• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 26

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 26

வெள்ளிக்கிழமை காலை பதினோரு மணிக்கெல்லாம் மகிழினியை திகழ்மதி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர் விருந்துக்கு.

"என்ன டா டீப் திங்கிங் போல?" ஆர்யன் அமர்ந்திருந்த அரவிந்த் அருகே வந்து அமர்ந்தபடி கேட்க,

"சும்மா தான் மாமா. அக்ஷி எங்க?" என்றான் அரவிந்த்.

"மகி கூட இருக்கா. உன்கிட்ட திகழ் பேச சொன்னா அரவிந்தா!" என ஆர்யன் சொல்லவும்,

"என்ன மாமா?" என்றவனுக்கும் சிறு புரிதல் இருந்தது திகழ்மதி எதை கேட்டிருப்பாள் என்று.

"ஹ்ம்! அதான் அந்த பொண்ணு போட்டோ காட்டினாளே!" என்றதும் அரவிந்த் முறைத்தவன்,

"என்ன மாமா நீங்க! நானே கால் பண்ணியும் அனு போன் எடுக்கலையேனு பிரச்சனையோனு யோசிச்சுட்டு இருக்கேன்!" என்றான்.

"நீ போன் பண்ணி அனு எடுக்காதது எல்லாம் விஷயமா? உன் போன் தான் வேணும்னே அவ எடுக்க மாட்டாளே!" என ஆர்யன் கிண்டல் செய்ய,

"விளையாடுறிங்களா நீங்க?" என மீண்டும் முறைத்து,

"அவளே கால் பண்ணினா மார்னிங். நான் தான் பிக் பண்ணல. இப்ப மூணு டைம் நான் பண்ணியும் எடுக்கல. அத்தையும் இருப்பாங்களே. அதான் மறுபடியும் பண்ணவானு யோசிச்சுட்டு இருக்கேன். இப்ப வந்து அக்கா சொன்னானு சொல்றிங்க" என்றவன்,

"மகி மேரேஜ் நல்லபடியா பண்ணிட்டோம் இல்ல. இனி உங்க பாடு தான். நான் ஊருக்கு போனதும் அக்காகிட்ட பேசிடுங்க. அனுகிட்ட பேசிட்டு நானும் அவங்க வீட்டுல பேசுறேன்!" என அரவிந்த் சொல்ல,

"அனுகிட்ட பேசுறது தான் உன்னோட பொறுப்பு அரவிந்த். அவங்க வீட்டுல பேச நாங்க இருக்கோம். நாங்கன்னா நான் திகழ், அம்மா, அப்பா, இதோ இப்ப மகி, வசந்த்னு இவ்வளவு பேர் இருக்கோம். நீ மட்டும் பேசினா சரி வராது!" என கூறினான் ஆர்யன்.

"தேங்க்ஸ் மாமா!" என்ற அரவிந்த்,

"நாளைக்கு நானும் கிளம்பவா? மகி நாளைக்கு அவ வீட்டுக்கு கிளம்பினதும்?" என கேட்க,

"நீ போய் உன் வேலையை பாரு டா. நான் இருக்கேன்ல நான் பாத்துக்குறேன்!" என்ற ஆர்யன் தான் அரவிந்த்தின் அனைத்தும் இப்பொழுது.

மீண்டும் அனன்யாவிடம் பேச அவன் முயற்சிக்கவில்லை. அதுவே எதுவும் பிரச்சனையாகிவிட கூடாதே என சிந்தித்தான். இன்று ஒருநாள் தானே! நாளை இரவு கிளம்பிவிடலாம் என அரவிந்த் நினைத்திருக்க அவள் கிளம்பிய செய்தி சனிக்கிழமை மாலை நான்கு மணி வரையுமே தெரியாது.

சனிக்கிழமை மதியம் விருந்து முடிந்து மகிழினி வசந்த்துடன் கிளம்பிட, "கால் பண்ணு மகி. பார்த்துக்கோ!" என மட்டும் சொல்லி அவள் தலையில் வாஞ்சையாய் கைவைத்து புன்னகைத்து வழியனுப்பி வைத்தான் அரவிந்த்.

"நாளைக்கு கிளம்பலாம் தானே அர்வி நீயும்? பாரு வீடே வெறிச்சோடி போச்சு மகி கிளம்பினதும்!" என திகழ்மதி சொல்ல,

"மன்டே ஆபீஸ் போனும் க்கா! அதான் நாளைக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம் பார்த்தேன்!" என்றான் அரவிந்த்.

"போய்ட்டு வரட்டும் திகழ். இங்க பத்து நாளும் அவன் சரியா தூங்க கூட இல்ல. நாளைக்கு போய் அவன் ரெஸ்ட்ல இருந்தா தான் மண்டே அவனுக்கும் பிரெஷ்ஷா இருக்கும்!" என்றான் ஆர்யனும்.

"எனக்கெல்லாம் ஒரு கையே என்னைவிட்டு போன மாதிரி இருக்கு திகழ். இந்த பொண்ணு நம்ம கண்ணுக்குள்ள தான் சுத்தி வந்துச்சு. இனி மறுபடியும் வீடு அமைதியா இருக்கும்ல?" என மீனாட்சியும் அத்தனை வருத்தம் காண்பித்தார் மகிழினி சென்றதில்.

"அழாதீங்க ஆச்சி! நான் இருக்கேன்!" அக்ஷயா சொல்ல,

"ஆமா! அவ தான் இவளுக்கு பேச சொல்லி குடுத்திருக்காளே. வாயாடி!" என திகழ்மதியும் மகளை செல்லமாய் முறைக்க, சிரிப்புடன் நின்றிருந்தான் அரவிந்த்.

அனன்யாவிற்கு அதற்குபின் அழைக்கவே இல்லை அரவிந்த். இப்போதும் அழைக்கவா என யோசித்தவன் மணி நான்கை நெருங்கவும் அன்பரசனுக்கு அழைத்தான்.

ஊருக்கு செல்வதை கூறிவிட்டு கிளம்பலாம் அப்படியே உபரித் தகவலாய் அனன்யாவைப் பற்றி எதாவது அவர் கூறுவார் தானே என அரவிந்த் நினைக்க, அவர் கூறிய செய்தியில் அத்தனை அதிர்ச்சி அரவிந்த்திற்கு.

"அரவிந்தா!" என அன்பரசன் அழைப்பை ஏற்றிருக்க,

"மாமா!" என்றவன் பொதுவான பேச்சுக்களைப் பேச,

"மகி நல்லாருக்கா தானே?" என்றார் அன்பரசன்.

"ரொம்ப நல்லாருக்கா மாமா. அவ வீட்டுக்கு போயாச்சு. நானும் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன் மாமா. அதான் சொல்லிட்டு கிளம்பலாம்னு பண்ணினேன்!" என சொல்ல, இரு நொடி மௌனமான அன்பரசன்,

"டிக்கெட் போட்டியா டா?" என்றார்.

"இன்னும் இல்ல மாமா. நைட் பத்து மணிக்கு அப்புறமா தான் பஸ். போட்டுக்கலாம்!" என்றான்.

கனகா வெளியில் இருந்தாலும் அவர் அத்தனை கூர்மையாய் இங்கே கேட்டுக் கொண்டிருப்பார் என தெரியும் அன்பரசனுக்கு.

நேற்று அனன்யா கிளம்பி சென்றது தெரிந்து அத்தனை ஆட்டமாய் ஆடிவிட்டார்.

"குடுத்த அறை பத்தாதோ உனக்கு? உன் வேலையை மட்டும் பாரு!" என அன்பரசன் மிரட்டியும் பயமில்லாதவராய் தனது அலைபேசியை எடுத்து திகழ்மதிக்கு கனகா அழைக்க போக,

"சொல்லிட்டே இருக்கேன். கல்யாண வீட்டுல பிரச்சனை பண்ண பாக்குற நீ?" என்ற அன்பரசன் போனைப் பிடுங்கி எறிந்ததில் அது சுக்கு நூறாய் உடைந்திருந்தது.

அன்பரசன் கோபம் கொள்வார் தானே தவிர்த்து மனைவி மீது கை நீட்டியதும் இதோ இவ்வளவு வன்முறையும் என இத்தனை வருட காலங்களில் இருந்ததே இல்லை என்பதில் கனகா கணவனை கோபமாய் பார்க்க,

"இதுக்கு மேல சும்மா இல்லாம அவங்க வீட்டுக்குள்ள பிரச்சனை பண்ண பார்த்த, நானும் இந்த வீட்டுல இருக்க மாட்டேன். என்னாலையும் எது வேணா செய்ய முடியும். செய்வானானு நினைக்காத நிச்சயமா என் பொண்ணுக்கா செய்வேன்!" என்று அன்பரசன் சொல்லவும் கனகா அங்கே தான் மொத்தமாய் ஆட்டம் கண்டது.

எங்கே தான் நினைத்தது நடக்காதா? அரவிந்த் மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வானா கணவன் தன்னை விட்டு சென்றுவிடுவாரா என மொத்தமாய் அவர் நினைவுகள் அங்கே நின்றுவிட, அன்பரசனுமே அரவிந்த்தை தொல்லை செய்ய வேண்டாம் என தான் அழைக்காமல் இருந்தது.

இப்பொழுது அவனே அழைத்ததும் சொலலலாமா வேண்டாமா என தயங்கி அவர் நிற்க,

"மாமா!" என அழைத்தான் அரவிந்த்.

"அரவிந்த்! முடிஞ்சா கொஞ்சம் சீக்கிரமா கூட கிளம்பிட பாரு டா. உனக்கு வேலை இருந்தா வேண்டாம்!" என அவர் சொல்ல,

"என்னாச்சு மாமா?" என்றான் புரியாமல்.

"இங்க உன் அத்தை கொஞ்சம் பிரச்சனை பண்ணிட்டா. யாருக்கும் சொல்லாம நேத்து பொண்ணு பார்க்க ஒரு கும்பலை வர வச்சிட்டா." என சொல்லவுமே முதல் அதிர்ச்சி தான் அரவிந்த்திற்கு.

அவர்கள் முன் என்னவென்று இவள் சென்று நின்றிருப்பாள்? எத்தனை துடித்திருப்பாள் என இவன் நினைக்க,

"அவங்களை சரி வராதுனு சொல்லி அனு அனுப்பி வச்சுட்டா!" என அன்பரசன் சொல்லவும் அவளை நினைத்து அந்த நிலையிலும் அரவிந்த்திடம் சிறு புன்னகை.,

"கனகா சும்மா இருக்கமாட்டாம ரொம்ப பேசிட்டா அரவிந்த்தா. நாளைக்கும் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டை வர சொல்லுவேன்னு சொல்ல, அனு நேத்தே எங்ககிட்ட சொல்லாம சென்னை கிளம்பி போய்ட்டா!" என கூற,

"நேத்தே சென்னை கிளம்பிட்டாளா?" என்றவன் அதிர்ச்சியில் பொய்யில்லை என்பது அன்பரசனும் உணர்ந்தார்.

"என்ன மாமா! நீங்க எப்படி விட்டிங்க?'

"எல்லாமே கை மீறி போய்டுச்சு அரவிந்தா!" என்றவர் மகள் பேசியதை எதுவும் கூறவில்லை.

"நீ கொஞ்சம்... பார்த்துக்கோ!" என்றவருக்கு அந்த நிலையில் வேறு என்ன சொல்லிவிட அவனிடம் என தெரியவில்லை.

"நான் கிளம்புறேன் மாமா. நான் போய் பார்த்துட்டு கால் பண்றேன்!" என கூறி வைத்தான் அரவிந்த்தும்.

"மாமா!" என அரவிந்த் ஆர்யனை அழைக்க, அவன் அறைக்குள் இருந்து வெளிவரவும் அவனிடம் அன்பரசன் கூறியதை சொல்ல,

"என்ன டா சொல்ற? அங்க தனியா என்ன பன்றாளோ? நீ கால் பண்ணியா?" என ஆர்யன் கேட்க,

"இப்ப தான் மாமாகிட்ட பேசினதும் பண்ணினேன். அவ எடுக்கல. வேணும்னே தான் எடுக்க மாட்றா!" என பல்லைக் கடித்தவன்,

"சரி நான் இப்பவே கிளம்புறேன் மாமா" என டிக்கெட்டை பார்த்துக் கொண்டே கூறியவன்,

"நான் போய் அனுவை பார்த்துட்டு கால் பண்றேன். என்ன பன்றாளோ. இன்னைக்கு லீவ் வேற! தனியா இருந்து அழுதுட்டு இருக்கும்." என புலம்ப ஆரம்பிக்க, ஆர்யன் அவனை எண்ணி சிரித்துக் கொண்டான்.

திகழ்மதியிடமும் வீட்டில் இருந்த ஆர்யன் அன்னை மீனாட்சியிடமும் சொல்லிக் கொண்டு அவன் கிளம்பிவிட,

"எப்பவும் நைட்டு பத்து மணிக்கு தான் வீட்டுல இருந்தே கிளம்புவான். என்ன இவ்வளவு அவசரமா கிளம்பிப் போறான்?" என திகழ்மதி சந்தேகமாய் பார்க்க,

"பஸ் ரஷ்ஷா இருக்குமா இருக்கும். விடு நீ!" என்று திகழ்மதியை சமாளித்தாலும் மனைவியிடம் சீக்கிரமே கூறிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான் ஆர்யன்.

சனிக்கிழமை வேறு. வார இறுதி நாள் என்பதால் பேருந்துகளில் அவ்வளவு கூட்டம். எளிதில் எல்லாம் கிடைத்துவிடவில்லை அரவிந்த்திற்கும். ஒன்பது மணிக்கு பிறகு கூட எளிதில் கிடைத்துவிடும். ஐந்து மணிக்கே எனும் போது அவ்வளவு கூட்டம் என்றாலும் கிளம்பியவன் இரண்டு பேருந்து மாறி பயணிக்கவும் தயாராய் வந்திருக்க, அவன் நேரம் ஏறி இருந்த பேருந்து பழுதடைந்து பாதியில் நின்றுவிட, மற்றொரு பேருந்தில் மாற்றிவிட்டிருந்தார் ஓட்டுநர்.

அதிலேயே மூன்று மணி நேரம் தாமதமாக அரவிந்த் சென்னை வந்து சேர்ந்த போது அதிகாலை ஐந்து மணி.

ஒரு வேகத்தில் சீக்கிரமே கிளம்பி இருக்க, இதுக்கு முன்னாடியே வந்திருந்தாலும் அவளை அந்த இரவில் தொந்தரவு செய்திருக்க முடியுமா என நினைத்து வந்தவன் நேரே அனன்யா வீட்டு வாசலில் தான் சென்று நின்றான்.

உடனே அவளைப் பார்த்தாக வேண்டும் என்பதாய் மனம் உந்தித் தள்ள யோசிக்கவே இல்லை வேறு எதையும்.

உறங்கிக் கொண்டிருப்பாள் தொல்லை செய்யவா எனும் எண்ணமும் இருக்க, மனமும் அவளை பார்த்திட தவிக்க,

'சண்டே தானே! அப்புறமா கூட தூங்கிக்கட்டும்!' என நினைத்துக் கொண்டு தான் கதவை தட்டினான் அரவிந்த்.

நல்ல தூக்கத்தில் இருப்பாளே என எண்ணி மூன்றாவது முறையாய் கதவில் கை வைக்க நினைக்கும் முன் அனன்யா கதவை திறந்திருந்தவள், அவனைக் கண்ட நொடி அணைத்துக் கொண்டு அழுகையை தொடர, அதையே எதிர்பார்க்காத அரவிந்த்,

"அனு!" என அதிர்ந்திருந்தான்.

சில நொடிகள் தான். தன் தோளிலேயே அவள் தொய்வது போல இருக்கவும்,

"அனு என்னாச்சு?" என அரவிந்த் பதற,

"பசிக்குது த்தான்!" என்றவள் அழுகையுடன் மயங்கிய நிலையில் வந்த வார்த்தைகளில் அவன் மனம் கொண்ட கவலைகளை வார்த்தைகள் கொண்டு வரையறுத்திட முடியாது.

"என்ன டி பண்ணி வச்சிருக்க?" என்றவன் தன் கைகளில் தாங்கிக் கொண்டான் தன்னவளை.

தொடரும்..