அத்தியாயம் 27
பிரட்டும் பாலும் என அனன்யாவை சாப்பிட வைத்து அருகே முறைத்தபடி அமர்ந்திருந்தான் அரவிந்த்.
தெரிந்தும் அவனை பார்க்காமல் சாப்பிட்டபடி அவள் இருக்க, மணி ஆறை நெருங்கி இருந்தது.
"வீட்டுக்கு போய்ட்டு டிபன் எதாவது பண்றேன். நீ தூங்கு கொஞ்ச நேரம்!" என்றவன் கொண்டு வந்த பேகோடு எழ,
"இப்ப போதும் த்தான். அப்புறமா செஞ்சுக்கலாம்!" என்றாள்.
"பேசாத நீ! அவ்ளோ கோவம் வருது. என்ன பண்ணிட்டு இருக்க நீ? இப்படி தான் வீட்டுக்கு தெரியாம வருவியா? நான் தான் மாமாகிட்ட பேசுறேன் சொல்லிருக்கேன்ல? நீ இப்படி பண்ணினா என்னை என்னனு டி நினைப்பாங்க?" என்றான் கோபமாய்.
"உங்களுக்கு தெரியுமா?" என கண்களை விரித்து அனன்யா கேட்க,
"தெரிஞ்சதால தான் ஓடி வந்தேன். ஏன் இப்படி பண்ணின? ஒரு நாள் சமாளிச்சு இருந்திருக்கலாம்ல? அதுவும் சொல்லாம" என்றவன் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாதவள்,
"மகி மறுவீடு, விருந்து எல்லாம் முடிஞ்சதா த்தான்? நீங்க மகி கூடவே இருந்திங்க தானே?" என்றாள்.
"நான் என்ன கேட்குறேன் நீ என்ன கேட்குற? மகிக்கு எல்லாமே நல்லா பண்ணி அனுப்பி வச்சுட்டு தான் மாமாக்கு கால் பண்ணினேன். முக்கியமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தான் வந்தேன்!" என்றான் கோபமாய்.
அனன்யா அதில் அமைதியாகிவிட, "நீ செஞ்சது தப்புன்னு உனக்கு புரியுதா இல்லையா? சொல்லாம கிளம்பி வந்ததே தப்பு. இதுல வந்து நாள் முழுக்க சாப்பிடாம நேத்தெல்லாம் வீட்டுல இந்த ரூம்குள்ள அப்படி என்ன தான் பண்ணின?"
"ஆபீஸ் போய்ட்டேன்" என்றவளை இன்னும் அவன் முறைக்க,
"இங்கேயே இருக்க முடியாதே அதான் போனேன்!" என்றாள் அவன் முறைப்பில்.
"என்ன அனு நீ?" என்றவன் சோர்வாய் உணர்ந்தான்.
"தெரியாம ஒன்னும் வர்ல. பஸ் ஏறவும் அப்பாக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்" என்று சொல்லவும் அவன் பார்க்க,
"அப்பா எல்லாமே சொல்லிட்டாங்களா த்தான்?" என அனன்யா கேட்கவும்,
"ஏன்? வேற எதுவும் பண்ணியா என்ன?" என்றான் கேள்வியாய்.
"அம்மா பண்ணினது தப்பில்லையா? எனக்கு பிடிக்கலைனு சொல்லியும் கொண்டு வந்து நிறுத்தலாமா? நான் எப்படி த்தான் இன்னொருத்தன் பார்க்க அவன் முன்னாடி போய்....." என்றவள் கோபமும் கண்ணீரும் வர வார்த்தையை நிறுத்த,
"ப்ச்! அனு!" என்றவனுக்கும் அவள் நிலை புரிய தான் செய்தது.
"ஆனா அவங்க இடத்துல இருந்து நீ யோசிக்கணுமே! மாமா அப்பவே சொன்னாங்க டாக்டர்க்கு படிச்சவன், அமெரிக்கால ஒர்க் பண்றவன்னு அத்தை உனக்கு பாக்குறது எல்லாம் எப்படிப்பட்ட இடம் தெரியுமா? எந்த அம்மாக்கும் தன் பொண்ணு நல்லா வாழனும்னு தான் நினைப்பு இருக்கும். அத்தையும் அதுக்காக பார்த்து பார்த்து தான் உனக்கு செலக்ட் பன்றாங்க. அதை தப்புனு சொல்ல முடியாதே அனு" என அரவிந்த் சொல்ல, இப்பொழுது அனன்யா முறைத்தாள் அவனை.
"என்ன லுக்கு? நிஜம் தானே?" என்றான் கொஞ்சம் இலகுவாய் புன்னகையுடன்.
"ஆனா என் விருப்பம்? அது முக்கியமில்லையா அவங்களுக்கு?" என்றாள் கோபமாய்.
"நாம சொன்னா தானே அனு அவங்களுக்கு தெரியும்? ஆசைஆசையா உனக்காக அவங்க பாக்குறதை எல்லாம் நான் தப்பு சொல்லல. ஆனா நாம நம்ம மனசுல இருக்கறதை சொல்லாம அவங்க பார்த்த பையனை மறுத்தா கோபம் வரும் தானே?" என்றான் அவனும்.
"என்ன சொல்லல! எல்லாம் சொல்லியாச்சு. அர்வி அத்தானை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன பின்னாடி தான் என் முன்னேயே இன்னொருத்தனை பொண்ணு பார்க்க வர சொல்லி போன் பண்ணினாங்க!" என்றாள் அவளுமே கோபமாய்.
"ஏய்! நிஜமாவா? சொல்லிட்டியா?" என்றான் அதிர்வுடன்.
"ஏன் உங்க மாமா சொல்லலையா?" என அதையும் கோபமாய் அனன்யா சொல்ல,
"அனு ஆர் யூ சீரியஸ்?" என்றான் அப்பொழுதும் நம்பாமல்.
"எல்லாமே சொல்லிட்டேன் த்தான். என்னால முடியல. உங்களை மாதிரி எல்லாருக்காகவும் யோசிக்க எனக்கு வர்ல. எனக்கு அது தெரியவும் தெரியாது. ஒருவேளை நான் எங்க அம்மா மாதிரி தானோ என்னவோ! ஆரம்பத்துல இருந்து எனக்காக மட்டும் யோசிச்சு உங்களை பத்தி நினைக்காம உங்களை டிஸ்டர்ப் பண்ணினேன். இப்ப பெத்தவங்களை புரிஞ்சிக்காம அவங்களை டிஸ்டர்ப் பண்றேன். என்னனு பொறந்தேனோ. ஏன் தான் பொறந்தேனோ!" என்றவள் சொல்லில் அப்படியே அமர்ந்துவிட்டான்.
"நான் பண்றது எல்லாம் தப்பு தான். எனக்கே தெரியுது. ஆனா வேற வழி? நான் வாழ வேண்டாமா? நான் எப்ப தான் எனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழுறது. எனக்கு பிடிச்சவன் என்னை புரிஞ்சிக்க நாலு வருஷம். என் அம்மா அப்பா என்னை புரிஞ்சிக்க ஏழு வருஷம்னு இப்படியே போனா?" என சொல்ல,
"அனு!" என காற்றுக்கும் வலிக்காத குரலில் அவளை அழைத்தான் சமாதானப்படுத்தும் விதமாய்.
"போங்க த்தான்! என் கஷ்டம் எனக்கு தான். இப்பவும் சொல்றேன். அப்பா சொல்றாங்கனு நான் சென்னை வந்து தங்குறதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணாம இருந்திருந்தா நிச்சயமா உங்களை தேடி வந்திருக்க மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருப்பேன். நீங்களும் உங்க குடும்பத்தோட நிம்மதியா இருந்திருக்கலாம்!"
உங்க குடும்பத்தோட என்றவள் சொல்லில் மிதமான முறைப்பை கொடுத்தவன், "அதை விடவே மாட்டியா நீ?" என்றான்.
"ஆனா மாமா இதெல்லாம் சொல்லல அனு என்கிட்ட. மாப்பிள்ளை பார்த்தது பிடிக்காம நீ கிளம்பி வந்துட்டனு தான் சொன்னாங்க. நீ கால் பண்ணும் போது நான் மகி வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன் எல்லாரோடவும். அப்ப பேசி இருந்தா உடனே பேசிட்டு வச்சிருக்க வேண்டியதா இருக்கும். நிறைய பேசலாம் நினைச்சேன். நீ கால் எடுக்கல. அட்லீஸ்ட் இவ்வளவு நடந்த பிறகாவது எனக்கு பேசிருக்கலாம்ல அனு" என்றான் தணிவாய்.
"பேசணும் தான் இருந்துச்சு. எல்லாத்தையும் சொல்லி அழுது உங்க தோள்ல சாஞ்சுக்க தான் நினைச்சேன்." என்றவள் கண்கள் கலங்கி நிற்க, அதையுமே உள்ளிழுக்க முயன்றாள்.
"ப்ச்!" என்றவன் எழுந்து அவளருகே வந்து அமர்ந்துகொண்டு அவள் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
"ஓகே! பார்த்துக்கலாம். அதான் சொல்லிட்ட இல்ல. நானும் பேசுறேன். அழாத! இப்படி என் முன்னாடி அழுகையை கண்ட்ரோல் பண்ணிக்காத!" என சொல்ல, அவளுக்கு தேவையான வார்த்தைகளும் தோளும் என கண்ணீர் வர தான் செய்தது.
"இம்சை தான் இல்ல அனு இந்த லவ்ன்றது?" என்றவன் இதழ்கள் மெல்லிய புன்னகையை கொடுக்க,
"ம்ம்ஹுஹ்ம்ம்! எனக்கு அது குடுக்குற வலியும் நல்லா தான் இருக்கு!" என்றாள் அவன் தோளில் சாய்ந்தபடி.
"ஹ்ம்! இப்போ நான் உடனே அக்காகிட்ட சொல்லியாகணும். இல்லைனா அத்தை அங்க போய் பிரச்சனை பண்ண கூட வாய்ப்பு இருக்கு இல்ல?" என அரவிந்த் கேட்க,
"அதெல்லாம் அப்பா பார்த்துக்குவாங்க. அன்னைக்கு அம்மா ரொம்பவே பேசிட்டாங்க. அப்பாவும் அம்மாவை ரொம்பவே திட்டிட்டாங்க!" என்றவள் நடந்ததை கூறினாள்.
"மாமா? மாமா என்னை எதுவும் பேசலையா? என் மேல மாமாக்கு கோவம் வரலையா?" அரவிந்த் தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வோடு கேட்க,
"உங்களை எப்படி பேசுவாங்க? என்னனு பேசுவாங்க. நான் என்னோட விருப்பத்தை தான் சொன்னேன். உங்க விருப்பத்தை எல்லாம் சொல்லல. நாலு வருஷம் முன்ன நான் ஆரம்பிச்சதுல இருந்து இப்ப வரை என்னோட முடிவு என்னனு தான் நான் சொன்னேன்"
"அப்படினா?" என்று தன் தோளில் சாந்திருந்தவளை திரும்பி அவன் பார்க்க,
"அப்படினா அப்படி தான் த்தான். நான் தான் சொன்னேனே அன்னைக்கே! நான் என்னோட லவ்வை சொன்னேன். என்னோட விருப்பத்தை சொன்னேன். அவ்வளவு தான். உங்களோட விருப்பம், முடிவு, காதல்னு அது உங்க பாடு!" என அனன்யா சொல்ல,
"ஹே!" என நன்றாய் அவள் பக்கம் திரும்பிவிட்டான். அதில் அவளும் நிமிர்ந்துவிட,
"என்ன அனு ஷாக் மேல ஷாக் குடுக்குற? என்னை சொல்லிருந்தா கூட பரவால்ல மொத்தமா உன்னை மட்டும் நீயே சொல்லிட்டு வந்திருக்க?"
"பின்ன? வர்றவன் முன்ன போய் நிக்கவா? இனி என்னவும் பண்ணட்டும். நான் ஊருக்கு போறதா இல்ல" என்றாள் பல்லைக் கடித்து.
மலைப்பாய் இருந்தது கேட்கவே! ஆனாலும் தன் பக்கம் என இனி உடனே அடுத்து எதாவது செய்தாக வேண்டும். நேரம் கடத்துவது மடத்தனம் என தெளிவாய் புரிந்தது.
கனகாவை சமாளித்து சம்மதிக்க வைத்தே ஆக வேண்டும். அனைவரின் சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் தான் தங்கள் திருமணம் நடந்தேற வேண்டும் என தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான் அரவிந்த்.
"நான் பண்ணினது தப்பு தான் இல்ல த்தான்?" என பாவமாய் இப்பொழுது அனன்யா கேட்க,
"இல்ல அனுமா! எப்படியும் தெரிய வேண்டியது தானே! என்ன என்னையும் சேர்த்தே சொல்லிருக்கலாம் நீ!" என்றவன்,
"ஆமா! அடி விழல?" என்றான் புன்னகையை விழுங்கிக் கொண்டு.
"த்தான்!" என சிணுங்கியவள் கன்னத்தை பிடித்தவன் வலிக்காமல் இழுக்க, அனன்யாவும் அசையவில்லை.
"நிஜமா இம்சை டி! என்கிட்ட லவ்வை இன்னும் சொல்லல நீ! அதுக்குள்ள எங்கல்லாம் சொல்லி எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க?" என்று கன்னத்தை விட்டவன் எழுந்து கொண்டான்.
"நீங்க ரெஸ்ட் எடுங்க த்தான். நான் சமைச்சு கொண்டு வர்றேன்!" அனன்யா சொல்ல,
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ரெண்டு நாள் முன்னாடி சாரீல அவ்வளவு அழகா இருந்த பொண்ணு யாருன்னு இப்ப நான் தேட வேண்டியதா இருக்கு. எனக்கு தெரிஞ்சு அக்கா வீட்டுல இருந்து கிளம்பினதுல இருந்தே நீ சாப்பிடலனு தோணுது. இவ்ளோ மெலிஞ்சுட்ட" என அரவிந்த் முறைக்கவும் அனன்யா அமைதியாகிவிட்டாள்.
"ஹால்ப் அன் ஹவர் வெயிட் பண்ணு. திரும்ப காபி எதுவும் குடிக்காத. உடனே எதாவது வாங்கி செஞ்சு கொண்டு வர்றேன். மதியத்துக்கும் எதாவது நான்வெஜ் செய்யலாம்" என்றவன் அவளிடம் சொல்லிக் கொண்டு தன் வீடு வந்து சேர, சோர்வு அயர்வை சேர்த்து பசி உணர்வுமே இப்பொழுது இல்லை.
அவள் வயிற்றை நிறைத்திருந்தவன் ஒரு வகையில் மனதையும் நிறைத்திருந்தான் ஒரு மணி நேரத்தில்.
வீட்டிற்கு வந்து சமையலை முடித்து அனன்யாவுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்தவன் உடனே ஆர்யனுக்கு அழைத்து அனன்யா கூறியதை சொல்ல,
"ஹ்ம்! அனு குழந்தையே தான் டா. என்னனு சமாளிக்க போறியோ!" என்றான் ஆர்யன்.
"மாமா! அக்காகிட்ட இன்னைக்கு பேசிடுங்க மாமா. இதுக்கு மேல பேசாம எப்படி இருக்க? அன்பரசன் மாமாகிட்ட கூட உடனே பேசிடுறது தான் பெட்டர். ஆனா நான் முதல்ல போன் பண்ணி அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன். அப்புறம் பார்ப்போம் மத்ததை." என சொல்ல,
"சரி தான். இவ்வளவு நடந்த பிறகும் அமைதியா இருந்தா தான் தப்பு. நான் வீட்டுல பேசுறேன். உங்க மாமாகிட்ட கூட நான் பேசுறேன் டா!" என ஆர்யன் சொல்ல,
"நிச்சயமா நீங்க தான் பேசணும் மாமா! ஆனா அங்க என்ன சூழ்நிலைனு தெரியாம அத்தை எதுவும் கலாட்டா பண்ணிட்டா மனகசப்பு வந்துடும். அதனால மாமாகிட்ட நான் முதல்ல பேசிட்டு சொல்றேன். அப்புறம் பேசிப்போம்!" என்று சொல்ல ஆர்யனும் அவன் விருப்பதில் சரி என்றுவிட்டான்.
தொடரும்..
பிரட்டும் பாலும் என அனன்யாவை சாப்பிட வைத்து அருகே முறைத்தபடி அமர்ந்திருந்தான் அரவிந்த்.
தெரிந்தும் அவனை பார்க்காமல் சாப்பிட்டபடி அவள் இருக்க, மணி ஆறை நெருங்கி இருந்தது.
"வீட்டுக்கு போய்ட்டு டிபன் எதாவது பண்றேன். நீ தூங்கு கொஞ்ச நேரம்!" என்றவன் கொண்டு வந்த பேகோடு எழ,
"இப்ப போதும் த்தான். அப்புறமா செஞ்சுக்கலாம்!" என்றாள்.
"பேசாத நீ! அவ்ளோ கோவம் வருது. என்ன பண்ணிட்டு இருக்க நீ? இப்படி தான் வீட்டுக்கு தெரியாம வருவியா? நான் தான் மாமாகிட்ட பேசுறேன் சொல்லிருக்கேன்ல? நீ இப்படி பண்ணினா என்னை என்னனு டி நினைப்பாங்க?" என்றான் கோபமாய்.
"உங்களுக்கு தெரியுமா?" என கண்களை விரித்து அனன்யா கேட்க,
"தெரிஞ்சதால தான் ஓடி வந்தேன். ஏன் இப்படி பண்ணின? ஒரு நாள் சமாளிச்சு இருந்திருக்கலாம்ல? அதுவும் சொல்லாம" என்றவன் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாதவள்,
"மகி மறுவீடு, விருந்து எல்லாம் முடிஞ்சதா த்தான்? நீங்க மகி கூடவே இருந்திங்க தானே?" என்றாள்.
"நான் என்ன கேட்குறேன் நீ என்ன கேட்குற? மகிக்கு எல்லாமே நல்லா பண்ணி அனுப்பி வச்சுட்டு தான் மாமாக்கு கால் பண்ணினேன். முக்கியமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தான் வந்தேன்!" என்றான் கோபமாய்.
அனன்யா அதில் அமைதியாகிவிட, "நீ செஞ்சது தப்புன்னு உனக்கு புரியுதா இல்லையா? சொல்லாம கிளம்பி வந்ததே தப்பு. இதுல வந்து நாள் முழுக்க சாப்பிடாம நேத்தெல்லாம் வீட்டுல இந்த ரூம்குள்ள அப்படி என்ன தான் பண்ணின?"
"ஆபீஸ் போய்ட்டேன்" என்றவளை இன்னும் அவன் முறைக்க,
"இங்கேயே இருக்க முடியாதே அதான் போனேன்!" என்றாள் அவன் முறைப்பில்.
"என்ன அனு நீ?" என்றவன் சோர்வாய் உணர்ந்தான்.
"தெரியாம ஒன்னும் வர்ல. பஸ் ஏறவும் அப்பாக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்" என்று சொல்லவும் அவன் பார்க்க,
"அப்பா எல்லாமே சொல்லிட்டாங்களா த்தான்?" என அனன்யா கேட்கவும்,
"ஏன்? வேற எதுவும் பண்ணியா என்ன?" என்றான் கேள்வியாய்.
"அம்மா பண்ணினது தப்பில்லையா? எனக்கு பிடிக்கலைனு சொல்லியும் கொண்டு வந்து நிறுத்தலாமா? நான் எப்படி த்தான் இன்னொருத்தன் பார்க்க அவன் முன்னாடி போய்....." என்றவள் கோபமும் கண்ணீரும் வர வார்த்தையை நிறுத்த,
"ப்ச்! அனு!" என்றவனுக்கும் அவள் நிலை புரிய தான் செய்தது.
"ஆனா அவங்க இடத்துல இருந்து நீ யோசிக்கணுமே! மாமா அப்பவே சொன்னாங்க டாக்டர்க்கு படிச்சவன், அமெரிக்கால ஒர்க் பண்றவன்னு அத்தை உனக்கு பாக்குறது எல்லாம் எப்படிப்பட்ட இடம் தெரியுமா? எந்த அம்மாக்கும் தன் பொண்ணு நல்லா வாழனும்னு தான் நினைப்பு இருக்கும். அத்தையும் அதுக்காக பார்த்து பார்த்து தான் உனக்கு செலக்ட் பன்றாங்க. அதை தப்புனு சொல்ல முடியாதே அனு" என அரவிந்த் சொல்ல, இப்பொழுது அனன்யா முறைத்தாள் அவனை.
"என்ன லுக்கு? நிஜம் தானே?" என்றான் கொஞ்சம் இலகுவாய் புன்னகையுடன்.
"ஆனா என் விருப்பம்? அது முக்கியமில்லையா அவங்களுக்கு?" என்றாள் கோபமாய்.
"நாம சொன்னா தானே அனு அவங்களுக்கு தெரியும்? ஆசைஆசையா உனக்காக அவங்க பாக்குறதை எல்லாம் நான் தப்பு சொல்லல. ஆனா நாம நம்ம மனசுல இருக்கறதை சொல்லாம அவங்க பார்த்த பையனை மறுத்தா கோபம் வரும் தானே?" என்றான் அவனும்.
"என்ன சொல்லல! எல்லாம் சொல்லியாச்சு. அர்வி அத்தானை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன பின்னாடி தான் என் முன்னேயே இன்னொருத்தனை பொண்ணு பார்க்க வர சொல்லி போன் பண்ணினாங்க!" என்றாள் அவளுமே கோபமாய்.
"ஏய்! நிஜமாவா? சொல்லிட்டியா?" என்றான் அதிர்வுடன்.
"ஏன் உங்க மாமா சொல்லலையா?" என அதையும் கோபமாய் அனன்யா சொல்ல,
"அனு ஆர் யூ சீரியஸ்?" என்றான் அப்பொழுதும் நம்பாமல்.
"எல்லாமே சொல்லிட்டேன் த்தான். என்னால முடியல. உங்களை மாதிரி எல்லாருக்காகவும் யோசிக்க எனக்கு வர்ல. எனக்கு அது தெரியவும் தெரியாது. ஒருவேளை நான் எங்க அம்மா மாதிரி தானோ என்னவோ! ஆரம்பத்துல இருந்து எனக்காக மட்டும் யோசிச்சு உங்களை பத்தி நினைக்காம உங்களை டிஸ்டர்ப் பண்ணினேன். இப்ப பெத்தவங்களை புரிஞ்சிக்காம அவங்களை டிஸ்டர்ப் பண்றேன். என்னனு பொறந்தேனோ. ஏன் தான் பொறந்தேனோ!" என்றவள் சொல்லில் அப்படியே அமர்ந்துவிட்டான்.
"நான் பண்றது எல்லாம் தப்பு தான். எனக்கே தெரியுது. ஆனா வேற வழி? நான் வாழ வேண்டாமா? நான் எப்ப தான் எனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழுறது. எனக்கு பிடிச்சவன் என்னை புரிஞ்சிக்க நாலு வருஷம். என் அம்மா அப்பா என்னை புரிஞ்சிக்க ஏழு வருஷம்னு இப்படியே போனா?" என சொல்ல,
"அனு!" என காற்றுக்கும் வலிக்காத குரலில் அவளை அழைத்தான் சமாதானப்படுத்தும் விதமாய்.
"போங்க த்தான்! என் கஷ்டம் எனக்கு தான். இப்பவும் சொல்றேன். அப்பா சொல்றாங்கனு நான் சென்னை வந்து தங்குறதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணாம இருந்திருந்தா நிச்சயமா உங்களை தேடி வந்திருக்க மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருப்பேன். நீங்களும் உங்க குடும்பத்தோட நிம்மதியா இருந்திருக்கலாம்!"
உங்க குடும்பத்தோட என்றவள் சொல்லில் மிதமான முறைப்பை கொடுத்தவன், "அதை விடவே மாட்டியா நீ?" என்றான்.
"ஆனா மாமா இதெல்லாம் சொல்லல அனு என்கிட்ட. மாப்பிள்ளை பார்த்தது பிடிக்காம நீ கிளம்பி வந்துட்டனு தான் சொன்னாங்க. நீ கால் பண்ணும் போது நான் மகி வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன் எல்லாரோடவும். அப்ப பேசி இருந்தா உடனே பேசிட்டு வச்சிருக்க வேண்டியதா இருக்கும். நிறைய பேசலாம் நினைச்சேன். நீ கால் எடுக்கல. அட்லீஸ்ட் இவ்வளவு நடந்த பிறகாவது எனக்கு பேசிருக்கலாம்ல அனு" என்றான் தணிவாய்.
"பேசணும் தான் இருந்துச்சு. எல்லாத்தையும் சொல்லி அழுது உங்க தோள்ல சாஞ்சுக்க தான் நினைச்சேன்." என்றவள் கண்கள் கலங்கி நிற்க, அதையுமே உள்ளிழுக்க முயன்றாள்.
"ப்ச்!" என்றவன் எழுந்து அவளருகே வந்து அமர்ந்துகொண்டு அவள் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
"ஓகே! பார்த்துக்கலாம். அதான் சொல்லிட்ட இல்ல. நானும் பேசுறேன். அழாத! இப்படி என் முன்னாடி அழுகையை கண்ட்ரோல் பண்ணிக்காத!" என சொல்ல, அவளுக்கு தேவையான வார்த்தைகளும் தோளும் என கண்ணீர் வர தான் செய்தது.
"இம்சை தான் இல்ல அனு இந்த லவ்ன்றது?" என்றவன் இதழ்கள் மெல்லிய புன்னகையை கொடுக்க,
"ம்ம்ஹுஹ்ம்ம்! எனக்கு அது குடுக்குற வலியும் நல்லா தான் இருக்கு!" என்றாள் அவன் தோளில் சாய்ந்தபடி.
"ஹ்ம்! இப்போ நான் உடனே அக்காகிட்ட சொல்லியாகணும். இல்லைனா அத்தை அங்க போய் பிரச்சனை பண்ண கூட வாய்ப்பு இருக்கு இல்ல?" என அரவிந்த் கேட்க,
"அதெல்லாம் அப்பா பார்த்துக்குவாங்க. அன்னைக்கு அம்மா ரொம்பவே பேசிட்டாங்க. அப்பாவும் அம்மாவை ரொம்பவே திட்டிட்டாங்க!" என்றவள் நடந்ததை கூறினாள்.
"மாமா? மாமா என்னை எதுவும் பேசலையா? என் மேல மாமாக்கு கோவம் வரலையா?" அரவிந்த் தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வோடு கேட்க,
"உங்களை எப்படி பேசுவாங்க? என்னனு பேசுவாங்க. நான் என்னோட விருப்பத்தை தான் சொன்னேன். உங்க விருப்பத்தை எல்லாம் சொல்லல. நாலு வருஷம் முன்ன நான் ஆரம்பிச்சதுல இருந்து இப்ப வரை என்னோட முடிவு என்னனு தான் நான் சொன்னேன்"
"அப்படினா?" என்று தன் தோளில் சாந்திருந்தவளை திரும்பி அவன் பார்க்க,
"அப்படினா அப்படி தான் த்தான். நான் தான் சொன்னேனே அன்னைக்கே! நான் என்னோட லவ்வை சொன்னேன். என்னோட விருப்பத்தை சொன்னேன். அவ்வளவு தான். உங்களோட விருப்பம், முடிவு, காதல்னு அது உங்க பாடு!" என அனன்யா சொல்ல,
"ஹே!" என நன்றாய் அவள் பக்கம் திரும்பிவிட்டான். அதில் அவளும் நிமிர்ந்துவிட,
"என்ன அனு ஷாக் மேல ஷாக் குடுக்குற? என்னை சொல்லிருந்தா கூட பரவால்ல மொத்தமா உன்னை மட்டும் நீயே சொல்லிட்டு வந்திருக்க?"
"பின்ன? வர்றவன் முன்ன போய் நிக்கவா? இனி என்னவும் பண்ணட்டும். நான் ஊருக்கு போறதா இல்ல" என்றாள் பல்லைக் கடித்து.
மலைப்பாய் இருந்தது கேட்கவே! ஆனாலும் தன் பக்கம் என இனி உடனே அடுத்து எதாவது செய்தாக வேண்டும். நேரம் கடத்துவது மடத்தனம் என தெளிவாய் புரிந்தது.
கனகாவை சமாளித்து சம்மதிக்க வைத்தே ஆக வேண்டும். அனைவரின் சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் தான் தங்கள் திருமணம் நடந்தேற வேண்டும் என தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான் அரவிந்த்.
"நான் பண்ணினது தப்பு தான் இல்ல த்தான்?" என பாவமாய் இப்பொழுது அனன்யா கேட்க,
"இல்ல அனுமா! எப்படியும் தெரிய வேண்டியது தானே! என்ன என்னையும் சேர்த்தே சொல்லிருக்கலாம் நீ!" என்றவன்,
"ஆமா! அடி விழல?" என்றான் புன்னகையை விழுங்கிக் கொண்டு.
"த்தான்!" என சிணுங்கியவள் கன்னத்தை பிடித்தவன் வலிக்காமல் இழுக்க, அனன்யாவும் அசையவில்லை.
"நிஜமா இம்சை டி! என்கிட்ட லவ்வை இன்னும் சொல்லல நீ! அதுக்குள்ள எங்கல்லாம் சொல்லி எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க?" என்று கன்னத்தை விட்டவன் எழுந்து கொண்டான்.
"நீங்க ரெஸ்ட் எடுங்க த்தான். நான் சமைச்சு கொண்டு வர்றேன்!" அனன்யா சொல்ல,
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ரெண்டு நாள் முன்னாடி சாரீல அவ்வளவு அழகா இருந்த பொண்ணு யாருன்னு இப்ப நான் தேட வேண்டியதா இருக்கு. எனக்கு தெரிஞ்சு அக்கா வீட்டுல இருந்து கிளம்பினதுல இருந்தே நீ சாப்பிடலனு தோணுது. இவ்ளோ மெலிஞ்சுட்ட" என அரவிந்த் முறைக்கவும் அனன்யா அமைதியாகிவிட்டாள்.
"ஹால்ப் அன் ஹவர் வெயிட் பண்ணு. திரும்ப காபி எதுவும் குடிக்காத. உடனே எதாவது வாங்கி செஞ்சு கொண்டு வர்றேன். மதியத்துக்கும் எதாவது நான்வெஜ் செய்யலாம்" என்றவன் அவளிடம் சொல்லிக் கொண்டு தன் வீடு வந்து சேர, சோர்வு அயர்வை சேர்த்து பசி உணர்வுமே இப்பொழுது இல்லை.
அவள் வயிற்றை நிறைத்திருந்தவன் ஒரு வகையில் மனதையும் நிறைத்திருந்தான் ஒரு மணி நேரத்தில்.
வீட்டிற்கு வந்து சமையலை முடித்து அனன்யாவுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்தவன் உடனே ஆர்யனுக்கு அழைத்து அனன்யா கூறியதை சொல்ல,
"ஹ்ம்! அனு குழந்தையே தான் டா. என்னனு சமாளிக்க போறியோ!" என்றான் ஆர்யன்.
"மாமா! அக்காகிட்ட இன்னைக்கு பேசிடுங்க மாமா. இதுக்கு மேல பேசாம எப்படி இருக்க? அன்பரசன் மாமாகிட்ட கூட உடனே பேசிடுறது தான் பெட்டர். ஆனா நான் முதல்ல போன் பண்ணி அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன். அப்புறம் பார்ப்போம் மத்ததை." என சொல்ல,
"சரி தான். இவ்வளவு நடந்த பிறகும் அமைதியா இருந்தா தான் தப்பு. நான் வீட்டுல பேசுறேன். உங்க மாமாகிட்ட கூட நான் பேசுறேன் டா!" என ஆர்யன் சொல்ல,
"நிச்சயமா நீங்க தான் பேசணும் மாமா! ஆனா அங்க என்ன சூழ்நிலைனு தெரியாம அத்தை எதுவும் கலாட்டா பண்ணிட்டா மனகசப்பு வந்துடும். அதனால மாமாகிட்ட நான் முதல்ல பேசிட்டு சொல்றேன். அப்புறம் பேசிப்போம்!" என்று சொல்ல ஆர்யனும் அவன் விருப்பதில் சரி என்றுவிட்டான்.
தொடரும்..