- Joined
- Aug 1, 2021
- Messages
- 72
பகுதி – 12
அவளின் கண்ணீர் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று தனஞ்சயனே சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் முதன் முதலாக அவன் முன்பு சிந்திய கண்ணீர் அவனை அசைத்துத்தான்விட்டிருந்தது.
அவளை அவன் கடத்தி வந்த நாளில் இருந்து அவன் அவளிடம் அவளின் கோபத்தினையும் அலட்சியத்தினையும் மட்டும் தான் கண்டிருக்கிறான்.அதனால் தானோ என்னவோ தான் செய்தது தவறு என்று தெரிந்தே இருந்தாலும் அவன் அதற்காக சிறிது கூட வருத்தப்பட்டதில்லை. அதற்கு அவனுக்கு அதுவரை நேரமும் இருந்ததில்லை.
வீட்டில் அவளை காணும் போது மட்டும் உள்ளே சிறிது உறுத்தும்..ச்ச்சே...ஒரு சிறு பெண்ணின் வாழ்வோடு அநியாயமாக விளையாடி விட்டோமோ என்று...ஆனால் கூடிய விரைவிலேயே சுபாங்கியின் கோப வார்த்தைகளோ அல்லது ஏதோ ஒரு அலட்சிய செயலோ அவளின் தந்தையின் நினைவை கிளப்பிவிட அது அவனின் அந்த உறுத்தலை அடியோடு துடைத்து எறிந்துவிடும்.
ஆனால் இன்றோ எல்லாம் நேர்மாறாய் இருந்தது. அவளின் கண்ணீர் மனதை ஏதோ செய்ய உடனே புறப்பட்டு தன்னுடைய கரும்பு தொழிற்சாலைக்கு வந்தவன் அங்கும் எதிலும் மனம் பதியாமல் தன்னுடைய அலுவல் அறைக்குள் வந்து முடங்கி விட்டான். அவன் கண் முன்பு சுபியின் கண்ணீர் முகமே வந்து வந்து போனது.
“நானும் மனிதப்பிறவி தான் அத்தான்.”
அவள் கண்ணீர்க்குரல் காதுக்குள் ரீங்காரமிட இரு கைகளாலும் தலையை தாங்கிய படி அமர்ந்தான் தனஞ்சயன்.
மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று முதன் முதலாய் மனது கலங்கியது. அவளே கூறியது போல இதில் அவள் செய்த தவறு தான் என்ன ? அவளுக்கு எதற்கு இந்த தண்டனை?
தன் போக்கில் எண்ணமிட்டுக் கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்து அமர்ந்தான்.
அவனை திருமணம் செய்வது ஒரு பெண்ணுக்கு தண்டனையாகுமா? அந்த நிலையிலா அவன் இருக்கிறான். அவன் ஒரு திகைப்புடன் தனக்குள்ளே கேள்வி எழுப்பும் போதே அவன் மனசாட்சி பின்னே இல்லையா...?? என கெக்கலி கொட்டியது. சுபி போன்ற ஒரு பெண் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருத்தி..... அவளுக்கு நீ எந்த விதத்தில் ஏற்றவன்.... நீ இப்படி ஒரு முட்டாள்த்தனமான காரியத்தினை செய்திருக்காவிட்டால் இந்நேரம் அவள் தந்தை கூறியது போல அவளுக்கு ரிஷியுடன் திருமணம் நடந்திருக்க கூடும். அவளும் ஒரு மருத்துவரின் மனைவியாய் சமூக அந்தஸ்தோடு வாழ்ந்திருப்பாள்.
அதைவிட்டு ஒரு காட்டுமிராண்டியை போல அவளை கடத்தி வந்து அவள் சம்மதம் இன்றியே அவளை மணம் முடித்து ஒரு சிறைக் கைதியைப் போல் அல்லவா அவளை வைத்திருக்கிறான் இந்த வாழ்வு நிச்சயம் அவளுக்கு தண்டனையாகத்தானே இருக்கும்.
அத்தோடு நானும் மனிதப்பிறவி தான் அத்தான் என்று சொல்லி அழுதாளே...அவள் மனதில் என்ன என்ன ஆசைகள் இருந்தனவோ... ஒ...ஒருவேளை அ...அந்த ரிஷியை அவள் மனமும் விரும்பி இருந்தால்.....
சட்டென மூச்சடைக்க இருக்கையில் இருந்து எழுந்தான் தனா... ஏன் அவன் இதை முன்பே யோசித்துப் பார்க்கவில்லை.... ஒருவேளை அப்படி இருந்தால் அவன் அவளுக்கு எவ்வளவு பெரிய அநீதியை இளைத்திருக்கிறான்..... எண்ணும் போதே உள்ளே வலித்தது அவனுக்கு.... சும்மாவே அவன் வாழ்வில் உள்ள சிக்கல்கள் போதாது என்று இதில் ஒரு சிறு பெண்ணின் வாழ்வையும் அல்லவா தன்னுடன் பிணைத்து சிக்கலாக்கி வைத்திருக்கிறான்... பனை மரத்தில் தேள் கொட்டிய கதையைப் போல எங்கோ யார் யார் மேலோ உள்ள கோபத்தை எல்லாம் இந்த பெண்ணின் மீது காட்டி....ச்சே.....மனம் ஒரேயடியாக குழம்பித்தவித்தது தனாவிற்கு.
அன்று சுபாங்கிக்குமே மனநிலை அவ்வளவு எளிதில் சரியாகவில்லை. வழக்கம் போல அவளால் தனா கூறிய விடயத்தை அவ்வளவு இலகுவில் மறக்க முடியவில்லை. தனா கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவள் காதினுள் ரீங்காரமிட்டது. அவன் அவளை பற்றி என்னதான் எண்ணிக்கொண்டிருகிறான். அவள் மீது சிறு சாதாரண ஈர்ப்புக் கூடவின்றி பழிவாங்க வெறுமே அவள் தந்தையை பழிவாங்க மட்டுமே அவளை மணம் முடித்தேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பொது ஒரு பெண்ணாய் அவள் மனம் எவ்வளவு வேதனை கொள்ளும் என்பதை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்க மாட்டானா..?? அவள் என்ன எந்த உணர்வும் அற்ற ஜடமா??? ஜஸ்ட் ஒரு பலியாடு போல அவளை பயன்படுத்தியிருக்கிறான்.
ஹ்ம்ம்...அவள் தான் லூசு போல எப்போதோ நடந்த சிறு விடயத்தை மனதில் வைத்து என்னென்னவோ கற்பனைக் கோட்டைகளை கட்டிக்கொண்டிருந்திருக்கிறாள். எந்த அர்த்தமுமே இன்றி... எண்ணும்போதே சூடான கண்ணீர் குபுக்கென பொங்கி கரகரவென கன்னத்தில் வழிந்தது. ஆத்திரத்துடன் கண்ணீரைத் துடைத்தாள். உள்ளே இருந்த வலி சற்றாவது மட்டுப்பட்டால் அல்லவோ கண்ணீர் நிற்பதற்கு....
ச்சு....என்று தன்மேலே எழுந்த கோபத்துடன் இருந்த இடத்தை விட்டு எழுந்தவள் மனதை மாற்றும் முயற்சியாக சுற்றுப்புறத்தில் பார்வையை அலையவிட்டாள். வழக்கம் போல மன அமைதி தேடி மாட்டுக் கொட்டகைப் பக்கம்தான் வந்திருந்தாள். அவளின் பார்வை வட்டத்தில் சிவப்பியும் அதன் கன்றுக்குட்டியும் பட... வைக்கோல் கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு கவனமாக சிவப்பியைத் தாண்டி அதன் கன்றை நெருங்கினாள். அந்த இளங்கன்றின் ஸ்பரிசம் மனதை ஏதோ ஒருவிதத்தில் சற்று அமைதியாக்க அதற்கு வைக்கோலை உண்ணக் கொடுத்தவாறே திரும்பியவள் பார்வையில் சிவப்பி பட்டது. அவளையே நோக்கியிருந்த அதன் பார்வை என்னைக் கொஞ்ச மாட்டாயா என்று கேட்பது போல் இருக்க.... சாமிநாதனின் எச்சரிப்பினையும் மறந்து மெல்ல அதனை நெருங்கி அதன் தலையை தடவிக்கொடுத்தாள் சுபாங்கி. முதல் இரண்டு வருடலுக்கு பேசாமல் நின்ற மாடு திடீரென துள்ளிப் பாய்ந்து அவளை முட்ட வரவும் சுபி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். முட்ட வரும் மாட்டிடம் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் அப்படியே உறைந்து நின்றவளை ஒரு வலிய கரம் திடீரென பற்றி பின்னால் இழுக்க .... இழுபட்ட வேகத்தில் தடுமாறிச் சாய்ந்தவளை அக்கரங்கள் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டது. .....
அவளின் கண்ணீர் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று தனஞ்சயனே சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் முதன் முதலாக அவன் முன்பு சிந்திய கண்ணீர் அவனை அசைத்துத்தான்விட்டிருந்தது.
அவளை அவன் கடத்தி வந்த நாளில் இருந்து அவன் அவளிடம் அவளின் கோபத்தினையும் அலட்சியத்தினையும் மட்டும் தான் கண்டிருக்கிறான்.அதனால் தானோ என்னவோ தான் செய்தது தவறு என்று தெரிந்தே இருந்தாலும் அவன் அதற்காக சிறிது கூட வருத்தப்பட்டதில்லை. அதற்கு அவனுக்கு அதுவரை நேரமும் இருந்ததில்லை.
வீட்டில் அவளை காணும் போது மட்டும் உள்ளே சிறிது உறுத்தும்..ச்ச்சே...ஒரு சிறு பெண்ணின் வாழ்வோடு அநியாயமாக விளையாடி விட்டோமோ என்று...ஆனால் கூடிய விரைவிலேயே சுபாங்கியின் கோப வார்த்தைகளோ அல்லது ஏதோ ஒரு அலட்சிய செயலோ அவளின் தந்தையின் நினைவை கிளப்பிவிட அது அவனின் அந்த உறுத்தலை அடியோடு துடைத்து எறிந்துவிடும்.
ஆனால் இன்றோ எல்லாம் நேர்மாறாய் இருந்தது. அவளின் கண்ணீர் மனதை ஏதோ செய்ய உடனே புறப்பட்டு தன்னுடைய கரும்பு தொழிற்சாலைக்கு வந்தவன் அங்கும் எதிலும் மனம் பதியாமல் தன்னுடைய அலுவல் அறைக்குள் வந்து முடங்கி விட்டான். அவன் கண் முன்பு சுபியின் கண்ணீர் முகமே வந்து வந்து போனது.
“நானும் மனிதப்பிறவி தான் அத்தான்.”
அவள் கண்ணீர்க்குரல் காதுக்குள் ரீங்காரமிட இரு கைகளாலும் தலையை தாங்கிய படி அமர்ந்தான் தனஞ்சயன்.
மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று முதன் முதலாய் மனது கலங்கியது. அவளே கூறியது போல இதில் அவள் செய்த தவறு தான் என்ன ? அவளுக்கு எதற்கு இந்த தண்டனை?
தன் போக்கில் எண்ணமிட்டுக் கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்து அமர்ந்தான்.
அவனை திருமணம் செய்வது ஒரு பெண்ணுக்கு தண்டனையாகுமா? அந்த நிலையிலா அவன் இருக்கிறான். அவன் ஒரு திகைப்புடன் தனக்குள்ளே கேள்வி எழுப்பும் போதே அவன் மனசாட்சி பின்னே இல்லையா...?? என கெக்கலி கொட்டியது. சுபி போன்ற ஒரு பெண் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருத்தி..... அவளுக்கு நீ எந்த விதத்தில் ஏற்றவன்.... நீ இப்படி ஒரு முட்டாள்த்தனமான காரியத்தினை செய்திருக்காவிட்டால் இந்நேரம் அவள் தந்தை கூறியது போல அவளுக்கு ரிஷியுடன் திருமணம் நடந்திருக்க கூடும். அவளும் ஒரு மருத்துவரின் மனைவியாய் சமூக அந்தஸ்தோடு வாழ்ந்திருப்பாள்.
அதைவிட்டு ஒரு காட்டுமிராண்டியை போல அவளை கடத்தி வந்து அவள் சம்மதம் இன்றியே அவளை மணம் முடித்து ஒரு சிறைக் கைதியைப் போல் அல்லவா அவளை வைத்திருக்கிறான் இந்த வாழ்வு நிச்சயம் அவளுக்கு தண்டனையாகத்தானே இருக்கும்.
அத்தோடு நானும் மனிதப்பிறவி தான் அத்தான் என்று சொல்லி அழுதாளே...அவள் மனதில் என்ன என்ன ஆசைகள் இருந்தனவோ... ஒ...ஒருவேளை அ...அந்த ரிஷியை அவள் மனமும் விரும்பி இருந்தால்.....
சட்டென மூச்சடைக்க இருக்கையில் இருந்து எழுந்தான் தனா... ஏன் அவன் இதை முன்பே யோசித்துப் பார்க்கவில்லை.... ஒருவேளை அப்படி இருந்தால் அவன் அவளுக்கு எவ்வளவு பெரிய அநீதியை இளைத்திருக்கிறான்..... எண்ணும் போதே உள்ளே வலித்தது அவனுக்கு.... சும்மாவே அவன் வாழ்வில் உள்ள சிக்கல்கள் போதாது என்று இதில் ஒரு சிறு பெண்ணின் வாழ்வையும் அல்லவா தன்னுடன் பிணைத்து சிக்கலாக்கி வைத்திருக்கிறான்... பனை மரத்தில் தேள் கொட்டிய கதையைப் போல எங்கோ யார் யார் மேலோ உள்ள கோபத்தை எல்லாம் இந்த பெண்ணின் மீது காட்டி....ச்சே.....மனம் ஒரேயடியாக குழம்பித்தவித்தது தனாவிற்கு.
அன்று சுபாங்கிக்குமே மனநிலை அவ்வளவு எளிதில் சரியாகவில்லை. வழக்கம் போல அவளால் தனா கூறிய விடயத்தை அவ்வளவு இலகுவில் மறக்க முடியவில்லை. தனா கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவள் காதினுள் ரீங்காரமிட்டது. அவன் அவளை பற்றி என்னதான் எண்ணிக்கொண்டிருகிறான். அவள் மீது சிறு சாதாரண ஈர்ப்புக் கூடவின்றி பழிவாங்க வெறுமே அவள் தந்தையை பழிவாங்க மட்டுமே அவளை மணம் முடித்தேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பொது ஒரு பெண்ணாய் அவள் மனம் எவ்வளவு வேதனை கொள்ளும் என்பதை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்க மாட்டானா..?? அவள் என்ன எந்த உணர்வும் அற்ற ஜடமா??? ஜஸ்ட் ஒரு பலியாடு போல அவளை பயன்படுத்தியிருக்கிறான்.
ஹ்ம்ம்...அவள் தான் லூசு போல எப்போதோ நடந்த சிறு விடயத்தை மனதில் வைத்து என்னென்னவோ கற்பனைக் கோட்டைகளை கட்டிக்கொண்டிருந்திருக்கிறாள். எந்த அர்த்தமுமே இன்றி... எண்ணும்போதே சூடான கண்ணீர் குபுக்கென பொங்கி கரகரவென கன்னத்தில் வழிந்தது. ஆத்திரத்துடன் கண்ணீரைத் துடைத்தாள். உள்ளே இருந்த வலி சற்றாவது மட்டுப்பட்டால் அல்லவோ கண்ணீர் நிற்பதற்கு....
ச்சு....என்று தன்மேலே எழுந்த கோபத்துடன் இருந்த இடத்தை விட்டு எழுந்தவள் மனதை மாற்றும் முயற்சியாக சுற்றுப்புறத்தில் பார்வையை அலையவிட்டாள். வழக்கம் போல மன அமைதி தேடி மாட்டுக் கொட்டகைப் பக்கம்தான் வந்திருந்தாள். அவளின் பார்வை வட்டத்தில் சிவப்பியும் அதன் கன்றுக்குட்டியும் பட... வைக்கோல் கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு கவனமாக சிவப்பியைத் தாண்டி அதன் கன்றை நெருங்கினாள். அந்த இளங்கன்றின் ஸ்பரிசம் மனதை ஏதோ ஒருவிதத்தில் சற்று அமைதியாக்க அதற்கு வைக்கோலை உண்ணக் கொடுத்தவாறே திரும்பியவள் பார்வையில் சிவப்பி பட்டது. அவளையே நோக்கியிருந்த அதன் பார்வை என்னைக் கொஞ்ச மாட்டாயா என்று கேட்பது போல் இருக்க.... சாமிநாதனின் எச்சரிப்பினையும் மறந்து மெல்ல அதனை நெருங்கி அதன் தலையை தடவிக்கொடுத்தாள் சுபாங்கி. முதல் இரண்டு வருடலுக்கு பேசாமல் நின்ற மாடு திடீரென துள்ளிப் பாய்ந்து அவளை முட்ட வரவும் சுபி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். முட்ட வரும் மாட்டிடம் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் அப்படியே உறைந்து நின்றவளை ஒரு வலிய கரம் திடீரென பற்றி பின்னால் இழுக்க .... இழுபட்ட வேகத்தில் தடுமாறிச் சாய்ந்தவளை அக்கரங்கள் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டது. .....