க மண்டபம் பாக்கலாம்னு!" என கோபமாய் அனன்யா சொல்ல, சிரிப்பு பொங்கி வந்தது அரவிந்த்திடம்.
"ஓஹ்! பொண்ணு தான் டிசைட் பண்ண போகுதா அதையும்?" அரவிந்த் கேட்க, அதை புரியாதவளுக்கு அவன் புன்னகை இன்னும் கோபத்தை கொடுத்தது.
திருமணம் என்றால் சிரிக்கிறானே அவன் சம்மதம் இல்லாமலா! என எண்ணவும் கோபத்தோடு கண்ணீரும் கூடி நின்றது.
"ப்ச்! இது வேற!" என அழுத்தமாய் அவள் தன் கண்களை துடைக்க துடைக்க பொங்கிக் கொண்டே இருந்தது கண்ணீர்.
தான் அவனுக்கு யார்? தான் அவனை காதலித்ததும் காதலிப்பதும் பூ கொடுத்ததும் என இப்பொழுது வரை அவனை பொறுத்தவரை முட்டாள்தனம் தானே? அவன் தான் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டானே! என எண்ண எண்ண கண்கள் நிறுத்தவே இல்லை கண்ணீரை.
அரை நிமிடம் தாண்டி அரவிந்த்துமே அவளாய் அழுகையை நிறுத்த காத்திருந்தான். ஆனால் அது முடிவதாய் இல்லை என்பதில் தான் அவள் எண்ணங்களும் இன்னும் அடங்கவில்லை என்று புரிந்தவன் பிடித்திருந்த கையோடு இன்னும் நெருங்கி வர அதை உணரும் நிலையில் இல்லை அனன்யா.
"சென்னை வந்தாலும் வந்த. என்னை பார்க்கும் போதெல்லாம் அழுதுட்டு தான் இருக்குற. ரெண்டு நிமிஷம் நல்லா பேசினா நாலு நிமிஷம் கோவமும் கண்ணீரும் தான். இப்படி இருந்தா என்னை எப்படி காலம் முழுக்க பார்த்துட்டு இருக்க முடியும் உனக்கு?" என்ற அரவிந்த் பேச்சோடு அவள் மற்றொரு கையை எடுத்துவிட்டு தானே அந்த கண்ணீரை துடைக்க,
"பேசாதீங்க த்தான்! போங்க நீங்க!" என அவன் கையைத் தட்டிவிட்டவள் மற்றொரு கை அவனிடம் இருப்பதை பிரித்தாள் இல்லை.
"நான் மட்டும் தான் உங்களை கோவப்பட வைக்க கூடாது வருத்தப்பட வைக்க கூடாதுன்னு நினைக்குறேன். ஆனா நீங்க என்னை நினைச்சு கூட பாக்குறது இல்ல. ஒரு காலத்துல உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணினேன் தான? அந்த நியாபகம் கூடவா இல்ல? இவ்வளவு சாதாரணமா உங்க கல்யாணத்தை பத்தி என்கிட்ட பேச எப்படி முடியுது உங்களுக்கு? இவ என்ன செஞ்சிடுவான்ற எண்ணம் தானே?" என அனன்யா சொல்ல,
"அனு! நான் சொல்றது புரியலையா உனக்கு?" என இன்னும் கொஞ்சம் புன்னகைத்தவன் அவள் பேச்சை கேட்டு இன்னும் நெருங்க,
"போங்க சொன்னேன்!" என அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவளுக்கு இன்னும் பயத்தில் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
அவன் புன்னகை தான் அவள் பயத்தின் முக்கிய காரணமே! முன்பு கோபமாய் முகத்தில் விழிக்காதே என்றவன் இப்பொழுது சிரித்தபடி என்னை மனம் நோகாமல் தவிர்க்க நினைக்கிறானோ என நினைத்து அவளே பயத்தை எடுத்துக் கொண்டாள்.