• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 6

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
நேசம் - 6



அவன் கூறியதைப் போலவே, பார்க்கிங்கின் உள்ளே ஓடை போன்ற ஒரு பாதை. அங்கிருக்கும் படிக்கட்டு வழியாக ஏறி நடந்தால் இரண்டு கதவுகள். அதைத் தாண்டி உள்ளே வந்தால் இரண்டாவது மாடியில் சுற்றி வர இருந்த கதவுகளில் ஒன்றைத் திறந்தவன்,


"இது தான் எங்கட வீடு. முதல் முதலா வீட்ட வாரீர், வலக்கால எடுத்து வைச்சு வாரும்..." என்றவன் முன்னே நுழைய, பின்னே வந்தாள் பெண்ணவள்.


அவள் எதிர்பார்த்தது பாேல் பிரமாண்டமான வீடு எல்லாம் அது இல்லை. ஒரு அறை, குளியலறை, கழிப்பறை, வரவேற்பறையுடன் ஒட்டி இருந்த குசினி. இவ்வளவு தான் அந்த வீடே! என்ன மூன்று பக்கங்களில் மாத்திரம் தான் சுவர் இருக்கும், ஒரு பக்கம் பூராவுமே கண்ணாடிச் சுவர் தான். அதைத் திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டிருந்தது.


"சூக்கேஸ்ஸ அந்த அறேக்குள்ள இருக்கிற அலுமாரியில வைச்சிட்டு, குளிக்கிறாண்டா குளிச்சிட்டு வாரும். நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன்..." என்றவன் சொல்லுக்குச் சரியெனத் தலையசைத்தவள், சூக்கேஸிலிருந்து ஒரு உடையினை எடுத்துக்காெண்டு குளியல் அறை நுழைந்தாள்.


குளித்து முடித்து விட்டு ஈரத்தைத் துடைத்து உடை மாற்றுவோம் என்று துவாயனை எடுக்கவில்லை, துடைப்பதற்குள் குளியல் அறைக் கதவானது தட்டப்பட்டது.


"மிரு... மிரு... ஒருக்கா கதவைத் துறவும்." என்றான் குரலில் பரபரப்பைக் காட்டி. ஏன் இந்தத் திடீர் பரபரப்பு என்று விளங்கவில்லை அவளுக்கு.


"ரெண்டு நிமிஷம் அப்பா... உடுப்பை மாத்தீட்டு வாரன்..." துடைப்பதை விட்டுவிட்டு, உடையினை எடுத்தாள்.


"மிரு... அதுக்கெல்லாம் நேரமில்ல... கதவைத் துறவும் அவசரம்."


"அதானப்பா... இருங்கோ உடுப்பை மட்டும்..."


"அதைப் பிறகு போடலாம். முதல்ல துறவும்" அவளது கதையினைச் சொல்லக் கூட அவகாசம் தராது முந்தினான்.


"உடுப்பு போடாம எப்படி?"


"இப்ப நீர் கதவைத் துறக்குறீரோ இல்லையோ?" குரலில் சிறு கண்டிப்பின் தொனி தெரிந்தது.

"ப்ச்..." என்றவள், கையில் இருந்த துவாயால் உடலை மேலோட்டமாக மூடியவள், கதவைத் திறந்து,


"இதுக்குள்ள எடுக்கிறதுக்கு என்ன இருக்கு எண்டு இவ்வளவு அவசரம்?" என்றாள் அங்கம் மூடிய துவாயை சரியாக இழுத்து விட்டவாறு.


அது ஒரு சின்ன அறை. அதில் பாதித் தொட்டி பிடித்திருக்க, மீதியின் ஒரு பகுதியைக் கைக்கழுவும் கிண்ணம் அபகரித்துக் கொண்டதில், ஒருவர் மாத்திரமே வசதியாக நிற்க முடியும். இதில் கதவு வேறு திறந்திருந்தால், அந்த இடத்தையும் அது அபகரித்துக் கொள்ளும். இதில் இருவரால் எப்படி நிற்க முடியும்?


அந்தக் கோலத்தில் அவளைக் கண்டவன் விழிகளில் அத்தனை தாபம். இமை அசையாது மேலிருந்து கீழாக அவளை அளந்தவன் ரசனையைக் கதவு கெடுத்ததாே என்னவோ, காலால் கதவினை மூடி, அவளை நெருங்கியவன் சூடான மூச்சுக் காற்று அவள் நெற்றியில் மோத, நிமிர்ந்து அவன் வதனத்தை ஏறிட்டவள், அவன் கண்களில் தெரிந்த தாபத்தில் மூச்சடைத்துப் போனாள் பெண்ணவள்.


எத்தனை முறை முற்றுகையிட்டாலும், பெண்ணவளின் வெட்கமானது, தன்னவன் முதன் முறை தீண்டும்போது எப்படி நாணிச் சிவந்து போவாளோ, அப்படியே தானே ஆண்டுகள் கடந்தாலும் சிவந்து போவாள். வெறும் மூன்று நாளில் தொட்டவன் தீண்டலில் நாணம் அற்றுப் போய் விடுமா என்ன? இதில் அவன் ஸ்பரிசம் தீண்டியே நீண்ட நாட்கள் ஆகிவிட்டிருந்தது...


அணைக்கவில்லை அவன். ஆனால் அவன் மார்பானது அவளது கரும் திராட்சை கனிகள் இரண்டினை மாத்திரம் தான் உரசி இருக்கும். அதற்கே மூச்சடைத்துப் போனாள்.


"எ... என்... என்ன செய்யிறங்கள்...?" என்றவள் வாயிலிருந்து வார்த்தை வருதற்குப் பதிலாகக் காற்றே வந்தது.


"ம்ம்... என் மனிசியின்ர வடிவ ரசிக்க வந்தன்." ராகத்தில் பதிலளித்தவன் விழிகள், இம்முறை அவளது மேடான அங்கம் தீண்டியது. அதில் கூசிப் போனவள்,


"இதுக்குத் தான் அவசரமா கதவ துற எண்டனீங்களோ... வெளியால போங்கோ... எனக்கு ஒரு மாதிரி இருக்கு..." மார்பின் சிறு குழி கூடத் தெரியாது துவாயினை நன்றாக மேலே இழுத்து விட்டவள், அவன் மேனி உரசாது கையினைக் குறுக்காக விட்டு, பின்னே வளைந்து நின்று கொண்டாள்.


"அவசரமோ... மூண்டு வருசமாச்சு. இதில அவசரம் எண்டுறீர்... இத்தனை நாள் பொறுமையா இருந்திருக்கிறன் பாரும்... அதுக்கே அவேட் தரணும்..." அவள் வளைந்தால் விட்டுவிடுவானா? நகராது இடையின் குறுக்கே கை விட்டு இழுத்து தன்னோடு ஒட்ட வைத்தவன், மறு கையால் அவளது முகத்தின் ஒவ்வொரு பாகங்களையும் ஒற்றை விரல் கொண்டு பட்டும் படாமலும் கூசச் செய்தவன் செயலில், நாணலாய் கிறங்கிக் கண்மூடினாள் பெண்ணவள்.


இனியும் தாமதிப்பானா...? கழுத்து வளைவுக்குள் இரு கையினையும் விட்டிழுத்து, தன் முகத்துக்கு நேரே அவள் முகத்தைக் காெண்டு வந்தவன், செந்தாமரையாய் மலர்ந்திருந்த உதட்டினை கவ்விச் சப்ப ஆரம்பித்தான். அவன் கையானது, அவளது இரு சிறு பஞ்சுப் பொதிகளைத் தீண்டியதும் தான், பெண்மை விழித்துக் கொண்டது.


சட்டென அவனைத் தன்னிடமிருந்து தள்ளி விட்டவள்,

"எனக்குப் பசிக்குது" என்றாள். அவளுக்குத் தான் தெரியுமே, இவன் ஆரம்பித்தான் என்றால், இப்போதைக்கு முடிக்கமாட்டான் என்று. மூன்று முறையாவது மூச்சு வாங்காது ஓயமாட்டான். அத்தனை கெட்டிக்காரன் அந்த விசயத்தில். அதற்குள் அவள் வயிறு பசியில் புகைத்தே பற்றி விடும்.


கோபம் கொள்ளவில்லை அவன், தள்ளிவிட்ட வேகத்தில், காந்தம் பாேல் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டான்.


"உமக்கு அங்கச் சாப்பாடு ரெடி! அதுக்கு முன்னம் என்ர பசிய தீத்துட்டு போம்..." என மூக்கால் சிணுங்கியவன் உதடுகளே, அவள் கழுத்து வளைவுக்குள் உரச, அதில் கூசியவள் நெளிந்து கொண்டே,


"நான் குளிச்சிட்டனப்பா..." என்றாள் கெஞ்சலாய்.


"பரவாயில்ல சேந்து குளிக்கிறது இன்னும் நல்லா இருக்கும்..." அவள் சுதாரிக்கும் முன்னர் அவளைக் கைகளில் ஏந்தியவன், அருகிலிருந்த தொட்டிக்குள் இறங்கியதும் தான் தாமதம், குழாயைத் திருகி விட்டான். சில்லென்ற குளிர் நீர் அவள் மேனியில் பட்டதும், ஸ்... என்றவளைச் சட்டெனத் தன்னோடு இறுக்கி அனைத்தவனது மறு கரமோ, துவாயினை தூக்கித் தூரப் போட்டிருந்தது.


ஆடையில்லா மேனியை உணர, அவனும் ஆடையினைக் களைந்திருக்க வேண்டும். தன் ஆடையினையும் களைந்து வீசியவன் கைகளில் தங்கப் பெட்டகம். அத்தனையும் அவனுக்கே உரியது.



இருந்தும் சாப்பாட்டைக் கண்ட பிச்சைக்காரன் போல், அவாவில் ஒன்று மாற்றி ஒன்றெனத் தொட்டுத் தடவி, நசுக்கி, பிழிந்து என்று அவளைப் படாதபாடு படுத்தியவன், ஒரு கட்டத்திற்கு மேல், கட்டுப் படுத்த முடியாது,


அவள் கால் இடுக்குகளில் காலினை விட்டு அவளை நிலை தடுமாறச் செய்து தொட்டிக்குள் சரியச் செய்தவன், தானும் அவள்மீது கவிழ்ந்து கொண்டான். ஓடி ஓடி உழைத்தவன் மூச்சிரைத்து முடிக்கும்போது, அத்தனை நரம்புகளிலும் ஓர் புத்துணர்ச்சி. கடைசியாய் காமம் அற்ற முத்தம் ஒன்றை அவள் உதட்டினுள் அழுந்த வைத்து எழுந்து துவாயினை எடுத்துத் துடைத்தவாறு,


"நான் வெளியால இருக்கிறன் வாரும் சாப்பிடுவம்..." என்றவன் உதட்டில் வெற்றிக்களிப்பு.


அவன் புன்னகையில் வசீகரிக்கப்பட்டவளும், ம்ம் என்பதாய் தலையசைத்து விட்டு எழுந்து உடையினை மாற்றி வந்தவளுக்குப் படையலாய் ஒரு தொகை உணவுத் தட்டில் குவிக்கப்பட்டிருந்தது.


"எவளோ சாப்பாடு... நான் இவளோ சாப்பிடமாட்டன்..." எனக் குவித்திருந்த சாப்பாட்டைக் கண்டு மிரண்டு நின்றவள் கைப்பிடித்து அழைத்து வந்து, கதிரையில் இருத்தியவன்,


"முதல் நீர் எப்பிடி எண்டாலும் சாப்பிட்டிருக்கலாம்... இனி கனக்கச் சாப்பிடோணும்... அப்பத்தான் என்னயும், இஞ்ச அடிக்கிற குளிரையும் தாங்கேலும்..." என்றவாறு ஒரு வாய் தீத்திவிட்டான். அதை அவள் அவன் விழிகளையேப் பார்த்தவாறு வாங்கியவளுக்கு, தன்னை தாங்கும் இன்னும் ஒரு அன்னை கிடைத்ததில் பெரும் சந்தோஷம்.


அவளுக்குத் தீத்திவிட்டவன் விரல்களில் மிச்சமாய் ஒட்டியிருந்த உணவினைச் சூப்பியவாறு தனக்கான கதிரையில் சென்று அமர்ந்தவனையே பார்த்திருந்தவளைப் பார்த்துக் கண்ணடித்தவன்,


"இப்பிடி என்னையே நீர் பாத்துக் கொண்டிருந்தா, திரும்பவும் குளிக்க வேண்டி வரும். ஓம் எண்டா சொல்லும்... எனக்கு நாள் பூரா குளிக்கிறாண்டாலும் ஓகே தான்..." என்றான் புளுகமாய். அவன் அப்படிக் கூறியது, சற்று முன்னர் நடந்த கூடலில், அவனது நாவும், கையும் செய்த ஜாலங்கள் நினைவில் வர, நாணக் குனிந்தவள் கன்னங்கள் இரண்டிலும் பூசாமல் ஒட்டிக் கொண்டது சிவப்பு வர்ணம். அதைக் கண்டதும் பெரிதாய் சிரித்தவன்,


"சம்மதிச்சாலும் சம்மதிக்கேல எண்டாலும் இன்னொரு உருட்டு உருட்டுறது தான். வேளைக்குச் சாப்பிடும். கட்டிலுக்கு போவம்." அடங்கவில்லை அவனுக்கு. சொன்னது மாத்திரம் அல்ல... சாப்பிட்டு முடித்த கையோடு, கையினைக் கூடக் கழுவ விடவில்லை. கதிரையோடு அள்ளாத குறையா அள்ளிக் கொண்டு கட்டிலில் போட்டவன் ஆரம்பித்து விட்டான் தன் சித்து விளையாட்டினை.


இரண்டு நாட்கள் அவளைத் தாங்கு தாங்கு என்று தாங்கியவன், மூன்றாவது நாள் வேலை என்று வெளிக்கிட்டு இன்றாேடு ஒரு கிழமை முடிந்திருந்தது. ஆனால் அவன் தான் வீட்டிற்கு வந்த பாடில்லை. செல்லில் அழைத்தால்,



"இரண்டு நேர வேல மிரு... இஞ்சத் தனிய இருக்கிறது சகயம். பயப்பிடாம இரும் வந்திடுறன்..." என்று மூன்று நாட்களாகக் கூறுகிறானே தவிர வரவில்லை.
 
Last edited:
  • Love
Reactions: ரமா