இதழ்:- 10
அந்த கறுப்பு நிற கார் வழுக்கி கொண்டு வந்து வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேக நடையுடன் வீட்டினுள் சென்ற நிலவனின் காதில் விழுந்தது தமிழின் குரல்.சமையல் அறையில் தாயிடம் உரத்த குரலில் அம்மா பெரியத்தை சொன்னார்கள் நாளைக்கு காலை பதினொரு மணிக்கு வினி அக்கா வந்துவிடுவார்களாம். என்று உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தாள்.
வேகமாக மாடி ஏறப்போன நிலவனின் கால்கள் ஒருகணம் தயங்கி பின் அதிவேகமாக படிகளில் ஏறியது.கார் வந்த சத்தம் கேட்டதே நிலவன் வந்துவிட்டானா என்று பார்க்க கூடத்துக்கு வந்த சாந்தா கண்டது வேகமாக தனது அறையில் நுழையும் நிலவனின் முதுகைத்தான்.
அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.ஏன் இவன் இப்படி மாறிப்போனான்.ஒரே தொழில் தொழில் என்று தன்னை அதிலேயே முழு நேரமும் மூழ்கடித்து இப்படி இயந்திரத்தனமாய் மாறிவிட்டானே.அவனின் இந்த கடின உழைப்பால் அவர்களின் தொழில் உன்னத நிலையை அடைந்து சிகரம் தொட்டது உண்மைதான்.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா????
நிலவனுக்கு தொழிலில் ஆர்வம் தான்.அதுவும் கடந்த நான்காண்டுகள் அவனின் வாழ்க்கையே இந்த தொழில் தான் என்று ஆகிப்போனது.அவன் வீட்டில் இருக்கும் நேரத்தை விட தொழிற்சாலையிலோ அலுவலகத்திலேயோ தான் அதிகம் நேரத்தை செலவிட்டான்.உண்பதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே வீடு என்று ஆகிப்போனது.
இவையெல்லாவற்றையும் விட அவனின் பேச்சு சிரிப்பு எல்லாமே குறைந்து முகத்தில் எப்போதுமே ஒரு இறுக்கம் குடியேறி விட்டது.நிலவன் எப்போதுமே சற்று அழுத்தமானவன் தான் என்றாலும் அவன் கண்களில் ஒரு துள்ளல் இருக்கும் ஆனால் இப்போது அந்த துள்ளல் துடிப்பு எதுவுமே இல்லையே.எதனால் இப்படி மாறிப்போனான். இவனின் இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்குமா?? இல்லை அவனின் வம்சத்தின் தொழில் இரத்தம் அவன் உடலில் ஓடுவதால் இப்படி தொழில் தொழில் என அதிலேயே மூழ்கி இப்படி மாறிவிட்டானா?? அந்த தாய் மனம் மகனை எண்ணிக்கலங்கியது.
மேலே சென்ற நிலவன் குளித்து உடைமாற்றிவிட்டு கீழே வந்து கூடத்தில் உள்ள மெத்திருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.சாந்தா அவனுக்கு தேநீர் தயாரித்து மகளிடம் கொடுத்துவிட்டு தான் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு வந்தார்.
அண்ணா இந்தாங்க.என்று தேநீரை தமையனிடம் நீட்டினாள் தமிழ்.ஒரு பாசமான சிறு முறுவலுடன் பெற்றுக்கொண்டவன் முன்பு சிற்றுண்டி தட்டை வைத்துவிட்டு அவன் எதிரே அமர்ந்தார் சாந்தா.தாயை பார்த்து நீங்கள் சாப்பிட்டாச்சா அம்மா.என்றான்.
ம்ம்ம்.. நானும் இவளும் எப்போதோ சாப்பிட்டுவிட்டோம். இல்லாவிட்டால் தான் அப்பாவும் மகனும் திட்டுவீர்களே நாங்கள் வரும் வரை எதற்கு காத்திருக்கிறீர்கள் என்று.என்றார் சாந்தா சிறு குறையுடன்.
தாயின் பேச்சைக் கேட்டவன் பின்னே என்ன அம்மா.நாங்கள் எப்போது வருவோம் என்று சொல்ல முடியாது.சிலநேரம் சீக்கிரம் வருவோம் பல நேரங்களில் தாமதமும் ஆகும்.அப்படி தாமதம் ஆகும் நேரங்களில் நாங்கள் வெளியே சிற்றுண்டியோ உணவோ எடுத்துக்கொள்வோம்.எங்களுக்காக நீங்கள் பசியுடன் காத்திருந்தால் கோவம் வரத்தானே செய்யும்.
சாந்தாவின் முகத்தில் ஒரு பாசமான முறுவல் மலர்ந்தது.ஹ்ம்ம்..அதனால் தான் நாங்கள் இப்போது உங்களுக்காக காத்திருப்பதில்லை.அப்பாவுக்கும் மகனுக்கும் தொழிற்சாலைக்கு சென்றால் வேறு நினைப்பே வராதே.அதிலும் நீ ஆக மோசம் நிலவா.உனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும்.அப்போது தான் உனக்கு வீடு என்று ஒன்று உள்ளதே நினைவு வரும்.என்று கூறிக்கொண்டு போனவர் ஆ... சொல்லமறந்துவிட்டேன் நிலவா.நாளைக்கு நம்ம பூவினி வருகிறாளாம்.நாளைக்கு மதியம் எல்லோருக்கும் அங்குதான் சாப்பாடாம்.நாளைக்கு நீயும் விடுமுறை எடுத்துவிடு.எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள்.அதிலும் சின்னதுகள் எல்லாம் ஒரே அமர்க்களம் பண்ணிக்கொண்டு இருக்குதுகள்.
வினிக்காக்கு அது பிடிக்கும் இதுபிடிக்கும்.என்று என்னென்னவோ வாங்கி வைத்திருக்குதுகள்.மேகலாவுக்கும் வினி அப்பாவுக்கும் தலைகால் புரியாத சந்தோசம்.உன் பாட்டி தாத்தாவை கேட்க வேண்டுமே.நாளைக்கு வினி வரும் போது தாங்கள் அங்கிருக்க வேண்டுமாம்.தங்கள் செல்லப் பேத்தியை இனி ஒருகணம் கூட பார்க்காமல் இருக்க முடியாது என்று இன்றே மேகலா வீட்டுக்கு சென்று அங்கே தங்கிவிட்டனர்.என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சென்றார் சாந்தா.
தாயின் இவ்வளவு பேச்சிற்கும் நிலவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.அவன் நேரெதிரே தொலைக்காட்சியை வெறித்தபடி இருந்தான்.
அண்ணா...
ம்ம்ம்..
என்னண்ணா.அம்மா இவ்வளவு சொல்கிறார்கள். நீங்கள் எதுவுமே சொல்லாமல் இருக்கிறீங்கள்?? வினி அக்கா வருவதில் உங்களுக்கு கொஞ்சம் கூட சந்தோசமே இல்லையா? என்றாள் தமிழ் சற்று மனத்தாங்கலுடன்.
ஒருகணம் முகம் இறுக விழிமூடித் திறந்தவன்.
சற்று தொண்டையை செருமி சீர் செய்துகொண்டு .ஹே ..தமிழ் என்னடா குட்டி இப்படி பேசிக்கொண்டே போகிறாய்.உன் வினி அக்கா வருவது எல்லோருக்குமே சந்தோசம் தான்.இன்று அலுவலகத்தில் சற்று வேலை அதிகம் டா.அதனால் சற்று களைப்பாக இருக்கிறது.அது தான் எதுவும் பேசாமல் அம்மா பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன். என்றான்.
உடனே மனம் கனிந்த தமிழ் தமையனின் கையைப்பற்றி
ஒ மன்னிச்சிடுங்க அண்ணா.ரொம்ப களைப்பாய் இருக்கா அண்ணா.இதிலேயே சற்று காலை நீட்டிப் படுத்து ஓய்வெடுங்கள்.என்று கரிசனத்துடன் கூறி தனது இருக்கையில் இருந்து எழுந்து அவன் படுப்பதற்கு வசதி செய்து கொடுத்தாள்.
என்னப்பா நிலவா.இப்படி ஒரேயடியாய் வேலை வேலை என்று ஓடினால் உடம்பு என்னத்துக்காகும்.என்று கூறி மேகலாவும் பாசத்துடன் அவன் நெற்றியை வருடினார்.
சற்று நேரம் எதுவும் பேசாமல் கண்மூடி அமர்ந்தவன்.அம்மா நான் மேலே சென்று சற்று நேரம் ஓய்வெடுக்கிறேனே. என்று சோர்ந்த குரலில் கூறி தங்கையின் தலையை வருடிவிட்டு மேலே சென்றான்.
தனது அறையினுள் சென்று கட்டிலில் விழுந்த நிலவன் ஒரு கையை தலைக்கு அடியில் மடித்து வைத்து மேல் கூரையை வெறித்தான். அவன் மனம் நிலையில்லாமல் தவித்தது. இதுவரை மனம் முழுவதையும் தொழிலில் செலுத்தி வேறு சிந்தனைக்கு இடங்கொடாமல் கிட்டத்தட்ட இயந்திரத்தனமாய் வாழப் பழகியிருந்த நிலவனின் காதில் எப்போது பூவினி வருகிறாளாம் என்ற செய்தி விழுந்ததோ அப்போதே அவனின் மனம் அலைபாயத்தொடங்கி விட்டது.கேட்ட மாத்திரத்திலேயே அவனின் மனக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறியும் சக்தி பூவினி என்ற அந்த மூன்று எழுத்து பெயருக்கு மட்டுமே உண்டு என்ற உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்தான் நிலவன்.
பூவினி.. செம்பூவினி ..என் பூவினி...அவன் மனம் அவள் பெயரை மந்திரமாய் உச்சரித்தது.அவனுக்கு சிறுவயதில் இருந்தே பூவினியை பிடிக்கும்.மிகவும் பிடிக்கும்.ஒரு குட்டிப் பூக்குவியலாய் அவள் பிறக்கும் போது இவனுக்கு வயது ஐந்து.அதுவரை தனியொருத்தனாய் இருந்த அவனுக்கு பூவினி பிறந்ததும் தனக்கு ஒரு விளையாட்டுத்துணை கிடைத்த மகிழ்வு.பூவினி பிறந்ததில் இருந்து நிலவன் தன் வீட்டில் இருந்ததை விட அவள் வீட்டில் இருந்தது தான் அதிகம்.பூவினியின் ஒவ்வொரு வளர்சிப்படியிலும் அவன் கூடவே இருந்தான்.பூவினி வளர வளர அவள் ஏதோ அவனுடைய சொத்து அவளை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது தன் கடமை என்ற உணர்வு அவன் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டது.
ஒவ்வொரு விடயத்திலும் பூவினிக்கு அவன் நல்லதொரு வழிகாட்டியாக இருந்தான்.பூவினியும் அவன் வழிகாட்டுதலையே விரும்பினாள்.அவர்கள் வளர வளர அவர்களுக்குள் இருந்த நெருக்கம் அதிகரித்தது. நிலவன் எப்போதும் தன் மனதுக்கு நெருக்கமானவளாக உணர்வது பூவினியை தான்.பூவினியின் ஒவ்வொரு அசைவுக்கும் அவனுக்கு அர்த்தம் தெரியும்.பூவினியின் மீது தான் கொண்டிருப்பது பாசம் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்த நிலவனுக்கு அது வெறும் பாசம் மட்டும் இல்லை அதற்கும் மேலே காதலும் தான் என்று ஐயம் திரிபற தெரியவந்தது அவள் தனக்கு ஒருத்தன் காதல் கடிதம் கொடுத்துவிட்டான் என்று கூறி அவனிடம் வந்து நின்றபோதுதான்.
அதைக்கேட்ட மாத்திரத்தில் என் பூவினிக்கு இன்னொருத்தன் காதல் கடிதம் கொடுப்பதா என்று உள்ளே எழுந்த கோபத்தீ அவனின் மனதில் ஒளிந்திருந்த பூவினி மீதான காதலை வெளிச்சம் போட்டுக்காட்டியது.அன்று தான் தன் காதலை உணர்ந்தான் நிலவன்.அப்போது அவன் கல்லூரி மாணவன்.பூவினியோ பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுமி.அவளின் பிஞ்சு மனதை காதல் என்ற பெயரில் கெடுக்க அவன் விரும்பவில்லை.அதனால் அவள் மீதான தன் காதலை தன் நெஞ்சுக்குள்ளேயே பொத்தி வைத்தான்.
பூவினியின் வளர்ச்சியுடன் கூடவே அவள் மீதான நிலவனின் காதலும் வளர்ந்துகொண்டே சென்றது.பூவினி கல்லூரிப்படிப்பை முடிக்கும் வரை தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துவதில்லை என மனதுக்குள்ளேயே சபதம் போட்டான் அவன். ஆனாலும் அவனையும் மீறி சில தருணங்களில் அவன் பார்வையிலும் பேச்சிலும் அவன் காதல் வெளிப்பட முனையும் போது மிகவும் சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொள்வான் நிலவன்.
காலம் இப்படியே ஓடிக்கொண்டிருந்த போது தான் நிலவனுக்கு பூவினியும் தன்னை நேசிக்கின்றாளோ என்ற ஐயம் எழுந்தது.அதன் பின் பூவினியை சற்று உன்னிப்பாக கவனித்தான்.சிறுவயதில் இருந்து அவனது முகம் பார்த்து விழிபார்த்து பேசும் பூவினி இப்போதெல்லாம் அவனது முகத்தை பார்பதையே தவிர்ப்பது அவன் கவனத்தில் பட்டது.அப்படியே தட்டித்தவறி அவன் பார்வையை நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் தொடர்ந்து அவன் பார்வையை சந்திக்க முடியாமல் முகம் லேசாக சிவக்க விழிகளைத் தாழ்த்துவதையும் கவனித்தான்.இன்னும் அவளின் ஒருசில பார்வைகளும் அவளின் மனநிலையை அவனுக்கு தெளிவாக்கியது.நிலவன் நெஞ்சில் பூஞ்சாரல் தூவியது.ஆகா நம்ம ஆளுக்கும் ஏதோ பொறி பற்றியிருக்கிறது போலவே. என்று எண்ணியவன் சரி எப்படி இருந்தாலும் அவள் கல்லூரிப்படிப்பு முடிய இன்னும் சில மாதங்கள் தானே உள்ளது.ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்காதா என்ன என்று எண்ணி அவள் பரீட்சைகள் முடிவதற்காக வண்ணக் கனவுகளுடன் காத்திருந்தான்.
அச் சமயத்தில் தான் ஒருநாள் தொழிற்சாலையில் இருந்து மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த வேளையில் மேகலா இவனை அழைத்தார்.அங்கு சென்றால் கண்மணி உடனே ஊருக்கு புறப்பட வேண்டுமாம். பத்மன் தொழிற்சாலைக்கு சென்றிருப்பதால் அவரை பேரூந்து நிலையத்தில் நிலவனால் கொண்டுபோய் விட முடியுமா?? என்று கேட்டார்.கண்மணிக்காக இல்லாவிடிலும் தன் அன்பு அத்தைக்காக செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்கு சம்மதம் என்றால் வரச்சொல்லுங்கள் அத்தை என்றான்.
இப்போது எண்ணும் போது அன்று முடியாது என்று மறுத்திருந்தால் இந்த கஷ்டம் தனக்கு வந்திருக்காதோ என்ற எண்ணம் வந்தது.கூடவே அந்த வாய்ப்பு தவறிப்போய் இருந்தால் கண்மணி இன்னொரு வாய்ப்பை உருவாக்கியிருப்பார் என்ற உண்மையும் புரிந்தது.
எது எப்படியோ அந்த பயணத்தால் தன் வாழ்க்கையே மாறிப்போய் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்கப் போகிறேன் எனத் தெரியாமலேயே கண்மணியை அழைத்துக்கொண்டு சென்றான் அவன்.
அந்த கறுப்பு நிற கார் வழுக்கி கொண்டு வந்து வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேக நடையுடன் வீட்டினுள் சென்ற நிலவனின் காதில் விழுந்தது தமிழின் குரல்.சமையல் அறையில் தாயிடம் உரத்த குரலில் அம்மா பெரியத்தை சொன்னார்கள் நாளைக்கு காலை பதினொரு மணிக்கு வினி அக்கா வந்துவிடுவார்களாம். என்று உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தாள்.
வேகமாக மாடி ஏறப்போன நிலவனின் கால்கள் ஒருகணம் தயங்கி பின் அதிவேகமாக படிகளில் ஏறியது.கார் வந்த சத்தம் கேட்டதே நிலவன் வந்துவிட்டானா என்று பார்க்க கூடத்துக்கு வந்த சாந்தா கண்டது வேகமாக தனது அறையில் நுழையும் நிலவனின் முதுகைத்தான்.
அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.ஏன் இவன் இப்படி மாறிப்போனான்.ஒரே தொழில் தொழில் என்று தன்னை அதிலேயே முழு நேரமும் மூழ்கடித்து இப்படி இயந்திரத்தனமாய் மாறிவிட்டானே.அவனின் இந்த கடின உழைப்பால் அவர்களின் தொழில் உன்னத நிலையை அடைந்து சிகரம் தொட்டது உண்மைதான்.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா????
நிலவனுக்கு தொழிலில் ஆர்வம் தான்.அதுவும் கடந்த நான்காண்டுகள் அவனின் வாழ்க்கையே இந்த தொழில் தான் என்று ஆகிப்போனது.அவன் வீட்டில் இருக்கும் நேரத்தை விட தொழிற்சாலையிலோ அலுவலகத்திலேயோ தான் அதிகம் நேரத்தை செலவிட்டான்.உண்பதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே வீடு என்று ஆகிப்போனது.
இவையெல்லாவற்றையும் விட அவனின் பேச்சு சிரிப்பு எல்லாமே குறைந்து முகத்தில் எப்போதுமே ஒரு இறுக்கம் குடியேறி விட்டது.நிலவன் எப்போதுமே சற்று அழுத்தமானவன் தான் என்றாலும் அவன் கண்களில் ஒரு துள்ளல் இருக்கும் ஆனால் இப்போது அந்த துள்ளல் துடிப்பு எதுவுமே இல்லையே.எதனால் இப்படி மாறிப்போனான். இவனின் இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்குமா?? இல்லை அவனின் வம்சத்தின் தொழில் இரத்தம் அவன் உடலில் ஓடுவதால் இப்படி தொழில் தொழில் என அதிலேயே மூழ்கி இப்படி மாறிவிட்டானா?? அந்த தாய் மனம் மகனை எண்ணிக்கலங்கியது.
மேலே சென்ற நிலவன் குளித்து உடைமாற்றிவிட்டு கீழே வந்து கூடத்தில் உள்ள மெத்திருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.சாந்தா அவனுக்கு தேநீர் தயாரித்து மகளிடம் கொடுத்துவிட்டு தான் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு வந்தார்.
அண்ணா இந்தாங்க.என்று தேநீரை தமையனிடம் நீட்டினாள் தமிழ்.ஒரு பாசமான சிறு முறுவலுடன் பெற்றுக்கொண்டவன் முன்பு சிற்றுண்டி தட்டை வைத்துவிட்டு அவன் எதிரே அமர்ந்தார் சாந்தா.தாயை பார்த்து நீங்கள் சாப்பிட்டாச்சா அம்மா.என்றான்.
ம்ம்ம்.. நானும் இவளும் எப்போதோ சாப்பிட்டுவிட்டோம். இல்லாவிட்டால் தான் அப்பாவும் மகனும் திட்டுவீர்களே நாங்கள் வரும் வரை எதற்கு காத்திருக்கிறீர்கள் என்று.என்றார் சாந்தா சிறு குறையுடன்.
தாயின் பேச்சைக் கேட்டவன் பின்னே என்ன அம்மா.நாங்கள் எப்போது வருவோம் என்று சொல்ல முடியாது.சிலநேரம் சீக்கிரம் வருவோம் பல நேரங்களில் தாமதமும் ஆகும்.அப்படி தாமதம் ஆகும் நேரங்களில் நாங்கள் வெளியே சிற்றுண்டியோ உணவோ எடுத்துக்கொள்வோம்.எங்களுக்காக நீங்கள் பசியுடன் காத்திருந்தால் கோவம் வரத்தானே செய்யும்.
சாந்தாவின் முகத்தில் ஒரு பாசமான முறுவல் மலர்ந்தது.ஹ்ம்ம்..அதனால் தான் நாங்கள் இப்போது உங்களுக்காக காத்திருப்பதில்லை.அப்பாவுக்கும் மகனுக்கும் தொழிற்சாலைக்கு சென்றால் வேறு நினைப்பே வராதே.அதிலும் நீ ஆக மோசம் நிலவா.உனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும்.அப்போது தான் உனக்கு வீடு என்று ஒன்று உள்ளதே நினைவு வரும்.என்று கூறிக்கொண்டு போனவர் ஆ... சொல்லமறந்துவிட்டேன் நிலவா.நாளைக்கு நம்ம பூவினி வருகிறாளாம்.நாளைக்கு மதியம் எல்லோருக்கும் அங்குதான் சாப்பாடாம்.நாளைக்கு நீயும் விடுமுறை எடுத்துவிடு.எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள்.அதிலும் சின்னதுகள் எல்லாம் ஒரே அமர்க்களம் பண்ணிக்கொண்டு இருக்குதுகள்.
வினிக்காக்கு அது பிடிக்கும் இதுபிடிக்கும்.என்று என்னென்னவோ வாங்கி வைத்திருக்குதுகள்.மேகலாவுக்கும் வினி அப்பாவுக்கும் தலைகால் புரியாத சந்தோசம்.உன் பாட்டி தாத்தாவை கேட்க வேண்டுமே.நாளைக்கு வினி வரும் போது தாங்கள் அங்கிருக்க வேண்டுமாம்.தங்கள் செல்லப் பேத்தியை இனி ஒருகணம் கூட பார்க்காமல் இருக்க முடியாது என்று இன்றே மேகலா வீட்டுக்கு சென்று அங்கே தங்கிவிட்டனர்.என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சென்றார் சாந்தா.
தாயின் இவ்வளவு பேச்சிற்கும் நிலவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.அவன் நேரெதிரே தொலைக்காட்சியை வெறித்தபடி இருந்தான்.
அண்ணா...
ம்ம்ம்..
என்னண்ணா.அம்மா இவ்வளவு சொல்கிறார்கள். நீங்கள் எதுவுமே சொல்லாமல் இருக்கிறீங்கள்?? வினி அக்கா வருவதில் உங்களுக்கு கொஞ்சம் கூட சந்தோசமே இல்லையா? என்றாள் தமிழ் சற்று மனத்தாங்கலுடன்.
ஒருகணம் முகம் இறுக விழிமூடித் திறந்தவன்.
சற்று தொண்டையை செருமி சீர் செய்துகொண்டு .ஹே ..தமிழ் என்னடா குட்டி இப்படி பேசிக்கொண்டே போகிறாய்.உன் வினி அக்கா வருவது எல்லோருக்குமே சந்தோசம் தான்.இன்று அலுவலகத்தில் சற்று வேலை அதிகம் டா.அதனால் சற்று களைப்பாக இருக்கிறது.அது தான் எதுவும் பேசாமல் அம்மா பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன். என்றான்.
உடனே மனம் கனிந்த தமிழ் தமையனின் கையைப்பற்றி
ஒ மன்னிச்சிடுங்க அண்ணா.ரொம்ப களைப்பாய் இருக்கா அண்ணா.இதிலேயே சற்று காலை நீட்டிப் படுத்து ஓய்வெடுங்கள்.என்று கரிசனத்துடன் கூறி தனது இருக்கையில் இருந்து எழுந்து அவன் படுப்பதற்கு வசதி செய்து கொடுத்தாள்.
என்னப்பா நிலவா.இப்படி ஒரேயடியாய் வேலை வேலை என்று ஓடினால் உடம்பு என்னத்துக்காகும்.என்று கூறி மேகலாவும் பாசத்துடன் அவன் நெற்றியை வருடினார்.
சற்று நேரம் எதுவும் பேசாமல் கண்மூடி அமர்ந்தவன்.அம்மா நான் மேலே சென்று சற்று நேரம் ஓய்வெடுக்கிறேனே. என்று சோர்ந்த குரலில் கூறி தங்கையின் தலையை வருடிவிட்டு மேலே சென்றான்.
தனது அறையினுள் சென்று கட்டிலில் விழுந்த நிலவன் ஒரு கையை தலைக்கு அடியில் மடித்து வைத்து மேல் கூரையை வெறித்தான். அவன் மனம் நிலையில்லாமல் தவித்தது. இதுவரை மனம் முழுவதையும் தொழிலில் செலுத்தி வேறு சிந்தனைக்கு இடங்கொடாமல் கிட்டத்தட்ட இயந்திரத்தனமாய் வாழப் பழகியிருந்த நிலவனின் காதில் எப்போது பூவினி வருகிறாளாம் என்ற செய்தி விழுந்ததோ அப்போதே அவனின் மனம் அலைபாயத்தொடங்கி விட்டது.கேட்ட மாத்திரத்திலேயே அவனின் மனக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறியும் சக்தி பூவினி என்ற அந்த மூன்று எழுத்து பெயருக்கு மட்டுமே உண்டு என்ற உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்தான் நிலவன்.
பூவினி.. செம்பூவினி ..என் பூவினி...அவன் மனம் அவள் பெயரை மந்திரமாய் உச்சரித்தது.அவனுக்கு சிறுவயதில் இருந்தே பூவினியை பிடிக்கும்.மிகவும் பிடிக்கும்.ஒரு குட்டிப் பூக்குவியலாய் அவள் பிறக்கும் போது இவனுக்கு வயது ஐந்து.அதுவரை தனியொருத்தனாய் இருந்த அவனுக்கு பூவினி பிறந்ததும் தனக்கு ஒரு விளையாட்டுத்துணை கிடைத்த மகிழ்வு.பூவினி பிறந்ததில் இருந்து நிலவன் தன் வீட்டில் இருந்ததை விட அவள் வீட்டில் இருந்தது தான் அதிகம்.பூவினியின் ஒவ்வொரு வளர்சிப்படியிலும் அவன் கூடவே இருந்தான்.பூவினி வளர வளர அவள் ஏதோ அவனுடைய சொத்து அவளை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது தன் கடமை என்ற உணர்வு அவன் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டது.
ஒவ்வொரு விடயத்திலும் பூவினிக்கு அவன் நல்லதொரு வழிகாட்டியாக இருந்தான்.பூவினியும் அவன் வழிகாட்டுதலையே விரும்பினாள்.அவர்கள் வளர வளர அவர்களுக்குள் இருந்த நெருக்கம் அதிகரித்தது. நிலவன் எப்போதும் தன் மனதுக்கு நெருக்கமானவளாக உணர்வது பூவினியை தான்.பூவினியின் ஒவ்வொரு அசைவுக்கும் அவனுக்கு அர்த்தம் தெரியும்.பூவினியின் மீது தான் கொண்டிருப்பது பாசம் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்த நிலவனுக்கு அது வெறும் பாசம் மட்டும் இல்லை அதற்கும் மேலே காதலும் தான் என்று ஐயம் திரிபற தெரியவந்தது அவள் தனக்கு ஒருத்தன் காதல் கடிதம் கொடுத்துவிட்டான் என்று கூறி அவனிடம் வந்து நின்றபோதுதான்.
அதைக்கேட்ட மாத்திரத்தில் என் பூவினிக்கு இன்னொருத்தன் காதல் கடிதம் கொடுப்பதா என்று உள்ளே எழுந்த கோபத்தீ அவனின் மனதில் ஒளிந்திருந்த பூவினி மீதான காதலை வெளிச்சம் போட்டுக்காட்டியது.அன்று தான் தன் காதலை உணர்ந்தான் நிலவன்.அப்போது அவன் கல்லூரி மாணவன்.பூவினியோ பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுமி.அவளின் பிஞ்சு மனதை காதல் என்ற பெயரில் கெடுக்க அவன் விரும்பவில்லை.அதனால் அவள் மீதான தன் காதலை தன் நெஞ்சுக்குள்ளேயே பொத்தி வைத்தான்.
பூவினியின் வளர்ச்சியுடன் கூடவே அவள் மீதான நிலவனின் காதலும் வளர்ந்துகொண்டே சென்றது.பூவினி கல்லூரிப்படிப்பை முடிக்கும் வரை தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துவதில்லை என மனதுக்குள்ளேயே சபதம் போட்டான் அவன். ஆனாலும் அவனையும் மீறி சில தருணங்களில் அவன் பார்வையிலும் பேச்சிலும் அவன் காதல் வெளிப்பட முனையும் போது மிகவும் சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொள்வான் நிலவன்.
காலம் இப்படியே ஓடிக்கொண்டிருந்த போது தான் நிலவனுக்கு பூவினியும் தன்னை நேசிக்கின்றாளோ என்ற ஐயம் எழுந்தது.அதன் பின் பூவினியை சற்று உன்னிப்பாக கவனித்தான்.சிறுவயதில் இருந்து அவனது முகம் பார்த்து விழிபார்த்து பேசும் பூவினி இப்போதெல்லாம் அவனது முகத்தை பார்பதையே தவிர்ப்பது அவன் கவனத்தில் பட்டது.அப்படியே தட்டித்தவறி அவன் பார்வையை நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் தொடர்ந்து அவன் பார்வையை சந்திக்க முடியாமல் முகம் லேசாக சிவக்க விழிகளைத் தாழ்த்துவதையும் கவனித்தான்.இன்னும் அவளின் ஒருசில பார்வைகளும் அவளின் மனநிலையை அவனுக்கு தெளிவாக்கியது.நிலவன் நெஞ்சில் பூஞ்சாரல் தூவியது.ஆகா நம்ம ஆளுக்கும் ஏதோ பொறி பற்றியிருக்கிறது போலவே. என்று எண்ணியவன் சரி எப்படி இருந்தாலும் அவள் கல்லூரிப்படிப்பு முடிய இன்னும் சில மாதங்கள் தானே உள்ளது.ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்காதா என்ன என்று எண்ணி அவள் பரீட்சைகள் முடிவதற்காக வண்ணக் கனவுகளுடன் காத்திருந்தான்.
அச் சமயத்தில் தான் ஒருநாள் தொழிற்சாலையில் இருந்து மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த வேளையில் மேகலா இவனை அழைத்தார்.அங்கு சென்றால் கண்மணி உடனே ஊருக்கு புறப்பட வேண்டுமாம். பத்மன் தொழிற்சாலைக்கு சென்றிருப்பதால் அவரை பேரூந்து நிலையத்தில் நிலவனால் கொண்டுபோய் விட முடியுமா?? என்று கேட்டார்.கண்மணிக்காக இல்லாவிடிலும் தன் அன்பு அத்தைக்காக செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்கு சம்மதம் என்றால் வரச்சொல்லுங்கள் அத்தை என்றான்.
இப்போது எண்ணும் போது அன்று முடியாது என்று மறுத்திருந்தால் இந்த கஷ்டம் தனக்கு வந்திருக்காதோ என்ற எண்ணம் வந்தது.கூடவே அந்த வாய்ப்பு தவறிப்போய் இருந்தால் கண்மணி இன்னொரு வாய்ப்பை உருவாக்கியிருப்பார் என்ற உண்மையும் புரிந்தது.
எது எப்படியோ அந்த பயணத்தால் தன் வாழ்க்கையே மாறிப்போய் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்கப் போகிறேன் எனத் தெரியாமலேயே கண்மணியை அழைத்துக்கொண்டு சென்றான் அவன்.