அத்தியாயம் 23
"அனு! ஹே அனு!" என சத்தமாய் அரவிந்த் அழைக்க, மணப்பெண் அறையில் மற்ற பெண்களோடு பேசி சிரித்து நின்றிருந்த அனன்யாவிற்கு அங்கிருந்த ரேடியோ சத்தத்தில் முதலில் கேட்கவில்லை.
"அனு!" என இன்னும் சத்தமாய் அழைத்த பின் தான் பெண்கள் மொத்தமாய் அவன் பக்கம் திரும்ப,
"மாப்பிள்ளை மேடைக்கு வந்தாச்சு. கதை பேசிட்டு நிக்குற? மகியை கூட்டிட்டு வா. அக்கா எங்க?" என்றான் அவசரமாய்.
"இதோ முடிஞ்சது அர்வி! நாங்க அழைச்சுட்டு வர்றோம்!" என மகிழினி கண்களை துடைத்துவிட்டுக் கொண்டிருந்த திகழ்மதி சத்தம் மட்டும் கேட்க, அனன்யாவை முறைத்தான் அரவிந்த்.
"பொண்ணு ரெடி தான் த்தான். இதோ வர்றோம்!" என அவளும் தடுப்புக்கு அந்த பக்கமாய் மறைய,
"உனக்கு இருக்கு!" என முணுமுணுத்து மேடைக்கு வசந்த் அருகே சென்று ஆர்யன் உடன் நின்று கொண்டான்.
"இன்னுமா மேக்கப் முடியல?" ஆர்யன் கேட்க,
"பெயிண்ட் அடிக்க லேட்டாக தானே செய்யும்?" என்று அரவிந்த்தும் சொல்ல, வசந்த் திரும்பி இருவரையும் பார்த்தான்.
"வீட்டுக்கு போனதும் ஒரு முழு சோப் குடுங்க மகிக்கு. சரியாகிடும்!" என்று வேறு ஆர்யன் சொல்ல, அரவிந்த் சிரிப்பை அடக்கி நின்றான்.
"என்ன ப்ரோ?" என வசந்த்தும் சிரிக்க, அங்கே திகழ்மதியை கட்டிக் கொண்டு அழுதபடி நின்றாள் மகிழினி.
"அச்சோ அண்ணி! அர்வி த்தான் என்னை முறைச்சுட்டு போறாங்க. ரெண்டு டைம் ஆளுங்க தேடி வந்தாச்சு. மீனாம்மாவும் முன்னாடி நின்னு போன் பன்றாங்க. இப்ப போய் அவ கூட சேர்ந்து நீங்களும் அழறீங்க. வாங்க வாங்க கூட்டிட்டு போகலாம். மகி! எங்க போக போறோம் உன்னையை விட்டு!" என சொல்லி அனன்யாவும் அவள் கண்களை துடைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து அழைத்து வர,
"உள்ள பாசமலர் படம் ஓடிருக்கும் போலயே அரவிந்தா!" என பார்த்ததும் கண்டுகொண்டான் ஆர்யனோடு அரவிந்த்தும்.
திகழ்மதி, அனன்யா இருவரும் மகிழினி இருபுறங்களிலும் நின்று அழைத்து வர, மற்ற பெண்கள் உடன் வந்து கொண்டிருந்தனர்.
பார்த்த அரவிந்த் முகத்தினில் அத்தனை நிறைவு. இப்படியே இந்த உறவுகள் தொடர அதிவேகமாய் கடவுளிடம் ஒரு விண்ணப்பம் செலுத்திக் கொண்டான்.
மகிழினியை வசந்த் அருகே அமர வைத்துவிட்டு திகழ்மதி மணமக்களுக்கு பின் சென்று ஆர்யானோடு நின்று கொள்ள, திகழ்மதி அருகே அனன்யாவும் ஆர்யன் அருகே அரவிந்த்தும் என மணமக்களுக்கு பின் நின்றனர்.
அட்சதை பூக்களை திருமாங்கல்யத்தோடு திகழ்மதி கொண்டு சென்று கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வர, அது வசந்த் கைகளில் இடம்பெயர்ந்தது அடுத்த சில நிமிடங்களில்.
கனகாவும் அங்கே கூட்டத்தில் ஓரிடத்தில் அமர்ந்து தன் மகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார். திகழ்மதிக்கு போலவே அனன்யாவிற்குமான புடவை நகை என பார்த்ததும் மகள் அழகில் கண்களை கவர்ந்தாலும் அதைவிட மூளையில் பதிந்தது என்னவோ மணமக்களுக்கு பின் நடுவில் திகழ்மதி ஆர்யன் என நிற்க இரு ஓரத்திலும் ஆர்யன் போலவேயான உடையில் அரவிந்த்தும் திகழ்மதி போலவேயான உடையில் அனன்யாவும் என்பதும் தான்.
பார்த்ததும் அத்தனை கோபம். அவர்கள் வீட்டுப் பெண்ணாய் மகளே நிற்க, இப்பொழுது யாரிடம் சென்று கோபத்தை காட்டிட என தெரியாமல் திருமணம் முடிய காத்திருந்தார் கனகா.
அன்பரசன் கவனத்திலும் இந்த உடை வித்தியாசம் விழ தான் செய்தது என்றாலும் அதை அவர் வேறு எந்த மாதிரியான கண்ணோட்டத்திலும் பார்க்கவில்லை.
தான் தன் சகோதரியின் மக்களை சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் தன் மகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்து தான் மனமார மகிழினியின் மகிழ்வை வேண்டி நின்றார்.
"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்ற சத்தத்தில் வசந்த் அந்த தங்க மாங்கல்யத்தை மகிழினியிடம் சேர்ப்பிக்க, பூத்தூவளோடு அனைவரின் ஆசிர்வாதங்களும் அவர்களை சேர்ந்து கொண்டிருந்தது.
அடுத்த பத்து நிமிடங்கள் புகைபடங்கள் எடுக்க என அங்கேயே நின்ற ஆர்யன், அரவிந்த், திகழ்மதி எல்லாம் அடுத்த சில நிமிடங்களில் வந்தவர்களை கவனிக்க சென்றுவிட, அனன்யா மகிழினி அருகேவே நின்று கொண்டாள் மகிழ்ச்சியாய்.
கனகாவை அழைத்துக் கொண்டு அன்பரசன் மேடையேற, "இந்த செயினை மகிக்கு போட்டுவிடு அனு!" என அன்பரசன் கொடுத்ததை சந்தோஷமாய் அனன்யா செய்ய, புகைப்படத்தில் சேர்ந்தது அந்த தருணம்.
"அனு! வா போலாம்" என கனகா அழைக்க,
"இப்பவேவா? இன்னைக்கு ஒரு நாள் த்தை! ப்ளீஸ்!" என மகிழினி கேட்டவள் கனகாவிடம் கெஞ்ச,
"அதான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல. இனியாவது புருஷன் சொல்றதை கேட்டு உன் பொழைப்பை பாரு!" சட்டென்று கனகா சொல்லிவிட்டார்.
மகிழினியுமே அப்படி பேச்சை எதிர்பார்க்காதவள் கணவனை திரும்பிப் பார்க்க, அவன் நண்பர்களோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.
"அறிவுன்னு ஒண்ணு இருக்குதா இல்லையா ம்மா உனக்கு? எங்க என்ன பேசணும்னு தெரியுதா?" என அனன்யா அங்கேயே கோபத்தை காட்ட,
"இவளை கூட்டிட்டு வந்தேன் பாரு! என்னை சொல்லணும்!" என பல்லைக் கடித்தார் அன்பரசன்.
"மகி! சாரி டா. அம்மா பேசினதை மனசுல வச்சுக்காத!" அவளை அணைத்து அனன்யா சொல்ல,
"ஹிட்லர் அத்தை என்னவோ காண்டுல நிக்கிறாங்க நீ அவங்களை நைஸா பேசி அனுப்பிட்டு வந்துடு. ஓகே!" என மகிழினி கண் சிமிட்டிய பின் தான் மூச்சே வந்தது அனன்யாவிற்கு.
"கீழ வாங்க ம்மா!" என அனன்யா கோபமாய் அழைத்து வந்தவள்,
"ப்பா! நான் அப்புறமா வர்றேன். நீங்க அம்மாவை கூட்டிட்டு போங்க!" என சொல்ல, அன்பரசனும் பேசாமல் மனைவியை வா என்பதாய் பார்த்தார்.
"கல்யாண வயசுல பொம்பள பிள்ளையை கண்ட இடத்துல விட்டுட்டு போக சொல்றிங்க. என்ன தெரியும் உங்களுக்கு?" என கனகா பதிலுக்கு கேட்க,
"கண்ட இடமா இது உனக்கு? பேசணும்னு எதுவும் பேசாத. உன்னை விட உன் பொண்ணை அவங்க நல்லா பாத்துக்குறாங்க. அவ மனசு நிறைஞ்ச சந்தோசத்துல தான் இங்க இருக்கான்னு அவளை இப்படி பார்த்துமா உனக்கு தெரியல?" என வார்த்தைகள் சத்தமாய் வந்துவிடாதபடிக்கு கோபத்தை அன்பரசன் காட்ட,
"அதான் தெரியுதே! என் பொண்ணையும் என்கிட்ட இருந்து பிரிக்க தான் இந்த புடவை, நகை எல்லாம் குடுத்து பக்கத்துல நிக்க வச்சுருக்காங்க. அடியேய்! போகும் போது எல்லாத்தையும் பிடுங்கிட்டு விட்ருவாங்க. இது இரவல் மாதிரி தான்!" என கனகா சத்தம் உயர,
"கனகா! ஏதாச்சும் பேசின!" என பல்லைக் கடித்துக் கொண்டு அவரை அடிப்பது போல அருகே சென்றுவிட்டார் அன்பரசன்.
"அய்யோ! உங்களுக்கு புரியுதா இல்லையா? பொண்ணு மாப்பிள்ளைக்கு பின்ன ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுக்கிட்டு அதுவும் அந்த அரவிந்த்துக்கு...." என நறநறவென பற்களை கனகா கடிக்க,
"ம்மா!" என தானும் குரலை உயர்த்திவிட்டாள் அனன்யா.
"ச்சீ! உன் புத்தி இருக்கே!" என அன்பரசனும் கனகாவைப் பார்க்க,
"ப்ச்! விடுங்க ப்பா. இவங்களுக்கு அதெல்லாம் சொன்னா புரியாது. நான் ஈவினிங் வர்றேன். நீங்க கூட்டிட்டு கிளம்புங்க!" என்ற அனன்யா கனகா கூப்பிட கூப்பிட கேட்காதவளாய் மேடை ஏறி மகிழினி அருகே சென்று நின்று கொண்டாள்.
கனகாவும் விடாமல் அவ்வளவு பேசி தான் பார்த்தார். அன்பரசன் தான் அங்கே யார் கண்களையும் இந்த நிகழ்வு கவராதபடிக்கு கனகாவை இழுத்து சென்றார்.
"நேரமாகிடுச்சு திகழ். இன்னும் அவங்க ரெண்டு பேரும் சாப்பிடல. கூட்டிட்டு வா!" என மகிழினி வசந்த்தை அழைக்க ஆர்யன் சொல்லவும் திகழ்மதி அவர்களோடு அனன்யாவையும் அழைத்து வந்தாள்.
மகிழினி இப்படி அத்தை, மாமா, அனன்யா என கோபமாய் பேசிக் கொண்டதாய் சொல்லவும் திகழ்மதி அனன்யாவிடம் கேட்க,
"அதெல்லாம் எதுவுமில்லை அண்ணி. அம்மாவை தெரியாதா உங்களுக்கு?" என்று அமைதியாகிய அனன்யா சில நிமிடங்கள் முன்பிருந்த அந்த உற்சாகத்தை இழந்திருந்தாள்.
"சரி விடு. அம்மா தானே!" என திகழ்மதி சமாதானம் சொல்லி அழைத்து வந்து சாப்பிட அமர வைக்க,
"மாமா! சாப்பிடலாமா?" என்றான் அரவிந்த்தும் இவர்களைப் பார்த்தபடி.
"நான் தான் அக்ஷி, திகழ் கூட அப்பவே சாப்பிட்டேனே!" என ஆர்யன் சொல்ல,
"இதுக்கெல்லாம் குடும்பமா போயிடுவீங்களே!" என முறைத்தான் அரவிந்த்.
"நீயும் உன் குடும்பத்தோட சாப்பிட தான் கேட்குறனு புரியாத முட்டாளா நான்?" என ஆர்யன் கிண்டல் செய்து அனன்யாவைக் கண் காட்ட,
"ரைட்டு..." என்று சிரித்தபடி வசந்த்தை அடுத்து மகிழினி, அவளை அடுத்து அனன்யா என அமர்ந்திருக்க, அனன்யாவை அடுத்து சென்று அமர்ந்து கொண்டான் அவளருகில் அரவிந்த்.
"நீங்க இன்னும் சாப்பிடலையா த்தான்?" தன் அருகே அவன் வந்து அமரவும் புன்னகைத்து அனன்யா கேட்க,
"உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு எப்ப கூப்பிட்டேன் நியாபகம் இருக்கா அனு?" இலையை விரித்து தண்ணீர் தெளித்தபடி அரவிந்த் பார்வையை அவளிடம் கொண்டு வராமல் கேட்க, அனன்யா பார்வை முழுதும் அரவிந்த்திடம் தான்.
அவளுக்கு தெரியுமே! நன்றாய் நியாபகத்தில் என்ன இதயத்தில் இன்னும் அப்படியே பதிந்திருந்ததே அந்த நொடி.
அன்று திகழ்மதி வீட்டில் அனன்யாவைக் கண்டதும் ஆச்சர்யத்தில் கண்களை விரித்த அரவிந்த்தைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்த அனன்யாவை பார்வையால் பாராட்டி இருந்தான் அங்கே வந்ததற்கு.
அடுத்த மூன்று நாட்களும் அத்தனை ஓட்டம் ஆர்யன் அரவிந்த் இருவருக்குமே திருமண நிகழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும். நிற்க நேரமே இல்லை. பெண்கள் அனைவரும் தங்களது உடை, அதற்கான பொருத்தமான ஆபரணம் என அவர்களும் பிஸியாக இருந்தாலும் அனன்யா அரவிந்த்தை கவனிப்பதை உணர்ந்து தான் இருந்தான் அரவிந்த்.
நிச்சயம் நடந்த திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை மகிழினியோடு மேடை ஏறி வந்த அனன்யாவைக் கண்டு ஒரு சில நொடி மூச்சு விடவும் மறந்து தான் நின்றான் அரவிந்த்.
"அவ்வா! இவ்வளவு அழகா அனு நீ?" என தனக்குள் தான் பேசிக் கொள்ள முடிந்தது அவனுக்கு.
சில நிமிடங்கள் வேலை போல எங்கும் செல்லாமல் அங்கேயே அனன்யாவை சுற்றியே என தான் அரவிந்த் நிற்க,
"அடேய்! கல்யாணம் மகிக்கு டா!" என ஆர்யன் தான் இழுத்து சென்றிருந்தான்.
அப்போதும் கூட தனியாய் பார்த்த ஒரு சமயம் "உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் அனு!" என அரவிந்த் கூற, அவனை இரு நொடிகள் கவனித்தவள் அடுத்து அவன் கண்கள்படும் தூரத்தில் நிற்காமல் அத்தனை போக்கு காட்டி இருந்தாள்.
இத்தனை நாட்கள் இல்லாதபடிக்கு அரவிந்த் கண்கள் பாஷை அப்டியே புரிந்தது அனன்யாவிற்கு.
அவனை தேடவிட்டு, தான் தள்ளி இருந்து அவனை ரசித்திருந்தவளுக்கு அவன் என்ன பேசுவானோ என அவனை நேராய் காண்பதை தவிர்த்து வந்திருக்க, இன்று காலை திருமணத்திற்கு என அனன்யாவின் அலங்காரத்திலும் மொத்தமாய் மயக்கத்தில் தெளியாமல் தான் சுற்றி வந்தான் அரவிந்த்.
"சொல்லு அனு! எப்ப கூப்பிட்டேன்!" என மீண்டும் கேட்டவன், அருகிருந்த தன்னவளின் வாசத்தில் இன்னுமே தள்ளாடியிருந்தான்.
தொடரும்..
"அனு! ஹே அனு!" என சத்தமாய் அரவிந்த் அழைக்க, மணப்பெண் அறையில் மற்ற பெண்களோடு பேசி சிரித்து நின்றிருந்த அனன்யாவிற்கு அங்கிருந்த ரேடியோ சத்தத்தில் முதலில் கேட்கவில்லை.
"அனு!" என இன்னும் சத்தமாய் அழைத்த பின் தான் பெண்கள் மொத்தமாய் அவன் பக்கம் திரும்ப,
"மாப்பிள்ளை மேடைக்கு வந்தாச்சு. கதை பேசிட்டு நிக்குற? மகியை கூட்டிட்டு வா. அக்கா எங்க?" என்றான் அவசரமாய்.
"இதோ முடிஞ்சது அர்வி! நாங்க அழைச்சுட்டு வர்றோம்!" என மகிழினி கண்களை துடைத்துவிட்டுக் கொண்டிருந்த திகழ்மதி சத்தம் மட்டும் கேட்க, அனன்யாவை முறைத்தான் அரவிந்த்.
"பொண்ணு ரெடி தான் த்தான். இதோ வர்றோம்!" என அவளும் தடுப்புக்கு அந்த பக்கமாய் மறைய,
"உனக்கு இருக்கு!" என முணுமுணுத்து மேடைக்கு வசந்த் அருகே சென்று ஆர்யன் உடன் நின்று கொண்டான்.
"இன்னுமா மேக்கப் முடியல?" ஆர்யன் கேட்க,
"பெயிண்ட் அடிக்க லேட்டாக தானே செய்யும்?" என்று அரவிந்த்தும் சொல்ல, வசந்த் திரும்பி இருவரையும் பார்த்தான்.
"வீட்டுக்கு போனதும் ஒரு முழு சோப் குடுங்க மகிக்கு. சரியாகிடும்!" என்று வேறு ஆர்யன் சொல்ல, அரவிந்த் சிரிப்பை அடக்கி நின்றான்.
"என்ன ப்ரோ?" என வசந்த்தும் சிரிக்க, அங்கே திகழ்மதியை கட்டிக் கொண்டு அழுதபடி நின்றாள் மகிழினி.
"அச்சோ அண்ணி! அர்வி த்தான் என்னை முறைச்சுட்டு போறாங்க. ரெண்டு டைம் ஆளுங்க தேடி வந்தாச்சு. மீனாம்மாவும் முன்னாடி நின்னு போன் பன்றாங்க. இப்ப போய் அவ கூட சேர்ந்து நீங்களும் அழறீங்க. வாங்க வாங்க கூட்டிட்டு போகலாம். மகி! எங்க போக போறோம் உன்னையை விட்டு!" என சொல்லி அனன்யாவும் அவள் கண்களை துடைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து அழைத்து வர,
"உள்ள பாசமலர் படம் ஓடிருக்கும் போலயே அரவிந்தா!" என பார்த்ததும் கண்டுகொண்டான் ஆர்யனோடு அரவிந்த்தும்.
திகழ்மதி, அனன்யா இருவரும் மகிழினி இருபுறங்களிலும் நின்று அழைத்து வர, மற்ற பெண்கள் உடன் வந்து கொண்டிருந்தனர்.
பார்த்த அரவிந்த் முகத்தினில் அத்தனை நிறைவு. இப்படியே இந்த உறவுகள் தொடர அதிவேகமாய் கடவுளிடம் ஒரு விண்ணப்பம் செலுத்திக் கொண்டான்.
மகிழினியை வசந்த் அருகே அமர வைத்துவிட்டு திகழ்மதி மணமக்களுக்கு பின் சென்று ஆர்யானோடு நின்று கொள்ள, திகழ்மதி அருகே அனன்யாவும் ஆர்யன் அருகே அரவிந்த்தும் என மணமக்களுக்கு பின் நின்றனர்.
அட்சதை பூக்களை திருமாங்கல்யத்தோடு திகழ்மதி கொண்டு சென்று கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வர, அது வசந்த் கைகளில் இடம்பெயர்ந்தது அடுத்த சில நிமிடங்களில்.
கனகாவும் அங்கே கூட்டத்தில் ஓரிடத்தில் அமர்ந்து தன் மகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார். திகழ்மதிக்கு போலவே அனன்யாவிற்குமான புடவை நகை என பார்த்ததும் மகள் அழகில் கண்களை கவர்ந்தாலும் அதைவிட மூளையில் பதிந்தது என்னவோ மணமக்களுக்கு பின் நடுவில் திகழ்மதி ஆர்யன் என நிற்க இரு ஓரத்திலும் ஆர்யன் போலவேயான உடையில் அரவிந்த்தும் திகழ்மதி போலவேயான உடையில் அனன்யாவும் என்பதும் தான்.
பார்த்ததும் அத்தனை கோபம். அவர்கள் வீட்டுப் பெண்ணாய் மகளே நிற்க, இப்பொழுது யாரிடம் சென்று கோபத்தை காட்டிட என தெரியாமல் திருமணம் முடிய காத்திருந்தார் கனகா.
அன்பரசன் கவனத்திலும் இந்த உடை வித்தியாசம் விழ தான் செய்தது என்றாலும் அதை அவர் வேறு எந்த மாதிரியான கண்ணோட்டத்திலும் பார்க்கவில்லை.
தான் தன் சகோதரியின் மக்களை சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் தன் மகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்து தான் மனமார மகிழினியின் மகிழ்வை வேண்டி நின்றார்.
"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்ற சத்தத்தில் வசந்த் அந்த தங்க மாங்கல்யத்தை மகிழினியிடம் சேர்ப்பிக்க, பூத்தூவளோடு அனைவரின் ஆசிர்வாதங்களும் அவர்களை சேர்ந்து கொண்டிருந்தது.
அடுத்த பத்து நிமிடங்கள் புகைபடங்கள் எடுக்க என அங்கேயே நின்ற ஆர்யன், அரவிந்த், திகழ்மதி எல்லாம் அடுத்த சில நிமிடங்களில் வந்தவர்களை கவனிக்க சென்றுவிட, அனன்யா மகிழினி அருகேவே நின்று கொண்டாள் மகிழ்ச்சியாய்.
கனகாவை அழைத்துக் கொண்டு அன்பரசன் மேடையேற, "இந்த செயினை மகிக்கு போட்டுவிடு அனு!" என அன்பரசன் கொடுத்ததை சந்தோஷமாய் அனன்யா செய்ய, புகைப்படத்தில் சேர்ந்தது அந்த தருணம்.
"அனு! வா போலாம்" என கனகா அழைக்க,
"இப்பவேவா? இன்னைக்கு ஒரு நாள் த்தை! ப்ளீஸ்!" என மகிழினி கேட்டவள் கனகாவிடம் கெஞ்ச,
"அதான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல. இனியாவது புருஷன் சொல்றதை கேட்டு உன் பொழைப்பை பாரு!" சட்டென்று கனகா சொல்லிவிட்டார்.
மகிழினியுமே அப்படி பேச்சை எதிர்பார்க்காதவள் கணவனை திரும்பிப் பார்க்க, அவன் நண்பர்களோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.
"அறிவுன்னு ஒண்ணு இருக்குதா இல்லையா ம்மா உனக்கு? எங்க என்ன பேசணும்னு தெரியுதா?" என அனன்யா அங்கேயே கோபத்தை காட்ட,
"இவளை கூட்டிட்டு வந்தேன் பாரு! என்னை சொல்லணும்!" என பல்லைக் கடித்தார் அன்பரசன்.
"மகி! சாரி டா. அம்மா பேசினதை மனசுல வச்சுக்காத!" அவளை அணைத்து அனன்யா சொல்ல,
"ஹிட்லர் அத்தை என்னவோ காண்டுல நிக்கிறாங்க நீ அவங்களை நைஸா பேசி அனுப்பிட்டு வந்துடு. ஓகே!" என மகிழினி கண் சிமிட்டிய பின் தான் மூச்சே வந்தது அனன்யாவிற்கு.
"கீழ வாங்க ம்மா!" என அனன்யா கோபமாய் அழைத்து வந்தவள்,
"ப்பா! நான் அப்புறமா வர்றேன். நீங்க அம்மாவை கூட்டிட்டு போங்க!" என சொல்ல, அன்பரசனும் பேசாமல் மனைவியை வா என்பதாய் பார்த்தார்.
"கல்யாண வயசுல பொம்பள பிள்ளையை கண்ட இடத்துல விட்டுட்டு போக சொல்றிங்க. என்ன தெரியும் உங்களுக்கு?" என கனகா பதிலுக்கு கேட்க,
"கண்ட இடமா இது உனக்கு? பேசணும்னு எதுவும் பேசாத. உன்னை விட உன் பொண்ணை அவங்க நல்லா பாத்துக்குறாங்க. அவ மனசு நிறைஞ்ச சந்தோசத்துல தான் இங்க இருக்கான்னு அவளை இப்படி பார்த்துமா உனக்கு தெரியல?" என வார்த்தைகள் சத்தமாய் வந்துவிடாதபடிக்கு கோபத்தை அன்பரசன் காட்ட,
"அதான் தெரியுதே! என் பொண்ணையும் என்கிட்ட இருந்து பிரிக்க தான் இந்த புடவை, நகை எல்லாம் குடுத்து பக்கத்துல நிக்க வச்சுருக்காங்க. அடியேய்! போகும் போது எல்லாத்தையும் பிடுங்கிட்டு விட்ருவாங்க. இது இரவல் மாதிரி தான்!" என கனகா சத்தம் உயர,
"கனகா! ஏதாச்சும் பேசின!" என பல்லைக் கடித்துக் கொண்டு அவரை அடிப்பது போல அருகே சென்றுவிட்டார் அன்பரசன்.
"அய்யோ! உங்களுக்கு புரியுதா இல்லையா? பொண்ணு மாப்பிள்ளைக்கு பின்ன ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுக்கிட்டு அதுவும் அந்த அரவிந்த்துக்கு...." என நறநறவென பற்களை கனகா கடிக்க,
"ம்மா!" என தானும் குரலை உயர்த்திவிட்டாள் அனன்யா.
"ச்சீ! உன் புத்தி இருக்கே!" என அன்பரசனும் கனகாவைப் பார்க்க,
"ப்ச்! விடுங்க ப்பா. இவங்களுக்கு அதெல்லாம் சொன்னா புரியாது. நான் ஈவினிங் வர்றேன். நீங்க கூட்டிட்டு கிளம்புங்க!" என்ற அனன்யா கனகா கூப்பிட கூப்பிட கேட்காதவளாய் மேடை ஏறி மகிழினி அருகே சென்று நின்று கொண்டாள்.
கனகாவும் விடாமல் அவ்வளவு பேசி தான் பார்த்தார். அன்பரசன் தான் அங்கே யார் கண்களையும் இந்த நிகழ்வு கவராதபடிக்கு கனகாவை இழுத்து சென்றார்.
"நேரமாகிடுச்சு திகழ். இன்னும் அவங்க ரெண்டு பேரும் சாப்பிடல. கூட்டிட்டு வா!" என மகிழினி வசந்த்தை அழைக்க ஆர்யன் சொல்லவும் திகழ்மதி அவர்களோடு அனன்யாவையும் அழைத்து வந்தாள்.
மகிழினி இப்படி அத்தை, மாமா, அனன்யா என கோபமாய் பேசிக் கொண்டதாய் சொல்லவும் திகழ்மதி அனன்யாவிடம் கேட்க,
"அதெல்லாம் எதுவுமில்லை அண்ணி. அம்மாவை தெரியாதா உங்களுக்கு?" என்று அமைதியாகிய அனன்யா சில நிமிடங்கள் முன்பிருந்த அந்த உற்சாகத்தை இழந்திருந்தாள்.
"சரி விடு. அம்மா தானே!" என திகழ்மதி சமாதானம் சொல்லி அழைத்து வந்து சாப்பிட அமர வைக்க,
"மாமா! சாப்பிடலாமா?" என்றான் அரவிந்த்தும் இவர்களைப் பார்த்தபடி.
"நான் தான் அக்ஷி, திகழ் கூட அப்பவே சாப்பிட்டேனே!" என ஆர்யன் சொல்ல,
"இதுக்கெல்லாம் குடும்பமா போயிடுவீங்களே!" என முறைத்தான் அரவிந்த்.
"நீயும் உன் குடும்பத்தோட சாப்பிட தான் கேட்குறனு புரியாத முட்டாளா நான்?" என ஆர்யன் கிண்டல் செய்து அனன்யாவைக் கண் காட்ட,
"ரைட்டு..." என்று சிரித்தபடி வசந்த்தை அடுத்து மகிழினி, அவளை அடுத்து அனன்யா என அமர்ந்திருக்க, அனன்யாவை அடுத்து சென்று அமர்ந்து கொண்டான் அவளருகில் அரவிந்த்.
"நீங்க இன்னும் சாப்பிடலையா த்தான்?" தன் அருகே அவன் வந்து அமரவும் புன்னகைத்து அனன்யா கேட்க,
"உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு எப்ப கூப்பிட்டேன் நியாபகம் இருக்கா அனு?" இலையை விரித்து தண்ணீர் தெளித்தபடி அரவிந்த் பார்வையை அவளிடம் கொண்டு வராமல் கேட்க, அனன்யா பார்வை முழுதும் அரவிந்த்திடம் தான்.
அவளுக்கு தெரியுமே! நன்றாய் நியாபகத்தில் என்ன இதயத்தில் இன்னும் அப்படியே பதிந்திருந்ததே அந்த நொடி.
அன்று திகழ்மதி வீட்டில் அனன்யாவைக் கண்டதும் ஆச்சர்யத்தில் கண்களை விரித்த அரவிந்த்தைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்த அனன்யாவை பார்வையால் பாராட்டி இருந்தான் அங்கே வந்ததற்கு.
அடுத்த மூன்று நாட்களும் அத்தனை ஓட்டம் ஆர்யன் அரவிந்த் இருவருக்குமே திருமண நிகழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும். நிற்க நேரமே இல்லை. பெண்கள் அனைவரும் தங்களது உடை, அதற்கான பொருத்தமான ஆபரணம் என அவர்களும் பிஸியாக இருந்தாலும் அனன்யா அரவிந்த்தை கவனிப்பதை உணர்ந்து தான் இருந்தான் அரவிந்த்.
நிச்சயம் நடந்த திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை மகிழினியோடு மேடை ஏறி வந்த அனன்யாவைக் கண்டு ஒரு சில நொடி மூச்சு விடவும் மறந்து தான் நின்றான் அரவிந்த்.
"அவ்வா! இவ்வளவு அழகா அனு நீ?" என தனக்குள் தான் பேசிக் கொள்ள முடிந்தது அவனுக்கு.
சில நிமிடங்கள் வேலை போல எங்கும் செல்லாமல் அங்கேயே அனன்யாவை சுற்றியே என தான் அரவிந்த் நிற்க,
"அடேய்! கல்யாணம் மகிக்கு டா!" என ஆர்யன் தான் இழுத்து சென்றிருந்தான்.
அப்போதும் கூட தனியாய் பார்த்த ஒரு சமயம் "உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் அனு!" என அரவிந்த் கூற, அவனை இரு நொடிகள் கவனித்தவள் அடுத்து அவன் கண்கள்படும் தூரத்தில் நிற்காமல் அத்தனை போக்கு காட்டி இருந்தாள்.
இத்தனை நாட்கள் இல்லாதபடிக்கு அரவிந்த் கண்கள் பாஷை அப்டியே புரிந்தது அனன்யாவிற்கு.
அவனை தேடவிட்டு, தான் தள்ளி இருந்து அவனை ரசித்திருந்தவளுக்கு அவன் என்ன பேசுவானோ என அவனை நேராய் காண்பதை தவிர்த்து வந்திருக்க, இன்று காலை திருமணத்திற்கு என அனன்யாவின் அலங்காரத்திலும் மொத்தமாய் மயக்கத்தில் தெளியாமல் தான் சுற்றி வந்தான் அரவிந்த்.
"சொல்லு அனு! எப்ப கூப்பிட்டேன்!" என மீண்டும் கேட்டவன், அருகிருந்த தன்னவளின் வாசத்தில் இன்னுமே தள்ளாடியிருந்தான்.
தொடரும்..