அத்தியாயம் 22
அன்று மாலையே அன்னையின் அத்தனை பேச்சையும் மீறி திகழ்மதி வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாள் அனன்யா.
"என்னை மீறி போனா திரும்ப இந்த வீட்டுக்குள்ள வர முடியாது பார்த்துக்க அனு!" என கனகா சொல்லும் அளவுக்கு வந்திருக்க, அதற்கு மேலும் சொல்லாமல் பேசாமல் இருக்க முடியவில்லை அனன்யாவால்.
"நானும் பேச கூடாதுன்னு தான் ம்மா நினைக்குறேன். ஆனா பேச வைக்குறிங்க. அண்ணி வீட்டுக்கு தானே போறேன். அதுவும் மகி மேரேஜ்க்கு. என்ன பிரச்சனை உங்களுக்கு? இங்க அவங்க எல்லாரும் இருக்கும் போது தான் அவங்களை சந்தோசமா இருக்க விடல. அவங்களோட என்னையும் சேர விடல. இப்ப அவங்க இடத்துல அவங்க வேலையை பார்த்துட்டு நிம்மதியா இருக்காங்க. உங்களுக்கு என்ன பொறாமை அதுல? நான் போனா என்ன ஆகிடும்? உங்களுக்கு பயந்து பயந்து தான் அண்ணி என்னை நீங்க இருக்கும் போது கிட்ட சேர்த்துக்க மாட்டாங்க. இப்ப நானும் கொஞ்சம் வளந்துட்டேன் ம்மா. இன்னும் நீங்க சொல்றது செய்யுறது தப்புன்னு தெரிஞ்சுமா செய்ய சொல்றிங்க?" என கேட்டவள்,
"நான் வீட்டுக்குள்ள வர முடியாதா? இது என் அப்பா வீடு. நான் வருவேன். அதை அப்பா சொல்லட்டும்" என்று சொல்ல,
"அவ தான் அறிவு கெட்டத்தனமா பேசுறானு தெரியுது இல்ல. இன்னமும் என்ன பேச்சு அனு அவகிட்ட. எப்பவும் போல நாம தான் விலகி நிக்கணும். நேத்தே திகழ் போன் பண்ணி சொன்னா உன்னை அங்க அனுப்ப சொல்லி.
நீ போய்ட்டு வா டா. நாங்க.... நான் நிச்சயத்துக்கு வர்றேன்!" என அன்பரசன் சொல்ல, தந்தையை அத்தனை வேதனையாய் கண்டாள் அனன்யா.
"ப்பா!" என்றவள் மனம் குற்ற உணர்வில் தகிக்க,
"நானும் தப்பு பண்ணிருக்கேன். உங்ககிட்ட சொல்லாம பண்ணினா அது தப்பு தானே? அதை தான் தப்புன்னு சொல்றேன். ஆனா...." என்றவள்,
"ப்ளீஸ் ப்பா. என்னை புரிஞ்சுக்கோங்க" என்றவளுக்கு முழுதாய் சொல்லிடவும் முடியவில்லை அந்த நிலையில்.
"அனு! அவ தான் உளறிட்டு இருக்கான்னா நீ வேற! கிளம்பு! போய்ட்டு வா!" என்று சொல்ல,
"இல்லப்பா. மகி கல்யாணம் முடிஞ்சதும் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கண்டிப்பா பேசணும்!" அனன்யா சொல்ல, அவள் தவிப்பை கண்டவருக்கும் கவலை தான்.
"சரி டா. பேசலாம். எதுவா இருந்தாலும் பார்த்துக்குவோம். நீ கவலைப்படாத!" என சொல்லி அனுப்பி வைக்க, தான் அத்தனை சொல்லியும் செல்லும் மகளை அத்தனை கோபமாய் பார்த்து நின்றார் கனகா.
இத்தனைக்கும் இன்னும் மகளின் விருப்பம் எல்லாம் அவர் அறியாதது. திகழ்மதி வீட்டில் தங்க செல்கிறேன் என்றதற்கே இவ்வளவு பேச்சுக்கள்.
மகிழினி பூ வைக்கும் படலத்திற்கு அனன்யாவை வர வேண்டாம் என கனகா அப்பொழுதே கூறி இருக்க, அனன்யா வரவில்லை என்றதும் தன் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து தான் அவள் வரவில்லை என ஒரு அற்ப சந்தோசம் கொண்டவருக்கு திருமணத்திற்கும் வர வேண்டாம் என சொல்லும் தைரியம் இல்லை.
மகிழினியிடம் அதிகமாய் அவள் பழகுவது தெரியும். வியாழன் திருமணத்திற்கு செவ்வாய் கிழமை வருவாளாய் இருக்கும். அதற்கு முன் தான் அழைத்து பேச வேண்டாம். வியாழன் திருமணம் முடிந்ததும் வெள்ளிக்கிழமை அனன்யாவை வீட்டில் இருக்க வைத்து பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வர சொல்லிவிட வேண்டும் என்பது வரை நினைத்திருந்தவர் தான் கனகா.
இப்பொழுது சனிக்கிழமையே வந்ததோடு வந்ததும் இப்படி அங்கே தங்க செல்வாள் என்றே நினைக்கவில்லை. தன்னை மீறி சென்றிட மாட்டாள் என தான் நினைத்திருந்தார்.
"உங்க பொண்ணை பொத்தி பொத்தி வச்சு என்ன தான் பண்ண போறீங்க? அவளுக்கு வயசு என்ன ஆகுது? அந்த மகிக்கும் இவ வயசு தான். அவளுக்கே கல்யாணம். கொஞ்சமாவது அக்கறை இருக்கா பெத்த பொண்ணு மேல?" என அனன்யா சென்றதும் அன்பரசனிடம் நிற்க வைத்து கேள்வி எழுப்ப,
"நீ யாரை பார்த்தாலும் அவ கட்டிக்க போறதில்ல. என்னவோ இருக்கு அவ மனசுல. அதை கூடவா உன்னால புரிஞ்சிக்க முடியல? என்ன அம்மா நீ? நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்றேன்னு சொல்லவும் தான் என் பொண்ணு என்னை விட்டு தூரமா போனா. எல்லாம் உன்னால தான். அவளை கொஞ்சம் பேச விட்டா தானே அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியும்? நீ தான் அவ வந்தாலே உன் வேலையை ஆரம்பிச்சு வைக்குறியே!" என அன்பரசன் கூறினார்.
"ஆமா மாப்பிள்ளை பாக்குறேன் தான். என்ன ஒண்ணுமில்லாதவனையா பாக்குறேன்? இப்போ நான் பாத்துருக்குறது கூட டாக்டர் மாப்பிள்ளை!" கனகா கோபமாய் சொல்ல,
"எவ்வளவு நல்ல மாப்பிள்ளையாவும் இருக்கட்டும். அனுக்கு பிடிக்காததை செய்யாத. அவ என்னவோ சொல்ல நினைக்குறா. சொல்ல முடியாம அவளுக்குள்ள புழுங்கிட்டு நிக்குறா" என்ற அன்பரசனுக்கு,
மகள் யாரையும் காதலிக்கின்றாளோ என ஒரு சந்தேகம் இப்பொழுது அனன்யா பேசி சென்ற பின் தான் எழ ஆரம்பித்தது. அவள் தவிப்பை அந்த கண்களில் கண்டு கொண்டவருக்கு கனகாவால் தான் மகள் சொல்ல முடியாமல் தவிக்கின்றாளோ என்று தோன்ற, மகிழினி திருமணம் முடிந்ததும் பேசி தீர்க்க தான் நினைத்தார்.
இப்பொழுது வரையுமே அரவிந்த் மீதான எந்த ஒரு எண்ணமும் அன்பரசனிடம் என்ன கனகாவிடம் கூட கிடையாது.
பொதுவாகவே திகழ்மதி, மகிழினி, அரவிந்த் என்றால் கனகாவிற்கு அலர்ஜி தான். அதற்காகவே அவர்களிடம் இருந்து மகளை தனித்து வைக்க நினைக்க, இப்படி மீறி செல்பவளை இன்னும் அவள் போக்கில் விட முடியாது என முடிவு செய்தார்.
கனகாவை பொறுத்தவரை அவரின் ஆசை ஒன்றே ஒன்று தான். திகழ்மதி மகிழினி போல என்றில்லாமல் அவர்களை விடவும் தன் மகளுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கையை கொடுத்துவிட வேண்டும். அவர்களுக்கு கீழ் தன் மகள் என்றும் இருக்க கூடாது அவ்வளவு தான்.
ஆட்டோ திகழ்மதி வீட்டின் முன் வந்து நிற்க, சத்தம் கேட்டு முதலில் வெளிவந்து பார்த்தது மகிழினி அக்ஷயா தான்.
"அனன்யா அத்தை வந்தாச்சு அக்ஷிமா!" என குழந்தையோடு சென்று வாசலிலேயே அனன்யாவை கட்டிக் கொண்டாள் மகிழினி.
அவர்களைப் பார்த்ததும் புன்னகைத்து தானும் கட்டிக் கொண்டாலும் அனன்யாவின் முகத்தில் சோர்வின் சாயல் அப்பட்டமாய் தெரிய, திகழ்மதியும் வந்துவிட்டாள்.
"நிஜமா வர மாட்ட கல்யாணத்துக்கு தான் வருவன்னு நினைச்சேன் அனு. கனகா அத்தை எப்படியும் உன்னை விட மாட்டாங்க நினைச்சேன் தெரியுமா?" மகிழினி சொல்ல,
"நேத்து நீ கிளம்பிட்டேன்னு சொன்னதுல இருந்து மகி கீழேயே உக்காரல அனு. கனகா அத்தை விட மாட்டாங்க. அனு வர மாட்டான்னு ஒரே புலம்பல். அப்புறம் மாமாக்கு நான் போன் பண்ணி பேசி மாமாவும் ஓகே சொன்ன அப்புறம் தான் அமைதியானா!" என திகழ்மதி சொல்ல, அனன்யா புன்னகைத்தாள்.
"வா டா ம்மா! எப்படி இருக்க?" என மீனாட்சி வர, உடனே ஆர்யன் தந்தை விஸ்வநாதனும் வரவேற்பாய் தலையசைத்தார்.
இருவரும் வெளியில் கோவிலுக்கு சென்று வருவதாய் கூறி செல்ல, திகழ்மதி அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தாள்.
"என்ன அனு டல்லா தெரியுற? வீட்டுல எதுவும் சண்டையா? அத்தை எதுவும் சொன்னாங்களா?" திகழ்மதி வந்ததும் கவனித்தவள் பொதுவாய் பேசிவிட்டு பின் கேட்க,
"எப்பவும் போல தான் அண்ணி. எப்படி இருக்கன்னு கூட கேட்கல. ஏன் இப்பவே வந்தன்னு கேட்குறாங்க!" என்றவளுக்கு அத்தனை வருத்தம் அன்னையை நினைத்து.
"இந்த ஹிட்லர் அத்தை எப்பவுமே இப்படி தான். இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா அனு?" என மகிழினி கூறினாள்.
"பெரியவங்களை அப்படி சொல்லாதன்னு உனக்கு எவ்வளவு சொல்றது மகி?" திகழ்மதி முறைத்தாள் தங்கையை.
"என்னவோ வெறுப்பா இருக்கு அண்ணி வீட்டை நினைச்சாலே!" அனன்யா சொல்ல,
"அவங்களுக்கும் கவலை இருக்குமே அனு. மகிக்கு கல்யாணமாக போகுது. அவ வயசு தான் உனக்கும். உனக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசை இருக்குமே! அந்த கோபத்துல எதாவது சொல்லுவாங்க. அடுத்து உனக்கு கல்யாணம் முடிவாகவும் எல்லாம் சரி ஆகிடும் பாரு!" என திகழ்மதி சொல்லவும் அனன்யா அமைதியாகிவிட்டாள்.
தன் விருப்பம் என மட்டும் இருந்த வரை கூட இப்படி ஒரு குற்ற உணர்வு அவளுக்கு இருந்ததில்லை. இப்பொழுது அரவிந்த் விருப்பமும் தெரிந்தும் இவர்களிடம் மறைப்பதில் இன்னும் மனம் சோர்வடைந்தது.
"ஆமா மாமா அர்வி எங்க க்கா? நான் மதியமே பபார்க்கலையே?" என மகிழினி கேட்க,
"வசந்த் மண்டபத்துல டெக்கரேட் பண்ண ஆள் வந்திருக்காங்கனு போன் பண்ணினார் மகி. டிசைன் செக் பண்ணிட்டு வர்றேன்னு போனாங்க" என்று சொல்ல, சரியாய் அழைப்பு வந்துவிட்டது மகிழினிக்கு வசந்த்திடம் இருந்து.
"அவ்ளோ தான். இனி மகியை கையில பிடிக்க முடியாது!" திகழ்மதி சொல்ல,
"மகி உனக்காக தான் நான் வந்திருக்கேன். என் கூட தான் நீ டைம் ஸ்பென்ட் பண்ணனும்!" என அனன்யா மகிழினியிடம் பேச, அக்ஷயா இவர்களை சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
"நல்லா சொல்லு அனு. மூணு நாள் தான். அப்புறம் மகிகிட்ட பேசணும்னா நாம போன்ல தான் பேசிக்கணும்" என திகழ்மதியும் கிண்டல் பேச,
"அக்கா!" என சிணுங்கிய மகிழினி அக்ஷயா மற்றும் அனன்யாவோடு தன் அறைக்கு சென்றாள்.
இரவு எட்டு மணிக்கு சாப்பிடும் நேரம் ஆகியும் ஆர்யன் அரவிந்த் வரவில்லை வீட்டிற்கு. அனன்யா தான் அதிகமாய் அரவிந்த்தை தேடினாள்.
உடனே பார்த்துவிட வேண்டும் போல அவனை மனம் தேட, இவ்வளவு இன்று தேட வைக்கின்றானே என காத்திருந்தவள் அலைபேசி இருந்தும் அழைக்கவில்லை.
"அனு வந்ததை அவங்களுக்கு சொல்ல வேண்டாம். சர்ப்ரைஸ் ஆகட்டும் ரெண்டு பேரும்" என மகிழினி சொல்லி இருக்க, ஆர்யனிடமும் திகழ்மதி எதுவும் சொல்லி இருக்கவில்லை.
காலையில் வீட்டிற்கு வந்ததும் ஒரு செய்தி வந்துவிட்டதாய் அனன்யாவிடம் இருந்து அரவிந்த்திற்கு வந்த பின் எந்த ஒரு செய்தியும் இதுவரை வந்து சேராததில் ஆர்யனுடன் மண்டபம், பேனர் என சுற்றிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது அலைபேசியை எடுத்து பார்த்து ஏமாற்றமாய் தான் உணர்ந்தான் அரவிந்த்.
எப்பொழுது மகிழினியை பார்க்க என்று வருவாள் என தெரியாதே. இன்றே வருவாள் என்றும் எதிர்பார்க்க முடியாது. தந்தையோடு தங்கிவிட்டு நாளை தான் வருவாளோ என நினைத்தவனுக்கு தானே அவளுக்கு அழைக்கவும் அத்தனை யோசனை கனகாவை நினைத்து.
இதோ இப்படி பல எண்ணங்கக்கு நடுவில் வேலைகளை முடித்துக் கொண்டு ஆர்யனோடு அரவிந்த் வீட்டிற்கு வர, அவன் கண்முன் அவன் தேவதை மகிழினியோடு சிரித்துபேசியபடி.
தொடரும்..
அன்று மாலையே அன்னையின் அத்தனை பேச்சையும் மீறி திகழ்மதி வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாள் அனன்யா.
"என்னை மீறி போனா திரும்ப இந்த வீட்டுக்குள்ள வர முடியாது பார்த்துக்க அனு!" என கனகா சொல்லும் அளவுக்கு வந்திருக்க, அதற்கு மேலும் சொல்லாமல் பேசாமல் இருக்க முடியவில்லை அனன்யாவால்.
"நானும் பேச கூடாதுன்னு தான் ம்மா நினைக்குறேன். ஆனா பேச வைக்குறிங்க. அண்ணி வீட்டுக்கு தானே போறேன். அதுவும் மகி மேரேஜ்க்கு. என்ன பிரச்சனை உங்களுக்கு? இங்க அவங்க எல்லாரும் இருக்கும் போது தான் அவங்களை சந்தோசமா இருக்க விடல. அவங்களோட என்னையும் சேர விடல. இப்ப அவங்க இடத்துல அவங்க வேலையை பார்த்துட்டு நிம்மதியா இருக்காங்க. உங்களுக்கு என்ன பொறாமை அதுல? நான் போனா என்ன ஆகிடும்? உங்களுக்கு பயந்து பயந்து தான் அண்ணி என்னை நீங்க இருக்கும் போது கிட்ட சேர்த்துக்க மாட்டாங்க. இப்ப நானும் கொஞ்சம் வளந்துட்டேன் ம்மா. இன்னும் நீங்க சொல்றது செய்யுறது தப்புன்னு தெரிஞ்சுமா செய்ய சொல்றிங்க?" என கேட்டவள்,
"நான் வீட்டுக்குள்ள வர முடியாதா? இது என் அப்பா வீடு. நான் வருவேன். அதை அப்பா சொல்லட்டும்" என்று சொல்ல,
"அவ தான் அறிவு கெட்டத்தனமா பேசுறானு தெரியுது இல்ல. இன்னமும் என்ன பேச்சு அனு அவகிட்ட. எப்பவும் போல நாம தான் விலகி நிக்கணும். நேத்தே திகழ் போன் பண்ணி சொன்னா உன்னை அங்க அனுப்ப சொல்லி.
நீ போய்ட்டு வா டா. நாங்க.... நான் நிச்சயத்துக்கு வர்றேன்!" என அன்பரசன் சொல்ல, தந்தையை அத்தனை வேதனையாய் கண்டாள் அனன்யா.
"ப்பா!" என்றவள் மனம் குற்ற உணர்வில் தகிக்க,
"நானும் தப்பு பண்ணிருக்கேன். உங்ககிட்ட சொல்லாம பண்ணினா அது தப்பு தானே? அதை தான் தப்புன்னு சொல்றேன். ஆனா...." என்றவள்,
"ப்ளீஸ் ப்பா. என்னை புரிஞ்சுக்கோங்க" என்றவளுக்கு முழுதாய் சொல்லிடவும் முடியவில்லை அந்த நிலையில்.
"அனு! அவ தான் உளறிட்டு இருக்கான்னா நீ வேற! கிளம்பு! போய்ட்டு வா!" என்று சொல்ல,
"இல்லப்பா. மகி கல்யாணம் முடிஞ்சதும் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கண்டிப்பா பேசணும்!" அனன்யா சொல்ல, அவள் தவிப்பை கண்டவருக்கும் கவலை தான்.
"சரி டா. பேசலாம். எதுவா இருந்தாலும் பார்த்துக்குவோம். நீ கவலைப்படாத!" என சொல்லி அனுப்பி வைக்க, தான் அத்தனை சொல்லியும் செல்லும் மகளை அத்தனை கோபமாய் பார்த்து நின்றார் கனகா.
இத்தனைக்கும் இன்னும் மகளின் விருப்பம் எல்லாம் அவர் அறியாதது. திகழ்மதி வீட்டில் தங்க செல்கிறேன் என்றதற்கே இவ்வளவு பேச்சுக்கள்.
மகிழினி பூ வைக்கும் படலத்திற்கு அனன்யாவை வர வேண்டாம் என கனகா அப்பொழுதே கூறி இருக்க, அனன்யா வரவில்லை என்றதும் தன் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து தான் அவள் வரவில்லை என ஒரு அற்ப சந்தோசம் கொண்டவருக்கு திருமணத்திற்கும் வர வேண்டாம் என சொல்லும் தைரியம் இல்லை.
மகிழினியிடம் அதிகமாய் அவள் பழகுவது தெரியும். வியாழன் திருமணத்திற்கு செவ்வாய் கிழமை வருவாளாய் இருக்கும். அதற்கு முன் தான் அழைத்து பேச வேண்டாம். வியாழன் திருமணம் முடிந்ததும் வெள்ளிக்கிழமை அனன்யாவை வீட்டில் இருக்க வைத்து பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வர சொல்லிவிட வேண்டும் என்பது வரை நினைத்திருந்தவர் தான் கனகா.
இப்பொழுது சனிக்கிழமையே வந்ததோடு வந்ததும் இப்படி அங்கே தங்க செல்வாள் என்றே நினைக்கவில்லை. தன்னை மீறி சென்றிட மாட்டாள் என தான் நினைத்திருந்தார்.
"உங்க பொண்ணை பொத்தி பொத்தி வச்சு என்ன தான் பண்ண போறீங்க? அவளுக்கு வயசு என்ன ஆகுது? அந்த மகிக்கும் இவ வயசு தான். அவளுக்கே கல்யாணம். கொஞ்சமாவது அக்கறை இருக்கா பெத்த பொண்ணு மேல?" என அனன்யா சென்றதும் அன்பரசனிடம் நிற்க வைத்து கேள்வி எழுப்ப,
"நீ யாரை பார்த்தாலும் அவ கட்டிக்க போறதில்ல. என்னவோ இருக்கு அவ மனசுல. அதை கூடவா உன்னால புரிஞ்சிக்க முடியல? என்ன அம்மா நீ? நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்றேன்னு சொல்லவும் தான் என் பொண்ணு என்னை விட்டு தூரமா போனா. எல்லாம் உன்னால தான். அவளை கொஞ்சம் பேச விட்டா தானே அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியும்? நீ தான் அவ வந்தாலே உன் வேலையை ஆரம்பிச்சு வைக்குறியே!" என அன்பரசன் கூறினார்.
"ஆமா மாப்பிள்ளை பாக்குறேன் தான். என்ன ஒண்ணுமில்லாதவனையா பாக்குறேன்? இப்போ நான் பாத்துருக்குறது கூட டாக்டர் மாப்பிள்ளை!" கனகா கோபமாய் சொல்ல,
"எவ்வளவு நல்ல மாப்பிள்ளையாவும் இருக்கட்டும். அனுக்கு பிடிக்காததை செய்யாத. அவ என்னவோ சொல்ல நினைக்குறா. சொல்ல முடியாம அவளுக்குள்ள புழுங்கிட்டு நிக்குறா" என்ற அன்பரசனுக்கு,
மகள் யாரையும் காதலிக்கின்றாளோ என ஒரு சந்தேகம் இப்பொழுது அனன்யா பேசி சென்ற பின் தான் எழ ஆரம்பித்தது. அவள் தவிப்பை அந்த கண்களில் கண்டு கொண்டவருக்கு கனகாவால் தான் மகள் சொல்ல முடியாமல் தவிக்கின்றாளோ என்று தோன்ற, மகிழினி திருமணம் முடிந்ததும் பேசி தீர்க்க தான் நினைத்தார்.
இப்பொழுது வரையுமே அரவிந்த் மீதான எந்த ஒரு எண்ணமும் அன்பரசனிடம் என்ன கனகாவிடம் கூட கிடையாது.
பொதுவாகவே திகழ்மதி, மகிழினி, அரவிந்த் என்றால் கனகாவிற்கு அலர்ஜி தான். அதற்காகவே அவர்களிடம் இருந்து மகளை தனித்து வைக்க நினைக்க, இப்படி மீறி செல்பவளை இன்னும் அவள் போக்கில் விட முடியாது என முடிவு செய்தார்.
கனகாவை பொறுத்தவரை அவரின் ஆசை ஒன்றே ஒன்று தான். திகழ்மதி மகிழினி போல என்றில்லாமல் அவர்களை விடவும் தன் மகளுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கையை கொடுத்துவிட வேண்டும். அவர்களுக்கு கீழ் தன் மகள் என்றும் இருக்க கூடாது அவ்வளவு தான்.
ஆட்டோ திகழ்மதி வீட்டின் முன் வந்து நிற்க, சத்தம் கேட்டு முதலில் வெளிவந்து பார்த்தது மகிழினி அக்ஷயா தான்.
"அனன்யா அத்தை வந்தாச்சு அக்ஷிமா!" என குழந்தையோடு சென்று வாசலிலேயே அனன்யாவை கட்டிக் கொண்டாள் மகிழினி.
அவர்களைப் பார்த்ததும் புன்னகைத்து தானும் கட்டிக் கொண்டாலும் அனன்யாவின் முகத்தில் சோர்வின் சாயல் அப்பட்டமாய் தெரிய, திகழ்மதியும் வந்துவிட்டாள்.
"நிஜமா வர மாட்ட கல்யாணத்துக்கு தான் வருவன்னு நினைச்சேன் அனு. கனகா அத்தை எப்படியும் உன்னை விட மாட்டாங்க நினைச்சேன் தெரியுமா?" மகிழினி சொல்ல,
"நேத்து நீ கிளம்பிட்டேன்னு சொன்னதுல இருந்து மகி கீழேயே உக்காரல அனு. கனகா அத்தை விட மாட்டாங்க. அனு வர மாட்டான்னு ஒரே புலம்பல். அப்புறம் மாமாக்கு நான் போன் பண்ணி பேசி மாமாவும் ஓகே சொன்ன அப்புறம் தான் அமைதியானா!" என திகழ்மதி சொல்ல, அனன்யா புன்னகைத்தாள்.
"வா டா ம்மா! எப்படி இருக்க?" என மீனாட்சி வர, உடனே ஆர்யன் தந்தை விஸ்வநாதனும் வரவேற்பாய் தலையசைத்தார்.
இருவரும் வெளியில் கோவிலுக்கு சென்று வருவதாய் கூறி செல்ல, திகழ்மதி அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தாள்.
"என்ன அனு டல்லா தெரியுற? வீட்டுல எதுவும் சண்டையா? அத்தை எதுவும் சொன்னாங்களா?" திகழ்மதி வந்ததும் கவனித்தவள் பொதுவாய் பேசிவிட்டு பின் கேட்க,
"எப்பவும் போல தான் அண்ணி. எப்படி இருக்கன்னு கூட கேட்கல. ஏன் இப்பவே வந்தன்னு கேட்குறாங்க!" என்றவளுக்கு அத்தனை வருத்தம் அன்னையை நினைத்து.
"இந்த ஹிட்லர் அத்தை எப்பவுமே இப்படி தான். இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா அனு?" என மகிழினி கூறினாள்.
"பெரியவங்களை அப்படி சொல்லாதன்னு உனக்கு எவ்வளவு சொல்றது மகி?" திகழ்மதி முறைத்தாள் தங்கையை.
"என்னவோ வெறுப்பா இருக்கு அண்ணி வீட்டை நினைச்சாலே!" அனன்யா சொல்ல,
"அவங்களுக்கும் கவலை இருக்குமே அனு. மகிக்கு கல்யாணமாக போகுது. அவ வயசு தான் உனக்கும். உனக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசை இருக்குமே! அந்த கோபத்துல எதாவது சொல்லுவாங்க. அடுத்து உனக்கு கல்யாணம் முடிவாகவும் எல்லாம் சரி ஆகிடும் பாரு!" என திகழ்மதி சொல்லவும் அனன்யா அமைதியாகிவிட்டாள்.
தன் விருப்பம் என மட்டும் இருந்த வரை கூட இப்படி ஒரு குற்ற உணர்வு அவளுக்கு இருந்ததில்லை. இப்பொழுது அரவிந்த் விருப்பமும் தெரிந்தும் இவர்களிடம் மறைப்பதில் இன்னும் மனம் சோர்வடைந்தது.
"ஆமா மாமா அர்வி எங்க க்கா? நான் மதியமே பபார்க்கலையே?" என மகிழினி கேட்க,
"வசந்த் மண்டபத்துல டெக்கரேட் பண்ண ஆள் வந்திருக்காங்கனு போன் பண்ணினார் மகி. டிசைன் செக் பண்ணிட்டு வர்றேன்னு போனாங்க" என்று சொல்ல, சரியாய் அழைப்பு வந்துவிட்டது மகிழினிக்கு வசந்த்திடம் இருந்து.
"அவ்ளோ தான். இனி மகியை கையில பிடிக்க முடியாது!" திகழ்மதி சொல்ல,
"மகி உனக்காக தான் நான் வந்திருக்கேன். என் கூட தான் நீ டைம் ஸ்பென்ட் பண்ணனும்!" என அனன்யா மகிழினியிடம் பேச, அக்ஷயா இவர்களை சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
"நல்லா சொல்லு அனு. மூணு நாள் தான். அப்புறம் மகிகிட்ட பேசணும்னா நாம போன்ல தான் பேசிக்கணும்" என திகழ்மதியும் கிண்டல் பேச,
"அக்கா!" என சிணுங்கிய மகிழினி அக்ஷயா மற்றும் அனன்யாவோடு தன் அறைக்கு சென்றாள்.
இரவு எட்டு மணிக்கு சாப்பிடும் நேரம் ஆகியும் ஆர்யன் அரவிந்த் வரவில்லை வீட்டிற்கு. அனன்யா தான் அதிகமாய் அரவிந்த்தை தேடினாள்.
உடனே பார்த்துவிட வேண்டும் போல அவனை மனம் தேட, இவ்வளவு இன்று தேட வைக்கின்றானே என காத்திருந்தவள் அலைபேசி இருந்தும் அழைக்கவில்லை.
"அனு வந்ததை அவங்களுக்கு சொல்ல வேண்டாம். சர்ப்ரைஸ் ஆகட்டும் ரெண்டு பேரும்" என மகிழினி சொல்லி இருக்க, ஆர்யனிடமும் திகழ்மதி எதுவும் சொல்லி இருக்கவில்லை.
காலையில் வீட்டிற்கு வந்ததும் ஒரு செய்தி வந்துவிட்டதாய் அனன்யாவிடம் இருந்து அரவிந்த்திற்கு வந்த பின் எந்த ஒரு செய்தியும் இதுவரை வந்து சேராததில் ஆர்யனுடன் மண்டபம், பேனர் என சுற்றிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது அலைபேசியை எடுத்து பார்த்து ஏமாற்றமாய் தான் உணர்ந்தான் அரவிந்த்.
எப்பொழுது மகிழினியை பார்க்க என்று வருவாள் என தெரியாதே. இன்றே வருவாள் என்றும் எதிர்பார்க்க முடியாது. தந்தையோடு தங்கிவிட்டு நாளை தான் வருவாளோ என நினைத்தவனுக்கு தானே அவளுக்கு அழைக்கவும் அத்தனை யோசனை கனகாவை நினைத்து.
இதோ இப்படி பல எண்ணங்கக்கு நடுவில் வேலைகளை முடித்துக் கொண்டு ஆர்யனோடு அரவிந்த் வீட்டிற்கு வர, அவன் கண்முன் அவன் தேவதை மகிழினியோடு சிரித்துபேசியபடி.
தொடரும்..